அமெரிக்காவின் டெக்சாஸ் – எடின்பர்க்கைச் சேர்ந்த ரூத் எஸ்பிரிகுட்டா (Ruth Espiricueta) என்ற ஆசிரியை தனது மாணவி கிரிஸ்டல் பசேகோ (Crystal Pacheco) கிறிஸ்துமஸ் தாத்தாவிற்கு எழுதிய கடிதத்தை புகைப்படமாக ஃபேஸ்புக்கில் பகிர்ந்திருந்தார்.
எடின்பர்க்கின் மான்டே கிறிஸ்டோ ஆரம்பப்பள்ளியில் முதலாம் வகுப்பு (1st Grade) ஆசிரியையான அவர், தனது வகுப்பில் விருப்பம் மற்றும் தேவை ஆகியவற்றுக்கு இடையிலான வேறுபாட்டை விளக்கியுள்ளார். பின்னர் மாணவர்களிடம் அவர்களது விருப்பம் மற்றும் தேவையை இந்த ஆண்டு கிறிஸ்துமஸ் பரிசாக கேட்டு கிறிஸ்துமஸ் தாத்தாவிற்கு (Santa Claus) கடிதம் எழுதுமாறு கேட்டுள்ளார்.
வழமையாக பொம்மைகள், வீடியோ கேம் போன்ற விலையுயர்ந்த விளையாட்டுப் பொருட்களை மாணவர்கள் பரிசாக கேட்டிருப்பார்கள் என்றே அவர் எதிர்பார்த்துள்ளார். ஆனால், அந்த மாணவர்களின் கடிதங்களை படித்துப்பார்த்த போது அவை இதயத்தை உருக்கும் விதமாக இருந்துள்ளன.
குறிப்பாக, கிரிஸ்டல் பசேகோ என்ற 7 வயது குழந்தை “நான் இன்று நல்லாயிருக்கிறேன். இந்த கிறிஸ்துமஸ்க்கு நான் ஒரு பந்து மற்றும் உணவைப் பெற விரும்புகிறேன். எனக்கு ஒரு கம்பளிப் போர்வை தேவை” என எழுதியிருந்தாள்.
தனது மாணவர்கள் பசி பட்டினியாலும், உறைபனியில் பாதுகாத்துக்கொள்ள போர்வை இன்றியும் இருக்கும் வறுமை நிலையை அறிந்து வருந்திய ஆசிரியை அதை தனது ஃபேஸ்புக் பக்கத்தில் பகிர்ந்துள்ளார்.
அந்தக் குழந்தையின் தாய் மரியா இசபெல் கார்டெஜ் (Maria Isabel Cortez) இந்தக் கடிதம் குறித்து, அவளது அண்ணனும் அவளும் சேர்ந்து விளையாட பொம்மைக்கு பதிலாக ஒரு பந்தை விரும்பியிருக்கிறாள். வீட்டில் உண்பதற்கு உணவு வேண்டும், குளிரில் பாதுகாத்துக் கொள்ள கம்பளி வேண்டும் என்ற தங்களது குடும்பத்தின் நிலையை நினைத்து தான் அவள் அந்தக் கடிதத்தை எழுதியிருக்கிறாள். என்று தெரிவித்துள்ளார்.
ஃபேஸ்புக்கில் இந்த பதிவு பலரை சென்றடைந்ததைத் தொடர்ந்து பள்ளி நிர்வாகம் பேர்வைகளை நன்கொடை பெறும் இயக்கத்தை ஆரம்பித்தது. இதைப் பார்த்த பலர் அந்தப்பள்ளிக்கு கம்பளிப் போர்வைகளை கொடையளித்துள்ளனர்.
இது பூலோக சொர்க்கமான அமெரிக்காவில் அபரிதமாக உயர்ந்துவரும் வறுமையையால் பாதிக்கப்படும் ஏழைகளின் வாழ்நிலையைப் பற்றிய பார்வையை வழங்குகிறது.
அமெரிக்க அரசின் அமெரிக்க கணக்கெடுப்பு பணியகம் வெளியிட்டுள்ள அதிகாரப்பூர்வமான அறிக்கையின் படியே 2016 -ம் ஆண்டில் 40.6 மில்லியன் (4.06 கோடி) அமெரிக்கர்கள் வறுமையில் இருக்கின்றனர். இது அமெரிக்க மக்கட் தொகையில் 12.7 சதவீதமாகும். இந்த வறியவர்களில் 13.3 மில்லியன் (1.33 கோடி) பேர், அதாவது மூன்றில் ஒரு பகுதியினர் குழந்தைகளாவர்.
மேலும் :
- 1st grader asks for food, blanket in heartbreaking letter to Santa
- First grade teacher in Texas shares a heartbreaking letter to Santa written by one of her students – who asked for ‘food and a blanket’ – as well as ‘a ball’ so she can play with her brother
- 7-year-old student’s heart-breaking letter to Santa inspires overwhelming support
- Income and Poverty in the United States: 2016
புஷ்க்கு வீசப்பட்ட செருப்பளவு வீரியமானது இந்த குழந்தைகளின் கடிதங்கள், ஆனா தொடைச்சு போடுகின்னு ஷேர்மார்க்கெட் கம்ப்யூட்டர் ஸ்கிரீன் மேலேயே கண்ணா இருப்பமில்ல..
இது தான் சுதந்திரம்! உண்ண உணவில்லை, ஆனால் உணவில்லை என்பதை சொல்ல தடையேதுமில்லையே, சுதந்திரமிருக்கிறது.
மக்கள் உணவின்றி இருப்பதை சோசலிசம் ஒழித்தென்ன பயன்.. அங்கு சுதந்திரமில்லையே..
முதலாளித்துவம் தோன்றிய நாளில் இருந்து இன்று வரை அது தோற்றுவித்திருக்கும் பசி, பட்டினி, பஞ்சம் படுகொலைகளை கண்டுகொள்ளாதீர்கள். அவற்றைப்பற்றி பேசுவதற்கு சுதந்திரமிருந்தும் பேசாதிருங்கள்..
சோசலிசத்தில் பஞ்சங்கள் நடக்கவில்லையா? அவை செற்பமென்றாலும் அவற்றைபற்றி பேச சுதந்திரமில்லையே..
பாருங்கள், சோசலிசத்தின் பஞ்சங்களைப் பற்றிகூட முதலாளித்துவ சுதந்திரத்தைக் கொண்டு பேச முடிகிறது.. என்னே சுதந்திரம், என்னே சுதந்திரம்.
கொத்தடிமையாக கம்யூனிஸ்ட்களிடம் 3 வேலை உணவு சாப்பிடுவதைவிட சுதந்திரமாக 1 வேலை உணவு சாப்பிடுவது ஆயிரம் மடங்கு மேல்.
நீங்க தான் மூணுவேளையும் நோகாம கொட்டிக்கும் கும்பலை சேந்தவராச்சே அதான் ஒருவேளை என்றாலும் சொதந்திரம் அது இதுன்னு ஒலறிகிட்டு, மவனே ஒருவேளை சோத்தோடு ஒரு மூனு நாளு வுட்ட தெரியு சுதந்திரம் மூத்திரம் எல்லாம், அதை வுட கம்யூனிசம் எப்புடி ‘கொத்தடிமை’ என்பதை விளக்க முடிமா??? மக்களை மக்களே ஆளும்போது யாருக்கு யார் கொத்தடிமை????
மக்களை மக்களே ஆளாவது ஜனநாயகம்
மக்களை சர்வாதிகாரிகள் ஆளாவது கம்ம்யூனிசம்
மக்கள் ஆட்சி அதிகாரம் என்று கற்பனை செய்து மகிழ்கிறார்கள் போலும்
ஆமா கற்பனைதான்,
பால்காரம்மா பார்லிமெண்டு போவது ‘சர்வாதிகாரிகளின்’ கம்யூனிசம்.
திங்கவழியில்லாமல் செய்யபடாலும் அப்படி இருக்க அனுமதித்த ‘சுதந்திரத்தை’ கொடுத்த கனவான்களை சிலாகிப்பது மு.துவ ஜனநாயகம்,
மாற்று இல்லை என்னும் மொக்கை இன்னும் எடுபடுவதாக கற்பனை செய்து மகிழ்கிறார்கள் போலும்.
பசி, பட்டினி, பஞ்சம் படுகொலை இவை அனைத்தும் குறிப்பது கம்ம்யூனிசத்தை அல்லவா 😉
Raman,
Once again One liners!
அல்வா ராமன்.. 😛
நீங்க நல்லா அல்வா குடுப்பீங்கன்னு தெரியும்.. ஆயிரத்தி மூனாவது தடவையா கம்யூனிசத்தை நோகாம திட்டிட்டீங்க. திட்டுறதுக்கும் கொஞ்சமாவது உழைக்கனும் பாஸ்..
பசி, பட்டினி, பஞ்சம் படுகொலை இவை எதுவும் முதலாளித்துவத்தில் இல்லை என முதலில் நிரூபித்துவிட்டு கம்யூனிசத்தைப் பற்றி பேசவும். முதலாளித்துவத்திலும் இவை இருக்கிறதென்றால், இயற்கையான, இயல்பாக பரிணமித்த முதலாளித்துவத்தில் ஏன் இருக்கிறது என்று விளக்கவும். எப்படி பிரச்சினையை தீர்ப்பது என்றும் சொல்லவும்.
ஸ் அப்பா.. இதையே எத்தினி தடவை திரும்ப திரும்ப சொல்றது
முதலாளித்துவம் சுற்றி வளைத்து தாக்கியிருந்தாலும் கூட சோசலிசத்தின் பிரச்சனைகளுக்கு கம்யூனிஸ்டுகளே காரணம்.
முதலாளித்துவ ‘சுதந்திரம்’ கம்யூனிஸ்டுகளை ஒடுக்கியிருந்தாலும் கூட முதலாளித்துவத்தின் பிரச்சனைகளுக்கு கம்யூனிஸ்டுகளே காரணம்.
அக்காகி
முதலில் பிரச்சினை இல்லாத அனைவரும் பயன் பெற கூடிய , அனைவரும் அனைத்தும் (அதிகாரம் ) உட்பட பெற கூடிய அமைப்பு என்று ஒன்றும் இல்லை .
அடுத்து அனைவருக்கும் அனைத்தும் வேண்டும் என்பது , முயற்சி உடையவன் , உழைப்பவன் , திறமை உள்ளவன் , சோம்பேரி அனைவரும் சமம் என்றாகிறது , அது எப்படி சாத்தியம் ?
முதலாளித்துவத்தின் வறுமை இருக்கிறது , அதன் சதவிகிதத்தை பாருங்கள். கண் முன்னே உள்ள பிடல் காஸ்ட்டிரோ வழி காட்டுதலில் நடக்கும் சோசியலிச வெனிசூலாவில் வறுமை சதவிகிதத்தை பாருங்கள்.
ஒருவர் பசியோடு இருப்பதை காண சகிக்காமல் , ஊரில் உள்ள அனைவரையும் பசியோடு இருக்க வைப்பதே கம்மியோனிஸம்
இந்த கட்டுரையின் அமைப்பானது “Cherry picking fallacy ” என்பதை அறியவும் . ஆரோவில்லின் பாக்ஸர்களுக்காகவே எழுதப்படும் கட்டுரை .
Note:
//Once again One liners!// I thought you knew about the name of the book. You have a long way to go Boxer
இந்த சோசியலிசம் வேலைக்காகாது என காட்ட எத்தின பாடு பட வேண்டியிருக்கு இல்லியா ராமன்? உழைப்பு , இயற்கை வள தின் பயன் மனித ஒட்டுமொத்த முன்னேற்றதிட்கு பயன்பட வேண்டுமேபதே பொதுவுடைமை, திறமை உள்ளவன் திறமை மனித சமுதாயத்தின் முன்னேற்றத்துக்கு பொதுவாக பயன்பட வேண்டும், அதை வைத்து அவன் சொத்து குவிக்க வேண்டாம், சோம்பேறி வேலை செய்தே ஆகவேண்டும் என்பது உங்களுக்கு எப்படி பிரச்சினையாகிறது???
அதென்னங்க ஆ ஊன்னா வெனிசுவேலாவை நோன்டுரிங்க…அமெரிக்க ஐரோப்பிய மக்களுக்கு எப்போதும் சோசியலிசம் பத்தி எதிர்மறை எண்ணங்களை விதைக்க அரும்பாடு படும் மு.துவ ஊடக கக்காவை அப்படியே இங்கு வாந்தியெடுத்தல் முறையாமோ? வெனிசுவேலாவில் மக்கள் உணவுக்கு வரிசை கட்டி நிக்கிறார்கள் எனும் மொக்கை பிரசாரதிட்கெதிராக மக்கள் வாழ்க்கை தரம் உயர்ந்துள்ளது, பொலிவாரியன் புரட்சி பொறுக்க முடியாமல் அடிமை கள்ளகாதலி சவூதி வேசி மூலம் எண்ணெய் விலையை அடிமட்டத்துக்கு கொண்டு சென்றது எதற்கு? வெனிசுவேலாவின் என்ணெய் வருமானத்தை பாதலதுக்கு தள்ளுவதற்கு. அதேநேரம் சொல்லி வைத்தாற்போல தனியார்உ ணவு உட்பத்டி கம்பனிகள் உற்பத்தியை வேண்டுமேரே தேர்தல் காலத்தில் முடக்கி சோசியலிச அரசாங்கம் மேல் அவதூறு பரப்ப மாகா கேவல வேலை செய்தது எல்லாம் தெரியாதா தங்களுக்கு ???? அதிலும் குறிப்பாக ஹெயின்ஸ் நிறுவனம் சலுகையில் வெனிசுவேலாவில் இறக்குமதி செய்த கச்சா பொருட்களை வேண்டுமேரே உணவு தட்டுபாடு வரவேண்டுமென்று பதுக்கி பின்னர் லாபத்துக்காக கடத்தி வெளியில் விற்றது எல்லாம் தெரியாதா தங்களுக்கு??? இந்த கேவலங்களை வைத்து தான் சோசியலிசத்தை வேலைக்காது என காட்ட வேண்டுமா??? இதுக்கு போய் ************…இனி மேலும் வெனிசுவேலா என வாயை குடுத்து ************* வேண்டாம்.
செர்ரி பிக்கிங் செய்ய கம்யூனிஸ்டுகளுக்கு அவசியம் இல்லை, உங்கலுக்கு தான் செர்ரி பிக்கிங் செய்ய கூட ஒன்றுமில்லாமல் பொய் புரட்டு மூலம் அவதூறு பரப்ப வேண்டியுள்ளது.
அதாவது நாட்டில் உள்ள இயற்கை வளத்தை விற்று , சோசியலிசம் சிறப்பாக நடத்தலாம் என்கிறார் . ஏற்று கொள்கிறேன் . அந்த இயற்கை வளம் வேறு நாட்டில் கிடைக்காத ஒன்றாக இருக்க வேணுமே !
பெட்ரோல் விலை குறைந்து உலக ஏழைகள் கஷ்டப்பட்டாலும் , சோசியலிச நாட்டினர் நன்றாக் இருப்பார்கள் என்று நன்றாக சிந்திக்கிறீர்கள்
அடுத்து ஹெய்ன்ஸ் மாதிரி வெளிநாட்டு நிறுவனத்தி நம்பித்தான் வெனிசூலாவின் உணவு பாதுகாப்பு இருக்கிறதாம் . எல்லாம் இந்த கார்ப்பரேட் வேலை . அதிகாரத்தை சின்னாவிடம் கொடுத்து விட்டால் அணைத்து பிரச்சினையையும் தீர்த்துவிடுவார்
நீங்க கண்கொத்தி பாம்புகளாக இருந்து எங்கெல்லாம் சிறிதளவேனும் கம்யூனிசம் துளிவிடுகிறதோ அங்கெல்லாம் கூட்டு சதிகள் மூலம் உணவுதட்ட்பாடு, போலி போராட்டங்களை உண்டாகுவது, இதற்கு என்ன மொக்கையான //அந்த இயற்கை வளம் வேறு நாட்டில் கிடைக்காத ஒன்றாக இருக்க வேணுமே// என்னும் வாதம்?? வேறு நாட்டில் கிடைக்காத unobtainum எடுத்து விற்க சொல்வீர்கள் போல் உள்ளதே???
//பெட்ரோல் விலை குறைந்து உலக ஏழைகள் கஷ்டப்பட்டாலும்…//
உலக ‘ஏழைகள்’ ஏன் அப்படி ஏழைகளாக இருக்கிறார்கள் என்று கேட்டு உயிரை எடுக்க மாட்டோம் இப்போது பயம்வே ண்டாம், இப்போ கேள்வி என்னவென்றால், பயங்கர கடனில் இருந்தும், பெற்றோலிய விலையை சவூதி எனும் அடிமைராணி எந்த காரநாமும் இன்றி படு பாதாளத்துக்கு தள்ளிய மர்மம் என்ன? நாம் கூறுகிறோம் தென்னமெரிக்க பெற்றோலிய பொருளாதாரத்தை குலைக்க குறிப்பாக வெனிசுவேலா. செப்படி விளக்கம் ஏதும் இருந்தால் தரவும்.
ஹெயின்சை நம்பி உணவுபாதுகாப்பு இல்லைதான், ஆனால் தொழிலாளர்கள் மூலம் வெளிச்சத்துக்கு வந்த கச்சா பதுக்கல் ஏன்?? கடத்தி வெளியில் விற்பது+சோசியலிச அரசங்கம் மேல் உணவு தட்டுபாடு பழி=ஒரே கல்லில் இரண்டு மாங்காய், தேர்தல் காலத்தில் எல்லா நிறுவனகளுமே உணவு உற்பத்தியை முடக்கியது காபரெட் சபோடாச் அன்றி வேறென்னா?? அதிகாரம் எல்லாம் சின்னாவுக்கு வேணாமுங்கோ, நம்பி உள்ளே விடும் நாட்டை நாசபடுதாதிங்கோ.
Raman,
நீங்கள் சோசலிசம் பற்றி சொன்னதையே திருபச் சொன்னதை விட்டுவிட்டு பார்த்தால் நீங்கள் சொல்வது இதை தான்:
முதலாளித்துவத்தில் பிரச்சனை இருக்கிறது. அவற்றை சரி செய்ய முடியாது, முதலாளித்துவத்தில் பிரச்சனைகளுக்கு தீர்வு எதுவும் இல்லை. பிரச்சனைகளை இயல்பாக எடுத்துக்கொள்ள வேண்டும். இல்லையென்றால் சோசலிசம் வந்துவிடும். – இதை தானே சொல்லவருகிறீர்கள் ?
//Boxer//
ஐயா, மீண்டும் நான் உங்களுக்கு நினைவு படுத்துகிறேன்..
முதலாளித்துவத்தில் இருக்கும் பிரச்சனைகளுக்கு தான் நாங்கள் சோசலிசம்-கம்யூனிசத்தை தீர்வாக சொல்கிறோம். அதை நீங்கள் நிராகரிக்கிறீர்கள்.
சரி, முதலாளித்துவத்தின் பிரச்சனைகளுக்கு ஒரு தீர்வைச் சொல்லுங்கள் என்றால் அதற்கு இது வரை உங்களிடம் எந்த பதிலும் இல்லை. திரும்ப திரும்ப சோசலிசத்தை திட்டுவதில் முனைப்பு காட்டுகிறீர்கள்.
///You have a long way to go///
நீங்கள் எங்கும் போகமுடியாமல் முட்டுச்சந்தில் நிற்கிறீர்களா என்ன? பின் ஏன் இப்படி விவாதிக்கிறீர்கள் ?
சோசலிசத்தை திட்டுவதற்கு காட்டிய முனைப்பை, செலவிட்ட நேரத்தை பிரச்சனைக்கான தீர்வை கண்டுபிடிப்பதில் செலவிட்டிருந்தால் நானும் கூட உங்களிடம் சேர்ந்து ’முதலாளித்துவம் வாழ்க’ என்று சொல்ல வசதியாக இருக்கும்.
அந்த நோக்கத்தில் தான் உங்களுடைய இயல்பான, இயற்கையான முதலாளித்துவத்தில் பிரச்சனைகள் ஏன் இருக்கின்றன? பிரச்சனைக்கான காரணம் என்ன என்றும் கேட்டேன், அதற்கும் இன்றுவரை பதில் இல்லை.
ஆனால், நீங்கள் உங்களிடம் வாதிடுபவர்களுக்கு சரியான பதிலளிக்காமல், வெறுமனே பட்டங்களை கொடுத்துக் கொண்டிருக்கிறீர்.
எனக்கு மட்டுமல்ல உங்களுக்கு மட்டுமல்ல நம் எல்லோருமே have a long way to go..
///Cherry picking fallacy//
அமெரிக்க அரசின் அமெரிக்க கணக்கெடுப்பு பணியகம் (census) வெளியிட்டுள்ள அதிகாரப்பூர்வமான அறிக்கையின் படியே 2016 -ம் ஆண்டில் 40.6 மில்லியன் (4.06 கோடி) அமெரிக்கர்கள் வறுமையில் இருக்கின்றனர். இது அமெரிக்க மக்கட் தொகையில் 12.7 சதவீதமாகும். இந்த வறியவர்களில் 13.3 மில்லியன் (1.33 கோடி) பேர், அதாவது மூன்றில் ஒரு பகுதியினர் குழந்தைகளாவர். – கட்டுரையிலிருந்து..
https://census.gov/library/publications/2017/demo/p60-259.html
நீங்கள் உங்களிடம் வாதிடுபவர்களுக்கு சரியான பதிலளிக்காமல், வெறுமனே பட்டங்களை கொடுத்துக் கொண்டிருக்கிறீர்.
அமெரிக்க வறியவர் என்பது அளவு கோல் வேறு
கம்மியோனிஸ வறியவர் என்பது அளவு கோல் வேறு
வெனிசூலாவிற்கு ஒரு நடை சென்று வாருங்கள் . சோசியலிசத்தின் பெருமைகளை நேரடியாக பார்க்கும் வாய்ய்பு இப்பொழுது அங்கு மட்டுமே கிடைக்கிறது .
Raman,
நீங்கள் திரும்ப திரும்ப பேசுவதால், நான் பைத்தியமா நீங்கள் பைத்தியமா என்று சந்தேகம் வருகிறது.
நீங்கள் என்னை பைத்தியம் என்று சொல்லவேண்டியது தான் மிச்சமிருக்கிறது. செல்லிவிட்டீர்கள் என்றால் சந்தேகம் தீர்ந்துவிடும்.
நீங்கள் திரும்ப திரும்ப பேசுவதால், நானும் திரும்ப திரும்ப டைப் அடித்துக் கொண்டிருக்க முடியாது.
//நீங்கள் எங்கும் போகமுடியாமல் முட்டுச்சந்தில் நிற்கிறீர்களா என்ன? பின் ஏன் இப்படி விவாதிக்கிறீர்கள் ?
சோசலிசத்தை திட்டுவதற்கு காட்டிய முனைப்பை, செலவிட்ட நேரத்தை பிரச்சனைக்கான தீர்வை கண்டுபிடிப்பதில் செலவிட்டிருந்தால் நானும் கூட உங்களிடம் சேர்ந்து ’முதலாளித்துவம் வாழ்க’ என்று சொல்ல வசதியாக இருக்கும்.//
Try to answer this :
https://www.vinavu.com/2018/01/01/us-1st-grader-asks-food-blanket-heartbreaking-letter-santa%e0%ae%95%e0%ae%bf%e0%ae%b1%e0%ae%bf%e0%ae%b8%e0%af%8d%e0%ae%a4%e0%af%81%e0%ae%ae%e0%ae%b8%e0%af%8d-%e0%ae%a4%e0%ae%be%e0%ae%a4%e0%af%8d/#comment-522096
Also, you have to prove your claim that Capitalism Evolved naturally according to ‘Natural Selection’.. its still long pending.
Raman,
ஆக, முதலாளித்துவத்தில் உள்ள பிரச்சனையை தீர்ப்பது உங்கள் நோக்கம் இல்லை. முதலாளித்துவத்தை காப்பாற்றுவதும், கம்யூனிசத்தை தூற்றுவதுமே உங்கள் நோக்கம்.
இத்தனை முறை கேட்டபிறகு மறைமுகமாகவேனும் இதை ஒத்துக்கொள்கிறீர்களே..
நன்றி.
Now tell me, who is Boxer ? And who is having all the fallacies in his argument ? And who is Egoistic ? Who is in the first position to brand others? and so on..
//வெனிசூலாவிற்கு ஒரு நடை சென்று வாருங்கள்//
ஆமா இவரு வெனிசுலாவுல போயி, ஆய்வு பண்ணியிருக்காரு ஆயி எல்லாம் போயிருக்காரு.. இவிங்க ஆயா கூட அங்கன தான் இருக்காக..
இந்த மாதிரி ஆளுங்களை தான் எங்க தலைவர் கவுண்டர் நல்லா கலாய்ச்சிருக்காரு.
கேட்ட கேள்விக்கு பதில் சொல்ல வக்கில்ல இதுல, பேச்ச பாரு, லொல்ல பாரு, எகத்தாளத்தப் பாரு? ங்கொக்காமக்கா.. கரடிக்கு சேவிங் பண்ண மாதிரி இருந்துக்கிட்டு பேச்ச பாரு?
American poor has blue blood and communist poor has red blood.And you are having an eternal jaundiced eye.OK.Try to consult a psychologist.
Raman,
பசி, பட்டினி, பஞ்சம் படுகொலை இவை எதுவும் முதலாளித்துவத்தில் இல்லை என முதலில் நிரூபிக்கவும்.