privacy

about us

write

contact

shop

புதிய ஜனநாயகம்

புதிய கலாச்சாரம்

e-books

Global Influence

Communication

Legal Agreement

முகப்புபார்வைஇணையக் கணிப்புஇனிமேல் சினிமாவை எப்படிப் பார்ப்பீர்கள் ? கருத்துக் கணிப்பு

இனிமேல் சினிமாவை எப்படிப் பார்ப்பீர்கள் ? கருத்துக் கணிப்பு

-

சினிமா கிசுகிசு செய்திகள் இல்லையென்றால் தமிழகத்தில் பல பத்திரிகைகள் மூடப்பட்டிருக்கும். சமூக வலைத்தளங்கள் வந்த பிறகு கிசுகிசுக்கள் எப்போதாவதுதான் பேசு பொருளாக மாறுகின்றன. மற்றபடி சினிமா விமர்சனங்கள், சினிமா உலகின் சங்கப் பிரச்சினைகள் இப்போது கடைசியாக கட்டண உயர்வு போன்ற  செய்திகள் அதிகம் பேசப்படுகின்றன.

இணையத்தின் காலத்தில் டொரன்ட் தரவிறக்கம் பரவலாக பயன்பாட்டிற்கு வந்த பிறகு சினிமா தொழில் சுருங்கி விட்டதாக சினிமா துறையினர் புலம்புகின்றனர். மறுபுறம் மக்களோ மல்டிபிளக்ஸ் திரையரங்குகளில் பார்க்கிங், பாப்கார்ன், அதிக விலை கட்டணம் என குடும்பமாக படம் பாரக்க முடியாத அளவு கட்டணங்கள் அதிகம் என்று புகார் செய்கின்றனர்.

குறுகிய காலத்திலேயே ஒரு லாட்டரி பரிசு  போல பணம் பார்த்த சில பல நட்சத்திரங்கள், நிறுவனங்கள், தயாரிப்பாளர்கள் இப்போது போட்ட பணத்தை விட பல மடங்கு எடுப்பதற்கு சிரமப்படுகின்றனர். இருப்பினும் ஒரு படம் ஓடாவிட்டாலும் மூன்று நாள் திரையரங்கில் இருந்தாலே மற்ற மொழி உரிமை, வெளிநாடு – ஆடியோ – டிவி உரிமை என நன்றாகத்தான்  இலாபம் பார்க்கின்றனர்.

ஆனால் அந்த மூன்று நாட்களுக்கு திரையரங்குகளுக்கு மக்கள் வந்தாக வேண்டுமே? மோடியின் ஜி.எஸ்.எடி வந்த பிறகு டிக்கெட் விலை எகிற ஆரம்பித்துவிட்டது. அத்தோடு தமிழக அரசின் கேளிக்கை வரி எல்லாம் சேர்ந்து தங்களுக்கு இலாபம் இல்லை என்று தயாரிப்பாளர்கள், வினியோகஸ்தர்கள், திரையரங்க உரிமையாளர்கள் பிலாக்கணம் பாட ஆரம்பித்தனர்.

இது குறித்து பல சுற்று பேசி தற்போது 25% கட்டண உயர்வை தமிழக அரசு அனுமதித்திருக்கிறது. இதோடு ஜி.எஸ்.டி வரி, கேளிக்கை வரி எல்லாம் சேர்த்து மல்டி பிளக்சில் சுமார் 200 ரூபாய்க்கு மேலாகவும் மற்ற திரையங்குகளில் 100 ரூபாய்க்கு அதிகமாகவும் கட்டணம் இருக்கலாம். இன்னும் இதில் குழப்பம் தீர்ந்த பாடில்லை.

எப்படிப் பார்த்தாலும் சினிமா கட்டணம் இருமடங்கு உயரப்போகிறது எனும் போது இனி மக்கள் சினிமாவை எப்படிப் பார்ப்பார்கள்?

சினிமா கட்டணம் குறைவாக அதாவது நியாயமான விலையில் இருந்தால்தான் மக்கள் அதிகம் திரையரங்கிற்கு வருவார்கள். மாறாக குறைவான நபர்கள் அதிக டிக்கெட் விலை கொடுத்து வந்தால் போதும் என்ற மனநிலையில் சினிமா முதலாளிகள் இருக்கின்றனர். காசு இருந்தால்தான் கல்வி, மருத்துவம், மின்சாரம் என்றான பிறகு சினிமாவையும் அப்படி ஆக்கி விட்டார்கள்.

ஆனால் மற்றவற்றை இணையத்தில் பெற முடியாது! சினிமாவைப் பெற முடியுமே! ஏற்கனவே தமிழக மக்கள் தொலைக்காட்சிகளில் காட்டப்படும் சினிமாவைப் பார்த்தாலே போதும் என்ற மனநிலையில் திரையரங்கிற்கு செல்லும் இளைஞர்கள், ரசிகர்கள் இனி என்ன செய்வார்கள்? அதிக கட்டணம் கொடுக்க முடியுமா? மக்கள் கருத்தென்ன? வாக்களியுங்கள்!

இனிமேல் நீங்கள் சினிமாவை எப்படிப் பார்ப்பீர்கள்?

  • தமிழ் ராக்கர்ஸ் – டொரண்ட் – செல்பேசி
  • தொலைக்காட்சிகள்
  • மல்டிபிளக்ஸ் திரையரங்குகள்
  • சாதாரண திரையரங்குகள்
  • பார்க்க மாட்டேன்

_____________

இந்தக் கருத்துக்கணிப்பு உங்களுக்குப் பயனளித்ததா?

உழைக்கும் மக்களின் இணையக் குரல் வினவு தளத்தை ஆதரியுங்கள் – சந்தா செலுத்துங்கள்!

சந்தா செலுத்தும் நண்பர்களுக்கு அந்த காலத்திற்குரிய வார செய்திப்பதிவு – புதிய கலாச்சாரம் – புதிய ஜனநாயகம் மின்புத்தகங்கள், நிகழ்வுகள் குறித்த அறிவித்தல்கள் அனுப்பப்படும். இந்தியாவில் வங்கிக் கணக்கு வைத்திருப்போர் மட்டுமே சந்தா அனுப்ப இயலும். டெபிட் கார்டு, கிரெடிட் கார்டு, நெட்பேங்கிங் மூலம் பணம் அனுப்பலாம். அனுப்புவதற்கு PayUmoney பட்டனை அழுத்தவும். வெளிநாடுகளில் வங்கிக் கணக்கு வைத்திருப்போர் எமது வங்கிக் கணக்கிற்கு நேரடியாக பணம் அனுப்பிவிட்டு, விவரத்தை உடன் அறியத்தரவும். நன்றி