“அரசியல் அராஜகங்களுக்கு அக்கிரமங்களுக்கு முடிவு கட்டு !” என்ற தலைப்பில் விருத்தாசலம் வானொலித்திடலில் 28.11.2017 அன்று மாலை நடைபெற இருந்த பொதுக்கூட்ட நிகழ்ச்சிக்கு கடலூர் மாவட்ட போலீசு தடை!

நீதிமன்றத்தில் வழக்கு தாக்கல் செய்து அனுமதி பெற்று பொதுக்கூட்டம் வேறு தேதியில் நடத்தப்படும்.

 

இந்த மாதம் முழுவதும் நான்கு முறை பெதுக்கூட்டம் நடத்த விருத்தாசலம் காவல் ஆய்வாளர், கடலூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் என மனு அனுப்பினோம். நான்கு முறையும் தெரு முனை பிரச்சாரம் உட்பட அனைத்திற்கும் முதல் நாள் இரவு அனுமதி மறுத்து கடிதம் வழங்குகிறது போலீசு.

ம.க.இ.க கோவன் வருகிறார் என கியூ பிரிவு போலீசார் சொல்கிறார்கள் எனவே அனுமதி தர முடியாது என மாவட்ட காவல் துறை வெளிப்படையாகவே மறுக்கிறது. சேத்தியாதோப்பு மணல் குவாரிக்கு எதிராக மக்கள் அதிகாரம் தொடர்ந்து போராடுவது காவல் துறைக்கு தொல்லையாக கருதுகிறது.

கருத்துரிமை நசுக்கப்படுகிறது. நடப்பது போலீசு ஆட்சி என்பது மீண்டும் மீண்டும் நிரூபிக்கபட்டு வருகிறது.

விழுப்புரம் மாவட்டம் உளுந்தூர் பேட்டையில் 27.11.2017 அன்று பொதுக்கூட்டம் – கலைநிகழ்ச்சி நடைபெற இருந்தது அதற்கும் முதல்நாள் இரவு 11.30 மணியளவில் அனுமதி மறுத்து கடிதம் வழங்கியுள்ளனர்.

நான் வைத்ததுதான் சட்டம் எந்த கோர்டுக்கு போனாலும் யாராலும் ஒன்றும் செய்ய முடியாது என்ற ஆணவத்தில் போலீசார் கூலிப்படையாக செயல்படுகிறார்கள். அதிகரித்து வரும் மக்கள் போராட்டம் போலீசுக்கு சரியான பாடம் புகட்டும். அதில் மக்கள் அதிகாரம் முன்னே நிற்கும்.

( படங்களைப் பெரிதாகப் பார்க்க அவற்றின் மீது அழுத்தவும் )

தகவல் :
மக்கள் அதிகாரம்,
விருத்தாச்சலம். 97912 86994.