privacy

about us

write

contact

shop

புதிய ஜனநாயகம்

புதிய கலாச்சாரம்

e-books

Global Influence

Communication

Legal Agreement

முகப்புமறுகாலனியாக்கம்கல்விமாணவி அனிதா ’ படுகொலை ’- தமிழகமெங்கும் புமாஇமு ஆர்ப்பாட்டம் !

மாணவி அனிதா ’ படுகொலை ’- தமிழகமெங்கும் புமாஇமு ஆர்ப்பாட்டம் !

-

செப்-2, கண்டன ஆர்ப்பாட்டம்

ரியலூர் குழுமூரைச் சேர்ந்த மாணவி அனிதா, பன்னிரெண்டாம் வகுப்பு பொதுத் தேர்வில்  1200-க்கு 1176 மதிப்பெண் பெற்றிருந்தார். மருத்துவப் படிப்பில் சேர 196.75 கட்-ஆஃப் மதிப்பெண் வைத்திருந்தார். ஆனால், நீட் அடிப்படையிலேயே மருத்துவ சேர்க்கை நடைபெறும் என அறிவிக்கப்பட்டதால்,  நீட் தேர்வு எழுதினார். அதில் 700-க்கு 86 மதிப்பெண் மட்டுமே அவர் எடுத்திருந்தார்.

மோடி – எடப்பாடி குற்றவாளிகள்

இதனால் அவருடைய மருத்துவ வாய்ப்பு பறிபோய், இறுதியில் தற்போது தற்கொலைக்கு தள்ளப்பட்டார்.  இது தற்கொலையல்ல – படுகொலையே!  ஒட்டு மொத்த தமிழகமும் எதிர்த்த போதும், நீட் தேர்வை தமிழகத்தின் மீது திணித்துவிட்டன மோடி – எடப்பாடி கும்பல். இவர்கள் தான் அனிதாவைக் கொன்ற குற்றவாளிகள்.

இந்தக் குற்றவாளிகளை உழைக்கும் மக்கள் மத்தியில் அடையாளம் காட்டவும், தமிழகத்தின் உரிமையைப் பறித்து, தற்போது மாணவியின் உயிரையையும் பறித்துள்ள நீட்-ஐ எதிர்த்து ”தமிழகமே திரண்டெழு, மீண்டும் ஒரு மெரினா எழுச்சியை உருவாக்குவோம்” என அறைகூவி நாளை செப்-2 ந்தேதி தமிழகம் முழுவதும் கண்டன ஆர்ப்பாட்டங்கள் நடத்தப்படுகின்றன.

மாணவர்களே! இளைஞர்களே! தொழிலாளர்களே! ஜனநாயக சக்திகளே! கொதித்தெழுந்து வாருங்கள்!

சென்னையில் ஆர்ப்பாட்டம் நடைபெறும் இடம்: அண்ணாசாலை, பெரியார்சிலை, சிம்ப்சன், சென்னை,
செப்டம்பர் – 2, காலை 11 .30 மணி

புரட்சிகர மாணவர் – இளைஞர் முன்னணி,
தமிழ்நாடு. 9445112675
——————————————

விருதாச்சலத்தில் இன்று (செப்டெம்பர்-1) மாலை, ”நீட்: மாணவி அனிதா ’படுகொலை’, மோடியும் எடப்பாடியும் தான் குற்றவாளிகள்” என்ற முழகத்தின் கீழ் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.’நீட்’ தேர்வை ரத்து செய்யக் கோரியும், மாணவி அனிதாவின் படுகொலைக்கு காரணமான குற்றவாளிகள் மோடியும் எடப்பாடியும் தான் என்பதை மக்கள் மத்தியில் அம்பலப்படுத்தியும் முழக்கங்கள் எழுப்பப்பட்டன.

விருதாச்சலம் புமாஇமு ஆர்ப்பாட்டம்-1
விருதாச்சலம் புமாஇமு ஆர்ப்பாட்டம்-2

இதில் விருதாச்சலம் பகுதியைச் சேர்ந்த புமாஇமு தோழர்கள் பங்கேற்றனர்.

————————————————————–
உழைக்கும் மக்களின் இணையக் குரல் வினவு தளத்தை ஆதரியுங்கள் – சந்தா செலுத்துங்கள்!

சந்தா செலுத்தும் நண்பர்களுக்கு அந்த காலத்திற்குரிய வார செய்திப்பதிவு – புதிய கலாச்சாரம் – புதிய ஜனநாயகம் மின்புத்தகங்கள், நிகழ்வுகள் குறித்த அறிவித்தல்கள் அனுப்பப்படும். இந்தியாவில் வங்கிக் கணக்கு வைத்திருப்போர் மட்டுமே சந்தா அனுப்ப இயலும். டெபிட் கார்டு, கிரெடிட் கார்டு, நெட்பேங்கிங் மூலம் பணம் அனுப்பலாம். அனுப்புவதற்கு PayUmoney பட்டனை அழுத்தவும். வெளிநாடுகளில் வங்கிக் கணக்கு வைத்திருப்போர் எமது வங்கிக் கணக்கிற்கு நேரடியாக பணம் அனுப்பிவிட்டு, விவரத்தை உடன் அறியத்தரவும். நன்றி