privacy

about us

write

contact

shop

புதிய ஜனநாயகம்

புதிய கலாச்சாரம்

e-books

Global Influence

Communication

Legal Agreement

முகப்புமறுகாலனியாக்கம்கல்விதமிழகம் முழுவதும் ஏழாவது நாளாகத் தொடரும் மாணவர் போராட்டங்கள் ! !

தமிழகம் முழுவதும் ஏழாவது நாளாகத் தொடரும் மாணவர் போராட்டங்கள் ! !

-

மிழகத்தில் தொடர்ந்து 7 -வது நாளாக இன்றும் (07.09.2017) பல்வேறு இடங்களில் மாணவர்கள் அனிதாவின் படுகொலைக்கு காரணமான மோடி – எடப்பாடி கும்பலைக் கண்டித்து தங்களது போராட்டத்தை தொடர்ந்து வருகின்றனர்.

கரூர் அரசு கலைக் கல்லூரி மாணவர்கள் தொடர்ந்து 5 -வது நாளாக (07.09.2017) புரட்சிகர மாணவர் இளைஞர் முன்னணியின் தோழர் சுரேந்திரன் தலைமையில் வகுப்பு புறக்கணிப்புப் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

தகவல் :
புரட்சிகர மாணவர் இளைஞர் முன்னணி,
கரூர்.

***

கும்பகோணம் அரசு பெண்கள் கலைக் கல்லூரி மாணவர்கள் நீட் தேர்வை ரத்து செய்யக்கோரி தங்களது போராட்டத்தை நடத்திவருகின்றனர்.

தகவல் :
புரட்சிகர மாணவர் இளைஞர் முன்னணி,
கும்பகோணம்.

***

விழுப்புரம் அறிஞர் அண்ணா கலை அறிவியல் கல்லூரியில் பு.மா.இ.மு தலைமையில் 6. 9.2017 மாணவர்கள் வகுப்பை புறக்கணித்து போராடினர். கடந்த நான்கு நாட்களாக போராட்டத்தில் முன்னணியாக இருந்த மாணவர்களை காவல்துறை மிரட்டியது.
அத்துடன் கல்லூரி நிர்வாகமும் இணைந்து இன்று போராட்டத்தை தொடரவிடாமல் தடுத்தது. இவற்றை அம்பலப்படுத்தி இன்று புமாஇமு சார்பில் நகரெங்கும் சுவரொட்டிகள் ஒட்டப்பட்டன. அவற்றை கிழிக்கும் வேலையை போலீசு செய்து வருகிறது.
தகவல் :
புரட்சிகர மாணவர் இளைஞர் முன்னணி,
விழுப்புரம்.

***

செய்யாறு அரசுக் கல்லூரி மாணவர்கள் நீட் தேர்வை ரத்து செய்யக் கோரி நேற்று (06.09.2017) போராட்டத்தில் ஈடுபட்டனர்.

தகவல் :
புரட்சிகர மாணவர் இளைஞர் முன்னணி,
காஞ்சிபுரம்.

_____________

உழைக்கும் மக்களின் இணையக் குரல் வினவு தளத்தை ஆதரியுங்கள் – சந்தா செலுத்துங்கள்!

சந்தா செலுத்தும் நண்பர்களுக்கு அந்த காலத்திற்குரிய வார செய்திப்பதிவு – புதிய கலாச்சாரம் – புதிய ஜனநாயகம் மின்புத்தகங்கள், நிகழ்வுகள் குறித்த அறிவித்தல்கள் அனுப்பப்படும். இந்தியாவில் வங்கிக் கணக்கு வைத்திருப்போர் மட்டுமே சந்தா அனுப்ப இயலும். டெபிட் கார்டு, கிரெடிட் கார்டு, நெட்பேங்கிங் மூலம் பணம் அனுப்பலாம். அனுப்புவதற்கு PayUmoney பட்டனை அழுத்தவும். வெளிநாடுகளில் வங்கிக் கணக்கு வைத்திருப்போர் எமது வங்கிக் கணக்கிற்கு நேரடியாக பணம் அனுப்பிவிட்டு, விவரத்தை உடன் அறியத்தரவும். நன்றி