privacy

about us

write

contact

shop

புதிய ஜனநாயகம்

புதிய கலாச்சாரம்

e-books

Global Influence

Communication

Legal Agreement

முகப்புவாழ்க்கைகாதல் – பாலியல்போர்னோ : உங்களுக்காக மலம் சுவைக்கும் நடிகைகள் !

போர்னோ : உங்களுக்காக மலம் சுவைக்கும் நடிகைகள் !

-

போர்னோகிராஃபி : ஆபாசப் படங்களின் இருண்ட பக்கம் – பாகம் 3

1993-ம் வருடத்தில் போர்னோ உலகில் நுழைந்தேன். இது நாள் வரை ஒரு விபச்சாரியாக, ஆபாச நடன மங்கையாக வாழ்ந்த எனக்கு நடிப்பு மற்றும் வெகு இயல்பாகப் பொய் பேசும் திறமை நன்றாக வளர்ந்திருந்தது. பணத்திற்காக உடல், உடலுக்காகப் பணம்; இதற்காகத் தான் எல்லாமே என்ற புரிதலில் போர்னோ உலகில் நுழைந்தேன்.

முதல் நாள் ஷூட்டிங்கிற்காக நான் தயாராகினேன். தலைமுடிக்கு வர்ணம் பூசி, அழகான குட்டைப் பாவாடை அணிந்து ஒரு ஹாலிவுட் நடிகையைப் போன்று என்னை அலங்கரித்துக் கொண்டு கொஞ்சம் மதுவும் அருந்தி விட்டு அந்த இரகசிய வீட்டிற்குள் சென்றேன். அந்த வீட்டிற்குள் நுழைந்தவுடனே ஒரு கரும்புகை என்னை ஆட்கொண்டது. ஆம் அது சிகரெட் புகை. ஒரு அறையிலிருந்து என்னை ஒரு மனிதன் அழைப்பதை உணர்ந்தேன்; ஆனால் வீடு முழுவதும் புகை படிந்திருந்ததால் அவர் முகத்தைத் தெளிவாகப் பார்க்க முடியவில்லை.

அந்த அறையின் மூலையில் மிகப்பெரிய வீடியோ கேமரா சுவற்றில் பதிக்கப்பட்டிருந்தது. அந்தக் கேமராவின் லென்ஸ் எதிரிலிருந்த ஒரு சோபாவை முழுதாகக் கவர் செய்யும் வண்ணம் அமைக்கப்பட்டிருந்தது. எனக்கு இப்போது எல்லாமே தவறாகத் தெரிந்தது. நான் தவறான உலகத்திற்குள் நுழைந்து விட்டேனா? எண்ணற்ற கேள்விகள் மனதுக்குள் ஓடிக்கொண்டிருந்தன.

ராக்சியின் போர்னோ வாழ்க்கை

நீதான் அந்த சமந்தா சொல்லியனுப்பிய பெண்ணா என்று அந்த ஆண்குரலின் கேள்வி என் சிந்தனைக்குத் தடைபோட்டது. உடனே ஆம் என்றபடி என்னுடைய மருத்துவ சோதனைச் சான்றிதழை அவரிடம் நீட்டினேன். ம்ம்ம்… நீ இந்தத் தொழிலில் சிறந்த பெயரெடுப்பாய் என்று அவர் எனக்கு சான்றிதழ் கொடுத்தார்.

சரி அடுத்த அழைப்பு வருவதற்குள் கொஞ்சம் மது அருந்திவிட்டு வரலாமென்று நினைத்து அங்கிருந்த குளியலறைக்குள் சென்று மது அருந்தினேன். சரி நான் நடிக்கப்போகும் ஆணுடன் என்னை எப்படி அறிமுகம் செய்து கொள்ளப்போகிறேன்?? “ஹாய்! நான் ராக்கி! இன்று நான் உங்களுடன் உடலுறவு வைத்துக்கொள்ளப் போகிறேன்! “ ம்ம்ம்…இது சரியில்லை “ஹாய்! உங்களை சந்தித்ததில் எனக்கு மகிழ்ச்சி; நாம் இருவரும் இன்று நடிக்கப்போகிறோம்!“ . இது நல்ல அறிமுக வார்த்தைகளாகத் தோன்றியது. மறுபடி சில முறை கண்ணாடியைப் பார்த்து சொல்லிக் கொண்டேன்.

திடீரென ஷுட்டிங்-கிற்கு தயாராகுமாறு அந்த டைரக்டரிடமிருந்து அழைப்பு வந்தது. அங்கே சில பெண்கள் உடையில்லாமல் நின்று கொண்டிருந்தனர். சில ஆண்களும் அங்கே இருந்தனர். போர்னோ டைரக்டர் அன்றைய தினம் எடுக்கப்போகும் படம் குறித்துப் பேச ஆரம்பித்தார்.

கதை என்னவென்றால் ஒரு கல்லூரிப் பேராசிரியர் தன்னுடைய குறும்புக்கார மாணவிகளுக்குக் காமவிளையாட்டுக்கள் குறித்து செய்முறை வகுப்புக்கள் நடத்திக் காண்பிப்பதாம். அப்படியென்றால் நான் என்னை அறிமுகம் செய்து கொள்வதற்காகச் கண்ணாடி முன் செய்த தயாரிப்புக்கள்?? என்ன ஒரு முட்டாள்தனம் செய்தேன்; என்னையே நான் நொந்து கொண்டேன் அந்தத் தருணத்தில்.

ஒரு வழியாக நான் கேள்விப்படாத அந்த வரலாற்றுச் சிறப்புமிக்க கதையை அந்த டைரக்டர் ஸ்பீல்பெர்க் ரேஞ்சுக்கு சொல்லிமுடித்து விட்டு “ஓகே..ஷூட்டிங் ஆரம்பிக்கலாம்” என்று சொன்னார்.

போர்னோ பெண்களைக் கொச்சைப்படுத்துகிறது

“லைட்ஸ், கேமரா, ஆக்‌ஷன்” ஆண்கள் ஒவ்வொருவராக உடைகளைக் கழட்டி எறிந்தனர். என்னுடன் இருந்த சக பெண் ஒருவர் பேராசிரியராக நடிக்கவிருந்த ‘அந்த’ நபரிடம் சென்று எனக்கு நன்றாக வகுப்பு எடுக்க முடியுமா என்று கேட்டு என்னையும் காண்பித்து அவளுக்கும் இது குறித்து ஒன்றும் தெரியாது; எனவே அவளுக்கும் சேர்த்து வகுப்பெடுங்கள் என்று கூற உடனே எனக்குக் கோபம் வந்துவிட்டது.

எத்தனை நபர்களைப் பார்த்திருப்பேன்; சட்டப்பூர்வமற்ற அந்தத் தொழில்களிலேயே சமாளித்தவள் நான்; போர்னோ சட்டப்பூர்வமானது தானே இதில் எனக்கு என்ன கற்றுத்தரவேண்டியுள்ளது. வா! நான் உனக்குக் கற்றுத்தருகிறேன் என்று அந்தப் பெண்ணின் தலைமுடியைப் பிடித்தேன். உடனே டைரக்டர் “ ராக்சி! உன் நடிப்பு வெகு இயல்பாக உள்ளது! நீ வெகுவிரைவில் போர்னோ உலகின் ராணியாவாய்” என்று உசுப்பி விட்டார்.

போதாக்குறைக்கு ஜாக் டேனியல் வேறு நிறைய உள்ளே சென்றதால் எனக்கு மேலும் சாதிக்க வேண்டும் என்ற அற்ப வெறி அதிகரிக்க அந்தப் பெண்ணால் என் வேகத்துக்கு ஈடுகொடுக்க முடியவில்லை. இந்த நிலையில் திடீரென டைரக்டர் குறுக்கிட்டு ஓகே இப்போது இந்தப் படத்தின் முக்கியமான காட்சிக்கு வந்துவிட்டோம்; “ராக்சி, உன் கவர்ச்சியான கண்களைக் காட்டு: கேமராவை ராக்சியின் கண்களை நோக்கித் திருப்புங்கள்” என்று கட்டளையிட்டார்.

சக பெண்ணிடம் உடலுறவில் ஈடுபட்டுக்கொண்டிருந்த பேராசிரியர் தன் ஆணுறுப்பை வெளியில் எடுத்து விந்தணுவை என் முகத்தின் மீது தெளிக்க விட்டார். பெருத்த அவமானத்துடன் கோபமும், அழுகையும் பீறிட்டு வர மற்றவர்களிடம் காண்பிக்க முடியாமல் அந்த நடவடிக்கையை வரவேற்பது போல நடித்தேன். நடிப்பு எனக்குப் புதிதா என்ன? எல்லாவற்றையும் மீறி சில கண்ணீர்த் துளிகள் வெளிவந்தன.

ஆஹா! என்ன ஒரு அருமையான காட்சி! என்று டைரக்டர் கைதட்டினார். உடனே அருகிலிருந்த ஆண் ஒருவர் என் மீது ஈரக் காகிதங்களை வீசினார். முகம் முழுவதும் தெளிக்க விடப்பட்ட விந்தணுக்களைத் துடைத்த அவமானம் தாங்க முடியாமல் செத்துப் போய்விடலாமா என்று நினைத்தேன். ஆனால் எக்காரணம் கொண்டு என் சோகத்தை வெளியில் யாருக்கும் காண்பிக்கக்கூடாது என்று வைராக்கியத்துடன் இருந்தேன்.

பெண்கள், குழந்தைகளுக்கெதிரான பாலியல் வன்முறையின் ஊற்றுக்கண் வேறு எதுவுமல்ல…போர்னோ தான்.

டைரக்டர் என்னைப் புகழ்ந்த கையோடு அடுத்த படத்திற்கான ஆயத்த வேலைகளில் இறங்கியிருந்தார். என் எதிர்காலம் எப்படி இருக்கப் போகிறது என்று நான் எண்ணிக்கொண்டிருக்கும் போது டைரக்டர் என்னிடம் அந்த நாளுக்கான பணத்தைக் கொடுத்து கூடவே பிரபல போர்னோ டைரக்டர் பாபி ஹொலாந்தே -யின் விசிட்டிங் கார்டையும் என் கையில் கொடுத்து அவரைப் போய் பார் என்றார்.

கையில் பணம், இரத்த நாளங்களில் மது பானம், மனதில் எல்லையில்லா வெறுப்பு, அடுத்த போர்னோ நட்சத்திரம் ஆக வேண்டுமென்ற வெறியுடன் அந்த வீட்டை விட்டு வெளியேறினேன்.

ஆண்கள் மீது ஏற்பட்ட இயல்பான வெறுப்பு மற்றும் போர்னோ உலகில் சம்பாதிக்க வேண்டுமென்ற வெறியுடன் தீவிரமாக நடிக்க முடிவெடுத்தேன். லாஸ் ஏஞ்செல்சில் உள்ள வான் நைஸ்-இல் நான் நடித்த படம் போர்னோ உலகின் புகழ்பெற்ற இயக்குனரான பாபி ஹொலாந்தேவை ஈர்த்துவிட்டது போலும்.

என்ன ஒரு அழகான இடை உனக்கு? இது பாபி ஹொலாந்தே. கழுத்தில் ஒரு பட்டைச் செயினுடன் பார்ப்பதற்கு ஒரு ரவுடி போல இருந்தார் அவர். என்னை அழைத்து அவருடைய மடியில் அமர வைத்துத் தடவிக்கொண்டே “நீ மிகவும் அழகாக இருக்கின்றாய். என்னுடைய அடுத்த படத்தில் நீ தான் நடிக்கப்போகிறாய்” என்றார். எனக்கோ ஹாலிவுட் மாடல் ஆக வேண்டும் என்று விருப்பம் என்றேன். போர்னோ படங்களில் நீ சிறப்பாக நடித்தால் ஹாலிவுட் வாய்ப்புக்கள் தானாகத் தேடி வரும் என்று அவர் சொல்லியதை முழுவதுமாக நம்பிவிட்டேன்.

1993 -ல் பாபி ஹொலாந்தேவுக்காக நான் நடித்த அந்தப் படத்தை, நான் நடித்த போர்னோ படங்களிலேயே உண்மையான போர்னோ படம் என்று சொல்லலாம். பிரம்மாண்டமான பண்ணை வீட்டிற்குள் நுழையும் போதே பதற்றத்துடன் தான் நுழைந்தேன். பாபி என்னுடைய பதற்றத்தைப் புரிந்து கொண்டு என்னைத் தோளில் அரவணைத்துக் கொண்டே அங்கிருந்த ஆண்களுக்கு என்னை அறிமுகம் செய்து வைத்தார். இவள் தான் போர்னோ உலகின் அடுத்த இராணி என்ற அளவுக்கு என்னை அறிமுகம் செய்து வைத்தார்.

ஒரு ஹாய் என்ற புன்னகையுடன் தலைகுனிந்து நின்றேன். என்ன தான் போர்னோ தொழில் என்றாலும் பட்டப்பகலில் வெட்டவெளியில் நிர்வாணமாய் நிற்கும் ஆண்களிடம் சென்று எப்படி நான் கைகுலுக்க முடியும்? அதுவும் அறிமுகமே இல்லாத அந்த ஆண்களிடத்தில்?

பாபியிடம் பாத்ரூம் எங்கே இருக்கிறது என்று கேட்டு அங்கே உடனடியாக விரைந்தேன். பையில் வைத்திருந்த வோட்காவை உள்ளே தள்ளி விட்டு, என்னால் இங்கு துளியும் இருக்க முடியாது என்ற மனநிலைக்கு வந்தேன். சில நிமிடங்களில் பாத்ரூம் கதவு தட்டப்பட்டது. யாரென்று கேட்கையில் ஒரு பெண் குரல் “ஏ! பெண்ணே எனிமா உனக்குத் தந்துவிட்டார்களா?” என்று கேட்க எனக்கு ஒன்றும் புரியாமல் “எனக்கெதற்கு எனிமா” என்று திருப்பிக் கேட்டேன். ஓ! அது தெரியாதா உனக்கு? எனிமாவைப் பயன்படுத்தி மலக்குடலைச் சுத்தம் செய்தால் தான் செக்ஸ் பொம்மையைப் உன் மலத்துவாரத்தில் பயன்படுத்துவது பாதுகாப்பாக இருக்கும் என்று அந்தப் பெண் கூறினாள்.

மீதமிருந்த வோட்காவை உள்ளே தள்ளிவிட்டு, என்னிடம் ஆசை வார்த்தைகள் பேசி நல்லது செய்வதாகப் பொய் பேசி நடித்து, என்னைப் படுகுழியில் தள்ளிய அந்த பாபியின் படத்தில் நடித்த அனுபவம் சொல்லி மாளாதது. அதைச் சொல்லும் அளவுக்கு எனக்கு ஞாபகம் இல்லை ஆனால் என்னிடம் எனிமா குறித்து கேட்ட அந்தப் பெண் செயற்கை ஆணுறுப்பை என் மலக்குழாயில் திணித்து என்னை வதைத்த கொடுமையை மட்டும் என்னால் மறக்க முடியவில்லை.

மறுபடியும் செத்து விடலாமா என்று நினைத்தேன். இனியும் போர்னோ படங்களில் நடிக்கக்கூடாது என்று சபதமெடுத்தேன். உடனடியாக எனக்குத் தெரிந்த ஹாலிவுட் தொடர்புகளிடம் பேசியதில் ஒரு வாய்ப்பு ஒன்று கிடைத்தது. “டான் ஜுவான் டிமார்கோ” என்ற படத்தில் 250 பெண்கள் பழங்காலத்து அரசன் ஒருவனின் அந்தப்புற மாளிகையில் நிர்வாணமாக இருக்கும் காட்சி படமாக்கப்படவேண்டும். அதற்கான தேர்வுக்குச் சென்றபோது பல நூறு பெண்கள் அந்த வாய்ப்பைத் தேடி வந்திருந்தனர். அதில் நான் தேர்வு செய்யப்பட்டேன்.

போர்னோவில் பெண்கள் வெறும் இறைச்சி உணவாக மட்டும்…

ஹாலிவுட் வாய்ப்புக்கள் கிடைக்காத நிலையில், பணம் பிரதான தேவையான போது வேறு வழியின்றி மீண்டும் போர்னோ உலகிற்குள் நுழைந்தேன். ஆனால் ஒன்றில் மட்டும் தெளிவாக இருந்தேன். ஆண் மிருகங்களிடம் சிக்கி வதைபட்டு இறுதியில் எல்லா எச்சங்களையும் முகத்தில் சிந்தவிடும் அந்தக் காட்சிகள் என்னை மிகவும் பாதித்திருந்தபடியால் இனியும் ஆண்களுடன் சேர்ந்து நடிப்பதில்லை என்பதில் தெளிவாக இருந்தேன்.

கொலை மிரட்டல், பண மோசடி, நோய்கள் இப்படி எதுவுமே இங்கு தவிர்க்க முடியாததாகிவிட்டது. நான் ஏற்றுக்கொள்ள முடியாது என்று விதித்த நிபந்தனைகள் அத்தனையையும் காற்றில் பறக்கவிட்டனர். எதையெல்லாம் செய்ய முடியாது என்று சொன்னேனோ அவையனைத்தையும் செய்யுமாறு நிர்ப்பந்திக்கப்பட்டேன்.

கொஞ்சம் கூட பாதுகாப்பில்லாத வகையில் உடலுறவுக் காட்சிகள் படம்பிடிக்கப்படும். ஆபாசப் படங்களில் கண்டிப்பாக ஆணுறை அணிய வேண்டும் என்பது அமெரிக்கச் சட்டம். ஆனால் பார்ப்பதற்கு இயல்பாக இருக்காது என்ற காரணத்தால் ஆணுறை இல்லாமலேயே படம் பிடிக்கப்படும். மொத்தத்தில் ஆபாசப் படத்தொழிலை பாலியல் கடத்தல் தொழில் என்று சொல்வது தான் பொருத்தமாக இருக்கும்.

பெரும்பாலும் இரகசிய வீடுகளுக்குள் படம்பிடிக்கப்படுவதால் பெண் என்ற முறையில் எங்கள் குரலை உயர்த்திப் பேசக்கூட அனுமதியில்லை. பல ஆண்கள் ஒன்று சேர்ந்திருக்கையில் எங்களால் வேறு என்ன செய்ய முடியும்? கொடுக்கப்படும் போதைப்பொருட்களை உட்கொண்டுவிட்டு அவர்கள் சொல்வதை நிறைவேற்றித்தரவேண்டும்.

ஆபாசப் படம் எடுக்கப்படும் இரகசிய வீடுகள் இயக்குனர்களின் ஒட்டுமொத்த கட்டுப்பாட்டில் இருக்கும். சில சமயங்களில் பல ஆண்களுடன் உடலுறவு வைத்துக்கொள்ள வேண்டி நிர்ப்பந்திப்பார்கள். சில சமயங்களில் வலி தாங்காமல் அழுகை வரும். ஒருவேளை அப்படி அழுதுவிட்டால் முகத்தில் குத்து விழும் அல்லது சம்பளம் கிடைக்காது. வாயும் வயிறும் இருக்கின்ற ஒரே காரணத்தால் வேறு வழியில்லாமல் அத்தனை பேருக்கும் ஈடுகொடுத்தேயாக வேண்டும்.

ஒரு முறை மிக மோசமான காம வெறியன் ஒருவன் என்னுடைய அனுமதியின்றி என்னுடைய மலத்துவாரத்தில் தன்னுடைய ஆணுறுப்பைத் திணித்து உடலுறவு கொண்டான். நரக வேதனையால் துடித்த எனக்கு அழுகையைக் கட்டுப்படுத்த இருந்த ஒரே வழி என்ன தெரியுமா? என் முன்னாலிருந்த நின்று கொண்டிருந்த இன்னொரு ஆணின் பிறப்புறுப்பை வலுக்கட்டாயமாக வாயில் திணித்துக் கொள்வதைத் தவிர வேறு வழியே இல்லை. மிகக் கொடூரமான மனித சித்திரவதை அது.

ஆனால் இது போன்ற படங்கள் உங்களுக்கு காட்சிப்படுத்தப்பட்டு இணையத்தில் நீங்கள் பார்க்கும் போது பிரமாதமானதாகத் தெரியும்; ஆனால் உண்மையில் அப்படியல்ல… முகம், கண், வாய் தொடங்கி பிறப்புறுப்பு வரை தெளிக்கப்பட்ட மூத்திரம், விந்தணு, இரத்தம் மேலும் மலத்துவாரத்திலிருந்து எடுக்கப்பட்ட ஆணுறுப்பில் இருந்து வெளிவரும் நாற்றம், அதை வாயில் வேறு வைத்துத் திணிப்பார்கள்; மறுப்பு தெரிவிக்க ஏது வாய்ப்பு; என்ன இருந்தாலும் நான் ஒரு இகழ்ச்சிக்குரிய பெண்ணல்லவா? எனவே இப்படி சகித்துக் கொள்ள முடியாத காட்சிகள் இங்கு மிகவும் சாதாரணம்.

பாத்ரூம்கள் குறித்து சொல்ல வேண்டியதேயில்லை. எனிமா எனப்படும் மலக்குடலைச் சுத்தம் செய்யும் மாத்திரைகள், ஆங்காங்கே வீசியெறியப்பட்ட சேவிங் பிளேடுகள்…அப்பப்பா ஏன் தான் இந்த போர்னோ படங்களை இரகசிய வீடுகளில் வைத்து எடுக்க அனுமதிக்கின்றார்களோ தெரியவில்லை. நடக்கும் வழியெங்கும் எச்சில், இரத்தம்,மூத்திரம், துடைத்தெறியப்பட்ட காகிதங்கள் என சுகாதாரம் கொஞ்சம் கூட இருக்காது. ஆனால் என்னை இந்த உலகத்திற்குள் அழைத்து வரும் முன்னர் அவர்கள் பேசியதில் என்னை வெகுவாக ஈர்த்தது சுகாதாரம் குறித்த அவர்களின் உத்திரவாதம் தான்.

சரி ஆண்களுடன் நடிக்கப்போவதில்லை என்றால் மாற்றுவழி என்ன? பெண்களுடன் ஓரினச்சேர்க்கையில் ஈடுபடுவதுதான். அதில் எனக்கு ஈடுபாடில்லை என்றாலும் முந்தையதுடன் ஒப்பிடுகையில் சக பெண்ணைப் பார்த்தவுடன் காம உணர்ச்சி ததும்பி வழிவது போல் நடிக்க வேண்டும் அவ்வளவுதான். நடிப்பு, பொய், வெற்றுவேடம் இரத்தத்தில் ஊறிப்போய் விட்டது.

இப்படி நடித்துக்கொண்டிருக்கையில் ஒரு லெஸ்பியன் படத்தில் விந்தையான நிகழ்வைச் சந்தித்தேன்; ஆம் படுக்கையறையில் அமெரிக்க தேசியக்கொடியை மெத்தை விரிப்பாகப் பயன்படுத்தியிருந்தனர்.

என் சிறு வயதில் நான் தேசப்பற்றுடன் இருந்த நிகழ்வு இப்போது என்னைச் சூழ்ந்து கொண்டது. 1976-ம் ஆண்டு நடந்த அமெரிக்கப் புரட்சிகரக் கொண்டாட்டங்களின் 200-ம் ஆண்டு நிகழ்வின் போது என் தாய்க்கு அமெரிக்க தேசியக்கொடி பதித்த ஒரு தட்டை வாங்கி பரிசளித்தேன். அந்தச் சிறுமி எப்போதோ இறந்து விட்டாள்.

வாழ்க்கை இப்படியே தொடர்ந்து கொண்டிருந்தது. எனக்கு நன்கு அறிமுகமான போர்னோ டைரக்டர் ஒருவர் என்னை ஒரு நாள் அணுகி “ராக்சி! உன்னுடைய படங்களுக்கு இப்போது மவுசு குறைந்து கொண்டு வருகிறது. எனவே நீ ஏன் ஒரு போர்னோ நடிகையாக விபச்சாரம் செய்யக்கூடாதென்று கேட்டார். விபச்சாரமே வேண்டாமென்று தானே இந்தத் தொழிலுக்கு வந்தேன் என்று பதிலளித்தேன். இது அப்படிப்பட்ட விபச்சாரமல்ல, போர்னோ உலகில் உனக்கு இரசிகர்களாக இருக்கும் பெரிய மனிதர்களிடம் வார இறுதியைச் செலவிட்டால் உனக்கு 2500 அமெரிக்க டாலர்கள் கிடைக்கும் என்றார்.

ஒரு பணக்கார வக்கீலிடம் 2,500 அமெரிக்க டாலர்களுக்கு விலை போனேன். சென்ற பிறகு தான் தெரிந்தது அந்த ஆள் ஒரு மோசமான போதை வண்டி என்று. என்ன செய்ய, இரண்டு நாட்கள் தானே. தொடர்ச்சியாக மணிக்கணக்கில் அந்த மிருகம் என்னைக் கொடுமைப் படுத்தியது. போதாத குறைக்கு ஆணுறையை வேறு அணியமாட்டேன் என்று ஆணவத்துடன் கூறி என்னைச் சிதைத்தது.

2,500 டாலர்களுடன் வீட்டிற்குத் திரும்பிய நான் இரண்டு நாட்களாகப் படுக்கையிலிருந்து எழுந்திருக்கவே இல்லை. அப்படி ஒரு உறக்கமும் ஓய்வும் தேவைப்பட்டது. பிறகு மறுபடியும் ஆபாசப் படங்களில் நடிப்பது என்று வாழ்க்கை தொடர்ந்து கொண்டிருந்தது. முன்னெப்போதும் இல்லாத வகையில் இப்போது நான் வெகுவாக மாறிவிட்டேன்.

பாலியல் வன்கொடுமைக்குள்ளாக்கப்பட்டு விபச்சாரத்தால் பாதிக்கப்பட்ட நான் ஒரு கட்டத்தில் மற்றவர்களை அதாவது என்னுடன் படத்தில் நடிப்பவர்களைப் பாலியல் ரீதியில் துன்புறுத்த ஆரம்பித்து விட்டேன். இது போர்னோ பட இயக்குனர்களுக்கு நல்ல வருமானத்தை ஈட்டிக் கொடுக்க, அவர்கள் மேலும் என்னை இவ்வாறு செய்யத் தூண்டினர். இப்படி என்னுடைய மிருக குணத்தை வைத்து அவர்கள் நல்ல காசு பார்த்தனர்.

ஹெர்பெஸ் நோய்த் தாக்குதலுக்குட்பட்டவரின் உதடுகள்

இப்படிப்பட்ட சூழ்நிலையில் இயங்கி வரும் என்னைப் போன்ற பெண்களுக்கு வரும் நோய்களுக்குப் பஞ்சமா என்ன? ஏறக்குறைய 30 படங்களில் நடித்த பிறகு எனக்கு இரண்டு கொடிய பால்வினை நோய்கள் வந்தது. அதில் ஹெர்பெஸ் (Herpes) எனப்படும் நோய் மிகக் கொடூரமானது. இதைக் குணப்படுத்த மருந்துகளும் இல்லை. ஒரு நாள் காலையில் நான் தூக்கத்திலிருந்து எழுந்த போது 103 டிகிரி அளவுக்குக் காய்ச்சல் அடித்தது. முகமெல்லாம் வெளிறிப்போய் என் முகத்தைக் கண்ணாடியில் கூட பார்க்கத் துணிவின்றி, மருத்துவரிடம் சென்றேன்.

மருத்துவரோ உனக்கு வந்திருக்கும் ஹெர்பெஸ் நோய் இது வரை நான் கண்டிராத மிக மோசமான பாதிப்புக்களை உனக்கு ஏற்படுத்தியுள்ளது என்று அதிர்ச்சியுடன் தெரிவித்தார். மேலும் என்னுடைய இரத்த மாதிரிகளை சோதனைக்காக எடுத்துக்கொண்டார். இது என்னை மனதளவில் மிகவும் பாதித்தது. உலகத்திலிருந்து தனித்து விடப்பட்டதைப் போல உணர்த்தேன்; தற்கொலை செய்து கொள்வதைத் தவிர வேறு நல்ல வழி எனக்கு அப்போது தெரியவில்லை; வலி நிவாரணிகளை அளவுக்கு அதிகமாக உட்கொண்டு தற்கொலைக்கு முயன்றேன். ஆனால் சாகாமல் பிழைத்தேன்.

என் உடலில் எங்கு பார்த்தாலும் ஹெர்பெஸ் நோயின் தாக்கம் வெளிப்பட்டது. உதடுகள், தொண்டை, பிறப்புறுப்பு, மலத்துவாரம் என எல்லா இடங்களிலும் இந்த நோய் என்னை வாட்டி வதைத்தது. இனியும் போர்னோ உலகத்தில் இருப்பது சாத்தியமற்றது என்ற முடிவுக்கு வந்தபின் விபச்சாரத்திற்குள் நுழைவது சரியென்று பட்டது. அது மட்டுமே எனக்கு முன்னிருந்த வாய்ப்பு என்பது வேறு கதை. ஆணுறை அணிந்தால்தான் உறவு என்று நிபந்தனை விதித்து விபச்சாரம் செய்வது சாத்தியம் என்று நினைத்தேன். ஆனால் வாழ்க்கை வேறு வழியில் என்னை அழைத்துச் சென்றது…

(தொடரும்)

-வரதன்

(இக்கட்டுரையின் முந்தைய பாகத்திற்கு செல்ல கீழே உள்ள சுட்டியை அழுத்தவும்)

 _____________

இந்தக் கட்டுரை பிடித்திருக்கிறதா? மக்களின் விழிப்புணர்ச்சிக்கு போராடும்
வினவு தளத்தை ஆதரியுங்கள் – சந்தா செலுத்துங்கள்!

சந்தா செலுத்தும் நண்பர்களுக்கு அந்த காலத்திற்குரிய வார செய்திப்பதிவு – புதிய கலாச்சாரம் – புதிய ஜனநாயகம் மின்புத்தகங்கள், நிகழ்வுகள் குறித்த அறிவித்தல்கள் அனுப்பப்படும். இந்தியாவில் வங்கிக் கணக்கு வைத்திருப்போர் மட்டுமே சந்தா அனுப்ப இயலும். டெபிட் கார்டு, கிரெடிட் கார்டு, நெட்பேங்கிங் மூலம் பணம் அனுப்பலாம். அனுப்புவதற்கு PayUmoney பட்டனை அழுத்தவும். வெளிநாடுகளில் வங்கிக் கணக்கு வைத்திருப்போர் எமது வங்கிக் கணக்கிற்கு நேரடியாக பணம் அனுப்பிவிட்டு, விவரத்தை உடன் அறியத்தரவும். நன்றி

  1. பத்தி பத்தியா பேசி இவர்களின் வசதி வாய்புகளுக்களை தேடி இவர்கள் பெரும் வலிகளை நாம் நம் வாதங்கள் மூலம் தவிடு பொடியாக்க முடியும் வினவு.

    ஆனால் ஒரே ஒரு விசயத்தை-வாதத்தை மட்டும் சொல்லிட்டு போயிடுறேன். சமுக பாதுகாப்பு அற்று தினம் கூலி வேலை செய்யும் பெண்கள்…, வீட்டு வேலை செய்யும் தாய்மார்கள்.., அங்கன் வாடிகளில் குறைந்த சம்பளத்துக்கு வேலை செய்யும் பெண்கள் , மிக குறைந்த சம்பளத்தில் தனியார் பள்ளி ஆசிரியைகள் என்று உழைக்கும் பெண்களை காணும் தருணத்தில் இந்த போர்னோ பெண்கள் எல்லாம் வசதி வாய்ப்புகளுக்காக தான் பீயை கூட தின்ன முனைகின்றார்கள் என்பது மட்டுமே உண்மை…

    • குமார்,

      உங்களுடைய ஒட்டுமொத்த கோபமும் ஆணாதிக்க உலகத்தின் மேலோ அல்லது முதலாளித்துவ உலகம் ஏற்படுத்தும் சமூக அவலங்களின் மீதோ திரும்பியிருக்கவேண்டும்; அல்லது குறைந்தபட்சம் பாலியல் தொழிலில் ஈடுபடும் பெண்களின் மீது கொஞ்சம் இரக்கமாவது காட்டியிருக்கலாம்.

      பெண்களில் நல்ல பெண்கள், தீய பெண்கள் என்று எப்படி வகைப்படுத்தலாம் என்றால் அவர்கள் சார்ந்திருக்கும் வர்க்கத்தையோ அல்லது அவர்கள் ஈடுபடுத்தப்பட்டிருக்கும் தொழிலையோ வைத்து எடை போடலாம். ஆரம்பத்தில் யாரோ ஒரு ஆணாதிக்க வெறியனால் பாதிக்க்கப்ட்ட இந்தப் பெண் பாலியல் தொழிலில் விரும்பியா வந்தாள்?

      பீ தின்றால் பணம் கிடைக்கும் என்ற பட்சத்தில் நம் பிள்ளைகளை பாலியல் தொழிலில் ஈடுபடுத்துவோமா என்ன? உழைக்கும் பெண்களை ஆதரிக்கிறேன் என்று கூறிக்கொண்டே மறுபுறம் ஆணாதிக்க வெறியையும், முதலாளித்துவ சமூகச் சீர்குலைவு ஏற்படுத்தும் பாதிப்புக்களை விமர்சிக்காமல் பாதிக்கப்பட்ட பெண்ணின் அவலத்தை சுகவாழ்க்கை என்று விமர்சிக்கும் உங்களுக்கும், நான் வலதுசாரியுமில்லை இடதுசாரியுமில்லை நடுநிலைதான் எனது அரசியல் என்று பேசும் கமலுக்கும் என்ன வேறுபாடு காணமுடியும்.

      • ராஜா,

        சமுகத்தில் நடைபெறும் அவலங்களுக்கு எல்லாம் மூல காரணம் இன்றைய முதலாளித்துவ சமுக ,அரசியல் மற்றும் பொருளாதார அமைப்புகள் தான் காரணம் என்பதால் அதன் விளைவுகளான சமுக குற்றங்களான கொலை,கொள்ளை,திருடு போன்ற இன்ன பிற சமுக குற்றங்களை ஆதரிக்க முடியுமா ராஜா?

        உழைக்கும் பெண்கள் என்று என் பின்னுட்டத்தில் தெளிவாகவே குறிப்பிட்டு இருகின்றேன். அப்படி இருக்க உழைக்கும் பெண்கள் எல்லாம் என்ன உங்களுக்கு இளக்காரமா?

        பீ தின்றால் பணம் கிடைக்கும் என்ற நிலை வரும் என்றாலும் நாம் நம் பிள்ளளை களை அந்த தொழிலில் ஈடுபட விடமாட்டோம் என்று தெரிந்தும் எண்ணத்துக்கு வெட்டி பேச்சு ராஜா?

        • குமார்,

          இதையே தான் நானும் உங்களிடம் கேட்கிறேன். திருட்டு, கொலை, கொள்ளை, விபச்சாரம் எல்லாம் முதலாளித்துவ வெறியின் வெளிப்பாடுகள் என்பதால் இந்தச் சமூக அவலம் மாறும் வரை அவற்றையெல்லாம் இரசித்துத் தான் அல்லது ஏற்றுக்கொண்டு தான் ஆக வேண்டும் என்கின்றீர்களா?

          பிரச்சினை உழைக்கும் பெண்களைப் பற்றியதல்ல….பாலியல் தொழிலில் தெரிந்தோ தெரியாமலோ சிக்கிக் கொள்ளும் பெண்களின் அவலத்தைப் பற்றியது தான் இது.

          ஒரு குழந்தை பெற்றோரிடமிருந்து தனித்து விடப்பட்டாலோ அல்லது கடத்தப்பட்டாலோ என்ன நடக்குமென்பது தான் ஷெல்லி லூபெனின் வாழ்க்கை. ஒரு தந்தைக்கு தன் மகளின் அக்கறை குறித்து நேரம் செலவிட முடியாத சூழ்நிலையை உருவாக்கியது யார்?

          குடும்ப உறவுகள் சிதைபடக் காரணம் யார்? ஆபாசத்தின் மூலம் எங்கிருந்து வந்தது. அந்தப் பெண் ஒன்றும் பீ தின்று வாழ வேண்டும் என்று விரும்பி இந்தத் தொழிலைச் செய்யவில்லை.காட்சிப்படுத்தலுக்காக அவ்வாறு அழுத்தம் கொடுக்கப்படுவதும் மேலும் அவளுடைய சம்மதமின்றியும் தான் இந்த அவலங்கள் நடக்கின்றன. முடிந்தால் நீங்கள் காலம் காலமாக விபச்சாரம் செய்து வரும் பெண்ணிடம் பேசிப் பாருங்கள். அவர்களுக்கு மற்ற தொழில்கள் மீது நாட்டமிருக்காது. உளவியல் ரீதியிலான பாதிப்புக்கள் மேலோங்கியிருப்பதால் அவர்களுக்கு வேறு எதுவும் இதை விட எளிதாகத் தெரியாது

          சரி! சமூகப் பாதுகாப்பற்று உழைக்கும் பெண்களில் பலருக்கு எதிராக பாலியல் வன்கொடுமைகள் நடப்பதில்லையா? ஒரு வேளை அப்படி பாதிக்கப்பட்ட ஒரு பெண் நம் குடும்ப உறுப்பினராக இருக்கும் போது உங்கள் பதில் என்னவாக இருக்கும்?

    • குமார் அவர்களே இந்த கட்டுரையின் நோக்கம் போர்னோ நடிகைகள் மீது இராக்கம் ஏற்படுத்த எழுதப்பட்டதாக நான் நினைக்கவில்லை. இது அம்பலப்படுத்தும் செய்தியானது போர்னோ பார்ப்பது தனது சுதந்திரம் என்று பேசுவதையும், மேலும் ஆரம்பத்தில் ஒரு குறுகுறுப்புடன் போர்னோவிற்கு அறிமுகமானவர்கள் அதன் இருண்ட பக்கங்களைத் தெரிந்து கொள்வதோடு அதைப் பற்றிய விவாதத்தை தொடங்குவது ஆகும்.

      இந்த தொடரின் ஆரம்பக் கட்டுரையைப் படித்துப் பாருங்கள் அதில் போர்னோவானது ஒருவரின் விழுமியங்களை சிதைத்து எல்லாம்ஆண்குறியின் நீளம் தான் தீர்மானிக்கிறது என மோசமான கண்ணோட்டத்திற்கு வருகிறார்கள்மா என்பதை தெளிவாக விளக்குகிறது. இன்று இணையம் பயண்படுத்தும் யாரும் போர்னோவை தவிர்க இயலாது அது சம்மந்தமான விழிப்புணர்வு இக்கட்டுரை தருகிறதா எனப் பாருங்கள்.

      • ராஜா மற்றும் குரு…,

        குரு,இந்த கட்டுரைக்கு நான் அளித்த பின்னுட்டம் என்னவோ அதன் அடிப்படையில் நீங்க பேசினீர்கள் என்றால் நான் உங்களுக்கு பதில் அளிக்க இயலும்? நான் வைக்கும் வாதங்களுக்கு உங்கள் வாதங்கள் பொருத்தமான்வைகளாக இல்லையே குரு? என்னுடைய பின்னுட்ட கருத்தை புரிந்து கொள்ள இயலவில்லை என்றால் இன்னும் கூர்மையாக பதில் சொல்கின்றேன்…

        சமுக பாதுகாப்பு அற்று தினம் கூலி வேலை செய்யும் பெண்கள்…, வீட்டு வேலை செய்யும் தாய்மார்கள்.., அங்கன் வாடிகளில் குறைந்த சம்பளத்துக்கு வேலை செய்யும் பெண்கள் , மிக குறைந்த சம்பளத்தில் தனியார் பள்ளி ஆசிரியைகள் என்று உழைக்கும் பெண்களை காணும் தருணத்தில் இந்த போர்னோ பெண்கள் எல்லாம் வசதி வாய்ப்புகளுக்காக தான் பீயை கூட தின்ன முனைகின்றார்கள் என்பது மட்டுமே உண்மை…

        நான் என் பின்னுட்டத்தில் ஆணடிமைத்தனம் மற்றும் முதலளிதுவ்த்தை விட்டு விட்டு பேசியது என்பது பெரிய தவறே அல்ல ராஜா… பெண்களின் பிரச்சனைகளுக்கு இவைகள் இரண்டுமே மூல கரணங்கள் என்பது உலகம் அறிந்த உண்மை… அதனால் அவற்றை பற்றி நான் பேசவில்லை… எனது பின்னுட்டத்தில் பாலியல் தொழிலாளர்களை பற்றிய எந்த விதமான மதிப்பீடுகளையும் நான் வைக்காமல் இருக்கும் நிலையில் என்னை நீங்க விமர்சனம் செய்வதது என்பது கண்மூடிதனமானது..ராஜா..! நான் குறை கூறி பேசியது போர்னோ பெண்களை பற்றி மட்டுமே..

  2. பணம் பேர் புகழ் இவையெல்லாம் ஈசியா கிடைக்கும் என்று இப்படி அழிவு பாதையில் செல்கின்றனர்…

  3. போர்னோ : உங்களுக்காக மலம் சுவைக்கும் நடிகைகள் ! // அவர்களின் பேராசைக்காக மலம் சுவைக்கும் நடிகைகள் ..!!

  4. பிரம்மச்சாியம் பிரதி பன்னம் வீாிய லாப என்பது யோக சுத்திரம்.பிரம்மச்சாியம் தன்னைக் காப்பவனுக்கு உடல் மன ஆன்ம வீாியத்தை அளிக்கும்.நிம்மதியான குடும்ப வாழ்வை அளிக்கும். பண்பாடான சமூகத்தை அளிக்கும்.
    எங்குபெண்கள் கௌரவமாக நடத்தப்படுகின்றாா்களோ அங்கே மங்களம் குடிகொண்டிருக்கும்.
    அம்மணமாக நடத்தால்தான் ஆபாசபடம் அல்ல.இன்றைய திரைப்படங்கள் அனைத்தும் ஆபாசகுப்பைகள் தாம்.அதனால்தான் இந்தியாவிலும்விபச்சாரம் பெருகிக் கொண்டேயிருக்கின்றது.சிறுமிகள் கூட பாலியல் துன்புருத்தலுக்கு ஆளாகின்றாா்கள். திரைப்படங்கள்ஒழுங்குபடுத்துவது அவசியம் ஆகின்றது.பாலியில் முறைகேடுகள் சமூதாயத்தை எப்படி பாழ்படுத்தின என்பதற்கு ஆதாரம் Pitrim A Sorokin என்ற ரஷ்ய மானுடவியல் அறிஞா் எழுதிய Sane sex order என்ற புத்தகம் .பாரதீய பவன் வெளியீடு.படித்துப் பாருங்கள். இன்று கூடதமிழ் நாட்டில் முதுகு அம்மணமாக இருக்கின்றது .ரவிக்கைகள் அப்படி சிறுத்து போய்விட்டனவே.ஒரு பெண் தன்னை எப்படி மதிக்கின்றாள்.திரைப்பட நடிகைதான் ரோல் மாடல்.முன் உதாரணம்.
    விபச்சாரத்திற்கும் ஆபாச படப்பிடிப்புக்கும் தாராளமாக பெண்கள் கிடைப்பா்கள்.

    • இவ்வளவு கேவலத்தையும் ஏன் ஹிந்து மதம் பொறுத்துக்கொண்டு இருக்கிறது? ஒருவேளை ஹிந்து மதம் ஆதரிப்பதாலோ ?

    • பாலியல் தொழிலாளிகளும், இதுபோன்ற ஆபாச பட நடிகைகளும் ஆண் சமூகத்தாலும், நுகர்வுகலாச்சரத்தாலும் உருவாக்கப்படுகின்றனர்.

  5. கட்டுரையை படிப்பவர்கள் பெரும்பாலும் பெண்களை ஆணாதிக்க சிந்தனையோடு பார்ப்பவர்கள் தான். அதனால் தான் பெண்கள் இந்த தொழிலை நோக்கி ஏன் செல்கிறார்கள் என்று அவர்களால் சிந்தித்து பார்க்க முடியவில்லை.

    • புதியவன்…., அப்ப விளக்காம ஒரு சில பெண்கள் மட்டும் இந்த போர்னோ தொழிலை நோக்கி ஏன் செல்கிறார்கள் என்று கூருங்க பார்கலாம்?

  6. குமார் , நீங்கள் கூறும் தினம் கூலி வேலை செய்யும் பெண்கள்…, வீட்டு வேலை செய்யும் தாய்மார்கள்.., அங்கன் வாடிகளில் குறைந்த சம்பளத்துக்கு வேலை செய்யும் பெண்கள் , மிக குறைந்த சம்பளத்தில் தனியார் பள்ளி ஆசிரியைகள் என்று உழைக்கும் பெண்கள் என்பன கருவறையான அமெரிக்காவில் எல்லா பெண்களுக்கும் சாத்தியம் இல்லை, காரணம் பெருமளவு ஆட்டோமேசன் மற்றும் திறமை திறமை என வெகுசில ‘திறமை அடிமைகளுக்கே’ வேலை வாய்பை வைத்திருக்கும் முதலாளித்துவம் தான். நீங்கள் கூறுவது போல் வசதி வாய்ப்புக்காக பீ தின்கிறார்கள் என்பது சில மில்லியானர்களாக இருக்கும் போர்னோ நடிகைகளை எண்ணி சொல்கிறீர் போல். அவர்கள் கூட மிக அழகான மற்றும் முகம் சுளிக்காமல் எல்லாவற்றையும் செய்வதால்தான் அது சாத்தியம். ஏன் மேற்கில்க ல்லூரி பெண்கள் கூட கட்டணத்துக்காக சுகர் டாடியுடன் சாதாரணமாக படுக்கிறார்கள்? அவர்களும் வசதிக்காக என்குகிரார்களா? போர்னோ
    ‘திரைக்கதை’ வகைகளில் அதுவும் ஒன்றே? அந்தளவுக்கு அக்கேவலத்தை இயல்பாக்கியது எது?
    மேற்கு பெண்கள் என்ன வானத்திலிருந்து மானம்சொ ரணை ஏதுமில்லாமல் குதித்தவர்களா? அவர்களை இந்த நிலைக்கு தள்ளியது எது? நீங்கள் வழக்கம் போல் மக்களை நோகும் பல்லவி படுகிறீர்கள். நாஜி படைகளை நடுங்க வைத்த சோவியத் பெண்களை இன்று விபசாரத்தில் பெயரெடுக்க வைத்த நரிகள் யார்?
    பெண்களுக்கு வேறு வழிஇல்லாமல் செய்கிறது முதலாளித்துவம். இந்தியாவிலும் அப்படி ஒரு நிலையே வரும் இந்த கட்டமைப்பு தொடர்ந்தால்.

    • அமெரிக்காவில் பிளமபர் பிட்டர் டிரைவர் என்று தொழிலாளர் வர்க்கம் இருக்க த்தான் செய்கின்றது… அதில் ஒருத்தரா இருந்த டிரைவர் ஜேம்ஸ் கமருன் தான் உலக இயற்கை வளங்களை கொள்ளையடிக்கும் முதலாளித்துவத்தை அம்பல படுத்தி அவியேட்டார் Avatar (2009) படம் கூட எடுத்து இருகார்..அப்படியே நம்ம சட்டிஸ்கர் மாநிலத்தில் நடக்கும் இயற்கை வளங்கள் அழிப்பு பிரச்சனை தான் அந்த படத்தில் காட்சி படுத்த பட்டு இருக்கு. அவர் ஒரு தொழிலாளியா தன் வாழ்கையை தொடங்கியதால் தான் இது சாத்தியப்பட்டது என்று நினைகின்றேன்.மேலும் உழைக்கும் பெண்கள் வீட்டில் குழந்தைகளை பராமரிபவ்ர்கள், பள்ளிகளில் ஆசிரியர்/யை களுக்கு உதவ என்று பெண்கள் வேலை செய்து கொண்டு தான் இருக்காங்க… ஆமாம் இன்னும் பல்வேறு துறைகளில் வேலை செய்துகிட்டு தான் இருக்காங்க…

      முதலாளித்துவத்தின் அவலம் தான் அனைத்து சமுக குற்றங்களுக்கும் காரணம் என்பது உண்மை தான்., அதே நேரத்தில் அனைவருமே அத்தகைய குற்றங்களில் ஈடு படவில்லை என்ற நிலையில் இருந்து பிரச்சனையை நோக்குங்க…..

      • ஐயா,

        போர்னோ படங்களை எடுப்பவர்களும், அதைப் பார்ப்பதன் மூலம் எடுக்கத் தூண்டுபவர்களும் குற்றவாளிகளா ?
        அல்லது அதில் நடிப்பவர்கள், குறிப்பாக நடிக்கும் பெண்கள் குற்றவாளிகளா?

        • எது எதுவெல்லாம் இதில் தண்டனைக்கு உரிய குற்றங்கள் என்பது அந்த அந்த நாட்டு சட்டங்களை பொருத்தது….(இப்ப ஒருத்தரு சட்ட படி பேசாதிங்க…இயற்கை நீதி படி பேசுங்க என்று வருவாரு பாருங்க!)நீங்க கேட்ட கேள்விக்கு மட்டுமே பதில் அளித்து இருக்கேன்…

          • ஐயா,

            //முதலாளித்துவத்தின் அவலம் தான் அனைத்து சமுக குற்றங்களுக்கும் காரணம் என்பது உண்மை தான்., அதே நேரத்தில் அனைவருமே அத்தகைய குற்றங்களில் ஈடு படவில்லை//

            குற்றம் என்று வரையறை செய்தது நீங்கள் தான். அதனால் குற்றத்தை எப்படி வரையறுப்பதென்று கேட்டேன்.. நீங்கள் நாடுகளின் சட்டங்களை எடுத்துக்காட்டுகிறீர்கள்.

            நாட்டு சட்டங்களின் படி முதலாளித்துவமும் அதன் லாபம், சொத்துரிமை மற்றும் இன்ன பிறவும் குற்றமற்றவையே. அதனால் அவற்றை குற்றமற்றவை என்று மதிப்பிட வேண்டுமா? அல்லது அவை குற்றமா.. ?

            படம் எடுப்பது, அதைப் பார்ப்பதன் மூலம் எடுக்கத் தூண்டுவது, நடிப்பது என்ற எவையுமே குற்றமில்லாத நாடுகளும் இருக்கின்றனவே? எனில் எதுவுமே குற்றமில்லை என்று எடுத்துக்கொள்ளலாமா? கூடாதெனில் ஏன்?

            எனில் குற்றத்தை எப்படி மதிப்பிடுவது?

            குற்றத்தை நீங்கள் வசிக்கும் நாட்டின் சட்டத்திலிருந்து அல்லது உங்கள் கண்ணோட்டத்திலிருந்து பொதுமைப்படுத்தி மதிப்படலாமா?

            வசதி வாய்ப்புக்களுக்காக போர்னோ படங்களில் நடிக்கிறார்கள் என்று பொதுமைப்படுத்தியுளீர்கள்.

            விபச்சாரத்திற்கும் இதே அளவுகோலைப் பயன்படுத்துவீர்களா? இதில் கூடத்தான் எல்லா பெண்களும் ஈடுபடவில்லை. அதனால், இதே அளவுகோலின் படி வசதி வாய்ப்புக்களுக்காக விபச்சாரத்திற்கு வருகிறார்கள் என்று பொதுமைப்படுத்தலாமா?

            //இயற்கை நீதி படி பேசுங்க என்று வருவாரு பாருங்க!//
            (எனில் விபச்சார தொழிலாளிகளுக்காக அமைப்பு கட்டுவீர்களா என்று நீங்கள் துள்ளி வரமாட்டீர்கள் என்று நம்புகிறேன்)

            போர்னோ நடிகைகளை புனிதப்படுத்துவதற்காகவோ வேறு எந்த நோக்கத்திற்காகவோ இந்தக்கட்டுரை இங்கு வெளிவரவில்லை.
            போர்னோ படங்களைப் பார்ப்பதன் மூலம் அவற்றை எடுக்கத் தூண்டுபவர்கள் தான் இந்தக் கட்டுரைத் தொடரின் இலக்கு எனக் கருதுகிறேன். (வினவும் அந்த நோக்கத்தில் தான் இதை வெளியிடுகிறார்கள்.) உங்களுடைய Grand sweep generalization- யாருக்குப் பயன்படும்? நோக்கம் என்ன?

            உங்கள் அளவுக்கு பாட்டாளி வர்க்க கண்ணோட்டமும், விவாத தர்க்க அறிவும் எனக்கில்லையாதலால், தயை கூர்ந்து பரிசீலிக்குமாறு கோருகிறேன்.

          • மேலும், முதலாளித்துவத்தின், அதன் நுகர்வு வெறியின் கோரமுகத்தை இது மற்றொரு கோணத்திலிருந்து அம்பலப்படுத்தவும் செய்கிறது. இதில் உங்களுக்கென்ன பிரச்சினை என்று குறிப்பாக சொன்னால் நல்லது.

            இந்தக் கட்டுரை போர்னோ நடிகைகளின் மீது கழிவிரக்கத்தை ஏற்படுத்தும் என்று அஞ்சுகிறீர்களா? அல்லது வேறெதுவுமா? ஐயா, விரிவாக சொல்லவும்.

            • ஆணி , முதலாளிதுவத்தின் கோரமுகத்தின் காரணமாகத்தான் சமுகத்தில் நடைபெறும் கொலை , கொள்ளை, ஊழல் போன்ற பலவேறு சமுக குற்றங்கள் நிக்ழ்கிறன என்ற காரணத்துக்காக அவற்றை நாம் மென்மையாகவோ அல்லது சட்டத்தில் இருந்து விதிவிலக்கு அளித்து கையாள இயலாது என்பதனை ஏற்பீர்கள் என்றே நினைகின்றேன். ஏற்கின்றீர்களா ? இப்ப போர்னோ என்ற சமுக குற்றத்தை(பார்பவர்கள், தயாரிப்பவர்கள், நடிபவ்ர்கள் ஈடுபடும் குற்றத்தை) அந்த விசயத்தை மேல் உள்ள எனது நிலைபாட்டுடன் ஒப்பிட்டு பதில் அளியுங்கள்…

              பல மில்லியன் அமெரிக்க டாலர்கள் அளவுக்கு நிகழும் போர்னோவில் ஈடுபடும் வியாபாரிகள் வினோகிச்தர்கள் , நடிகர்கள் ,தயாரிப்பாளர்கள் என்று யார் மீதும் இஇரக்கம் காட்ட தேவையில்லை என்பதே எனது நிலைப்பாடு…குறிப்பாக அமெரிக்க சமுகத்தை கணக்கில் எடுத்துக்கொண்டு பேசும் போது நாம் இவர்களுக்காக கழிவிரக்கத்தை காட்ட தேவையில்லை என்பதே எனது நிலைபாடு…

      • அதே கேமரூன் தான் ராம்போ-II படத்தயும் எடுத்துருக்காரு.. டைட்டானிக் படத்தயும் எடுத்தாரு..
        அதனால.. என்னங்குறீங்க? ஒரே குயப்பமா இருக்குதே !

        • அக்காகி ,

          இதே வினவு தங்க மீன்கள் படத்துக்காக ஆகா ஓகோ என்று பாராட்டிய இயக்குனர் ராம் அவர்கள் தான் தரமணி படத்தையும் எடுத்து இருகாரு… அந்த படத்துக்கு அந்த முற்போக்கு வெளியிட்ட முதல் விளம்பரம் எப்படி எல்லாம் பெண்களை இழிவு செய்து இருக்கு என்றும் உங்களுக்கு தெரியும்…! படமும் கூட பெண்களை எப்படி இழிவு செய்து இருக்கும் என்றும் உங்களுக்கு தெரியும் என்று நினைகின்றேன்…உண்மையை கூறுவது என்றால் ரம்போ தொடர் படங்களை நான் பார்க்காததால் என்னால் உங்கள் கேள்விகளுக்கு பதில் அளிக்க இயலவில்ல்லை… அதே நேரத்தில் Avatar (2009) படத்தை நான் பலமுறை பார்த்ததால் அதன் ஒன்லைன் கதையும், கதையின் விரிந்த திரைகதையும் எனக்கு புரிந்ததால் என்னால் பேசமுடிந்தது..

          அடுத்து டைடானிக் படம் வர்க்கம் கடந்த காதலை அந்த காதலுக்காக ஒரு ஏழை தொழிலாளி தன் உயிரையும் கொடுக்கின்றான் என்ற நிலையில் அவனை தன் முதிர்ந்த வாழ்க்கை காலகட்டத்திலும் அந்த பெண் நினைவில் கொண்டு இருந்தாங்க என்ற சூழலில் பார்க்கும் போது அந்த படம் ஒன்றும் சமுகத்துக்கு பெரிய குற்றம் இழைக்கும் படமாக எனக்கு தெரியவில்லை…

          • ///வினவு தங்க மீன்கள் படத்துக்காக ஆகா ஓகோ என்று பாராட்டிய இயக்குனர் ராம்///

            ராம் என்ன வர்க்கம் என்று ஆய்வு செய்து அவருக்கு வினவு சர்ட்டிபிகேட் ஒன்னியும் குடுக்கலியே..

            அவதார், கேமரூனை நீங்க இங்க சொல்றது எதுக்குன்னு கேட்டேன்?

            உழைக்கும் பாட்டாளி வர்க்கத்தைச் சேந்தவரா இருந்தா மட்டும் தான் நல்ல படம் எடுப்பாங்களா?

            • அக்காகி.., நாக்கு மட்டும் நரம்பு இல்லாதது என்று அல்ல கணினி பலகையை தட்டும் உங்க விரல்கள் கூடத்தான் என்று நிருபணம் செய்யறீங்க அக்காகி…ஒங்க குயப்பத்தை நிவர்த்தி செய்யத்தானே முந்தைய பின்னுட்டம்… நிவர்த்தி ஆகலையா இன்னும் ? “””உழைக்கும் பாட்டாளி வர்க்கத்தைச் சேந்தவரா இருந்தா மட்டும் தான் நல்ல படம் எடுப்பாங்களா?””” என்ற இந்த கேள்வியை கேட்கும் உங்க சிந்தனை அப்புறம் எதுக்கு அதுக்கு முந்தியே கேமரூன் பற்றிய கேள்வியை எழுப்பியது? சும்மா தெரிந்து கொள்ள தான் கேக்கேன்…! அவர் பலவேறு படங்களை எடுத்து இருக்காரு அதில் அவர் சில குறிபிட்ட தகுந்த நல்ல படங்களையும் எடுத்து இருகாரு என்று புரிந்து கொள்ள இயலாத அளவுக்கா நீங்க ரொம்ப டல்லா சிந்திகிரீங்க?

              சின்னா அவர்கள் பின்னுட்டம் 6-ல் என்ன பேசினார் என்றும் அதுக்கு தான் நான் அந்த பதில் பின்னுட்டம் 6.1 ல் அளித்தேன் என்றும் தெரிந்து தானே இங்க வந்து சந்துல சிந்துபாடிகிட்டு இருக்கீங்க அக்காகி! பட்டைய கிளப்புங்க தோழா..! சும்மா அதிர வைங்க நண்பா! வினவுல யாருமே சிந்திக்காத கோணங்களில்சிந்தித்து பேசுங்க சகோ….!

              • அட கிரகமே!

                ///அமெரிக்காவில் பிளமபர் பிட்டர் டிரைவர் என்று தொழிலாளர் வர்க்கம் இருக்க த்தான் செய்கின்றது… அதில் ஒருத்தரா இருந்த டிரைவர் ஜேம்ஸ் கமருன் தான் உலக இயற்கை வளங்களை கொள்ளையடிக்கும் முதலாளித்துவத்தை அம்பல படுத்தி அவியேட்டார் Avatar (2009) படம் கூட எடுத்து இருகார்..///

                ///அவர் பலவேறு படங்களை எடுத்து இருக்காரு அதில் அவர் சில குறிபிட்ட தகுந்த நல்ல படங்களையும் எடுத்து இருகாரு///

                யாரு சாரே மாறி மாறி டைப்புறது? நானா நீங்களா?

                ///உங்க சிந்தனை அப்புறம் எதுக்கு அதுக்கு முந்தியே கேமரூன் பற்றிய கேள்வியை எழுப்பியது? ///

                தல.. என்னா தல.. நீங்க தான் வினவு விவாதத்துல கில்லின்னு நினச்சுகிட்டு இருந்தேன் இப்படி மானத்தை வாங்கிட்டீங்களே?

                இந்த – தொழிலாளர் வர்க்கம், அதில் ஒருத்தரா இருந்த, ஜேம்ஸ் கமருன் – ஸ்டேட்மெண்ட் அடிச்சது நீங்க..

                அதுக்கு அவரு மற்ற பல படங்களும் எடுத்திருக்காருன்னு சொன்னது நான். ஜேம்ஸ் கேமரூனை அவதார் மாதிரி நல்ல படங்கள வச்சி மட்டும் பாக்க முடியாதே, அவர் ஸ்கிரிப்ட் எழுதுன ‘ராம்போ-2’ படத்தையும் சேர்த்து தான பாக்கனும்னு கேட்டது தான் அந்த /என்னங்குறீங்க? ஒரே குயப்பமா இருக்குதே/.
                யாரு டல்லு ? யாரு பிரிஸ்குனா இங்க போட்டி நடத்திகினு இருக்கோம்?

                ///நாம் இவர்களுக்காக கழிவிரக்கத்தை காட்ட தேவையில்லை///
                ///சமுக சேவைக்காக தான் நடிகின்றார்கள் என்று நீங்கள் தான் நிருபணம் செய்யவேண்டும்.///

                போர்னோ நடிகைகளின் மீது கழிவிரக்கத்தை தூண்டி அதன் மூலம் போர்னோ படம் பாக்குறவங்களை இன்னும் அதிகமா பார்க்க வினவு தூண்டுது.
                போர்னோ நடிகைகள் சமுக சேவைக்காக தான் நடிகின்றார்கள் என்று சொல்லி போர்னோ படம் பாக்குறவங்களை அந்த சேவையைப் பயன்படுத்தச் சொல்லி வினவு தூண்டுது.

                இதுதானா உங்க பிரிஸ்க்கு?

                இதத்தான் நான் இல்லுமினாட்டி இல்லியூசன் இன்ஸ்டிங்ட்டுங்கறேன்.

                ஆளவிடுங்க.

                • அக்காகி.., என்னத்த புரிந்துகொண்டு பேசுறீங்க…. தெளிவா தானே சொன்னேன்.. எனக்கும் சினனாவுக்கும் இடையே ஆனா விவாதத்தில் வந்த கருத்துகள் அது என்று…சின்னா அமெரிக்காவில் ஆட்டோமேஷன்…, அதனால வேலை கிடைகல என்ற பொருளில் பேசினாரா இல்லையா? அதுக்கு தான் நான் என் பதிலை கூறினேன்… சரி சரி உங்களுக்கு விவாதிக்க ஆசை இருக்கு உங்களுக்கு ஆனால் நேரம் இல்ல போல… உங்க அரை குறை புரிதலால் என்னுடைய நேரம் தான் நட்டம் ஆகிறது…மீண்டும் மீண்டும் விளக்க வேண்டியது ஆகிறது…

              • //சின்னா அவர்கள் பின்னுட்டம் 6-ல் என்ன பேசினார் என்றும் அதுக்கு தான் நான் அந்த பதில் பின்னுட்டம் 6.1 ல் அளித்தேன்///

                புரியாமல் தான் கேட்கிறேன் தலீவரே.. சின்னா சொன்னதுக்கும் ஜேம்ஸ் கேமரூன் -அவதாருக்கும் என்ன சம்பந்தம்?
                நேத்து நைட்டு இல்லீன்னா முந்தா நேத்து நைட்டு அவதார் படத்த நீங்க மறுபடியும் பாத்ததெல்லாம் சம்பந்தமாகாது தல..

                • அக்காக்கி…., உண்மையிலேயே புரியலையா உங்களுக்கு? இல்ல புரியாத மாதிரி ந்டிகிரீங்க்லா? அமெரிக்காவில் எல்லாமே ஆட்டோமேஷன் என்று கூறுபவருக்கு(சின்னாவுக்கு) வெளக்கமா தானே பதில கூறனும்…அப்படி கூறும் போது உங்களுக்கு எங்கே வலிக்குது சகோ… சும்மா லோலாயி பண்ணாம அப்படிக்கா ஒதுங்கிபோங்க சகோ…

                  அமெரிக்காவிலும் தொழிலாளர்கள் இருக்காங்க… அவிங்களுக்கும் கொஞ்சமாவது வர்க்க உணர்வு இருக்கு என்பதனை கூறும் போது உங்களுக்கு எங்கே குடையுது சகோ?

                  ஒன்னு மட்டும் புரியுது தெரியாமல் இந்த விவாதத்தில் குட்டையை நல்லவே குழப்பிகிட்டு இருக்கீங்க நீங்க…

                  உங்களுக்கு என்னுடைய கருத்தில் ஏதேனும் வேறுபாடு இருந்தால் என்னுடைய நேரடியான பின்னுட்டம் 1 இருந்து விவாதத்தை ஆரம்பிங்க… அடுத்தங்க கூட நான் பேசும் விசயத்தை முழுசா புரிந்து கொள்ளாமல் உளறிகிட்டு இருக்காதிங்க சகோ…

  7. ஆணி…,

    1.நாட்டு சட்டங்களின் படி முதலாளித்துவமும் அதன் லாபம், சொத்துரிமை மற்றும் இன்ன பிறவும் குற்றமற்றவையே. அதனால் அவற்றை குற்றமற்றவை என்று மதிப்பிட வேண்டுமா? அல்லது அவை குற்றமா.. ?

    முதலாளித்துவ சமுகத்தில் வாழும் நாம் எல்லாம் சொத்துரிமை தொடர்பான அந்த சட்டங்களை பயன்படுத்தி கொண்டு தானே இருக்கோம் என்ற நிலையில் அவைகள் எப்படி நாம் ஒதுக்கிவைத்து விட்டு செல்லமுடியும்? ஒட்டுமொத்த அரசியல் அமைப்பை மாற்றும் தருணத்தில் தானே அவற்றை மாற்றி சொத்துரிமைய்ற சமுகத்தை நாம் கட்டமைக்க இயலும்..கல்ல்லூரி நாட்களில் தோழர்கள் எனக்கு சொல்லிக்கொடுத்த்டு என்ன என்றால் புதிய ஜனாயக புரட்சியை நிகழ்ந்துவது கூட எளிது தான்…அதன் மூலம் பெருமுதலாளிகளின் சொத்துகளை பறிமுதல் செய்வது கூட எளிதுதான். ஆனால் அதன் பின் அமைக்க போகும் சோசியலிச சமுகத்தில் சொத்து உடைமை அற்ற சமுகத்தை நோக்கி பயணித்து தான் மிகவும் கடினமான செயல் என்பார்கள். என்ன காரணம் என்று நான் வினவிய போது ஆட்டோ டிரைவர் முதற்கொண்டு சிறு வியாபாரிகள் வரைக்கும் கம்யுனிச சமுகத்தை நோக்கிய பயணத்துக்கு எதிர்ப்பு தெரிவிப்பார்கள் என்றார்கள். எனவே அந்த அந்த சமுக நிலைகளுக்கு ஏற்ப சட்டங்கள் இருக்கத்தான் செய்யும். சமுகங்கள் புரட்சியும் ஊடாக மாறும் போது (transition from one kind of society to another) சட்டங்களும் புதிய சமுகத்துக்கு ஏற்ப மாற்றி அமைக்கப்படும்.

    2.படம் எடுப்பது, அதைப் பார்ப்பதன் மூலம் எடுக்கத் தூண்டுவது, நடிப்பது என்ற எவையுமே குற்றமில்லாத நாடுகளும் இருக்கின்றனவே? எனில் எதுவுமே குற்றமில்லை என்று எடுத்துக்கொள்ளலாமா? கூடாதெனில் ஏன்?

    போர்னோ மற்றும் விபச்சாரம் ஆகியவை இன்றைய முதலாளித்துவ-நிலபிரபுத்துவ சமுகத்தின் இழிநிலைகள் என்பது உண்மை தான் என்ற நிலையில் அவற்றை புதிய சனநாயக புரட்சியின் ஊடாகமட்டுமே நீக்க இயலும் என்ற எதார்த்தத்தில் இருந்து சிந்தியுங்கள். இவற்றை சமுகத்தின் இழிநிலைகள் என்று கூறுவதனை விட பெண்கள் மீதான கொடுமைகள் என்று கூறுவது தான் சரியானதாக இருக்கும் என்று நினைகின்றேன். இந்திய சமுகத்தில் கூட விபச்சாரம் குற்றம் என்றாலும் அவைகள் தொடர்பான சட்டங்கள் மிகவும் கடுமையாக நடைமுறை படுத்தப்படவில்லை என்ற நிலையில் இருந்தும் நாம் பார்க்கும் போது முதலாளித்துவ அரசு பெண்களின் மாண்புக்கும் , வாழ்வுரிமைக்கும் எதிராகவே உள்ளது என்ற முடிவுக்கு தான் நாம் வரலாம்.

    தொடரும்….

  8. ஆணி,

    3.எனில் குற்றத்தை எப்படி மதிப்பிடுவது?

    அந்த அந்த சமுக அமைப்பின் அடிபடையில் தான் மதிப்பீடு செய்யவேண்டும்.

    4.குற்றத்தை நீங்கள் வசிக்கும் நாட்டின் சட்டத்திலிருந்து அல்லது உங்கள் கண்ணோட்டத்திலிருந்து பொதுமைப்படுத்தி மதிப்படலாமா? வசதி வாய்ப்புக்களுக்காக போர்னோ படங்களில் நடிக்கிறார்கள் என்று பொதுமைப்படுத்தியுளீர்கள்.

    நான் கூறுவது போர்னோ படங்களில் நடிக்கும் பெண்களை பற்றி மட்டும் தான். வசதி வாய்புக்ளுக்காக நடிக்காமல் சமுக சேவைக்காக தான் நடிகின்றார்கள் என்று நீங்கள் தான் நிருபணம் செய்யவேண்டும். மேலும் பொதுமை படுத்தியது நான் அல்ல… இங்கே எனக்கு எதிராக வாதாடும் நீங்கள் அனைவரும் தான். முதலாளித்துவத்தின் காரணமாக தான் போர்னோ மற்றும் விபச்சாரம் நிகழ்கின்றது என்று பொதுமை படுத்தியது நீங்க தான்… நான் அல்ல… என் கருத்தை நான் முன்பே நேரடியாக வைத்து உள்ளேன்..இப்படி….”””முதலாளித்துவத்தின் அவலம் தான் அனைத்து சமுக குற்றங்களுக்கும் காரணம் என்பது உண்மை தான்., அதே நேரத்தில் அனைவருமே அத்தகைய குற்றங்களில் ஈடு படவில்லை என்ற நிலையில் இருந்து பிரச்சனையை நோக்குங்க…..””” ஆம் போர்னோவில் நடிபவர்கள் எல்லாம் விதி விலக்குகள் தான். அவர்கள் பணம் ,பொருள் சார்ந்த தேவைகளை (ஏன் தேவைகளுக்கு அதிகமான்வைகளை நோக்கி) பயணிப்பவர்கள் தான்.

    5.விபச்சாரத்திற்கும் இதே அளவுகோலைப் பயன்படுத்துவீர்களா? இதில் கூடத்தான் எல்லா பெண்களும் ஈடுபடவில்லை. அதனால், இதே அளவுகோலின் படி வசதி வாய்ப்புக்களுக்காக விபச்சாரத்திற்கு வருகிறார்கள் என்று பொதுமைப்படுத்தலாமா?

    போர்னோவில் நடிக்கும் பெண்களை நாம் காணும் கண்ணோட்டத்தில் இருந்து விபச்சாரத்தை காண தேவையில்லை என்றே நினைகின்றேன்… அதே நேரத்தில் வெள்ளைகாரனிடம் இருந்து மோட்டார் கம்பெனியை இலவசமாக பெறுவதற்கு தமிழத்தில் குடியேறிய ஆரியர்கள் பயன்படுத்திய விபச்சாரமும் தமிழகத்தில் இன்னும் நடைமுறையில் தான் இருக்கிறது. அதே நேரத்தில் ஏழைமையின் காரணமாகவும் தான் இந்த அவலம் நடை பெற்றுகொண்டு இருக்கிறது.

    தொடரும்

    • ///சமுக சேவைக்காக தான் நடிகின்றார்கள் என்று நீங்கள் தான் நிருபணம் செய்யவேண்டும்.///

      உங்க பிரச்சனை என்னன்னு இப்ப புரியுதுங்க..

      XXX படம் பார்க்குறவங்களுக்கு சமுகசேவை செய்றதுக்கு தான் நடிகிறாங்கன்னு அவங்கள இந்தக் கட்டுரை பிரமோட் பண்ணுதுன்னு உங்க, அது என்னங்க இல்லியூசனா இன்ஸ்டிங்ட்டா? ஆங்.. உங்க இல்லியூசன் இன்ஸ்டிங்குக்கு தெரிஞ்சிருக்கு..

      ஏன் வினவு இப்படில்லாம் பண்றீங்க?

      இல்லியூசன் இன்ஸ்டிங்க ஏன் தூண்டிவிடுறீங்க?

      ///ஆம் போர்னோவில் நடிபவர்கள் எல்லாம் விதி விலக்குகள் தான். அவர்கள் பணம் ,பொருள் சார்ந்த தேவைகளை (ஏன் தேவைகளுக்கு அதிகமான்வைகளை நோக்கி) பயணிப்பவர்கள் தான்.///

      இதத்தான் நுகர்வு வெறின்றாங்க.. அப்புறம் அதெப்படி விதிவிலக்கு? நுகர்வு வெறி முதலாளித்துவ சந்தை கலாச்சாரத்துல சேராதா?

      அய்யய்யோ தெரியாத்தனமா கேட்டுட்டேனே.. என்னைய விட்டுடுங்க.. 🙂
      நாம பழையபடிக்கு சினிமா மேட்டருக்கு வருவோம்..

      • அடுத்தவர்கள் செய்யும் விவாதத்தில் குறுக்கே புகுந்து குட்டையை குழப்பும் வேலையே நன்னாவே செய்றீங்க சகோ….ஆணி அவர்கள் எழுப்பிய கேள்விக்கு தான் இது பதிலே தவிர உங்க இல்யுசன் ,இன்டியுசன் ,இமஜீநேசனுக்கு எல்லாம் அது பதில் அல்ல… என் பதில் வினவுக்கான பதிலா அல்லது ஆணிக்கான பதிலா என்று தெரிந்து கொண்டு பேசுங்க சகோ… ஆணி எழுப்பிய கேள்விக்கு தான் என் பதில்..வினவுக்கு அல்ல…ஆணி என்ன கேள்விய எழுப்பினாங்க… அதுக்கு நான் என்ன பதில் அளித்து இருக்கேன் என்று மறுபடியும் படிச்சிட்டு வந்து பேசுங்க சகோ…

        இப்பவும் கேட்கேன்…. அமெரிக்காவில் அவிங்க என்னத்துக்காக போர்னோ படம் தயாரிகிராங்க? போர்நோவில் நடிகிராங்க? சொல்லுங்க பார்கலாம்… வயித்து பிழைப்புக்கு என்று சும்மா உளறகூடாது சகோ…ஆண்டுக்கு பல மில்லியன் டாலர் அமெரிக்க பணம் புழங்கும் தொழில் அது என்றாவது உங்களுக்கு தெரியுமா தெரியாதா? அந்த போர்னோ இன்டஸ்ரி பற்றி முழுசா விவரங்களை தெரிந்து கொண்டு வந்து பேசுங்க சகோ…

        //XXX படம் பார்க்குறவங்களுக்கு சமுகசேவை செய்றதுக்கு தான் நடிகிறாங்கன்னு அவங்கள இந்தக் கட்டுரை பிரமோட் பண்ணுதுன்னு//

      • அக்காகி…, புரிந்து தான் பேசுறீங்களா இல்ல… சும்மா அடிச்சி விடுறீங்களா அக்காகி? போர்னோ பெண்கள் விதிவிலகானவ்ர்கள் என்று ஏன் சொல்றேன் என்று முன்பே விளக்கிவிட்டேன். மறுபடியும் சொல்றேன். கேட்டுக்குங்க…. முதலாளித்துவத்தின் உள்ளார்ந்த இயல்பான நுகர்வு வெறி என்பது சமுகத்தில் உள்ள எல்லாரையும் தானே பாதிக்கனும்? நிலைமை அப்படி இல்லையே… இதுக்கு தான் என்னுடைய முதல் பின்னுட்டத்தில் மிக தெளிவா ஆணிதரமா என் கருத்தை வைத்தேன்.. என்னுடன் விவாதிக்கும் யாருமே அதுக்கு பதில்சொல்ல! மறுபடியும் கேக்கேன்….சொல்லுங்க…!

        முக பாதுகாப்பு அற்று தினம் கூலி வேலை செய்யும் பெண்கள்…, வீட்டு வேலை செய்யும் தாய்மார்கள்.., அங்கன் வாடிகளில் குறைந்த சம்பளத்துக்கு வேலை செய்யும் பெண்கள் , மிக குறைந்த சம்பளத்தில் தனியார் பள்ளி ஆசிரியைகள் என்று உழைக்கும் பெண்களை காணும் தருணத்தில் இந்த போர்னோ பெண்கள் எல்லாம் வசதி வாய்ப்புகளுக்காக தான் பீயை கூட தின்ன முனைகின்றார்கள் என்பது மட்டுமே உண்மை… உழைக்கும் பெண்களை விட எந்த விதத்தில் இவர்கள் சமுகத்துக்கு நலம் பயப்பவ்ர்கள்? என்னதுக்கா இவர்கள் மீது நாம் கருனைகாட்டவேண்டும்?

        மேலும் கூட மற்றும் ஒரு கேள்வியை எழுப்பி இருந்தேன்… முதலாளிதுவத்தின் கோரமுகத்தின் காரணமாகத்தான் சமுகத்தில் நடைபெறும் கொலை , கொள்ளை, ஊழல் போன்ற பலவேறு சமுக குற்றங்கள் நிக்ழ்கிறன என்ற காரணத்துக்காக அவற்றை நாம் மென்மையாகவோ அல்லது சட்டத்தில் இருந்து விதிவிலக்கு அளித்து கையாள இயலாது என்பதனை ஏற்பீர்கள் என்றே நினைகின்றேன். ஏற்கின்றீர்களா ? இப்ப போர்னோ என்ற சமுக குற்றத்தை(பார்பவர்கள், தயாரிப்பவர்கள், நடிபவ்ர்கள் ஈடுபடும் குற்றத்தை) அந்த விசயத்தை மேல் உள்ள எனது நிலைபாட்டுடன் ஒப்பிட்டு பதில் அளியுங்கள்…

        இந்த நுகர்வு கலாச்சார வெறி சமுகத்தில் எல்லா பெண்களையும் பாதிக்கவில்லை அல்லவா? மிக குறைந்த கூலிக்கு பெண்கள் உழைத்துக்கொண்டு தானே இருக்காங்க… அப்ப இந்த பல மில்லியன் பணம் புழங்கும் போர்நோக்களில் நடிக்கும் பெண்கள் எல்லாம் என்ன எல்லாம் என்ன உங்களுக்கு உழைக்கும் பெண்களா? அல்லது முதலாளித்துவத்தால் சுரண்டப்டுபவர்களா? ரெண்டும் கிடையாது…

        இந்த போர்நோகள் (த்யாரிப்வ்ர்கள், விநியோகிதம் செய்பர்கள், ந்டிபவ்ர்கள்) எல்லாம் முதாலைத்துவத்தின் கால்அணிகளை நக்கி பிழைப்பவர்கள் தான்…

        //இதத்தான் நுகர்வு வெறின்றாங்க.. அப்புறம் அதெப்படி விதிவிலக்கு? நுகர்வு வெறி முதலாளித்துவ சந்தை கலாச்சாரத்துல சேராதா?//

        • விபச்சாரம், பாலியல் தொழில் எல்லாம் சுரண்டல் லிஸ்டுல வரும், போர்னோ வராதா? ம் சரி..

          யாரு போர்னோ நடிகைங்க சமூகத்துக்கு நன்மை செய்றவங்கன்னு சொன்னாங்க? இப்ப யாரு கருணை காட்டுனாங்க, கட்டுறாங்கங்கிறீங்க?

          • அக்காக்கி.., இதே கேள்வியை எழுப்பிய ஆணி க்கு என்னுடைய பின்னுட்டம் 8ல் பதில் கொடுத்து பத்து மணி நேரங்கள் ஆயிற்று… காபி பேஸ்ட் பன்னவா அல்லது பின்னுட்டம் 8 க்கு சசென்று பதிலை ப்டிகிண்றீக்லா?

            மேலும் விவரங்களை பெற…….: விபச்சாரம் பொதுவில் ஏழ்மை நிலையில் இருந்து உருவாகிறது. போர்னோ என்பது அப்படி அல்ல… அது பணம் புரளும் ஒரு தொழில்..மேலும் விபச்சாரத்திலேயே வர்க்கம் சார்ந்த நிலைபாடு எடுக்கவேண்டியுள்ளது.. அதனையும் எடுத்து விளக்கியுள்ளேன். வெள்ளைகாரனிடம் இருந்து மோட்டார் கம்பெனியை இலவசமாக பெறுவதற்கு தமிழத்தில் குடியேறிய ஆரியர்கள் பயன்படுத்திய விபச்சாரமும் தமிழகத்தில் இன்னும் நடைமுறையில் தான் இருக்கிறது. அதே நேரத்தில் ஏழைமையின் காரணமாகவும் தான் இந்த அவலம் நடை பெற்றுகொண்டு இருக்கிறது.

            இந்த போர்நோகள் (த்யாரிப்வ்ர்கள், விநியோகிதம் செய்பர்கள், ந்டிபவ்ர்கள்) எல்லாம் முதாலைத்துவத்தின் கால்அணிகளை நக்கி பிழைப்பவர்கள் தான்…

    • ஐயா,

      பொய் சொல்லாதீர்கள். சமுக சேவைக்காக தான் நடிக்கின்றார்கள் என்று இங்கு யாருமே சொல்லாத போது எதற்காக அதை நாங்கள் நிருபிக்க வேண்டும்?

      // போர்னோவில் நடிபவர்கள் எல்லாம் விதி விலக்குகள் தான். ///

      ஏன் ?

      //போர்னோவில் நடிக்கும் பெண்களை நாம் காணும் கண்ணோட்டத்தில் இருந்து விபச்சாரத்தை காண தேவையில்லை என்றே நினைகின்றேன் //

      ஏன் ?

      போர்னோ பட நடிகைகள் குற்றவாளிகளா இல்லையா என்பதை விட பார்ப்பவர்கள் குற்றவாளிகள் என்பதை தான் கட்டுரை சொல்லவருவதாக நினைக்கிறேன். இங்கு நடிகைகள் குற்றவாளிகளா இல்லையா என்ற வகையில் விவாதத்தை நீங்கள் தானே ஆரம்பித்தீர்கள்? இங்கு யார் அவர்களை புனிதப்படுத்தினார்கள் என்பதற்காக அந்த வாதத்தை முன்வைத்தீர்கள் ?

      ***

      கட்டுரையோ அல்லது அதில் பேசும் முன்னாள் நடிகையோ கழிவிரக்கத்தை தூண்டுவதற்காக போர்னோ படங்களைப் பற்றி பேசவில்லை எனும் போது நீங்கள் எப்படி அந்த முடிவுக்கு வருகிறீர்கள்?

      கழிவிரக்கம் பற்றி கேட்டதற்கு தான் பதிலளித்துள்ளேன் என்று சொல்லி நீங்கள் மழுப்பலாம்.
      கட்டுரை கழிவிரக்கத்தை ஏற்படுத்தும் என்று அஞ்சுகிறீர்களா? – என்று கேட்டதற்கு, நாம் இவர்களுக்காக கழிவிரக்கத்தை காட்ட தேவையில்லை – என்றிருக்கிறீர்கள். கட்டுரை கழிவிரக்கத்தை தூண்டுவதாக நீங்கள் கருதுகிறீர்கள் என்று தான் எடுத்துக்கொள்ள முடியும்.

      இந்த கட்டுரையிலிருநந்து, முன்னாள் போர்னோ நடிகை சொல்வதிலிருந்து ‘அவர்கள் பணம் ,பொருள் சார்ந்த தேவைகளை (ஏன் தேவைகளுக்கு அதிகமானவைகளை நோக்கி) பயணிப்பவர்கள் தான்’, ‘போர்னோ பெண்கள் எல்லாம் வசதி வாய்ப்புகளுக்காக தான் பீயை கூட தின்ன முனைகின்றார்கள்’ போன்ற கருத்துக்களுக்கு எப்படி வந்தீர்கள் என்று நீங்கள் தான் சொல்ல வேண்டும்.

      ***

      இந்தத் தொடரின் முதல் பகுதியை நினைவூட்டுகிறேன்.
      போர்னோ பட நடிகைகள் குற்றவாளிகளா இல்லையா என்ற விவாதத்தை இதற்கு மேலும் நீட்டி முழக்க எனக்கு விருப்பம் இல்லை. நன்றி.

      • ஆணி,
        திருவிளையாடல் நாகேஷ் போன்று கேள்வி மட்டும் தான் உங்களுக்கு கேட்க்க தெரியும் என்ற பாணியில் விவாதிக்க கூடாதுங்க….அவர்கள் வசதி வாய்ப்புகளுக்காக போர்னோவில் நடிக்கவில்லை என்றால் சமுக சேவைக்காக தான் நடிகின்றார்கள் என்று நீங்கள் தான் நிருபணம் செய்யவேண்டும். அல்லது வேறு எதற்காக என்று நீங்க தான் கூறவேண்டும்…

        கேள்வி : போர்னோவில் நடிபவர்கள் எல்லாம் விதி விலக்குகள் தான். ஏன் ?

        பதில் : பின்னுட்டம் 8.1.2

        கேள்வி : போர்னோவில் நடிக்கும் பெண்களை நாம் காணும் கண்ணோட்டத்தில் இருந்து விபச்சாரத்தை காண தேவையில்லை என்றே நினைகின்றேன் ஏன் ?

        பதில் : விபச்சாரம் பொதுவில் ஏழ்மை நிலையில் இருந்து உருவாகிறது. போர்னோ என்பது அப்படி அல்ல… பணம் புரளும் ஒரு தொழில்..மேலும் விபச்சாரத்திலேயே வர்க்கம் சார்ந்த நிலைபாடு எடுக்கவேண்டியுள்ளது.. அதனையும் எடுத்து விளக்கியுள்ளேன். வெள்ளைகாரனிடம் இருந்து மோட்டார் கம்பெனியை இலவசமாக பெறுவதற்கு தமிழத்தில் குடியேறிய ஆரியர்கள் பயன்படுத்திய விபச்சாரமும் தமிழகத்தில் இன்னும் நடைமுறையில் தான் இருக்கிறது. அதே நேரத்தில் ஏழைமையின் காரணமாகவும் தான் இந்த அவலம் நடை பெற்றுகொண்டு இருக்கிறது.

        கேள்வி :போர்னோ பட நடிகைகள் குற்றவாளிகளா இல்லையா என்பதை விட பார்ப்பவர்கள் குற்றவாளிகள் என்பதை தான் கட்டுரை சொல்லவருவதாக நினைக்கிறேன். இங்கு நடிகைகள் குற்றவாளிகளா இல்லையா என்ற வகையில் விவாதத்தை நீங்கள் தானே ஆரம்பித்தீர்கள்? இங்கு யார் அவர்களை புனிதப்படுத்தினார்கள் என்பதற்காக அந்த வாதத்தை முன்வைத்தீர்கள் ?

        பார்பவர்களை விட அதனை த்யாரிபவ்ர்கள்,விநியோகிபவ்ர்கள், ந்டிபவ்ர்கள் தான் முதன்மை குற்றவாளிகள். காரணத்தை அறியவேண்டும் என்றால் ஒரு ஒப்புமை செய்து பாருங்க… போதை பொருட்களை த்யரிப்வ்ர்கள் , விநியோகிபவ்ர்கள் ,விற்பவர்கள் முதன்மை குற்றவாளிகளா அல்லது பயன்படுத்துபவர்கள் முதன்மை குர்ரவாளைக்லா? இங்கேயே இந்த கட்டுரையின் நோக்கம் சந்தி சிரிக்கின்றது! மேலும் இந்த போர்நோகள் (த்யாரிப்வ்ர்கள், விநியோகிதம் செய்பர்கள், ந்டிபவ்ர்கள்) எல்லாம் முதாலைத்துவத்தின் கால்அணிகளை நக்கி பிழைப்பவர்கள் தான்…

        கேள்வி :கட்டுரையோ அல்லது அதில் பேசும் முன்னாள் நடிகையோ கழிவிரக்கத்தை தூண்டுவதற்காக போர்னோ படங்களைப் பற்றி பேசவில்லை எனும் போது நீங்கள் எப்படி அந்த முடிவுக்கு வருகிறீர்கள்?

        பதில் : ஆணி , முதலாளிதுவத்தின் கோரமுகத்தின் காரணமாகத்தான் சமுகத்தில் நடைபெறும் கொலை , கொள்ளை, ஊழல் போன்ற பலவேறு சமுக குற்றங்கள் நிக்ழ்கிறன என்ற காரணத்துக்காக அவற்றை நாம் மென்மையாகவோ அல்லது சட்டத்தில் இருந்து விதிவிலக்கு அளித்து கையாள இயலாது என்பதனை ஏற்பீர்கள் என்றே நினைகின்றேன். ஏற்கின்றீர்களா ? இப்ப போர்னோ என்ற சமுக குற்றத்தை(பார்பவர்கள், தயாரிப்பவர்கள், நடிபவ்ர்கள் ஈடுபடும் குற்றத்தை) அந்த விசயத்தை மேல் உள்ள எனது நிலைபாட்டுடன் ஒப்பிட்டு பதில் அளியுங்கள்…

        பல மில்லியன் அமெரிக்க டாலர்கள் அளவுக்கு நிகழும் போர்னோவில் ஈடுபடும் வியாபாரிகள் வினோகிச்தர்கள் , நடிகர்கள் ,தயாரிப்பாளர்கள் என்று யார் மீதும் இஇரக்கம் காட்ட தேவையில்லை என்பதே எனது நிலைப்பாடு…குறிப்பாக அமெரிக்க சமுகத்தை கணக்கில் எடுத்துக்கொண்டு பேசும் போது நாம் இவர்களுக்காக கழிவிரக்கத்தை காட்ட தேவையில்லை என்பதே எனது நிலைபாடு…

        கேள்வி : இந்த கட்டுரையிலிருநந்து, முன்னாள் போர்னோ நடிகை சொல்வதிலிருந்து ‘அவர்கள் பணம் ,பொருள் சார்ந்த தேவைகளை (ஏன் தேவைகளுக்கு அதிகமானவைகளை நோக்கி) பயணிப்பவர்கள் தான்’, ‘போர்னோ பெண்கள் எல்லாம் வசதி வாய்ப்புகளுக்காக தான் பீயை கூட தின்ன முனைகின்றார்கள்’ போன்ற கருத்துக்களுக்கு எப்படி வந்தீர்கள் என்று நீங்கள் தான் சொல்ல வேண்டும்.

        பதில் : பணம் இன்றி வேறு என்ன காரணம் என்று தயை கூர்ந்து நீங்கள் தான் விளக்கவேண்டும்..

  9. ஆணி,

    6.போர்னோ நடிகைகளை புனிதப்படுத்துவதற்காகவோ வேறு எந்த நோக்கத்திற்காகவோ இந்தக்கட்டுரை இங்கு வெளிவரவில்லை.போர்னோ படங்களைப் பார்ப்பதன் மூலம் அவற்றை எடுக்கத் தூண்டுபவர்கள் தான் இந்தக் கட்டுரைத் தொடரின் இலக்கு எனக் கருதுகிறேன். (வினவும் அந்த நோக்கத்தில் தான் இதை வெளியிடுகிறார்கள்.) உங்களுடைய Grand sweep generalization- யாருக்குப் பயன்படும்? நோக்கம் என்ன?

    இதுக்கு பதில் சொன்னால் என் கருத்துகளை வினவு தடை செய்துவிடும் என்பதால் மொவுனம் சாதிக்கிறேன்… இதற்கு முந்தைய எனது இரு பின்னுட்டங்கள் தடை செய்யபட்டு உள்ளன!

  10. அக்காகி மற்றும் ஆணி., இந்த கட்டுரையை சார்ந்த நீண்ட விவாதத்தில் உங்களுக்கு எல்லாம் கேள்வி மட்டும் தான் கேட்க தெரியுமா? விவாதத்தின் தொடர்ச்சியாக உங்கள் கருத்துகளை வைத்து பேசவே தெரியாதா? என்ன மாதிரியான பிரதிவாதிகள் நீங்க ?

  11. ஆணி மற்றும் அக்காகி,

    இதுவரைக்கும் நீங்க நெறைய கேள்விகளை கேட்டு என்னைய திக்கு முக்கு ஆட வைத்துட்டீங்க! இப்ப என்னோட மொற…நான் தான் கேள்வி கேட்பேன் என்ன? பதிலை யோசித்து சொல்லனும் என்ன?

    1.ஏறக்குறைய 14 பில்லியன் அமெரிக்க டாலர்கள் அளவுக்குப் பணம் கொழிக்கின்ற இந்த போர்னோ தொழிலில் (ஹாலிவுட் திரைப்படங்கள் மூலம் ஒரு வருடத்திற்குக் கிடைக்கும் வருமானம் 8 பில்லியன் அமெரிக்க டாலர்கள் மட்டுமே) மீதான உங்கள் நிலைப்பாடு என்ன?

    2. இந்த போர்னோ துறையில் ஈடுபடும் மனிதர்கள் எல்லாம் என்ன ஏழை மக்களா ? தவிர்க்கவே இயலாமல் தான் இந்த தொழிலில் ஈடுபடுகின்றார்களா?போர்னோ தயாரிப்பாளர்கள், விநியோகிஸ்தர்கள், நடிகர்கள் மீதான உங்கள் கருத்துக்கள் என்ன?

    3.போர்னோ நடிகைகளுக்கு ஏற்படும் உடல் உபாதைகள் பற்றி மிகவும் விரிவாக பேசும் இந்த கட்டுரைகள் உழைக்கும் பெண்கள் அவர்களின் மீதான உழைப்பு சுரண்டல்கள் அதனால் ஏற்படும் உடல் நலக்குறைவுகள் பற்றி இப்படி தனி சிறப்பாக பேசியது உண்டா? வினவு பேசியிருகிறது என்றால் அந்த கட்டுரைகளை லிங்க் செய்யவும்.

    4. உங்களுக்கு என்னுடைய பின்னுட்டம் 1 மீதான கருத்து வேறுபாடு என்ன? அதனை விளக்கமாக கூறவும்..

    இந்த கேள்விகளுக்கு பதில் அளிங்க தோழர்களே அப்புறம் அடுத்த செட்டு கேள்விகளுடன் சந்திப்போம்…

    • அன்புள்ள குமார்

      உங்களின் கேள்விக்கு முடிந்த அளவு பதிலளிக்க முயல்கிறேன்
      //1.ஏறக்குறைய 14 பில்லியன் அமெரிக்க டாலர்கள் அளவுக்குப் பணம் கொழிக்கின்ற இந்த போர்னோ தொழிலில் (ஹாலிவுட் திரைப்படங்கள் மூலம் ஒரு வருடத்திற்குக் கிடைக்கும் வருமானம் 8 பில்லியன் அமெரிக்க டாலர்கள் மட்டுமே) மீதான உங்கள் நிலைப்பாடு என்ன?//
      போர்னோ உலகத்தை கட்டுரையோ வினவோ எங்கும் சரி என்ற வகையில் சொல்லவில்லை. நீங்களும் கூட விவாதத்தில் அவ்வாறு சொன்னீர்கள் என யாரும் சொல்லவில்லை. இதில் உங்களுக்கு என்ன விளக்கம் வேண்டும் என்று புரியவில்லை.

      //இந்த போர்னோ துறையில் ஈடுபடும் மனிதர்கள் எல்லாம் என்ன ஏழை மக்களா ?// – இத்துறையில் அனைவரும் ஏழை கிடையாது தான் இதன் தயாரிப்பாளர்களும் விநியோகஸ்தர்களும் ஏழைகள் கிடையாது தான். அது உங்களுக்கும் தெரியும்.
      //தவிர்க்கவே இயலாமல் தான் இந்த தொழிலில் ஈடுபடுகின்றார்களா? // – விருப்பப்பட்டு வதைகளை போர்னோ நடிகர்கள் ஏற்றுக் கொள்வதில்லை என்பதைத் தான் அதிலிருந்து வந்தவர்கள் அதன் வதைகளை கூறுவதில் இருந்து புரிந்துகொள்ள முடிகிறது. அல்லது அதிலிருந்து விடுபடுவதற்குள் காலம் கடந்துவிடுகிறது. என்பதைத் தான் புரிந்து கொள்ள முடிகிறது.

      //போர்னோ தயாரிப்பாளர்கள், விநியோகிஸ்தர்கள், நடிகர்கள் மீதான உங்கள் கருத்துக்கள் என்ன?//

      இவர்கள் சமூகத்தில் இருந்து ஒழிக்கப்படவேண்டியவர்களே. இதில் உங்களுக்கும் மாற்று கருத்து இருக்க வாய்ப்பில்லை என்றே கருதுகிறேன்.

      //3.போர்னோ நடிகைகளுக்கு ஏற்படும் உடல் உபாதைகள் பற்றி மிகவும் விரிவாக பேசும் இந்த கட்டுரைகள் உழைக்கும் பெண்கள் அவர்களின் மீதான உழைப்பு சுரண்டல்கள் அதனால் ஏற்படும் உடல் நலக்குறைவுகள் பற்றி இப்படி தனி சிறப்பாக பேசியது உண்டா? வினவு பேசியிருகிறது என்றால் அந்த கட்டுரைகளை லிங்க் செய்யவும்.//

      நியாயமான கேள்வி அதற்கான பதிலாக இரு கட்டுரைகள் மட்டும் – https://www.vinavu.com/2016/09/05/women-sanitation-in-india/
      https://www.vinavu.com/2016/04/07/puthiya-kalacharam-april-2016-booklet/

      இன்னும் பல கட்டுரைகள் உள்ளன. நீங்கள் தேடி எடுத்துக் கொள்ள முடியும்
      குறிப்பாக பெண் எப்போது பெண்ணாக இருந்தாள் என்ற வெளியீடும் உள்ளது அவற்றை பார்க்கவும்.

      • நண்பர் மவுன குரு ,

        1.வினவு தனது மூன்று பாக கட்டுரைகளில் அதன் கருத்தை வெளியிடவில்லை என்பது உண்மை தான். வரும் பாகங்களில் வினவின் கருத்தை எதிர்பார்த்துகொண்டு உள்ளேன். அதே நேரத்தில் என்னுடைய கேள்விகள் யாருக்கானவை என்று தெரிந்து கொள்ளுங்கள் நண்பரே! என்னுடம் விவாதம் செய்த ஆணி மற்றும் அக்காகி ஆகியோருகானவை தானே அவைகள்…?

        ௨. மிக்க நன்றி மொவுன குரு… நீங்க சுட்டும் வினவு கட்டுரைகளை வாசித்துக்கொண்டு இருகின்றேன்.

    • //4. உங்களுக்கு என்னுடைய பின்னுட்டம் 1 மீதான கருத்து வேறுபாடு என்ன? அதனை விளக்கமாக கூறவும்..//
      உங்களுடைய கருத்தின் படி வசதி வாய்ப்புக்காக குற்றத்தை செய்பவர்களுக்கு நாம் இரக்கம் காட்டட்க்கூடாது. சரி இங்கு கட்டுரையில் எங்கு இரக்கம் காட்டியுள்ளனர் என்பதை கொஞ்சம் சுட்டிக்காட்டவும்.
      போர்னோவின் இருட்டு பக்கங்களை அவர்களில் இருந்து யார் அம்பலப்படுத்துறாங்களோ அதை வைத்துத் தானே விளக்க முடியும். அவ்வாறு அன்றி எப்படி விளக்குவது நீங்கள் கொஞ்சம் சொல்லுங்களேன். வெரும் ஒழுக்கவாதம் பேசி புரிய வைக்க முடியுமா?
      நீங்கள் ஒரு கிளீன் போல்டு கேள்வியாக வசதி வாய்ப்புக்காக போய்ட்டவங்களப்பத்தி ஏன் பேசனும்?
      அவங்களுக்கு என்ன இரக்கப்படனும். என்பதாக உள்ளது உங்கள் கேள்வி. அவர்கலை அதற்கு நெட்டி தள்ளுவது முதலாளித்துவம்தானே. தனி மனித விருப்பு என்று பொதுவான ஒன்று இருக்குமா? இந்தத் தொடரின் பழைய பின்னூட்டம் ஒன்றில் ஆரம்பத்தில் சாப்ட் கோரில் இருந்து எப்படி வக்கிரமான ஆபசப்படம் பார்க்கச் சென்றீர்கள் என சரியான விதத்தில் கூறியுள்ளீர்கள்.
      திட்டமிட்டே ஒரு தேவையை உருவாக்குவது முதலாளித்துவம் தானே இங்கு பிரச்சினை. கிட்டத்தட்ட அடிமைகளை மல்யுத்தத்தில் ஈடுபடவைத்து ரசிக்க வைத்து பின்னர் அங்கு தேவையே இல்லாத உயிரிழப்பை கட்டாயமாக்குவது போல பாலியல் வக்கிரத்தை செயல்படுகிறது முதலாளித்துவம். இவற்றைத் தானே பேசுகிறது கட்டுரை. ஒரு உடலுறவுக் காட்சி என்பதைத் தாண்டி இயற்கைக்கு மாறாக நடக்கச் சொல்லுவது எது?
      இதனைச் சொன்னால் நீங்கள் மறுபடி மறுபடி வசதிக்காகச் சென்றவர்கள் என நிருத்துகிறீர்கள். கிட்டத்தட்ட இதுவும் ஒரு ஒழுக்கவாதப்பார்வை போலவே உள்ளது.

      • நண்பரே மவுன குரு ,

        இந்த மூன்று பாக கட்டுறையில் முதல் பாகத்தை தவிர்த்து மீதன்முள்ள இரு பாகங்களும் போர்னோ பெண்ணின் (லூபின்….) வாக்குமூலம் மூலமாக அந்த துறையில் நடிக்கும் பெண்களின் மீது இஇரக்க உணர்வை தான் தூண்டிகொண்டு உள்ளது. சமுக விரோதிகள் தானே அவர்கள்? இல்லையா? இல்லை என்றால் உங்கள் வாதத்தை நீங்க தான் ஜஸ்டிபை செய்யனும் நண்பரே… ஒரு பக்கம் போர்நோவால் சமுகம் அதன் இளைய தலைமுறை கேட்டு போயிடுச்சு என்று உணருகின்றோம்… அப்ப அந்த துறை சார்தவர்கள் எல்லாம் சமுக விரோதிகள் தானே? போதை மருந்து விற்பவர்கள்,,, உணவு பொருட்களை பதுக்குபவர்கள் போல போர்னோகளும் சமுக விரோதிகள் தானே?

        போர்னோவை ஒழுக்க வாதத்தின் அடிப்டையில் நான் அணுகவில்லை நண்பரே…அது சமுகத்தின் மீதான சீரழுவு என்பதால் மட்டுமே நான் என்னுடைய எதிர்பில் மிகவும் நேர்மையாக இருக்கேன்.

        முதலாளித்துவத்தின் பக்கவிளைவுகளாக பலவேறு சீரழுவுகள் எல்லாம் சமுகத்தில் ஏற்படுகிறது என்பதனை ஏற்பிர்கள் என்றே நினைகின்றேன். கொலை, கொள்ளை, பாலியல் பலாத்காரம், உணவு பொருட்களை பதுக்கி அதிக விலைக்கு விற்றல் என்று பல்வேறு சீரக்ழுவுகள் ஏற்ப்டுக்றது அல்லவா? அவறின் மீது கூட போர்நோவின் மீதான பார்வையை தான் கொண்டு உள்ளீர்களா?

      • நண்பர் மொவுன குரு ,

        இளைய தலைமுறை புதியன அறிதலின் ஆர்வத்தின் காரணமாக தான் இந்த போர்னோவை பார்க்க முயலுகின்றார்கள் என்பதனை நாம் ஏற்கும் போது என்ன நிலைபாட்டுக்கு வரமுடியும் நாம்? இந்த போர்னோ தொழில் இளைய தலைமுறையை குறிப்பாக டீன் ஏஜ் (பதின்ம வயதினரை) சீரழிகின்றது என்ற முடிவுக்கு தானே வரமுடியும்…? அப்ப நான் இந்த போர்னோ தொழிலில் ஈடுபடும் அனைவரையும் தான் சமுக விரோதிகளாக குற்றவாளி கூண்டில் ஏற்றுவேன். ஏற்றினேன்!அதில் என்ன தவறு?

        அதே நேரத்தில் வயது முதிர்ந்த வெண்ணைகள் இதனை பார்த்து ரசிக்கும் போது அவர்களுக்கான அறிவு வேலை செய்யாமல் ஏன் வக்கிரத்தில் (போர்னோவை பார்ப்பதன் மூலம்) ஈடுபடுகின்றது என்ற கேல்வியை நான் எழுப்பியிருந்தால் அதில் யாதொரு தவறும் இல்லை அல்லவா நண்பரே?

        //இந்தத் தொடரின் பழைய பின்னூட்டம் ஒன்றில் ஆரம்பத்தில் சாப்ட் கோரில் இருந்து எப்படி வக்கிரமான ஆபசப்படம் பார்க்கச் சென்றீர்கள் என சரியான விதத்தில் கூறியுள்ளீர்கள்.//

  12. ஆணி மற்றும் அக்காகி, உங்களுக்கு புரியவில்லையா இன்னும்?
    அவர் போர்னோவை அமெரிக்கர்கள் போலவே ஓர் ‘இண்டஸ்ட்ரி’ ங்குராருங்க, அதாவது லாபியிங் என ‘சுத்த’ லஞ்சம் ஊழல் எல்லாம் அமெரிக்காவில் சட்டரீதியாக பலபளக்கிறதே அதே போல, இவரின் பார்வை அடிப்படை இது, அது புரியாமல் அவருடன் நீங்கள் விவாதிக்க முயட்சித்து அவர் நீண்ட பத்தி பத்தியாக உங்கள் வாதங்களையே திரித்து ‘அவனை நிறுத்த சோல் நான் நிறுத்துகிறேன்’ ரேஞ்சுக்கு போய் விட்டார்…

    அனைத்து மேற்கோள்கள் களும் போட்டால் பதில் கட்டுரையை விட நீண்டுவிடும், அதனால் வரிசையில் (என் பின்னூட்டம் 6 லிருந்து) பதிலளிக்கிறேன் குமாரின் வி.வாதங்களுக்கு.

    குமார், கமேரோன் ஆயிரம் கோடியில் அவதார் எடுத்து இங்கு பழங்குடிகளுக்கு என்ன மயிர் நன்மை விளைந்தது? அவன் ஆயிரம் கோடி போட்டு எத்தனை கோடி எடுத்தானோ..அவிரு ஆயிரம் கோடியில் எடுத்தால் தொழிலாளர் வர்க்கத்துக்கு என்ன பெருமையா? இல்ல காடு மலைகளை இங்கு விழுங்காமல் தன விட்டார்களா? ரசினி கூடத்தான் நடத்துனர் அதுக்காக நடத்துனர் எல்லாரும் இப்போ என்ன தேனும் பாலுமா குடிக்கிறார்கள் ? இந்த ‘தொழிலாளியாக’ இருந்து ‘முன்னேறிய’தன்னம்பிக்கை கப்சா எல்லாம் இப்போ செல்லாது குமார், மக்கள் உண்மையான காரணிகளை அறிய தொடங்கிவிட்டனர். அவனுகளே ரசியனை, முஸ்லிமை, கம்யூனிஸ்டுகளை , கொடிய மிருகங்களை படத்தில் சுட்டு சுட்டு அலுத்து வேற்றுகிரக வாசிகள் என்று பீலா காட்டுகிறான், ஏன் நேரடியாக இங்கு நடக்கும் கொள்ளைகளை அநியாயங்களை எடுக்க வேண்டியது தானே? இது அந்த அநியாயங்களை விட மோசமானது.

    //முதலாளித்துவத்தின் அவலம் தான் அனைத்து சமுக குற்றங்களுக்கும் காரணம் என்பது உண்மை தான்., அதே நேரத்தில் அனைவருமே அத்தகைய குற்றங்களில் ஈடு படவில்லை என்ற நிலையில் இருந்து பிரச்சனையை நோக்குங்க…..//

    அது எப்படிங்க குமார், எல்லாரும் அவ்வாறான குற்றங்களில் ஈடுபடவில்லை என்றால் , ஈடுபடுபவர்கள் ஏன் அவ்வாறு செய்கிறார்கள் என்பதை ஆராய்ந்தால் இறுதியில் முதலாளித்துவத்தின் மீதே வந்து முடியும். எல்லாருமே குற்றம் செய்தால்தானோ என்னவோ குமாரின் பார்வையில் முதலாளித்துவம் காரணமாக தெரியும் போலுள்ளது.

    //அடுத்து டைடானிக் படம் வர்க்கம் கடந்த காதலை அந்த காதலுக்காக ஒரு ஏழை தொழிலாளி தன் உயிரையும் கொடுக்கின்றான் என்ற நிலையில் அவனை தன் முதிர்ந்த வாழ்க்கை காலகட்டத்திலும் அந்த பெண் நினைவில் கொண்டு இருந்தாங்க என்ற சூழலில் பார்க்கும் போது அந்த படம் ஒன்றும் சமுகத்துக்கு பெரிய குற்றம் இழைக்கும் படமாக எனக்கு தெரியவில்லை…//

    ஆமாங்க அது ஒன்னும் குற்றம் இழைக்கவில்லை, ஆனால் குற்றங்களை நன்றாக பூசி மெழுகுகிறது. இந்த ஏழை தொழிலாளி பணக்கார பொண்ணு பல்லவி தான் இங்கே கூட அக்காலம் தொடங்கி ஒரே ஒரு காரணத்துக்காக தூக்கி பிடிக்க படுகிறதே, காரணத்தை கணியுங்கள் பார்போம் தோழர்களே ..குமார் நீங்களும் தான். உங்களுக்கு ஒரு கிளு – ‘ஏழை’ தொழிலாளி. கணிக்க முடியவில்லை என்றால் வினவை படிப்பதையே தவிர்க்கவும்.

    //அமெரிக்காவில் எல்லாமே ஆட்டோமேஷன் என்று கூறுபவருக்கு(சின்னாவுக்கு) வெளக்கமா தானே பதில கூறனும்…//

    குமார் ‘எல்லாமே அட்டோமாசன்’ என சொல்லுமளவு தற்குறி அல்ல நான், விவேகம் படம்போல் கக்கூசு கதவு என தொட்டது பட்டது எல்லாம் ஹேக் பண்ணுமளவு அமெரிக்க தலைநகர் கூட அட்டோமடேட் இல்லை என்பது எனக்கும் தெரியும், ஆனால் ஏக்கர் கணக்கில் இருக்கும் தொழிற்சாலைகளில் விரல் விட்டு என்ன கூடியவர்களே வேலை செய்வதை மறுப்பீரா? சில பகுதிகளில் மனிதரையே காணமுடியாதே? மீஅங்காடியில் பொருள் நிரப்பும் வேலை, பீசா கொண்டு செல்லும் ‘தோற்றவர்களின்’ வேலைகள் கூட வெகுவாக பறிபோகிறதே? இவற்றறை மறுப்பீரா?

    அதோடு குமார் நான் கூறும் அட்டோமாசன் என்பது தொழிற்புரட்சி காலத்து அட்டோமாசன் மட்டுமில்லை, இக்காலத்து நுண்ணறிவு அட்டோமாசன் பற்றிதான் அதிகம் கவலை படவேண்டும், அதாவதுங்க தொழிற்புரட்சி அட்டோமாசன் பொது அவற்ற்றை இயக்க தொழிலாளர்கள் தேவைப்பட்டனர்,இப்போ இயந்திரங்களை இயக்கவே இயந்திரம் இருக்கிறதே? திடகாத்திர ஆண் தொழிலாளிகளே இன்றைக்கோ நாளைக்கோ என இருக்கும இந்த நிலையில் உயர்கல்வியை தவற விட்ட/ ‘திறமை’ அற்ற எல்லா பென்ன்களுக்கும் நீங்கள் கூறும் வீட்டுவேலை, அங்கன்வாடி, தனியார்பள்ளி வேலை எல்லாம் அமெரிக்காவில் சாத்தியமா? அந்த வேலைகள் கூட கிடைக்காமல் தானே போர்னோவுக்கு செல்கிறார்கள். அப்பெண்களுக்கு ஒரு வேலை வீடு கொடுத்தால் கூட இதை தான் செய்வார்களா?

    //இப்பவும் கேட்கேன்…. அமெரிக்காவில் அவிங்க என்னத்துக்காக போர்னோ படம் தயாரிகிராங்க? போர்நோவில் நடிகிராங்க? சொல்லுங்க பார்கலாம்… வயித்து பிழைப்புக்கு என்று சும்மா உளறகூடாது சகோ…ஆண்டுக்கு பல மில்லியன் டாலர் அமெரிக்க பணம் புழங்கும் தொழில் அது என்றாவது உங்களுக்கு தெரியுமா தெரியாதா?//

    ஆம், வயித்து பிழைப்புக்காகத்தான், இல்லை என்பீரா? சிறுவயதில் இருந்தே நுகர்வுவெறி மற்றும் ஆபசதிலேயே ஊறவைத்து பின் சரியான திசை தெரியாமல் சிக்கும் பெண்கள் இதில் புதை சேறு போல் இழுக்க பட்டுவிடுகின்றனர். ஆம் பல மில்லியன் டாலர் புழங்குகிறது, யாரிடம் புழங்குகிறது? பாருங்கள் இக்கேவலத்தில் கூட முதலாளிதுவம் நன்றாக தன வேலையை செய்கிறது.

    //இந்த நுகர்வு கலாச்சார வெறி சமுகத்தில் எல்லா பெண்களையும் பாதிக்கவில்லை அல்லவா? மிக குறைந்த கூலிக்கு பெண்கள் உழைத்துக்கொண்டு தானே இருக்காங்க… அப்ப இந்த பல மில்லியன் பணம் புழங்கும் போர்நோக்களில் நடிக்கும் பெண்கள் எல்லாம் என்ன எல்லாம் என்ன உங்களுக்கு உழைக்கும் பெண்களா? அல்லது முதலாளித்துவத்தால் சுரண்டப்டுபவர்களா? ரெண்டும் கிடையாது…//

    இங்குதான் இவரின் விஷம் வெளிப்படுகிறது,

    என்னாது குமார் நுகர்வு வெறி எல்லா பெண்களையும் பாதிக்கவில்லையா? போர்னோவில் நடிக்கும் நிலைவந்தால் தன ஏற்றுகொள்வீரோ? அதைக்கூட பணத்தாசை என்கிறீரே. பெண்கள் குறைந்த கூலிக்கு உழைத்துகொண்டே இருக்கவேண்டுமா? ‘அப்படியே உழைப்பாளி இல்லாத நாடுதான் பாடலையும் புதன் ஏசு காந்தி பிறந்தது பாடலையும் பாடுங்கள் குமார் பொருத்தமாக இருக்கும். மறுபடியும் பாருங்கள், போர்னோ பில்லியன் டாலர் ‘இண்டஸ்ட்ரி’ யாம், அதில் நடிகைகள்எ ல்லாரும் பணத்தில் குளிக்கிரார்கலாம்…குமார் உண்மையில் போர்னோ நடிகைகள் பெரும்பாலும் வாங்கும் காசு அவர்கள் வீட்டுவாடகை மற்றும் அங்ககளை பராமரிக்கும் செலவுக்கே போய்விடும், அதுதானே மூலதனம், எந்த நடிகையிடமாவது போய் வசதிக்காக நடிக்கிறாய் என்றால் செருப்பால் அடிக்க வருவார்கள், போர்னோவில் அவர்கள் ‘இயல்பாக’ இருப்பதெல்லாம் நடிப்பு குமார். வெகு சில மில்லியனர் நடிகைகளை தவிர மற்ற பெண்களின் பிழைப்பு நாய் பிழைப்பு என்பதே உண்மை.

    ஒன்று முதலாளித்துவத்தை முழுதாக புரிந்து கொண்டு எதிர்க்க வேண்டும் இல்ல மணிகண்டனை போல நேர்மையாக கரித்து கொட்டவேண்டும், நீங்க என்னடா என்றால் வீட்டுவேலை தாய்மார், அங்கன்வாடி பெண்கள் என சொல்லிக்கொண்டே , முதலாளிதுவத்தை குற்றமற்றவர் என நிருபிக்கும் வேலையில் ஈடுபட்டுள்ளீர். அதால் தான் விஷயத்தை விட ‘விவாத முறைகள்’ பற்றி ஆணிக்கும் அக்காகிக்கும் பாடம் எடுக்கிறீர். இங்கு நாம் என்ன ராஜேந்தர் கௌதமி சீனா போடுகிறோம்?

    • நம்ம தோழர் சின்னாவுக்கு கோவம் வந்துட்டால் யார் கோல்போஸ்ட் என்று கூட கண்ணுக்கு தெரியாமல் செம் சைடில் கோல் போட்டுகிட்டே இருபாரு போல….போர்னோவை பற்றிய மூன்று கட்டுரைகளை முழுமையாக படிக்காமல் அல்லது படித்துவிட்டு வசதியா மறந்து விட்டு வினவு கட்டுரைக்கு எதிராகவே உளறிகிட்டு இருகாரு நம் தோழர் சின்னா..!

      ஆமாம் முதல் கட்டுரையில் வினவு கூறியது என்ன என்றாவது இவருக்கு தெரியுமா இல்லையா?
      நான் போர்னோவை தொழில் என்று கூறும் போது வரும் கோவம் வினவு கூறியபோது இவருக்கு வராத காரணம் என்ன?தற்சமய நினவு மறதி நோயா சின்னாவுக்கு ?

      “”இந்தத் தொழில் மூலம் வருடத்திற்கு ஏறக்குறைய 14 பில்லியன் அமெரிக்க டாலர்கள் அளவுக்குப் பணம் கொழிக்கிறது. ஆனால் ஹாலிவுட் திரைப்படங்கள் மூலம் ஒரு வருடத்திற்குக் கிடைக்கும் வருமானம் 8 பில்லியன் அமெரிக்க டாலர்கள் மட்டுமே. ஆபாசப் படங்களைப் பொருத்தவரையில் ஒரு வருடத்திற்குக் குறைந்தபட்சம் 13,000 படங்கள் வரை தயாரிக்கப்படுகின்றன.””-வினவு

      சின்னா ://அவர் போர்னோவை அமெரிக்கர்கள் போலவே ஓர் ‘இண்டஸ்ட்ரி’ ங்குராருங்க, அதாவது லாபியிங் என ‘சுத்த’ லஞ்சம் ஊழல் எல்லாம் அமெரிக்காவில் சட்டரீதியாக பலபளக்கிறதே அதே போல, இவரின் பார்வை அடிப்படை இது, அது புரியாமல் அவருடன் நீங்கள் விவாதிக்க முயட்சித்து அவர் நீண்ட பத்தி பத்தியாக உங்கள் வாதங்களையே திரித்து ‘அவனை நிறுத்த சோல் நான் நிறுத்துகிறேன்’ ரேஞ்சுக்கு போய் விட்டார்… //

      சின்னா உங்களின் மற்ற அப்பட்டமான உளறல்களுக்கு மெல்லமா நாளைக்கு வெளக்கமா பதில் தரேன் என்ன? அது வரைக்கும் மேலும் மேலும் உளராம அமைதியா இருங்க என்ன?

    • சின்னா ,இந்த போர்னோ தொழிலுக்கு எதிரா தான் நான் பேசிகிட்டு இருக்கேன் என்பது எனது பின்னுட்டங்களை படிக்கும் நண்பர்களுக்கு தெரியும். உங்களை மாதிரி நான் ஒன்றும் போர்னோ தொழிலுக்கு ***********************************************… என்னோட கருத்து என்ன என்று தெளிவாகவே கூறிவிட்டேன். என் நிலைப்பாடு என்னவென்று மறுபடியும் படிங்க:

      1.பல மில்லியன் அமெரிக்க டாலர்கள் அளவுக்கு நிகழும் போர்னோவில் ஈடுபடும் வியாபாரிகள் வினோகிச்தர்கள் , நடிகர்கள் ,தயாரிப்பாளர்கள் என்று யார் மீதும் இஇரக்கம் காட்ட தேவையில்லை என்பதே எனது நிலைப்பாடு…

      2.இந்த போர்நோகள் (த்யாரிப்வ்ர்கள், விநியோகிதம் செய்பர்கள், ந்டிபவ்ர்கள்) எல்லாம் முதாலைத்துவத்தின் கால்அணிகளை நக்கி பிழைப்பவர்கள் தான்…

      இப்ப போர்னோ தொழிலுக்கு ஆள் அமுக்கி விடும் கயவர்கள் உங்களை போன்றவர்கள் தான் என்று புரிந்து கொண்டு இருப்பீர்கள் என்று நினைகின்றேன்.

      //அதாவது லாபியிங் என ‘சுத்த’ லஞ்சம் ஊழல் எல்லாம் அமெரிக்காவில் சட்டரீதியாக பலபளக்கிறதே அதே போல, இவரின் பார்வை அடிப்படை இது, //

      • சின்னா என் மீது பயன் படுத்திய வார்த்தைகளையே இந்த கோட்டிட்ட இடத்தில் போட்டுக்குங்க வினவு..

        “லாபியிங் செய்யல…..”

        கோடிட்ட இடங்களை நிரபியாச்சு..

    • சின்னா , அமெரிக்காவில் எல்லாமே ஆட்டோமேஷன் ,தொழிலாளர்களுக்கு அங்கு இடமே இல்ல என்று உளறிகிட்டு இருந்த உத்தமர் நீங்க தானே?அப்ப அதுக்கு பதில் கூட அளிக்க கூடாதா? கலை இலக்கிய படைப்புகள் எல்லாம் நேரடியாகவே பிரச்சனையை பேசணும் என்றால் அது தான் உங்க கோட்பாடு அது என்ன மாதிரியான மயிரு பார்வை என்று நீங்களே முடிவுக்கு வந்து விடுங்க…அவர் ஆயிரம் கோடியில் அந்த அவிஎட்டார் படத்தா எடுத்தார இல்ல ஐந்து கோடிகளில் அந்த படத்தை எடுத்தார என்பது பிரச்னை இல்ல..அவர் எந்த விசயத்தை பற்றி படம் எடுத்து இருகாரு என்பது தான் இங்கே விவாதம். இயற்கையை அழிக்கும் முதலாளித்துவத்தை பற்றி அதன் லாபவெறியை பற்றி படம் எடுத்து இருகாரு அவர். அமெரிக்காவில் இருந்து கொண்டு அங்கு உள்ள சென்சார் கட்டுபாடுகளுக்கு உட்பட்டு இன்றைய அமெரிக்க முதாளித்துவ அரசின் இந்த படத்தை எடுப்பதே பெரியவிசயம் தான். ஒரு தொழிலாளியா இருந்தவரு அந்த படத்தை இயக்குனர் ஆனா பின் எடுத்து இருகாரு என்ற செய்தியை உங்க இஷ்டத்துக்கு திரிச்சி பேசுவது என்றால் பேசிக்குங்க…அத பத்தி எனக்கு கவலை இல்லை.. உங்க வாதம் எப்படி இருக்கு என்றால் ஒரு கம்ம்யுநிடா இருந்தவரு போலியான பின்னும் அவர் இன்னும் கம்ம்யுநிடு தானா என்ற முறையில் இருக்கு… அவரு போலியான பின்பும் நீங்க எழுப்பும் இந்த கேள்விக்கு ஏதாவது அர்த்தம் இருக்கா?(ரஜினி விசயத்தை தான் கூருறேன்) இப்ப காமருன் விசயத்துக்கு வருவோம். ஜேம்ஸ் கம்ருனுக்கு அவர் முன்பு தொழிலாளியா இருந்ததால இன்றும் சமுகத்தின் மீது அக்கறை இருக்கு அதனால அந்த எவிஎட்டார் படத்தை எடுத்து இருகாரு என்ற விசயத்தை புரிந்துகொள்ள இயலாம உங்க இஷ்டத்துக்கு உளறிகிட்டு இருக்கீங்க… உங்க உளறல்களை நீங்க தொடரலாம் வினவு அனுமதிக்கும் வரைக்கு…..

      //குமார், கமேரோன் ஆயிரம் கோடியில் அவதார் எடுத்து இங்கு பழங்குடிகளுக்கு என்ன மயிர் நன்மை விளைந்தது? ………………..அ விட மோசமானது. //

    • உழைக்கும் பெண்கள் என்று மட்டும் அல்ல , உழைக்கும் ஆண்களும் தான் அதே முதலாளித்துவ சுரண்டலுக்கு ஆளப்பட்டு , அடிமைபட்டு தன் உழைப்பை கொட்டிகிட்டு இருக்காங்க முதலாளிகளின் லாபவெறிக்காக! சின்ன வசதி வாய்ப்புகள் கூட கிடைக்காம ,பணி பாதுகாப்பு கூட இல்லாம வேலை செய்துகிட்டு இருகாங்க..அப்படி பட்ட உழைப்பாளர்களின் நிலையில் இருந்து பார்த்தால் இந்த போர்னோ தொழிலில் ஈடுபடும் அனைவருமே சமுகத்தை சீரழிக்கும் கும்பல் தான். முதாளைத்துவத்தின் கால்களை நக்கி பிழைக்கும் கும்பல் தான் இவர்கள். அதனை முதலில் ஒத்துகிட்டு விவாதத்தை தொடருங்க சின்னா……

      //அது எப்படிங்க குமார், எல்லாரும் அவ்வாறான குற்றங்களில் ஈடுபடவில்லை என்றால் , ஈடுபடுபவர்கள் ஏன் அவ்வாறு செய்கிறார்கள் என்பதை ஆராய்ந்தால் இறுதியில் முதலாளித்துவத்தின் மீதே வந்து முடியும். எல்லாருமே குற்றம் செய்தால்தானோ என்னவோ குமாரின் பார்வையில் முதலாளித்துவம் காரணமாக தெரியும் போலுள்ளது.//

    • சின்னா மறுபடியும் அதே பதில் தான்…அடுத்து டைடானிக் படம் வர்க்கம் கடந்த காதலை அந்த காதலுக்காக ஒரு ஏழை தொழிலாளி தன் உயிரையும் கொடுக்கின்றான் என்ற நிலையில் அவனை தன் முதிர்ந்த வாழ்க்கை காலகட்டத்திலும் அந்த பெண் நினைவில் கொண்டு இருந்தாங்க என்ற சூழலில் பார்க்கும் போது அந்த படம் ஒன்றும் சமுகத்துக்கு பெரிய குற்றம் இழைக்கும் படமாக எனக்கு தெரியவில்லை…

      அந்த படத்தில் நிகழ்த்தபட்ட சமுக குற்றம் என்னவென்று நீங்க தான் இங்கே விளக்கனும்… சும்மா புதிர் போட்டுட்டு ஓட கூடாது..

      //ஆமாங்க அது ஒன்னும் குற்றம் இழைக்கவில்லை, ஆனால் குற்றங்களை நன்றாக பூசி மெழுகுகிறது. இந்த ஏழை தொழிலாளி பணக்கார பொண்ணு பல்லவி தான் இங்கே கூட அக்காலம் தொடங்கி ஒரே ஒரு காரணத்துக்காக தூக்கி பிடிக்க படுகிறதே, காரணத்தை கணியுங்கள் பார்போம் தோழர்களே ..குமார் நீங்களும் தான். உங்களுக்கு ஒரு கிளு – ‘ஏழை’ தொழிலாளி. கணிக்க முடியவில்லை என்றால் வினவை படிப்பதையே தவிர்க்கவும்.//

    • இந்த கட்டுரையில் பேசப்படும் பெண் அதாங்க ஷெல்லி லுபன் அவர்கள் ஒன்றும் நீங்க நினைபது போன்று வயிற்று பாட்டுக்காக இந்த தொழிலில் ஈடுபபடுபவர் அல்லது ஈடுபட்டவர் அல்ல… போர்னோவின் பணம் தயாரிப்பாளர், நடிகர், வினோகிச்தர் என்று எல்லார் கைகளிலும் தான் புழங்குகிறது. போர்னோ நடிகைகளை தொழிலாளர் வர்க்கம் என்று சிறப்பு படுத்தி பார்க்கும் நிலைக்கு வந்துட்டீங்க போல சின்னா?

      //ஆம், வயித்து பிழைப்புக்காகத்தான், இல்லை என்பீரா? சிறுவயதில் இருந்தே நுகர்வுவெறி மற்றும் ஆபசதிலேயே ஊறவைத்து பின் சரியான திசை தெரியாமல் சிக்கும் பெண்கள் இதில் புதை சேறு போல் இழுக்க பட்டுவிடுகின்றனர். ஆம் பல மில்லியன் டாலர் புழங்குகிறது, யாரிடம் புழங்குகிறது? பாருங்கள் இக்கேவலத்தில் கூட முதலாளிதுவம் நன்றாக தன வேலையை செய்கிறது. //

    • சின்னா , இந்த கருத்தை நானோ அல்லது வினவோ மட்டும் சொல்ல வில்லை… இது தான் அமெரிக்காவின் உண்மை நிலை. ஹாலிஉட்டை விட மிஞ்சி நிற்கும் தொழில் தான் இந்த போர்னோ தொழில்.. இது தான் நிதர்சனம்.. கோபத்தால் அறிவை இழக்க வேண்டாம்.

      இந்த போர்னோ பெண்களுக்கு வீட்டு வாடகை , மற்றும் மற்ற பிரச்சனைகள் என்றால் நீங்க வேணுமானால் தனியா கொடிபிடித்து போராடுங்க… அதுக்கு எதுக்கு சமுகத்தை அழைக்க வேண்டும் நீங்க…?

      //போர்னோ பில்லியன் டாலர் ‘இண்டஸ்ட்ரி’ யாம், அதில் நடிகைகள்எ ல்லாரும் பணத்தில் குளிக்கிரார்கலாம்…//

    • முதலாளித்துவத்தின் சுரண்டலுக்கு உட்பட்டும் உழைக்கும் பெண்கள் எல்லாம் நேர்மையாக தான் இருக்காங்க. அவிங்க எல்லாம் இந்த விதிவிலக்கான போர்னோ பெண்களை போன்று சிரழியல என்ற என் கருத்தை புரிந்து கொள்ள பெரிய அறிவு எல்லாம் வேண்டாம் என்று நினைக்கிறன். நீங்க அங்கே வேண்டுமானாலும் உங்க மொக்க சீனை போட்டுக்குங்க.. அந்த கத என் கிட்ட வேலைக்கு ஆகாதுங்க… உங்க கருத்துப்பட இந்த முதலாளித்துவம் சுரண்டல் வர்க்கம், குற்றம் உடையது என்பதற்காக அனைத்து உழைக்கும் பெண்களும் சீரழியனும் என்று சொல்ல வரீங்களா சின்னா?

      உழைக்கும் மக்களை சுரண்டும் முதலாளித்துவத்துக்கு எதிரான எதிர்வினைகள் இரண்டு வகையில் இருக்கும் என்று நான் என் தோழர்களிடம் இருந்து கற்று இருக்கேன்.

      1.ஒன்று இந்த முதலாளித்துவ சமுகத்துக்கு எதிராக கலகங்களும் ,புரட்சியும் வெடிக்கும் என்பது.

      2. எதிர்வினை ஒருவேளை அப்படி நிகழாவிட்டால் சமுகம் முழுவதும் சீரழிந்து போகும் என்பது.

      இதில் நான் முதல் வகைமையான எதிர்வினையை தான் பிரப்பகேட் செய்யறேன்.ஆதரிக்கின்றேன். அமெரிக்க சமுகம் முற்றிலும் சீரழித்து போய்விட்ட நிலையில் கூட துளி ந்ம்ம்பிகைகளுடன் அங்கும் முதாளைதுவத்துக்கு எதிராக கலகங்களும் போராட்டங்களும் வெடிக்கும் என்று கூறுகின்றேன். ஆனால் நீங்க அமெரிக்க சமுகத்தின் போர்னோ போன்ற சீரழிவுகளை ஆதரித்து பேசிகிட்டு இருக்கீங்க….

      //ஒன்று முதலாளித்துவத்தை முழுதாக புரிந்து கொண்டு எதிர்க்க வேண்டும் இல்ல மணிகண்டனை போல நேர்மையாக கரித்து கொட்டவேண்டும், நீங்க என்னடா என்றால் வீட்டுவேலை தாய்மார், அங்கன்வாடி பெண்கள் என சொல்லிக்கொண்டே , முதலாளிதுவத்தை குற்றமற்றவர் என நிருபிக்கும் வேலையில் ஈடுபட்டுள்ளீர். அதால் தான் விஷயத்தை விட ‘விவாத முறைகள்’ பற்றி ஆணிக்கும் அக்காகிக்கும் பாடம் எடுக்கிறீர். இங்கு நாம் என்ன ராஜேந்தர் கௌதமி சீனா போடுகிறோம்?//

  13. நண்பர் குமார்,

    மிகப் பெரும் போராட்டத்தை நடத்திக் கொண்டிருக்கிறீர்கள், ஆணி, சின்னா, அக்காக்கி ஆகியோருடன். அதில் உள்ளே புகுந்து பேச இவ்வளவு நாளாக நீங்கள் நடத்திய அக்கப்போர்களைப் படித்து அதிலிருந்து ஒரு நிலையெடுத்துப் பேசுவது சிரமம் என்பதால், தனியாக இப்பதிவைப் போடுகிறேன்.

    ஒரு வேளை உங்கள் பதிலுக்கு இன்னொரு பதில் சொல்ல முடியாமலும் போகலாம், நேரமின்மை காரணமாக .. இருந்தாலும் உங்கள் கருத்துக்களை அவ்வப் போது படித்து வருவதால அதிலிருந்து சிலவற்றை மட்டும் சொல்லி விட்டுப் போகிறேன்.

    செய்தித் தாள்களில் பல சமயங்களில் நீங்கள் ”இளம் பெண்களை வைத்து விபச்சாரம் செய்த கும்பல் கைது; 7 பெண்கள் மீட்பு” என்பது போன்ற செய்திகளைப் பார்த்திருக்கலாம்.
    அந்த மீட்கப்பட்ட பெண்கள் அனைவரும் இந்த விபச்சாரத் தொழிலுக்கு பணம் கொட்டும் தொழிலாக எண்ணி அதனை விரும்பி வந்திருப்பார்கள் என்றே நீங்கள் கருதுகிறீர்கள் என்பதை உங்கள் வாதங்களில் இருந்து நான் புரிந்து கொள்கிறேன்.
    மத்திய இந்தியாவின் மாநிலங்களான சட்டீஸ்கர், ஜார்கண்ட் போன்ற மாநிலங்களில் தான் அதிக அளவில் பெண்கள் பாலியல் தொழிலுக்காகக் கடத்தப்படுகிறார்கள் என்ற செய்திகளை நீங்கள் படித்திருக்கிறீர்களா என்பது எனக்குத் தெரியவில்லை. ஆனால் அது தான் உண்மை. இது குறித்து
    பழைய ஃப்ரண்ட்லைன் இதழ்களையும், அவுட்லுக் இதழ்களையும் புரட்டிப் பார்க்கவும். வெறும் வினவை மட்டும் படித்தால் பத்தாது. இது குறித்து வினவிலும் சில மாதங்களுக்கு முன்பு கட்டுரை வந்ததைப் பார்த்ததாக நினைவிருக்கிறது. தேடிப் பார்க்கவும். லின்க் எடுத்துப் போடு என்று என்னிடம் கேட்காதீர்கள்.

    இந்தப் பெண்கள் எல்லாம், கிராமப்புறங்களில் விவசாயத்திலிருந்து கார்ப்பரேட் கொள்ளையின் காரணமாக வெளியேற்றப்பட்ட குடும்பத்தைச் சேர்ந்த பெண்கள். அவர்களை நகரங்களில் வீட்டுப் பணிப் பெண்ணாக வேலைக்குச் சேர்த்துவிடும் ஏஜென்சி என்ற பெயரில் டில்லிக்கு அழைத்துச் சென்று பல்வேறு தொழில்களுக்குப் பிரித்து அனுப்புகிறார்கள். வீட்டு வேலைக்கு கொத்தடிமையாக, வாடகைத் தாயாக, விபச்சாரத்திற்காக, என பல்வேறு தொழில்களுக்கு அடிமாட்டுக் கூலிக்கு அனுப்புகின்றனர். இந்தப் பெண்கள் அதனை ஆரம்பக் காலகட்டங்களில் எதிர்த்துப் போராடிப் பார்க்கிறார்கள். ஆனால் இந்த ஏஜெண்டுகளின் வலைப் பின்னலால் அவர்களால் அவர்களின் வலையை விட்டு வெளியேறுவது குதிரைக் கொம்பு. ஒரு கட்டத்தில் வேறு வழி இன்றி இந்தத் தொழிலை ஏற்று கொள்கிறார்கள்.

    ஏனெனில் அவர்கள் உயிர்பிழைத்தாக வேண்டும். அவர்கள் வாழ்ந்தாக வேண்டும், அவர்கள் தங்கள் குடும்பத்திற்கு தங்களைத் தியாகம் செய்து கொண்டு இதனை வாழப் பழகிக் கொள்கிறார்கள். இது ஒரு அவலம். ஆனால், நீங்கள் என்ன சொல்லுகிறீர்கள் என்றால், உழைக்கும் பெண்களை, விவசாயக் கூலிகளாக கைகளில் காப்பு கட்டி வேலை பார்க்கும் பெண்களை ஒப்பிடும் போது இந்த்ப் பெண்களும் விபச்சாரம் என்ற சமூக சீர்கேட்டின் ஒரு அங்கம். அவர்களின் துன்பங்களைப் பற்றி வினவு கட்டுரைகளை வெளியிட்டது மிகப்பெரிய ஒழுக்கச் சீர்கேட்டிற்கு வழிவகுக்கும் என்ற அளவிற்குத் தான் நீங்கள் பேசுகிறீர்கள். நிற்க ..
    ”நான் எப்போது இந்தப் பெண்களுக்கு எதிராகப் பேசினேன் ?” என்று ஒருவேளை நீங்கள் கூட வாதிடக் கூடும். சரி .. நீங்கள் இந்தப் பெண்களைப் பற்றி பேசுவது தவறில்லை என்றே நினைக்கிறீர்கள் என்றே வைத்துக் கொள்வோம் ..
    அப்படி என்றால், நான் மேலே கூறிய பெண்ணிற்கும் ஷெல்லி லூபென்னிற்கும் எந்த வித்தியாசத்தை உணர்கிறீர்கள் ?

    – தொடரும்

    • தவறான புரிதல் அனானியன். விபச்சாரம் பற்றிய என்னுடைய கருத்தை போர்னோ தொழில் பற்றிய என்னுடைய கருத்துடன் கலந்து கட்டி குழப்பிக்கொண்டு உள்ளீர்கள் தோழர். இரண்டுக்குமான எனது பார்வை வேறு வேறானது என்று நான் முன்பே விளக்கிவிட்டேன். ஆனிக்கு நான் அளித்த பதில் இது தான் :

      போர்னோவில் நடிக்கும் பெண்களை நாம் காணும் கண்ணோட்டத்தில் இருந்து விபச்சாரத்தை காண தேவையில்லை என்றே நினைகின்றேன்… அதே நேரத்தில் வெள்ளைகாரனிடம் இருந்து மோட்டார் கம்பெனியை இலவசமாக பெறுவதற்கு தமிழத்தில் குடியேறிய ஆரியர்கள் பயன்படுத்திய விபச்சாரமும் தமிழகத்தில் இன்னும் நடைமுறையில் தான் இருக்கிறது. அதே நேரத்தில் ஏழைமையின் காரணமாகவும் தான் இந்த அவலம் நடை பெற்றுகொண்டு இருக்கிறது.

      அதே நேரத்தில் மேலும் பல மில்லியன் அமெரிக்க டாலர்கள் அளவுக்கு நிகழும் போர்னோவில் ஈடுபடும் வியாபாரிகள் வினோகிச்தர்கள் , நடிகர்கள் ,தயாரிப்பாளர்கள் என்று யார் மீதும் இஇரக்கம் காட்ட தேவையில்லை என்பதே எனது நிலைப்பாடு. இந்த போர்நோகள் (த்யாரிப்வ்ர்கள், விநியோகிதம் செய்பர்கள், ந்டிபவ்ர்கள்) எல்லாம் முதாலைத்துவத்தின் கால்அணிகளை நக்கி பிழைப்பவர்கள் தான்…

    • இந்த விபசாரம் பற்றிய விசயத்தில் நான் உங்க கருத்துடன் உடன் படுகின்றேன் அனானியன்.. இந்த சமுகம்(நிலபிரபுத்துவ மற்றும் முதலாளித்துவ) ஒரு பெண்ணின் ஏழ்மையை நீக்க அவருக்கு வேலை வாய்ப்புகளை ஏற்படுத்திக்கொடுக்காத நிலையில் , வேளையில் குறைந்த பச்ச கூலியை கூட உறுதி படுத்தி கொடுக்காத நிலையில் அந்த பெண் விபச்சாரத்தில் ஈடுபடுவார் எனில் அவரை பற்றி இழிவாக ஒழுக்கவாதம் பேச (சாதி மதம் இனம் என்ற எந்த அடிப்டையிலுமே ஒழுக்கவாதம் பேச ) எந்த மயிரானுக்கும் உரிமை இல்லை என்பதே எனது கருத்து.

      அதே நேரத்தில் என்னுடைய இந்த மேல் உள்ள வாதத்தை போர்னோ தொழிலில் உள்ளவர்களுக்கு நாம் அப்ளை செய்ய முடியாது அன்னியன். போர்னோ என்பது ஒரு நிருவன்மையம் ஆக்கபட்ட சமுகத்தை சீரழிக்க அதன் மூலம் பெரும் பணம் சம்பாரிக்க என்றே திட்டமிட்டு நடத்தப்படும் தொழில். பல பில்லியன் பணம் இந்த தொழிலில் புழங்குவதாக வினவு கூறுகின்றது என்ற விசயத்தையும் என்னுடைய கருத்துடன் சேர்த்து பாருங்க…இந்த தொழிலில் எந்த நிலையில் ஈடுபடுபவர்களையும் நாம் எந்த நிலையிலும் இரக்க உணர்வுடன் பார்க்க இயலாது. இன்னும் ஒரு ஒப்புமையை கூட கூறுகின்றேன்.

      சமுகத்தின் இளைய தலைமுறையை சீரழிக்கும் போதை பொருட்கள் தயாரிப்பை நாம் எப்படி எல்லாம் தண்டிக்க வேண்டும் என்று கூறுகின்றோமோ அதே போன்று தான் இந்த போர்னோ தொழிலும் தண்டனைக்கு உரியதே…வினவு கூறுகிறது அல்லவா?உங்களுக்காக மலம் சுவைக்கும் நடிகைகள் ! என்று? அது போன்றே உங்களுக்காக தான் தன்னை வருத்திக்கொண்டு போதை பொருட்ட்களை தொழிலாளர்கள் தயாரிகின்றார்கள் என்று கூறினால் அது சரியான கருத்தா?

      நேரம் இருந்தா பதில் கடிதாசி போடுங்க தோழர்… கட்டாயம் எல்லாம் ஏதும் இல்ல….

  14. பொதுவில் கம்யுனிச தோழர்களுக்கு….,

    போர்னோ மட்டும் அல்ல அது போன்ற சமுக குற்றங்கள் எதுவாக இருந்தாலும் அவைகளுக்கான மூல காரணம் முதலாளித்துவ சமுக அமைப்பு தான் என்பது உண்மையாயினும், அவற்றை எல்லாம் நாம் மென்மையாக கையாள முடியாது. இதே முதலாளித்துவ சுரண்டலில் இருந்து தான் தொழிலாளர் தலைமையிலான புரட்சியும் வெடிக்கின்றது என்பதற்கான உலக வரலாற்று ஆதாரங்கள் ( சோவியத் மற்றும் சீனா )நம்மிடம் இருகின்றன. மறு பக்கம் முதாளைதுவத்தின் சீரழிவுகளால் அமெரிக்கா போன்ற முதலாளித்துவ நாடுகள் முற்றிலும் சீரழிவு பாதைக்கு சென்று உள்ளன. அவற்றின் பல வெளிப்பாடுகளில் ஒன்றான போர்னோவை கரணம் காட்டி அந்த தொழிலில் ஈடுபடுபவர்கள்(பெண்கள்) மீது எல்லாம் நாம் பரிதாபம் பட தேவையே இல்ல.. அந்த தொழிலில் ஈடுபடுபவர்கள் எல்லாம் முதலாளித்துவதின் கலை நக்கி பிழைப்பவர்கள் தான்.

    அதே நேரத்தில் அந்த அமெரிக்க சமுகத்தில் வாழும் அமைப்பு சார்ந்த அல்லது சாராத உழைக்கும் பெண்களின் பிரச்சனைகளை வினவு முன்னிலை படுத்துவதில் எந்த தவறும் இல்லை. அதனை தான் நான் எதிர்பார்கின்றேன்…

    ஆம் அதை தான் வினவு செய்யவேணும்….

    முற்றும்.

    (இதுக்கும் மேலே சின்னாவுக்கு பொறுமையுடன் வேறு யார்வேண்டுமானாலும் பதில் அளித்துக்கொள்ள்ளலாம்)

      • வெனிசுலா நாடு சோசியலிச நாடு என்று எந்த மடையர் ராமனுக்கு சொன்னார்? அது போலி சனானய்கத்தில் ஈடுபடும் (இந்தியா போன்ற) போலி தேர்தலில் ஈடுபடும் ஒரு நாடு தான்.. சோசியலிச நாடு என்றால் அங்கே பாட்டாளிவர்க்க சனநாயகம் தான் இருக்குமே தவிர நீர் நினைப்பது போன்று போலியான சனநாயகம் எல்லாம் இருக்காது ராமன்…

      • அது எப்படி வெனிஜுவேலாவை மட்டும் கழுகுப்பார்வையோட கவனிக்கிறீங்க ராமன் சார்?

        Sphere of Influence: How American Libertarians Are Remaking Latin American Politics – Lee Fang, August 9 2017,
        https://theintercept.com/2017/08/09/atlas-network-alejandro-chafuen-libertarian-think-tank-latin-america-brazil/

        ஒவ்வொரு நாட்டுக்குள்ளேயும் ஏதாவதொரு ‘தொண்டு’ நிறுவனத்தையோ அல்லது ‘சிந்தனைக்’ குளத்தையோ இறக்கிவிட்டு கலகத்தை உண்டுபண்ண வேண்டியது. அதுக்கப்புறம், ‘சோசலிசம் மக்களை நிர்வாணமாக்கிவிடும்’னு ‘அப்பாவி’ மாதிரியான ‘ராமன்’களை கருத்து சொல்ல வைக்கிறது. நல்ல முதலாளித்துவம்! அதுக்கு சொம்படிக்கிற ‘ராமன்’கள்!!

        • @KKN

          அமேரிக்கா தான் காரணம் , அவன் சொன்னால் மக்கள் பாவம் ஏமாந்து மக்களுக்கு நன்மை செய்யும் சோசியலிச அரசாங்கத்தை எதிர்ப்பார்கள். அவர்களுக்கு இலவச உணவு, மருத்துவம் தரும் அரசாங்கத்திற்கு எதிராக போராட்டம் நடத்துவார்கள்.

          ஐ க்யூ என்பது இல்லை . பாதுகாப்பான இடத்தில இருந்து கொண்டு கற்பனை எதிரியை கைகாட்டி கொண்டே பேச வேண்டியது.

          ஒரே ஒரு நாள் சோசியலிச வெனிசூலாவில் வாழ்ந்து பாருங்கள் , டாகடர் மனைவியை கொலம்பியாவிற்கு நடனமாட விட சென்றவனுக்கு தான் சோசியலிசத்தின் கொடூரம் புரியும். சிலருக்கு சொன்னால் புரியாது , அந்த டாக்டரை போல அனுபவிக்கும் போதுதான் உண்மை உரைக்கும்.

  15. குமார் இந்த செர்லாக் கண்டுபிடிப்பு பீற்றலுக்கு முதலில் உமக்கு கிரகித்தல் சோதனை ஒன்று வைக்க வேண்டுமையா, வசனங்களை அப்படியே எடுத்துக்கொண்டு பேசுகிறீரே

    வினவு ‘தொழில்’ என சொன்னது என்ன கருத்தில்? போர்னோ கிங்குகள் (கிட்டத்தட்ட எல்லாரும் ஆண்கள்) இரையாக கூடிய பெண்களை வைத்து காசு பண்ணுவதை. உண்மையை.

    நீர் சொன்னது என்ன? அது தயாரிப்பாளர், நடிகர் என எல்லாரும் சேர்ந்து ஆஹா ஓஹோ என செய்யும் ஒரு தொழில் எனும் கருத்தில்ஆனால் உண்மை அப்படியா?. அதாவது அப் பெண்களையும் வசதியாக குற்றவாளியாக்கி விடுகிறீர். அப்போது தானே முதலாளித்துவம் மேல் மென்மையா தட்ட முடியும், எப்படி? இப்படி – குமார் ஸ்டைலில் –

    //முதலாளித்துவத்தின் அவலம் தான் அனைத்து சமுக குற்றங்களுக்கும் காரணம் என்பது உண்மை தான்., அதே நேரத்தில் அனைவருமே அத்தகைய குற்றங்களில் ஈடு படவில்லை//

    இதை புரிந்து கொள்ளாமல் என்ன சேம் சைடு கோல் என புலம்புகிறீர்.

    12.2 இல்,
    இல்லை நீங்கள் போர்னோ வுக்கு எதிராக பேசுவது என்ற போர்வையில் பாதிக்கப்படும் பெண்கள் மீதே குற்ற்றத்தை சுமத்தி காரணமான முதலாளித்துவத்தை மறைமுகமாக கழுவி விடும் வேலையை செய்கிறீர். அதென்னங்க ‘என்னை போல் போர்னோவுக்கு..என ஏதோ அசிங்கமா சொல்லி இருக்கிறீரோ? வினவு நீக்கி இருக்கிறது…ஏன் இந்த கோபம்? நைச்சியங்கள் வெளிப்படுகின்றன என்றா?
    1. ‘இரக்கம் காட்ட தேவை இல்லை என்றால்? – போர்னோ தயாரிப்பவர்களும் , வேறுவழியில்லாமல் சொற்ப காசுக்கு பயன்படுத்தப்படும் பெண்களையும் ஒரே கூண்டில் வைக்கிறீர்.

    2. அதென்னங்க முதலாளித்துவத்தையும் ஏசுகிறேன் பார் பேர்வழி போலுள்ளது இந்த கூற்று, முதலாளித்துவம் என்ன கோட்சூட்ஷூ போட்டிருக்கும் ஒரே ஒரு முதலையா? எங்கும் நீக்கமற நிறைந்துள்ளது, போர்னோவே எல்லாவற்றையும் விற்பனை பொருளாக (பெண்கள் , பாலியல் உணர்ச்சி, கீழ்த்தர சிந்தனைகள் -(இதில் ஜப்பானியர்கள் பெயர் போனவர்கள்)) பார்க்கும் முதலாளித்துவத்தின் ஓர் முகமே, இதில் அது சம்பத்தபடாதது போல் அதன் காலை நக்கி பிழைப்பதாக சொல்கிறீர், போர்னோவே முதலாளித்துவம், முதலாளித்துவமே போர்னோ.

    • நீர் என்னவேண்டுமானாலும் இந்த விசயத்தில் சமாளிபிகேசன் செய்யலாம் சின்னா… ஆனால் என்னை பொறுத்தவரையில் நீர் என்ன எனர்ஜி பானம் குடிந்து விட்டு பேசுறீர் என்பது முக்கியம் அல்ல…மண்டையில் சரக்கொடதான் பேசுறீரா என்பது தான் என்னை பொருத்தவரைக்கும் முக்கியம்.

      போர்னோவில் ஆம்பளங்க மட்டும் தான் சம்பாரிகிராங்க அதில் நடிக்கும் பெண்கள் எல்லாம் சும்மா சல்லிகாசு மட்டும் தான் பெறுகின்றார்கள் என்ற உமது கருத்தை எடுத்து குப்பையில் போடுமையா ! அதில் அந்த தொழிலில் பங்கு எடுக்கும் எல்லா நாயிகளும் தான் சம்பாரிகிரதுங்க! வேண்டுமானால் இணைய தளங்களில் போய் தேடிபார்க்கவும். சும்மா எதுக்கு வினவில் வந்து உளறிகிட்டு இருக்க…?

      பல மில்லியன் அமெரிக்க டாலர்கள் அளவுக்கு நிகழும் போர்னோ தொழில் என்று வினவு கூறிய பின்னும் அதனை நான் மட்டும் என்னமோ அப்ப்படி கூறியதாக எதுக்கும் அழுவுணி ஆட்டம் ஆடுரீர்? பல மில்லியன் பணத்தில் சில மில்லியன் பணம் இந்த போர்னோ பெண்களுக்கு போகவில்லை என்பது தான் உமது கருத்தா?

      செம் சைடு கோல் மட்டும் நீர் போடல… கோவத்தில் உமது தலையில் உள்ள மூளையை கூட கழட்டி எரிந்து விட்டு தான் பேசுறீர் நீர். அந்த வார்த்தையை இன்னிக்கு வினவு மீண்டும் போட்டு யுள்ளது என்பதனை கவனிக்கவும்… எப்படி ? இப்படி….

      உங்களை மாதிரி நான் ஒன்றும் போர்னோ தொழிலுக்கு “லாபியிங் செய்யல…..”

      இப்பவும் மீண்டும் மீண்டும் சொல்றேன்…..படிங்க….யோசியிங்க…..

      இந்த தொழிலில் எந்த நிலையில் ஈடுபடுபவர்களையும் நாம் எந்த நிலையிலும் இரக்க உணர்வுடன் பார்க்க இயலாது. இன்னும் ஒரு ஒப்புமையை கூட கூறுகின்றேன்.

      சமுகத்தின் இளைய தலைமுறையை சீரழிக்கும் போதை பொருட்கள் தயாரிப்பை நாம் எப்படி எல்லாம் தண்டிக்க வேண்டும் என்று கூறுகின்றோமோ அதே போன்று தான் இந்த போர்னோ தொழிலும் தண்டனைக்கு உரியதே…வினவு கூறுகிறது அல்லவா?உங்களுக்காக மலம் சுவைக்கும் நடிகைகள் ! என்று? அது போன்றே உங்களுக்காக தான் தன்னை வருத்திக்கொண்டு போதை பொருட்ட்களை தொழிலாளர்கள் தயாரிகின்றார்கள் என்று கூறினால் அது சரியான கருத்தா?

      இதுக்கு மேலேயும் நீர் இறக்கம் காட்டுவீர் என்றால் நீர் தனித்து கொடிபிடித்து போராடுவதில் எனக்கு ஒன்றும் பிரசனை இல்ல…செய்யலாம்…

    • சின்னா…,முதலாளித்துவத்தின் பலவேறு சீரழிவுகளில் ஒன்றான போர்னோவை நீர் என்னத்துக்கு இந்த அளவுக்கு முட்டு கொடுத்துகிட்டு இருக்கீர் என்று எனக்கு நிசமாகவே புரியல.! உன் கருத்துபடி பார்த்தால் போதைபொருள் தயாரிப்போர் அதில் ஈடுபடுபவர் , கடத்தல் செய்பவர்கள் அதில் ஈடுபடும் முழுமையான கூட்டம், லோக்கல் தாதா மற்றும் அவன் கூட்டம் , உணவு பொருட்களை பதுகின்றவன் அப்புறம் அதிக விலைக்கு விற்பவன் , மருத்துவமனைகளில் கொள்ளை அடிக்கும் டாகடர் எல்லாமும் கூடத்தான் சமுக விரோத செயலை செய்யறாங்க…(முதலாளித்துவத்தின் சீரழிவுகளால்) அதுக்காக அவிங்களுக்கு எல்லாம் நீர் சங்கம் ஆரம்பித்து கொடிபிடித்து போராட போறீரோ? ***************************************************************************************

      //அதென்னங்க முதலாளித்துவத்தையும் ஏசுகிறேன் பார் பேர்வழி போலுள்ளது இந்த கூற்று, முதலாளித்துவம் என்ன கோட்சூட்ஷூ போட்டிருக்கும் ஒரே ஒரு முதலையா? எங்கும் நீக்கமற நிறைந்துள்ளது, போர்னோவே எல்லாவற்றையும் விற்பனை பொருளாக (பெண்கள் , பாலியல் உணர்ச்சி, கீழ்த்தர சிந்தனைகள் -(இதில் ஜப்பானியர்கள் பெயர் போனவர்கள்)) பார்க்கும் முதலாளித்துவத்தின் ஓர் முகமே, இதில் அது சம்பத்தபடாதது போல் அதன் காலை நக்கி பிழைப்பதாக சொல்கிறீர், போர்னோவே முதலாளித்துவம், முதலாளித்துவமே போர்னோ.//

  16. //சின்னா , அமெரிக்காவில் எல்லாமே ஆட்டோமேஷன் ,தொழிலாளர்களுக்கு அங்கு இடமே இல்ல என்று உளறிகிட்டு இருந்த உத்தமர் நீங்க தானே//

    ஐயோ ஆண்டவா இவிருக்கு மறுபடியும் எனது பதில்களையே மேற்கோள் காட்ட வேண்டியுள்ளதே.

    குமார் ‘எல்லாமே அட்டோமாசன்’ என சொல்லுமளவு தற்குறி அல்ல நான், விவேகம் படம்போல் கக்கூசு கதவு என தொட்டது பட்டது எல்லாம் ஹேக் பண்ணுமளவு அமெரிக்க தலைநகர் கூட அட்டோமடேட் இல்லை என்பது எனக்கும் தெரியும், ஆனால் ஏக்கர் கணக்கில் இருக்கும் தொழிற்சாலைகளில் விரல் விட்டு என்ன கூடியவர்களே வேலை செய்வதை மறுப்பீரா? சில பகுதிகளில் மனிதரையே காணமுடியாதே? மீஅங்காடியில் பொருள் நிரப்பும் வேலை, பீசா கொண்டு செல்லும் ‘தோற்றவர்களின்’ வேலைகள் கூட வெகுவாக பறிபோகிறதே? இவற்றறை மறுப்பீரா?

    அதோடு குமார் நான் கூறும் அட்டோமாசன் என்பது தொழிற்புரட்சி காலத்து அட்டோமாசன் மட்டுமில்லை, இக்காலத்து நுண்ணறிவு அட்டோமாசன் பற்றிதான் அதிகம் கவலை படவேண்டும், அதாவதுங்க தொழிற்புரட்சி அட்டோமாசன் பொது அவற்ற்றை இயக்க தொழிலாளர்கள் தேவைப்பட்டனர்,இப்போ இயந்திரங்களை இயக்கவே இயந்திரம் இருக்கிறதே? திடகாத்திர ஆண் தொழிலாளிகளே இன்றைக்கோ நாளைக்கோ என இருக்கும இந்த நிலையில் உயர்கல்வியை தவற விட்ட/ ‘திறமை’ அற்ற எல்லா பென்ன்களுக்கும் நீங்கள் கூறும் வீட்டுவேலை, அங்கன்வாடி, தனியார்பள்ளி வேலை எல்லாம் அமெரிக்காவில் சாத்தியமா? அந்த வேலைகள் கூட கிடைக்காமல் தானே போர்னோவுக்கு செல்கிறார்கள். அப்பெண்களுக்கு ஒரு வேலை வீடு கொடுத்தால் கூட இதை தான் செய்வார்களா?

    என்னையா வருபவர்கள் உங்கள் பதில்களை மட்டுமே படிப்பர் என எண்ணுகிறீரோ, ஏற்கனவே பதிலளித்ததை மறந்துவிட்டு மறுபடியும் தொடங்கிராறு.

    //கலை இலக்கிய படைப்புகள் எல்லாம் நேரடியாகவே பிரச்சனையை பேசணும் என்றால் அது தான் உங்க கோட்பாடு அது என்ன மாதிரியான மயிரு பார்வை என்று நீங்களே முடிவுக்கு வந்து விடுங்க//

    அது ஒன்னுமில்லிங்கோ , கலை படைப்புகள் நமது பிரசினைகளை சொல்லித்தான் (அதாங்க சொசைட்டிக்கு டயரடகரு ஒரு மெசேஜ் சொல்லிருக்காரு என சொல்லி கல்லா கட்டுவாங்களே) அவை தீரும் என நம்பும் முட்டாள் நானில்லை, நீங்கள் ரொம்ப அப்பாவியாக கமேரோன் வர்க்க பாசத்திலே அவதார் ஈன்று தள்ளினார் என அக்கப்போர் பண்ணிநீரே அதற்குத்தான்.

    //உழைக்கும் பெண்கள் என்று மட்டும் அல்ல , உழைக்கும் ஆண்களும் தான் அதே முதலாளித்துவ சுரண்டலுக்கு ஆளப்பட்டு….முதாளைத்துவத்தின் கால்களை நக்கி பிழைக்கும் கும்பல் தான் இவர்கள். அதனை முதலில் ஒத்துகிட்டு விவாதத்தை தொடருங்க சின்னா……//

    என்ன காலை நக்குவது ..லை நக்குவது? அதுதானே நேரடியாக முதலாளித்துவத்தையும் ஆணாதிக்கத்தையும் நோக்கி விரலை நீட்டுகிறோம்? நீர் தான் வரும் ஆனா வராது காமெடி போல் முதலாளித்துவத்தையும் ஏசுகிறேன் பார் என காட்டிக்கொண்டு அதே நேரம் எல்லாரும் அத்தகைய செயல்களில் ஈடுபடவில்லை என்கிறீரே? அதன் நோக்கம் என்ன? மு.துவம் காரணமில்லை என்பது போல்தானே ? விட்டால் போர்னோவில் சிக்கும் பெண்களுக்கு மு.துவத்தில் முன்ஜென்ம பகை என்பீர்போல.

    //சின்னா மறுபடியும் அதே பதில் தான்…அடுத்து டைடானிக் படம் வர்க்கம் கடந்த காதலை…
    அந்த படத்தில் நிகழ்த்தபட்ட சமுக குற்றம் என்னவென்று நீங்க தான் இங்கே விளக்கனும்… சும்மா புதிர் போட்டுட்டு ஓட கூடாது..//

    ‘வர்க்கம்’ கடந்த காதல்…ஏழைகளே உங்களுக்கு மேலும் ஒரு பணக்கார பொண்ணுக்கு காதல் வரக்கூடும், அதனால் உங்கள் பிழைப்பையும் காதலையும் மட்டும் பார்த்துகொள்ளுங்கள். வேறு எதற்கும் உங்கள் நேரம் செலவழிக்க படகூடாது, முக்கியமாக சமூக நல பொது நல சிந்தனைகள்.
    தின்ன வழியில்லாம இருக்கும் நிலையில் கூட மக்களுக்கு , அந்த காலம் தொடங்கி காதலை தூக்கி தூக்கி காட்டும் சூக்குமம் இதுதான். எத்தனை காதல் படங்கள்..எல்லாவற்றிலும் காதலை எதோ அதி அற்புதம், வாழ்கையில் வேறு எதற்காகவும் இழக்ககூடாத ஒன்றாக காட்டுவதும் இதற்குத்தான். மக்களுக்கு , குறிப்பாக இளைஞர் இளைங்கிகளுக்கு வேறு எந்த சமூக சிந்தனைகளும் ஊன்றி விடக்கூடாது என்பதற்காகத்தான். அதுதான் சமூக குற்ரம் ஒன்றும் அப்படம் இழைக்கவில்லை ஆனால் அதைவிட மோசமாக மக்களை காரணிகளை அறிந்து கொள்ளவிடாமல், ஒரு இயல்பான மனித உணர்வான காதலை வைத்து திசை திருப்புகின்றனர். மறுபடியும் கேளுங்க குமார் கேளுங்க அண்ணன்தனே கேளுங்க….

    //போர்னோ நடிகைகளை தொழிலாளர் வர்க்கம் என்று சிறப்பு படுத்தி பார்க்கும் நிலைக்கு வந்துட்டீங்க போல சின்னா?….இந்த போர்னோ பெண்களுக்கு வீட்டு வாடகை , மற்றும் மற்ற பிரச்சனைகள் என்றால் நீங்க வேணுமானால் தனியா கொடிபிடித்து போராடுங்க… அதுக்கு எதுக்கு சமுகத்தை அழைக்க வேண்டும் நீங்க…?//

    இப்படித்தான் நீங்க எவ்வளவு ஆழம் குறைந்தவர் என நிருபிக்கிரீர், உங்கள் கருத்து கணவன் இறந்தவுடன் பெண் என்பவள் இருப்பதே வீண் என உடன் கட்டை ஏற சொன்னவர்களுடன் ஒத்து போகிறது, பாருங்கள் குமார், கம்யூனிஸ்டுகள் என்போர் வெறுமனே தொழிலாளர் நலன் மட்டும் கருத்தில் கொண்டுள்ளவர் அல்ல, போர்னோவில் சிக்கினால் அப்பெண்கள் பற்றி கருதவே தகுதி அற்றவர்களா? இரக்கம் காட்ட கூடதேன்கிரீர? போர்னோ பெண்கள் மு.துவத்தின் victims , மு.துவ victims களுக்காக கம்யூனிஸ்டுகள் எப்போதும் பேசுவர் அது யாராக இருந்தாலும். நான் பதிலில் என்னவோ கருத்தில் சொன்னதை போர்னோ பெண்களின் வீடு வாடகை பிரச்சனைக்கு கொடி பிடியுங்கள்..என இவ்ளோ மலின யுக்தியில் இறங்கிவிடீர்…
    சரி அப்படியே கொடி பிடிக்க சமூகத்தை அழைத்தால் உமக்கேன் குடையுதோய் ? வருவது வராததை சமூகம் முடிவு பன்னடுமே. கம்யூனிசத்தை சிறுமை படுத்த வேறு நல்ல elaborate வாதம் செய்யுங்கள், இதெல்லாம் ரொம்ப சீப்பா இருக்கு. இது பெரியாரை வெறுமனே நாத்திகர் என மட்டுபடுத்துவது போல் உள்ளது.

    • மிஸ்டர் சின்னா அவர்களின் சிந்தனையின் போதாமைதான் இங்கே வெளிப்படுகின்றது. அமேரிக்கா அட்டோமேசன், மற்றும் உயர்கல்வியை தவற விட்ட/ ‘திறமை’ அற்ற எல்லா பென்ன்களுக்கும் நீங்கள் கூறும் வீட்டுவேலை, அங்கன்வாடி, தனியார்பள்ளி வேலை எல்லாம் அமெரிக்காவில் சாத்தியமா? அந்த வேலைகள் கூட கிடைக்காமல் தானே போர்னோவுக்கு செல்கிறார்கள். அப்பெண்களுக்கு ஒரு வேலை வீடு கொடுத்தால் கூட இதை தான் செய்வார்களா? என்று அறிவை அடமானம் வைத்துவிட்டு பேசிகிட்டு இருகாரு… இந்த உளறல்கள் எல்லாம் அமெரிக்க சமுக அமைப்பின் மீதான சின்னாவின் குறைபாடு உடைய புரிதலை தான் இங்கே காட்டுகின்றது. சரி விசயத்தை மழுப்பாம முழுசா பார்கலாம்.

      1.அமெரிக்காவில் போர்னோ தொழிலில் நடிக்கும் நடிகைகளின் சராசரி வருமானம் என்னவென்றால் ஆண்டுக்கு $100,000. அதே நேரத்தில் தொழிலாளர்களின் சராசரி சம்பளம் என்னவென்றால் $849 per week or $44,148 per year for a 40-hour work week மட்டுமே! இப்ப சொல்லுங்க சின்னா உழைக்கும் வர்க்கத்தை விட ரெண்டு மடங்கு வருமானம் இந்த போர்னோ பெண்களுக்கு! இன்னும் பல செலக்டட் ஆன போர்னோ பெண்களுக்கு ஆண்டு வருமானம் $350,000 வரைக்கும் கூட போகுது..அதே போன்று டாப் ஆண் போர்னோகலுக்கு சராசரி சம்பளம் எவ்வளவு என்றால் $100,000 க்கும் மேலே… இந்த புள்ளி விவரங்களில் இருந்து நாம் உணரக்கூடியது என்னவென்றால் அமெரிக்காவின் மொத்த மக்கள் தொகையில் இந்த போர்நோவில் ஈடுபடும் வெண்ணைகள் ஆண்களும் சரி பெண்களும் சரி அதில் ஈடுபட காரணம் அதில் வரும் அதிகபடியான பணம் தானே தவிர வேறு ஏதும் இல்ல….

      2. அமெரிக்காவில் ஆட்டோமேசனால் வேலை வாய்ப்புகள் இல்ல என்று உளறகூடாது சின்னா அவர்களே … தப்பு என்றால் முதலில் அதனை ஒத்துக்கும் மன பக்குவம் வேணும் உங்களுக்கு! இந்த ஆகஸ்ட்டு 2017 படியான விவரம் என்னவென்றால் 127.35 million அமெரிக்கர்கள்-தொழிலாளர்கள் முழு நேர ஊழியர்களாக வேளையில் இருக்காங்க…

      இந்த விவரங்களின் அடிபடையில் போர்னோவில் நடிக்கும் ஒரு சில பெண்கள் அந்த துறையை தேர்ந்தெடுக்க காரணம் அந்த போர்னோ அதிகபச்ச சம்பளமா அல்லது வேறு என்ன காரணம் என்று முடிவுக்கு வாங்க சின்னா!

    • சின்னா நீங்க உண்மையில் ஒரு கம்ம்யுநிடு தான் என்றால் முதலில் இந்த போர்னோவை பிற சமுக விரோத செயல்களான போதை விற்பனை, கடத்தல், பதுக்குதல் போன்ற சமுகத்தை சீரழிக்கும் செயல் என்று ஒதுக்குங்க அதுக்கு அப்ப்புறம் அந்த தொழிலில் ஈடுபடும் பேராசை புடித்த பெண்களை காப்பத்துவது பற்றி சிந்திகலாம்.. என்ன புரியுதா தோழர்?

      //கம்யூனிஸ்டுகள் என்போர் வெறுமனே தொழிலாளர் நலன் மட்டும் கருத்தில் கொண்டுள்ளவர் அல்ல, போர்னோவில் சிக்கினால் அப்பெண்கள் பற்றி கருதவே தகுதி அற்றவர்களா? இரக்கம் காட்ட கூடதேன்கிரீர?//

  17. சின்னா அப்படினா பண வெறி பிடித்த அமெரிக்க போர்னோ பெண்களுக்காக சங்கம் அமைக்க போறாரு சின்னா என்ற முடிவுக்கு வினவு வாசகர்கள் வரலாமா? தொழிலாளர் வர்கத்தின் அவலங்களை உலக அளவில் அவதானித்து அவர்களுக்காக போராடாமா அமெரிக்க போர்னோ பெண்களுக்காக சங்கம் அமைத்து போராடப்போராறு சின்னா என்ற முடிவுக்கு தான் நாம் வரஇயலும்…. உங்க சேவை அமெரிக்க போர்னோ பெண்களுக்கு மிகவும் தேவை எனவே தொடருங்க சின்னா!

    ///சரி அப்படியே கொடி பிடிக்க சமூகத்தை அழைத்தால் உமக்கேன் குடையுதோய் ? வருவது வராததை சமூகம் முடிவு பன்னடுமே. கம்யூனிசத்தை சிறுமை படுத்த வேறு நல்ல elaborate வாதம் செய்யுங்கள், இதெல்லாம் ரொம்ப சீப்பா இருக்கு. இது பெரியாரை வெறுமனே நாத்திகர் என மட்டுபடுத்துவது போல் உள்ளது.///

  18. சின்னா அவர்களுக்கு கலை இலக்கிய படைப்புகளின் மீதான புரிதலின் போதாமை தான் அவரின் பின்னுட்டத்தில் 16 ல் எதிரோளிகிறது. அவரின் தோழர்கள் அவருக்கும் கலை இலக்கிய படைப்புகள் பற்றிய புரிதலை கலவி அளிப்பதன் மூலம் உருவாக்கலாம்……

  19. தோழர் செல்வம் ,

    போர்னோ கட்டுரைகளின் வினவு விவரங்களை தான் கொடுகின்றதே தவற அது தன்னுடைய கருத்துகளை இன்னும் வெளியிடவில்லை.. அவர்கள் வெளியிடாத கருத்துக்கு நான் பதில் அளிக்க இயலாது தோழர்…அனால் பொதுவில் இந்த கட்டுரைகள் போர்னோ சமுக விரோதிகலின் மீது (போர்னோ நடிகைகள் மீது) பரிவுணர்வை ஏற்படுத்த முயலுகின்றது.

    நீங்க தான் போர்னோவுக்கும் , விபச்சர்த்துக்கும் இடையிலான நெருங்கிய தொடர்பை பற்றி விளக்கமாக கூறி இரண்டுமே சமுக விரோத செயல் என்று நிருபணம் செய்யணும்.. இது தொடர்பான என்னுடைய பார்வையை நான் என்னுடைய பல பின்னுட்டங்களில் கொடுத்து இருக்கேன். பின்னுட்டங்கள் 13.1 மற்றும் 13.2 களில்தோழர் அனானியனுக்கு அளித்த பதில்களில் இவைகள் இரண்டும் ஒன்று அல்ல என்று தெளிவாகவே பேசியிருக்கேன்…

  20. தோழர் செல்வம் ,

    ரான் காவ்ரியேலிக்கும் ஷேல்லிக்கும் உள்ள பிரச்சனைகள் அதிக பணம் சம்பரிக்கவேண்டும்என்ற பேராசை தானே தவிர ஏதும் கிடையாது. இது தொடர்பாக என்னுடைய பின்னுட்டம் 16.1 ல் சின்னாவுடன் நீண்ட விவாதத்தை நடத்தியுள்ளேன். அங்கே இது தொடர்பான விவாதத்தை நீங்கள் விரும்பினால் தொடரலாம்….. நன்றி.

  21. போர்நோவில் ஈடுபடும் பெண்களை பலியாடுகள் என்று எல்லாம் இரக்க உணர்வுடன் காண இயலாது தோழர். அதில் கொழிக்கும் பணம் தான் அவர்களை அந்த சமுக விரோத நடவடிக்கையில் ஈடுப்டவைகின்றது என்பதனை என்னுடைய பின்ன்ட்டம் 16.1 ல் சின்னா அவர்களுக்கு தெளிவாகவே விளக்கியுள்ளேன்.

    உங்க கேள்வியையே உங்களுக்கு திருப்பி கேட்கின்றேன் தோழர்…..

    சமுகத்தை சீர்குலைவில் தள்ளும் குறிப்பாக இளைய தலைமுறையினரை சீர்குலைக்கும் போர்நோவில் ஈடுபடும் யாவருமே சமுக விரோதிகல் என்ற நிலையில் அவர்கள் மீது பரிவு காட்டுவது என்பது எந்த மாதிரியான நேர்மையான செயல்?

    //இதில் பலியாட்களை[அவர்கள் எத்தகைய வர்க்கத்தினராக இருப்பினும்] குற்ற கும்பலாகுவதில்கு என்ன நேர்மை இருக்க முடியும்?//

  22. அடடா சற்று பிசியாக இருந்தால் குமார் எங்கோ போய்விட்டாரே. அமெரிக்க சமூக அமைப்ப பற்றி நன்றாக அறிந்துதான் எல்லாவற்றையும் சொன்னேன் , அதில் உங்களுக்கு எந்த சந்தேகமும் வேண்டாம், நீங்கள் குறிப்பட்ட டாலர் கணக்குகள் எங்கே எடுத்தீர்கள் என புரியவில்லை, போர்னோ என்பது vulnerable ஆன பெண்களை வைத்து பணம் பண்ணும் கேவலம், அதை சட்டமாக்கி இருக்கும் அமெரிக்காவில் கூட எல்லா தொழில்துறைக்கும் வருமான கணக்கெடுப்பது போல official ஆக ஒரு கணக்கும் இல்லை, நீங்கள் கூறும் டாலர் கணக்குகள் போர்னோவில் இருக்கும் பெரும் புள்ளிகளை வெறிபிடித்த ஊடகங்கள் தொடர்பு கொண்டு கேட்கும்போது தரும் தகவல்கள்.
    உண்மை என்னவெனில் சல்லிகாசுக்கு பெரும்பாலான பெண்கள் பயன்படுத்த படுகிறார்கள் என்பதே உண்மை.

    அட்டோமேசன் பற்றி, நீங்க லூசா இல்ல லூசு மாரி நடிக்கிறிங்களா ?
    //அமெரிக்காவில் ஆட்டோமேசனால் வேலை வாய்ப்புகள் இல்ல என்று உளறகூடாது//

    இது மூன்றாவது தடவை என் பதிலையே மீண்டும் கோட் பண்ணுவது எனக்கு ஒரே மாவை வேறு வேறு விதமாக அரைக்க தெரியாது குமார் –
    குமார் ‘எல்லாமே அட்டோமாசன்’ என சொல்லுமளவு தற்குறி அல்ல நான், விவேகம் படம்போல் கக்கூசு கதவு என தொட்டது பட்டது எல்லாம் ஹேக் பண்ணுமளவு அமெரிக்க தலைநகர் கூட அட்டோமடேட் இல்லை என்பது எனக்கும் தெரியும், ஆனால் ஏக்கர் கணக்கில் இருக்கும் தொழிற்சாலைகளில் விரல் விட்டு என்ன கூடியவர்களே வேலை செய்வதை மறுப்பீரா? சில பகுதிகளில் மனிதரையே காணமுடியாதே? மீஅங்காடியில் பொருள் நிரப்பும் வேலை, பீசா கொண்டு செல்லும் ‘தோற்றவர்களின்’ வேலைகள் கூட வெகுவாக பறிபோகிறதே? இவற்றறை மறுப்பீரா?

    அதோடு குமார் நான் கூறும் அட்டோமாசன் என்பது தொழிற்புரட்சி காலத்து அட்டோமாசன் மட்டுமில்லை, இக்காலத்து நுண்ணறிவு அட்டோமாசன் பற்றிதான் அதிகம் கவலை படவேண்டும், அதாவதுங்க தொழிற்புரட்சி அட்டோமாசன் பொது அவற்ற்றை இயக்க தொழிலாளர்கள் தேவைப்பட்டனர்,இப்போ இயந்திரங்களை இயக்கவே இயந்திரம் இருக்கிறதே? திடகாத்திர ஆண் தொழிலாளிகளே இன்றைக்கோ நாளைக்கோ என இருக்கும இந்த நிலையில் உயர்கல்வியை தவற விட்ட/ ‘திறமை’ அற்ற எல்லா பென்ன்களுக்கும் நீங்கள் கூறும் வீட்டுவேலை, அங்கன்வாடி, தனியார்பள்ளி வேலை எல்லாம் அமெரிக்காவில் சாத்தியமா? அந்த வேலைகள் கூட கிடைக்காமல் தானே போர்னோவுக்கு செல்கிறார்கள். அப்பெண்களுக்கு ஒரு வேலை வீடு கொடுத்தால் கூட இதை தான் செய்வார்களா?

    மற்றையது, வீணாக நான் போர்னோவுக்கு ஆதரவாக கதைப்பதாக சொல்லவேண்டாம், போர்னோவை சமூக சீரழிவு இல்லை என யார் சொன்னது இப்போ????? போர்னோவில் பெண்கள் சிக்குவது முதலாளித்துவத்தால் தான் என்பதே எனது விடாபிடியான கருத்து, அந்த பெண்கள் யாருக்காவது சோற்றுக்கு வழியில்லா நிலையில் கூட சமூகத்தை சீரழிக்க வேண்டுமென வேண்டுதலா?

    ‘பிரபல’ போர்னோ ஸ்டுடியோகளே படங்களை சில நூறு / ஆயிர டலார் செலவில் எடுத்து பன்மடங்கு காசு பார்க்கும் நிலையே , இவ்வாறான ‘பெரிய பட்ஜெட்’ படங்களை விட நேரடியாக விபசாரத்தை கை / போன்கா மிராவால் எடுக்கும் படங்களே மிக மிக அதிகம். இப்படி விபசாரத்துக்கும் போர்னோவுக்கும் கிட்டத்தட்ட இடைவெளியே இல்லாத நிலையில் விபசாரிகளும் பணத்தாசை கொண்டுதான் செய்கிறார்கள் என சொல்லமுடியுமா?

    //சின்னா அவர்களுக்கு கலை இலக்கிய படைப்புகளின் மீதான புரிதலின் போதாமை தான் //
    ஐயா எனக்கு கலை இலக்கிய படைப்புகள் எல்லாமே மக்கள் பிரச்சினையை நேரடியாக பேசினாலே அவை உன்னதமானவை என்றொரு சிற்றறிவே…அதைவிட வேறெதுவும் மாடர்ன் ஆர்டை உற்று பார்த்து அறியும் ஏழாம் அறிவெல்லாம் எனக்கில்லிங்கோ.

    பசி வந்தால் பத்தும் பறக்கும் குமார். முக்கியமாக அங்கன்வாடி வேலைகூட அரிதான அமெரிக்காவில்.

  23. ஒரு சிறிய அப்டேட் –
    மு.துவ சந்நிதி களில் ஒன்றான உலக வங்கி தலைவரே வேலை ஆட்டோமாசன் காரணமாக பெருமளவு மக்களின் எதிர்காலம் கேள்விக்குறியாகி உள்ளதாக எச்சரிக்கை ‘மணி’ அடித்துள்ளார், குறிப்பாக ‘low-skill’ என கொச்சை படுத்தப்படும் குமார் கூறிய அதே வேலைகள். நாணய நிதியமும் மற்றைய சந்நிதிகளும் கூட இதை மறைமுகமாக வெளிவிடுகின்றனர். இப்போது நான் ஏற்கனவே பதிலூடடங்களில்ம றுத்து விளக்கியுள்ளேன் என்றாலும், மீண்டும் உங்கள்,

    பதில் 12.3 இன் முதல் வரிகள்
    16.1 இன் 2 ஆம் இலக்க பத்தி
    6.1.2.1.1.1.2.1 இன் முதல் பத்தி

    ஆகியவற்றை மறுபரிசீலனை செய்யவும். ஒத்துகொள்ள முடியாவிட்டால் உலகவங்கி தலைவரும் உளறுகிறார் என சொல்லவும். அல்லது ஒழுங்கான வேலைவாய்ப்பு இல்லாவிட்டால் போர்னோ பெண்கள் பட்டினி கிடந்தது சாகலாம் தானே எனவும்.

Leave a Reply to குமார் பதிலை ரத்து செய்க

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க