privacy

about us

write

contact

shop

புதிய ஜனநாயகம்

புதிய கலாச்சாரம்

e-books

Global Influence

Communication

Legal Agreement

முகப்புமறுகாலனியாக்கம்தொழிலாளர்கள்விருதை - நெல்லிக் குப்பத்தில் தமிழ்நாடு மின் ஊழியர்கள் ஜனநாயக முன்னணி

விருதை – நெல்லிக் குப்பத்தில் தமிழ்நாடு மின் ஊழியர்கள் ஜனநாயக முன்னணி

-

தமிழ்நாடு மின் ஊழியர்கள் ஜனநாயக முன்னணி  சார்பாக விருத்தாசலம், நெல்லிக்குப்பம் கோட்டங்களில் கொடியேற்று விழா!

மிழக அரசின் மின் துறையில் மத்திய சங்கங்கள், திராவிட, சாதிய சங்கங்கள் என கணக்கற்ற வகையில் பல சங்கங்கள் இருந்தாலும், அத்துறையில் பணிபுரியும் ஊழியர்களின் உரிமை பறிப்புகளையோ, லஞ்சம், ஊழல் முறைகேடுகளையோ, மின் துறைச் சீர்திருத்தங்கள் என்ற பெயரில் திணிக்கப்படும் கார்ப்பரேட் கொள்கைகளையோ எதிர்த்து முறியடிக்க திராணியற்ற சங்கங்களாகவே உள்ளன.

மின் துறையில் உள்ள மிகப்பெரிய சங்கமான சி.ஐ.டி.யூ. சங்கத்தின் சமரசப் போக்குகளால் அதிகரித்து வரும் வேலைப் பளு, ஊதியப் பிரச்சினை போன்ற அடிப்படைப் பிரச்சினைகள் கூட தீர்க்கப்படாத நிலையில் கடந்த 19.03.2017 அன்று பு.ஜ.தொ.மு. இணைப்புச் சங்கமான தமிழ்நாடு மின் ஊழியர்கள் ஜனநாயக முன்னணி தொழிற்சங்கம் கடலூர் மின் வட்டத்தில் கொடி அறிமுகத்துடன் உதயமானது.

அதன் தொடர்ச்சியாக கடந்த 25.09.2017 அன்று நெல்லிக்குப்பம் கோட்டத்திலும், 10.10.2017 அன்று விருத்தாசலம் கோட்டத்திலும் கொடியேற்று விழா நடத்தப்பட்டது

நெல்லிக்குப்பம் கோட்டத்தில், தமிழ்நாடு மின் ஊழியர்கள் ஜனநாயக முன்னணியின் கடலூர் மாவட்டப் பொருளாளர் தோழர் ஜோதிபாசு தலைமையில் கொடியேற்று விழா நடந்தது. விழாவில் மாநில ஒருங்கிணைப்பாளர் தோழர் ஸ்ரீதர் அவர்கள் கொடியேற்றி துவக்க உரையாற்றினார்.

புஜதொமு இணைப்பு சங்கமான நெல்லிகுப்பம் லோட்டே மிட்டாய் ஆலைத் தொழிலாளர்கள் சங்க செயலாளர் தோழர் கந்தசாமி, தமிழ்நாடு புஜதொமு மாநில இணைச் செயலாளர் தோழர். பழனிசாமி, புதுச்சேரி புஜதொமு மாநில பொதுச் செயலாளர் தோழர் லோகநாதன், மக்கள் உரிமைப் பாதுகாப்பு மையத்தின் கடலூர் மாவட்டத் தலைவர் தோழர் செந்தில்குமார் ஆகியோர் சிறப்புரை நிகழ்த்தினர்.

விருத்தாசலம் கோட்டத்தில், தமிழ்நாடு மின் ஊழியர்கள் ஜனநாயக முன்னணியின் கடலூர் மாவட்டத் தலைவர் தோழர் சண்முகம் தலைமையில் கொடியேற்று விழா நடந்தது. விழாவில் மாநில ஒருங்கிணைப்பாளர் தோழர் ஸ்ரீதர் அவர்கள் கொடியேற்றி துவக்க உரையாற்றினார். மக்கள் அதிகாரம் அமைப்பின் மாநில ஒருங்கிணைப்பாளர் தோழர் ராஜூ மற்றும் புதுச்சேரி புதிய ஜனநாயகத் தொழிலாளர் முன்னணியின் மாநில பொதுச் செயலாளர் தோழர் லோகநாதன் ஆகியோர் சிறப்புரை நிகழ்த்தினர்.

பஞ்சப்படியைக் குறைக்கும் மின்வாரியத்தைக் கண்டிப்பது, வேலைப்பளுவற்ற ஊதிய உயர்வைப் பெறுவது, ஊதிய உயர்வுப் பிரச்சினையை திசைதிருப்ப பணியிட மாற்றம் என்ற நிர்வாகத்தின் தந்திரத்தை முறியடிப்பது, 30,000 -த்திற்கும் மேற்பட்ட காலியிடங்களை, தற்போதுள்ள ஒப்பந்த ஊழியர்கள் மற்றும் ஐ.டி.ஐ. – டிப்ளமோ படித்த அப்ரண்டீஸ் முடித்த இளைஞர்கள் மூலம் நிரப்பி, மக்களுக்கான சேவையைத் தொய்வின்றி நடத்த நிர்வாகத்தை வலியுறுத்திப் போராடுவது ஆகிய கோரிக்கைகளை விளக்கி தோழர்கள் உரை நிகழ்த்தினர்.

மின் துறையில் அதிகரித்து வரும் வேலைப்பளு, ஊழியர்கள் பற்றாக்குறை, ஊதிய உயர்வு உள்ளிட்ட பிரச்சினைகள் தொழிலாளர்கள் சார்ந்த பிரச்சினை மட்டுமல்ல; அவை அரசின் மக்கள் விரோதக் கொள்கையுடன் இணைந்தது. மக்கள் பிரச்சினைகளுடன் இணைந்தது. மேலும், இதை எதிர்கொள்ள தொழிலாளர் ஒற்றுமை என்பது மட்டுமல்ல, உழைக்கும் மக்களுடன் இணைந்த வர்க்க ஒற்றுமை தான் தேவை என்பதை பல்வேறு உதாரணங்களுடன் தோழர்கள் தங்களது உரையில் விளக்கினர்.

மின் துறையில் உள்ள பிரச்சினைகளை, இலவச மின்சாரம், மீட்டர் பொருத்துவது என்பன போன்ற விவசாயிகள் பிரச்சினையுடன் இணைத்துப் பேசியது தொழிலாளர் மத்தியில் அல்லாது, பொதுமக்கள் மத்தியிலும் வரவேற்பைப் பெற்றது.

எனவே, மின் துறையில் உள்ள பிரச்சினைகளை, உழைக்கும் வர்க்கப் பிரச்சினைகளோடு இணைத்துக் கொண்டு செல்லும் அரசியல் போராட்டங்கள் மூலம் மட்டுமே தீர்வு காண முடியும் என்பதை தொழிலாளர்கள் தெளிவு பெறும் வகையில் அமைந்தது இந்த கொடியேற்று விழா நிகழ்ச்சிகள்.

( படங்களைப் பெரிதாகப் பார்க்க அவற்றின் மீது அழுத்தவும் )

தகவல் :
புதிய ஜனநாயகத் தொழிலாளர் முன்னணி,
புதுச்சேரி. தொடர்புக்கு: 95977 89801

_____________

உழைக்கும் மக்களின் இணையக் குரல் வினவு தளத்தை ஆதரியுங்கள் – சந்தா செலுத்துங்கள்!

சந்தா செலுத்தும் நண்பர்களுக்கு அந்த காலத்திற்குரிய வார செய்திப்பதிவு – புதிய கலாச்சாரம் – புதிய ஜனநாயகம் மின்புத்தகங்கள், நிகழ்வுகள் குறித்த அறிவித்தல்கள் அனுப்பப்படும். இந்தியாவில் வங்கிக் கணக்கு வைத்திருப்போர் மட்டுமே சந்தா அனுப்ப இயலும். டெபிட் கார்டு, கிரெடிட் கார்டு, நெட்பேங்கிங் மூலம் பணம் அனுப்பலாம். அனுப்புவதற்கு PayUmoney பட்டனை அழுத்தவும். வெளிநாடுகளில் வங்கிக் கணக்கு வைத்திருப்போர் எமது வங்கிக் கணக்கிற்கு நேரடியாக பணம் அனுப்பிவிட்டு, விவரத்தை உடன் அறியத்தரவும். நன்றி

விவாதியுங்கள்

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க