“நீட் தேர்வை ரத்து செய்யக்கோரி” தமிழகம் முழுவதும் மாணவர்களை திரட்டி புரட்சிகர மாணவர் இளைஞர் முன்னணியின் சார்பில் பல்வேறு போராட்டங்கள் முன்னெடுக்கப்படுகின்றன. ஆனால் மாணவர்கள் போராட்டங்களை ஒடுக்க வேண்டும் என எடப்பாடி அரசு, போராடும் மாணவர்களையும் – மாணவர் அமைப்புகளைச் சார்ந்தவர்களையும் கைது செய்து சிறையில் அடைத்து வருகின்றது.
புரட்சிகர மாணவர் இளைஞர் முன்னணி,
கோவை.
***
புரட்சிகர மாணவர் இளைஞர் முன்னணி,
சென்னை.
***
கும்பகோணம் அரசு கலைக் கல்லூரி மாணவர்கள் தொடர்ச்சியாக 6 -வது நாளாக நேற்றும் (12.09.2017) வகுப்புகளைப் புறக்கணித்து அனிதாவின் படுகொலையைக் கண்டித்து போராட்டத்தில் ஈடுபட்டனர்.
தகவல் :
புரட்சிகர மாணவர் இளைஞர் முன்னணி,
கும்பகோணம்.
***
தருமபுரி அரசு பொறியியல் கல்லூரி மாணவர்கள் 12.09.2017 அன்று மாணவி அனிதாவின் படுகொலைக்குக் காரணமான எடப்பாடி – மோடி அரசை கண்டித்து வகுப்புகளைப் புறக்கணித்து போராட்டத்தில் ஈடுபட்டனர். காலை 11:00 மணிக்கு தொடங்கிய இப்போராட்டம் மாலை 4:00 மணி வரை தொடர்ந்தது. இதனை புரட்சிகர மாணவர் இளைஞர் முன்னணி தோழர்கள் ஒருங்கிணைத்தனர்.
தகவல் :
புரட்சிகர மாணவர் இளைஞர் முன்னணி,
தருமபுரி.
_____________
உழைக்கும் மக்களின் இணையக் குரல் வினவு தளத்தை ஆதரியுங்கள் – சந்தா செலுத்துங்கள்!
சந்தா செலுத்தும் நண்பர்களுக்கு அந்த காலத்திற்குரிய வார செய்திப்பதிவு – புதிய கலாச்சாரம் – புதிய ஜனநாயகம் மின்புத்தகங்கள், நிகழ்வுகள் குறித்த அறிவித்தல்கள் அனுப்பப்படும். இந்தியாவில் வங்கிக் கணக்கு வைத்திருப்போர் மட்டுமே சந்தா அனுப்ப இயலும். டெபிட் கார்டு, கிரெடிட் கார்டு, நெட்பேங்கிங் மூலம் பணம் அனுப்பலாம். அனுப்புவதற்கு PayUmoney பட்டனை அழுத்தவும். வெளிநாடுகளில் வங்கிக் கணக்கு வைத்திருப்போர் எமது வங்கிக் கணக்கிற்கு நேரடியாக பணம் அனுப்பிவிட்டு, விவரத்தை உடன் அறியத்தரவும். நன்றி