privacy

about us

write

contact

shop

புதிய ஜனநாயகம்

புதிய கலாச்சாரம்

e-books

Global Influence

Communication

Legal Agreement

முகப்புபோலி ஜனநாயகம்போலீசுடெங்கு குற்றத்தைக் கண்டித்தால் சுறுசுறுப்பாக வழக்கு போடுமாம் செயலற்ற அரசு !

டெங்கு குற்றத்தைக் கண்டித்தால் சுறுசுறுப்பாக வழக்கு போடுமாம் செயலற்ற அரசு !

-

க்கள் அதிகாரம் அமைப்பின் சார்பாக “ஜெயா எப்படி செத்தால் நமக்கென்ன? மக்கள் சாகிறார்கள்! டெங்கு, மலேரியா – மரணங்களுக்கு செயலற்ற இந்த அரசுதான் காரணம்!” என்ற அடிப்படையில் தமிழகத்தின் பல்வேறு இடங்களில் சுவரொட்டிகள் ஒட்டப்பட்டு பிரச்சாரம் செய்யப்பட்டது.

அந்த வகையில் விருத்தாச்சலம் பாலக்கரை பேருந்து நிலையத்திலும் சுவரொட்டிகள் ஒட்டப்பட்டிருந்தது. தமிழகம் முழுவதும் மரணபீதியில் உள்ள சூழலில் சுவற்றின் அழகு கெட்டுவிட்டதாக கூறி மக்கள் அதிகாரத்தின் மாநில ஒருங்கிணைப்பாளர் தோழர் ராஜூ மற்றும் விருதை பகுதி தோழர் முருகானந்தம் ஆகியோர் மீது சப்-இன்ஸ்பெக்டர் வினாயக முருகன் வழக்கு பதிவு செய்துள்ளார்.

தமிழகத்தில் முழுமையாக செயலற்றுப் போன அரசு, போராடுபவர்களை குறிவைத்து வழக்கு போடுவது அவர்களின் போராட்டங்களை முடக்குவது ஆகியவற்றை மட்டும் செய்கிறது.

( படங்களைப் பெரிதாகப் பார்க்க அவற்றின் மீது அழுத்தவும் )

தகவல் :
மக்கள் அதிகாரம்,
விருத்தாச்சலம். தொடர்புக்கு – 81108 15963

_____________

உழைக்கும் மக்களின் இணையக் குரல் வினவு தளத்தை ஆதரியுங்கள் – சந்தா செலுத்துங்கள்!

சந்தா செலுத்தும் நண்பர்களுக்கு அந்த காலத்திற்குரிய வார செய்திப்பதிவு – புதிய கலாச்சாரம் – புதிய ஜனநாயகம் மின்புத்தகங்கள், நிகழ்வுகள் குறித்த அறிவித்தல்கள் அனுப்பப்படும். இந்தியாவில் வங்கிக் கணக்கு வைத்திருப்போர் மட்டுமே சந்தா அனுப்ப இயலும். டெபிட் கார்டு, கிரெடிட் கார்டு, நெட்பேங்கிங் மூலம் பணம் அனுப்பலாம். அனுப்புவதற்கு PayUmoney பட்டனை அழுத்தவும். வெளிநாடுகளில் வங்கிக் கணக்கு வைத்திருப்போர் எமது வங்கிக் கணக்கிற்கு நேரடியாக பணம் அனுப்பிவிட்டு, விவரத்தை உடன் அறியத்தரவும். நன்றி