“மானிய சிலிண்டருக்கு துப்பில்லை! ரேசன் அரிசிக்கு வக்கில்ல! இது யாருக்கான அரசு?” என்ற முழக்கத்தின் அடிப்படையில் புதிய ஜனநாயகத் தொழிலாளர் முன்னணி காஞ்சிபுரம் மாவட்டத்தின் சார்பாக சென்னை சோழிங்கநல்லூர் பகுதியில் கண்டன ஆர்ப்பாட்டம் 23.08.2017 அன்று நடத்தப்பட்டது.
இந்த ஆர்ப்பாட்டத்திற்கு முறையாக மாநகர காவல் ஆணையர் அலுவலகத்தில் அனுமதி பெறப்பட்டது. ஆனால் ஆர்ப்பாட்டம் தினத்தன்று சோழிங்கநல்லூர் சிக்னல் அருகில் தயாரிப்பு வேலைகளை செய்து கொண்டிருக்கையில், உதவி ஆய்வாளர் மற்றும் குற்றப்பிரிவு ஆய்வாளர் இருவரும் ஆர்ப்பாட்டம் இங்கு நடத்தக் கூடாது என்றனர்.
ஏன் என்று கேட்ட போது இடம் மாற்றப்பட்டிருக்கிறது என்று சொல்லி தொலைவில் உள்ள சுங்கச்சாவடி அருகில் மக்கள் நடமாட்டம் இல்லாத ஒரு இடத்தை காட்டி அங்கு நடத்திக் கொள்ளுங்கள் என்றனர்.
புஜதொமு-வின் மாவட்ட செயலாளர் தோழர் சிவா இதற்கு நீங்கள் ஆர்ப்பாட்டத்திற்கு அனுமதி இல்லை என சொல்லி விடலாம் என்ற போது, தற்போது இடத்தை மாற்றிவிட்டோம் என்றனர். வேண்டுமானால் AC–யிடம் பேசிக் கொள்ளுங்கள் என்றனர் இதற்குள் சம்பந்தப்பட்ட காவல் நிலைய (சட்டம் – ஒழுங்கு) ஆய்வாளரிடம் நமது நோக்கத்தை வலியுறுத்தியதுடன், ஏற்கனவே புஜதொமு சார்பாக பணமதிப்பழிப்பு மற்றும் IT துறையில் சட்ட விரோத வேலை பறிப்புக்கெதிராக, IT பிரிவு பு.ஜ.தொ.மு சார்பாக கண்டன ஆர்பாட்டங்கள் நடத்தியதை சுட்டிக்காட்டி, நீங்கள் சொல்லும் இடத்தில் ஆர்ப்பாட்டம் நடத்த முடியாது, என கறாராக கூறிய பிறகு போலீசு பணிந்தது.
பேருந்து நிலையம் அருகே துவங்கிய ஆர்ப்பாட்டத்திற்கு புஜதொமு -வின் மாவட்ட பொருளாளர் தோழர் ஆனந்தன் தலைமை தாங்கினார். அவர் தனது உரையில், கார்ப்ரேட் முதலாளிகளின் கைக் கூலிதான் மோடி என்பதை பல்வேறு விவரங்களில் இருந்து சுட்டிக் காட்டி இதற்கெதிராக அனைத்து பிரிவு உழைக்கும் மக்களும் போராட வேண்டும் என அறை கூவினார்.
அவரைத் தொடர்ந்து கண்டன உரையாற்றிய தோழர் சிவா, “சாப்பிட அரிசியும் இல்லை! சமைப்பதற்கு சிலிண்டரும் இல்லை! யாரை வாழ வைப்பதற்கு இந்த திட்டம்? மக்களை பட்டினிக்கு தள்ளுவதற்கு பெயர் உணவு பாதுகாப்பு சட்டமா? சிலிண்டருக்கு மானியமும், ரேஷன் மூடலும் மட்டும் அல்ல நாட்டு மக்கள் அனைவரது உரிமைகளையும் வாழ்வதாரத்தையும் பறிப்பதும்தான் மோடி சொல்ல வரும் வளர்ச்சி என்றார்.
ஆர்ப்பாட்டதிற்கிடையே தோழர்கள் மோடி, எடப்பாடி மற்றும் இந்த அரசு கட்டமைப்பு எவ்வாறு மக்களுக்கு எதிராக இருக்கின்றது என்பதனை அம்பலப்படுத்தும் விதமாக முழக்கமிட்டனர். இது பரவலான மக்களின் கவனத்தை ஈர்த்தது. இதில் பு.ஜ.தொ.மு -வின் கிளை சங்கங்கள், இணைப்புச் சங்கங்களைச் சேர்ந்த தொழிலாளர்கள் கலந்து கொண்டனர்.
தகவல் :
புதிய ஜனநாயகத் தொழிலாளர் முன்னணி,
காஞ்சிபுரம் மாவட்டம். தொடர்புக்கு : 88075 32859.
_____________
இந்த போராட்ட செய்தி உங்களுக்கு பயனளித்ததா? வினவு தளத்தை ஆதரியுங்கள் – சந்தா செலுத்துங்கள்!
சந்தா செலுத்தும் நண்பர்களுக்கு அந்த காலத்திற்குரிய வார செய்திப்பதிவு – புதிய கலாச்சாரம் – புதிய ஜனநாயகம் மின்புத்தகங்கள், நிகழ்வுகள் குறித்த அறிவித்தல்கள் அனுப்பப்படும். இந்தியாவில் வங்கிக் கணக்கு வைத்திருப்போர் மட்டுமே சந்தா அனுப்ப இயலும். டெபிட் கார்டு, கிரெடிட் கார்டு, நெட்பேங்கிங் மூலம் பணம் அனுப்பலாம். அனுப்புவதற்கு PayUmoney பட்டனை அழுத்தவும். வெளிநாடுகளில் வங்கிக் கணக்கு வைத்திருப்போர் எமது வங்கிக் கணக்கிற்கு நேரடியாக பணம் அனுப்பிவிட்டு, விவரத்தை உடன் அறியத்தரவும். நன்றி
மோடியை குறை கூறும் அவசரத்தில் வினவு ஆசிரியரின் அவசரம் தெரிகிறது
தலைப்பு ‘மோடியை எதிர்த்து ***ஆளில்லா இடத்தில்*** ஆர்ப்பாட்டம் நடத்தச் சொல்லும் போலீசு !’ என்று சொல்கிறது
ஆனால் கட்டுரை, ‘***இது பரவலான மக்களின் கவனத்தை ஈர்த்தது.***’
எது உண்மை ?
//இதற்குள் சம்பந்தப்பட்ட காவல் நிலைய (சட்டம் – ஒழுங்கு) ஆய்வாளரிடம் நமது நோக்கத்தை வலியுறுத்தியதுடன், ஏற்கனவே புஜதொமு சார்பாக பணமதிப்பழிப்பு மற்றும் IT துறையில் சட்ட விரோத வேலை பறிப்புக்கெதிராக, IT பிரிவு பு.ஜ.தொ.மு சார்பாக கண்டன ஆர்பாட்டங்கள் நடத்தியதை சுட்டிக்காட்டி, நீங்கள் சொல்லும் இடத்தில் ஆர்ப்பாட்டம் நடத்த முடியாது, என கறாராக கூறிய பிறகு போலீசு பணிந்தது.//
யாருக்கு அவசரம் Truthsayer
அது தான் போலீஸ் பணிந்து விட்டது அல்லவா ? பின்பு என் தலைப்பில் ***ஆளில்லா இடத்தில்*** என்று குறிப்பிடப்பட்டுள்ளது ?
அதாங்க மொக்கபாண்டி…….உள்ள சரக்கு என்னனு மொதல்ல படிக்க பொறுமை வேணும் அப்புறம் கொஞ்சம் நிதானமா அதை படிக்கணும்….அவசரகாரன் பேண்டுலேயே ஒன்னுக்கு போன மாதிரி தலைப்பை பக்க வேண்டியது….எதாச்சும் கம்மெண்டு போட வேண்டியது….
உங்களுக்கு எல்லாம் வேற வேலையே இல்லீங்களா? போய் உங்க கண்ணுக்குட்டிகளை படிக்க வைங்க….
எனக்கு எந்த அவசரமும் இல்லை. எனக்கு இதில் 3 கேள்விகள் உள்ளது. அனால் அதையெல்லாம் விரிவாக பதிந்து விளக்கம் கேட்க என்னிடம் போதிய நேரமில்லை நன்றி
சரி. அடுத்த முறை அப்படி கேள்வி கேட்க தோணும் முன்னர் கட்டுரையை படிக்க வேண்டும் என்ற எண்ணம் தோன்ற எல்லாம் வல்ல அந்த இறைவனை வேண்டுங்கள்………
என்னுடைய கேள்வி எளிமையானது, நேரடியானது. என்னுடைய எண்ண ஓட்டங்களை இன்டர்நெட்லேயே புரிந்து கொள்ளும் சக்தி பகுத்தறிவாதிகளுக்கு தான் உண்டு
1) மோடியை எதிர்த்து ***ஆளில்லா இடத்தில்*** ஆர்ப்பாட்டம் நடத்தச் சொல்லும் போலீசு – இது உண்மையா ? (அல்லது)
2) இது பரவலான மக்களின் கவனத்தை ஈர்த்தது – இது உண்மையா ? (அல்லது) இரண்டுமே உண்மையா ?
குமார் அவர்களுக்கும் விடை அளிக்க விரும்புகிறேன. என்னிடம் அவ்வளவு நேரம் இல்லை. நன்றி
TruthSayer..,விதன்டாவாதம் செய்துகிட்டு இருகிங்க வழக்கம் போல ! அறிவின்மையால் இதனை நீங்கள் பேசவில்லை… ஆனால் விவாதத்தை திசை திருப்பும் முயற்சி மட்டுமே இது…
Let us read the Sequence of events….
1.இந்த ஆர்ப்பாட்டத்திற்கு முறையாக மாநகர காவல் ஆணையர் அலுவலகத்தில் அனுமதி பெறப்பட்டது. ஆனால் ஆர்ப்பாட்டம் தினத்தன்று சோழிங்கநல்லூர் சிக்னல் அருகில் தயாரிப்பு வேலைகளை செய்து கொண்டிருக்கையில், உதவி ஆய்வாளர் மற்றும் குற்றப்பிரிவு ஆய்வாளர் இருவரும் ஆர்ப்பாட்டம் இங்கு நடத்தக் கூடாது என்றனர்.
2.ஏன் என்று கேட்ட போது இடம் மாற்றப்பட்டிருக்கிறது என்று சொல்லி தொலைவில் உள்ள சுங்கச்சாவடி அருகில் மக்கள் நடமாட்டம் இல்லாத ஒரு இடத்தை காட்டி அங்கு நடத்திக் கொள்ளுங்கள் என்றனர்.
3.புஜதொமு-வின் மாவட்ட செயலாளர் தோழர் சிவா இதற்கு நீங்கள் ஆர்ப்பாட்டத்திற்கு அனுமதி இல்லை என சொல்லி விடலாம் என்ற போது, தற்போது இடத்தை மாற்றிவிட்டோம் என்றனர். வேண்டுமானால் AC–யிடம் பேசிக் கொள்ளுங்கள் என்றனர் இதற்குள் சம்பந்தப்பட்ட காவல் நிலைய (சட்டம் – ஒழுங்கு) ஆய்வாளரிடம் நமது நோக்கத்தை வலியுறுத்தியதுடன், ஏற்கனவே புஜதொமு சார்பாக பணமதிப்பழிப்பு மற்றும் IT துறையில் சட்ட விரோத வேலை பறிப்புக்கெதிராக, IT பிரிவு பு.ஜ.தொ.மு சார்பாக கண்டன ஆர்பாட்டங்கள் நடத்தியதை சுட்டிக்காட்டி, நீங்கள் சொல்லும் இடத்தில் ஆர்ப்பாட்டம் நடத்த முடியாது, என கறாராக கூறிய பிறகு போலீசு பணிந்தது.
4.”””பேருந்து நிலையம்””” அருகே துவங்கிய ஆர்ப்பாட்டத்திற்கு புஜதொமு -வின் மாவட்ட பொருளாளர் தோழர் ஆனந்தன் தலைமை தாங்கினார். அவர் தனது உரையில், கார்ப்ரேட் முதலாளிகளின் கைக் கூலிதான் மோடி என்பதை பல்வேறு விவரங்களில் இருந்து சுட்டிக் காட்டி இதற்கெதிராக அனைத்து பிரிவு உழைக்கும் மக்களும் போராட வேண்டும் என அறை கூவினார்.
5.இது பரவலான மக்களின் கவனத்தை ஈர்த்தது. இதில் பு.ஜ.தொ.மு -வின் கிளை சங்கங்கள், இணைப்புச் சங்கங்களைச் சேர்ந்த தொழிலாளர்கள் கலந்து கொண்டனர்.
குறிப்பு : திட்டமிட்டபடி சோழிங்கநல்லூர் சிக்னல் அருகே உள்ள பேருந்து நிலையத்திலேயே நடைபெற்ற ஆர்பாட்டம் மக்கள் கவனத்தை கவராமல் வேறு யார் கவனத்தை கவரும் உண்மை விளம்பி?
உண்மையை நீங்களே சொல்லிவீடீர்கள் குமார்
// 2. ஏன் என்று கேட்ட போது இடம் மாற்றப்பட்டிருக்கிறது என்று சொல்லி தொலைவில் உள்ள சுங்கச்சாவடி அருகில் ***மக்கள் நடமாட்டம் இல்லாத*** ஒரு இடத்தை காட்டி அங்கு நடத்திக் கொள்ளுங்கள் என்றனர். //
சரி. இப்போது நீங்களே சொல்லுங்கள்
1) சோழிங்கநல்லூரில் ‘மக்கள் நடமாட்டம் இல்லாத’ பகுதி என்பது சரியானதா (அல்லது) ‘மக்கள் நடமாட்டம் குறைந்த’ பகுதி என்று சொல்வது சரியானதா ?
2) அதே போல் ‘ஆளில்லா இடத்தில் ஆர்ப்பாட்டம்’ என்று சொல்வது சரியானதா (அல்லது) ‘ஆள் நடமாட்டம் குறைந்த’ பகுதி என்று சொல்வது சரியானதா ?
குறிப்பாக சோழிங்கநல்லூரில் ‘டிராபிக் மாற்றியமைக்கப்பட்டு’ பஸ் எண் 99 அந்த பக்கம் தானே வருகிறது. ECRல் வாகனங்கள் போய்க்கொண்டும், வந்துகொண்டும் தானே இருக்கும். அப்புறம் என்ன ‘ஆளில்லா இடத்தில் ஆர்ப்பாட்டம்’ , ‘மக்கள் நடமாட்டம் இல்லாத’ இடம் என்று
3) // மோடியை எதிர்த்து ***ஆளில்லா இடத்தில்*** ஆர்ப்பாட்டம் நடத்தச் சொல்லும் போலீசு ! //
மோடியை எதிர்ப்பதால் தான் போலீஸ் ‘ஆளில்லா இடத்தில் ஆர்ப்பாட்டம்’ செய்ய சொல்கிறதா ? அப்போது ‘மற்றவர்களை எதிர்த்தால்’ போலீஸ் ‘ஆள் நடமாட்டம் உள்ள இடத்தில் (அல்லது) mount roadல் போராட்டம் செய்ய அனுமதிப்பார்களா ?
இந்த தலைப்பு எழுத்துப்பிழை அல்ல. வேண்டுமென்றே திரித்து கூறப்பட்டது. ஆனால் பகுத்தறிவாதிகள் இதை எல்லாம் கேள்வி கேட்கமாட்டார்கள்
உங்கள் comment #4க்கு பிறகு பதில் தருகிறேன்
பணமதிபிழப்பு வெவகாரத்தின் மோடி வைகையராகள் கொடுக்கும் வெளக்கத்தை கூட படிக்க இயலும் போலுள்ளது ஆ ஆ ஆ னா னா னா பாருங்க உங்க வெளக்கம் அதனையும் தண்டி வெளிகெரகத்து பத்தறிவு பகுத்தறிவு உயிரனங்களின் அறிவையும் தாண்டி மின்னுதுங்க…நம்மால முடியல சாமி… உங்கள படைத்த பகவான் தான் உங்களுக்கு பதில் சொல்ல இயலுங்க… என்னால முடியல சாமி….. வல்லகோட்டை முருகா என்ன காப்பாத்துடா… அடுத்த வருசம் பொங்கலுக்கு வரேன் மொட்ட போடுறேன்…
திரு குமார் அவர்களே வார்த்தைகள் தான் முக்கியம். வார்த்தைகளை தான் கட்டுரை. வார்த்தைகள் தான் விவாதம். கட்டுரையில் உள்ள வார்த்தைகளை நீங்கள் நம்பித்தானே விவாதம் செய்கிறீர்கள் ?
அதெல்லாம் ஒரு புறம் இருக்கட்டும். நான் கேட்ட கேள்வி #3 விடை வரவில்லையே
தம்பி ட்ரூத் சேயர்,
இப்போ ஒண்ணு மட்டும் புரிஞ்சு போச்சு. இவ்வளவு நாளா நீங்க கட்டுரையவே படிக்காமத் தான் இங்க வந்து கம்பு சுத்துணீங்கன்னு..
பாத்து பாசு, சுத்தத் தெரியாம சுத்தி உங்க மண்டையிலயே பலமா அடி விழுது .. பாத்து .. படாத இடத்துல பட்டுற போகுது!!
உங்களுக்கு எல்லாமே தெரிந்தால் எனக்கு மகிழ்ச்சியே
அவசரக்காரனுக்கு புத்திமட்டு……
நான் தெளிவாக விளக்க வேண்டிய அவசியம் இல்லை. நீங்கள் எல்லோரும் பகுத்தறிவாதிகள் தானே. யோசித்து பதிவிடலாமே
ஒரேய கோணத்தில் யோசித்தால் இப்படி தான் பதில் வரும்
I don’t see anything wrong with the title and there is no contradiction with the article. Are we all stupids?
99% நோட்டூகள் திரும்ப வந்திடிச்சாம். வெறும் ரூ.16 ஆயிரம் கோடி பணம்தான் வரலையாம். இதுல, புது நோட்டு அச்சடிக்கவே, ரூ.12 ஆயிரம் கோடி செலவாயிருக்காம். இது ஒப்படி இருக்கு. மலையை கெல்லி எலியை பிடிச்சிருக்காங்க. இதுக்குத்தான், ஜனங்கள, ஆறு மாசத்துக்கு, ஏடிஎம், ஏடிஎம் மா அலைய விட்டாங்க, போல. மன அழுத்தத்தில் மோடியால் மக்கள் மீது நிகழ்த்தபட்ட நூற்றுக்கணக்கான சாவுகள் வேற….தூ….
நன்பர்களுக்கு…,
இந்த செய்தி கட்டுரை அரசின்/அதிகார வர்கத்தின் ஜனநாயகம் இன்மையை அம்லபடுத்துகின்றது. அரசு அப்படி அம்பலம் ஆகும் போது அதனை பொறுக்க இயலாதவர் அதாவது உண்மை விளம்பி அவர்கள் விவாதத்தை திசை திருப்ப முயலுகின்றார். அவர் கட்டுரையை முதலில் ஒழுங்காக முழுமையாக படித்து இருக்காவிட்டாலும் இப்பொது இவ்வளவு விவாதங்களுக்கு பின் ஒழுங்காக, முழுமையாக படித்த்து இருப்பார்.எனவே அவருக்கு நாம் விளக்கம் கொடுக்கவேண்டிய அவசியம் இனி இல்லை..
விசயத்துக்கு வருவோம்…. ஒரு ஜனாயக நாட்டில் பொதுவாகவே பொதுகூட்டம் நடத்த , ஆர்ப்பாட்டம் என்று நடத்த முற்போக்காளர்கள் நீதிமன்றம் வரை சென்று தான் நிபந்தனைகளுடன் அனுமதி வாங்க வேண்டியுள்ளது என்றால் அப்ப அதிகாரவர்கத்தின் அசிங்கம் பிடித்த மொள்ளமாரித்தனம் தான் இங்கே அம்பலம் ஆகின்றது… உயிர் இழந்த பல்லாயிரம் ஈழ தமிழர்களின் நினைவாக அமைதியான முறையில் மெழுகுவத்தி ஏற்றினால் கூட குன்டர் சட்டம் பாயுது.
அதே நேரத்தில் ஹிந்துத்துவாக்கள் போடும் குத்தாட்டம் அதுவும் குடி போதையில் போடும் குத்தாட்டத்தை நாம் ஆண்டு ஆண்டாக விநாயகர் சதுர்த்தி இறுதி ஊர்வலத்தில் பார்த்துகொண்டு தான் இருக்கின்றோம். ரோட்டில் போவோரை பார்த்து நாய் போன்று குறைப்பது, குறிப்பாக பெண்களை பார்த்து கூவுவது(அவன்ங்க ஊட்டல பொம்பளைங்களே இல்ல போல), தண்ணீர் பாகெட் கொண்டு பெண்கள் மீது தண்ணீர் அடிப்பது , இறுதி ஊர்வல வண்டியில் நின்றுகொண்டு ஆபாசமான உடல் அசைவுகளை ரோட்டில் போகும் பெண்களை பார்த்து காட்டுவது என்று நடந்து கொண்டு தான் உள்ளது. ஆண்டு தோறும் நடந்து கொண்டு தான் உள்ளது.
இவற்றை கண்டிக்க , தண்டிக்க துப்பு அற்ற போலிசு , தொழிலார்கள்களின் ஆர்ப்பாட்டத்தை நேரடியாகவோ அல்லது மறைமுகமாகவோ தடை செய்ய முயல்கின்றது என்றால் அவர்களுக்கு உள்ள ஜனநாயக உணர்வு, நாட்டின் மீதான அக்கறை ஆகியவை சந்தி சிரிப்பதாகதானே அர்த்தம்?
கம்யூனிஸ்ட்கள் ஜனநாயகத்தை பற்றி பேசுவது ஆடு நனைகிறதே என்று ஓநாய் அழுவது போல் இருக்கிறது.
மணிகண்டனுக்கு பிஜேபியை தவிர எல்லாருமே கம்யூனிஸ்ட்கள் தான் போல் உள்ளது.! நினைக்கவே ரொம்ப நல்லா இருக்கே… இது வரைக்கும் ஜனாநாயக உரிமைகள் பறிக்கப்பட்டு குண்டர் தடுப்பு சட்டத்தின் கிழ் சிறையில் உள்ளவர்கள் எல்லாம் என்ன கம்யூனிஸ்ட்களா ? குறிப்பாக சொல்வது என்றால் மே 17 இயக்கத்தவர், மாணவர் அமைப்பு செயலாளர் வளர்மதி ஆகியோர் எல்லாம் அரசியல் ரீதியாக தன் ஜனாயக உரிமை செயல்பாடுகளை நடத்தியமைக்காக குண்டர் தடுப்பு சட்டம்! என்ன சொல்ல வரார் இந்த மணிகண்டன்? அரசாங்கத்தின் மக்கள் விரோத செயல்பாட்டுகளை எதிர்த்து ஜனாயக பூர்வமாக போராடுவர்களுக்கு சிறை தான் பரிசு என்றால் அங்கே ஜனாயகம் அல்லவா பல்இளிக்கின்றது? ஆம் போலியான ஜனநாயகம் தானே பல்இளிக்கின்றது ?