ஆர்.எஸ்.எஸ் – பி.ஜே.பி – அடிமை அதிமுக – உச்சிக்குடுமி நீதிமன்றம் –
இவர்கள்தான் முதன்மைக் குற்றவாளிகள்!
தமிழகத்தை ஒழித்துக்கட்டாமல் விடாது பி.ஜே.பி! பி.ஜே.பி யை
ஒழித்துக்கட்டாமல் தமிழகத்தைக் காப்பாற்ற முடியாது!
தமிழகத்தின் ஒவ்வொரு அங்குலத்தையும் மெரினா ஆக்குவோம்!
என்ற முழக்கங்களை முன்வைத்து ஓசூர் ராம் நகர் அண்ணாசிலை அருகே புதிய ஜனநாயகத் தொழிலாளர் முன்னணியை சேர்ந்த தோழர்கள் மாணவி அனிதா படுகொலையை கண்டித்தும், நீட் தேர்வை அடியோடு ரத்து செய்யக் கோரியும் கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தினர்.
இந்த ஆர்ப்பாட்டத்தில் பு. ஜ.தொ.மு-வின் கமாஸ் வெக்ட்ரா கிளைச்சங்கத் தலைவர் தோழர் செந்தில், பு.ஜ.தொ.மு-வின் மாநில துணைத் தலைவர் தோழர் பரசுராமன் கண்டன உரையாற்றினர்.
பள்ளி குழந்தைகள், பெண்கள் உள்ளிட்ட தொழிலாளர்கள் பலரும் கலந்துக்கொண்டு விண்ணதிர முழங்கி தங்களது கண்டனங்களை பதிவு செய்தனர். நீட் தேர்வை முழுவதுமாக ரத்து செய்யும்வரை தாங்கள் போராடுவதாக உறுதியளித்தனர்.
புதிய ஜனநாயகத் தொழிலாளர் முன்னணி
கிருஷ்ணகிரி மாவட்டம், தொடர்புக்கு – 97880 11784
***
மத்திய மோடி அரசும் – மாநில எடப்பாடி அரசும் தான் கொலையாளி !
திருவாரூர்
————————————————————–
உழைக்கும் மக்களின் இணையக் குரல் வினவு தளத்தை ஆதரியுங்கள் – சந்தா செலுத்துங்கள்!
சந்தா செலுத்தும் நண்பர்களுக்கு அந்த காலத்திற்குரிய வார செய்திப்பதிவு – புதிய கலாச்சாரம் – புதிய ஜனநாயகம் மின்புத்தகங்கள், நிகழ்வுகள் குறித்த அறிவித்தல்கள் அனுப்பப்படும். இந்தியாவில் வங்கிக் கணக்கு வைத்திருப்போர் மட்டுமே சந்தா அனுப்ப இயலும். டெபிட் கார்டு, கிரெடிட் கார்டு, நெட்பேங்கிங் மூலம் பணம் அனுப்பலாம். அனுப்புவதற்கு PayUmoney பட்டனை அழுத்தவும். வெளிநாடுகளில் வங்கிக் கணக்கு வைத்திருப்போர் எமது வங்கிக் கணக்கிற்கு நேரடியாக பணம் அனுப்பிவிட்டு, விவரத்தை உடன் அறியத்தரவும். நன்றி