privacy

about us

write

contact

shop

புதிய ஜனநாயகம்

புதிய கலாச்சாரம்

e-books

Global Influence

Communication

Legal Agreement

முகப்புபார்வைஃபேஸ்புக் பார்வைஎச்ச ராஜாவுக்கு ஃபேஸ்புக்கில் சில அறிவார்ந்த செருப்படிகள் !

எச்ச ராஜாவுக்கு ஃபேஸ்புக்கில் சில அறிவார்ந்த செருப்படிகள் !

-

திரைப்படக் கவிஞர் வைரமுத்து, தினமணி கூட்டம் ஒன்றில் ஆண்டாள் பற்றி பாராட்டிப் பேசிய உரை ஒன்றை இந்துமதவெறி வானரங்கள் எடுத்துக் கொண்டு வெறிப் பேச்சுக்களை எறிந்து வருகின்றன. தமிழகத்தில் மட்டுமல்ல தென்னிந்தியாவிலும் பல நூற்றாண்டுகள் நீடித்த தேவதாசி முறை என்பது பெண்களை இழிவுபடுத்தும் ஒரு பார்ப்பனிய ஒடுக்கு முறையாகும். இதை திராவிட இயககம்தான் 20-ம் நூற்றாண்டின் ஆரம்பத்தில் ஒழித்தது. அப்போது இந்துமதவெறியர்கள் தேவதாசி முறைக்கு ஆதரவாக கூக்குரலிட்டனர். அப்போது மட்டுமல்ல, 90-களின் இறுதி வரையிலும் கூட பல்வேறு நடனக்கலைஞர்கள், இந்துமத அறிஞர்கள் தேவாசி முறையை ஆதரித்து பேசியிருக்கின்றனர். இப்போதும் கூட இந்த பேச்சுக்களை பார்க்கலாம்.
அது குறித்து90-களின் மத்தியில் வெளிவந்த புதிய கலாச்சாரம் கட்டுரையை விரைவில் வெளியிடுகிறோம். ஆண்டாளை தேவதாசி என்று ஒரு அமெரிக்க ஆய்வாளர் குறிப்பிட்டதை வைரமுத்து மேற்கோள் காட்டியதை வைத்து எச்ச ராஜா துள்ளுகிறார். வைரமுத்துவிற்கு பகிரங்கமாக கொலை மிரட்டல் விடுக்கிறார். எனில் பார்ப்பனியத்தால் பாதுகாக்கப்பட்ட தேவதாசி இழிவு முறையை திராவிட இயக்கம் ஒழித்ததை எச்ச ஏற்கிறார் என்று பொருள். இப்படி வரலாற்றையே மாற்றி பேசும் இந்த கயவர்கள் என்ன வேண்டுமானாலும் பேசுவார்கள், செய்வார்கள் என்பதை இந்த அவதூறுப் பிரச்சாரம் நிலைநாட்டியிருக்கிறது.
எச்ச ராஜா-விற்கு வரலாற்று ரீதியாக பதிலளித்த சில பேஸ்புக் நண்பர்களின் பதிவையும், இயக்குநர் பாரதிராஜாவின் வீடியோவையும் இங்கு நன்றியுடன் வெளியிடுகிறோம். இந்த தொகுப்பில் எச்சயை ஆவேசமாக திட்டும் அண்ணன் சீமான் வீடியோ இடம்பெறவில்லை. காரணம் அவர் அப்படி பேசவில்லை. பேசியது எல்லாம் ஐயா ராஜா அப்படித்தான் பேசுவார், அதே மாதிரி நாம் பேச முடியுமா என்று பம்மிப் பேசுவதுதான். பொதுவில் எச் ராஜா குறித்து அண்ணன் சீமானிடம் நிறைய பயம் இருக்கிறது. கூடவே ஆழ்வார்களும், நாயன்மார்களும் தமிழர்கள்தான் இந்துக்களல்ல என்று விவாதிக்க தயாரா? எனும் தமிழ் ஆர்.எஸ்.எஸ் சித்தாந்தமும் இருக்கிறது.
– வினவு

எச்ச ராஜாவை எச்சரிக்கும் இயக்குநர் பாரதிராஜாவின் வீடியோ

‘தீரர்’ சத்தியமூர்த்தி அய்யரின் வாரிசுதாரர்களான தினமணி வைத்தியநாதய்யர்களின் அனுக்ரகத்தில் பெருமை தேட நினைக்கும் வைரமுத்துகளுக்கு ஹெச்.ராஜா சர்மாக்களிடமிருந்து வசவுகள்தான் மிஞ்சும். என்னதான் வெள்ளை வெளேரென ‘ஆம்பளை’ சுடிதாரும், பக்தி இலக்கிய ஃபேர் அண்ட் லவ்லியும் போட்டு மேடையேறினாலும், பிறப்பிலேயே அமைந்த இயல்பான கறுப்பு நிறம்தான் அவாள்களின் கண்களுக்குத் தெரியும். எத்தனை யுகங்களானாலும் பிறப்பின் அடிப்படையிலேயே மனிதர்களைப் பார்க்கும் மைக்ராஸ்கோப் கண்கள் கொண்டவர்களாயிற்றே!

ஆண்டாளையா தேவதாசி குலத்தில் பிறந்ததாகச் சொன்னாய் என கவிப்பேரரசு மீது பாய்ந்து பிறாண்டுகின்றன ஒரிஜினல் ஆன்மிக அரசியல் ஓநாய்கள். பேரரசின் பரம்பரைக்கே டி.என்.ஏ. டெஸ்ட் நடத்துகிறார்கள். எதிரில் நிற்கும் படைக்கு முன்னால், இம்சை அரசன் இரண்டாம் புலிகேசி போல ‘வெள்ளைக் கொடி’ உயர்த்துவது தவிர வேறு வழியில்லை கவிப்பேரரசுக்கு.

வின்னர் வடிவேலு பாணியில், ‘உன் தாய் பத்தினின்னு ஒத்துக்குறேன்’ என வருத்தம் தெரிவித்து, எவர் மனமும் புண்பட்டிருந்தால் அதற்கு புணுகு தடவத் தயார் எனச் சொல்லி, அடுத்தடுத்த விருதுகளுக்கு ஆபத்தில்லாதபடி காத்துக் கொண்டது கவிப்பேரரசின் சாமர்த்தியம். நம்மாளு ஒருத்தர் இத்தனை சாமர்த்தியத்துடன் இருக்கிறார். அத்துடன் எப்போதும் கலைஞரின் நண்பர் என்பதை உரக்க உரைக்கிறார் என்பதில் நமக்கும் பெருமகிழ்ச்சிதான்.

சூடிக் கொடுத்த சுடர்க்கொடியான ஆண்டாள் யாருக்குப் பிறந்தார் என்பது நமக்குப் பிரச்சினையல்ல. ஆண்டாளை தேவதாசி என்று யாரோ எழுதியதை மேற்கோள்காட்டிப் பேசிய கவிஞர் குற்றவாளி என்றால், தேவதாசி என்ற முறையை கோவில்களில் புகுத்தி, பெண்களை இழிவும் அடிமையும்படுத்தி, ஆயிரம் ஆண்டு காலத்திற்கு அதனைக் குலத்தொழிலாக மாற்றி வைத்த பெருங்குற்றவாளிகளை யார் அடையாளப்படுத்துவது? பேசியவரைத் தண்டிப்போம் என்பவர்கள், ஆயிரங்காலத்து அவமானத்திலிருந்து மீளமுடியாத சமூகங்களையும் பிறப்பின் அடிப்படையிலான பேதங்களையும் உருவாக்கியவர்களுக்கும் அதனைக் கட்டிக்காத்து அரசியல் செய்பவர்களுக்கும் என்ன தண்டனைத் தரப்போகிறார்கள்? ஆண்டாளை விட்டுவிடுவோம். அதிகாரத்தை வைத்துக் கொண்டு ஆண்டு கொண்டிருப்போரை என்ன செய்யப் போகிறோம்?

வைரமுத்துவை நோக்கி ஹெச்.ராஜா வகையறாக்காளல் வீசப்பட்ட வார்த்தைகள் என்பவை சூத்திரனாக்கப்பட்ட-அதற்கும் கீழான நிலைக்குத் தள்ளப்பட்ட அனைவரின் மீதும் காலங்காலமாக வீசப்படும் வார்த்தைகள். சூத்திரன் என்றால் வேசி மகன் என எழுதி வைக்கப்பட்டிருப்பதை எடுத்துச் சொன்ன பெரியாரும், இந்து என்றால் திருடன் என அகராதியில் சொல்லப்பட்டிருப்பதை எடுத்துக் காட்டிய கலைஞரும் மதஉணர்வுகளைப் புண்படுத்திவிட்டதாக அவாள்களைவிட இவாள்கள் போடும் பெருங்கூச்சல்களும் காலந்தோறும் தொடர்ந்து கொண்டே இருக்கின்றன.

புண்படுத்தலாமா எனக் கேட்டபடி அவர்களுக்கு, நமது பின்புறத்தை வசதியாக காட்டிக் கொண்டே இருக்கும்வரை வைரமுத்துகளின் நிலைமைதான் எல்லோருக்கும்.

– Govi Lenin

__________

எச்ச ராஜாவை எச்சரிக்கும் தமிழன் பிரசன்னா

ண்டாள் பாடல்கள் அனைத்தும் அடல்ட்ஸ் ஒன்லி என்ற விதத்தில் இருக்கும் என்பது திருப்பாவை படித்தவர்களுக்கு நன்கு தெரியும். அந்த அளவிற்கு, அதிலும் ஒரு பெண் எழுதியிருக்கும்போது ஆணாதிக்கம் நிரம்பி வழிந்த அக்காலத்தில் அப்பெண்ணை எப்படி பார்த்திருப்பார்கள்… அவர் தாசியாக்கப்பட்டிருப்பார் என்ற ஒரு ஆய்வு கண்ணோட்டத்தில் சொன்னால், அதற்கு திரு. கவிப்பேரரசு வைரமுத்து அவர்களை இவ்வளவு இழிவாக பேசுகிறார் என்றால் இவ்வளவு காழ்ப்புணர்ச்சி… இதை தானே பார்ப்பனத் திமிர் என்று சொல்கிறோம். !

உங்கள் இனத்தைச் சேர்ந்த ஒரு பெண்ணை சொன்னதற்கே இப்படி ஆத்திரம் வருகிறதே… ஈராயிரம் ஆண்டுகளுக்கு முன்னாலேயே, எங்கள் இன பெண்களை சொல்லவில்லையா…தாசிகள் என்று, சூத்திரன் என்பவன் ‘ தாசியின் மகன்’ என்று எழுதி வைக்கவில்லையா… உங்கள் வேதங்கள்.!

உங்கள் பூணூல் சாஸ்திரப்படி, இந்து மதத்தை கடைப்பிடிக்கும் சூத்திரர்கள் அனைவரும் தாசியின் மகன்கள் தானே… திரு. வைரமுத்து அவர்களை தாசி மகன் என்று ஒவ்வொரு தடவையும் சொல்லும் ராஜா, அனைவரையும் சேர்த்து, இது தான் சமயம் என்று தாசிமகன்கள் என்று வேறு கொக்கரிக்கிறார்.!

மற்ற மாநிலங்கள் போன்றா தமிழ்நாடு? உங்கள் வண்டவாளங்களை, தண்டவாளங்களில் ஏற்றிய எங்கள் தந்தை பெரியார் அறிவுறுத்திய, உணர்த்திய திராவிட உணர்வும், பார்ப்பனீய தந்திரமும் நாங்கள் முழுதும் அறிந்ததே…இந்த அளவிற்கு பார்ப்பனீயம் என்ற பாம்பு , தன்னுடைய நஞ்சை கக்கிக்கொண்டிருக்கிறது …!

இதையும் கூட, இவர்களின் பக்தி என்ற பெயரில் நடத்திய, நடத்திக் கொண்டிருக்கும் அசிங்கங்களையும், ஆபாசங்களையும், வேதங்களின் உண்மை முகத்திரையையும் கிழித்தெறிய மற்றுமொரு வாய்ப்பாக தான் பெரியாரியவாதிகள் பயன்படுத்திக்கொள்வார்கள் என்பதை ராஜாவிற்கு சொல்லிக்கொள்கிறோம்.!

– சுசிலா

____________

மூவலூர் ராமாமிர்தம் அம்மையார் & டாக்டர் முத்துலட்சுமி அம்மையார் – செய்த மாபெரும் புரட்சி.. தேவதாசி முறை ஒழிப்பு..

ண்டாளை தேவதாசி என வைரமுத்து சொன்னது மகா தவறு, ஆண்டாளுக்கு மிகபெரிய இழுக்கு என்றால், அந்த “தேவதாசி” என்னும் சொல் ஹெச். ராஜாவை எந்தளவுக்கு கொந்தளிக்க வைத்துள்ளது என்பது புரிகிறதா? அப்படியென்றால், ஒரு நூறு ஆண்டுகளுக்கு முன்புவரை, பெரிய ஹிந்து கோயில்களில், இந்த தேவதாசி முறை நடைமுறையில் இருந்து வந்ததே.. அதை நிறுத்தக்கூடாது என அப்போதைய ஹிந்து வகுப்புவாதிகளும், ஹெச்.ராஜா போன்றோரின் முன்னோர்களும் கடுமையாக எதிர்த்து ஏன்?

குறிப்பிட்ட சமூகத்தைச் சேர்ந்த பெண்களை கோவில்களுக்கு பொட்டுக்கட்டி “தேவதாசிகளாக”, பார்ப்பன் புரோகிதர்கள், கோயில் முக்கியஸ்தர்கள், ஊர் பணக்காரர்களுக்கு தாசிகளாக மாற்றும் முறையை ஒழிக்க “தேவதாசி ஒழிப்பு” மசோதாவை, 1930 -ஆம் ஆண்டில் கொண்டு வந்து அம்முறையை முற்றிலும் ஒழித்தது திராவிட இயக்கத்தின் முன்னோடியான அப்போதைய நீதிக்கட்சி அரசு. தேவதாசி ஒழிப்பு மசோதாவை கொண்டுவந்து, அதை சத்தியமூர்த்தி அய்யர் போன்ற பெரிய பார்ப்பனத் தலைவர்களின் கடும் எதிர்ப்பையும் மீறி சட்டமாக மாற்ற பெரும்பாடுபட்டவர் டாக்டர் முத்துலட்சுமி ரெட்டி. இன்றைய காலகட்டத்திலும் தேவதாசி முறை ஒரிசா, வட கர்நாடகா, தெலுங்கானா போன்ற சில இடங்களில் நடைமுறையில் உள்ளது..

மூவலூர் ராமாமிர்தம் அம்மையார் – இவர் சென்னை மாகாணத்தில் தேவதாசி முறையை ஒழிக்கப் பாடுபட்டவர். 1936 -ல் வெளியான இவரது சுயசரிதப் புதினமான தாசிகளின் மோசவலை அல்லது மதி பெற்ற மைனர், தாசிகளின் அவலநிலையை வெளிச்சத்துக்குக் கொண்டுவந்தது. முதலில் இந்திய தேசிய காங்கிரசின் ஆதரவாளராக இருந்த இவர் 1925 -ல் பெரியார் காங்கிரசிலிருந்து விலகியபோது பெரியாரின் சுயமரியாதை இயக்கத்தில் சேர்ந்தார். 1930 -ல் சென்னை மாகாணத்தில் தேவதாசிமுறை ஒழிப்பை சட்டமாகக் கொண்டுவர டாக்டர் முத்துலட்சுமி ரெட்டி முயன்றபோது அவருக்குத் துணை நின்றார்.

ஆனால் அச்சமயம் அந்த முயற்சி வெற்றி பெறவில்லை. 1937 முதல் 1940 வரை நடந்த இந்தி எதிர்ப்புப் போராட்டங்களில் கலந்து கொண்டார். நவம்பர் 1938 -ல் அதற்காக ஆறு வாரங்கள் சிறையிலடைக்கப்பட்டார். அவரது புதினம் மக்களிடையே ஏற்படுத்திய விழிப்புணர்வும் தேவதாசி முறையை ஒழிக்க அவர் மேற்கொண்ட தொடர் பிரச்சாரங்களும் சென்னை தேவதாசி முறை ஒழிப்புச் சட்டம் நிறைவேற வழிவகுத்தன. அச்சட்டம் 1947 -லிருந்து தேவதாசி முறையை ஒழித்தது.

தேவதாசி ஒழிப்பு மசோதாவை டாக்டர் முத்துலட்சுமி ரெட்டி மேலவையில் கொண்டு வந்தபோது, திருவாளர் சத்தியமூர்த்தி அய்யர்வாள் பஞ்சக்கச்சத்தை இறுக்கிக் கட்டிக் கொண்டு, பூணூலை முறுக்கிக் கொண்டு இப்படித்தான் சட்டமன்றத்திலே முழங்கினார்.

“கோயில்களிலே தேவதாசிகளாக இருப்பது, தேவர்களுக்கு அடியார்களாக இருப்பது என்பது சாதாரண காரியமல்ல; அது தெய்வத் தொண்டு – இந்தப் பிறவியில் தேவதாசிகளாக இருந்தால், அடுத்த ஜென்மத்தில் மோட்சம் கிடைக்கும் – தெய்வ காரியத்தில் அரசு தலையிடக் கூடாது”, என்று கூச்சல் போட்டார்.

தந்தை பெரியாரிடம் அறிவுரை கேட்டார் டாக்டர் முத்துலட்சுமி – மறுநாள் அதன்படி சட்டமன்றத்தில் பேசினார். அப்போது நடந்த விவாதம்…

சத்திய மூர்த்தி அய்யர் : தாசிகள் கலைஞர்கள், அவர்களை ஒழிப்பது, கலையை ஒழிப்பதற்குச் சமம். அதோடு இது இறைவனுக்கு உகந்த விசயமா??

முத்துலட்சுமி : நான் கலையை ஒழிக்க சொல்லவில்லை, கலையின் பெயரால் விபச்சாரம், ஒழுங்கீனம் நடப்பதையே எதிர்க்கிறோம்..

சத்திய மூர்த்தி அய்யர் : இறைவனுக்கு பொட்டு கட்டிக்கொள்வது புண்ணியம், இந்த புண்ணியம் முத்துலட்சுமிக்கு வேண்டாமா ?

முத்துலட்சுமி : மதிப்பிற்குறிய சத்திய மூர்த்தி சொல்வது சம்மதிக்க தகுந்த கருத்து மாதிரி தெரியலாம் ஆனால் தேவதாசி முறையில் எங்கள் சமூகத்தினர், அலுத்து போய்விட்டார்கள்.. அந்த புண்ணியத்தை நிறையைவே திகட்டும் அளவுக்கு நாங்கள் அனுபவித்துவிட்டோம்.. எனவே தாங்கள் தங்கள் சமூகத்தினரை தேவதாசி முறைக்கு கட்டுப்பட சொல்லி கொஞ்ச காலம் அந்த புண்ணியத்தை அனுபவிக்கச் சொல்ல தயாரா ?

சத்திய மூர்த்தி அய்யர் : (கப் சிப்)

இப்போது சொல்லுங்கள், ஒரு நூறு ஆண்டுகளுக்கு முன்புவரை பார்ப்பன கும்பல் காப்பாற்ற போராடிய “தேவாதாசி” என்னும் சொல், இப்போது எச்ச.ராஜா அய்யர்வாள்களுக்கு எட்டிகாயாய் கசக்க தந்தை பெரியாரும், திராவிட முன்னோடியான நீதி கட்சியும், மூவலூர் ராமாமிர்தம் அம்மையார் & டாக்டர் முத்துலட்சுமி அமையாரும் தானே காரணம்.

வாழ்க தந்தை பெரியார்.. வளர்க அவர் தொண்டு.. திராவிடம் மறவேல்..

– Prakash JP

__________

__________

தேவதாசி குலம் குறித்து 1901 மக்கள் தொகைக் கணக்கெடுப்பு கொடுக்கும் விளக்கம் என்னவென்றால், “வேறு வேறு சாதிகளை சேர்ந்த ஆண் – பெண் இருவரின் தவறான நடத்தையால் பிறக்கும் பெண்களே கோயில்களுக்கு அர்ப்பணிக்கப்பட்டார்கள். கோயில்களில் பாட்டு, நடனம் என்பது இவர்களது தொழில்” என்கிறது.

தேவதாசிமுறை ஒழிப்பு தொடர்பான மசோதா, 1920 -களின் இறுதியில் சென்னை மாகாண சட்டமன்றத்தில் முத்துலட்சுமி ரெட்டி அம்மையாரால் கொண்டு வரப்படுகிறது. அதை எதிர்த்துப் பேசிய அன்றைய காங்கிரஸ் தலைவர் சத்தியமூர்த்தி அய்யர், “தேவதாசிகள், ஆண்டவனின் திருப்பணிக்காக அர்ப்பணிக்கப்பட்டவர்கள். புனிதத்தன்மை பெற்றவர்கள். இந்த மசோதா மூலமாக சமூக ஒழுங்கு கெடக்கூடும். சமூகத்துக்கு தாசிகள் தேவை. இவர்கள் இல்லாவிட்டால் சங்கீதம் மற்றும் பரதக்கலை அழிந்துவிடும்” என்றெல்லாம் எதிர்த்துப் பேசினார். முத்து லட்சுமி ரெட்டி கொடுத்த பதிலடி மிகவும் பிரபலம்.

நான்கைந்து ஆண்டுகளுக்கு முன்பாக சென்னையில் ஒரு மகளிர் கல்லூரியில் பரதநாட்டியம் தொடர்பான ஒரு கருத்தரங்கம் நடந்தது. அப்போது பரதநாட்டிய மங்கையான சொர்ணமால்யா விழாவில் கலந்துக்கொண்டு தேவதாசி முறையை ஆதரித்துப் பேசினார். என் நினைவு சரியாக இருக்குமேயானால் “தாசிகள் என்போர் கடவுளர்களின் துணைவியர்” என்று சொல்லியிருந்தார். திராவிட இயக்கம் தேவையில்லாமல் அரசியல் செய்து அந்த புனித முறையை ஒழித்தது என்று பேசி, கடுமையான எதிர்ப்புகளை சம்பாதித்தார்.

தினமணி விழாவில் கவிஞர் வைரமுத்து, அமெரிக்க இண்டியானா பல்கலைக்கழகம் வெளியிட்டிருந்த ‘Indian movement : some aspects of dissent, protest and reform’ என்கிற நூலில், “Aandal was herself a devadasi” என்று குறிப்பிடப்பட்டிருப்பதை மேற்கோள் காட்டி பேசியிருக்கிறார். இப்போது வைரமுத்துவை யார் எதிர்க்கிறார்கள், எதற்கு எதிர்க்கிறார்கள் என்பதை புரிந்துக்கொள்ள மேற்கண்ட பத்திகள் உதவலாம்.

 – Yuva Krishna

__________

__________

மனுஷ்யபுத்திரனின் புதிய தலைமுறை விவாதம்:

கடவுளை விமர்சித்ததால்தான் கலைஞரின் பேச்சை கடவுள் புடுங்கிட்டார்.
– எச்ச. ராஜா

அட வெண்ண, நீ முதல்ல 90 வயசுவரைக்கும் தாங்குறையான்னு பாரு… அப்புறம் பேசலாம்..

“வாழ்நாள் முழுவதும் கடவுளை வணங்கிய வாஜ்பாயிக்கு அதை புடுங்கியது யார்? வெளியே கூட காட்டமுடியாம “மம்மி” கணக்கா வெச்சிட்டு இருக்கீங்க..

விதவிதமான பூஜை புனஸ்காரங்கள், ஏராளமான யாகங்கள், மந்திரங்கள், கோயில் வழிபாடுகள் என வாழ்ந்த ஜெயலிதாவின் பீசை சீக்கிரமாகவே பிடுங்கியது யார்??

அதைவிடக் கொடுமை. ராமனுக்காக கோயில் கட்டப்போகிறேன் என்று நாடு முழுவதும் ரத யாத்திரை நடத்திய அத்வானி இன்று ஆளும் பா.ஜ.கவின் உதிர்ந்த ரோமமாக, அரசியல் அனாதையாக ஆகிவிட்டது எதனால்?”

என்று நாங்களும் கேட்கலாம். ஆனால் கேட்கமாட்டோம் 🙂

– Prakash JP With Ganesh Babu

__________

டுமையாக மனநிலை பாதிக்கப்பட்டுள்ள எச்.ராஜாவை தங்கள் கட்சியின் தேசியச் செயலர்களில் ஒருவராக வைத்திருக்கும் பாரதிய ஜனதா கட்சியின் பெருந்தன்மை உண்மையிலேயே பாராட்டுக்குரியது.

– Yuva Krishna

__________

காவிங்க கூட சகவாசம் வச்சி எவ்வளவுதான் (தருண் விஜயின் திருக்குறள் காமடி & மோடியின் புத்தக மொழிப்பெயர்ப்பு) ஒட்டி உறவாடினாலும், “பூநூல்” இல்லைன்னா ரொம்ப கீழிறிங்கி அவமானப்படுத்தி செருப்பால் அடிப்பாங்கன்னு இப்போ வைரமுத்துவுக்கு புரிஞ்சிருக்கும்னு நினைக்கிறேன்!

– Srinivasan J

___________

___________

விப்பேரரசு வைரமுத்துவை நாங்கள் விமர்சிக்க பல காரணங்கள் இருக்கலாம். எவரும் கூட விமர்சிக்கலாம் – பொருளோடு!

ஆனால், வேசி மகன் என்றெல்லாம் பேசுகிற நாக்கொழுப்பை, பூணூல் கொழுப்பை ஒருபோதும் ஏற்க முடியாது. காலம் காலமாக தேவடியாள் மகன்- சூத்திரன் என்று இழிவுபடுத்தப்பட்ட ஒரு சமூகத்திலிருந்து வெளிவந்து, போராடி வென்ற ஒருவரைப் பொது மேடையில் ‘வேசி மகன், தாசி மகன்’ என்றெல்லாம் பேசுகிற திமிர்த்தனத்தை ஒரு போதும் பொறுத்துக்கொள்ள முடியாது.

அது எந்த பூணூல் பொறுக்கியாக இருந்தாலும் சரி, பூணூலுக்கு வால் பிடிக்கும் எந்தப் பொறுக்கி ராமனாக இருந்தால் சரி, உரிய பதிலைத் தந்தே ஆக வேண்டும்.

தேவதாசி என்று காலம்காலமாக எங்கள் பெண்கள் இழிவுபடுத்தப்பட்டதாக நாம் கொதித்தபோது, அப்படியெல்லாம் இல்லையென்று குதித்த இந்த ஆர்.எஸ்.எஸ். பொறுக்கிகள், இப்போ எந்த வாயை வைத்துக் கொண்டு வைரமுத்துவை திட்டுகிறார்கள்.

ஆட்டம் அதிகமாகிறதென்றால் அஸ்திவாரம் கோளாறு என்று பொருள். உங்கள் அஸ்திவாரத்தோடு சாயும் காலமடா இது! சாய்ப்போம் சனாதனத்தை… வேரோடு!

– Prince Ennares Periyar

__________

எச்.ராஜா என்னும் பார்ப்பனன், “ஆண்டாளை தேவதாசி என்று வைரமுத்து சொல்லியதற்காக, இந்துவின் இதயத்தை ஈட்டியால் வைரமுத்து குத்திவிட்டதாக கூறி, வைரமுத்துவின் அநாகரிக பேச்சுக்கு இந்துக்களிடம் மன்னிப்பு கேட்க வேண்டும்” அதர்ம யுத்தம் நடத்துகிறார்.

பாவம்….எச்.ராஜா வடக்கே இருந்து தமிழ்நாட்டுக்குள் நுழைந்ததால் அவருக்கு திராவிடர்கள் எதிர்த்த புராணம், இதிகாச யுத்தங்களின் வரலாறுகள் தெரியாமல் போய்விட்டன.

திராவிடர் இயக்கத்தினர் ஆண்டாளின் காமக் கவிதைகள் குறித்து பிரச்சாரம் மேற்கொண்ட போது அதற்கு எதிர் விளக்கம் அளிக்க முடியாமல்… ‘ஆண்டாள் என்ற ஒரு பெண் இல்லவே இல்லை’ என்று சொன்னதும் ஒரு பார்ப்பனன் தான். அந்த பார்ப்பானை எச்.ராஜா எப்படி தண்டிக்கப் போகிறார்?

வைரமுத்துவின் பேச்சு ஆபாசம் என்றால் ஆண்டாள் எழுதிய காமத்தின் உச்ச உளறல்களை நாச்சியார் திருமொழி பாடல்கள், திருப்பாவை, பாசுரங்கள் என்று பார்ப்பனர்கள் ஏன் போற்றிப் புகழவேண்டும் என்று மக்களை வற்புறுத்துகிறார்கள்?

“கடவுளோடு புணர்வதோர் ஆசையால் கொங்கை கிளர்ந்து குமைந்துக் குதூகலிக்கிறது” என்று எழுதுகிறாள் ஸ்ரீ ஆண்டாள்.

நாச்சியார் திரு மொழியில் இந்த பாடல் உள்ளது. திராவிடர் இயக்க பிரச்சாரத்தின் போது ஆண்டாள் கவிதைகள் குறித்த விமர்சனங்களுக்கு அஞ்சிய பார்ப்பனக் கூட்டம் விமர்சனத்தை எதிர் கொள்ளத் தயங்கி திணறிய போது, ராஜகோபாலாச்சாரியார் என்னும் பார்ப்பனன் எழுதினார்:

“ஆண்டாள் என்னும் ஸ்திரீ இருந்ததேயில்லை. நாலாயிரப் பிரபந்தத்தில் ஆண்டாள் பாடியதாகச் சொல்லப்படும் பாசுரங்கள் அவர் பாடியவையல்ல. பெரியாழ்வார் என்னும் ஆழ்வார் சில பாசுரங்களைப் பாடி அப்பாசுரங்களை ஆண்டாள் என்னும் ஒரு பெயரால் வெளிப்படுத்தினார். ” (திரிவேணி செப்டம்பர் 1946)

ஆச்சாரியார் என்ன புராண மறுப்பாளரா? இந்து மத எதிர்ப்பாளரா? அதெல்லாம் ஒரு மண்ணும் கிடையாது.

பிறகு ஏன் இப்படி எழுதுகிறார்? இவ்வளவு ஆபாசமாக ஒரு பெண் எழுதி இருப்பதாக இருக்கிறதே, மானம் போகிறதே! விரக தாபம் எடுத்து கடவுளோடு புணர வேண்டும் என்று துடிப்பதாகப் பாடல் எழுதினால் படிப்பவர்கள் காரித் துப்பமாட்டார்களா என்ற எண்ணத்தில் இப்படி கருத்தைத் தெரிவித்திருக்கிறார்.

ஆச்சாரியார் சொன்னதை ஏற்றுக் கொண்டால் வெங்கடாசலபதிக்குச் சாத்துவதற்காக ஸ்ரீவில்லிபுத்தூரிலிருந்து ஆண்டாள் சூடிய மாலையை எடுத்துச் செல்வதாகக் கூறும் இந்தக் கதைகளைக் குப்பைக் கூடையில் தூக்கி எறிய வேண்டும்.

இல்லை, இல்லை. ஆச்சாரியார் சொல்லுவது அபவாதம்! புராண விஷயத்தில் ஒன்றைத் தப்பு என்று ஒப்புக் கொண்டால் அடுத்தடுத்து ஒவ்வொன்றையும் பொய்யென்று சொல்லக் கூடிய சூழல் ஏற்பட்டுவிடும் என்று சொல்லுவார்களேயானால்,

தகப்பனைக் கல்யாணம் செய்து கொண்டதையும் தந்தையோடு புணர மகள் ஆசைப்பட்ட அசிங்கத்தையும், ஆபாசத்தையும், அருவருப்பையும், அநாகரித்தையும் ஒப்புக் கொண்டு, எங்களின் அர்த்தமுள்ள இந்து மதத்தின் பெருமையே இது தான் என்று ஒப்புக் கொள்ள வேண்டும்.

* ஆண்டாள் சர்ச்சை. மற்றொரு பதிவு: http://bit.ly/2CMciEd

– ©Yuma JAHARO [தமிழச்சி]