பேருந்து கட்டண உயர்வை கண்டித்து போராடிய வேலூர், கும்பகோணம், மதுரை கல்லூரி மாணவர்கள் மீது ரவுடி போல போலீஸ் காட்டு மிராண்டித்தனமான தாக்குதலை நடத்தியது. இதனைக் கண்டித்து விருத்தாசலம் பகுதி புரட்சிகர மாணவர் – இளைஞர் முன்னணி சார்பாக 31.01.2018 அன்று ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
பஸ் கட்டண உயர்வை திரும்பப் பெற வேண்டும், கைது செய்த மாணவர்களை நிபந்தனை இன்றி விடுதலை செய்ய வேண்டும் என ஆர்ப்பாட்டத்தில் முழக்கங்கள் எழுப்பப்பட்டது.
( படங்களைப் பெரிதாகப் பார்க்க அவற்றின் மீது அழுத்தவும் )
தகவல் :
புரட்சிகர மாணவர் இளைஞர் முன்னணி,
விருத்தாச்சலம்.