privacy

about us

write

contact

shop

புதிய ஜனநாயகம்

புதிய கலாச்சாரம்

e-books

Global Influence

Communication

Legal Agreement

முகப்புபார்வைஇணையக் கணிப்புபணமதிப்பழிப்பின் ஓராண்டு ! வீடியோ - கருத்துக் கணிப்பு

பணமதிப்பழிப்பின் ஓராண்டு ! வீடியோ – கருத்துக் கணிப்பு

-

வம்பர் 8, 2016 நள்ளிரவில் இருந்து 500, 1000 ரூபாய் நோட்டுக்கள் செல்லாது என மோடி அறிவித்தார். மக்களின் தலையில் இடியாக இறங்கிய இந்த அறிவிப்பு அனைவரையும் வங்கி வாசலில் கொண்டுபோய் நிறுத்தியது.

இந்தியாவெங்கும் பல இலட்சம் உழைக்கும் மக்கள் தங்களது கையில் பணத்தை வைத்திருந்தும். ஏதும் செய்ய முடியாத பித்துப் பிடித்த நிலைக்கு சென்றனர். அந்த நிலையிலும் மோடியின் பக்தர்கள் “எல்லையில் வீரர்கள் நமக்காக நிற்கும் போது வங்கி வாசலில் நிற்கமுடியாதா?” என தேசபக்த பாடம் எடுத்தனர்.

இன்னும் வக்கிரமாக ”நூற்றி முப்பது கோடிப் பேரில் 100 -பேர் செத்தால் என்ன? ” என பேசினார்கள். இனி தீவீரவாதிகளுக்கு பணம் போகாது, முற்றிலுமாக தீவிரவாதம் ஒழியும், பரணில் தூங்கும் பணமூட்டைகள் எதற்கும் உதவாது, கள்ளப்பணம் அறவே இல்லாது போகும், ஜி.பி.எஸ். சிப் வைக்கப்பட்டுள்ளதால் பணத்தை பதுக்க முடியாது என்றெல்லாம் பேசினார்கள்.

மக்கள் மத்தியில் எழுந்த கடும் எதிர்ப்பின் காரணமாக எதற்கும் அசைந்து கொடுக்காத ‘56 -இன்ச்’ மோடி, கோவா கூட்டத்தில் “ஐம்பது நாட்கள் கொடுங்கள், நாட்டை வல்லரசாக்குகிறேன்” என்று கண்ணீர் சிந்தி கபடநாடகம் போட்டார்.

இன்று ஓராண்டு நிறைவுற்ற நிலையிலும் ரிசர்வ் வங்கி கணக்குப்படியே கருப்புப் பணம் வந்து சேரவில்லை என்பது அம்பலமான போதும், எல்லா பணமும் வங்கிக்கு வந்துவிட்டதே இது தான் எங்கள் திட்டம் என தட்டை திருப்பிப் போட்டு பஜனை பாடுகிறது பாஜக கும்பல்.

அவற்றைத் தாண்டி கருப்புப் பணம் ஒழியும், பொருளாதாரம் மேம்படும் என சொன்னவை எல்லாம் பொய் என்பதை, தங்களது வாயாலே சொல்ல வேண்டிய நிலைக்கு வந்துள்ளனர் பாஜக -வினர்.

இந்த பணமதிப்பழிப்பு அறிவித்த சமயத்திலேயே அவற்றை ஆழமாக விமர்சித்தும், இப்பணமதிப்பழிப்பினால் யாருக்கு ஆதாயம் என்பதை உண்மையான பொருளாதார நிபுணர்களும், புரட்சிகர சக்திகளும் அம்பலப்படுத்தினர்.

நவம்பர் 8 -ஐ இன்று பலரும் வெளிப்படையாக கருப்பு தினம் எனப் பேசுகின்றனர். அந்த வகையில் பணமதிப்பழிப்பு சமயத்தில் வெளியான சில காணொளிகளை உங்களுக்காக வெளியிடுகிறோம்.

இதனை வெறும் கருப்பு தினமாக மட்டுமன்றி நாட்டை பிடித்தாட்டும் இந்த காவிகளை எதிர்த்து ஒட்டுமொத்த மக்களின் வெறுப்பு தினமாக மாற்றுவோம்.

இங்கே தோழர் மருதையனின் உரைகளும், நக்கலைட்ஸ் நண்பர்களின் வீடியோக்களும் இடம்பெறுகின்றன. மேலும் இதுதொடர்பான கருத்துக் கணிப்பையும் இணைத்திருக்கிறோம், வாக்களியுங்கள்!

இங்கே வாக்களிக்க:

டிவிட்டரில் வாக்களிக்க:

ஃபேஸ்புக்கில் வாக்களிக்க

பாருங்கள்….  நண்பர்களுடன் பகிருங்கள்…

மோடியின் பணமதிப்பழிப்பை பகடி செய்து வெளியான வீடியோக்கள் :


  1. பல பொருளாதார நிபுணர்கள் கூறியபின்னும் — ரிசர்வ் வங்கி கணக்கு காட்டியபிறகும் — மக்கள் கழுவி ஊற்றிய பிறகும் — கொஞ்சம் கூட வெட்கமில்லாமல் — தம் கட்டி தனது ” முரட்டுத்தனமான ” முடிவை தூக்கி நிறுத்த முயலுபவரும் — அவருக்கு ஜால்றா தட்டும் கூட்டத்திற்கும் கொஞ்சம் கூட உரைக்க வில்லையே என்பது தான் ஆச்சர்யம் …. முரட்டு தோல் ஆசாமிகள் … ?

Leave a Reply to kurukku saal பதிலை ரத்து செய்க

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க