காந்தியை பற்றி பாடப்புத்தகங்களிலும் பொதுவிலும் ஆளும்வர்க்க அடிபொடிகளால் சொல்லப்படும் கருத்துக்கள் தான் பொதுவெளியிலும் ஆதிக்கம் செலுத்துகின்றன. காந்தி உண்ணாவிரதமிருந்தார், ராட்டை சுற்றினார் என்று மாணவர்களுக்கு, அஹிம்சை போதித்தார், சத்யாகிரகம் செய்தார், உண்ணாவிரதம் இருந்தார் என்றெல்லாம் வகுப்பெடுக்கப்படுகின்றது.
உண்ணாவிரதமிருந்தார் தான் ஆனால் யாருடைய நலனுக்காக? காந்தி போராடினாரா? போராட்டத்தை காட்டிக்கொடுத்தாரா? தாழ்த்தப்பட்ட மக்களுக்கு கொடுக்கப்பட்ட சலுகைகளை பறிப்பதற்காக அம்பேத்கரை எதிர்த்து ஏன் உண்ணாவிரதமிருந்தார்? சாதி பற்றிய காந்தியின் கருத்து என்ன? இது போன்ற பல கேள்விகளுக்கு விடை காண வேண்டியது அவசியம்.
காந்தி பற்றி கட்டமைக்கப்பட்டிருக்கும் பிம்பம் உண்மையானதா? என்பதை அவர் வாழ்ந்த காலத்தில் வாழ்ந்த மக்கள் தலைவர்களின் எழுத்திலும் பேச்சிலும் பார்க்கலாம். குறிப்பாக பார்ப்பன இந்துமதத்தின் சாதிமுறைக்கு எதிராக இறுதிவரை போராடிய பெரியார், அம்பேத்கரின் எழுத்துக்களில் இருந்து தெரிந்து கொள்வதற்கு ஏராளமிருக்கின்றன.
காந்தி யாருக்கான தலைவர்?
பிரிட்டிஷாரை எதிர்த்த காந்தியின் போராட்ட நோக்கத்தை அம்பலப்படுத்துகிறார் பெரியார். ராஜாக்கள், ஜமீன்தார்கள், முதலாளிகளுக்கு எந்த பிரச்சனையும் ஏற்படாத வகையில் போராட்டத்தை கட்டியமைத்தவர் தான் காந்தி. பொதுவுடைமை கொள்கை செல்வாக்கு பெறாமல் இருப்பதற்காக காந்தியின் செல்வாக்கை அதிகரிக்க வேண்டிய தேவை ஆங்கில அரசுக்கும், இந்திய முதலாளிகளுக்கும், ஜமீன்தார்களுக்கும், பார்ப்பன ஆதிக்க சாதிகளுக்கும் இருந்தது. அந்த புரவலர்களின் உதவியால் காந்தி மக்களை கட்டி போட்டதையும் முக்கியமாக அவரே இதை ஒப்புக்கொண்டதையும் அம்பலப்படுத்துகிறார் பெரியார்.
மகாத்மா காந்தி எனும் சோளக்காட்டு பொம்மை!நூலில் இடம்பெற்றுள்ள கட்டுரைகள்:
நான்கு கட்டுரைகள் – 96 பக்கங்கள் – அழகிய வடிவமைப்பில் – மின் நூல் விலை ரூ. 20.00 |
₹20.00Add to cart |
மின்னூலை வாங்க Add to cart பட்டனை அழுத்தவும். பின்னர் View cart அழுத்தி, உங்கள் கூடையில்(Cart), எண்ணிக்கையை(Quantity) சரிபார்த்துவிட்டு, Proceed to checkout-பட்டனை அழுத்தி, உங்கள் பெயர் மற்றும் தகவல்களை பதிவு செய்து Place order-ஐ அழுத்துங்கள். உங்களுக்கான பணம் செலுத்தும் முறையை தெரிவு செய்து பணத்தை செலுத்துங்கள்.இந்தியாவில் வங்கிக் கணக்கு வைத்திருப்போர் டெபிட் கார்டு, கிரெடிட் கார்டு, நெட்பேங்கிங் மூலம் பணம் அனுப்பலாம். பணம் அனுப்பிய பிறகு உங்களது மின்னஞ்சலுக்கு உடனேயே டவுண்லோடு இணைப்பு வரும். அதிலிருந்து நீங்கள் இரண்டு நாட்களுக்குள் டவுண்லோடு செய்யலாம். வெளிநாடுகளில் வங்கிக் கணக்கு வைத்திருப்போர் எமது வங்கிக் கணக்கிற்கு நேரடியாக பணம் அனுப்பிவிட்டு, விவரத்தை உடன் அறியத்தரவும். உடன் உங்களுக்கு மின் நூல் அனுப்பி வைக்கப்படும்.
Mobile – (91) 97100 82506, (91) 99411 75876
Email – vinavu@gmail.com
இந்நூலின் கட்டுரைகள் வினவு தளத்தில் ஏற்கனவே வெளியாகியுள்ளன.
_____________
உழைக்கும் மக்களின் இணையக் குரல் வினவு தளத்தை ஆதரியுங்கள் – சந்தா செலுத்துங்கள்!
சந்தா செலுத்தும் நண்பர்களுக்கு அந்த காலத்திற்குரிய வார செய்திப்பதிவு – புதிய கலாச்சாரம் – புதிய ஜனநாயகம் மின்புத்தகங்கள், நிகழ்வுகள் குறித்த அறிவித்தல்கள் அனுப்பப்படும். இந்தியாவில் வங்கிக் கணக்கு வைத்திருப்போர் மட்டுமே சந்தா அனுப்ப இயலும். டெபிட் கார்டு, கிரெடிட் கார்டு, நெட்பேங்கிங் மூலம் பணம் அனுப்பலாம். அனுப்புவதற்கு PayUmoney பட்டனை அழுத்தவும். வெளிநாடுகளில் வங்கிக் கணக்கு வைத்திருப்போர் எமது வங்கிக் கணக்கிற்கு நேரடியாக பணம் அனுப்பிவிட்டு, விவரத்தை உடன் அறியத்தரவும். நன்றி
காந்தி தாத்தா ,
உங்களுடன் ஆயிரத்து ஒன்று கருத்து வேறுபாடுகள் இருந்தாலும் உங்க மீது மரியாதையும் மதிப்பும் வைக்க சொல்லிகொடுத்ததே எங்க பெரியாரும் , டாகடர் அம்பேத்கரும் தான். எங்க வீட்டில் கூட இன்றைக்கு கேக் வாங்கி எல்லாருக்கும் கொடுத்து உங்க பிறந்த நாளை கொண்டாடிகிட்டு இருக்கான் எங்க சிவகார்த்திகேயன்…
இந்த நிலமையில் நீங்க விட்டுட்டு போன இந்தியாவில் இன்னும் நீங்க நேர்மையாக பதில் அளிக்காத பல்வேறு பிரச்சனைகள் முற்றி முதிர்ந்து நாறிக்கிட்டு தான் இருக்கு! அதுக்கு எல்லாம் உங்க கொள்கை ,கோட்பாடு எல்லாம் வேலைக்கு ஆகாது என்று நன்கு அறிந்தே உள்ளோம்.
#இந்தியாவின் இயற்கை வளங்கள் கார்பரேட் நிறுவனாங்களால் சூரையாடப்பட்டுகொண்டு தான் இருக்கு…உங்க காலம் தொட்டே…நீங்க நன்கொடை வாங்கிய உங்க டாட்டாவும் ,பிர்லாவும் இருந்த காலம் தொட்டே…
#மத வெறி நாய்கள் எப்படி உங்களை சுட்டுக்கொன்றனவோ அது இன்னும் தொடர்ந்துகிட்டு தான் இருக்கு….
#ஒடுக்கபட்ட மக்களை அரிசனங்கள் என்று உங்க வசதிக்கு ஏற்ப மழுப்பலா பேசிவிட்டு போயிட்டீங்க… ஆனாலும் அவிங்களுக்கு எதிரான தாக்குதல்கள் தொடந்து கிட்டு தான் இருக்கு… இதுல வேற ஒடுக்கப்பட்ட மக்களுக்கு அம்பேத்கர் தலைவர் ஆயிட்டாரே என்ற போட்டியும் பொறாமையும் வேற உங்களை வேக வைத்துக்கிட்டு இருந்தது…
உங்கள தாத்தா என்று அழைக்க எல்லாம் எனக்கு ஒரு பிரச்சனையும் கிடையாது… ஆனால் இதியாவின் தந்தை என்று அழைக்க மனசு வரல தாத்தா…
எது எப்படி இருந்தாலும் உங்களுக்கு பிறந்த நாள் வாழ்த்துக்கள் தாத்தா….
குறிப்பு : உங்களுக்கு ஆதரவா பேச யாரும் கிடையாது என்று எல்லாம் எனக்கு நல்லாவே தெரியும்…நானே உங்க அரைகுறை போராட்டத்தை முடிந்த அளவுக்கு காம்ரமைஸ் செய்துகிறேன்…
///குறிப்பு : உங்களுக்கு ஆதரவா பேச யாரும் கிடையாது என்று எல்லாம் எனக்கு நல்லாவே தெரியும்…நானே உங்க அரைகுறை போராட்டத்தை முடிந்த அளவுக்கு காம்ரமைஸ் செய்துகிறேன்////
ஹாஹாஹா … சூப்பர்
காலம் காலமாக இருந்து வருவதும் உலக அதிசயங்களில் ஒன்றானதுமான தாஜ்மஹாலின்பெயரை உ.பி. காவி அரசு நீக்கியது மதவெறியினாலா…? யாேகி என்றால் என்ன அர்த்தம்…?
if Gandhi would not have been there, Hindus would have shown their Majority against other religions and today other religions could not have lived this much peacefully in Independent India.
all minority religious people know this more than Hindus.
just don’t write anything you want.
he was the only leader who understood poor India and was able to pull majority Indians into independence
even though every state had their own great leaders, Gandhi was the only soul behind all India stood.
Ahimsa does not mean don’t react or don’t oppose, but don’t act violent. use your brain in such a way that, opposition understand your point.
Please accept communism has failed till date…. we know this is not correct democracy but still this is better than communist countries.
மகாத்மா காந்தி போன்ற உத்தமர்களை வன்முறை வழிகளை நம்பும் வினவு போன்றவர்களால் என்றுமே புரிந்துகொள்ள முடியாது…
வினவு போன்றவர்களுக்கு பகத் சிங் மாவோ போன்ற வன்முறையாளர்களை தான் ஆதர்சமாக இருக்கிறார்கள்.
மணிகண்டன்,
காந்தி அகிம்சாவாதி என்றால், எதைக் கொண்டு சிரிப்பது என்று தெரியவில்லை.
சிட்டகாங் பேரெழுச்சியில் வெள்ளைக்காரனை மக்கள் கிடுகிடுக்கச் செய்தபோது மக்களையும், மக்களுக்கு ஆதரவாக போராடிய சிப்பாய்களையும் ‘காலிகள்’ என்று பேசிய கிரிமினல் காந்தி உங்கள் பார்வையில் அகிம்சாவாதி தான்.
சாம்,
காந்தி இல்லையென்றால், இங்கு மதச் சிறுபான்மையினர் நிம்மதியாக வாழ்ந்திருக்க முடியாது என்று கூறுகிறீர்கள். நன்று.
அப்படியெனில் காந்தி யாரிடமிருந்து மதச் சிறுபான்மையினரைக் காப்பாற்றினார் ? என்றும் சொல்வதற்கு தாங்கள் கடமைப் பட்டவர்.
அடுத்ததாக அகிம்சைக்கு ஒரு விளக்கம் கூறியிருக்கிறீர்கள். காந்தியின் அகிம்சை என்பது , வெள்ளைக்காரனுக்கு மட்டும் பொருந்தாதது ஏன் ?.
வெள்ளைக்காரனுக்கு எதிராக சிட்டகாங்க் எழுச்சி நடைபெற்றபோது வெள்ளைக்காரனின் தாக்குதலுக்கு பதில் தாக்குதல் நடத்தியவர்களை காலிகள் என்றார்.
கடைசியாக கம்யூனிசம் தோற்று விட்டதாக கூறியிருக்கிறீர்கள். நல்லது .. ஜனநாயகத்தில் ஊறித் திளைக்கிறீர்கள் .. நல்லது.. ஆனால் உங்கள் ஜனநாயகம் கொன்று குவித்த ஏழைகளின் அளவிற்கு கம்யூனிசம் யாரையும் கொல்லவில்லையே .. உலக அளவில் முதலாளித்துவம் உருவாக்கி வைத்திருக்கும் பஞ்சத்திற்கும் பட்டினிக்கும் யார் பொறுப்பேற்பார்கள் ? பட்டினிச் சாவுகள் எல்லாம் கொலைக்கணக்கில் வராதா ?..
வாழ்க ஜனநாயகம் !
எப்படி ஒவ்வொரு இந்தியனின் நலனும் முக்கியம் என்று நினைக்கிறேனோ அதேபோல் ஒவ்வொரு வெள்ளையரின் உயிரும் முக்கியம் என்று சொன்னவர் தான் மகாத்மா காந்தி அவர்கள். வெறுப்பை வளர்க்காமல் அன்பை வளர்த்த இந்த மனநிலையால் தான் மகாத்மா காந்தி அவர்கள் இங்கிலாந்து சென்ற போது அவரை வரவேற்க இங்கிலாந்தின் உழைக்கும் மக்கள் பெருமளவில் திரண்டு வந்து அவருக்கு வரவேற்பு கொடுத்தார்கள்.
வன்முறையை கையில் எடுத்து போராடும் எந்த ஒரு இயக்கமும் தலைவரும் சாதிக்க முடியாத ஒரு விஷயம் இது.
குஜராத்தில் கொலை செய்த மோடியைக் கூடத் தான் வெளிநாட்டுக்காரன் வரவேற்கிறான். இதெல்லாம் ஒரு மேட்டரா மணிகண்டன் ?
– அனானியன்
முதலில் அன்பு என்ற ஒரு விசயம் பத்தி பேச ஆர்.எஸ்.எஸ். கூஜாக்களுக்கு என்ன அருகதை உள்ளது? காந்திய போட்டுதள்ளுனதும் அவங்கதான்… இப்ப சபர்மதியில ராட்டை சுத்தி போட்டோ பொடுறதும் அவங்கதான்.
மணி ‘ஜி’ சொல்லுறது அப்பாவி மக்களைக் கொலை செய்யும் கொலைகாரன் உயிரும் கொள்ளப்பட்ட அப்பாவிகளின் உயிரும் ஒன்னு என்று தீர்ப்பு எழுதுது…. செம…
//வெறுப்பை வளர்க்காமல் அன்பை வளர்த்த இந்த மனநிலையால் தான் மகாத்மா காந்தி அவர்கள்//
அதுக்கு அகிம்சையின் துரோகமும் ! வன்முறையின் தியாகமும்! அப்படிங்கிற கட்டுரையில பதில் இருக்கு… கொஞ்சம் தேடி பாத்து படிக்கலாம்… எங்க மணி’ஜி’எத தான் படிச்சி கமெண்டு போட்டுருக்குறாரு….
அதெப்படி…காந்தியை எல்லாருமே வெறுக்கிறார்கள்? ஒரு கும்பல் கொலையே செய்தது! இன்னொரு கும்பல் அவர் செத்து 70 வருடங்களுக்குப் பின் இப்படிஅவதூறு பரப்புகிறது! காந்தியை வெறுப்பவர்கள் சொல்லும் அரசியலில் தான் நாம் காந்தியைப் புரிந்து கொள்ள முடியும்! அவர் எப்படி ஏகாதிபத்தியம் மற்றும் கட்டுப்பாடற்ற நுகர்வுக் கலாச்ச்சாரத்துக்கு எதிரான ஒரு கடுமையான நிலையை எடுத்திருந்தார் என்பதையெல்லாம் ஏன் இப்போது வசதியாக மறந்துவிட்டோம்? காந்தியின் கோட்பாடுகள் மனவலிமை உள்ளவர்களுக்கு மட்டுமே! அது சுயநலம் சார்ந்தது அல்ல. RSS கும்பலின் கோட்பாடுகளும் மனவலிமை சார்ந்தே உள்ளன. ஆனால் அவற்றால் ஒரு சாரார் மற்றுமே பயன் பெற முடியும். இந்த வேறுபாடு கூடத் தெரியாமல் தான் நாம் இன்று காந்தியை அணுகுகிறோம்! காந்தி முரண்பாடனவர் என மிக எளிதான முடிவுக்கு நம்மால் வர முடிகிறது!
காந்தியை ஆர்.எஸ்.எஸ். வெறுத்ததற்கும், வினவு வெறுப்பதற்கும் வித்தியாசம் என்னவென்று தெரியவில்லையா பாலா ?.
1. காந்தி ஒரு சனாதனி (அதாவது சாதிய படிநிலைகள் சரியானவை என்பவர்). அதை அவரே சொல்லியிருக்கிறார். ஆர்.எஸ்.எஸ். ஐப் பொருத்தவரையில் சனாதன தர்மம் தான் சிறந்தது.
2. காந்தி எதிர்பார்த்தது இராம இராஜியம். இந்து இராஸ்டிரம் என்பது ராமராஜியத்தின் மையப்படுத்தப்பட்ட ஆட்சிமுறை. அது தான் ஆர்.எஸ்.எஸ்.-ன் இலக்கு.
இந்த இரண்டு விசயங்களில் அவர் ஆர்.எஸ்.எஸ்.-ன் இன்னொரு முகம். ஆகவே வெறுப்பு இவ்வழியே வருகிறது.
இது தவிர வெள்ளைக்காரனிடம் அவர் என்ன நிலைப்பாடு கொண்டிருந்தார் என்பது அடுத்த கேள்விக் குறி ?
அது நீங்களா தேடிப் பாத்து காந்தியை காறித் துப்பிக்கோங்க ..
– அனானியன்
எல்லோரும் ஏன் காந்தியை வெறுக்கிறார்கள் என்பதை பற்றி ஜெயமோகன் சிறப்பாக எழுதி உள்ளார்.
http://www.jeyamohan.in/4307#.WdT4mmuPLcs
ராமன்,
காந்தி என்னும் அயோக்கியன் அம்பேத்கருக்கு எதிராக நிறுத்துவது தவறு என விளக்கியிருக்கிறார் சுயமோகன். அட அப்பரசண்டிகளா , அதுவா பிரச்சன, தலித் மக்களுக்கு எதிரா காந்தி இருந்தார்ங்குறது தான் பிரச்சினை.
பகத் சிங்குக்கும் அவருக்குமா பிரச்சினை .. விடுதலையை விரும்பிய மக்களுக்கு எதிரா வெள்ளக்காரனுக்கு வெளக்கு பிடிக்கிறவரா காந்திர் இருந்தார்யுங்குறது தான் பிரச்சினை ..
புரியுதா சார் ..
ஜெயமோகன், மக்களை ஏமாத்துன காந்திக்கு மட்டும் ஆதரவா கட்டுரை எழுதலை., மக்களை மொங்கான் போட்ட மல்லையாவுக்கு ஆதரவாகவும் தான் எழுதிருக்கார்..
அவர் ஒரு கிரிமினல் லாயர். கிரிமினலுங்களுக்காக மட்டும் தான் வாதாடுவார் .. நீங்க அவருக்கு ஜூனியர் லாயரா ?.
மணிகண்டண்கள் ஆதரிக்கும் போதே தெரியவில்லையா?காந்தியாரின் (அ)ஹிம்சை அரசியல் யாருக்கானது என்று.நாட்டின் மொத்த வரிப்பணத்தையும் ஏமாளி வீரர்களுக்கு காஞ்ச சப்பாத்தி போடும் ராணுவத்துக்கு அழுவும் தேசத்தில் மக்களை பட்டினீயில் கொல்லும் கொள்கைக்குப் பேருதான் அஹிம்சையாம்.”இயற்கைத்தாயின் கொடையான தண்ணீரை லாபமாக்கிக் கொள்ளையடிக்காதே அது மக்களின் தாகத்திற்கான பொதுஉரிமை அமெரிக்க கோக் நாயே வெளீயேறு உன்னை விரட்டாமல் தண்ணீர் மீதான மக்களின் உரீமையை நிலைநாட்ட முடியாது”.இன்றைய இந்த போராட்ட வடிவம்தான் அன்றே மாவீரன் பகத்சிங் முன் வைத்த அரசியல்.காந்தியார் என்ன சொன்னார்! அதெப்படி அமெரிக்க கோக்கை வெளியேறச்சொல்வது அவர்கள் மனது எப்படி துன்புறும்?தாமிரவருணியில் தண்ணீர் எடுப்பது அவர்களது உரிமை.மக்கள் வேண்டுமானால் “அஹிம்சையாக”போராடி தச்ங்களின் உரிமையையும் பெற்றுக்கொள்ளட்டுமே இதுதான் காந்தியாரின் சுதந்திர முலாம் பூசிய அன்றைய போராட்டம்.இதற்கு மேலும் நமக்குத்தேவை பகத்சிங் வழிதான் என்று மக்கள் முடிவெடுக்காமல் இங்கேயில்லை “விடுதலைக்கான சாத்தியம்”
நீங்கள் சில விஷயங்களை புரிந்துகொள்ளவில்லை
ஆயுத போராட்டம் என்பதில் சமரசம் மற்றும் விவாதத்திற்கு இடமே இல்லை, அது போகும் பாதைகளை திரும்பி வரமுடியாதபடி அழித்து விட்டு தான் முன்னேறுகிறது.
ஒரு விஷயம் சொல்கிறேன் உங்களின் வன்முறை போராட்டத்தில் ஒருவரை கொலை செய்கிறீர்கள் என்று வைத்துக்கொள்வோம் பின்னாளில் அவர் ஒரு அப்பாவி என்று தெரிந்தால் உங்களால் இறந்தவரின் உயிரை திருப்பி கொடுக்க முடியும்மா ?
அகிம்சை போராட்டத்தில் தவறுகளை திருத்தி கொண்டு சரியான பாதைக்கு செல்ல முடியும் ஆனால் வன்முறை போராட்டத்தில் தவறை சரி செய்வது இயலாத காரியம், ஒரு தவறுக்கு மேல் இன்னொரு தவறுக்கு வழி செய்து மேலும் மேலும் அழிவை தான் வன்முறை போராட்டங்கள் கொண்டு வரும்.
மகாத்மா காந்தி அவர்களின் போராட்டம் வெள்ளையர்களை ஒட்டு மொத்தமாக ஒழித்து கட்டுவது நோக்கம் அல்ல அவர் வெள்ளையர்களோடு விவாதத்திற்கு தயாராகவே இருந்தார்.
இலங்கையில் விடுதலை புலிகள் செய்த தவறு இது தான் அவர்களால் தங்கள் நோக்கத்தை சென்று அடையாமல் போனதற்கு காரணம் அவர்களின் வெறுப்பு வன்முறை பாதை.
வன்முறையை நம்பும் உங்களை போன்றவர்களால் நிச்சயம் மகாத்மா காந்தி அவர்களை புரிந்துகொள்ளவே முடியாது.
///////ஆயுத போராட்டம் என்பதில் சமரசம் மற்றும் விவாதத்திற்கு இடமே இல்லை, அது போகும் பாதைகளை திரும்பி வரமுடியாதபடி அழித்து விட்டு தான் முன்னேறுகிறது. ///////////////////
ஏன் திரும்பி வரவேண்டும் ? இந்த சாதி மத, வர்க்க வேற்றுமையுள்ள கீழ்த்தரமான சமூகத்திற்கு திரும்பி வரும் பாதையை அழித்துவிட்டு தான் ஒரு சமூகம் முன்னேற முடியும் .. அதில் உங்களுக்கு சந்தேகம் வேண்டாம்.
///// ஒரு விஷயம் சொல்கிறேன் உங்களின் வன்முறை போராட்டத்தில் ஒருவரை கொலை செய்கிறீர்கள் என்று வைத்துக்கொள்வோம் பின்னாளில் அவர் ஒரு அப்பாவி என்று தெரிந்தால் உங்களால் இறந்தவரின் உயிரை திருப்பி கொடுக்க முடியும்மா ? /////
முதல் விசயம், வன்முறைப் போராட்டம் என்று உங்களைப் போன்ற கொய்யாக்கள் புரளியைக் கிளப்பி விட்டு காந்தியின் கு*டிக்குப் பின்னால் குளிர்காயலாம் என்று கணக்குப் போடுகிறீர்கள்.
இங்கு நடந்த அனைத்துப் போராட்டங்களும் அறவழிப்போராட்டங்களே. சமூகத்தில் நடந்த அனைத்துப் புரட்சிகளும் அறவழிப் புரட்சியே..
மக்களுக்கு எதிரான அரசை, மக்கள் அனைவரும் பதவி விலகுமாறு கோரி நடத்தும் வேலைநிறுத்தங்கள், ஆர்ப்பாட்டங்கள் போன்றவற்றை அரசு தனது படைகளைக் கொண்டு வீழ்த்தலாம் என்று நினைக்கிறது. அதற்காக வன்முறையை அரசு தான் ஏவி விடுகிறது. அரசின் வன்முறைக்கு எதிரான மோதலை நாங்கள் புரட்சி என்கிறோம்., நீங்கள் வன்முறை என்கிறீர்கள்.
ஒருவன் அடிக்க வருகிறான் என்றால் அவனிடம் இருந்து காப்பாற்றிக் கொள்ள எதிர்த்தாக்குதல் தொடுப்பது சரியா தவறா ?.
நீங்கள் சொல்வது போல ஏதோ ஒரு யோக்கியன் அரசுப்படைகளுக்குள் இருந்து அவன் அந்த வன்முறைக்குக் கொல்லப்பட்டிருக்கலாம் என்ற வாதம் மொன்னையானது. அரசுப்படைகளில் இருப்பவன் யோக்கியனாக இருந்தால் மக்கள் மீது தாக்குதல் நடத்த மாட்டேன் என்று வரவேண்டியது தானே ?.
தற்காப்பிற்கு கொலை செய்வது இந்திய அரசியல் சாசன சட்டப்படியே சரியானது தான்.
சரியா மணி ?.
உங்கள் காந்தி சொன்னது போல , எதிரி அடிக்கவந்தால் பிட்டத்தைத் திருப்பிக் காட்டி நின்று கொண்டிருக்க முடியாது. ஏனெனில் முதுகெலும்பு இல்லாத காந்தியை – தனக்குச் சேவை செய்த காந்தியை – எந்த போலீசும் அடிக்கவில்லை. மாறாக மக்கள் மீது வெள்ளைக்காரனின் போலீசும் இராணுவமும் தாக்குதல் தொடுத்த போது எதிராகப் போராடாமல் கு*டியைத் திருப்பிக் காட்டி நிக்கச் சொன்னவர் காந்தி.
உங்களுக்குப் பிடித்திருந்தால், பிட்டத்தைக் காட்டி நில்லுங்கள் .. சப்ர்மதி ஆசிரமத்திலிருந்து மோடிவருவார். பின்னாடி பத்திரம் ..
////மகாத்மா காந்தி அவர்களின் போராட்டம் வெள்ளையர்களை ஒட்டு மொத்தமாக ஒழித்து கட்டுவது நோக்கம் அல்ல அவர் வெள்ளையர்களோடு விவாதத்திற்கு தயாராகவே இருந்தார்.//////
என்ன விவாதிச்சார் .. உனக்கு நாடு எனக்கு பேரும் புகழும் நு பேரம் பேசி உக்காந்ததுக்குப் பேரு அகிம்சையா ?
///// இலங்கையில் விடுதலை புலிகள் செய்த தவறு இது தான் அவர்களால் தங்கள் நோக்கத்தை சென்று அடையாமல் போனதற்கு காரணம் அவர்களின் வெறுப்பு வன்முறை பாதை. ///////
இதோடா .. வந்துட்ட்டாரு.. உலக அரசியல் ஆலோசகர்.. அமெரிக்கா நாய் மற்ற நாடுகளின் மீது போர் தொடுக்கும் போது, மியான்மர் ரோகிங்கியாக்கள் அந்த நாட்டை விட்டுத் துரத்தப்படும் போது ஆளும் வர்க்கத்துக்கு ஆதரவாகப் பேசிட்டிருந்த மணி இப்போ வந்து அகிம்சை பேசுறாரா ?..
யாருக்கிட்ட ரீலு விடுற கண்ணா ?.
நீங்கள் சொல்வது போல் கோக்கை வெளியேற்றியாச்சு, அடுத்து உள்நாட்டு கோக் (பொவொண்டோ) என்ன செய்ய போகிறீர்கள்… உங்கள் வாதப்படி பார்த்தால் நீங்கள் பொவொண்டோ எதிராகவும் போராட வேண்டும், ஏன் போராடவில்லை ? அடுத்து திருப்பூர் சாயப்பட்டறை மூலம் கழிவு நீர் வெளியேறி சுற்றுப்புறத்தை பெருமளவில் பாதித்து இருக்கிறது, அந்த சாயப்பட்டறைகளுக்கு எதிராக ஏன் போராடவில்லை ?
திருப்பூர் சாயப்பட்டறைக்கு எதிரா போராடீட்டு தான் இருக்காங்க மணி .. போராடுறது கம்யூனிஸ்ட்டுங்க தான் ..
ஆனா அந்த மொதலாளிமாருங்களுக்கு ஆதரவு கொடுக்குறது யாரு.. பாஜக, ஆர்.எஸ்.எஸ். கழிசடை டாக்ஸ் தான் …
அவனுங்க கிட்ட போயி சொல்லுங்க ..
கோக் – ப்வண்டோ பிரச்சினைக்கு ஏற்கனவே வினவுல கட்டுரை வந்திருக்கு அதுல போயி படிச்சு தெளிஞ்சுட்டு வாங்க மணி ..
பை தி வே, அதுல உங்களுக்கு எதாச்சும் கருத்து வேறுபாடு இருந்தால் , அங்கேயே விவாதிங்க .. இந்த திருட்டுப்பய காந்திய பத்தி மட்டும் பேசுங்க
காந்தி தாத்தா நம் தாத்தா
கருணை மிக்க நம் தாத்தா
ஆட்டுப்பாலுடன் கடலையினை
அவரும் உண்டே அன்பாக
நட்டு மக்கள் நலம் எண்ணி நமது
தாத்தா சிறை வாழ்ந்தார் ….
இஇப்படிதான் நா ஒண்ணாம் வகுப்பு படிக்கையில் சொல்லி தந்தாக…
///// இலங்கையில் விடுதலை புலிகள் செய்த தவறு இது தான் அவர்களால் தங்கள் நோக்கத்தை சென்று அடையாமல் போனதற்கு காரணம் அவர்களின் வெறுப்பு வன்முறை பாதை. ///////
அது போகட்டும் .நீங்க ஏன் இப்போது விடுதலை புலிகளை இங்கு மேற்கோள் காட்டுகிறீர்கள்? தமிழகமும் அவ்வாறு போய் தொலைய கூடாது எனவா? கவலை வேண்டாம் மணி.
நாம்தான் கோலி விளாசுவதை எச்சி வழிய பார்க்கவே நேரம் போதவில்லையே…சேச்சே நாம் அந்தளவு போகமாட்டோம்.
இந்தாள் மட்டும் இல்லையென்றால் அப்போதே இந்தியர்கள் நம்மை கொத்துகறி போட்டிருப்பார்கள், இன்றும் அமைதியான அடிமைகளை புடம் போட எவ்ளோ யூஸ்புல்லா இருக்காரு இந்தாள்.
-இது ஜேம்ஸ் கமேரோன் மைன்ட் வாய்ஸ் அவர் காந்தி சிலையை அங்கு திறந்து வைக்கும்போது.
என்ன வினவு, ஒரு பெரிய சங் மிஸ் ஆகுதே 8 இல்,
உங்களுக்கு புலிகள் மேல் என்ன காண்டோ… எனக்கு கூட அவர்கள் மேல் விமரிசனம் உள்ளது. மற்றபடி அது மணியின் விடுதலைப்புலிகள் பற்றிய கருத்துக்கு பதில் மட்டுமே, இங்கு அவர்களுக்கு அனுதாபம் தேடவில்லை. அந்த பகுதி நீக்கப்பட காரணம் விளக்கினால் நன்றாயிருக்கும், ஒரு அநாகரிக வார்த்தைக்கு மன்னிக்கவும்.
///உங்களுக்கு புலிகள் மேல் என்ன காண்டோ… எனக்கு கூட அவர்கள் மேல் விமரிசனம் உள்ளது. இங்கு அவர்களுக்கு அனுதாபம் தேடவில்லை ///
வினவு ஏன் நீக்கினார்கள் என்று தெரியவில்லை. ஆனால், மணிதான் காந்திய விட்டுட்டு விசயத்தை திசை திருப்பப் பாக்குறார்னா … நீங்களும் அவருக்குப் பின்னாடி போயி பதில் சொல்லுவீங்களா ?
மணியோட லாஜிக் சிம்பிள்.
1. காந்திக்கு அதிகமா முட்டுக் கொடுக்க முடியாது (ஏன்னா கோட்சேவோடு சிஷ்யப் புள்ளைங்களுக்காக (ஆர்.எஸ்.எஸ்., பீஜேபி)காக வாதாடும் போது மனசாட்சி உருத்தும் இல்லையா. அதோட காந்திக்கு ஆதரவா பேச ஒரு விசயமும் இல்லை.
2. அப்போ விசயத்தை திருப்பி போட்டு எஸ்கேப் ஆகுறது அடுத்த வழி. விமர்சனத்திற்குரியவர்களை ஒட்டுமொத்த புரட்சிக்கும் ஏஜெண்டுகளாக மாற்றி, புரட்சியையே கேள்வி கேட்பது. இதை இவர்கள் காலங்காலமா செஞ்சிட்டு இருக்காங்க. (உ.ம்: நீங்க முதலாளித்துவ பயங்கரவாதம் பற்றி பேசுனீங்கண்னா, அவங்க க்யூபாவை, வடகொரியாவை, சீனாவை கம்யூனிஸ்ட் நாடு என்பது அதிலிருந்து கம்யூனிசம் மோசம் நு சொல்லுவாங்க. நீங்கள் அதன் பின்னாடி போயி பதில்க் சொல்லிட்டு இருப்பீங்க ,, அவங்க பதில் சொல்லவேண்டியதுல இருந்து எஸ்கேப் ஆகிடுவாங்க ..)
ஆகவே, திசைதிருப்பல்களில் இருந்து விலகுவோம். திசை விலகாமல் கேள்விகளை நங்கூரமாக மாற்றுக்கருத்தாளர்களின் முன் இறக்குவோம். அவர்களது கருத்துக்களின் ஆன்மாவிலிருந்து கேள்விகளைக் குடைந்தெடுத்து எழுப்புவோம்.
என்னைப் பொறுத்தவரையில் குமாருக்கும் , உங்களுக்கும் சில சமயங்களில் எனக்கும் அல்லது ஆணி போன்றவர்களுக்கும் ஏற்படும் தகறாருகள் மணிகண்டன் வகையறாக்களுக்கு மிகவும் குஷியளிக்கக் கூடியவை. ஏனெனில், இத்தகைய தகராறுகளுக்கு மத்தியில் மணி வகையறாக்கள் போகிறபோக்கில் சில அவதூறுகளையோ பொய்களையோ தூற்றிவிட்டுப் போய்விடுவர். நாம் அவர்களைக் கவனிக்க மறந்து விடுவோம் ..
நன்றி
-அனானியன்
செறிவான விவாதங்கள் மூலம் ஒரு பிரச்சினையை பல கோணங்களில் இருந்து பார்ப்பது மற்றும் அவற்றின் சரி தவறுகளை சிந்திக்க வைப்பது என்ற ஒரு புதிய, ஜனநாயகமான அனுபவத்தை வழங்குகிறார்கள் வினவும் நண்பர்களும்.
ஆமாம், do not feed the troll என்ற இணைய விவாத பொன்விதியை அடிக்கடி மறந்து விடுகிறேன், நினைவுபடுத்தியமைக்கு நன்றி அனானியன், கவனித்து கொள்கிறேன்.