கார்ட்டூனிஸ்ட் பாலாவை கைது செய்ததைக் கண்டித்து தமிழகமெங்கும் மக்கள் அதிகாரம் ஆர்ப்பாட்டம்!
கந்துவட்டி கொடுமைக்கு இசக்கிமுத்து குடும்பத்தையே பலி வாங்கிய இந்த அரசை கண்டித்து கார்ட்டூன் வரைந்த பாலா அவர்கள் கைது செய்யப்பட்டதைக் கண்டித்து மக்கள் அதிகாரம் அமைப்பின் சார்பில் 06.11.2017 (இன்று) தமிழகத்தில் பல இடங்களில் ஆர்ப்பாட்டம் நடத்தப்பட்டது.
மதுரையில்…
இசக்கிமுத்து மரணத்திற்கு காரணமான நெல்லை எஸ் பி, கலெக்டர் மற்றும் எருமைத்தோல் எடப்பாடியை கைது செய்! கார்ட்டூனிஸ்ட் பாலாவை நிபந்தனையின்றி விடுதலை செய் ! என்ற முழக்கத்தை முன்வைத்து மக்கள் அதிகாரம், மதுரை மண்டல ஒருங்கிணைப்பாளர் தோழர் குருசாமி தலைமையில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இந்த ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்ட இருபது தோழர்கள் கைது செய்யப்பட்டு மதுரை திலகர் திடல், காவல் நிலையத்தில் அடைத்து வைக்கப்பட்டுள்ளனர்.
( படங்களைப் பெரிதாகப் பார்க்க அவற்றின் மீது அழுத்தவும் )
***
திருச்சியில்…
கந்து வட்டி – போலிஸ் – கலெக்டர் கொடுமையால் தீயில் கருகியது இசக்கிமுத்துவின் குடும்பம் ! இந்த அக்கிரம அராஜகங்களுக்கு முடிவுகட்டுவோம் !! கார்டூனிஸ்ட் பாலாவை விடுதலை செய்! என்ற முழக்கத்தின் கீழ் திருச்சி மக்கள் அதிகாரம் சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
( படங்களைப் பெரிதாகப் பார்க்க அவற்றின் மீது அழுத்தவும் )
***
விருத்தாச்சலத்தில்…
மக்கள் அதிகாரம் சார்பில் விருத்தாச்சலம் பகுதியில் கார்ட்டூனிஸ்ட் பாலாவை விடுதலை செய்! என்ற முழக்கத்தின் அடிப்படையில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
( படங்களைப் பெரிதாகப் பார்க்க அவற்றின் மீது அழுத்தவும் )
மக்கள் அதிகாரம்,
தமிழ்நாடு.