கேலிச்சித்திரம்: முகிலன்

டிகர் சசிகுமாரின் உறவினரும் தயாரிப்பாளருமான அசோக் குமார் தற்கொலைக்கு காரணமான கந்து வட்டி மாஃபியா அன்புச் செழியன் தலைமறைவாகி விட்டார். தலை மறைவானாலும் அவரது காசு செல்வாக்கு அங்கிங்கெனாதபடி சகல இடங்களிலும், ஆட்களிடத்திலும் பகிரங்கமாக வெளியே வருகிறது. சீனு ராமசாமி, வெற்றி மாறன், கலைப்புலி தாணு துவங்கி பலரும் அன்புச் செழியனுக்கு பாராட்டுப் பத்திரம் படிக்கின்றனர்.

முத்தாய்ப்பாக நாம் தமிழர் சீமான் களத்திற்கு வந்து விட்டார். “மலையாளிகள், மார்வாடிகள் கொடுத்தால் ஃபைனான்ஸ், தமிழன் கொடுத்தால் கந்து வட்டியா…?” என்று அவர் சாடியுள்ளார்.  “முத்தூட் ஃபைனான்ஸ் என்று போடுகிறீர்களே, முத்தூட் கந்து வட்டி என்றா போடுகிறீர்கள்” என்று கொதிக்கிறார்.

வட்டிக்கு கடன் வாங்காமல் வாழ்க்கை இல்லை எனும் சீமான் ஏழைகளுக்கு மட்டுமல்ல திரைத்துறைக்கும் இந்த கடன் முறை இல்லாமல் வாழ்வு இல்லை என்று சீறுகிறார்.

2011 தேர்தில் அ.தி.மு.க எனும் கொள்ளைக் கூட்டத்தை ஆதரித்து பேசுவதற்கு காசு இல்லாமல் அவரது ‘தம்பி’ ஒருவரிடம் வட்டிக்கு ஐந்து இலட்சம் கடன் வாங்கித்தான் பிரச்சாரம் செய்தாராம். அதே போல அன்பு செழியன் போன்றவர்கள் பணம் கொடுக்க முடியாது என்று கூறிவிட்டால் திரைப்படமே எடுக்க முடியாத நிலைதான் உருவாகும் என்கிறார்.

வெளிப்படையான ஃபைனான்ஸ் நிறுவனங்கள் எவையும் அரசு நிர்ணயத்திருக்கின்ற வட்டியைத் தாண்டி வசூலிக்க முடியாது. அப்படி தாண்டினால் அதுதான் கந்து வட்டி என்பது கூட அறிஞர் சீமானுக்கு தெரியவில்லை. சட்டப்பூர்வமாக கடன் கொடுக்கும் வங்கிகள் மக்களிடம் அடித்து வசூலிப்பதை நாம் எதிர்த்துப் போராடுவதைப் போல அன்புச் செழியன் போன்ற மாஃபியாக்களையும் எதிர்த்துப் போராட வேண்டும்.

சீமானோ முன்னதைச் சொல்லி நியாயம் பேசுவது போல அன்புச்செழியனை விடுதலை செய்கிறார். சீமானின் இந்த நிலை குறித்து அதிர்ச்சி அடைந்திருப்பதாக இயக்குநர் அமீர் கூறுகிறார்.

ஆனால் தாதுமணல் மாஃபியா வைகுண்டராசனோ, இல்லை மன்னார்குடி மாஃபியா சசிகலா நடராசனோ அனைவரும் சீமானின் மதிப்பிற்குரிய தமிழர்களாக, புரவலர்களாக இருக்கும் போது அன்புச் செழியனும் ஒரு நல்ல தமிழராகத்தானே சீமானுக்கு இருந்தாக வேண்டும்?

இன்றைய கருத்துக் கணிப்பு :

சீமான், கந்து வட்டி மாஃபியா அன்புச் செழியனை ஆதரிப்பது ஏன்?

  • அன்புச் செழியன் ஒரு தமிழர்
  • அன்புச் செழியனிடம் ஏதேனும் ஆதாயம் அடைந்திருக்கலாம்
  • மார்வாடி – மலையாளி ஃபைனான்சியர்களை ஒழிப்பதற்காக
  • திரைத்துறையை சீர்திருத்துவதற்கு
  • ஏதோ நாக்கு பிறழ்ந்து பேசிவிட்டார்

(இரண்டு பதில்களை தெரிவு செய்யலாம்)

 

66 மறுமொழிகள்

  1. தமிழன் தமிழனை சுரண்டலாம் மத்தவய்ங்கதேன் சுரண்டபிடாது
    இப்படிக்கு அண்ணன் சீமான்

    அதாகப்பட்டது இங்கிலீஷ் மருத்துவ பாய்ஸன் விஷம் குடித்து சாகப் பிடாது
    அரளி விதையை அரச்சு குடிச்சு சாகலாம் ஏனெனில் அது தமிழ் மண்ணின் விதை.

  2. சீமான் மிகத் தெளிவாக தமது கருத்துகளைப் பதிவு செய்த பின்னரும் இக் கட்டுரை அப்பட்டமான உள்நோக்கம் கற்பிக்க முற்படுகிறது. சீமான் நோய்க்கு மருந்து தேட வேண்டுமே அல்லாது போலி மருத்துவத்தை பழி போடுவதால் பலன் கிடைக்காது என்கிற சிந்தனை கொண்டவராக காணப்படுகிறார்.

    எத்தனையோ டைரக்டர்களும் தயாரிப்பாளர்களும் அன்புச் செழியனை நல்லவராக சொல்லும் பொழுது சீமான் முதலில் அன்புச் செழியனைக் கைது செய்து விசாரியுங்கள் என்றுதானே கூறி வருகிறார்? ஏன் அரசும் காவல் துறையும் மெத்தனம் காட்ட லவண்டும்?

    குற்றங்களை காவல் நிலையங்களும் நீதி மன்றங்களும் தடுக்கவும் தண்டிக்கவும் வராத பொழுது குற்ங்களுக்கு எதிராகப் பேசி போராடுவதால் என்ன பயன்?

    சீமானைப் பழிப்பவர்கள் சொஞ்சம் மாத்தி யோசிப்பதே அறிவாகும.

    • மனோ என்ற சீமானின் அன்புத் தம்பி அவர்களே, முதல் விசயம் உங்கள் கவனத்திற்கு கொண்டு வர விரும்புவது, சீமானின் கருத்துக்களுக்கு இங்கு உள்நோக்கம் எதுவும் கற்பிக்கப்படவில்லை என்பது தான். சீமான் சொன்னது சொன்னபடிக்கு தான் வினவு எழுதியிருக்கின்றார். அதில் மாற்றி ஏதேனும் கூறியிருந்தால் சீமான் சொன்ன இன்ன கருத்துக்கு இங்கு இன்ன கருத்தாக மாற்றி அர்த்தம் கொடுத்துள்ளீர்கள் என குறிப்பாக சுட்டிக் காட்டும் படி கேட்டுக் கொள்கிறேன்.

    • ////சீமான் நோய்க்கு மருந்து தேட வேண்டுமே அல்லாது போலி மருத்துவத்தை பழி போடுவதால் பலன் கிடைக்காது என்கிற சிந்தனை கொண்டவராக காணப்படுகிறார். ////

      அப்படியா காணப்படுகிறார்!!. அண்ணனின் அன்பு விழுதுகள் அண்ணனைப் போலவே சூதுவாதற்று இருக்கிறீர்களே … அய்யோ பாவம் …

      நோய்க்கு மருத்துவம் கண்டுபிடிப்பது கிடக்கட்டும் வெங்காயம்! போலி மருத்துவன் செய்த கொலையைப் பற்றி வாய் திறக்க மறுக்கிறாரே ! அதைப் பற்றி சீமானின் அன்புத் தம்பியின் கருத்து என்ன ?

      ///// குற்றங்களை காவல் நிலையங்களும் நீதி மன்றங்களும் தடுக்கவும் தண்டிக்கவும் வராத பொழுது குற்ங்களுக்கு எதிராகப் பேசி போராடுவதால் என்ன பயன்? ///

      உங்கள் லாஜிக் படி பார்த்தால்,ஈழப் பிரச்சினையின் போது, சில ஈனப் பிறவிகள் ”நீங்க என்ன சொன்னாலும் அங்க பிரபாகரன் கதைய முடிச்சுடப் போறாங்கோ.. நீங்க போராடி என்ன செய்யப் போறேள்? ”ன்னு கேட்டது சரி தான்னு சொல்லுவீங்க போலத் தெரியுதே?
      நல்ல சிந்தனை .. அண்ணன் சீமான் சொல்லிக் கொடுத்தாரா ?

      //// சீமானைப் பழிப்பவர்கள் சொஞ்சம் மாத்தி யோசிப்பதே அறிவாகும ////

      சீமானை உள்ளது உள்ளபடி எடுத்துக் காட்டினால், உங்களுக்கு பழிப்பது போன்று தோன்றுகிறது போலும். முகரக்கட்டையில் இருக்கிறது தான ஜீ கண்ணாடில தெரியும். எனக்குத் தெரிஞ்சு வினவு கண்ணாடி மாதிரி. பிரச்சினை கண்ணாடில இல்ல. நீங்க வச்சிருக்குற சீமான் மூஞ்சில தான் இருக்கு. அந்த மூஞ்சிய மாத்திட்டு பாத்தீங்கன்னா .. சீமான் இங்கே அவருடைய இயல்பில் தான் காட்டப்படுகிறார் என்பது புரியும்

      வைகுண்டராஜன் இல்லத் திருமணத்தில் கலந்து கொண்டு கொஞ்சி உறவாடுவது, மன்னார்குடி மாஃபியா நடராஜனின் காலைக் கழுவி குடித்தது எல்லாம் பார்த்துக் கொண்டு தான் இருக்கிறோம் சீமானின் அன்புத் தம்பியே…

      வினவு மாத்தி யோசித்து அறிவை வளர்த்துக் கொள்வது இருக்கட்டும். தாங்கள் முதலில் மக்களில் ஒருவராக இருந்து மனிதர்களைப் பார்க்கக் கற்றுக் கொள்ளுங்கள். உங்கள் நொண்ணனில் இருந்து மக்களையும் விசயங்களையும் ஆராயாதீர்கள்.

      • நீங்க என்ன சொன்னாலும் அங்க பிரபாகரன் கதைய முடிச்சுடப் போறாங்கோ.. நீங்க போராடி என்ன செய்யப் போறேள்? ”ன்னு கேட்டது சரி தான்னு சொல்லுவீங்க போலத் தெரியுதே?

        அப்போ பிரபாகரனை காப்பாற்ற தான் நீங்க போராடினீர்கள் நல்ல சிந்தனை!

        • அண்ணே, கபிலண்ணே…

          யாருகிட்ட பேசும் போது அப்படிச் சொன்னேன், அதுல சொல்லவரக்கூடிய கருத்தென்ன இதெல்லாம் முழுசா பாத்துட்டு கமெண்டு போட்டா நல்லா இருக்கும். நான் தமிழர் தம்பிமார்களுக்கு பிரபாகரன் சொன்னா தான புரியும் ?. குழந்தைக்கு கணக்கு சொல்லித்தரும் போது சாக்கலேட் வச்சி சொல்லித் தருவீங்களா வெறும் நம்பர வச்சி சொல்லித்தருவீங்களா?

          நான் சொன்ன வார்த்தைக்கு உங்க இஸ்டத்துக்கு அர்த்தம் புரிஞ்சிகிட்டா எப்படிண்ணே ?.

    • “குற்றங்களை காவல் நிலையங்களும் நீதி மன்றங்களும் தடுக்கவும் தண்டிக்கவும் வராத பொழுது குற்ங்களுக்கு எதிராகப் பேசி போராடுவதால் என்ன பயன்?”

      இதைப் பற்றி வினவுவின் கருத்து என்ன?

  3. சீமானின் பேட்டி பார்க்க நேரிட்டது. கணிணித் திரையில் காறி உமிழலாம் எனத் தோன்றியது.

    அண்ணன் சொல்லுகிறார், *** “ அன்புச் செழியன் திரைத்துறைக்கு பணம் கொடுப்பதை நிறுத்தி விட்டால் என்ன செய்வது?” *** ” அரசு முறைப்படுத்துமா? இவ்வளவு தான் வட்டி என்று?” , *** “ வட்டியில என்ன தம்பி கந்துவட்டி, அந்த வட்டின்னு?” , *** “ முத்தூட் கந்து வட்டின்னு சொல்ல வேண்டியது தான?”, *** ”மக்களுக்கு அரசு ஏதும் ஏற்பாடு செய்யவில்லை. அவன் என்ன செய்ய முடியும் கந்து வட்டிக்கு தான் வாங்குவான்” , *** “ அன்புச் செழியன் இல்லைன்னா இன்னைக்கு சினிமா படமே எடுக்க முடியாது”, *** “வங்கிகளே கட்டி வச்சி அடிக்கலையா, 1 இலட்ச ரூபாய் கடனுக்கு காவல் துறை அடிக்கலையா?“, *** “ அது மாதிரி தான், வாங்குன கடன திருப்பி வாங்க கொஞ்சம் கடுமையா பேசி, அதனால மனம் உடைஞ்சு தற்கொலை பண்ணிக்கிறாங்க”

    மேலே எடுத்துப் போடப்பட்டுள்ள சீமானின் முத்துச் சிதறல்களுக்கு தொம்பிமார்கள் வந்து பிளாக்கணம் கூறட்டும்.

  4. சுருதி சுத்தமாக அண்ணன் சீமானின் குரலோடு ஒரு மேடைப் பேச்சாக இந்த பேட்டியை மொழி பெயர்த்தால் பின்வருமாறு புரிந்து கொள்ளலாம்.. (இதை ஏதாவது மேடையில் அந்த நாய் குலைக்கும் காட்சியோடு பொறுத்தி அதே தொணியில் கத்திப் பார்த்துக் கொள்ளவும்)

    “ காலங்காலமா இருக்குதுடா கந்து வட்டி… நீ .. நானெல்லாம் பொறக்குறதுக்கு முன்னாடியே எம் பாட்டன் முப்பாட்டன் காலத்துலயே இருக்குது கந்து வட்டி .. சும்மா இப்ப வந்து கந்து வட்டி.. கந்து வட்டின்னு பேசிட்டுருக்க … மலையாளினா ஃபைனான்ஸ், என் தமிழன்னா கந்து வட்டியா ? ஹ .. ஹ .. யாரு கிட்ட?

    ஏண்டா நாய்களா… டிராக்டருக்கு லோன் எடுத்ததுக்கு தஞ்சாவூர் பக்கத்துல கோடக் மஹேந்திரா பேங்குக்காரன் – ஒரு வந்தேறி நாய் ஆள்விட்டு அடிச்சப்போ பொறுத்துக்கிட்டியே… இப்போ வந்து மெரட்டுனது யாருடா ?.. சுத்தத் தமிழன், என் ரெத்தம். அவன் அடிச்சா வாங்கிப்ப .. நாங்க வந்து மெரட்டுனா தாங்க மாட்டியா ?.. கட்டுறதுக்கு வக்கிருந்தா கடன் வாங்கு.. இல்லைன்னா சாவுறது தான் வழி … ”மானத் தமிழன்னா நாண்டுட்டு சாவுறது தாண்டா தமிழ்ப் பிள்ளைகளுக்கு எங்காத்தா பாலூட்டும் போதே சேத்து சொல்லிக் கொடுத்த பழக்கம்”

  5. பெயருக்கு ஏற்றபடி சமரன் சமர் ஆடுவதில் வல்லவராக இருக்கிறார். நாட்கள் சில சென்றால் நடந்தது என்னவென்று தெரிந்து கொள்கிறேன். மலை விழுங்கி வைகுண்டராஜன் ஒருவர் மட்டுமா? சீமான் கொண்டாடுவது இருக்கட்டும் தமிழக அரசும் காவல் துறையும் நீதி மன்றங்களும் என்ன செய்து விட்டன? இவை போல் ஆயிரம் அறிவீர் ஆயினும் ஏதாவது ஒரு பிரச்சனையாவது தீர்வு காணப்பட்டு விட்டதா?

    சமரனின் பதிவுகளுக்கு நன்றியும் மனமார்ந்த பாராட்டுகளும்.

    • உங்களது பாராட்டுகளுக்கு நன்றி மனோ. (வஞ்சப் புகழ்ச்சியில எதுவும் பாராட்டலியே )

      அரசு, காவல்துறை நீதிமன்றங்கள் மட்டுமல்ல, அண்ணன் சீமானும் எதுவும் செய்யவில்லை. ஏன் என்றால், சமூகத்தின் எதிரிகளுக்கு இவர்கள் சேவகம் புரிகிறவர்களாக இருக்கிறார்கள்.

      விரிவாகப் மற்றுமொரு சந்தர்ப்பத்தில் பேசுவோம்.

  6. A1 குற்றவாளி ஜெயா ஈழத்தாயி.”தமிழா இன உணர்வு கொள்”என்று முழங்கிய ஈரோட்டுக்கிழவன் தந்தை பெரியார் விரோதி.”சீச்சிமான்”.

  7. //ஆனால் தாதுமணல் மாஃபியா வைகுண்டராசனோ, இல்லை மன்னார்குடி மாஃபியா சசிகலா நடராசனோ அனைவரும் சீமானின் மதிப்பிற்குரிய தமிழர்களாக, புரவலர்களாக இருக்கும் போது அன்புச் செழியனும் ஒரு நல்ல தமிழராகத்தானே சீமானுக்கு இருந்தாக வேண்டும்?///
    இதை அப்படியே திராவிடர்கள்ன்னு போட்டு பாருங்க தி க பெரியாரியவாதிகளுக்கு சரியாய் வரும்

  8. சீமான் அண்ணாவை குறை சொல்லும் நீங்கள் அன்பு செழியன், வைகுண்ட ராஜன் வளர்த்து விட்ட திராவிட கட்சிகளை குறை சொல்வதில்லை ஏன்? கருணாநிதி குடும்பமும், சசிகலா குடும்பமும் தமிழ் நாட்டையே சூரை யாடி இருக்கிறார்கள். ஆனால் அவர்கள் மிது குறை சொல்வதில்லை? அதிலும் கருணாநிதி குடும்பத்துக்கு சிறப்பு சலுகையா? வைகுண்ட ராஜனுக்கு 7 முறை சிறந்த குடிமகன் விருந்து கிடைத்துருக்கு இந்தியா அரசாங்கத்திடம் இருந்து. இதட்கும் சீமான் அண்ணா தான் காரணமா சொல்லுங்கள் நண்பரே ?

    • நாதஸ் தம்பிமார்கள் அத்தனை பேரும் லூசுக் கூமுட்டைகள் என்பதை தம்பி சயந்தன் நிரூபிக்கிறார்.

      ஏண் அன்புச்செழியனை ஆதரிக்கிறாய் என்றால், அவனை வளர்த்து விட்டது யார் என்பது தான் கேள்வியா?
      இப்படித் தான் காடு திருடன் வீரப்பனுக்கு பெருந்தமிழன் பட்டம் கொடுத்திருக்கிறார் சீமான்.

      வைகுண்டராஜனுக்கு கொடுக்கப்பட்டது சிறந்த ஏற்றுமதியாளர் விருது. இருக்கட்டும். அதற்காக மணல் திருடனை ஆதரிக்க வேண்டுமா?

      என்ன உங்க லாஜிக்கு?

      ஏண் அவுசாரி கிட்டே போயி எயிட்ஸ் நோய் வாங்கிட்டு வந்தேன்னு கேட்டா, எயிட்சை கண்டுபிடிச்சவனைப் போயி கேளுன்னு சயந்தன் சொல்வாரு.

      நோட்டாவை ஜெயிக்க துப்பில்ல.. வந்துட்டாக ________

      • “நாதஸ் தம்பிமார்கள் அத்தனை பேரும் லூசுக் கூமுட்டைகள் என்பதை தம்பி சயந்தன் நிரூபிக்கிறார்”

        What kind of reply is this ? simply expose himself / herself. Period.

        • Dear Mr. Decent fellow,

          I think My comment is in better taste that the speeches of Mr. Seemaan.

          I am wondering how would a decent fellow like you will react to one of the Seemans speech where he proudly declared “பிரபாகரனுக்குப் பதில் சீமான் ஈழத்தில் இருந்திருந்தால், சிங்களப் பெண்களை கற்பழித்திருப்பேன்”

          Open Rape threat to the Sinhalese women. Seeman claims that he was trained by Mr. Velupillai Pirabakaran.. I am now wondering what kind of training he received from LTTE.

          Training to Rape Women?

          • So your abusive language is in this forum is correct ? you can’t simply express your bad taste (of your language) here in a public forum.

            I hope most of our readers will agree with me for requesting a simple decent way of expression / opinions here in this forum.

            (Anyway, thank you for calling me a decent guy)

            • Heartening to see a seemaan supporter this much kind hearted 🙂

              I will leave it to the readers to judge whether I was “abusive” & with “bad taste”

              Let the readers also judge about the open Rape threat of Mr. Seemaan and the decency of seemaan’s supporter.

              Peace _/\_

    • நாதஸ் தம்பிக்கு ஏன் கருணாநிதி, ஜெயா, சசிகலாவை வினவு விமர்சிக்கலைன்னு ஒரே கவலை.

      தம்பி, உன் கிட்டே இருக்கிற நாலே முக்கால் அறிவை பயன்படுத்தி வினவில் இருக்கும் “சர்ச்” பெட்டிக்குள் அந்தப் பெயர்களைப் போட்டுத் தேடிப் பாருப்பா.

      உங்க நொண்ணன் நடராஜனை பெருந்தமிழர் என்று சொல்லி காலைக் கழுவிக் குடிச்சிட்டு இருந்ததுக்கு முன்னாடி இருந்தே வினவு விமர்சனம் செய்துட்டு தான் இருக்காங்க.

      உங்க நொண்ணன் அன்புச்செழியனை ஆதரிக்கிறாரே ஏன்? எதுனா கட்டப்பஞ்சாயத்துல அன்புகிட்டே மாட்டிகிட்டு இருக்காப்லயோ?

    • Oh.. i see.

      Seeman supports Anbuchelian because he did what he did because Kanthuvatti is a reality. Untill kanthuvatti is abolished (fully in practice), Anbu will be a honest banker for Seeman.

      Seeman supported brigand veerappan and Sand mafia vaikunda rajan, Granite mafia PRP under the same logic.

      OK, let me apply the same logic for something else

      1. Rape is a social problem – a dark reality – Hence Auto shankar will be perunthamilan. After all, what else he can do in a society where rape is prevalent other than raping?
      2. Corruption is a systematic problem – Hence, Jaya and the likes shall be announced as pernthamilar…
      3. Majority oppressing minority is a phenomena across the world. A sad reality. So.. what shall we do with Raja pakhse?

  9. Mr. Selva,

    I understand your frustration. However, my humble opinion is that this article doesn’t reflect Seeman’s full view of Kanthuvatti problem. You are trying to distract from the theme of this article and my point towards it.

  10. மேதகு சீமான் அவர்களை இப்படியா சந்தேகப்படுவது ?

    இந்திய பெருங்கடலை தமிழர்களின் பிடியில் இருந்து கைப்பற்ற உலக நாடுகள் சதி செய்வது யாவரும் அறிந்ததே ? அதில் ஒரு பகுதியாக , இந்திய இளைஞர்களை அளித்து ஒழிக்கும் வகையில் , மது அருந்துவதை உலக சாதனையாக சித்தரித்து அவர்களை மது குடிக்க வைத்து , கொல்வதற்காக திராவிட இயக்குனர்களை வைத்து படம் எடுக்கிறார்கள் ஆரிய இல்லுமினாட்டிகள் .
    அதாவது சட்டபூர்வமாக தமிழினத்தை அளிக்கிறார்கள் .

    இந்த இக்கட்டான சூழ்நிலையில் , நம் மேதகு தலைவர் அவருக்கு கிடைத்த கருவி தான் , சுத்த தமிழர் முருகனே தாத்தன் என்பதை உணர்ந்த அன்பு செழியன் அவர்கள் .

    அன்பு செழியன் மூலமாக கந்து வட்டி கடன் கொடுக்க வைத்து இந்த திராவிட இயக்குனர்களை தற்கொலை செய்ய வைப்பதன் மூலமாக , தமிழக இளைஞர்களை காப்பாற்றி அதன் மூலம் இந்திய பெருங்கடலை தக்க வைத்து கொள்வதே நம் தலைவரின் நோக்கம்.

    ஆனால் இதை வெளிப்படையாக சொல்லிவிட முடியாது , ஆரிய வடுக இல்லுமினாட்டிகள் மிகவும் ஆபத்தானவர்கள் .

    புரிகிறது. ஆனால் வைகுண்டராஜன் …என்று உங்கள் மனதில் அடுத்த கேள்வி எழும் ?

    இந்திய பெருங்கடலை கைப்பற்றும் சதியின் ஒரு அங்கமாக ,
    மணல் அள்ளி தமிழக ஆறுகளை வற்ற வைக்க நடக்கும் சதியை அறிந்து கொண்டார் நம் தலைவர் . மணலை அள்ளி பெரும் பொருள் ஈட்டுவது திராவிடர்களே என்பதை அறிந்து கொண்டார் .
    அந்த திராவிடர்களை துரத்திவிட்டு , முருகனே தாத்தன் என்று சரணடைந்த வைகுண்ட ராஜன் என்னும் தமிழர் பொருள் ஈட்ட வைத்து உள்ளார் .இந்த உலக சதி திட்டத்தை முறியடிக்க ஆட்சி கட்டிலில் அமர வேண்டிய கட்டயத்திற்கு ஆளாகி உள்ளார் நம் மேதகு தலைவர் .

    அதற்கு பெரும் பொருள் உதவி தவை படுகிறது . அந்த தேவையை தமிழ் தாயே மணலாக கொடுத்து தமிழ் மண்ணை காக்க உதவுகிறாள் என்பது நமக்கு பெருமை தானே .

    மேதகு தலைவர் ஆட்சி கட்டிலில் அமர்ந்த பின்னர் ஆறுகள் காக்கப்படும் . தலைவர் வாயு பிரித்தாளும் அதில் தமிழ் மணம் கமழும் என்பதை அறிந்து கவலை இன்றி நித்திரை கொள்வீராக.

    பின்குறிப்பு :
    இந்த இந்திய பெருங்கடலை காக்க இன்னுயிர் கொடுக்க விரும்புபவர்கள், கட்சி அலுவலகம் அகல படுத்தும் பணி நடப்பதாலும், பூத உடலை போர்த்தும் பெரிய கொடிகள் தயாரிப்பு தாமதமாவதாலும் , இரண்டு மாதம் காத்திருக்கும் படி அறிவுறுத்தப்படுகிறார்கள்

    • அய்யகோ

      ராமனின் ஐடியை யாரோ ஹேக் செய்து விட்டார்களா ?

      என்ன கொடுமை சார் இது ?

      • தமிழர் பிடியில் இருந்து இந்திய பெருங்கடல் கைவிட்டு போகும் இக்கட்டான தருணத்தில் , கமெண்டு எழுதி நேரத்தை வீணாக்கலாமா ? உடம்பில் தமிழ் ரத்தம் ஓடுகிறதா ?

        பரங்கியரின் லெனினிசத்தையும் , மாவோயிசத்தையும்
        “அனைவருக்கும் ஆடு மேய்க்கும் அரசு வேலை ” என்னும் ஒற்றை வரியில் ஊதி தள்ளிவிட்ட “சீமான் இசத்தின்” பின்னால் ஒன்று சேருங்கள் .

        வினவு படிக்க வேண்டாம் நம் தலைவர் ஆசி பெற்ற விகடன் படியுங்கள் .

        உடனே புறப்படுங்கள் அனானியன் … 🙂

        • ராமன் போன்ற இந்திய தேசிய வெறியர்கள் தமிழினத்தை நையாண்டி செய்து வசைபாட மொக்க சீமானை ஒரு கொம்பாக பற்றுகின்றார்கள். அதற்கு வேறு அனானியன் போன்ற போலி கம்யூனிடுகள் ஒத்து ஊதுகின்றார்கள். இருவருக்கும் எனது கேள்வி :

          #இந்திய கடலில் கடந்த பத்து நாட்களுக்கு மேலாக தத்தளிக்கும் தமிழர்களின் உயிரை காக்க இந்திய தேசியம் என்ன மயிரைபிடிங்கிகொண்டு உள்ளது?

          #நிர்மலா சீத்தா ராமனின் திமிர் பேச்சுகள் தமிழர்களின் உயிரைக் காக்குமா?

          • அட நம்ம ஒரிஜினல் கம்மினிஸ்ட் குமாரு தானா இது ?.

            நீங்க தான் ஒரிஜினல்னு ஆண்டவனே எழுதி வச்சிட்டப்புறம், நானெல்லாம் போலி தான், ஒரிஜினல் கம்மினிஸ்ட் குமார் அவர்களே…

            போலிக்கான உங்க அளவுகோல் என்னன்னோ அல்லது ஒரிஜினல்னா எப்படி நடந்துக்கனும்னோ சொன்னீங்கன்னா , அடியேன் கேட்டு தெரிஞ்சுகிட்டு சரி செஞ்சிப்பேன்.. கொஞ்சம் ஹெல்ப் பண்ணுங்களேன்..

            சீமான் ஒரு அபாயம் அல்ல .. மொக்கைதான் என்ற உங்களது கம்மினிச அறிவைக் கண்டு வியக்கிறேன்.. யப்ப்பா….. சூப்ப்ப்ப்ப்ப்பரப்பா ….
            கீழ்கண்ட வகையில் உங்களது பதிலைக் கூறினால் எனக்கும் உபயோகரமாக இருக்கும் ..

            1. ராமனின் பதிவில் தமிழினத்தை நையாண்டி செய்திருக்கும் இடத்தை எடுத்துப் போடவும்.
            2. அதற்கு நான் ஒத்து ஊத போட்ட வாசகத்தையும் எடுத்துப் போடவும்..
            3. இராமன் தமிழினத்தை நையாண்டி செய்து போட்ட பதிவிற்கு எப்படி பதில் போட்டிருந்தால் நான் ஒரிஜினல் கம்மினிஸ்ட்டாக முடியும் என்பதையும் எனக்கு தயை கூர்ந்து விளக்கவும்.

            மேற்படியான வகையில் நீங்கள் பதிலளிக்கும் போதுதான் ஒரு 18 – 19 வயசுப் பையனை (என்னைத் தான் சொல்லுறேன்) வெறுமனே திட்டுவது சரி இல்லை அல்லவா ?.. ஒரு அனுபவமிக்க ஒரிஜினல் கம்மினிஸ்டாக (உங்களைத் தான் குமார்) நீங்கள் என்னைப் போன்ற சிறுவர்களுக்கு ஒரிஜினல் கம்மினிஸ்டாக எப்படி சிந்திக்க வேண்டும் என்று விளக்குவது தானே சரியானது.

            வாழ்க்கையில் நான் இராமனின் பக்கம் நின்று ஒரு நபரிடம் வாதிடுவேன் என்று கனவில் கூட கண்டதில்லை.. அப்படி ஒரு விசயத்தைச் சாத்தியமாக்கி ஒரு அதிசயத்தை நிகழச் செய்ததற்கு என் சார்பிலும், இராமன் சார்பிலும் நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன் திரு ஒரிஜினல் கம்மினிஸ்ட் குமார் அவர்களே..

            • சீமானை சாகாகவைத்துகொண்டு தமிழனத்தின் மீது நக்கலையும் , கிண்டலையும் ராமன் செய்யறார் என்றால் அது இந்த அனானியனிக்கு தப்பாகவே தெரியல போல! ராமான் தந்து பின்னுட்டத்தில் முழுமையாகவே தான் தமிழினத்தின் மீது அவதூறுகளை வாரியிரைகின்றார். அதுக்கு இந்த ஆனானியன் ஒத்திசை பாடுகின்றார். இந்த பொழப்புக்கு…. நேரடியாகவே எனக்கு தமிழன உணர்வு கொஞ்சமும் இல்லை என்று அனானியன் சொல்லிட்டு போகலாம் இவர்…

              இதுக்கு பெயர் என்ன அனானியன்?

              //தலைவர் வாயு பிரித்தாளும் அதில் தமிழ் மணம் கமழும் என்பதை அறிந்து கவலை இன்றி நித்திரை கொள்வீராக.//

              ராமனின் இந்த வாசகத்தை எப்படி எடுத்துகொள்வது அனானியன்? அதுக்கு உங்க பதில் என்ன அனானியன்?

              தலைவர் குசு விடுவார் அதில் தமிழ் மணம் கமழும் என்று தானே நேரடியாக பொருள் காணவேண்டியுள்ளது! ஒருத்தன் விடும் குசுவில் தான் தமிழ் மனகிறது என்றால் அது நக்கல் நையாண்டி இல்லையா? தமிழ் மீதும் தமிழர் மீதும் செலுத்தபடும் அவதூறு இல்லையா?

              • ராமனின் வஞ்சப்புகழ்ச்சி குமாருக்குப் புரியவில்லையா? இதில் சீமானுக்குத்தானே இழுக்கு! தமிழுக்கு எவ்வாறு இழுக்காகும்?

                அனானியனின் அருமையான பதிலை ஆவலுடன் எதிர்பார்க்கிறோம்!!

                • நண்பா!
                  இப்படி உசுப்பேத்தி உசுப்பேத்தி என் உடம்ப ரணகளமா மாத்தீராதீங்க …

                  நான் ஒரு மொக்கப் பீசு … சார்ப்பா அடிக்கிறதுக்கு நிறைய பேரு இருக்காங்க .. என்ன கொஞ்சம் சைலண்டா பாத்துட்டு போயிடுறாங்க அவ்ளோ தான்..

              • குமார் அண்ணா …
                என்னோட முதல் கேள்விக்கு துளி கூட சம்பந்தம் இல்லாத பதிலை போட்டிருக்கீங்க ..
                ரெண்டாவது மற்றும் மூனாவது கேள்விக்கு நீங்க பதிலே சொல்லலை …

                உங்களை எவ்வளவு பெரிய ஒரிஜினல் கம்மினிஸ்ட்டுன்னு நினச்சிட்டு இருந்தேன்.. இப்படி ஆர்.எஸ்.எஸ். – சங்கிகள் மாதிரி கேள்விக்கு நேர்மை இல்லாம விலகிப் போகலாமாண்ணே..

                கொஞ்சம் பொறுமையா டென்சனாகாம … பதில் சொல்லுங்கண்ணே..

                நான் ராமனை திட்டவேண்டும் என்ற உங்கள் விருப்பம் நிறைவேறாததன் விளைவு தான்
                இவ்விவகாரத்தில் உங்கள் முதல் பின்னூட்டம் என்பதை கீழ்கண்ட தங்கள் வாசகத்தில் இருந்து புரிந்து கொள்ள முடிகிறது.

                ////நேரடியாகவே எனக்கு தமிழன உணர்வு கொஞ்சமும் இல்லை என்று அனானியன் சொல்லிட்டு போகலாம் இவர்…////

                ஏனெனில் எனது பின்னூட்டத்தின் வழியாக சீமான் குறித்த சரியான பார்வையை கிட்டத்தட்ட வினவின் பார்வையை, வினவை விமர்சிக்கும் ராமனும் கொண்டிருக்கிறார் என்ற எனது ஆச்சரியத்தை மட்டுமே வெளிப்படுத்தி இருந்தேன்.

                தமிழின உணர்வு குறித்து ராமன் எங்கும் அவதூறாகப் பேசவில்லை. (மேற்சொன்ன வாசகத்தை எடுத்து வைத்துக் கொண்டு அண்ணன் குமார் அடுத்த ரவுண்டில் கம்பு சுத்துவார் என்பதும் எனக்குத் தெரியும். இருந்தாலும் அண்ணே, நீங்கள் என்னுடைய 2 கேள்விகளுக்குப் பதில் சொல்லிவிட்டு பின்னர் கம்பு சுழற்றுமாறு கேட்டுக் கொள்கிறேன்.)*** நீங்களாகவே திடீரென உள்ளே புகுந்து தமிழின உணர்வுக்கு நீங்கள்தான் பாடம் எடுக்கத் தொடங்கியிருக்கிறீர்கள்.

                அதை விடக் கொடுமை என்னவெனில், திடீரென தமிழின உணர்விலிருந்து எவ்விக் குதித்து போலிக் கம்யூனிஸ்ட்டாக என்னை முத்திரை குத்திவிட்டீர்கள். எத்தனைப் பட்டத்தைத் தான் நான் வாங்கிக் கொள்வது ? போலித் தமிழினவாதியா ? போலிக் கம்யூனிஸ்ட்டா ? இல்லை நானே ஒரு இலுமினாட்டியா ?

                மேலும் ஒரே நேரத்தில் ஒரிஜினல் கம்யூனிஸ்டாகவும், தமிழினப் பற்றாளனாகவும் என்னை எதிர்பார்க்கிறீர்களே ?.. அப்படியும் இருக்கமுடியுமா? இனவாதம் தான் கம்யூனிசத்தின் அடிப்படையா ?

                ///ராமனின் இந்த வாசகத்தை எப்படி எடுத்துகொள்வது அனானியன்? அதுக்கு உங்க பதில் என்ன அனானியன்? /////

                இப்போது தான் எனது கருத்து என்ன என்று நீங்களே கேட்கிறீர்கள் அண்ணன் குமார் அவர்களே.. உங்கள் கேள்வியின் பொருள் என்னவென்றால், ராமனின் வாசகம் குறித்து நான் எந்தக் கருத்தும் இதுவரை சொல்லவில்லை என்பதுதான். அதைத் தான் உங்களது கேள்வி நிரூபிக்கிறது.
                இதுவரை ஒரு விசயத்தைப் பற்றி கருத்தே சொல்லாத ஒரு அப்பாவி சிறுவனுக்கு (நான் தான்:) ) தமிழின விரோதி என்று முத்திரை குத்தி, போலி கம்யூனிஸ்ட் என்ற முத்திரையும் குத்தி இருக்கிறீர்களே ? இது நியாயமா அண்ணே !! அப்படிப் பார்த்தால் ராமனின் பதிலைப் படித்து விட்டு கடந்து போன பலரும் போலி கம்யூனிஸ்ட் மற்றும் தமிழினவிரோதி தானே ?

                சரி போய்த் தொலையட்டும். நான் கடந்த பின்னூட்டத்தில் தங்களிடம் கேட்ட 2, 3 -வது கேள்விகளுக்கும் தங்கள் பதிலை எதிர்பார்க்கிறேன் அண்ணே…

                நான் ராமனின் வாசகத்தின் மீது எவ்வித கருத்தும் சொல்லாத போது எனது 2வது, 3வது கேள்விகளுக்கு உங்களிடம் நியாயப்படி பதிலிருக்கவே முடியாது.

                இருந்தாலும் அண்ணன் குமார், சங்கிகளின் பாணியிலோ அல்லது விவாதங்களில் வரும் திருப்பதி நாராயணன் பாணியிலோ கண்டிப்பாக பதில் சொல்லுவார் என்று எதிர்பார்க்கிறேன்.

                பின் குறிப்பு:
                *** குமார் அண்ணேனுக்கு வைக்கப்பட்ட பொறி தான் அந்தக் கம்பு. எடுத்துச் சுத்துங்க அண்ணே .. ஐயாம் வெயிட்டிங் …

                • தம்பி அனானியன் உங்க கடிதாசி 11.1.1.1.1.1.2 க்கு பதில்கடிதம் போடலை என்று ரொம்பவே வெசனை பட்டுகிட்டு இருந்தீங்க இல்லையா…. இப்ப பதில் போடறேன்… படிச்சிக்கிங்க….

                  அனானியன் : நான் ராமனை திட்டவேண்டும் என்ற உங்கள் விருப்பம் நிறைவேறாததன் விளைவு தான்இவ்விவகாரத்தில் உங்கள் முதல் பின்னூட்டம் என்பதை கீழ்கண்ட தங்கள் வாசகத்தில் இருந்து புரிந்து கொள்ள முடிகிறது.

                  பதில் : கண்டிப்பா எனக்கு வருத்தம் தான்… ஒரு தமிழன விரோதி அதாங்க ராமன் சீமானை நக்கல் செய்வது போன்று தமிழ் மொழியை நக்கல் நையாண்டி செய்யும் போது நீங்க அவரை கண்டிக்காமல் இருபது எனக்கும் வருத்தம் தான்.

                  அனானியன்: ஏனெனில் எனது பின்னூட்டத்தின் வழியாக சீமான் குறித்த சரியான பார்வையை கிட்டத்தட்ட வினவின் பார்வையை, வினவை விமர்சிக்கும் ராமனும் கொண்டிருக்கிறார் என்ற எனது ஆச்சரியத்தை மட்டுமே வெளிப்படுத்தி இருந்தேன்.

                  பதில்: ராமனின் விமர்சனம் வினவின் விமர்சனம் போன்று இருக்கு என்று கூற நீங்க யாரு/ வினவு அட்மினா? அவர் அவர் கருத்து அவருடையது மட்டுமே ! அதனை வினவின் கருத்தாக புரிந்து கொள்ள கூடாது என்று வினவு தெளிவாக தானே கூறியுள்ளது?

                  அனானியன்: தமிழின உணர்வு குறித்து ராமன் எங்கும் அவதூறாகப் பேசவில்லை. (மேற்சொன்ன வாசகத்தை எடுத்து வைத்துக் கொண்டு அண்ணன் குமார் அடுத்த ரவுண்டில் கம்பு சுத்துவார் என்பதும் எனக்குத் தெரியும். இருந்தாலும் அண்ணே, நீங்கள் என்னுடைய 2 கேள்விகளுக்குப் பதில் சொல்லிவிட்டு பின்னர் கம்பு சுழற்றுமாறு கேட்டுக் கொள்கிறேன்.)*** நீங்களாகவே திடீரென உள்ளே புகுந்து தமிழின உணர்வுக்கு நீங்கள்தான் பாடம் எடுக்கத் தொடங்கியிருக்கிறீர்கள்.

                  பதில் :ஒருவர் மற்றவரை பார்த்து கிண்டல் ,கேலி செய்து விமர்சனம் செய்யும் போது அதனுடாக தமிழை மரியாதை குறைவாக ஒப்புமை செய்வது எப்படி சரி ?

                  அனானியன்: அதை விடக் கொடுமை என்னவெனில், திடீரென தமிழின உணர்விலிருந்து எவ்விக் குதித்து போலிக் கம்யூனிஸ்ட்டாக என்னை முத்திரை குத்திவிட்டீர்கள். எத்தனைப் பட்டத்தைத் தான் நான் வாங்கிக் கொள்வது ? போலித் தமிழினவாதியா ? போலிக் கம்யூனிஸ்ட்டா ? இல்லை நானே ஒரு இலுமினாட்டியா ?

                  பதில் : தமிழன விரோதி ராமனின் தமிழ் மீதான மலிவான நக்கலை, அவதூரை கண்டிக்காத நீங்க இதுவரைக்கும் காட்டிக்கொண்டு இருந்த உங்க கம்யுனிச முகத்தின் காரணமாக போலி கம்ம்யுநிடு தான்…

                  அனானியன் : இப்போது தான் எனது கருத்து என்ன என்று நீங்களே கேட்கிறீர்கள் அண்ணன் குமார் அவர்களே.. உங்கள் கேள்வியின் பொருள் என்னவென்றால், ராமனின் வாசகம் குறித்து நான் எந்தக் கருத்தும் இதுவரை சொல்லவில்லை என்பதுதான். அதைத் தான் உங்களது கேள்வி நிரூபிக்கிறது. இதுவரை ஒரு விசயத்தைப் பற்றி கருத்தே சொல்லாத ஒரு அப்பாவி சிறுவனுக்கு (நான் தான்:) ) தமிழின விரோதி என்று முத்திரை குத்தி, போலி கம்யூனிஸ்ட் என்ற முத்திரையும் குத்தி இருக்கிறீர்களே ? இது நியாயமா அண்ணே !! அப்படிப் பார்த்தால் ராமனின் பதிலைப் படித்து விட்டு கடந்து போன பலரும் போலி கம்யூனிஸ்ட் மற்றும் தமிழினவிரோதி தானே ?

                  பதில் : கண்டிப்பாக ராமனின் கருத்துகளை கோமாளியின் கருத்து என்று கடந்து போன வினவு வாசகர்கள் போலிகள் கிடையாது… அதே நேரத்தில் தமிழன விரோதி ராமனின் கருத்துகளை வினவு கருத்துகள் போன்று உள்ளது என்று கூறிய நீர் தான் போலி

                  அனானியன் : சரி போய்த் தொலையட்டும். நான் கடந்த பின்னூட்டத்தில் தங்களிடம் கேட்ட 2, 3 -வது கேள்விகளுக்கும் தங்கள் பதிலை எதிர்பார்க்கிறேன் அண்ணே…

                  பதில்: அவரின் கருத்துக்கு பதில் அளித்த போது அவரின் தமிழன விரோத உணர்வை
                  கண்டிக்காத உங்க மனநிலையே தவறு தான்.(இந்த பதில் 2 க்கு). கண்டித்து பதில் போட்டு இருக்கனும் தம்பி…(இந்த பதில் 3க்கு)

                  • இப்பத்தான் அண்ணே , கமலாலயத்தில இருந்து வெளிய எவ்விக்குதிச்சு இருக்கீங்க… ஆனா பாருங்க , நீங்க குதிச்ச இடம் ’நாம் டம்ள்ர் சோமான்’ வீடாகிப் போச்சு போலயே ?.

                    ஏன்னா கேள்விகளுக்கு கேட்குறவனே மெரண்டு போற மாதிரி பதில் சொல்லும் திறன் பெற்ற ஒரே தலைவரு அண்ணன் செந்தமிழன் சோமான் தான். அதுக்கடுத்து இதுக்கு தகுதி பெற்ற ஒரே அண்ணன், எங்கண்ணன் குமாரு தான்.. சரி நான் ஸ்ட்ரைட்டா மேட்டருக்கு வர்றேன்..

                    ”அண்ணன் சீமான் பிரிக்கும் காற்றிலும் தமிழ் மணக்கும்” என்பது சீமானின் தமிழுணர்வு நாடகத்தை நையாண்டி செய்வதாகத் தங்களுக்குத் தெரியவில்லை, ஆனால் அது தமிழினத்தை நையாண்டி செய்வதாகத் தெரிகிறது.
                    சரி உங்க மண்டைக்கு எட்டுன மாதிரி ஒரு கேள்வி கேக்குறேன். சரியாண்ணே… இதுக்கும் சமத்தா பதில் சொல்லனும், பாஜக காரன் மாதிரி டென்சனாகக் கூடாது.. டீலா ?

                    “கம்பன் வீட்டுக் கட்டுத்தறியும் கவி பாடும்”
                    – இதுல கட்டுத்தறி புகழப்பட்டிருக்கா ?
                    – இல்லை கவி புகழப்பட்டிருக்கா ?
                    -இல்லைன்னா கம்பனின் கவித்திறன் புகழப்பட்டிருக்காரா ?.

                    “சீமான் பிரிக்கும் குசுவிலும் தமிழ்மனம் கம்ழும்”
                    – இதுல குசு கேவலப்படுத்தப்பட்டிருக்கா?
                    – தமிழ் கேவலப்படுத்தப்பட்டிருக்கா?
                    – இல்லை சீமானின் தமிழுணர்வு கேவலப்படுத்தப்பட்டிருக்கா ?

                    இந்த ரெண்டையும் ஒப்பிட்டுப் பார்த்து சரியா பதில் சொல்லுண்ணே ..
                    மறுபடியும் மொதல்ல இருந்து ஆரம்பிச்சிடாதண்ணே..

                    • மீண்டும் மீண்டும் அறிவை கழற்றி வைத்துவிட்டு தான் பேசிகிட்டு இருக்கீங்க அனானியன்.தமிழன விரோதி ராமன் , சீமானை விமர்சிப்பதாக சொல்லிகொண்டு தமிழ் மொழியை இழிவி செய்வது உங்களுக்கு புரியாதால் தான் அல்லது புரியாத மாதிரி நீங்க நடிப்தால் தான் இவ்வளவு நேரமும் ராமனுக்கு ஆதரவாக வாத்டிகிட்டு இருகிங்க…

                      கம்பன் வீட்டு கட்டுத்தறி விசயத்தில் கம்பனின் தமிழ் மொழி அறிவு அவர் வீட்டு கட்டு தரியுடன் ஒப்புமை செய்யப்பட்டு கம்பனும் சிறபிக்கப்டுகின்றார் அவர்வீட்டு கட்டு தறியும் சிறபிக்கப்டுகின்றது . அதே நேரத்தில் சீமான் பிரிக்கும்…. விஷத்தில் சீமான் நையாண்டி செய்யபடுவதுடன் தமிழ் மொழியும் இழிவு செய்யபடுகிறது… தெளிவாக தானே சொல்லிக்கிட்டு இருக்கேன் இவ்வளவு நேரமாக சீமானை விமர்சிப்பதில் எந்த ஒரு தவறும் இல்ல அதே நேரத்தில் அவருடன் தமிழை ஒப்புமை செய்து தமிழ் மொழியை இழிவுசெய்வது தான் தவறு என்று தெளிவாகவே தானே சொல்லிக்கிட்டு இருக்கேன் அனானியன்…

              • //ஒருத்தன் விடும் குசுவில் தான் தமிழ் மனகிறது என்றால் அது நக்கல் நையாண்டி இல்லையா?//

                இங்க மூக்கை நுளைக்கவே மனம் வருகுதில்லை , அது சீமானை குறித்து வைக்க பட்ட சத்தம் தானே, ஒரு நரியை நக்கலடிப்பது எவ்வாறு இனத்தை அவமதிப்பதாகும்? இந்த சின்ன விசயத்தை புரியாமல் அல்ல நடித்து ஒரு கம்பு சுட்டற விளையும் உங்களை…நல்லவேளை ‘சட்டக்கல்லூரி’ யை எடுத்து விட்டார், இல்ல அதுக்கே அவமானம்.]

                முற்போக்கு அது இது என்று பிச்சு உதறும் நீங்கோ இப்போ தமிழின வெஞ்சினத்தை யாருக்கு சொறிந்து மூட்டிவிட இந்த அற்ப முயற்சி?

                அனானியன் நல்ல குத்துங்க எசமா நல்ல குத்துங்க இவிரு நைச்சியமா மொக்கை போடுராராம்.

                • ரொம்ப எளிமையான பதில்… சட்டக்க்ல்லூரியை விட்டு விலகியதால் சட்டக்க்ல்லூரி மாணவன் என்ற பெயரை மாறிட்டேன்… வெறும் மாணவன் தான் இனி…

                  பிற விசயங்களுக்கு மொத்தமாக பதில் அளிகின்றேன்.

  11. அனானியன்,S.S.கார்த்திகேயன்

    ஒருத்தன் விடும் குசுவில் தான் தமிழ் மனகிறது என்றால் அந்த வாதம் நக்கல் நையாண்டி இல்லையா? தமிழ் மீதும் தமிழர் மீதும் செலுத்தபடும் அவதூறு இல்லையா?

    • சீமான் குறித்துக் கூறப்பட்ட பதிவில் சீமானை விடுவித்து தமிழை மையப் பொருளாக மாற்ற கொஞ்சமாவது பயிற்சி வேண்டும் குமார் அண்ணே… நீங்கள் அந்த வேலைக்கெல்லாம் சரிப்பட்டு வர மாட்டிங்க..

      • சீமானை எப்படி வேண்டுமானாலும் விமர்சனம் செய்து கொள்ளுங்க என்று எனது பின்னுட்டம் 13 ல் இப்படி கூறியுள்ளேன்…எப்படி?

        “””
        ஒருவர் மற்றவரை பார்த்து கிண்டல் ,கேலி செய்து விமர்சனம் செய்யும் போது அதனுடாக தமிழை மரியாதை குறைவாக ஒப்புமை செய்வது எப்படி சரி ?

        “”

        அதே நேரத்தில் தமிழ் மொழியை ராமன் மரியாதை குறைவாக ஒப்புமை செய்து பேசுவதும் அது வினவு கருத்து போன்றே உள்ளது என்று நீங்க கூறுவதும் எப்படி சரியாகும்? யோசித்து பதில் சொல்லுங்க தம்பி….!

      • தம்பி அனானியன் ..,மேலும் எனது பின்னுட்டம் 14 ல் :

        எதனை விமர்சனத்துக்கு உட்படுத்தனுமோ அதனை விமர்சியுங்க…ராமன் போன்றவர்கள் கூட விமர்சிக்கட்டும்…. அதே நேரத்தில் “அவன் வீட்ட குசுவில் தமிழ் மனகின்றது” என்கின்ற ராமனின் கருத்து தமிழ் மொழியை இழிவு செய்வதால் அது கண்டனத்துக்கு உரியது மட்டும் அல்ல மிக மலிவான நக்கல் நையாண்டியும் கூட…

        என்று தெளிவாக தானே சொல்லியிருக்கேன்… புரியலையா? இல்லை புரியாத மாதிரியே நடிகின்ரீரா?
        இவ்வளவு விளக்கம் கொடுத்த பின்னும் தமிழன விரோதி ராமனை கண்டிக்க மனமிலா நீங்க போலி தானே?

  12. அனநியனின் ஒப்புதல் வாக்கு மூலங்களும் என் கேள்விகளும் :

    வாக்குமுலம் 1 .ஏனெனில் எனது பின்னூட்டத்தின் வழியாக சீமான் குறித்த சரியான பார்வையை கிட்டத்தட்ட வினவின் பார்வையை, வினவை விமர்சிக்கும் ராமனும் கொண்டிருக்கிறார் என்ற எனது ஆச்சரியத்தை மட்டுமே வெளிப்படுத்தி இருந்தேன்.

    என் கேள்வி 1 :// அப்படி என்றால் சீமானின் ஊடாக ராமன் தமிழ் மீது செய்த நக்கல் நையாண்டிக்கு அன்னியன் ஆதரவு தேரிவிகின்றாரா? வினவை எதுக்கு இந்த விசயத்தில் நீங்க கையை புடிச்சி இஸ்துக்கனும் அனானியன்?//

    வாக்குமுலம் 2.தமிழின உணர்வு குறித்து ராமன் எங்கும் அவதூறாகப் பேசவில்லை. (மேற்சொன்ன வாசகத்தை எடுத்து வைத்துக் கொண்டு அண்ணன் குமார் அடுத்த ரவுண்டில் கம்பு சுத்துவார் என்பதும் எனக்குத் தெரியும். இருந்தாலும் அண்ணே, நீங்கள் என்னுடைய 2 கேள்விகளுக்குப் பதில் சொல்லிவிட்டு பின்னர் கம்பு சுழற்றுமாறு கேட்டுக் கொள்கிறேன்.)*** நீங்களாகவே திடீரென உள்ளே புகுந்து தமிழின உணர்வுக்கு நீங்கள்தான் பாடம் எடுக்கத் தொடங்கியிருக்கிறீர்கள்.

    என் கேள்வி 2 :// ஒருவர் மற்றவரை பார்த்து கிண்டல் ,கேலி செய்து விமர்சனம் செய்யும் போது அதனுடாக தமிழை மரியாதை குறைவாக ஒப்புமை செய்வது எப்படி சரி ? //

    வாக்குமுலம் 3.ராமனின் வாசகம் குறித்து நான் எந்தக் கருத்தும் இதுவரை சொல்லவில்லை என்பதுதான். அதைத் தான் உங்களது கேள்வி நிரூபிக்கிறது.

    என் கேள்வி 3://அப்ப முதல் பாயிண்டில் வினவு கருத்து போன்று இருக்கு என்று கூறியது யார் அனானியன்?

    • ஒரிசினல் கம்மினிஸ்ட் குமாரு..

      பாஜககாரன் மாதிரி விவாதிக்காதீங்க அண்ணாச்சி… அவனுங்க தான் விவாதத்துல நிக்க வச்சி கேள்விக் கேட்டோம்னா பதில் சொல்ல மாட்டானுங்க … அப்படியே நைசா ப்ளேட்ட மாத்திருவானுங்க..

      அவனுங்க வெக்கங்கெட்டவனுங்க குமாரு… நீங்களுமா ?

      கொஞ்சம் அறிவு நாணயம் இருந்தா, நான் 11.1.1.1.1.1.2 ல கேட்ட கேள்விகளுக்கு பதில் சொல்லுங்க ..

      அதுக்கு பதில் சொல்ல வக்கில்லாம அடுத்த கேள்விக்கு பாஜக காரன் மாதிரி தாவக் கூடாது..

      நான் கேட்ட பிரதான கேள்வியான , நான் போலி கம்யூனிஸ்ட் என்ற உங்களது வாதத்தையும், தமிழின உணர்வு அற்றவன் என்ற உங்களது வாதத்தை ஆதாரத்தோடு நிரூபிக்க கேட்டிருந்தேன். அதுக்கு பதில் சொல்ல துப்பில்லை.
      ஒருவன் எப்படி தமிழினவாதியாகவும், சுத்தக் கம்மினிஸ்டாகவும் இருக்க முடியும் என்று கேட்டிருந்தேன். அதற்கும் பதில் இல்லை.

      ராமனின் கருத்துக்கு உங்களின் வியாக்கியானம், உமட்டுகிறது. சீமானிடமிருந்து விவாதத்தைத் திசை திருப்பும் உங்கள் முயற்சி அதை விட கேவலமாக உமட்டுகிறது.

      இருந்தும் மூக்கைப் பிடித்துக் கொண்டே கேட்கிறேன்.. பதில் எங்கே திருவாளர் ஓடுகாலியே…

      • தம்பி அனாநியன் , நீங்க தமிழனவிரோதி ராமனின் கருத்துகள் வினவு கருத்து போன்று இருக்கு என்று மெய்மறந்து கூரியில்லாத முதலில் மீண்டும் படிச்சிபாருங்க…. தமிழன விரோதி ராமனின் கருத்துகளை கண்டும் எத்ரிப்பு தெரிவிக்காமல் அவருக்கு ஜால்ரா தட்டியுள்ளீர்கள் உங்க பின்னுட்டம் 11.1 ல். இவ்வளவு அஆதாரங்கள் இருக்க உத்தர் போன்று இப்ப இங்கே பேசிகிட்டு உள்ளீர்கள்.. எந்த கம்யுநிச்டும் எந்த மொழிக்கு எதிராகவும் பேசமாட்டாங்க எந்தர்ற்கு ஆசான் லெனின் அவர்களின் மொழி சார்ந்த கருத்துகளே சாட்சி.. ஆனா நீங்க…?அப்ப நீங்க போலி தானே?

        //நான் கேட்ட பிரதான கேள்வியான , நான் போலி கம்யூனிஸ்ட் என்ற உங்களது வாதத்தையும், தமிழின உணர்வு அற்றவன் என்ற உங்களது வாதத்தை ஆதாரத்தோடு நிரூபிக்க கேட்டிருந்தேன். அதுக்கு பதில் சொல்ல துப்பில்லை.//

  13. சின்னா, அனானியன்.,

    ஒரு பெண்பால் புலவர் இந்த ராமனை போலவே தான் பெண்ணியத்தை உயர்த்தி பிடிபது என்ற நோக்கில் மார்சியத்தையும் அதன் வரலாற்று தோழர்களையும் இழிவு செய்தார். அவருக்கு ஒரு பெண்கள் சார்ந்த அமைப்பு கொடுத்த பதில் அடியை நீங்க மறந்து இருக்க மாட்டிங்க என்றே நினைகின்றேன். எதனை விமர்சனத்துக்கு உட்படுத்தனுமோ அதனை விமர்சியுங்க…ராமன் போன்றவர்கள் கூட விமர்சிக்கட்டும்…. அதே நேரத்தில் “அவன் வீட்ட குசுவில் தமிழ் மனகின்றது” என்கின்ற ராமனின் கருத்து தமிழ் மொழியை இழிவு செய்வதால் அது கண்டனத்துக்கு உரியது மட்டும் அல்ல மிக மலிவான நக்கல் நையாண்டியும் கூட…

    • மலிவான நக்கல் நையாண்டியைப் பற்றி சீமான் கொள்ளாத அக்கறை அண்ணனுக்கு எங்கிருந்து வந்தது தெரியவில்லையே?

      • தம்பி அன்னியன், உங்க கருத்துப்படி சீமான் மட்டுமே தமிழர் இல்லை… முதலில் அவர் பிறந்த இடம் காரணமாக தமிழரா என்பதே கேள்விக்குறி தான். ஆனால் நான் தமிழன்,என் மூததையர்கள் அனைவருமே தமிழ் மண்ணில் பிறந்தவர்கள் தான்…அப்ப நான் கேள்வி கேள்வி கேட்காமல், என்னை போன்ற தமிழர்கள் கேள்வி கேட்காமல் வேறு யார் வந்து கேள்வி கேட்க முடியும் சொல்லுங்க தம்பி? உங்களுக்கு இன உணர்வு இல்லை என்றால் அதுக்கு நான் என்ன செய்ய?

      • சகோதரர் அனானியன்…, இன்னும் விளக்கமாகவே பேசுறேன்.. அப்போதாவது உங்களுக்கு புரியுதா பார்கலாம்… கம்பன் வீடு கட்ட்டுத்ரியை ராமனுக்கு ஆதரவாக கொண்டு வந்தீர்கள் அல்லவா? இப்ப நான் லீனா மணிமேகலையின் அவல கவிதையை என் சார்பாக நிற்கும் தமிழுக்கு ஆதரவாக கொண்டு வேறென்..

        ராமன் தமிழை இழிவு செய்யும் போது மகிழ்ந்த நீங்க இந்த கவிதைகளையும் கண்டு மகிழ முடியுமா? ஒரு வேலை நீங்க மகிழ்ந்தால் நீங்க போலி என்பது ஊர்ஜிதம் ஆயிடும்… பார்த்து பக்குவமா பதில் சொல்லுங்க…

        “”ஒரு புணர்தலின் உச்சியில் விலகி
        அந்தரத்தில் விந்தைப் பீய்ச்சி
        தோழர் என்றெழுதினாய்
        உடலை உதறி கொண்டு எழுந்து
        உலகத் தொழிலாளர்களே ஒன்றுபடுங்கள் என்றார் மார்க்ஸ்
        என்று பிதற்றினாய் “””

        -அவல கவி மணிமேகலை

        “””
        கால்களுக்கிடையே தலையை இழுத்தேன்
        உபரி என யோனி மயிரை விளித்தாய்
        உற்பத்தி உறவுகள் என தொப்புளை சபித்தாய்
        லெனின் ஸ்டாலின் மாவோ சி மின்
        பீடத்தை ஒவ்வொருவருக்காய் தந்தாய்
        முலைகளைப் பிசைந்து சே என்றாய் பிடல் என்றாய்
        மனம் பிறழந்த குழந்தை போல மம்மு குடித்தாய்
        பிரஸ்த்ரோய்கா, க்ளாஸ்னாஸ்ட் என்று மென்று முழுங்கினாய்
        இடையின் வெப்பத்தில் புரட்சி என்றாய்
        மூச்சின் துடிப்பில் பொதுவுடைமை என்றாய்
        குறியை சப்ப குடுத்தாய்”””

        –அவல கவி மணிமேகலை

        பெண்ணியம் சார்ந்து பெண்களின் பிரச்சனைகளை பற்றி பேசும் தருணத்தில் என்ன மயித்துக்கு இப்படி மார்சியத்தை அந்த அவல கவி இழிவு செய்யணும்? இப்பவாது விஷயம் விளங்குதா இல்ல இன்னும் காஞ்சி புறம் காமாச்சி, க்மாலாயம் என்று பினாத்த போறிங்களா சகோ?

        • மறுபடியும் இங்கு குறுக்கிட வருந்துகிறேன், இது வெறுமனே ஒப்பீட்டுக்காக போடப்பட்ட பின்னூட்டம் போல் தெரியவில்லை, முதலில் சீமானின் குசுவை வைத்து தமிழை கேவலபுடுதுகிறான் எனும் அவல நிலையில் தமிழ் இல்லை, நீங்க ஏதேதோ காரணங்களுக்காக அந்த வரியை தூக்கி பிடித்து இப்போது அந்த மறைகழன்ற விலங்கின் ‘கவிதையை’ (காசுக்கு பாடிய போர்னோ பாடல்) இங்கு ஒப்பிட என்ன அவசியம் வந்தது? உங்களுக்கு அனானியன் கேட்டதற்கு விளக்கம் தெரியலியா? முதலில் கம்பனின் கவித்திறன் புகழப்பட்டது, கம்பனோ கட்டுதறியோ அல்ல, பின்னதில் சீமானின் ‘தமிழுணர்வு’ இகழபட்டது. குசுவோ தமிழோ அல்ல (நானும் தமிழின விரோதிதான்). இந்த எளிய தமிழ் நடை புரியாம தமிழுணர்வு கொண்டு நீங்க பொங்குவது தான் நகைமுரண்.

          அனானியன் நண்பரின் பதிலுக்கு சரியான பின்னூட்டம் போடமுடியாமல் புழுங்கி புழுங்கி இப்போ இந்த லெவலுக்கு இறங்கிட்டிங்க, தெரியாம கேக்கிறன், அனானியன் அவர்களின் ஒப்பீடு பொருள் பதிந்தது எனக்கு புரிந்தது, நீங்க எதுக்குங்க இவ்ளோ நேரம் ரூம் போட்டு யோசிச்சு இப்போ அந்த லூசு பெண்ணின் ஒப்பாரியை இங்கு போடுறிங்க? தமிழ் பத்தி பேசின உங்களுக்கு கொதிப்பது போல இந்த ‘கவிதையை’ பாத்துபுட்டு எங்களுக்கு கொதிக்கணுமே என்னு பெரிய அறிவாளி போல கேட்பதற்கு எதிர்பார்த்தா? அப்படியென்றால் உங்களுக்கு ஏமாற்றமே மிஞ்சும். அந்த பெண் வாங்கிய காசுக்கு நல்ல ஒப்பாரி வச்சா அப்படியே வாங்கிகட்டியும் கொண்டாள், நீங்க இதை போய் இறுதி அஸ்திரம் ரேஞ்சுக்கு பாவிப்பது தான் பெரிய சிப்பு. கோபமாக வாதிடுங்கள் , நக்கல் நையாண்டி செய்யுங்கள், ஆனால் தரம் தாழ்ந்து போகவேண்டாம்.

          • சின்னா, ஒருவரை சிற்பிக்கின்ற போது அவரை வேறு ஒன்றுடன் ஒப்புமை செய்யும் போது ஒருவருமே தான் உயர்த்தப்டுகிரார்கள்… அதே போன்று தான் கம்பனும் ,கட்டுத்தறியும் அந்த உவமையில் சிற்பிக்க படுகின்றார்கள்… ஆனால் ஒருவனின் குற்றத்தை நாம் விமர்சிக்கும் போது அவரை வேறு ஒன்றுடன் ஒப்புமை செய்யும் போது இரண்டுமே சிருமைப்டுத்தப்டுகிறது. அப்படி தான் சீமானின் குற்றத்துக்காக அவர் விமர்சிக்கப்டும் தருணத்தில் அவருடன் ஒப்புமை செய்யபடும் தமிழ் மொழியும் சிறுமை படுத்தபடுகிறது… அதுவும் அவன் விட்ட குசுவில் எல்லாம் தமிழை கலந்து பேசும் ராமனின் பேச்சு மனநிலைதடுமாரியவனின் போச்சிலும் கேவலமானது… மேலும் பின்னுட்டம் 11.1.1.1.1.1.2.1.1.1 விளக்கம் கொடுத்து இருக்கேன் படிச்சிக்கிங்க … பின்னுட்டம் 18 கூட உங்களுக்கு தானே!

          • சின்னா மற்றும் அனானியன்,

            அதே காரணத்துக்காக தான் நானும் தமிழை ராமன் இழிவு படுத்தும் கருதத்தாக்கத்தை எதிர்கின்றேன். மணிமேகலையின் வக்கிற உணர்வு வெளிப்பாடுகளை மறை கழன்ற விலங்கின் கவிதையை என்று மிக சரியாக சொன்னீர்கள் அல்லவா? அதே தான் இந்த விசயத்திலும்…, ராமன் என்ற மறை கழன்ற விலங்கின் வக்கிர ஒப்புமையை தான் சுட்டிகாட்டிகொண்டும் அதனை வினவில் அம்பலப்டுதிக்கொண்டும், அந்த விலங்கின் மனநிலையை கடுமையாக எதிர்த்துக்கொண்டும் இருக்கேன். விசயத்தை சரியா புரிந்து கொள்ளாமல் நீங்க தான் அந்த விலங்கின் நடத்தையை ஆதரித்துக்கொண்டு இருக்கீர்கள்! கொடுமை சினன்னா இது!

            //நீங்க ஏதேதோ காரணங்களுக்காக அந்த வரியை தூக்கி பிடித்து இப்போது அந்த மறைகழன்ற விலங்கின் ‘கவிதையை’ (காசுக்கு பாடிய போர்னோ பாடல்) இங்கு ஒப்பிட என்ன அவசியம் வந்தது? //

            முதலில் விசயத்தை நேர்மையாக நாம பார்க்கணும்… ராமன் செய்தது ஒப்புமை கூட கிடையாது. அதனையும் மீறிய தமிழ் மொழி மீதான நேரடியான வக்கிர தாக்குதல்.. அவர் சொல்வதனை கவனியுங்க:””தலைவர் வாயு பிரித்தாளும் அதில் தமிழ் மணம் கமழும் என்பதை அறிந்து கவலை இன்றி நித்திரை கொள்வீராக.””

            இது ஒன்றும் ஒப்புமை அல்ல… அதனையும் தாண்டி வக்கிரமானது சின்னா.. ஒருத்தனின் வாயுபிரிந்தாலும் அதிலும் தமிழ் மனம் கமழும் என்று…. அவன் விடும் குழுவில் கூட தமிழ் மணக்கும் என்று வக்கிர உணர்வுடன் நேரடியாகவே தமிழ் மொழியை இழிவு செய்கின்றார் அல்லவா?

            ஆது சரி…! விவாதத்தில் இருந்து ஓடிப்போன வக்கிர விலங்குக்கு என்னத்துக்கு நீங்களும் , அனானியனும் கோழ்டி சேர்ந்துகிட்டு எசப்பாட்டு பாடி ஆதரவு தெரிவிக்கணும் சொல்லுங்க பார்கலாம்?
            //இந்த எளிய தமிழ் நடை புரியாம தமிழுணர்வு கொண்டு நீங்க பொங்குவது தான் நகைமுரண். //

  14. சகோ இராமன் , ஒருவேளை உங்க பார்பன வர்க்க இயல்பு படி உண்டு கொழித்துவிட்டு வேலையும்அ செய்யாமல்த அனுடாக செரிமான பிரச்சனை காரணமாக உங்களவர்களுக்கு வாய்வு பிரியும் நிலையில் ஏற்படும் சமஸ்கிருத சுலோகங்கள் போன்று தான் தமிழும் பிறந்து இருக்கு என்று நினைத்துகொண்டு உள்ளீரோ? அப்படி இல்லங்க…. விசயம் என்னவென்றால் தமிழ் உங்க சமஸ்கிருதத்தை போன்ற செயற்கையான மொழி கிடையாதுங்க… இது பல ஆயிரம்ஆ ண்டுகள் நிழந்த மானுட வாழ்வின் ஊடாக மக்களால் பயன்பாட்டுக்கு வந்த மொழிங்க….

    • ஸ்டாலின் – கொண்டை தெரியுது …

      ஐ.டியை மாத்திப் போடத் தெரிஞ்ச அண்ணேனுக்கு எழுத்து நடையை மாத்தத் தெரியலயே ..

      இதே சகோ-வையும் இப்படிப் பட்ட மொன்னைத்தனமான கருத்தையும் ஏற்கனவே இன்னோரு ஐடியில ஒரு வறட்டுத்தத்துவ வியாதி போட்டுட்டு இருந்தாரு..

      அந்த ஐடிக்கு ரிவெட்டு கட்டுனதும், இன்னொரு ஐ.டியா ?.. நீங்க ஜமாய்ங்க அண்ணே…

      • உங்க கொண்ட தெரிந்தால் இறுக்கி கட்டிக்கிங்க தம்பி அனானியன்… நான் என்ன செய்ய? போலிகளான உங்க கருத்தும் , சின்னா வின் கருத்தும் ஒன்றாக இருபதால் நீங்க இருவரும் ஒருவரே என்றால் அது சரியாகுமா? உலகத்திலேயே உங்களை போன்று ஒரு போலி தான் இருக்க முடியுமா? இன்னொருத்தரும் இருக்கலாம் அல்லவா தம்பி?

        • ஹைய்யோ ஹைய்யோ குமார் அவர்களே உங்க அலும்புக்கு அளவில்லாமல் போய்விட்டது, அனுபவம் போதாமலோ அவசரத்திலோ கொண்டையை மறைக்காமல் வுட்டுட்டு இப்போ சாமியாடி என்னங்க? ஏற்கனவே என்னையே தூணிலும் துரும்பிலும் பொம்மை பொம்மை ஏன்னு புலம்பி கடேசில நம்ம வினவு அண்ணன் வந்து உங்களுக்கு சாமி எறக்கி வச்சது மறந்துச்சா? XDD

          • என்ன ஓலரிகிட்டு இருக்கீங்க சின்னா…. அங்கே சோப்பு ,சீப்பு கண்ணாடி இருக்கு போய் வெளையாட்டு சின்னா… போங்க போங்க அப்பால போங்க சின்னா…!

        • ஹாஹாஹா … சரிண்ணே டென்சன் ஆகாதீங்க..
          நான் நம்பீட்டேன் — நீங்க வேற அந்த ஸ்டாலின் வேறன்னு ..

          சத்தியமா நம்பீட்டேண்ணே … நீங்க வருத்தப்படாதீங்க …

          பட் அப்பப்போ அந்த கொண்டைய மட்டும் மறந்துடுறீங்கண்ணே … மறதிக்க்கு வல்லாரை சாப்பிடுங்கண்ணே சரியாப் போகும்..

      • அன்னியன்வ.., நீங்க என்ன பார்பன-சமஸ்கிருத ஆரியரா ? வறட்டுத்தத்துவ வியாதி அது இது என்று நீங்க என்ன வேண்ருமானாலும் திட்டிகொல்லுங்க… ஆனால்அ பாருங்க அது விவாத பொருளே அல்ல…. விசயம் தமிழ் இயற்கையான மொழி, சம்ஸ்கிருதம் செய்யப்பட்ட மொழி என்று கூறுவதில் என்னங்க தவறு இருக்கு? நீங்க என்ன பார்பன-சமஸ்கிருத ஆரியரா ? இந்த அளவுக்கு எகிறி குதிக்கின்ரீர்கள் ? இங்கே வந்து பேசவேண்டிய ராமனே ஓடிட்டாரே ! அப்புறம் எதுக்கு நீங்க குதிக்கணும் ?

  15. ஸ்டாலின் என்ற பெயருடன் யாருனே இருக்க கூடாதா ? கருத்தில் உள்ள செறிவை கண்டும் காணமல் யாரிவர் என்று ஆராய்வது தான் விவாதிகின்ர முறையா ……சின்னா? அனானையன்?

  16. தம்பி அனானியனுக்கு விவாதிக்க எந்த வாதமும் இல்லாமல் என் அடையாளத்தை நிருபிக்க ஆதார் கார்டு அடையாளத்தை கேட்டுகிட்டு இருகாரு… என்ன கொடுமை இது! தமிழன விரோதி ராமனை பார்த்து சகோ என்று அழைக்கும் “பக்குவம்” எல்லாம் எனக்கு இல்லைங்க அனானியன்.

  17. நண்பர் சின்னா,

    இங்கே இந்த மணிமேகலையின் அவல கவிதையை எதிர்ப்பவர் அங்கே ராமன் என்ற தமிழன விரோதியின் அவல ஒப்புமையை என்னத்துக்கு ஆதரிக்கனும்? சொல்லுங்க பார்கலாம்? ராமன் தமிழ் மொழியை , கம்யுனிசத்தை நக்கல் நையாண்டி செய்யும் எல்லாம் தருணத்திலும் நான் யாதொரு பாகுபாடும் இல்லாமல் தான் கடுமையான எதிர்ப்பை தெரிவித்துக்கொண்டு இருக்கேன்… ஆனால் இங்கே பின்னுட்டபகுதியில் உலவும் சோ கால்டு கம்ம்யுநிடுகள் என்ன செய்யறீங்க என்றால் தமிழ் இனத்தை ராமன் போன்றவர்கள் இழிவு செய்யும் தருணத்தில் அவருக்கு எசப்பாட்டு பாடிகிட்டு இருக்கீங்க ;அப்படியே நீங்களும் போலிகள் என்பதனை உங்களை அறியாமலேயே வெளிகாடிகொண்டு இருக்கீங்க…

    என்ன பொருத்தவரைக்கும் இந்த மொழி விசயத்தில் ஆசான் லெனினின் கருதாங்கங்களை தான் பின்பற்றுகின்றேன்… தோழர் லெனின் அவர்களிடம் USSR சோவியத் ஒன்றியம் முழுக்க ரஷ்யா மொழியை கட்டாயம் ஆக சொல்லி ருஷ்ய கம்ம்யுநிடுகள் கோரிக்கை வைத்தார்கள்.. அப்ப அவர் கூறியது என்னவென்றால் என் ரஷிய மொழி மிக உன்னத்மாந்தாது தான் அதுக்காக பல்வேறு மொழி பேசும் USSR சோவியத் யூனியனில் ரஷிய மொழியை கட்டாயம் ஆக்க மாட்டேன் என்றார். மேலும் என்ன கூறினார் என்றால் யாரையும் தடியெடுத்து துரத்தி சொர்கத்துக்கு அனுப்ப முடியாது என்றார். அவரின் இந்த கருத்துகளை முழுமையாக ஏற்க்கும் நான் அதனுடன் மேலும் ஒன்றையும் என்னுடைய ஆளுமையில்-சுயத்தில் சேர்த்துக்கொள்கின்றேன். அது என்ன என்றால்:

    பிறப்பால் ஒருவர் எந்த மொழியாளனாக பிறகின்ராரோ அவருக்கு அந்த மொழியை பாதுகாக்கவும், அதனை எள்ளி நகையாடல்களுக்கு உட்படுத்தாமல் இருபதும் ,வேறு யாராவது மொழியை சிறுமை படுத்தி ,இழிவு செய்தால் அதற்கு எதிராக குரல்கொடுபதற்கும் உரிமையும் உண்டு… அது அவர்களின் கடமையும் கூட….என்றே அறிவு பூர்வமாக உணருகின்றேன். அந்த அடிபடையில் தான் நான் ராமன் “தமிழ் மொழியை சீமான் விட்ட குசுவில் இருந்து மணப்பதாக கூறும் தருணத்தில் ” அப்படி பட்ட இழிவு செய்தல்களை கடுமையாக எதிர்கின்றேன்…

  18. அன்னியன் மற்றும் சின்னா , இந்த விவாதத்தில் என்னுடைய வாதம் இதுவே இறுதியானதாக இருக்கும் என்று நம்புகின்றேன். இந்த ராமன் இதுகாரும் வினவில் வெளியிடும் பின்னுட்டங்களில் கம்யுனிச எத்ரிப்பு முதன்மையானதாகவும் ,தமிழ் மொழி மீதான விரோதம் அடுத்த நிலையிலும் தான் இருந்துகொண்டு இருக்கு…

    அப்படி பட்ட ராமன் கம்யுனிசத்தை கொச்சை படுத்த அல்லது, கம்யுனிச தோழர்களை இழிவுசெய்ய என்று இதே போன்று ராமன் பேசியிருந்தால் உதாரணத்துக்கு….

    “கம்யுனிஸ்டுகள் விடும் குசுவில் சோசியலிசம் மணக்கின்றது” என்று ராமன் கூறியிருந்தால் அப்பவும் கூட ராமனுக்கு ஆதரவாக இப்ப பாடுவது போன்று எசப்பாட்டு பாடிகிட்டு தான் இருப்பீர்களா? நேரடியா பதில் சொல்லுங்க..!

    ஆனால்… ஆவான எல்லாம் இல்லாமல் எதிர்ப்பேன்..அல்லது எதிர்க்க மாட்டேன் என்று சொல்லிட்டு போங்க…. நான் இந்த விவாதத்தை அத்துடன் நிறுத்திக்கொள்கின்றேன்… சரியா?

    இப்படி பட்ட நிலை வரும் என்றால் நான் ராமனை இப்போது எதிர்பதனை விட மிகவும் கடுமையாக எதிர்ப்பேன் என்பதே என்னுடைய நிலைப்பாடு… ஏன் இன்னும் கடுமையாக எதிர்ப்பேன் என்றால் எனக்கு என் தமிழ் மொழி உணர்வை விட வர்க்க உணர்வு எனக்கு முதன்மையானது ,முக்கியமானது என்பதால்…(அதே நேரத்தில் எனது தமிழ் மொழி உணர்வை நான் எப்போதும் யாருக்கும் விட்டுக்கொடுக்க மாட்டேன்)

  19. தமிழில் ஒரு வாக்கியத்தை படித்து புரிந்து கொள்ள முடியாதவர்கள் எல்லாம் தமிழை வளர்கிறார்களாம் !? குமார் சுடாலின் போன்றோர் தமிழ் தாயின் முகத்தில் உள்ள வடுக்கள் என்று கொள்ளலாம் .

    தமிழ் தெரியாது ஆனால் தமிழ் உணர்வு உள்ளது என்பது
    மதம் தெரியாமல் மத உணர்வோடு விநாயக சதுர்த்தி கொண்டாடும் அன்பர்கள் போன்றவர்கள் . அவர்கள் நோக்கம் வம்பு வளர்ப்பது மட்டுமே .

    என்ன உங்க மூக்கு கொஞ்சம் கோணையா இருக்கு என்றால் , என்னது எங்க சாதிகாரங்களை கோண மூக்கு காரங்க என்றா சொல்கிறாய் என்று கூறுபவர்கள் ஒரு விதமான மனோவியாதி கொண்டவர்கள். அவர்கள் ஒரு கூட்டம் தன பக்கம் இருக்கிறது என்கின்ற துணிவோடு வம்பு செய்யும் வீராதி வீரர்கள் .

    இது போன்ற ஆசாமிகளுக்கு பதில் கூறி விளக்கி கூறி ஒன்றும் ஆகப்போவது இல்லை . அவர்கள் அறிதலுக்காக இங்கு இல்லை , வம்புக்காக உள்ளார்கள் , பதில் கூறுவது ணெய் ஊற்றுவது போல …

    அனானியன் மற்றும் சின்ன இது போன்ற ஆசாமிகளை என்டர்டைன் பண்ணாமல் நேரத்தை மிச்சப்படுத்தவும்

    நன்றி

    • ”ராமன் வாயு பிரித்தாளும் அதில் சமஸ்கிருதம் மணம் கமழும் என்பதை அறிந்து கவலை இன்றி நித்திரை கொள்வீராக.”” —ராமனின் வக்கிரக்கருத்துக்கு இணையாக நம்மால பதில் வக்கிர கருத்து சொல்ல முடியாவிட்டாலும்…புத்தனின் போதனைகள் படி இராமனின் தமிழ் மொழிக்கு எதிரான வக்கிர கருத்துகள் திரும்ப அவரிடமே போய் சேரும்…சீமானுக்கு பதிலா ராமனையும், தமிழுக்கு பதிலா சமஸ்கிருதத்தையும் போட்டு நாம் அவர் கருத்தை அவருக்கே திருப்பி அனுப்புவோம்..

Leave a Reply to Selva பதிலை ரத்து செய்க

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க