privacy

about us

write

contact

shop

புதிய ஜனநாயகம்

புதிய கலாச்சாரம்

e-books

Global Influence

Communication

Legal Agreement

முகப்புபோலி ஜனநாயகம்அதிகார வர்க்கம்கந்துவட்டி படுகொலை : கலெக்டர் - எஸ்.பியை கைது செய் ! நெல்லை ஆர்ப்பாட்டம் !

கந்துவட்டி படுகொலை : கலெக்டர் – எஸ்.பியை கைது செய் ! நெல்லை ஆர்ப்பாட்டம் !

-

“கந்துவட்டி கும்பலுக்கு துணை நின்ற கிரிமினல் கலெக்டரை மக்கள்தான் தண்டிக்கவேண்டும் – நெல்லையில் கலெக்டரை கைதுசெய்யும் போராட்டம்.”
என 26.10.2017 காலை 11.00 மணியளவில் மக்கள் அதிகாரம் அமைப்பின் சார்பாக நெல்லை கலெக்டரை கைது செய்யும் முற்றுகைப் போராட்டம் நடந்தது.

கந்துவட்டி கொடுமை காரணமாக இசக்கிமுத்து தன் குடும்பத்துடன் தீக்குளித்திருந்த நிலையில்  இது படுகொலை என்றும், கொலைக் குற்றவாளிகள் மாவட்ட ஆட்சியர், போலீசுத்துறை உயர் அதிகாரிகள்தான் என்றும், இவர்களை மக்களே அதிகாரத்தை கையில் எடுத்துதான் தண்டிக்க வேண்டும் என்று, நகர் முழுவதும் சுவரொட்டிகள் ஒட்டப்பட்டன. வழக்கம்போல் பல இடங்களில் காக்கிகள் ஆட்களை ஏவி சுவரொட்டிகளை கிழித்தனர்.

நேற்று காலையில் உயிருக்குப் போராடி வந்த இசக்கிமுத்துவும் பாளையங்கோட்டை ஹைகிரவுண்டு மருத்துவமனையில் உயிரிழந்தார். அதை குடும்பத்தினரிடம் சொல்லாமல் மூடிமறைத்து உடலைப் பெற்றுக்கொள்வதாக கையெழுத்து வாங்க முயன்றனர் அதிகாரிகள்.

ஏற்கனவே இறந்த மூவரின் உடல்களையும் ஊருக்கு அனுப்பாமல் சத்தமில்லாமல் நெல்லையிலேயே எரித்துச் சாம்பலாக்கி விட்டனர். இப்பொழுதும் அதே சதியை அரங்கேற்றுவதைக் கண்டு உடனே உறவினர்களுடன் மருத்துவமனை முன்பு சாலை மறியல் செய்யப்பட்டது. அரசு அதிகாரிகள் உடனே தோழர்களையும், உறவினர்களையும் கைது செய்து அப்புறப்படுத்திவிட்டு, இசக்கிமுத்துவின் உடலையும் நெல்லையிலேயே எரித்தனர்.

மாலையில் தோழர்களை விடுவித்தது போலீசு. கொலைக் குற்றவாளிகளிடமே மனு கொடுத்து கெஞ்சுவது, கந்துவட்டி கும்பல் மீது நடவடிக்கை எடுக்கும் படி வலியுறுத்துவது என்று பலரும் செய்துவரும் நிலையில்,  இந்த அதிகார வர்க்க கிரிமினல்கள்தான் முதன்மை குற்றவாளிகள் என்பதை உணர்த்தும் விதமாக கலெக்டரை கைது செய்வோம் என்று இன்று  களமிறங்கினோம்.

மக்கள் அதிகாரம் நெல்லை மண்டல ஒருங்கிணைப்பாளர் தோழர் ஆதி தலைமையில் காலை 11.00 மணியளவில் நெல்லை கொக்கிரக்குளம் பேருந்து நிறுத்தத்தில் பிரசுரம், முழக்க அட்டை, பேனருடன் பேருந்திலிருந்து தோழர்கள் இறங்கியதும் பாய்ந்து வந்து சுற்றிவளைத்தது போலீசு. பேனரைக்கூட முழுமையாக விரிக்கமுடியாத நிலையில் சாலையில் அமர்ந்தபடி அங்கேயே போராட்டம் தொடங்கியது.

மக்கள்தான் அதிகாரத்தை கையில் எடுத்து அரசை, கலெக்டரை, SP யை கைது செய்து தண்டிக்கவேண்டும் என்பதை வலியுறுத்தி தோழர்கள் முழக்கமிட்டனர்.  “விடாதே, இழுத்து ஏற்று” என்று காக்கிகள் கிளப்பிய கூச்சல் அதிகமாக இருந்தது. யார் வந்திருப்பது என்ன கோரிக்கை என்று செய்திசேகரிக்க ஓடிவந்த மீடியா செய்தியாளர்களையும் ஒதுக்கித் தள்ளியது காவல்துறை.

ஒவ்வொருவராக இழுத்துச்சென்று வேனில் ஏற்றியது போலீசு. கீழே சிதறிய பிரசுரத்தைக்கூட பொதுமக்கள் எடுத்துவிடாதபடி காத்து நின்றனர் காக்கிகள். அதையும் மீறி எடுக்க வந்த பெரியவரை திட்டி விரட்டினார் ஒரு உயர் அதிகாரி. அதேநேரம் ஒரு தோழர் பேருந்து நிறுத்தத்தில் இருந்தவர்களிடம் பிரசுரம் தந்துகொண்டிருந்தார். அவரையும் பாய்ந்துசென்று பிடித்து தனி ஜீப்பில் ஏற்றி கொண்டு சென்றனர்.

கந்துவட்டிக்காரனை பிடிக்கவோ, கிரிமினல்களை தண்டிக்கவோ துப்பற்ற போலீசு போராடுபவர்களை மட்டும் பாய்ந்து போய் பிடிப்பதை எதிர்திசையிலிருந்து பார்த்து வெறுப்புடன் திட்டினர் பொதுமக்கள். அப்பொழுதே சிலர் கசங்கியிருந்த பிரசுரத்தை எடுத்து நேராக்கி பொறுமையாக படித்தனர். 50 -க்கும் மேற்பட்ட தோழர்கள் கைதாகியுள்ளனர்.

குறைந்தபட்சம் யார்? என்ன? என்றுகூட சுற்றியுள்ள மக்கள் பார்த்துவிடாதபடி ஜனநாயகத்தை கட்டிக்காத்துள்ள நெல்லை மாவட்ட நிர்வாகத்திற்கு அதே பாணியில் பதிலடி தந்துள்ளனர் தோழர்கள்.

கைதாகியுள்ள தோழர்கள் கலெக்டரை கைது செய்யும்வரை சிறைப்பட்ட நிலையிலும் போராட்டம் தொடரும் என்றும் அதுவரை உணவருந்துவதோ,  போலீசுக்கு கைதாகியுள்ளவர்கள் பெயர், முகவரி தந்து ஒத்துழைப்பதோ இல்லை என்றும் அறிவித்துள்ளனர்.

( படங்களைப் பெரிதாகப் பார்க்க அவற்றின் மீது அழுத்தவும் )

தோழர்கள் போராட்டத்தின் போது எழுப்பிய முழக்கம்:

நரபலி! நரபலி!
கந்துவட்டிக் கொடுமைக்கு
இசக்கிமுத்துவின் குடும்பமே
பால்மணம்மாறா பிஞ்சுகளுமே
நரபலி! நரபலி!

வளர்ப்பது யார்? வளர்ப்பது யார்?
கந்துவட்டிக் கும்பலை
கட்டப்பஞ்சாயத்து ரவுடிகளை
கஞ்சா, போதை வியாபாரிகளை
வளர்ப்பது யார்? வளர்ப்பது யார்?

தீர்வல்ல! தீர்வல்ல!
படுகொலையை செய்துள்ள
கலெக்டரிடமே மனுக்கொடுப்பது
தீர்வல்ல! தீர்வல்ல!

தண்டிக்காது! தண்டிக்காது!
உழைக்கும் மக்களை கொன்றுவரும்
அதிகாரவர்க்க கிரிமினல்களை
எந்த கோர்ட்டும் தண்டிக்காது!

படுகொலை! படுகொலை!
மக்கள்விரோத கொள்கையால்
விவசாயியும் படுகொலை!
மாணவனும் படுகொலை!
தொழிலாளியும் படுகொலை!
பிஞ்சுக் குழந்தையும் படுகொலை!
இது அரசே நடத்தும் படுகொலை!

அணிதிரள்வோம்! அணிதிரள்வோம்!
மக்களே அதிகாரத்தை
கையில் எடுப்பதற்கு
நாட்டை காப்பதற்கு
அணிதிரள்வோம்! அணிதிரள்வோம்!

அழுகிநாறுது! அழுகிநாறுது!
ஒட்டுமொத்த அரசுக்கட்டமைப்பும்
மக்களைக்காக்க வக்கற்று
தோற்றுப்போய் அழுகிநாறுது!

ஒரே தீர்வு! ஒரே தீர்வு!
உழைக்கும் மக்கள் களமிறங்கி
வீதியில் வைத்து விசாரித்து
மக்கள் மன்றத்தால் தண்டிப்பதுதான்
ஒரே தீர்வு! ஒரே தீர்வு!

விசாரணை வைப்போம்! விசாரணை வைப்போம்!
ஐந்துமுறை மனுதந்தும்
அசையாத ஆட்சியரை
கலெக்டர் சந்தீப் நந்தூரியை
SP அருண்சக்திகுமாரை
ஆய்வாளர் முருகனை
தெருவில் நிறுத்தி விசாரணை வைப்போம்!

விடமாட்டோம்! விடமாட்டோம்!
கந்துவட்டிக் கும்பலை
நத்திப்பிழைக்கும் நாய்களை
போலீசு நாய்களை
மாவட்ட கலெக்டரை
அதிகார வர்க்க கிரிமினல்களை
தண்டிக்காமல் விடமாட்டோம்!

தகவல் :
மக்கள் அதிகாரம்,

நெல்லை – மண்டலம்.

_____________

உழைக்கும் மக்களின் இணையக் குரல் வினவு தளத்தை ஆதரியுங்கள் – சந்தா செலுத்துங்கள்!

சந்தா செலுத்தும் நண்பர்களுக்கு அந்த காலத்திற்குரிய வார செய்திப்பதிவு – புதிய கலாச்சாரம் – புதிய ஜனநாயகம் மின்புத்தகங்கள், நிகழ்வுகள் குறித்த அறிவித்தல்கள் அனுப்பப்படும். இந்தியாவில் வங்கிக் கணக்கு வைத்திருப்போர் மட்டுமே சந்தா அனுப்ப இயலும். டெபிட் கார்டு, கிரெடிட் கார்டு, நெட்பேங்கிங் மூலம் பணம் அனுப்பலாம். அனுப்புவதற்கு PayUmoney பட்டனை அழுத்தவும். வெளிநாடுகளில் வங்கிக் கணக்கு வைத்திருப்போர் எமது வங்கிக் கணக்கிற்கு நேரடியாக பணம் அனுப்பிவிட்டு, விவரத்தை உடன் அறியத்தரவும். நன்றி

விவாதியுங்கள்

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க