privacy

about us

write

contact

shop

புதிய ஜனநாயகம்

புதிய கலாச்சாரம்

e-books

Global Influence

Communication

Legal Agreement

முகப்புவீடியோகுமரி : நிவாரணம் வேண்டாம் உயிர்களைக் கொடு ! - காணொளி

குமரி : நிவாரணம் வேண்டாம் உயிர்களைக் கொடு ! – காணொளி

-

குமரி: நிவாரணம் வேண்டாம்! உயிர்களைக் கொடு ! – காணொளி

கி புயலில் கடலில் காணாமல் போன மீனவர்களை மீட்பது குறித்து மெத்தனம் காட்டி வருகிறது எடப்பாடி அரசு. மீனவர்களின் நியாயமான கோபத்திற்கு திமிராக பதிலளிக்கிறார் மத்திய அமைச்சர் நிர்மலா சீதாராமன்.

நடுக்கடலில் தத்தளித்துக் கொண்டிருந்த போது கடற்படை ரோந்து கப்பல் தண்ணீர் கூடக் கொடுக்காமல் சென்றதாக தப்பி வந்த மீனவர்கள் கூறியதாகக் கூறுகிறார்கள் மீனவ பிரதிநிதிகள்.

மீனவர்களின் உயிர் அவ்வளவு மலிவானதா ?

குமரி மாவட்டம் பூத்துறை கிராமம், உள்ளிட்ட 8 கிராமங்கள் மிகவும் மோசமான அளவில் பாதிப்படைந்துள்ளன. அங்கிருந்து பெரும்பாலான மீனவர்கள் ஆழ்கடல் மீன்பிடிப்புக்குச் சென்று திரும்பவில்லை. குடும்பத்தில் உள்ள ஆண்கள் அனைவரின் கதியும் என்னவெனத் தெரியாத நிலையில் திக்கற்று நிற்கிறார்கள் மக்கள்.

எல்லாம் சரியாக நடக்கிறது என எடப்பாடியும், மத்திய அரசும் அப்பட்டமாக பொய் சொல்லிக் கொண்டு திரியும் நிலையில் அங்குள்ள நிலையை பூத்துறை மக்களே எடுத்துரைக்கிறார்கள்.

வீடியோ – நேர்காணல் : வினவு செய்தியாளர் குழு