privacy

about us

write

contact

shop

புதிய ஜனநாயகம்

புதிய கலாச்சாரம்

e-books

Global Influence

Communication

Legal Agreement

முகப்புமறுகாலனியாக்கம்தொழிலாளர்கள்மணலி SRF பொதுதொழிற்சங்க தேர்தலில் பு.ஜ.தொ.மு -வை ஆதரியுங்கள் !

மணலி SRF பொதுதொழிற்சங்க தேர்தலில் பு.ஜ.தொ.மு -வை ஆதரியுங்கள் !

-

ன்பார்ந்த தொழிலாளர்களே !

தொழிற்சங்கம் என்றால் என்ன? என்று ஒரு தொழிலாளியிடம் கேட்டால், எனக்கு ஒரு பிரச்சனை என்றால் சூப்பர்வைசர் அல்லது மேனேஜரை உடனே வந்து கேட்க வேண்டும். வருடந்தோறும் போனஸ் மற்றும் ஊதிய உயர்வு பெற்றுத் தர வேண்டும் என கூறுவார். இதை தவிர்த்து ஒரு தொழிற்சங்கத்தின் வேலை என்று எதுவும் இல்லை என்று தான் நாம் நினைக்கின்றோம்.

இது சரிதானா? “ஊதிய உயர்வு உள்ளிட்ட பணப்பலன்களை பெற்றுத் தருவது, நிம்மதியான பணிச்சூழலை உருவாக்கி தருவது என்பது தொழிற்சங்கத்தினுடைய கடமைதான்.” ஆனால் இது மட்டும் தான் தொழிற்சங்கத்தினுடைய வேலையா? இதைத் தாண்டி வேறு எதுவும் இல்லை என நினைப்பது சரியா?

தொழிற்சங்கம் என்பது தொழிலாளர்களுக்கு அரசியல் சொல்லிக் கொடுக்கக்கூடிய பயிற்சி பள்ளி என்று தொழிலாளிகள் தலைமையில் மாபெரும் புரட்சியை நடத்திக் காட்டிய ஆசான் லெனின் சொல்லியிருக்கிறார்.

அரசியல் எங்களுக்கு எதற்கு என்று கேட்கிறீர்களா? நாம் எதற்காக நிர்வாகத்திடம் ஊதிய உயர்வு கேட்கிறோம். விலைவாசி உயர்வு, மின் கட்டண உயர்வு, பால் விலை உயர்வு, பெட்ரோல் விலை உயர்வு, சமீபத்தில் பேருந்து கட்டண உயுர்வு போன்ற விலைவாசி ஏற்றங்களால் நாம் தற்போது வாங்கிக் கொண்டிருக்கின்ற சம்பளம் போதவில்லை. அதனால் தானே ஊதிய உயர்வு கேட்கிறோம்.

நம் முதலாளியிடம் நாம் போராடிப் பெறுகின்ற ஊதிய உயர்வை வெளியில் இருக்கின்ற டாடா, அம்பானி போன்ற முதலாளிகளுக்கு நாம் வாங்கும் பொருட்கள் மூலமாக பிரித்து தருகிறோம். சரி, விலைவாசி உயர்வுக்கு யார் காரணம்? தற்போது பேருந்து கட்டணத்தை உயர்த்திய அரசு தான் காரணம். இந்த வகையில் பார்க்கும் போது நம்முடைய ஒட்டு மொத்த பிரச்சனைக்கும் இந்த அரசும், அரசியலும் காரணமாக இருக்கும்போது அதை எதிர்த்துப் போராடாமல் அரசியல் வேண்டாம் என்று சொல்வது எந்த வகையில் நியாயம் என்று நீங்கள் சொல்லுங்கள்.

ஆனால் உங்களிடம் ஓட்டு கேட்கின்ற மற்ற சங்கங்கள் யாரும் இதை பற்றி பேசுவதில்லை. மாறாக எப்படி அரசாங்கம் மக்கள் விலைவாசி உயர்வு பற்றியோ அல்லது மற்ற பிரச்சனைகள் பற்றியோ யாரும் சிந்திக்கக் கூடாது என்பதற்காக, வீதிக்கு வீதி சாராயக் கடைகளையும், வீட்டுக்கு வீடு வாட்ஸ் அப், பேஸ்புக், ஆன்லைன் விளையாட்டு ஆகியவைகள் மூலம் மக்களை சீரழிக்கிறதோ அதைப் போல நமது ஆலையிலும் தொழிலாளர்களை போதை கலாச்சாரத்திற்கு மாற்றி வருகின்றனர்.

இந்த சமூகமோ சக மனிதனோ எப்படியோ போகட்டும், நான் மட்டும் நல்லா இருந்தால் போதும், எனக்கு என் பணம் கிடைத்தால் போதும் என்று நினைக்க முடியுமா? இந்த சமூகத்தில் நடக்கும் எதுவும் என்னை பாதிக்காது என்று யாரேனும் ஒருவர் சொல்லுங்கள் பார்ப்போம்!

சில நாட்கள் முன்பு உயிர்காக்கும் வேலை செய்கின்ற செவிலியர்கள் போராடினார்களே, அதில் ஒருவர் கூட நம்முடைய அக்கா, தங்கைகளோ சொந்த பந்தங்களோ இல்லையா? உயிரைப் பனையம் வைத்து மழையிலும், வெயிலிலும் அயராது உழைக்கின்ற போக்குவரத்து தொழிலாளர்கள் சம்பள உயர்வுக்காக போராடினார்களே, அதில் ஒருவர் கூட நம் குடும்பத்தைச் சார்ந்தவர்கள் இல்லையா?

சமீபத்தில் பேருந்து கட்டண உயர்வு, பெட்ரோல் விலை உயர்வு இப்படி ஒவ்வொரு நாளும் எண்ணிலடங்கா பிரச்சனைகள் நம் தலையில் இடியை இறக்குகின்றன. இந்த சமூகத்தில் தான் SRF -ல் வேலை செய்யக்கூடிய தொழிலாளர்களாகிய நாமும் வாழ்ந்து கொண்டிருக்கிறோம். மேற்கூறிய இந்த பிரச்சனைகளுக்காக எமது அமைப்பான பு.ஜ.தொ.மு. ஆலலகளிலும் சமூகத்திலும் பல்வேறு வகையான போராட்டங்களை நடத்திக்கொண்டிருக்கிறது.

உங்களிடம் வந்து ஓட்டு கேட்கின்ற மற்ற சங்கங்கள் யாரும் தொழிலாளர்களின் பிரச்சனைக்காக ஆலைக்குள்ளும் போராட்டம் நடத்துவதில்லை. சமூகப் பிரச்சனைகளுக்காக இம்மியளவு கூட கவலைப்படுவதுமில்லை. இவர்களா நம்மை காப்பாற்றக் போகிறார்கள் வேலையை விட்டு வேண்டுமானால் அனுப்புவார்கள் (2016ல் 4 தொழிலாளர்களை அனுப்பியது போல்).

ஆக நம்முடைய ஆலைக்குள் நடக்கின்ற பிரச்சனைகள் வேறு சமூகத்தில் நடக்கின்ற பிரச்சனைகளும் வேறானவை அல்ல. இரண்டுக்குமே மூல காரணம் ஒன்றுதான். இந்த சமூக அறிவியலை புரிந்துகொள்வது தான் மார்க்சிய விஞ்ஞானம். அதனடிப்படையில் தான் புதிய ஜனநாயகத் தொழிலாளர் முன்னணி தொழிலாளர்களை ஒரே வர்க்கமாக அணிதிரட்டும் வேலையை செய்து வருகிறது.

இதன் ஒரு பகுதியாகத்தான் காண்ட்ராக்ட் தொழிலாளைகளை அணி திரட்டுகிறவிதமாக 28.01..2018 அன்று இந்திய அளவில் உள்ள தொழிற்சங்கங்களை இணைத்து மிகப்பெரிய அளவில் கருத்தரங்கம் நடத்த திட்டமிடப்பட்டுள்ளது.

இப்போது சொல்லுங்கள் ஒட்டுமொத்த சமூகத்திற்கான விடுதலைக்குப் போராடும் ஒரு சங்கத்தால் தொழிலாளர்களைக் காப்பாற்ற முடியுமா? அல்லது எவன் செத்தால் நமக்கென்ன நம் வயிறு நிறைந்தால் போதும் என்று இருப்பவர்களால் தொழிலாளர்களைக் காப்பாற்ற முடியுமா?

முடிவு உங்கள் கையில்…

இறுதியாக ஹிட்லர் கால ஜெர்மானிய கவிஞனின் கவிதை வரிகள்.

  • ஹிட்லர் யூதர்களை கொன்றொழித்தான். நான் அமைதியாக இருந்தேன்.
  • கத்தோலிக்கர்களை தேடிப்பிடித்து வெட்டினான். அவர்களைத் தானே கொல்கிறான் என அப்போதும் நான் அமைதியாக இருந்தேன்.
  • புரோட்டஸ்டண்டுகளை கொன்றான். அப்போதும் நான் இழுத்துப் போர்த்திக் கொண்டேன்.
  • கம்யூனிஸ்டுகளை கொன்றான். நான் கம்யூனிஸ்ட் இல்லை என்பதால் எனக்கு கவலை இல்லை என்று இருந்தேன்.
  • தொழிற்சங்கத் தலைவர்களை கொன்றான். நான் கண்களை இறுக மூடிக் கொண்டேன்.
  • இறுதியில் அவன் என்னிடமே வந்துவிட்டான். திரும்பி பார்த்தால் என்னைக் காப்பாற்ற யாருமே இல்லை.

சிந்திப்பீர்… வாக்களிப்பீர்… தராசு சின்னத்தில்

( படங்களைப் பெரிதாகப் பார்க்க அவற்றின் மீது அழுத்தவும் )

தகவல் :
புதிய ஜனநாயகத் தொழிலாளர் முன்னணி,
SRF மணலி கிளை.

*****

மணலி SRF பொதுதொழிற்சங்க தேர்தலில்  பு.ஜ.தொ.மு வேட்பாளர்களை ஆதரித்து தராசு சின்னத்தில் வாக்களியுங்கள் !

அன்பார்ந்த தோழர்களே!

ணலி SRF தொழிற்சங்க தேர்தலில் ஏன் பு.ஜ.தொ.மு வெற்றி பெறவேண்டும் என்றால் வட சென்னை பகுதியில் அனைத்து தொழிற்சாலைகளிலுல் முதலாளித்துவம் தொழிலாளர்கள் மீது அடக்குமுறைகளை செலுத்தி வருகின்றது. இந்த அடக்குமுறைகளிலிருந்து  தொழிலாளி வர்க்கத்தை காப்பாற்ற பு.ஜ.தொ.மு சங்கத்தால் மட்டுமே முடியும் என நடைமுறையில் கடந்த 6 ஆண்டுகளாக SRF MANALI தொழிற்சாலையில் சாதித்து காட்டியுள்ளோம்.

மேலும் மணலி தொழிற்சங்க கூட்டமைப்பில்(FMTU) அங்கம் வகித்து செயல்பட்டு கொண்டு இருக்கக்கூடிய பு.ஜ.தொ.மு சங்க நிர்வாகிகள் மணலி சுற்றுவாட்டாரத்தில் இருக்கக்கூடிய PALMALLORRY, TPL, MPL, CPCL, KOTHARI ஆகிய தொழிற்சாலைகளில் நடக்கக்கூடிய தொழிலாளர் விரோத போக்கான  செயல்களை கண்டித்துள்ளோம். குறிப்பாக TPL நிர்வாகத்தின் பெரும்பான்மை பங்குகளை தனியாருக்கு விற்கக்கூடாது தமிழக அரசின் TIDCO – வே TPL நிர்வாகத்தை நேரடியாக ஏற்று நடத்து என்ற முழகத்தின் கீழ் நடந்த போராட்டங்களுக்கு பு.ஜ.தொ.மு சங்கத்தின் சார்பாக முழு ஆதரவு கொடுக்கப்பட்டது.

திருவொற்றியூர் MRF ஆலையில் தொழிலாளர்கள் மீது செலுத்தப்படுகின்ற அடக்குமுறைகள் குறித்து கடந்த 26.01.2018 தேதியன்று பு.ஜ.தொ.மு மாநில பொதுச்செயலாளர் தோழர் சுப. தங்கராசு அவர்கள் தொழிலாளர்களை சந்தித்து குறைகளை கேட்டறிந்து MRF நிர்வாகத்தின் அடக்குமுறையை எப்படி முறியடிப்பது என்பது போன்ற ஆலோசனைகளை வழங்கினார்.

இப்படி மணலி, எண்ணுர், திருவொற்றியூர் பகுதிகளில் இயங்கக், கூடிய ஆலைகளில் தொழிலாளர் அடக்குமுறைகளுக்கு தீர்வு; அரசிடம் வெறும் சட்ட வாதத்தில் மட்டும் தற்போதைய தொழிலாளர்களின் உரிமையை தக்கவைத்து கொள்ள முடியாது. ஏனெனில் தொழிலாளர்கள் போராடி பெற்ற தொழிற்சங்க சட்டஉரிமைகளை முதலாளிகளின் லாபத்திற்காக திருத்தி குரல்வளையை நெறிக்கிறது மோடி அரசு! இதனை போர்க்குணத்தோடு எதிர்க்க வேண்டிய தொழிற்சங்கங்கள் மீண்டும், மீண்டும் இந்த அரசிடமே கோரிக்கையை வைத்து மன்றாடி வருகின்றன.

ஆனால் நாளுக்கு நாள் வேலைபறிப்பு, ஆட்குறைப்பு, உச்சகட்டமாக நிரந்தர தொழிலாளர் முறையை ஒழித்து காண்ட்ராக்ட் கொத்தடிமை முறையை சட்ட பூர்வமாக செயல்படுத்த முதலாளிகளுக்கு அரசே ஆசி வழங்குகிறது!

நாடு முழுவதும் தொழிலாளர்கள் போராடாமல் இருக்க சில சீர்திருத்தங்கள் செய்தும், கைகூலி, பிழைப்புவாத, கலைப்புவாத தொழிற்சங்கங்களின் மூலம் தொழிலாளர்களின் அரசியல் உணர்வை மழுங்க செய்கிறது ஆளும்வர்க்கம். இந்நிலையில் வெறும் பொருளாதார கோரிக்கைகளுக்கு மட்டும் போராடமல், தொழிலாளர் வர்க்கத்தின் விடுதலை சாதிக்க அரசியல் உணர்வு பெறவேண்டும் என புரட்சிகர தொழிற்சங்கமான புதிய ஜனநாயகத் தொழிலாளர் முன்னணி அறைகூவி அழைக்கின்றது.

அந்த வகையில் 29.01.2018 தேதியன்று நடைபெறும் மணலி SRF தொழிலாளர்கள் சங்கத்தின் பொதுத் தேர்தலில் பு.ஜ.தொ.மு தலைமையின் போட்டியிடுகின்ற அனைத்து வேட்பாளர்களும் பெருவாரியான வாக்கு வித்தியாசத்தில் வெற்றி பெற செய்யுமாறு தோழமையுடன் கேட்டுக் கொள்கிறோம்.

இவண் :
பு.ஜ.தொ.மு
SRF மணலி கிளை.

 

விவாதியுங்கள்

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க