privacy

about us

write

contact

shop

புதிய ஜனநாயகம்

புதிய கலாச்சாரம்

e-books

Global Influence

Communication

Legal Agreement

முகப்புசெய்திமலேசியா போன கோடீஸ்வர தமிழ் சினிமா பிச்சைக்காரர்கள் !

மலேசியா போன கோடீஸ்வர தமிழ் சினிமா பிச்சைக்காரர்கள் !

-

னக்கு விவரம் தெரிஞ்ச நாளிலிருந்து நடிகர் சங்க கட்டடம் கட்டுறேன்னு சொல்லி பிச்சையெடுப்பதையே பொழப்பா வச்சிருக்கானுங்க தமிழ்சினிமா நடிகர்கள். மலேசியா சிங்கப்பூர், துபாய், லண்டன் என கலைநிகழ்ச்சிகள் நடத்துகிறார்கள் பணம் மட்டும் தேறவில்லை.

சென்னையில் நடிகர்சங்க கட்டடத்துக்காக நட்சத்திர கிரிக்கெட் நடத்தி அடிக்கடி பிச்சை எடுப்பது வழக்கம், அதிலும் தேறலை போல சிவாஜி – MGR காலம், ரஜினி – கமல் காலம் அஜீத் – விஜய் காலம் தனுஷ் – சிம்பு வரை 4 தலைமுறையைக் கடந்துவிட்டது. இதில் MGR & ஜெயா, கருணாநிதியென சினிமா துறையைச் சேர்ந்தவர்கள் முதல்வராக இருந்தும் நடிகர்சங்கத்துக்கு கட்டடம் கட்ட முடியவில்லை.

அப்படி என்னடா அந்த நடிகர்சங்க கட்டடம், எகிப்து பிரமிடுகூட இவ்வளவு காலம் கட்டி இருக்கமாட்டாய்ங்க போல. எவ்வளவு பட்ஜெட்டுனா 25 கோடி அல்லது 30 கோடி என்கிறார்கள் MGR காலத்தில் 25லட்சமாக இருந்தது ஆனால் நட்சத்திர நடிகர்கள் மற்றும் முன்னணி 10 நடிகர்கள் நினைத்தால் MGRகாலத்துலேயே முடிந்திருக்கும்.

ஏன் நடக்கவில்லை காரணம் பிச்சைக்காரப் புத்திதான் 10,000 கோடி ரஜினி, MGR 500கோடி (அன்று) கமல் 2,000 கோடி, ஜெயா 75,000கோடி, சிவக்குமார், சத்யராஜ், த்ரிஷா, ரம்யா கிருஷ்ணன், அம்பிகா, ராதா எல்லோரும் 2% தந்தாலே ஒரு தாஜ்மகாலே கட்டலாம் இதில் சத்தமில்லாத பெரும் பணக்காரர்கள் இருக்கிறார்கள் சொத்தில் ரஜினியைவே தாண்டும் நடிகர் ராஜேஷ், அடுத்தது ராதிகா, குஷ்பு , ஜெயராம், அரவிந்தசாமி போன்ற நில முதலைகள் வேறு இருக்கிறது.

ஆனால், யாரும் சில்லிக்காசை வெளியே எடுக்கமாட்டார்கள் எந்திரன் 2.0க்கு துபாயில் செலவழித்ததை கொடுத்தாலே 2 நடிகர் சங்கக் கட்டடம் கட்டலாம். எல்லா நடிகர்களும் பிச்சை, எச்சைகள்தான்.

அசிஸ்டன்ட் டைரக்டருக்கு 10,000 ரூபா சம்பளம்கூட தருவதில்லை. சாப்டியா என்று கூட கேட்காத அளவுக்குப் பிச்சைக்கார நாய்கள்தான் அடுத்த படத்துக்கு வாய்ப்பெனச் சொல்லி குரூப் டான்ஸ் நடிகை முதல் நாயகி நடிகை வரை உடலுறவு வைத்து ஏமாற்றும் அளவுக்கு பிச்சைக்கார நாய்கள்தான்.

டிரைவர், லைட்மேன், வீட்டு வேலைக்காரர்களை நாயைவிட கேவலமாக நடத்தும் நாய்கள்தான் இந்த நடிகர்கள் என்கிறப் பிச்சைக்காரக் கூட்டம்.

“உண்மை உழைப்பு உயர்வு” சரவணா ஸ்டோர் அதிபருடன் “உண்மை உழைப்பு உயர்வு” பாபா கட்சி ரஜினியும்!

வெளிநாட்டில் அகதியாகப் போன ஈழத்தமிழர்களையும் இவர்கள் விடுவதில்லை. கலைநிகழ்ச்சிகள் குத்தாட்டக் கூத்தை நடத்தி பிக்பாக்கெட் அடித்துவிட்டு வந்து விடுவார்கள். ரஜினி இத்தனை நாள் அரசியலுக்கு வராததன் காரணமே கைக்காசு செலவாகும் என்ற பயம்தான். ஆனால் இப்போது ஸ்பான்சர் மோடி செலவுக்குப் பணம் தருவதாகச் சொல்லி விட்டதால் வீராதிவீரன் சூராதிசூரன் அரசியலுக்கு வந்துவிட்டாராம்.

இதே போல கேரளாவில் நடிகர் சங்க கட்டடம் வேண்டும் என்றதும் 20:20 என்ற படமெடுத்து எல்லா நடிகர்களும் இலவசமாக நடித்து அந்தப் பணத்தில் கட்டடம் கட்டினார்கள். இங்கே ஈகோ பிடிச்ச நாய்ங்க சேர்ந்தும் நடிக்கமாட்டானுங்க இவனுங்களை சேர்த்து சூட்டிங்கை யாராலும் நடத்தவும் முடியாது.

அதில் இந்த அஜித் இருக்காரே அவர் பொது நிகழ்ச்சிக்கே வரமாட்டாராம் 50 படம் நடித்தும் அவருக்கு நடிப்பே வராது இவருக்கு அவ்வளவு ஈகோ. இவரும் ரஜினி மாதிரி RSS ஸ்லீப்பர் செல்தான் 5 ஆண்டுகள் கழித்து வெளியே வரும்.

இப்போது நட்சத்திரப் பட்டாளங்கள் கோடீஸ்வர நடிகர்கள் கடைசியாக மலேசியா போய் கூத்தாடி பிச்சையெடுக்கப் போய் இருக்கிறார்கள். இந்த நடிகர்கள் கூட்டம் தமிழர்விரோதக் கூட்டமே விவசாயிகள் 600 பேர் சாவு, ஓக்கி புயலில் 300 பேர் இன்னும் வீடு திரும்பவில்லை. நீட், ரேசன்கடை, ஈழம், மலேசியா தமிழர்கள் என யாருக்குமே குரல் கொடுக்கமாட்டார்கள் சல்லிக்காசு நிதியுதவி செய்யமாட்டார்கள்.

100 ரூபாய் டிக்கெட்டை 1000, 2000க்கு ப்ளாக்டிக்கெட் விற்று சொத்துச் சேர்த்த ரஜினியும் காசில்லையென மலேசியாவுக்குப் பிச்சையெடுக்கப் போனதுதான் மகா கேவலம்.

உலகத்தமிழர்களே இந்த திருட்டுக் கும்பலை விரட்டியடிங்க எல்லா நடிகர்களையும் தாங்கள் வாங்கும் சம்பளத்தையும் சொத்து விவரத்தையும் வெளியிடச் சொல்லுங்கப் பார்க்கலாம். இவ்வளவு சொத்தை மக்களிடம் கொள்ளையடித்துச் சேர்த்து விட்டு 50ஆண்டுகளாக நடிகர்சங்கக் கட்டடம் கட்ட முடியாமல் வெட்கமில்லாமல் மலேசியாவுக்குப் பிச்சையெடுக்கப் போகிறார்கள் த்தூ…

( படங்களைப் பெரிதாகப் பார்க்க அவற்றின் மீது அழுத்தவும் )

முகநூல்பதிவு
நன்றி : புஷ்கின்