privacy

about us

write

contact

shop

புதிய ஜனநாயகம்

புதிய கலாச்சாரம்

e-books

Global Influence

Communication

Legal Agreement

முகப்புபோலி ஜனநாயகம்போலீசுமீனவர்களுக்காக குரல் கொடுக்கச் சென்ற மக்கள் அதிகாரம் தோழர்கள் குமரியில் கைது!

மீனவர்களுக்காக குரல் கொடுக்கச் சென்ற மக்கள் அதிகாரம் தோழர்கள் குமரியில் கைது!

-

மீனவர்களுக்காக குரல் கொடுக்கச் சென்ற மக்கள் அதிகாரம் தோழர்கள் குமரியில் கைது!

மிழக மீனவர்களை காக்கத் தவறிய எடப்பாடி அரசையும், மத்திய மோடி அரசையும் கண்டித்துக் குமரியில் பல்வேறு பகுதிகளில் மீனவர்கள் போராடி வருகின்றனர். மீனவர்களுடன் பல்வேறு ஜனநாயக மற்றும் புரட்சிகர அமைப்புகளும் இணைந்து போராடி வருகின்றனர். மக்கள் அதிகாரம் அமைப்பைச் சேர்ந்த தோழர்கள் பல குழுக்களாக கன்னியாகுமரியில் தங்கி அங்கு மீனவர்களின் போராட்டத்தில் கலந்து கொண்டு அவர்களுக்கு ஆதரவு தெரிவித்து வருகின்றனர்.

மக்கள் அதிகாரம் அமைப்பைச் சேர்ந்த 7 தோழர்கள் நேற்று கன்னியாகுமரி மாவட்டம் நீரோடி கிராமத்தில் மக்களுடன் இணைந்து பிரச்சாரத்திலும், போராட்டத்திலும் ஈடுபட்டு வந்தனர். இன்று (10.12.2017) காலை சுமார் 6:00 மணியளவில் மக்கள் அதிகாரம் அமைப்பைச் சேர்ந்த தோழர்கள் தங்கியிருந்த மீனவரின் வீட்டிற்கு வந்த போலீசு, தோழர்களையும், அவர்களுக்கு தங்க இடமளித்த மீனவரையும் காரணம் ஏதும் சொல்லாமல் கைது செய்து அழைத்துச் சென்றது.

மேலும் நீரோடி கிராமத்தினர் மத்தியில் ‘தீவிரவாதிகள்’ இங்கு தங்கியிருப்பதாகவும் அவர்களைக் கைது செய்து போவதாகவும் பொய்யான தகவல்களைப் பரப்பி பீதியை ஏற்படுத்தியது போலீசு.
கைது குறித்து யாருக்கும் தகவல் தெரிவிக்காமல், தோழர்கள் 7 பேரையும் அவர்களுக்கு தங்க வீடு கொடுத்த மீனவரையும் எந்த போலீசு நிலையத்தில் வைத்திருக்கிறோம் என்ற தகவலைக் கூறாமல் இழுத்தடித்தது போலீசு.

குமரி மாவட்ட பகுதியில் உள்ள மக்கள் உரிமைப் பாதுகாப்பு மைய வழக்கறிஞர்களும் ஏனைய வழக்கறிஞர் நண்பர்களும் முழுவீச்சாகத் தேடியதில் தோழர்களையும் அவர்களுக்கு தங்க இடமளித்த மீனவரையும் மண்டைக்காடு போலீசு நிலையத்தில் வைத்திருப்பதாக தெரியவந்தது. சிறிது நேரத்திற்குப் பிறகு உள்ளூர் மீனவர்கள் மத்தியில் பிரச்சினை ஏற்படாமல் இருக்க அந்த மீனவரை மட்டும் விடுவித்திருக்கிறது போலீசு.

இதனையடுத்து வழக்கறிஞர்கள் அங்கு சென்று அவர்களை எந்தக் காரணத்திற்காக கைது செய்துள்ளனர் எனக் கேட்டதற்கு முன் பின் முரணாகப் பதிலளித்தது போலீசு. பின்னர், சென்னையிலிருந்து தங்களுக்கு உத்தரவு வரும் வரை மக்கள் அதிகாரம் தோழர்களை விடுவிக்க முடியாது என கூறியிருக்கிறது போலீசு.

இந்நிலையில் கைது செய்யப்பட்ட தோழர்கள் கிங்சன், மருது, கணேசன், முகமது அனஸ், ஆதி, மாரிமுத்து, அன்பு ஆகியோர் மீது u/s. 151 CRPC. r/w7(1)A. cla Act. ஆகிய பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்து சிறையில் அடைத்துள்ளது போலீசு.

  • எடப்பாடி மீனவர்களை வந்து பார்க்க மாட்டார்!
    பொன்னார் வந்து பார்க்க மாட்டார்!
  • மீனவர்களை வந்து பார்த்து ஆதரவு தெரிவிப்பவர்களையும் இந்த அரசு கைது செய்யுமாம் இவர்கள் மீனவர்களின் எதிரிகள், தமிழ்மக்களின் எதிரிகள் என்பதற்கு இன்னுமென்ன சான்று வேண்டும்?
  • தமிழ் மக்களே ஆயிரக்கணக்கில் குமரி நோக்கி வாருங்கள்
    எத்தனை பேரை கைது செய்வார்கள் பார்த்து விடுவோம்!

 

விவாதியுங்கள்

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க