privacy

about us

write

contact

shop

புதிய ஜனநாயகம்

புதிய கலாச்சாரம்

e-books

Global Influence

Communication

Legal Agreement

முகப்புசமூகம்நூல் அறிமுகம்சென்னை புத்தகக் காட்சியில் வாங்க வேண்டிய நூல்கள் - தோழர் துரை சண்முகம்

சென்னை புத்தகக் காட்சியில் வாங்க வேண்டிய நூல்கள் – தோழர் துரை சண்முகம்

-

டிப்பது என்ற ஆர்வம் நம்மில் பலருக்கு உருவாகியதும் எதைப் படிப்பது, எப்படிப் படிப்பது ? என்ற வினா எழுகிறது.

வாசிப்பு என்பது ஒரு கலை, நூல்களைக் காட்டிலும் நம்முடைய ஆயுள் குறைவுதான். ஆகவே நாம் படிப்பவற்றை தெரிவு செய்து தான் படிக்க வேண்டும். அந்த வகையில் சில நூல்களை அறிமுகம் செய்கிறது இந்த காணொளி. பாருங்கள்… பகிருங்கள்…

நூலறிமுகம் : நறுமணம், வேர்கள், முதல் மதிப்பென் எடுக்கவேண்டாம் மகளே !, மஞ்சள் பிசாசு.

எழுத்தாளர் இமையம் அவர்கள் எழுதிய சிறுகதை தொகுப்பு ” நறுமணம்” க்ரியா பதிப்பகத்தால் வெளியிடப்பட்டுள்ளது. அலெக்ஸ் ஹேலி எழுதிய “ரூட்ஸ்” என்ற ஆங்கில நாவல் தமிழில் மொழிபெயர்க்கப்பட்டு வேர்கள் என்ற தலைப்பில் எதிர் பதிப்பகத்தால் கொண்டு வரப்பட்டுள்ளது. இன்றைய கல்வி சூழலை விளக்கும் வகையில் நா. முத்து நிலவன் அவர்கள் எழுதிய நூல் முதல் மதிப்பெண் எடுக்கவேண்டாம் மகளே! என்ற நூல் இந்நூலை அன்னம் – அகரம் பதிப்பகத்தார் வெளியிட்டுள்ளனர். தங்கம் எப்படி உலகை ஒரு பிசாசு போல ஆட்டிப்படைக்கிறது என்பதை விளக்குகிறது ருஷ்ய எழுத்தாளர் அ.வி. அனிக்கின் எழுதிய நூல் மஞ்சள் பிசாசு (அடையாளம் வெளியீடு).

***

நூலறிமுகம் : மூலதனம், ஹைட்ரோ கார்பன் அபாயம், நீதிமன்றங்களில் தந்தை பெரியார், புதிய தாராளவாத ஆட்சியின் கீழ் இந்திய விவசாயிகள்

கார்ல் மார்க்சின் மூலதனம் நூலின் 150-வது ஆண்டு இது. இக்காலத்தில் நாம் மூலதனம் நூலைப் பயில வேண்டியுள்ளது. தமிழில் மூன்று பாகங்களாகவும், ஐந்து நூல்களாகவும் கிடைக்கிறது. மேலும் இந்த வீடியோவில் ஹைட்ரோ கார்பன் அபாயம், நீதிமன்றங்களில் தந்தை பெரியார், புதிய தாராளவாத ஆட்சியின் கீழ் இந்திய விவசாயிகள் ஆகிய நூல்களை தோழர் துரை சண்முகம் அறிமுகப்படுத்துகிறார்.

பல்வேறு பதிப்பங்களால் வெளியிடப்பட்ட  இந்த நூல்களைஒரே கூரையின் கீழ் திரட்டித் தருகிறது கீழைக்காற்று விற்பனையகம்…

 

***

41வது சென்னைப் புத்தகக் காட்சியில் முற்போக்கு நூல்கள் அனைத்தும் கிடைக்குமிடம் :

கீழைக்காற்று வெளியீட்டகம்
கடை எண் 297, 298

நாள் : 10.01.2018 முதல் 22.01.2018 வரை

நேரம் :
வேலை நாட்கள் : மதியம் 2 – இரவு 9 வரை.
விடுமுறை நாட்கள் : காலை 11 – இரவு 9 வரை.

இடம் : செயிண்ட் ஜார்ஜ் ஆங்கிலோ இந்தியன் பள்ளி மைதானம்
( பச்சையப்பன் கல்லூரி எதிரில் ), சென்னை – 30

முகவரி : கீழைக்காற்று
முற்போக்கு நூல்களுக்கு ஒரு முகவரி
10, அவுலியா தெரு, எல்லீசு சாலை,
சென்னை – 2. தொ.பே : 044-2841 2367

 

விவாதியுங்கள்

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க