privacy

about us

write

contact

shop

புதிய ஜனநாயகம்

புதிய கலாச்சாரம்

e-books

Global Influence

Communication

Legal Agreement

முகப்புபுதிய ஜனநாயகம்முன்னோடிகள்திருச்சி, விருதை, போடி: நவம்பர் புரட்சி விழா கொண்டாட்டங்கள் !

திருச்சி, விருதை, போடி: நவம்பர் புரட்சி விழா கொண்டாட்டங்கள் !

-

வம்பர் புரட்சி நாளை முன்னிட்டு திருச்சி  பு.மா.இ.மு தோழர்கள் அருகில் உள்ள பெரியார் ஈ.வெ.ரா அரசுக் கல்லூரி மாணவர்கள் விடுதியில் மாணவர்களுடன் இணைந்து நவம்பர் புரட்சி நாள் விழா இனிப்பு வழங்கியும் பட்டாசு வெடித்தும் சிறப்பாக கொண்டாடப்பட்டது.

இக்கூட்டத்தில் தோழர்கள் இரஷ்ய சோசலிசப் புரட்சியின் நூற்றாண்டை மாணவர்களுக்கு விளக்கியும், நாமும் இந்த கார்ப்பரேட் கைக்கூலி அரசுக்கு எதிரான புரட்சிப் பயணத்தில் இறங்குவோம் என்றும் கார்ல் மார்க்ஸின் மூலதனம் புத்தகத்தை பற்றி விளக்கியும் சிறப்பாக கொண்டாடப்பட்டது.

தகவல்
புரட்சிகர மாணவர் இளைஞர் முன்னணி
திருச்சி

***

09-11-2017 அன்று மூலதனம் வெளியிடப்பட்டதன் 150 ம் ஆண்டு மற்றும் ரசியப் புரட்சியின் 100  ஆம் ஆண்டு நிறைவையொட்டி விருதை புரட்சிகர மாணவர்- இளைஞர் முன்னணி சார்பில் பாலக்கரையில் விளக்க கூட்டம் நடைபெற்றது. விருதை பேருந்து நிலையத்தில் பேருந்து தொழிலாளர்களுக்கும், தள்ளுவண்டி தொழிலாளர்களுக்கும் இனிப்பு வழங்கப்பட்டது.

விருதை பு.மா.இ.மு செயலாளர் மணியரசன் பத்திரிகையாளர்களுக்கு பேட்டி கொடுத்தார். அப்பொழுது பத்திரிகையாளர்களுக்கும் இனிப்பு வழங்கினர். அதை தொடர்ந்து உழவர் சந்தையிலும் இனிப்பு வழங்கப்பட்டது.

தகவல்
புரட்சிகர மாணவர் இளைஞர் முன்னணி
விருதை

***

நவம்பர்-7 ரசிய புரட்சி தின கொண்டாட்டங்கள்.
07-11-2017 அன்று காலை 09:00-மணிக்கு கூடலூரில் விவிமு செயலாளர் தோழர் ராஜேந்திரன் அவர்கள்  கொடியேற்றி மக்களுக்கு இனிப்பு வழங்கினார். இரண்டாவதாக போடியில் தேவாரம் பகுதி விவிமு செயலாளர் தோழர் முருகன் கொடியேற்றினார். கடைசியாக தேவாரத்தில் போடி பகுதி விவிமு செயலாளர் தோழர் கணேசன் கொடியேற்றினார்.
இந்த மூன்று இடங்களில் ரசிய புரட்சியின் 100-வது ஆண்டு, கார்ல் மார்க்ஸ் மூலதனம் 150-வது ஆண்டு பற்றியும், செங்கொடி புகழ் பற்றியும் பேசி கொடியேற்றம் சிறப்புடன் நடைபெற்றது. தேவாரத்தில்  அரங்ககூட்டம் நடைபெற்றது. கூட்டத்தில் 30-சிறுவர்கள் உட்பட 150-க்கும் மேற்பட்டோர் கலந்துகொண்டனர். புரட்சிகர பாடலுடன் கூட்டம் துவங்கியது. போடி பகுதி  விவிமு தோழர் மாசாணம் அவர்களின் தந்தைக்கு பொன்னாடை போர்த்தி கெளரவப்படுத்தி சிறப்பிக்கபட்டது.
சிறுவர்களின் புரட்சிகர  கவிதைகள், உரைகள், பாடல்கள்  ஒயிலாட்டம் என  நிகழ்ச்சி நடத்தபட்டது.  தோழர் கார்க்கியின் வரலாறு, சிறப்புகளை பற்றி கூறப்பட்டது.
தோழர்கள் அனைவரும் நவம்பர்-7 ரசிய புரட்சி  பற்றியும், தற்போதைய நாட்டின் அவலங்களை சுட்டி காட்டி இந்திய நாட்டின் புரட்சியின் அவசியத்தை பற்றியும், இந்த கூட்டம் நம்மோடு நான்கு சுவருக்குள் முடங்கி விடாமல் புரட்சிக்கு மக்களை அணிதிரட்ட வேண்டிய- அவசியத்தை வலியுறுத்தி, பேசி சபதமேற்றனர்.
 இறுதியாக தியாகிகளுக்கு வீரவணக்கம் பாடல் பாடி கூட்டத்தினை நிறைவு செய்தனர்.

தகவல்
விவசாய விடுதலை முன்னணி
போடி


விவாதியுங்கள்

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க