privacy

about us

write

contact

shop

புதிய ஜனநாயகம்

புதிய கலாச்சாரம்

e-books

Global Influence

Communication

Legal Agreement

முகப்புமறுகாலனியாக்கம்ஊழல்தருமபுரி : வழிப்பறி செய்யும் போலீசைக் கண்டித்து மக்கள் ஆர்ப்பாட்டம் !

தருமபுரி : வழிப்பறி செய்யும் போலீசைக் கண்டித்து மக்கள் ஆர்ப்பாட்டம் !

-

ன்றைக்கு பேருந்து கட்டணம் உயர்ந்துவிட்டு, பெட்ரோல் டீசல் விலை உயர்வு, விலைவாசி உயர்வு என்று தினம்தோறும் பிரச்சனையை எதிர்க்கொண்டு விழிபிதுங்கி வாழ்ந்து வருகின்றனர் மக்கள். இப்படி தினம்தோறும் மக்கள் கோவணத்தை உறுவி வரும் அரசு. மறுபக்கத்தில் போலீசை வைத்து சட்டபூர்வ வழிப்பறியை செய்துவருகிறது.

சாலை மறியலில் ஈடுபட்ட இளைஞர்கள்

4/2/2018 அன்று மாலை 3 மணிக்கு தருமபுரி மாவட்டம், காரிமங்கலம் காவல் நிலையத்தில் பணியாற்றி வரும் காவல் உதவி ஆய்வாளர் இளவரன், மற்றும் இரண்டு காவலர்கள் சேர்ந்து கிருஷ்ணகிரியில் இருந்து தருமபுரி செல்லும் தேசிய நெடுஞ்சாலையில் வழி மறித்து அந்த பக்கமாக வரும் இருசக்கர வாகனங்களை பிடித்து பணம் வசூலித்து கொண்டு இருந்தனர். அப்போது பெரியம்பட்டி என்ற கிராமத்தை சேர்ந்த முன்னாள் ஊராட்சி மன்ற தலைவர்  ஜெயவேல் அந்த வழியாக வீட்டுக்கு மாலை 4 மணிக்கு சென்றுள்ளார். அப்போது அவரது இருசக்கர வாகனத்தை திடீரென மறித்துள்ளார் உதவி ஆய்வாளர் இளவரன். வண்டியை நிறுத்த தடுமாறிய ஜெயவேல் சற்று தள்ளி நிறுத்தியுள்ளார். நான் நிறுத்த சொல்லியும் ஏன் தள்ளி நிறுத்தினாய் என்று ஜெயவேலை நடுரோட்டில் அடித்துள்ளார் உதவி ஆய்வாளர் இளவரன்.

எதற்காக அடித்தீர்கள் என எதிர்த்து கேட்ட ஜெயவேலுவை, ” என்னையே கேள்வி கேட்கிறாய நாயே வாட நான் யார் என்று காட்டுகிறேன்” என்று காரிமங்கலம் காவல் நிலையத்திற்கு இழுத்து சென்று நான்கு போலீசார் சேர்ந்து கடுமையாக தாக்கியுள்ளனர். இந்த தகவல் அறிந்து நேற்று பெரியாம்பட்டியில் ஆத்திரப்பட்ட சில இளைஞர்கள் சேர்ந்து சாலை மறியலில் ஈடுப்பட்டது மட்டுமல்ல. போலீசார் மன்னிப்பு கேட்க கூறி சாலையை ஸ்தம்பிக்க வைத்தனர். இதனூடாக பொதுமக்களும் போலீசாருக்கு எதிராக இணைந்து கொண்டனர். இதன்பிறகே ஜெயவேலுவை விடுவித்துள்ளனர். அவர் தற்போது தருமபுரி அரசு மருத்துவமனையில் அனுமதித்து சிகிச்சை பெற்று வருகிறார். இது எதோ ஒரு இடத்தில் தவறுதலாக நடந்த சம்பவம் இல்லை. நாடு முழுவதும் இதே நிலைதான். போலீசின் வழிப்பறியும், லஞ்சமும் சர்வ சாதாரணமாக நடக்கும் ஒன்றுதான்.

போலீஸ் என்றால் நேர்மையானவர்கள், மக்களை காப்பற்றுபவர்கள், தவறை கண்டுபிடித்து தண்டிப்பவர்கள் என்ற பிம்பத்தை சினிமாவும், ஊடகங்களும் எவ்வளவுதான் உருவாக்கினாலும். காவல் நிலையத்தில் மக்கள் புகார் கொடுக்கவோ அல்லது பிரச்சனையை கொண்டு செல்லவோ அச்சப்படுகின்றனர். போலீசார்  பற்றி தமிழகமெங்கும் தினம்தோறும் வரும் செய்திகளை பார்க்கும் போது வழிப்பறி திருடனை கண்டு அஞ்சுவது போல், போலீசை கண்டு அஞ்சுகின்றர் மக்கள். இருசக்கர வாகனம் ஒட்டவே பயப்படுகின்றனர். தான் சம்பாதித்த ஒருநாள் கூலியை பறித்து கொள்வார்களே என்ற அச்ச உணர்வோடே செல்கின்றனர்.

பேருந்து கட்டணம் உயர்ந்துவிட்ட பிறகு  வேலைக்கு சென்றால் சம்பளத்தில் பாதியை பேருந்துக்கு கொடுக்க வேண்டிய நிலை இருப்பதால், தினக்கூலிகளாக செல்லும் தொழிலாளிகள் வேலைக்கு சென்றுவர 100 ரூபாய் தாண்டுகிறது. இதற்கு பதிலாக இருசக்கரம் வைத்திருக்கும் சிலர் இருவராக சேர்ந்து பெட்ரோல் போட்டு கொண்டு வேலைக்கு செல்கின்றனர். போலீசாரோ அன்றாடம் தினக்கூலிகளாக சென்று வரும் மக்களை குறிவைத்தே மடிக்கி பிடித்து அபராதம் விதிக்கின்றனர் அல்லது பேரம் பேசுகின்றனர். பணம் குறைவாக இருக்கிறது என்றால் அதற்கு தகுந்தாற்போல் கொஞ்சமும் கூச்சமும் இல்லாமல் லஞ்சமாக வாங்கி கொள்கின்றனர்.

இன்றைக்கு தமிழகத்தில் எங்கு பார்த்தாலும் போலீசாருக்கும், பொது மக்களுக்கும் இந்த வழிப்பறி மூலம் பிரச்சனை வீதிக்கு வருகிறது. கேள்வி கேட்க முடியாத நபர்களாக இருந்தால் மிரட்டியே பணம் பறிக்கின்றனர். ஒரு உதவி ஆய்வாளர் நாள் ஒன்றுக்கு 50 பேரிடம் தண்டம் வசூலில் ஈடுப்பட வேண்டும் என்று மேலிட உத்தரவாம். காவல் துறை என்றாலே லஞ்சம், ஊழல், பொய் வழக்கு, கட்டப்பஞ்சாயத்து, திருட்டு, கூட்டுக்கொள்ளை, வழிப்பறி, போதை பொருள் விற்பனை என்று போலீசின் குற்றத்தை அடுக்கி கொண்டே போகலாம். இப்படி குற்றங்களில் ஈடுப்படும் போலீசாரை தண்டிக்க முடிவதில்லை. மாறாக அவர்களிடமே மீண்டும் சட்டத்தை பாதுகாக்கும் அதிகாரத்தை வாரி வழங்குகின்றனர். போலீசு என்றாலே கிரிமினல் கும்பல் தான். எரிகின்ற கொல்லியில் எந்த கொல்லி நல்லகொல்லியாக இருக்க முடியும். போலீசு என்ற கட்டமைப்பையே கலைக்கப்பட வேண்டும். அதுதான்  நிரந்தர தீர்வாகும்.

தோழர்  கோபிநாத்,
மக்கள் அதிகாரம்
தருமபுரி, 9943312467

 

  1. எங்க பகுதி போலீசெல்லாம் ரெம்ம விவரம். இரவு 9 மணிக்கு டாஸ்மாக் கடையிலிருந்து குடித்துவிட்டு வெளியே வரும் இளைஞர்கள் யாரென்று பார்த்து சொல்ல இருவர், தெரு வளைவில் இருவர் நின்று கண்டு வசூல் மழையில் தினமும் நனைகின்றனர்.

    “எரிகின்ற கொல்லியில் எந்த கொல்லி நல்லகொல்லியாக இருக்க முடியும்” – ”கொள்ளி” தானே சரி?

  2. இதே போன்று, சாதாராண மக்கள் பயன்படுத்தும் கட்டண கழிப்பிடக்கொள்ளை சத்தமில்லாமல் தமிழகம் எங்கும் நட்ந்து வருகிறது. குறிப்பாக சேலம், தருமபுரி, கிருஷ்ணகிரி பேருந்து நிலையங்களில், சிறுநீர் கழிப்பதற்கு ஒரு ரூபாய், மலம் கழிக்க இரண்டு ரூபாய் என்று எழுதி வைத்துவிட்டு, அய்ந்து ரூபாய் வசூலிக்கிறார்கள். ஏன் இப்படி என்று கேட்டால், அசிங்கமாகப் பேசுவதுடன், தாக்கவும் முனைகிறார்கள்.

விவாதியுங்கள்

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க