privacy

about us

write

contact

shop

புதிய ஜனநாயகம்

புதிய கலாச்சாரம்

e-books

Global Influence

Communication

Legal Agreement

முகப்புஉலகம்அமெரிக்காஅமெரிக்காவின் NSA உலகிற்கு செய்த துரோகம் ! வீடியோ

அமெரிக்காவின் NSA உலகிற்கு செய்த துரோகம் ! வீடியோ

-

மிக்கோ ஹைப்போனென் உரை
at TEDxBrussels
NSA எப்படி உலக நம்பிக்கைக்கு துரோகம் செய்தது — இது செயல்படவேண்டிய நேரம்

மீபத்திய நிகழ்வுகள் அமெரிக்கா, வெளிநாட்டினர் மீது செய்யும் பொதுப்படையான கண்காணிப்புகளை அடிகோடிட்டு காண்பித்தது. எந்த வெளிநாட்டவர் குறித்த தரவும் அமெரிக்கா வழியாக செல்லுமானால், அவர் மேல் தவறு இழைத்ததற்கான சந்தேகம் இருந்தாலும் இல்லாவிடினும் கண்காணிக்கபடுவார் . Miko Hypponen சொல்கிறார் இதன் பொருள் என்னெவென்றால் உலகளவில் இணையத்தளம் பயன்படுத்துபவர்கள் எல்லோரையும் கண்காணிக்கிறார்கள் என்பது தான். உலகின் தகவல் பரிமாற்ற தேவைகளுக்கு அமெரிக்காவை தவிர்த்து ஒரு மாற்று தேவை என்பது தான்.

அமெரிக்காவின் NSA உலகிற்கு எப்படி துரோகம் செய்தது ? வீடியோ

மேற்கண்ட வீடியோவில் ஆங்கில உரையின் வரிகள் தமிழ் சப் டைட்டிலாக இடம்பெறுகிறது. அந்த அடிக்குறிப்புகளின் தொகுப்பு கீழே:

மது காலத்தில் இரண்டு மிக பெரிய கண்டுபிடிப்புகள் என்று எடுத்து கொண்டால் அவை இணையதளமும், கைபேசியும் தான். அவை உலகத்தையே மாற்றி விட்டது ஆனால் இதில் மிகவும் வியக்க வைப்பது என்னவென்றால் அவை நாட்டிற்கு ஒரு சிறந்த கண்காணிப்பு கருவியாகவும் பயன்படுகிறது.

இதன் திறன் என்னவென்றால் தரவுகள், தகவல்கள், தொடர்புகள் இவைகளை திரட்டுவது அடிப்படையில் நம்மில் ஒருவரை பற்றி அல்லது நம் எல்லோரையும் பற்றி இதை தான் நாம் கேள்விப்பட்டு கொண்டிருக்கிறோம். கடந்த கோடை காலம் முழுவதும் கசிந்த வெளிப்பாடுகள் மூலம் மேலை நாட்டு புலனாய்வு முகமையகங்கள், முக்கியமாக அமெரிக்க முகமையகங்கள் உலகத்தின் பிற பகுதிகளை கண்காணிப்பது தெரிந்தது.

முதலில் நாம் கேள்விபட்டது ஜூன் 6 ஆம் தேதி வந்த வெளிப்பாடுகள் தான். எட்வர்ட் ஸ்னோடென் முதலில் தகவல்களை கசிய விட்டார், உச்ச ரகசியங்கள் அடங்கிய வகைப்படுத்தபட்ட தகவல்கள், அமெரிக்க புலனாய்வு முகவையகத்திலிருந்து, அப்பொழுது தான் நமக்கு PRISM (கண்காணிப்பு திட்டம்) XKeyscore (வெளிநாட்டவர் கண்காணிப்பு திட்டம்) மற்றும் பல திட்டங்கள் குறித்து தெரிய வந்தது. எடுத்துகாட்டாக இது போன்ற திட்டங்களை உலகின் பிற நாடுகளுக்கு எதிராக தற்பொழுது அமெரிக்க புலனாய்வுத் துறை செயல்படுத்தி வருகிறது.

கண்காணிப்பு குறித்த முன் கணிப்புகளை ஜார்ஜ் ஓர்வெல் செய்திருந்தார், அவற்றை இப்பொழுது திரும்பி பார்த்தால் ஜார்ஜ் ஓர்வெல் ஒரு நன்னம்பிக்கையாளர் என்று தோன்றும் (சிரிப்பொலி) உண்மை, இப்பொழுது இன்னும் அதிக அளவில் தனிமனிதனான ஒரு குடிமகன் பின் தொடரப்படுகிறான் இது போன்ற ஒரு நிலையை நாம் கற்பனை செய்து கூட பார்த்திருக்க முடியாது.

இங்கு தான் இகழ்ச்சிக்குரிய உதாவில் உள்ள NSA யின் தகவல் மையம். வெகு விரைவில் ஆரம்பிக்க உள்ளார்கள் இங்கு தான் அதி உன்னத கணினி மையமும் தகவல் சேமிப்பகமும் இயங்கவுள்ளது. அடிப்படையில் அது ஒரு மிக பெரிய அறை என்று நீங்கள் கற்பனை செய்து கொள்ளலாம் அங்கு நிறைந்திருக்கும் வன் தட்டுகளில் தான் இவர்கள் சேகரிக்கும் தகவல்கள் சேமிக்கப்படும்.

அது ஒரு மிக பெரிய கட்டிடம் எவ்வளவு பெரியது? என்னால் அதன் பரப்பளவை கூற முடியும் – 1,40,000 சதுர மீட்டர்கள் – இதை வைத்து அதன் பிரம்மாண்டத்தை நீங்கள் புரிந்து கொள்ள முடியாது, ஒப்பீடு மூலம் பாவிப்பது இன்னும் நன்கு என்று நினைக்கிறேன். IKEA போன்ற ஒரு மிக பெரிய அறைகலன் அங்காடி பார்த்ததிலேயே மிக பெரியது என்று கற்பனை செய்து கொள்ளுங்கள். அதை போன்று 5 மடங்கு பெரியது இது. IKEA போன்ற ஒரு அங்காடியில் எத்தனை வன் தட்டுகள் நிரப்ப முடியும்? புரிந்ததா? அந்த அளவுக்கு பெரியது. இந்த தரவு மையத்தை நடத்துவதற்கு வெறும் மின்சாரத்திற்கான செலவு மதிப்பீடு மட்டும் வருடத்திற்கு கோடி கணக்கில் அமெரிக்க டாலர்கள் தேவைப்படும்.

இது போன்ற ஒட்டுமொத்த கண்காணிப்பு என்றால் நமது தரவுகளை சேகரித்து அடிப்படையில் எல்லா காலத்திற்கும் வைத்திருக்கலாம், கால நீடிப்பு செய்யலாம் வருட கணக்கில் வைத்திருக்கலாம். இதனால் புது விதமான அபாயங்கள் நம் எல்லோருக்கும் ஏற்படலாம். இது போன்ற ஒட்டுமொத்தமான எல்லோர் மேலும் ஒரு பொதுவான கண்காணிப்பு.

எல்லோர் மேலும் என்று சொல்ல முடியாது, ஏன் என்றால் அமெரிக்க புலனாய்வு துறைக்கு, சட்டப்படி வெளி நாட்டவர்களை மட்டுமே கண்காணிக்க முடியும். வெளி நாட்டவர்களை கண்காணிக்க அவர்களது தரவு தொடர்புகள் அமெரிக்காவில் முடிய வேண்டும் அல்லது அமெரிக்கா ஊடாக கடந்து செல்ல வேண்டும். வெளிநாட்டினரை கண்காணிப்பது மோசம் என்று தோன்றாது எப்பொழுது வரை என்றால் நானோ நீங்களோ ஒரு வெளிநாட்டினராக இல்லாதவரை. சொல்ல போனால் உலகின் 96 விழுக்காடு மக்கள் வெளிநாட்டினர் தான்

(சிரிப்பொலி)

சரி தானே?

அதனால் இது நம் மேல் நடத்தப்படும் ஒட்டுமொத்தமான பொதுவான ஒரு கண்காணிப்பு, தொலை தொடர்பையும் இணையதளத்தையும் பயன்படுத்தும் நம் எல்லோர் மேலும் உள்ளது இந்த கண்காணிப்பு.

என்னை தவறாக எண்ண வேண்டாம்; சில முறையான கண்காணிப்புகளும் உண்டு. நான் ஒரு சுதந்திர விரும்பி, அப்படி இருந்தும் கூட சில கண்காணிப்புகள் முறையானது என்றே நினைக்கிறேன். சட்ட அமலாக்க பிரிவினர் ஒரு கொலையாளியை பிடிக்க முயலும் பொழுதோ அல்லது ஒரு போதை பொருள் வியாபாரியை பிடிப்பதற்கோ, அல்லது பள்ளி மாணவர்கள் கலவரத்தை தடுப்பதற்கோ. துப்புகள் இருந்தாலோ அல்லது சந்தேகம் இருந்தாலோ, சந்தேகப்படுபவரின் தொலைபேசியை ஒட்டு கேட்பது மிகவும் சரியான செயல் தான் அவர்களின் இணையதள தொடர்புகளை இடைமறிப்பதும் சரியே இவைகளை பற்றி அல்ல எனது விவாதம், PRISM போன்ற திட்டங்கள் இவை போன்றது அல்ல. அது அவர்கள் சந்தேகப்படும் பொது மக்களை கண்காணிப்பதற்கானது அல்ல, தவறு செய்யும் பொது மக்களை கண்காணிப்பதற்கானது அல்ல இந்த கண்காணிப்பு என்பது அப்பாவிகள் என்று தெரிந்தும் மக்கள் மேல் ஏவப்படுகிறது.

முக்கியமான 4 வாதங்கள் இதுபோன்ற கண்காணிப்புகளுக்கு சாதகமாக உள்ளது என்னவென்றால், முதலாவதாக எப்பொழுதெல்லாம் இந்த வெளிப்பாடுகள் குறித்த விவாதங்களை ஆரம்பிக்கிறோமோ அப்பொழுதெல்லாம் அதை மறுத்து பேசி அதன் தாக்கத்தை குறைக்க நினைப்பவர்கள் எங்களுக்கு இதை பற்றி முன்னமே தெரியும் என்று சொல்வார்கள் இது நடக்கிறது என்று எங்களுக்கு தெரியும். இது ஒன்றும் புதிதல்ல ஆனால் அது உண்மையல்ல.

யாரையும் அப்படி பேச அனுமதிக்காதீர்கள் ஏனெனில் இது நமக்கு முன்னமே தெரியாது. இது மிகவும் மோசமான நமது அச்சங்களில் ஒன்றாக இருந்திருக்கலாம். ஆனால் இப்படி ஒன்று நடப்பது நமக்குத் தெரியாது இப்பொழுது இப்படி ஒன்று நடப்பது நமக்கு உறுதியாக தெரிந்துவிட்டது. இதற்கு முன் தெரியாது PRISM பற்றி கேள்விப்பட்டதில்லை, XKeyscore பற்றி தெரியாது, Cybertrans பற்றி தெரியாது, Double Arrow பற்றி தெரியாது, Skywriter பற்றி தெரியாது – இவையெல்லாம் இது போன்ற வெவ்வேறு திட்டங்கள் அமெரிக்க புலனாய்வு முகமையத்தால் நடத்தபடுபவை ஆனால் இப்பொழுது நமக்கு தெரியும்.

நமக்கு இன்னொன்றும் தெரியவில்லை அமெரிக்க புலனாய்வு அமைப்புகள் எந்த எல்லைக்கும் செல்ல கூடியவை என்று எந்த நிலையான அமைப்பையும் கூட ஊடுருவ கூடியவை எந்த மறைகுறியீட்டு படிமுறையையும் வேண்டுமென்றே அழிக்க வல்லது. இதன் பொருள் என்னவெனில் நாம் பாதுகாப்பான முறை ஒன்றை ஏற்கவேண்டும், பாதுகாப்பான ஒரு மறைகுறியீட்டு படிமுறை அதை பயன்படுத்தி நாம் ஒரு மறைகுறியீட்டை எழுதினால் யாராலும் மறைவிலக்கம் செய்ய முடியாது அந்த கோப்பை. அந்த ஒரு கோப்பை மறைவிலக்கம் செய்ய உலகில் உள்ள அணைத்து கணினிகளையும் பயன்படுத்தினாலும் பல கோடி ஆண்டுகள் தேவைப்படும். பாதுகாப்பானதாகவும் எளிதில் கண்டுபிடிக்க முடியாதவையாகவும் இருக்க வேண்டும் இருப்பதிலேயே மிக சிறந்த ஒன்றை தேர்ந்தெடுத்து அதை வேண்டுமென்றே பலவீனபடுத்துகிறார்கள், அதனால் முடிவில் நாம் எல்லோரும் பாதுகாப்பற்றவராகிறோம்.

நிஜ வாழ்க்கையில் இதற்கு சமமான ஒன்றை சொல்ல வேண்டுமென்றால் இந்த புலனாய்வு அமைப்புகள் வேண்டுமென்றே வீடுகளின் எச்சரிக்கை ஒலி எழுப்பும் கருவிகளில் ரகசிய குறியீடுகளை புகுத்தி அதன் மூலம் எல்லா வீடுகளிலும் புகும் முயற்சியை போன்றது. ஒரு சில மோசமான மனிதர்கள் வீடுகளில் எச்சரிக்கை ஒலி கருவி வைத்திருப்பார்கள் ஆனால் இதனால் நாம் எல்லோரும் முடிவில் பாதுகாப்பற்றவராக ஆக்க படுகிறோம். பின் வாசல் வழியாக மறைகுறியீட்டு படிமுறை புகுத்தபடுவது திடுக்கிட வைக்கிறது. ஆனால் ஒன்று புலனாய்வு அமைப்புகள் அவர்களது வேலையை தான் செய்கிறார்கள் அவர்களை இவைகளை செய்ய சொல்கிறார்கள்: குறிகை புலனாய்வு, தொலைதொடர்பு கண்காணிப்பு , இணையத்தள போக்குவரத்து கண்காணிப்பு இவைகளை தான் அவர்கள் செய்ய முயல்கிறார்கள், இணையதள போக்குவரத்தின் ஒரு பெரும்பகுதி மறைகுறியீடு செய்யப்பட்டுள்ளதால், மறைகுறியீட்டை சுற்றியே அவர்களது பணிகள் உள்ளது.

மறைகுறியீட்டு படிமுறைகளை அழிப்பது, என்பது ஒரு சிறந்த எடுத்துகாட்டு எப்படியெல்லாம் அமெரிக்க புலனாய்வு அமைப்புகள் கட்டவிழ்த்து விடப்பட்டிருக்கிறது என்பதற்கு ஆதாரம் அவர்கள் முற்றிலுமாக கட்டுபாடற்று செயல்படுகிறார்கள் அவர்களை மீண்டும் கட்டுபாட்டிற்குள் கொண்டு வரவேண்டும்

புலனாய்வு கசிவுகளை பற்றி நமக்கு என்ன தான் தெரியும் ? இவற்றிற்கு எல்லாம் அடிப்படை திரு. ஸ்னோடன் கசிய விட்ட கோப்புகள் தான். முதன் முதலில் வெளிவந்த PRISM காட்சி வில்லை ஜூன் மாதம் வெளிவந்தது தரவுகள் சேகரிக்கும் திட்டத்தில், எப்படி அந்த சேவை வழங்குவோர் தரவுகள் தருகிறார்கள் என்பதை விளக்குகிறது. அப்படி அவர்கள் தொடர்பு வைத்திருக்கும் சேவை வழங்குவோர் பெயர்களை கூட சொல்லுகிறார்கள். அதில் தேதிகளை கூட குறிப்பிடுகிறார்கள் அந்தந்த தேதிகளில் தான் அந்த சேவை வழங்குவோர் தரவுகள் சேகரிக்கும் வேலையை தொடங்கினார்களாம். எடுத்துகாட்டாக மைக்ரோசாப்ட் நிறுவனம் செப்டம்பர் 17, 2007 ஆம் தேதி தொடங்கியதாம் யாஹூ மார்ச் 12, 2008 இல் தொடங்கியதாம் இதே போன்று மற்றவர்களும் : கூகிள், முகநூல், skype , Apple மற்றும் பலர்.

ஆனால் எல்லா நிறுவனங்களும் இதை மறுக்கின்றன இதில் உண்மை இல்லை என்று அவர்கள் சொல்கிறார்கள், தரவுகளுக்கு பின் வாசல் நுழைவுரிமை யாருக்கும் அளிப்பதில்லை என்று அவர்கள் சொல்கிறார்கள். ஆனால் நம்மிடம் இந்த கோப்புகள் இருக்கிறது, அதனால் இதில் யாரோ ஒருவர் சொல்வது பொய், அல்லது இதற்கு ஏதாவது மாற்று விளக்கம் இருக்கிறதா?

ஒரு விளக்கம் என்னவாக இருக்கும் என்றால் இந்த சேவை வழங்குவோர் அனைவரும் எங்களுக்கு ஒத்துழைக்கவில்லை என்பதாக இருக்கும். மாறாக அவை கொந்துதல் செய்யப்பட்டவை. அவர்கள் ஒத்துழைக்கவில்லை. நாங்கள் கொந்துதல் செய்தோம் என்று விளக்குவார்கள்.

இங்கு ஒரு அரசே தம் மக்களை கொந்துதல் செய்கிறது இது இயல்புக்கு முரணானதாகத் தோன்றலாம். ஆனால் நமக்கு தெரிந்து இது போன்ற நிகழ்வுகள் நடந்திருக்கிறது எடுத்துகாட்டாக Flame தீங்குநிரலை எடுத்து கொள்ளுங்கள் நாம் ஆணித்தரமாக நம்புகிறோம். அமெரிக்க அரசு தான் இதன் காரணகர்த்தா என்று விண்டோசின் கணினி கட்டமைப்பு புதுபித்தல் பாதுகாப்பை சீர்குலைய செய்து பரவ விட்டது, அதாவது அந்த நிறுவனம் கொந்துதலுக்கு உள்ளானது அவர்களது அரசினாலேயே. இந்த புனைவிற்கு ஆதரவாக மேலும் சான்றுகள் உள்ளது.

ஜெர்மனியின் Der Spiegel மேலும் தகவல்களை கசிய விட்டார், சிட்டர் குழாம்கள் நடத்தும் கொந்துதல் செயல்பாடுகள் குறித்து அவைகள் இந்த புலனாய்வு முகவையகங்களுக்கு உள்ளேயே செயல்படுகிறது. NSA -ல் அதற்கு பெயர் TAO Tailored Access Operations, GCHQ -இல் அதாவது இங்கிலாந்தின் ஒத்த நிறுவனம், இதன் பெயர் NAC, Network Analysis Centre சமீபத்தில் வெளியான 3 காட்சி வில்லைகள் அவர்களது செயல்பாடுகளை விளக்குகிறது இவைகள் GCHQ புலனாய்வு முகவயைகத்தால் நடத்தபடுகிறது.

இங்கிலாந்தில் இருந்து பெல்ஜியமில் உள்ள ஒரு தொலை தொடர்பு நிறுவனம் தான் இவர்கள் இலக்கு இதன் பொருள் என்ன? ஒரு ஐரோப்பிய ஒன்றிய தேசத்தின் புலனாய்வு முகவையகம் பாதுகாப்பு அம்சங்களை மீறுகிறது வேண்டுமென்றே மற்றொரு ஐ.ஒ. ( ஐரோப்பிய ஒன்றியம் ) நாட்டின் தொலை தொடர்பு நிறுவனத்தைக் குறிவைக்கிறது இந்த காட்சி வில்லைகளில் போகிற போக்கில் விவாதம் செய்கிறார்கள் வழக்கம் போல வணிகம் தான் இங்கு பிரதான இலக்கு, இரண்டாவது இலக்கு என்னவென்றால், ஒரு குழுவை உருவாக்குவது.

அனேகமாக ஒரு மதுக்கடையில் வியாழக்கிழமை மாலை இவர்கள் ஒரு குழுவை உருவாக்கலாம். அவர்கள் பவர் பாயிண்ட் காட்சி விளக்கம் கூட அளிக்கலாம் அதற்கு ‘வெற்றி’ என்று கூட அவர்கள் பெயரிடலாம் இதை போன்ற சேவைக்கு அவர்களுக்கு நுழைவுரிமை கிடைக்கும் பொழுது இது என்ன அநியாயம் ?

இன்னொரு வாதம் கூட செய்யலாம் சரி, இது போன்று நடந்து கொண்டிருக்கலாம் ஆனால் இதை போன்று மற்ற நாடுகளும் செய்கிறதே எல்லா நாடுகளும் வேவு பார்க்கின்றது. அது உண்மையாக கூட இருக்கலாம் பல நாடுகள் செய்கின்றது, எல்லா நாடுகளும் அல்ல.

எடுத்துகாட்டாக ; ஸ்வீடன். ஏன் ஸ்வீடன் என்றால் அமெரிக்காவிற்கு இணையான சட்டங்கள் அங்கு உள்ளது. உங்களது தரவு போக்குவரத்து ஸ்வீடன் நாடு வழியாக சென்றால் அவர்களது புலனாய்வு முகவையகங்களுக்கு சட்டப்படி அவைகளை மறிக்க உரிமை உள்ளது. சரி, முடிவு எடுக்கும் அதிகாரம் உள்ள எத்தனை ஸ்வீடன் அதிகாரிகள் அரசியல்வாதிகள் , வியாபார தலைவர்கள் அமெரிக்க சேவையை பயன் படுத்துகிறார்கள்; எடுத்துகாட்டாக விண்டோஸ் அல்லது OSX , முகநூல் அல்லது linkedin அல்லது அவர்களது தரவுகளை i-Cloud இல் சேமிக்கிறார்கள் அல்லது skydrive, Dropbox இல் சேமிக்கிறார்கள் அல்லது கணினி நேரடி தொடர்பு மூலம் அமேசான் சேவை அல்லது விற்பனை சேவைகளை பெறலாம் இதற்கான பதில் ஒவ்வொரு ஸ்வீடன் வியாபார தலைவரும் இதை நாள் தோறும் செய்கிறார்கள் இப்பொழுது இதன் மறுபுறத்தை நாம் பார்ப்போம் எத்தனை அமெரிக்கத் தலைவர்கள் ஸ்வீடன் மின்னஞ்சல்களையும் இணையதள சேவைகளையும் பயன்படுத்துகிறார்கள்? இதற்க்கான பதில் ஒன்றும் இல்லை என்பது தான். அதனால் இது சமநிலையில் இல்லை சமநிலையை விடுங்கள், அருகில் கூட இல்லை.

எப்போதாவது ஐரோப்பிய வெற்றி கதைகளையும் கேட்பதுண்டு, ஆனால் அவைகளும் இறுதியில் அமெரிக்காவிற்கு விற்கப்படும் எடுத்துகாட்டாக skype பாதுகாப்பானதாக இருந்தது ஆரம்பம் முதல் முடிவு வரை மறைகுறியீடு செய்யபட்டிருந்தது. அப்புறம் அமெரிக்காவிற்கு விற்கப்பட்டது, ஆனால் இப்பொழுது அது பாதுகாப்பானது அல்ல. மீண்டும் நம் பாதுகாப்பான ஒன்றை வேண்டுமென்றே பாதுகாப்பற்றதாக மாற்றி விடுகிறோம், அதன் விளைவு நாம் எல்லோரும் பாதுகாப்பு அற்றவராக ஆக்க படுகிறோம்.

மற்றொரு வாதம் என்னவென்றால் அமெரிக்கா மட்டும் தான் தீவிரவாதிளை எதிர்த்து போரிடுகிறார்கள். இது தீவிரவாதத்திற்கு எதிரான ஒரு போர் என்பதாகும், அதை பற்றி நீங்கள் கவலைப்பட வேண்டாம் நான் தீவரவாதத்திற்கு எதிரான போரை சொல்லவில்லை. ஆம் இதன் ஒரு பகுதி தீவரவாததிற்கு எதிரான போர் தான். அவர்கள் மக்களை கொல்கிறார்கள், முடமாக்கிரார்கள் அவர்களுக்கு எதிராக போர் தொடுக்க தான் வேண்டும். இந்த கசிவுகள் மூலம் இதை நாம் தெரிந்து கொள்கிறோம். ஆனால் அவர்கள் இதே நுட்பத்தை ஐரோப்பிய தலைவர்களின் தொலைபேசிகளை ஒட்டு கேட்பதற்கும் மெக்சிகோ மற்றும் பிரேசில் நாட்டு வாசிகளின் மின்னஞ்சல்களை துப்பு துலக்கவும் ஐ,நா., ஐ.ஒ நாட்டு பாராளுமன்ற மின்னஞ்சல் போக்குவரத்தை படிக்கவும் பயன்படுத்தினார்கள் கண்டிப்பாக அவர்கள் தீவிரவாதிகளை ஐ.ஒ .பாராளுமன்றத்தில் தேடியிருக்க முடியாது தானே?

இது தீவிரவாதத்திற்கு எதிரான போர் அல்ல ஒரு பகுதி வேண்டுமானால் இருக்கலாம், ஆனால் தீவிரவாதிகள் இருக்கிறார்கள் ஆனால் நாம் உண்மையாகவே தீவிரவாதிகளை இருத்தலியல் போன்ற ஒரு அச்சுறுத்தலாக பார்க்கிறோமா ? அவர்களை எதிர்த்து போராட நமக்கு விருப்பம் இருக்கிறதா ? அமெரிக்கர்கள் அவர்களது அரசியலமைப்பை தூக்கி எறிய தயாரா ? தீவிரவாதிகள் இருப்பதால் குப்பையில் எறிய தயாரா ? இவை உரிமை சட்டத்திற்கும் மற்ற சட்ட திருத்தங்களுக்கும் பொருந்தும். மேலும் உலகளாவிய மனித உரிமை பிரகடனத்திற்கும் ஐரோப்பிய ஒன்றியத்தின் மனித உரிமை, அடிப்படை உரிமை மற்றும் பத்திரிகை உரிமை குறித்த மரபுகளையும் எறிவார்களா ? தீவிரவாதத்தை இருத்தலியல் போன்ற ஒரு அச்சுறுத்தலாக பார்க்கிறோமா அதற்காக எதுவும் செய்ய தயாராக இருக்கிறோமா ?

ஆனால் மக்கள் தீவிரவாதிகளை பார்த்து பீதியடைகிறார்கள் அதனால் அவர்கள் கண்காணிப்பு சரிதான் என்று நினைக்கிறார்கள். ஏனெனில் அவர்களுக்கு மறைப்பதற்கு ஒன்றுமில்லை உதவுமென்றால் என்னை சுதந்திரமாக கண்காணியுங்கள் என்று சொல்கிறார்கள். எனக்கு மறைப்பதற்கு ஒன்றுமில்லை என்று யாரெல்லாம் சொல்கிறார்களோ அவர்கள் இதை பற்றி சரியாக சிந்திக்கவில்லை என்று தான் பொருள்…

(கைதட்டல்)

ஏனெனில் நமக்கு அந்தரங்கம் என்றுறொன்று இருக்கிறது. உங்களுக்கு உண்மையாகவே மறைக்க ஒன்றுமில்லை எனில் அதை முதலில் என்னிடம் தெரிவிக்கவும், ஏனெனில் அப்பொழுது எனக்கு ஒரு விடயம் புலப்படுகிறது உங்களிடம் எந்த ரகசியத்தையும் பகிர்ந்து கொள்ளகூடாது. ஏனெனில் உங்களால் எந்த ரகசியத்தையும் பாதுகாக்க முடியாது. ஆனால் இணையத்தில் மக்கள் நேர்மையாக தகவல்களை பகிர்கிறார்கள், ஆனால் இந்த கசிவுகள் தொடங்கியபொழுது, நிறைய மக்கள் இந்த கேள்வியை எழுப்பினார்கள் எனக்கு மறைப்பதற்கு ஒன்றுமில்லை நான் மோசமான அல்லது சட்ட விரோதமானது ஒன்றும் செய்வதில்லை.

ஆம் குறிப்பாக புலனாய்வு முகைவயகத்துடன் பகிர கூடிய தகவல்கள் ஏதும் என்னிடம் இல்லை. குறிப்பாக ஒரு வெளிநாட்டு புலனாய்வு முகமையகத்துடன். அப்படியே ஒருகால் ஒரு நாட்டாண்மைகாரர் நமக்கு தேவைபட்டால் நான் ஒரு உள்ளூர் நாட்டாமையையே விரும்புவேன், வெளிநாட்டு நாட்டாண்மையை அல்ல. இந்த கசிவுகள் முதலில் வெளிவந்த பொழுது நான் Twitter இல் இப்படி என் கருத்தை வெளியிட்டிருந்தேன் நீங்கள் தேடல் இயந்திரத்தை பயன்படுத்தும் பொழுது அமெரிக்க புலனாய்வு துறைக்கு நீங்கள் தானாகவே எல்லாவற்றையும் கசிய விடுகிறீர்கள் இரண்டு நிமிடங்களில் எனக்கு ஒரு பதில் வந்தது அமெரிக்காவில் உள்ள யாரோ ஒரு கிம்பெர்ல்யிடம் இருந்து நீங்கள் இதை பற்றி ஏன் கவலைபடுகிறீர்கள் என்று எனக்கு சவால் விட்டிருந்தார்.

நான் கவலைபடுவதற்கு என்ன இருக்கிறது ? நான் என்ன நிர்வாண படங்களையா அனுப்புகிறேன் ? கிம்பெர்லேய்க்கு எனது பதில் இதுவாக இருந்தது நான் என்ன அனுப்புகிறேன் என்பது உங்களுடயதோ அல்லது உங்களது அரசாங்கத்துடையதோ பிரச்சனை அல்ல, ஏனெனில் அது எனது அந்தரங்கத்தை பற்றியது. அந்தரங்கங்கள் இசைவிணக்கமுறைக்கு அப்பாற்பட்டது நாம் பயன்படுத்தும் எல்லா ஒழுங்கு முறைகளிலும் இயற்கையாகவே அது இருத்தல் வேண்டும்.

(கைதட்டல்)

நாம் இன்னொன்றையும் புரிந்து கொள்ளவேண்டும். நாம் தேடல் இயந்திரங்களுடன் அநியாயத்திற்கு நேர்மையாக நடந்து கொள்கிறோம், உங்களது இணைய உலாவி சரித்திரத்தை எனக்கு காட்டுங்கள் குற்றதிற்கு உட்படுத்தகூடிய செயல்களை என்னால் காட்ட முடியும். அல்லது உங்களை கூச்சமடையவைக்கும் ஏதாவது ஒன்றை 5 நிமிடங்களில் என்னால் காட்டமுடியும். தேடி இயந்திரங்களுடன் அதிக அளவில் நேர்மையாக நடந்து கொள்கிறோம் நமது குடும்பத்தினருடன் நடந்து கொள்வதை விடவும். தேடி இயந்திரங்களுக்கு உங்களை பற்றி உங்கள் குடும்ப அங்கத்தினர்களைவிட அதிகம் தெரியும் இது போன்ற தகவல்களை தான் நாம் அள்ளி கொடுக்கிறோம் நாம் இவைகளை அமெரிக்கர்களுக்கு கொடுக்கிறோம்.

நம் மேல் உள்ள கண்காணிப்பு நம் சரித்திரத்தையே மாற்றி விடும் எடுத்துகாட்டாக ஊழல் ஜனாதிபதி நிக்சனையே எடுத்துகொள்ளுங்கள், நினைத்து பாருங்கள் இதே போன்ற கண்காணிப்பு வசதிகள் அவர் காலத்தில் இருந்திருந்தால் நான் மேற்கோள் காட்ட விரும்புகிறேன் பிரேசில் நாட்டு ஜனாதிபதி திருமதி Dilma Rousseff. ஐ அவர் NSA வின் கண்காணிப்புக்கு இலக்கான ஒருவர் அவரது மின்னஞ்சல்கள் படிக்கப்பட்டது , அவர் சொன்னார் ஐ.நா வின் தலைமையகத்தில் வைத்து சொன்னார் “ஒருவருக்கு அந்தரங்கத்தை பாதுகாக்கும் உரிமை இல்லையெனில் உண்மையான பேச்சு சுதந்திரமும், கருத்து சுதந்திரமும் இருக்க முடியாது ஆகையால் பயனுள்ள ஜனநாயகமும் இருக்கமுடியாது ”

அது தான் இதன் சாரம். அந்தரங்கம் தான் நமது ஜனநாயகத்தின் அடிப்படை எனது தோழர், மற்றொரு பாதுகாப்பு ஆய்வாளர் Marcus Ranum -ஐ மேற்கோள் காட்டினால் , அமெரிக்கா இணையதளத்தை, தற்பொழுது தனது கீழ் இயங்கும் ஒரு குடியேற்ற நாட்டை போல நடத்துகிறது. அதனால் நாம் மீண்டும் காலனி ஆதிக்கத்திற்கு அடிபணிய நேருகிறது அதுவும் நம்மை போன்ற வெளிநாட்டு இணையதள உபயோகிப்பாளர்கள் அமெரிக்கர்களை நமது எஜமானர்களாக நினைக்க வேண்டி இருக்கிறது.

திரு ஸ்னோடன் மேல் பல குற்றங்கள் சுமத்தப்பட்டுள்ளது சிலர் அவர் பிரச்சனைகளை உருவாக்கியதாக சொல்கிறார்கள். அதாவது இந்த கசிவுகளால் அமெரிக்க மேக கணிமை பிரிவுக்கும் மென்பொருள் நிறுவனங்களுக்கும் ஸ்நோடேன் பிரச்சனைகளை உருவாக்கியுள்ளதாக சொல்வது உலகம் வெப்பமயம் ஆவதற்கு Al Gore தான் காரணம் என்று சொல்வது போன்றது.

(சிரிப்பொலி)

(கைதட்டல்)

சரி, இப்பொழுது நாம் என்ன செய்வது ? நாம் கவலைப்பட வேண்டுமா, இல்லை கூடாது. நாம் கோபப்பட வேண்டும் ஏனெனில் இது தவறு, கொடூரமானதும் கூட. இது போல் செய்யக்கூடாது ஆனால் அது இந்த சூழலை மாற்றாது உலகின் பிற நாடுகளுக்கு எது தான் இது போன்ற சூழலை மாற்ற உதவும் ? ஒதுங்கி போக முயற்சிப்பதே சிறந்தது அதாவது அமெரிக்காவில் உருவாக்கப்படும் ஒருங்கியங்களில் இருந்து செயற்படுத்துவதை விட இதை சொல்வது மிகவும் எளிமையானது எப்படி இதை செயல்படுத்துவது ?

ஏதாவது ஒரு நாடு, ஐரோப்பாவில் உள்ள ஏதாவது ஒரு நாடு மாற்று ஏற்பாடுகளை செய்ய முடியாது அமெரிக்க இயங்கு தளங்களுக்கும், மேக கணிமைகளுக்கும் இவைகளை ஒருவர் தனியாக செய்ய வேண்டுமென்பதில்லை, பிற நாடுகளுடன் சேர்ந்து செய்யலாம். இதற்கு வழி திறந்த மூல நிரல்கள் மட்டுமே அனைவரும் சேர்ந்து திறந்த, இலவசமான, பாதுகாப்பான ஒழுங்கு முறைகளை உருவாக்குவதே. அது போன்ற கண்காணிப்புகளை ஏற்றுக்கொள்ளலாம், அப்பொழுது ஒரு நாடு அதன் பிரச்சனைகளுக்கு தனியாக தீர்வு காண வேண்டிவராது சிறிய பிரச்சனைகளுக்கு மட்டும் தீர்வு கண்டால் போதுமானதாக் இருக்கும்.

எனது சக பாதுகாப்பு ஆய்வாளர் ஹாரூன் மீரின் கூற்றை சொல்வதானால் ஒரு நாடு ஒரு சிறு அலையை ஏற்படுத்தினால் போதும் எல்லா சிறு அலைகளும் சேர்ந்து ஒரு பேரலை உருவாகி விடும் அந்த பேரலை ஏனைய எல்லா படகுகளையும் ஒரே நேரத்தில் தூக்கிவிடும் நாம் உருவாக்கும் அந்த பேரலை பாதுகாப்பானதாக, இலவசமானதாக, திறந்த நிரல்களை கொண்டதாக இருக்கும் நம்மை எல்லாம் தூக்கிவிடும் பேரலையாக அது இருக்கும் நம்மை கண்காணிக்கும் நாடுகளுக்கெல்லாம் மேலே…

மிக்க நன்றி.

***

This talk was presented to a local audience at TEDxBrussels, an independent event. TED editors featured it among our selections on the home page.

About the speaker : Mikko Hypponen · Cybersecurity expert As computer access expands, Mikko Hypponen asks: What’s the next killer virus, and will the world be able to cope with it? And also: How can we protect digital privacy in the age of government surveillance?

Tamil translation by Kalyanasundar Subramanyam. Reviewed by Vijaya Sankar N.

நன்றி : TED

 

விவாதியுங்கள்

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க