privacy

about us

write

contact

shop

புதிய ஜனநாயகம்

புதிய கலாச்சாரம்

e-books

Global Influence

Communication

Legal Agreement

முகப்புசெய்திதமிழிசை அக்கா ‘ஜி’ -க்கு ஒரு கடிதம் !

தமிழிசை அக்கா ‘ஜி’ -க்கு ஒரு கடிதம் !

-

ரே கழுவி கழுவி ஊத்தினாலும் கொஞ்சம்கூட கலங்காம நீங்க களமாடுறதப்  பார்க்கும்போது எனக்கு கண்ணுல ரத்தமா வடியுதுக்கா!. கட்சிய வளர்க்க நீங்க படுற பாட்டை மத்தவங்க உணர்ந்த மாதிரி தெரியலக்கா. ஆட்சிக்கு வர்றதுக்கு முன்னே ராமர், அயோத்தி, கிருஷ்ணர், பாபர்மசூதி, இந்து ஒற்றுமை அப்படீன்னு பேசிக்கிட்டு இருந்தோம். அப்பப்போ நாலு கலவரம், ரெண்டு குண்டு வெடிப்பு, சில தீ வைப்புன்னு…. நல்லா போயிட்டு இருந்ததுச்சு! ஆனா மத்தியில ஆட்சிக்கு வந்ததும் இதையெல்லாம் விட்டுட்டு, “நாங்களும் நல்லவங்கதான்”னு காட்டுறதுக்காக ‘வளர்ச்சி கிளர்ச்சினு’ பேசி நமக்கு நாமே சூனியம் வச்சுக்கிட்ட மாதிரி இருக்கு!

வரவர நம்ம ஆளுங்களுக்கும் பேசவே தெரியலக்கா. ஹைட்ரோகார்பன், ஓ.என்.ஜி.சி., ஜி.எஸ்.டி. நீட் இப்படி எந்தத் திட்டத்தை மோடி கொண்டு வந்தாலும் “எல்லாம் காங்கிரசு ஆட்சியில போட்ட திட்டம்தான்னு” சொல்லி போராடுற சனங்கள சமாளிக்கிறோம்! அதுக்கு, “காங்கிரசுக்கு நாங்கதான் மாற்றுன்னு இதுவரைக்கும் பேசிப்புட்டு இப்போ, அவன் போட்ட திட்டத்தைத்தான் நாங்க செய்யிறோம்னு சொல்றீங்களே….உங்களுக்கு சொந்தப் புத்தியே இல்லையாடா?”னு சின்னப்பயகூட நம்மள கலாய்க்கிறானுக!

நாம தமிழ்நாட்டுல இருக்குறோம் அப்படீங்கிற நினைப்பே இல்லாம, “198 கட்-ஆஃப் வாங்குன அனிதா ஏன் நீட் தேர்வுல பாஸ் பண்ண முடியல?”னு பொன்னாரு கேட்கிறாரு.

அதுக்கு ஒருத்தன், “ஒரு வார்டு கவுன்சிலரா கூட இல்லாத நிர்மலா சீத்தாராமன் ஸ்ட்ரெய்ட்டா கேபினெட் அமைச்சரா ஆயிட்டா. நீ இன்னமும் இணை அமைச்சராவே குப்பை கொட்டுறயே…ஏன்னு யோசிச்சுப்பாரு தெரியும்னு” ஸ்டேட்டஸ் போடுறான்! நாக்கைப் பிடுங்கிக்கிட்டு சாகலாம் போல இருக்குக்கா!

இந்த லட்சணத்துல திருச்சியில ஆளேயில்லாத வாடகைச் சேர்களை  வச்சுக்கிட்டு வீரவசனம் வேற பேசுறாரு!

நீங்களும் நேரங்காலம் தெரியாமல்தான் பேசுறீங்க. ‘ஆளில்லாத காட்டுல அறுக்குற வரைக்கும் லாபம்’னு ஏதோ ஓ.பி.எஸ். ஈ.பி.எஸ்.-ஐ வச்சு தமிழ்நாட்டுல ரெண்டு ஆளையாவது பிடிக்கலாம்னு மோடி மூவ் பண்றாரு. இந்த நேரத்துல போயி, “ஊழல்னு விரல் நீட்டி குற்றம் சொல்ல முடியாதவர் எங்க மோடி”னு வைகோ ரேஞ்சுல கையை முறுக்கிக்கிட்டுப் பேசுறீங்க!

“ரெண்டு களவாணிகள் கூட்டம் ஒன்னு சேருறதுக்கு பஞ்சாயத்து பண்றவன் எப்படிடா யோக்கியமா இருப்பான்?”னு பக்கத்து வீட்டுக்காரன் செருப்பால அடிக்கிற மாதிரி கேக்குறான்!

அடுத்து, “இனி தமிழகத்துக்கு மட்டுமல்ல இந்தியாவுக்கே மோடிதான் அம்மா”னு பெருமையா பேட்டி கொடுக்குறீங்க! அதுக்கு, அம்மா மோடினா அப்பா யாரு?…அமித்ஷாவானு கேட்டாகூட பரவாயில்லக்கா. “அப்போ உங்க ஆளும் கேடிதானா?”னு கேக்குறானுக! எத்தனைப் பேரை சமாளிக்கிறது… சொல்லுங்க!

அரசியல்ல மானம் ரோசம் எல்லாம் பார்க்கக் கூடாதுன்னு எனக்கு ஆறுதல் சொல்லலாம். அதுக்காக உங்கள மாதிரி சொரணையே இல்லாம என்னால இருக்க முடியலக்கா! இந்த அசிங்கத்துக்குப் பயந்துதான் குருமூர்த்தி, இல.கணேசன் மாதிரி பெரிய ‘தல’-கள் எல்லாம் பின்னால நின்னுகிட்டு உங்கள முன்னாடி தள்ளி விட்டுட்டாங்களோ!

‘கழகங்கள் இல்லா தமிழகம்னு’ நாம சொல்றோமே….அவங்க செய்யாததை நாம புதுசா என்ன செஞ்சுட்டோம்? யோசிச்சுப் பாருங்க! தனக்குப் பிடிக்காத ஆட்களை அடக்குறதுக்கு ஜெயா கஞ்சா கேஸ் போடும்! நாம வருமான வரி ரெய்டு அடிக்கிறோம்! அம்மாகிட்ட பேரு வாங்க, மண் சோறு திம்பானுக! தன் வீட்டுல தானே குண்டுவீசுறான் நம்ம ஆளு! மாநிலக் கட்சிகள்ல இருக்குற கோஷ்டிகளை மோதவிட்டு தனக்கு சாதகமா வளைக்கிற தெல்லாம் பழைய காலத்து  காங்கிரசு டெக்னிக்! டிடிவி ஃபார்முலா, அழகிரி ஃபார்முலா மாதிரி, நமக்கு மோடி ஃபார்முலானு புதுசா ஒண்ணுகூட இல்லையேக்கா! நம்ம வேலை எல்லாமே ஈயடிச்சான் காப்பியாத்தான் இருக்கு!

எங்க மோடி, பொண்டாட்டியையே விலக்கி வச்சவருன்னு நாம கெத்து காட்டுனா, எங்க அம்மா கல்யாணமே முடிக்கல-ங்குறான் அதிமுக-காரன்! மோடி டீ வித்தாருனு நாம சொன்னா, எங்க காந்தி அரை நிர்வாண பக்கிரியா திரிஞ்சாரு-ங்குறான் காங்கிரசுக்காரன்! வளர்ச்சித் திட்டங்கள்னு நாம சொல்லப்போனா அதுக்கு ஒப்பந்தம் போட்டதே நாங்கதாண்டானு காங்கிரசுக்காரன் அடிக்க வர்றான்! நாம “தீவிரவாதம்- காஷ்மீர்- தேசபக்தி” அப்படின்னு வாயத் தொறந்தா…வரலாற்றை நல்லா புரட்டிப் பாருங்கடா…காங்கிரசும் இந்தக் கருமத்தைச் சொல்லித்தானே காலத்தை ஓட்டுச்சுங்குறான் எதிர்கட்சிக்காரன்!

இவனுகள பேசி ஜெயிக்கிறமாதிரி ஒரு சரக்கும் நம்ம கிட்ட இல்லையேங்குறத நினைச்சா எனக்கு அழுகையா வருதுக்கா! கடைசியில இந்து-இந்தி, ராமர்-பாபர், துலுக்கன்-கிறிஸ்தவன் அப்படீங்குற பழைய சரக்கை விட்டா நமக்கு வேற நாதியே இல்லையேக்கா!

எனக்கு புரியுதுக்கா….நம்ம ‘இந்துராஷ்டிர’ லட்சியத்தை வெளிப்படையா பேசினா தமிழ்நாட்டுல மட்டுமில்ல இந்தியாவுல ஒருபய கூட ஓட்டுப்போட மாட்டான். அதுனாலதான் ‘வளர்ச்சி’, ‘தேசபக்தி’-னு ரூட்டை மாத்தி கோலம் போடுறோம்! ஆனா, போக்கிரி படத்துல வர்ற வடிவேலு மாதிரி, நாம எந்த   கெட்டப்புல வந்தாலும் கரெக்டா நம்மள அடையாளம் கண்டுபிடிச்சுறானுகளே! தமிழ்நாட்டுல இருக்குற பெரிய தொல்லையே இதுதான். அந்த ஈரோட்டுக் கிழவன்தான் இந்தப்பயல்கள எல்லாம் கெடுத்து வச்சிட்டுப் போயிட்டான்!

நம்ம தந்திரமும் இவனுககிட்ட எடுபட மாட்டேங்குது. 500, 1000 கொடுத்தாத்தான் ஒட்டு போடுவோம்னு சனங்களயும் பழக்கி வச்சிருக்காங்க. மத்திய அரசுன்னு நாம கெத்து காட்டினாலும் ஓ.பி.எஸ், இ.பி.எஸ். மாதிரி ஊரறிஞ்ச களவாணிகளும், பீஸ் போன கிருஸ்ணசாமி மாதிரி சில ஆளுகதான் நம்மள திரும்பிப் பாக்குறான். இதை வச்சு தமிழ்நாட்டுல நாம குப்பைகூட கொட்ட முடியாதே…என்னக்கா செய்யப் போறோம்?

எப்படிக்கா ஆட்சிய பிடிக்கப்போறோம்?

அக்கா… எனக்கு ஒரு உண்மை தெரிஞ்சாகணும்! . இந்துராஷ்டிரம் தான் நம்ம லட்சியம்னு சொல்றோமே அப்படினா என்னக்கா?

ஹைட்ரோகார்பன், ஓ.என்.ஜி.சி., பெட்ரோலிய மண்டலம், ஜி.எஸ்.டி, இப்படி வெளிநாட்டு-உள்நாட்டு முதலாளிகளுக்கு தேவையானதெல்லாம் செஞ்சு கொடுக்கிறோமே அது இந்துராஷ்டிரமா? அல்லது, மாட்டுக்கறி தின்றவன கொல்றது, மாடு வாங்கிட்டுப் போறவன வெட்டுறது, கல்புர்கி, கௌரி லங்கேஷ் மாதிரி ஆட்கள ரகசியமா கொல்றது, நம்ம கட்சிக்காரன ஜனாதிபதி- கவர்னர் ஆக்குறது, நவோதயா பள்ளியில இந்தி படிக்கச் சொல்றது… இதுதான் இந்து இந்துராஷ்டிரமுன்னு இந்த மர மண்டைக்கு இப்பத்தான் வெளங்குது.

அப்புறம் முக்கியமான ஒரு விஷயத்தை மறந்துட்டேன். பாரத மாதாவின் தலைமகனா நம்ம மோடியை வச்சிருக்கோம். சொந்தமா உழைச்சு பெத்த தாயை காப்பாத்துறதுதான் மகனுக்குப் பெருமை! ஆனா இவரு உலக நாடெல்லாம் போயி “எங்க நாட்டுல வந்து முதல்போட்டு தொழில் பண்ணுங்க. உங்களுக்கு எல்லாவசதியும் பண்ணித் தர்றோம். அப்பத்தான் எங்க நாடு வளரும்”னு பேசிக்கிட்டு திரியிறாரு! இப்படி கேட்டு மடக்குறான் ஊருல நல்லது கெட்டதுக்கு ஒத்தாசை செய்யறவன்.

இது எப்படி இருக்குன்னா, “எங்க அம்மாவுக்கு சேலை இல்ல. நீங்க ஒரு சேலை வாங்கிக் கொடுங்க சார்! எங்க அம்மாவுக்கு கண்ணு தெரியல. நீங்க ஒரு கண்ணாடி வாங்கிக் கொடுங்க சார்! எங்க அம்மாவால நடக்க முடியல. நீங்க ஒரு தள்ளுவண்டி வாங்கிக் கொடுங்க சார்!” அப்படீன்னு அம்மாவை வச்சு தெருவுல பிச்சை எடுக்குற மாதிரியே இருக்குக்கா! முடிஞ்சா தலைவருகிட்ட இதை எடுத்துச் சொல்லுங்க!

ஓய்வே இல்லாம மீடியாவுக்கு பேட்டி கொடுக்குறதுல பிசியா இருக்குற நீங்க… கிடைக்கிற கேப்புல இதையும் படிப்பீங்கன்ற நம்பிக்கையில எழுதித் தொலைச்சிட்டேன்! வெளியே சொன்னா இதெல்லாம் நமக்குத்தான் அசிங்கம். அதனாலதான் உங்களுக்கு மட்டும் ரகசியமா இதை எழுதியிருக்கேன்!

– மாறன்,
விவசாயிகள் விடுதலை முன்னணி, கம்பம்

_____________

உழைக்கும் மக்களின் இணையக் குரல் வினவு தளத்தை ஆதரியுங்கள் – சந்தா செலுத்துங்கள்!

சந்தா செலுத்தும் நண்பர்களுக்கு அந்த காலத்திற்குரிய வார செய்திப்பதிவு – புதிய கலாச்சாரம் – புதிய ஜனநாயகம் மின்புத்தகங்கள், நிகழ்வுகள் குறித்த அறிவித்தல்கள் அனுப்பப்படும். இந்தியாவில் வங்கிக் கணக்கு வைத்திருப்போர் மட்டுமே சந்தா அனுப்ப இயலும். டெபிட் கார்டு, கிரெடிட் கார்டு, நெட்பேங்கிங் மூலம் பணம் அனுப்பலாம். அனுப்புவதற்கு PayUmoney பட்டனை அழுத்தவும். வெளிநாடுகளில் வங்கிக் கணக்கு வைத்திருப்போர் எமது வங்கிக் கணக்கிற்கு நேரடியாக பணம் அனுப்பிவிட்டு, விவரத்தை உடன் அறியத்தரவும். நன்றி

  1. தமிழிசையக்கா இனி எதால அடிப்பாங்ளோ தெரியல?? இந்த இந்த சாதி பெண்ங்கள் எல்லாறும் “ரவிக்கை”போடக்கூடாதுன்னு சொன்ன பார்ப்பன பண்டார கட்சியில இருக்கிறது மானக்கேடுயில்லயா? யக்காவுக்கும் மானரசம் இருக்காதா???!

  2. பிஜேபியில் குடியிருக்கும் பிற்பட்ட மக்களே, தலித் மக்களே சத்சூத்திரர்களே…, குறிப்பாக பிஜேபியை கண்ணை மூடிக்கொண்டு ஆதரிக்கும் ஒருசில நாடார்களே…, கேளுங்க கதையை… !

    என்ன தான் நீங்க ஹிதுத்துவா சங்கிகளுக்காக விழுந்து விழுந்து பேனர் கட்டி , போஸ்டர் ஒட்டி வேலை செய்தாலும் , தமிழகத்தில் கடைக்கோடி கன்னியாகுமரி தொகுதியை வென்று கொடுத்தாலும் பதவி மற்றும் பதவி உயர்வு எல்லாம் பார்பனர்களுக்கு தான்….

    பிஜேபிக்காக நாற்பது ஆண்டுகளாக வேலை செய்யும் பொன்னருக்கு துணை மந்திரி பதவி மட்டும் தான் ! ஆனால் நேற்று வந்த நிர்மலாவுக்கு தமிழக கோட்டாவில் கேபினெட் பதவியே கிடைக்குது இல்ல…

    நீங்க எல்லாம் பிஜேபி சங்கிகளுக்கு எப்பவுமே கருவேப்பிலை தான்…இல்ல இல்ல கருவேப்பிலை கூட இல்ல…இல்ல….

    துடைத்து போடப்பட்ட டாய்லெட் டிஷு பேப்பர் தான் நீங்கள் எல்லாம் பிஜேபி சங்கிகளுக்கு…..

    மானம் உள்ளவங்க பிஜேபியை காரி துப்பிட்டுத்தான் அடுத்த வேலையை பார்பாங்க…

    அப்ப நீங்க?

    எனது முக நூல் பதிவு 3/9/2017 அன்று பதியப்பட்டது

    //ஒரு வார்டு கவுன்சிலரா கூட இல்லாத நிர்மலா சீத்தாராமன் ஸ்ட்ரெய்ட்டா கேபினெட் அமைச்சரா ஆயிட்டா. நீ இன்னமும் இணை அமைச்சராவே குப்பை கொட்டுறயே…ஏன்னு யோசிச்சுப்பாரு தெரியும்னு” ஸ்டேட்டஸ் போடுறான்! நாக்கைப் பிடுங்கிக்கிட்டு சாகலாம் போல இருக்குக்கா!//

  3. கவலை படாதிங்க மாறன்னே உங்க மனக்குமுறல அந்த அக்கா புரிஞ்சுகிச்சு. என்னநேரமும் படியாத அந்தம்மா தலைய வாரி கட்டிக்கிட்டு டெல்லிக்கி கெளம்பிரிச்சுன்னு ஒரு ரகசிய தகவல் இப்பதான் வந்துருக்கு.

    • தோழர் லெட்சுமி, எதுக்கு டெல்லிக்கு போயிருக்காங்க தமிழிசை ? தேசிய தலைவர் பதவி வாங்கவா? கரிய பூசித்தான் அனுப்பும் இந்த அமித்ஷ்-மோடி கும்பல்….!உடனடியா பிஜேபி கட்சியை விட்டு மானம் உள்ளவங்க எல்லாம் வெளியேறுவது தான் நியாயம்…

  4. இறக்கும் தருவாயில் துடிக்கும் அட்டைபோல நாடு முழுவதும் BJP – இந்து முன்னணியினர் நாட்டுமக்களின் ரத்தத்தை உறிஞ்சிக் குடித்து வருகின்றனர்.

  5. //எங்க மோடி, பொண்டாட்டியையே விலக்கி வச்சவருன்னு நாம கெத்து காட்டுனா//

    That too without”TRIPLE TALAK”

  6. //‘கழகங்கள் இல்லா தமிழகம்னு’ நாம சொல்றோமே….அவங்க செய்யாததை நாம புதுசா என்ன செஞ்சுட்டோம்? யோசிச்சுப் பாருங்க! தனக்குப் பிடிக்காத ஆட்களை அடக்குறதுக்கு ஜெயா கஞ்சா கேஸ் போடும்! நாம வருமான வரி ரெய்டு அடிக்கிறோம்! அம்மாகிட்ட பேரு வாங்க, மண் சோறு திம்பானுக! தன் வீட்டுல தானே குண்டுவீசுறான் நம்ம ஆளு!//
    நேத்துக் கூட கேரளாவுல, பி.ஜே.பி அலுவளக வாசல் புதருல, கம்யூனிஸ்ட்டு கச்சிக்காறங்க ஆயுதம் மரச்சு வச்சதா கூவுராய்ங்க.

  7. அக்காவுக்கு தம்பியின் கடிதம்!

    அன்புள்ள அக்கா
    சமீப காலமாக சமூக வலைத்தளங்களில் உங்களைப் பற்றி வறுத்தெடுக்கும் வாசகங்கள் என்னை வருத்தப்பட வைக்கின்றன. தேசியக் கட்சியின் மாநிலத் தலைவியைப் பற்றியக் கருத்துக்கள் என்னை தேம்பி அழ வைக்கின்றது. உங்களைப் பற்றிய தாக்குதல் எனக்கு ஏன் வலிக்கிறது.நீங்க தமிழச்சிங்கிற காரணந்தான். படியுங்கள் அக்கா

    தமிழைத் தாங்கிப் பிடிக்கிறது உங்களது பெயர். ஆனால் நீங்கள் தமிழைத் தாங்குகிறீர்களா என்பதுதான் என்னுடைய கேள்விகளை தாங்கிய மடல் உங்களுக்கு.

    அக்கா ! உலகத்தில் எந்தவொரு தனி மனிதனுக்கும் கொள்கை உண்டு.ஆனால் அதில் அவனுக்கு, அவன் சார்ந்த மொழிச் சமூகம் தாண்டிய சிந்தனை நிச்சயம் இருக்காது.

    நீங்கள் மட்டும் எப்படி அக்கா நம்முடைய நிறத்துக்கும், மொழிக்கும், கலாச்சாரத்திற்கும், வழிபாட்டுக்கும் சம்மந்தமில்லாத அமித்ஷாவையும், மோடியையும், ராஜ்நாத் சிங்கையும் மூச்சுக்கு முன்னூறு தடவை தலைவர், தலைவர் என்கிறீர்கள்.

    கொஞ்சம் சிந்தியுங்கள் அக்கா சாஸ்திரி நகர், காந்தி நகர், நேருஜி நகர் போன்ற ஊர்ப் பெயர்கள் நமக்கு உண்டக்கா. ஆனால் வடநாட்டில் கக்கன் நகர், காமராசர் நகர், வ உ சி நகர், என்று ஏதாவது ஒரு ஊரை காட்டிவிடுங்கள் அக்கா. சுதந்திரப் போராட்டத்தில் வ உ சி ஐயா எந்த வட இந்தியனுக்கு குறைந்தவர் அக்கா

    விவேகானந்தரையும், வீர சிவாஜியையும் கொண்டாடும் அக்கா, வைகுண்டரையும், அரசேந்திர சோழனையும் வடக்கே கொண்டாடுவானா அக்கா ? அடிமையா வாழ்றதே சுகம்னு நினைச்சிட்டீங்க என்னக்கா ?

    நிர்மலா மந்திரிப் பதவியை வாங்கிட்டு போய்ட்டார். நீங்க தாமரை மலரந்தே தீரும்ட்டு நட்டுக்கிட்டு் நிக்கிறீங்க நீங்களும், மோடியும் இந்து என்றால் உங்களுக்கு பூரி மாதாவைப் பற்றித் தெரியுமா ? இல்ல ! நீங்கள் வணங்கும் சுடலை, முண்டன், பேயன், கருமாரி, இசக்கி, மாயாண்டி, காத்தவராயன், முத்துப்பட்டன் இவர்களைப் பற்றி மோடிக்கு தெரியுமா அக்கா.

    பித்தலாட்டத்திற்கு ஒரு அளவு வேண்டாமா அக்கா ?

    அக்கா ! “வேற்றுமையில் ஒற்றுமை” என்றால் இயற்கையிலேயே வேற்றுமைதானக்கா அடிப்படையான உண்மை. இதை ஏனக்கா ஏற்றுக் கொள்ள உங்கள் மனது மறுக்கிறது.

    மார்புக்கு வரி கட்டச் சொன்ன மனுதருமத்தை நெஞ்சில ஏந்தினா என்னக்கா நியாயம் ?

    தமிழ்நாடே ‘நீட்’ டுக்கு எதிரா பத்தி எரியும் போது நீங்க மட்டும் “நீரோ” அரசியாக அதை ஆதரிச்சு பிடில் வாசிப்பது என்னக்கா நியாயம் ?

    உச்சநீதிமன்றத்திற்கு கட்டுபடணும்னு சொல்ற நீங்க பாபர் மசூதி விவகாரத்திலேயும், காவேரி மேலாண்மை விவகாரத்திலேயும் என்ன செஞ்சீங்கன்னு மனசாட்சியை தொட்டு சொல்லுங்க்க்கா ?

    சாதி, சாதியை படைச்ச கடவுள், கடவுளைத் தாங்குற புராணம் புராணத்தை தாங்குற மதம் ( இந்து )

    கல்விக் கொள்கை, அதை வைத்து நீட்டு , நீட்டை தாங்குற CBSE, CBSE மூலமாக இந்தி

    ஒரே மொழி, ஒரே வரி ஒரே மதம், ஒரே தேசம் இந்தியா

    அக்கா ! உங்கள் கையில் முறம் தருகிறேன் . பாசிச சிந்தனை ஓநாய்களை மண்டையிலிருந்து அடித்து விரட்டுங்க அக்கா ஒரு தமிழச்சியா!

    விநாயகர் சதுர்த்தியும், கிரிக்கெட் விளையாட்டும் இந்தியாவை ஓர்மைப்படுத்தி விடாது அக்கா

    காவிரி மேலாண்மை அமைப்பதில் உள்ளதக்கா
    இந்திய இறையாண்மை

    உங்கள் தலையில் சுருள் சுருளாய் இருப்பது முடியில்ல அக்கா அது உங்கள் மூளைக்கு இடப்பட்ட விலங்குகள் அக்கா

    கேனையனா இருந்த தமிழன் இப்ப கேள்வி கேட்க ஆரம்பிச்சிட்டான்கா பொட்டு பொடிசுகள் எல்லாம் இப்ப போராட ஆரம்பிச்சிட்டு அக்கா

    ஹெச் ராஜாவை நான் இப்படி உரிமையா
    சொல்ல முடியாது. ஆனா நீங்களும் பொன்னாரும் அப்படியில்லக்கா

    என் ரத்தங்கிறதுனால நிறைய ஆலோசனை சொல்லி கொஞ்சமா திட்டியிருக்கேன் அக்கா

    அக்கா ! நீங்க எடுக்க வேண்டியது தமிழ் வைத்தியம் அதில தெளிஞ்சி விடும் பா ஜ க பைத்தியம்

    நன்றி அக்கா !

    இப்படிக்கு
    இளமுருகு ராமலிங்கம்..

Leave a Reply to SHANMUGAM K பதிலை ரத்து செய்க

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க