நெல்லை மாவட்டம் கடையநல்லூர் அருகே உள்ள ராமேசுவரம் கிராமத்தைச் சேர்ந்த இளைஞர் மாரிராஜ். மோடியின் குஜராத் மாநிலம் அகமதாபாத் நகரில் உள்ள BJ மருத்துவக் கல்லூரியில், அறுவை சிகிச்சைகான (surgery) MS மேற்படிப்பு படித்து வருகிறார். கடந்த ஜனவரி 5, 2018 அன்று மதியம் தனது அறைக்குச் சென்று அதிகமான தூக்க மாத்திரைகளை உட்கொண்டு தற்கொலைக்கு முயன்றுள்ளார். அவருடன் படிக்கும் மாணவர்கள் சரியான நேரத்தில் அவரை மீட்டு மருத்துவமனையில் சேர்த்ததால், தற்போது ஆபத்துக் கட்டத்தை தாண்டியுள்ளார்.
மாரிராஜ் தலித் குடும்பப் பின்னணியில் இருந்து தனது கடின உழைப்பால் மருத்துவ பட்டமேற்படிப்புக்கு நீட் தேர்வு மூலம் தேர்வாகி MS படித்து வருகிறார். சிறுவயதிலேயே இவரது தந்தை இறந்துவிட்ட நிலையில், இவர் மற்றும் இவரது இரண்டு சகோதரர்கள் மற்றும் ஒரு சகோதரி ஆகியோரை அவரது தாய் இந்திரா கூலி வேலை செய்து படிக்க வைத்துள்ளார்.
இந்நிலையில் மாரிராஜை அவரது சாதியை வைத்தும் மொழியை வைத்தும் அவர் பயிலும் மருத்துவக் கல்லூரியின் அறுவை சிகிச்சைத் துறையின் ஒரு பிரிவின் தலைவரான ஜே.வி. பாரிக்கும் மற்றொரு மருத்துவருமான பார்த் தலால் என்பவரும் மற்ற ஆசிரியர்களும் தொடர்ச்சியாக அவமதித்து வந்துள்ளனர்.
சிறு பள்ளி மாணவர்களுக்கு தண்டனை வழங்குவது போல் வகுப்பறைக்கு வெளியே நிற்க வைப்பது, செமினார் எடுக்க வாய்ப்புகள் மறுப்பது, மற்ற மாணவர்களுக்கு தேநீர் கொடுக்கச் சொல்வது, சர்ஜரிக்கு படிக்கும் அவரை இறுதியாண்டு படிப்பை தொட்ட பின்னரும் இன்று வரை அறுவை சிகிச்சைகள் செய்ய அனுமதிக்காதது என மாரிராஜ் கல்லூரியில் சேர்ந்த நாள் முதல் தொடர்ந்து பல்வேறு வன்கொடுமைகளை கல்லூரி ஆசிரியர்கள் அரங்கேற்றியிருக்கின்றனர்.
அனைத்திற்கும் உச்ச கொடுமையாகக் கடந்த அக்டோபர் மாதம் 8 -ம் தேதி அன்று வகுப்பறையில் அனைத்து மாணவர்களின் முன்னிலையில், மாரிராஜ் எம்.பி.பி.எஸ். முடித்ததில் சந்தேகம் இருப்பதாகக் கூறி அவரது எம்.பி.பி.எஸ். சான்றிதழைக் கொண்டு வந்து காட்டுமாறு வற்புறுத்தியுள்ளார்.
அதே போல கடந்த ஆகஸ்ட் 14 -ம் தேதிமுதல் மருத்துவமனை வார்டுகளில் அவரை வேலை செய்ய அனுமதிக்கவில்லை. பல்வேறு சமயங்களில், அவர்களுக்கு வாய்ப்பு கிடைக்கும்போது எல்லாம் அவருக்கு ஹிந்தியும், குஜராத்தியும் தெரியாததை அனைத்து மாணவர்களுக்கும் முன்னால் வைத்தே கேலி பேசியிருக்கின்றனர்.
இது குறித்து துறைத்தலைவருக்கும், கல்லூரி நிர்வாகத்திற்கும் மாரிராஜ் பலமுறை புகார் கடிதம் எழுதியுள்ளார். கடந்த 2015 -ம் ஆண்டு செப்டம்பர் 11 அன்றும் 2017 -ம் ஆண்டு ஆகஸ்ட் 14 அன்றும் அவரது துறைத்தலைவருக்கு ஆசிரியர்களின் இத்தகைய சாதிய வன்மம் குறித்தும் புகார் கடிதம் எழுதியுள்ளார். எவ்வித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை.
இச்சூழலில், 2017 -ம் ஆண்டு ஆகஸ்ட் 17 அன்று முதுகலைப் பட்டப்படிப்பின் இயக்குநருக்கு புகார் கடிதம் எழுதியுள்ளார். அவரது உத்தரவின் பெயரில், அமைக்கப்பட்ட விசாரணைக் கமிட்டி, கண் துடைப்புக்கு விசாரணை செய்துவிட்டு, பழியை மாரிராஜ் மேலேயே போட்டது. மாரிராஜை மன்னிப்புக் கடிதம் எழுதித்தர வற்புறுத்தியது.
இதன் பிறகு கடந்த 2017 -ம் ஆண்டு செப்டெம்பர் மாதம் 26 -ம் நாள் அன்று மாரிராஜின் தாயார் இந்திரா அவர்கள், கல்லூரியில் தொடர்ச்சியாக தனது மகன் மீது திணிக்கப்பட்டு வரும் சாதிய வன்கொடுமைகளைக் குறிப்பிட்டு குஜராத் மாநில தாழ்த்தப்பட்டோருக்கான தேசிய ஆணைய இயக்குநருக்கு புகார்க் கடிதம் ஒன்றை அனுப்பினார். அதற்கும் எவ்வித நடவடிக்கையும் இல்லை.
அதன் பின்னர் கடந்த ஜனவரி 5, 2018 அன்று அவரது வகுப்பு மாணவர்கள் அனைவரும், ஆசிரியரின் உத்தரவுப்படி ஒரு அறுவை சிகிச்சை அரங்கில் (OT) நடைபெற்ற ஒரு அறுவை சிகிச்சையை பார்வையிடச் சென்றிருந்தனர். மாரிராஜ் சென்றதும் அவரை மட்டும் அங்கிருந்து வெளியேறுமாறு அவரைப் பார்த்துக் கத்தியிருக்கிறார் ஆசிரியர்.
இதனால் மனமுடைந்த மாரிராஜ் தனது அறைக்குச் சென்று தனது அண்ணனிடம் தொலைபேசியில் தான் தற்கொலை செய்து கொள்ளப் போவதாகக் கூறிவிட்டு, அதிகத் தூக்கமாத்திரைகளை உட்கொண்டிருக்கிறார். ஆபத்தான நிலைமையில் அருகில் உள்ள மாணவர்களால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட மாரிராஜ், முதல்கட்ட சிகிச்சைக்குப் பின்னர் நினைவு திரும்பி ஆபத்துக் கட்டத்தைத் தாண்டியுள்ளார். அதன் பிறகும் கூட அந்த சாதிவெறி கிரிமினல்களுக்கு மனம் இரங்கவில்லை.
மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட மாரிராஜுக்கு பாதுகாவலராக உறவினர்கள் யாரும் அருகில் இல்லாத சூழலில் கல்லூரி நிர்வாகம் தான் சட்டப்படி பாதுகாவலராக இருந்து அவருக்கு அனைத்து உதவிகளையும் செய்து தந்திருக்க வேண்டும். ஆனால் மாரிராஜுக்கு உணவு கூட வழங்க யாரும் வரவில்லை. அங்கு அருகில் இருந்த நபர்களின் உதவியுடன் தான் உணவு வாங்கி வரச்சொல்லி உணவருந்தியிருக்கிறார். 4 நாட்களாகியும் இது தான் நிலைமை.
அதோடு இரண்டு நாட்களுக்கு முன்பே முறையற்ற விதமாக அவருக்கு தெரியாமலேயே அவரை மருத்துவமனையில் இருந்து டிஸ்சார்ஜ் செய்துவிட்டதாக அறிக்கை கொடுத்திருக்கிறது. அவ்வாறு அறிக்கை அளித்து டிஸ்சார்ஜ் செய்ய வேண்டுமெனில் சம்பந்தப்பட்ட நபரின் பாதுகாவலரின் கையெழுத்து பெற்றிருக்க வேண்டும். ஆனால் அத்தகைய முறைகள் எதுவும் பின்பற்றாமலேயே, அவரை டிஸ்சார்ஜ் செய்திருக்கிறது.
அதிகாரவர்க்கத்தின் அனைத்துத் தூண்களிலும், துரும்புகளிலும் இந்து மதத்தின் சாதி வெறி ஊறிப் போன ஒரு கொடூரமான மாநிலமாகவே மோடியின் குஜராத் விளங்குகிறது. அதன் ஒரு பரிமாணம் தான் குஜராத்தின் ‘படித்த’, ‘பண்பானவர்கள்’ உள்ள துறையாக மெச்சப்படும் மருத்துவத்துறையினரின் இலட்சணம். ஏற்கனவே “உனா” தாக்குதல்கள் நாட்டையே அதிர்ச்சியடைய வைத்தது. அதனுடைய தொடர்ச்சியாக குஜராத்தில் இன்னும் மதவெறியும் சாதிவெறியும் பல இடங்களில் கோலேச்சுகின்றன.
மாரிராஜ் தற்போதும் தனக்கு நியாயம் கிடைக்க வேண்டும் என்பதில் உறுதியாக இருக்கிறார். “முதல் தகவலறிக்கையில் தன்னை தற்கொலைக்குத் தூண்டியதாகக் கூறப்பட்டிருக்கும் ஆசிரியர்களைக் கைது செய்ய வேண்டும். மருத்துவமனையில் தாம் பூரணமாக குணமாகும் வரை தனக்கு ஒரு பாதுகாவலரை உடனடியாக கல்லூரி நிர்வாகம் சார்பில் நியமிக்க வேண்டும். தமிழகத்தில் உள்ள மருத்துவக் கல்லூரியில் தமக்கு மாற்று இடம் அளிக்க வேண்டும்” என்பதில் உறுதியாக இருக்கிறார் மாரிராஜ்.
பாஜக ஆட்சியில் தலைவிரித்தாடும் பார்ப்பனியக் கொடுங்கோன்மைக்கு ஏற்கனவே ஹைதராபாத் பல்கலையின் ரோகித் வெமுலாவையும், எய்ம்ஸ் மாணவர் செந்தில்குமாரையும் இழந்திருக்கிறோம். பார்ப்பனியத்தின் கோரப் பற்களில் சிக்கி வாழ்க்கையை முடிக்கத் துணிந்த மாரிராஜ் கடைசி நிமிடத்தில் காப்பாற்றப்பட்டிருக்கிறார். நம் கண் முன் வராத பார்ப்பனிய தூண்டுதலிலான தற் ‘கொலைகள்’ இன்னும் எத்தனையோ!
தலித் என்பதாலும், ஹிந்தி, குஜராத்தி தெரியாதவர் என்பதாலும் ஒரு மருத்துவர் இழிவாக நடத்தப்பட்டிருப்பது குஜராத்தில் எவ்விதத் தாக்கத்தையும் ஏற்படுத்தவில்லை. அது அங்கு படர்ந்து அடர்ந்திருக்கும் தாமரையின் விளைவு. அந்தத் தாமரைதான் இங்கேயும் அடர்ந்து படரத் துடிக்கிறது.
பாஜக என்பது மற்றொரு அரசியல் கட்சி போல ஒரு ஜனநாயக அமைப்பில் இடம்பெற முடியாது என்பதற்கு வேறு என்ன சான்று வேண்டும்?
இது மாரிராஜ் மருத்துவமனையில் இருந்த போது ஜிக்னேஷ் மேதானிக்கு அளித்த நேர்காணல் வீடியோ
/தலித் என்பதாலும், ஹிந்தி, குஜராத்தி தெரியாதவர் என்பதாலும் ஒரு மருத்துவர் இழிவாக நடத்தப்பட்டிருப்பது குஜராத்தில் எவ்விதத் தாக்கத்தையும் ஏற்படுத்தவில்லை/
மனம் கணக்கிறது. இந்தக்கொடுமைகளுக்கு தீர்வு காணாமல் எங்கு செல்கிறது இந்தியா?
பல பதிவுகளில் இந்துத்துவாவிற்கு காவடியெடுக்கும் மணிகண்டன், அட்வகேட் ரங்கராஜன் போன்ற high class வகையறாக்களின் கருத்தென்ன? இந்தப்பதிவையெல்லாம் படிக்கமாட்டார்களா? Third rate hypocrites.
எமது பதிவை வினவு வேண்டுமென்றே காலந்தாழ்த்தி வெளியிட்டுள்ளது என்பதே உமது கேள்விக்கு எமது பதில்..
KKN க்காக மணிகண்டனின் மைன்டுவாய்ஸ்…!
இவங்க ஏதாவது பிரச்சன பண்ணாம பிரச்சன வராது. பிரச்சன பண்ணாம அமைதியா இருந்தா எந்தப் பிரச்சினையும் இருக்காது… இப்புடியே பிரச்சன பண்ணிப் பண்ணியே பிரச்சினைய பெருசாக்குறாங்க… இத்தன வருசமா பிரச்சன இல்லாமத்தான இருந்திச்சு..
இந்த பெரியாரு.. அம்பேத்காரு..எல்லாம் வந்தப்புறந்தான் பிரச்சனயே….!
அரசியலற்ற உண்மை என நம்புகிறேன், இப்பாரபட்சம் கடும் நடவடிக்கை மூலம் தண்டிக்கப்பட வேண்டியது, அவர் வன்கொடுமை சட்டத்தின் கீழ் காவல் நிலையத்தில் புகார் அளித்து நடவடிக்கை இல்லையெனில் உயர்நீதிமன்றத்தில் டைரக்ஷன் மனு தாக்கல் செய்யலாம்..
ஆதியில் அல்லாமல் பாதியில் வந்த சாதியால்தான் இத்தனை இத்தனை அநீதி.. நல்ல இந்து சாதி பாகுபாட்டை கடைப்பிடிக்க மாட்டான்..
நீதிமன்ற யோக்கியதைதான் இப்போது,போக்குவரத்து தொழிலாளர் பிரச்சினையில்,வெட்டை வெளிச்சமாகி விட்டதே! அங்கே என்ன நியாயம் இருக்கிறது என்று கேட்க சொல்கிறீர்கள்?
முதலில் நல்ல மனிதனாக இருக்க விரும்பும் ஒருவர் மதத்தை ஏற்றுக் கொள்ள முடியாது.ஏனென்றால் யானைக்கு கூட வெறி பிடித்து தலை தெறிக்க ஓடும் போது தான் மதம் பிடித்து விட்டது என்று கூறுகிறார்கள்.
இதற்கு அடுத்த கட்டமாக மதத்தால் வெறி பிடித்த மனிதர்களின் செயலை இப்போது பார்த்துக்கொண்டு தான் இருக்கிறோம்.
வினவு கோர்ட்டுக்கு போய் சாதக உத்தரவு பெற்றதும் பதிவாகியுள்ளது, அது தவறா?.. மக்கள் தங்களுக்குள் சண்டையிட்டு மடிய வேண்டும் என்கிறீர்களா?..
வினவு கோர்ட்டுக்கு போய் அவர்களுக்கு சாதகமான பதில் கிடைத்திருந்தால் அது இன்னும் மனிதாபிமானமும்,ஜனநாயகமும்,உள்ள மக்கள் சிலர் கோர்ட்டில் இருக்கிறார்கள் என்பதை காட்டுகிறது.
மக்கள் மிகப்பெரும்பான்மையான நேரங்களில் ஒற்றுமையாகத்தான் இருக்கிறார்கள்.இதற்கு மிகப்பெரிய உதாரணம்,மெரினா எழுச்சி,அங்கு வன்முறை வெடித்ததே,ஆளும் அரசால் ஏவப்பட்ட காவல்துறையினரால்தான்.
தமக்கு சாதகமாக தீர்ப்பு வந்தால் மட்டுமே நீதி வென்றது என்று சொல்லுவதற்கு பெயர் தான் அநீதி..
வி ன வு எப்போதும் நியாயமாக நடந்து கொள்வதால்தான்
அவர்களுக்கு சாதகமான தீர்ப்பு கிடைத்திருந்தால் அது ஜனநாயகத்தின்
வெற்றி என்று கூறினேன்.சிறுமி ஹாசினி வழக்கில் நீதிமன்றம் அவளுக்கு வழங்கிய அநியாயத்திற்கு நாடே வேதனைப்பட்டது.அந்த குற்றவாளிக்கு உரிய தண்டனையை வழங்கும் படி பொதுமக்கள் முழக்கமிட்ட போது தடுத்தது காவல்துறை,,பாதுகாத்தது நீதிமன்றம்..
அதற்கான விளைவுகளை அனுபவித்தது அந்த தாயும்,தந்தையும்..சமூக அக்கறை அற்ற நீதிமன்றத்தின்
இந்த செயலுக்கு,உங்கள் பதில் என்ன?
நழுவாமல் பதில் சொல்லுங்க பூங்கொடி, உங்களுக்கு எதிராக தீர்ப்பு கொடுத்தா நீதிமன்றம் தப்பு , அதாவது நீங்க ஒழுங்கா படிக்காமல் பெயிலானால பேப்பரை திருத்தியவன் தப்பு அதானே உங்க வாதம்?..
நிரபராதிக்கு உரிய நியாயமும்,குற்றவாளிக்கு உரிய தண்டனை யும் நீதிமன்றம் கொடுக்க வேண்டும்.இதுதான் என்னுடைய வாதம்.
சரியாக படிக்காமல் தோல்வி ஏற்பட்டால் அதற்கு நான் தான் பொறுப்பு,இதற்கு திருத்தியவரை பிழை சொல்லிக்கொண்டு இருந்தால் என்னுடைய அறிவு என்றைக்கு ம் வளரப் போவதில்லை என்பது எனக்கு நன்றாக தெரியும்.
குதிரைக்கு முன்பு ஜட்காவை பூட்டுகிறீர்கள்..
நான் செல்லுவது மட்டுமே நீதி என்கிறீர்கள்..
முல்லை பூத்தாற்போல மக்களின் கொந்தளிப்பை அடக்க நீதிபதிகள் திடீர் நீதி தேவதைகள் ஆவது , போலீசு என்கவுண்டர் செய்வது எல்லாம் பழைய மொக்கைங்க. பூங்கொடி கேட்ட கேள்விக்கு பதில்?
தீர்ப்பு தவறென்றால் மேல் முறையீடு செய்யலாம் . இறைவனிடமுமும் முறையிடலாம், நிச்சயம் தண்டனை உண்டு, கலியுகத்தில் இறைவன் மனித வடிவில் வருவான்..
அப்போ ட்ரம்பை கல்கின்னு சொல்லிடலாமா? உங்க அம்பிங்க தானே மகாவிஷுன்வா சித்தரிசாங்க அதன் கேட்டேன். உளுத்துப்போன இந்த அமைப்புக்குள்ளேயே தீர்வை தேட சொல்லி எம்மை நம்பும் என எதிர்பார்க்கும் உங்களை பாராட்டுகிறேன், but தன்னை நம்பி உச்சி மலையில் நடந்த இளைஞனின் காலை தவற விடாமல் வைத்திருக்க கூட வக்கற்ற இறைவனிடம் முறையிட விருப்பம் இல்லிங்கோ.
நீங்கள் சொல்வது போல் பார்த்தால்,இறைவன் அந்த 4 நீதிபதிகளின் கனவில் தோன்றி உங்கள் மனசாட்சிக்கு பயந்து மக்கள் முன்னிலையில் பகிரங்கமாக நடப்பவற்றை ஒப்புக் கொள்ளுங்கள் என்று கட்டளை இட்டிருப்பார் என்று நினைக்கிறேன்.எனவேதான் மக்கள் முன்னிலையில் ஜனநாயகத்தை காப்பாற்றிக் கொள்ளுங்கள் என்று அறிவித்துள்ளனர்.ஆகவே பொறுப்பு இப்போது மக்களின் கையில் உள்ளது.மக்களின் தீர்ப்பே மகேசன் தீர்ப்பு என்ற பழைய முறை மீண்டும் வருவதை இது கட்டியம் கூறுகிறது.
கடவுள் இப்படி நெருக்கடி காலங்களில் ஒரு சிலநல்லவர்களை மக்கள் தூதுவர்களாக அனுப்புவார் என்பதுபொதுவாக எல்லா மதங்களிலும் காணப்படும் ஒரு நிகழ்வாக உள்ளது.
எனவே இந்த நிகழ்வை நாம் மிக கவனத்தோடு பரிசீலிக்க வேண்டும் என்று நினைக்கிறேன்.
//எய்ம்ஸ் மாணவர் செந்தில்குமாரையும் இழந்திருக்கிறோம்.//
Senthil kumar not a Dalith
what are you trying to imply here by saying “Senthil Kumar Not A Dalit” ?
In this writing Vinavu trying exposes the problems against Dalith students,not for others…
Vinave exposes more problem against Dalith because I believe, Daliths face more problem compare to any other casts.
so what? nobody can mention other ‘caste’ victims?! this demonstrates your lack of grasp of comrades’ strife. they are not only fighting for Dalit rights but altogether to wipe of the embarrassment of humanity – caste system. do not belittle it.
National Commission for Scheduled Castes should intervene and do justice to Maariraj. Did they respond to the complaint made earlier and help him ?
இது எல்லா மாநிலத்திலும் நடக்கிறது…தமிழ்நாட்டில் இல்லை என்று சொல்ல முடியுமா????தமிழ்நாட்டில் தான் இவை சற்று அதிகம்….அதற்காக மேல நடந்த சம்பவத்தை நான் ஆதரிக்க வில்லை..
மருத்துவ துறையில் இது எல்லா மாநிலங்களிலும் உண்டு….