முதலாளித்துவம் – ஒரு பேய்க்கதை !
முதலாளித்துவத்தின் இலாப வெறிக்கு இயற்கை அழிக்கப்படுகிறது ! எங்கும் காற்று மாசுபாடு, நீர் மாசுபாடு ! மனிதர்கள் வாழத் தகுதியற்ற இடமாக பூமி மாற்றப்படுகிறது !
நன்றி: cartoon movement ஓவியர்: Maram Heshan
கோடிக்கணக்கான மக்கள் வீடில்லாமல் இருக்கையில், பல வீடுகள் கட்டப்பட்டு விற்கப்படாமல் தேங்கி நிற்கின்றன. இது தான் முதலாளித்துவத்தின் இயல்பான பண்பு. இதுவே முதலாளித்துவத்தை வீழ்ச்சியை நோக்கி உந்தித் தள்ளும் அதன் உள்முரண்பாடு.
திருடப்பட்ட நமது உழைப்பு தான் மூலதனமாக முதலாளிகளின் வசம் குவிந்திருக்கிறது!. நமது உரிமையை நாம் கேட்கும் போது, அவர்கள் நம்மையே குற்றஞ்சாட்டுகிறார்கள்!
கடந்த 2008ம் ஆண்டு ஏற்பட்ட பொருளாதாரப் பெருவீழ்ச்சிக்குப் பின்னர் தான் மார்க்ஸின் மூலதனத்தில் பொதிந்திருக்கும் உண்மை முதலாளித்துவவாதிகளின் மண்டையில் உறைத்தது! வால்வீதி எழுச்சியின் போது அதனை எண்ணி பயங்கொள்ளச் செய்தது!
ஓவியர்: கார்லோஸ் லடூஃப் ( Carlos Latuff ) – பிரேசில்
2008-ம் ஆண்டு அமெரிக்க பொருளாதார நெருக்கடியின் போது திவாலான கோல்டுமென் சாக்ஸ் எனும் முதலீட்டு வங்கி நிறுவனத்திற்கு அமெரிக்க அரசு பண உதவி செய்து தூக்கிவிட்டது. அந்நிறுவனத்தால் திவாலான மக்கள் நடுத்தெருவில்! நம்புங்கள் முதலாளித்துவம் வண்ணமயமானது !
நன்றி: cartoon movement ஓவியர்: எலிக்கோட்ரிஸ்ட்
முதலாளித்துவ வெறியாட்டத்தின் கோர விளைவுகளிலிருந்து மீள ஒரே தீர்வு – கம்யூனிசமே !