privacy

about us

write

contact

shop

புதிய ஜனநாயகம்

புதிய கலாச்சாரம்

e-books

Global Influence

Communication

Legal Agreement

முகப்புகளச்செய்திகள்மக்கள் அதிகாரம்பாலா கைதை கண்டித்து தமிழகமெங்கும் ஆர்ப்பாட்டங்கள் !

பாலா கைதை கண்டித்து தமிழகமெங்கும் ஆர்ப்பாட்டங்கள் !

-

கார்டூனிஸ்ட் பாலா மீதான கைது நடவடிக்கையைக் கண்டித்து  மக்கள் அதிகாரத்தின் சார்பில் தமிழகத்தின் பல இடங்களில் நவம்பர் 6,7 ஆகிய தேதிகளில் ஆர்ப்பாட்டங்கள் நடத்தப்பட்டன.

கோவையில்…

ந்துவட்டி கொடுமையால் கடந்த 23.10.2017 அன்று நெல்லை மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் தனது மனைவி, குழந்தைகளோடு தீக்குளித்து இசக்கிமுத்து மாண்டு போனார்.

இசக்கிமுத்துவின் மொத்த குடும்பமும் அழிய காரணமாயிருந்தது, நெல்லை கலெக்டர், எஸ்.பி. மற்றும் செயல்படாத இந்த அரசுதான். இதனை தனது தூரிகையால் அம்பலப்படுத்திய கார்டூனிஸ்ட் பாலா 05.11.2017 கைது செய்யப்பட்டார். இக்கைது நடவடிக்கையை கண்டித்து கோவை மண்டல மக்கள் அதிகாரம் 06.11.2017 அன்று தடையைமீறி ஆர்பாட்டம் நடத்தப்பட்டது.

முன்னதாக ஆர்பாட்டம் குறித்து காவல்துறையிடம்  தெரிவித்தபோது, ஏற்கனவே அனுமதிக்கப்படும் இடத்தில்தான் நடத்தவேண்டும் என உத்திரவிட்டது. மக்களுக்கான போராட்டங்களை மக்கள் கூடாத இடங்களில் நடத்த முடியாது என உறுதியாக கூறி கோவை காந்திபுரம் நகர மற்றும் விரைவு பேருந்து நிலையம் கூடும் போக்குவரத்து நிறைந்த பகுதியில் நடத்துவதென முடிவெடுக்கப்பட்டது.

அதன்படி 06.11.2017 அன்று மாலை 4 மணியளவில் கோவை, கோத்தகிரி, உடுமலை, திருப்பூர் பகுதிகளின் தோழர்கள்கள் ஒன்றுகூடி பதாகைகள், கொடி, முழக்க அட்டை, கார்ட்டூன் படங்களோடு கந்துவட்டிக்கு காரணமான காவல்துறை மற்றும் ஆட்சியாளர்களை அம்பலபடுத்தும் முழக்கங்களோடு ஆர்ப்பாட்டம் நடத்தப்பட்டது.

பின்னர் ஊடங்களுக்கு போட்டி கொடுக்கப்பட்டது. அதனைத் தொடர்ந்து தோழர்களை காவல்துறை கைது செய்து வேனில் ஏற்றி மண்டபத்திற்கு கொண்டு சென்றது. செல்லும் வழியெங்கும்  அரசை அம்பலப்படுத்தும் முழக்கங்களை தோழர்கள் முழக்கமிட்டவாறே சென்றனர்.

தங்கவைக்கப்பட்ட அரங்கத்திலேயே தோழர்கள் வட்டமாக அமர்ந்து கந்துவட்டியைப் பற்றியும் மற்றுயும், கருத்துரிமை பற்றியும் இந்த அரசின் கையாலாகாத்தனம் பற்றியும் கலந்துரையாடல் நடத்தினர்.  பின்னர் இரவு 8 மணிக்கு காவல்துறை தோழர்களை மண்டபத்தில் இருந்து விடுவித்தது.

( படங்களைப் பெரிதாகப் பார்க்க அவற்றின் மீது அழுத்தவும் )

தகவல் :
மக்கள் அதிகாரம்,
கோவை – மண்டலம்.

________

நெல்லையில்….

நெல்லை நீதிமன்ற வளாகத்திற்கு 06.11.2017 அன்று கார்டூனிஸ்ட் பாலா அவர்களை ஆஜர்படுத்த அழைத்து வந்தபோது, அவருக்கு ஆதரவாக நெல்லை பகுதி மக்கள் அதிகாரம் தோழர்கள் சார்பில் ஆர்ப்பாட்டம் நடத்தப்பட்டது. மேலும் பிணை வழங்கப்பட்ட பின்னரும் பாலாவை சட்டவிரோதமாக கைது செய்ய முயன்றதைக் கண்டித்து முழக்கமிட்டனர்.

இதனைக் கண்ட வழக்கறிஞர்கள் பலரும் மக்கள் அதிகாரம் தோழர்களுடன் இணைந்து முழக்கமிட்டனர். இந்த ஆர்ப்பாட்டமானது இந்த அரசை அம்பலப்படுத்தும் வகையில் அமைந்தது.

( படங்களைப் பெரிதாகப் பார்க்க அவற்றின் மீது அழுத்தவும் )

தகவல் :
மக்கள் அதிகாரம்,
நெல்லை.

***

குடந்தையில்….

க்கள் அதிகாரம் சார்பாக தோழர். தமிழ் ஜெயாபண்டியன் தலைமையில் கடந்த 6.11.2017 அன்று குடந்தை காந்தி பூங்காவில் “கார்டூனிஸ்ட் பாலா அவர்களின் கைது நடவடிக்கையைக் கண்டித்து” ஆர்ப்பாட்டம் நடத்தப்பட்டது. ”அனுமதி வாங்கி விட்டுதான் ஆர்ப்பாட்டம் நடத்த வேண்டும்” எனக் கூறி போலீசு ஆர்ப்பாட்டத்தை தடுக்க முயன்றது. ஆனால் ”மைக் எதுவும் இல்லாமல் எங்கள் எதிர்ப்பைத் தெரிவிப்பதற்கு எதற்கு அனுமதி வாங்க வேண்டும்?” எனக் கேள்வி கேட்டனர் தோழர்கள். ஆர்ப்பாட்டம் முடியும் வரை அங்கு இருந்து விட்டு பின்னர் கலைந்து சென்றது போலீசு.

( படங்களைப் பெரிதாகப் பார்க்க அவற்றின் மீது அழுத்தவும் )

தகவல் :
மக்கள் அதிகாரம்,
குடந்தை.

***

ஓசூரில்….

ந்துவட்டி கொடுமைக்கு இசக்கிமுத்து குடும்பத்தையே பலி வாங்கிய இந்த அரசை அம்பலப்படுத்தி, கார்ட்டூன் வரைந்த பாலாவின் கைதைக் கண்டித்து மக்கள் அதிகாரம் அமைப்பின் சார்பில் தமிழகம் முழுவதும் ஆர்ப்பாட்டங்கள் நடத்தப்பட்டன.

அதன் ஒரு பகுதியாக, “கந்து வட்டி- போலீசு- கலெக்டர் கொடுமையால் இசக்கிமுத்து குடும்பமே தீயில் கருகியது! கார்ட்டூனிஸ்ட் பாலா கைது!! இந்த அக்கிரமங்களுக்கும், அராஜகங்களுக்கும் முடிவு கட்டுவோம்!”  என்ற முழக்கத்தை முன்வைத்து கண்டன ஆர்ப்பாட்டம் 07.11.2017 அன்று காலை 11.30 மணியளவில் ஓசூர் ராம்நகர் அண்ணா சிலை அருகில் மக்கள் அதிகாரம் சார்பாக நடத்தப்பட்டது

மக்கள் அதிகாரத்தை சேர்ந்த தோழர் ரவிச்சந்திரன் தலைமையில் நடத்தப்பட்ட இந்த ஆர்ப்பாட்டத்தில் புதிய ஜனநாயகத் தொழிலாளர் முன்னணியின் மாநில துணைத் தலைவர் தோழர் பரசுராமன் சிறப்புரையாற்றினார். இறுதியாக, மக்கள் அதிகாரத்தின் பாகலூர் பகுதி ஒருங்கிணைப்பாளர் தோழர் காந்தராஜ் நன்றியுரையாற்றினார்.

தோழர் பரசுராமன் தனது சிறப்புரையில், “கார்ட்டூன் வரைந்த கார்ட்டூனிஸ்ட்டை கைது செய்வதில் காட்டும் முனைப்பை கந்துவட்டிக் கொடுமைக்காரர்களை கைதுசெய்வதில் காட்டவில்லை இந்த கலெக்டரும் , எஸ்.பி-யும் என அம்பலப்படுத்திப் பேசியது; மற்றும் இந்த சட்டமும் போலீசும் அனைத்து மக்களுக்கும் பொதுவானதோ நடுநிலையானதோ அல்ல என்பதை அம்பலப்படுத்திப் பேசியது நல்ல வரவேற்பைப் பெற்றது.

குறிப்பாக ஒரு கலெக்டரின் புகாரை வாங்கி சென்னைக்கு ஓடி வந்து பாலாவை கைது செய்ததில் இருந்த அக்கறையில் ஒரு மைக்ரான் அளவு கூட இசக்கிமுத்துவின் புகார் மனுவில் வெளிப்படவில்லை என்பதை ஒப்பிட்டுப் பேசியது” நல்ல வரவேற்பை பெற்றது.

( படங்களைப் பெரிதாகப் பார்க்க அவற்றின் மீது அழுத்தவும் )

தகவல் :
 மக்கள் அதிகாரம்,
ஓசூர். தொடர்புக்கு : 99948 84923.


விவாதியுங்கள்

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க