கோடிக்கணக்கில் வருவாயைக் கொண்டிருக்கும் ரஜினிகாந்த் “சிஸ்டம் சரியில்லை” என்று அரசியல் சூழல் குறித்து குறைபட்டுக் கொண்டார். தேவைப்பட்டால் சிஸ்டத்தை மாற்ற போருக்கு வருவேன் என்றார். பிறகு காலா, எந்திரன் 2.0 படப்பிடிப்புகளில் கலந்து கொண்டார். நல்ல விளம்பரமும் கிடைத்தது.
அன்னாரின் துணைவியார் “பாபா” படம் வெளிவரும் போதே பாபா டாலர் எனும் செயினைக் கூட ரசிகர்களுக்கு விற்க முயன்ற முதலாளி. டாலரை விட கல்வித் தொழிலில் நிறைய வருமானம் வருமென்பதால் இரண்டு பள்ளிகளை நடத்தி வருகிறார். துறவறத்தின் குறியீடான “ஆஸ்ரம்” தான் அம்மையாரின் பள்ளியின் பெயரும் கூட. அதனால் மற்ற பள்ளிகளை விட பணத்தை அதிகம் இங்கே துறக்க வேண்டும்.
கிண்டியில் இருக்கும் ஆஸ்ரம் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளியில் ஏற்கனவே ஆசிரியர்களுக்கும், ஊழியர்களுக்கும், ஓட்டுநர்களுக்கும் பல மாத சம்பள பாக்கி வேலை நிறுத்தம், போராட்டம் என்று நடந்திருக்கின்றன. அந்த செய்திகளை ஊடக பலத்தால் அமுக்கிவிட்டு இன்றும் பள்ளி நடக்கின்றது.
இந்நிலையில் கிண்டி பள்ளிக்கூடம் இருக்கும் கட்டிட உரிமையாளரை ஏமாற்றிய கதை தற்போது வெளியேவந்திருக்கிறது. அம்மையார் 2009 -ம் ஆண்டு முதல் பள்ளிக் கட்டிடத்திற்கு வாடகையே கொடுக்கவில்லையாம்.
இது தொடர்பாக கட்டிட உரிமையாளர் வெங்கடேஸ்வரலு பள்ளிக்கூடத்தை பூட்டிவிட்டார். வரவேண்டிய வாடகை பாக்கி ரூபாய், பத்து கோடியாம். நீதிமன்றத்தில் வழக்கு போட்ட போது அம்மையார் 2 கோடி தருவதாக ஒப்புக் கொண்டு அதையும் தராமல் இழுத்தடித்தனராம். ஆகவே பூட்டு போட்டார் உரிமையாளர்.
இது ஒரு சுரண்டல், காரணமில்லாமல் வாடகையை ஏற்றியதே பிரச்சினை என்று கூறுகிறது அம்மையார் தரப்பு. கை, கால்களை ஆட்டாமலேயே நடனம், சண்டை, நடிப்பின் மூலம் படத்துக்கு படம் கோடிகளை கூட்டிக் கொண்டே போகும் சூப்பர்ஸ்டாரின் குடும்பம், பள்ளிவாடகையை கூட்டக் கூடாது என்று நியாயம் பேசுகிறது.
இனி கருத்துக் கணிப்பு!
லதா ரஜினியின் ஆஸ்ரம் பள்ளி மூடப்பட்டதற்கு காரணம்?
- கட்டிட உரிமையாளரின் சுரண்டல்
- லதா ரஜினிகாந்தின் மோசடி
- ஆஸ்ரம் பள்ளியில் வருமானமில்லை
- பாஜக உதவிக்கு வரமுடியாத சூழல்
- ரஜினியிடம் செலவுக்கு காசில்லை
_____________
இந்தக் கருத்துக்கணிப்பு உங்களுக்கு பிடித்திருக்கிறதா?
- உழைக்கும் மக்களின் இணையக் குரல்
வினவு தளத்தை ஆதரியுங்கள் – சந்தா செலுத்துங்கள்!
சந்தா செலுத்தும் நண்பர்களுக்கு அந்த காலத்திற்குரிய வார செய்திப்பதிவு – புதிய கலாச்சாரம் – புதிய ஜனநாயகம் மின்புத்தகங்கள், நிகழ்வுகள் குறித்த அறிவித்தல்கள் அனுப்பப்படும். இந்தியாவில் வங்கிக் கணக்கு வைத்திருப்போர் மட்டுமே சந்தா அனுப்ப இயலும். டெபிட் கார்டு, கிரெடிட் கார்டு, நெட்பேங்கிங் மூலம் பணம் அனுப்பலாம். அனுப்புவதற்கு PayUmoney பட்டனை அழுத்தவும். வெளிநாடுகளில் வங்கிக் கணக்கு வைத்திருப்போர் எமது வங்கிக் கணக்கிற்கு நேரடியாக பணம் அனுப்பிவிட்டு, விவரத்தை உடன் அறியத்தரவும். நன்றி
கபாலிடா … கருப்புடா … பருப்புடா … என்று டயலாக் அடித்தவர் …. என்ன செய்ய பாேகிறார்…. ?
ஏற்ற இறக்கம் எல்லா இடங்களிலும் உண்டுதானே ?
கிண்டியில் உள்ள ஆஸ்ரம் பள்ளி கட்டட வாடகைப் பிரச்சினை காரணமாக அப்பள்ளியின் சார்பில் அளிக்கப்பட்டுள்ள விளக்கம்:
ஆஸ்ரம் மெட்ரிக் மேல்நிலை பள்ளியின் சார்பில், நாங்கள் பின் வரும் இந்தத் தகவலை அளிக்கிறோம்.
நாங்கள் கிண்டியில் இருக்கும் எங்கள் பள்ளியை கடந்த 10 வருடங்களுக்கு மேலாக நடத்தி வருகிறோம்.
சமீபகாலமாக நாங்கள் குடும்ப தகராறு காரணமாக எங்கள் நில உரிமையாளரிடமிருந்து அநேக தொந்தரவுகளை சந்தித்து வருகிறோம்.
இது வாடகை பற்றிய விஷயமாக மட்டும் அல்லமால், ஒரு அசாத்திய சூழ்நிலையை உருவாக்கும் பிரச்சனையாக உள்ளது. நில உரிமையாளர்கள் காரணமில்லாமலும், முறையற்ற நிலையிலும் வாடகைத் தொகையை நாங்கள் பேசிய தொகையைக் காட்டிலும் அதிகரித்துள்ளனர்.
நாங்கள் இது குறித்து ஏற்கனவே ஆலோசித்தது மட்டுமில்லாமல் அந்த இடத்தை காலி செய்வது குறித்தும் முடிவெடுத்துள்ளோம். மேலும் இப்பிரச்சனையை முடிப்பது தொடர்பான பேச்சு வார்த்தைகளில் ஈடுபட்டுள்ளோம்.
ஊடகங்களும், பொதுமக்களும் இது போன்ற தவறான செய்திகளை நம்பாமல், உண்மையை புரிந்துக் கொள்ளுமாறு கேட்டுக் கொள்கிறோம்.
எங்கள் ஆஸ்ரம நிறுவனத்திற்கு பள்ளி நில உரிமையாளர்கள் கொடுத்து வரும் மன உளைச்சல் காரணமாக பாதிக்கப்பட்ட குழந்தைகள், பெற்றோர்கள், பள்ளி ஆசிரியர்கள், பள்ளி ஊழியர்கள் அனைவரின் சார்பாக சட்டப்படி நடவடிக்கை மற்றும் மான நஷ்ட வழக்கும் தொடரப்படும் என்பதை தெரிவித்துக் கொள்கிறோம்.
– இவ்வாறு ஆஸ்ரம் பள்ளி நிர்வாகம் தெரிவித்துள்ளது.