குடந்தை அரசினர் கலைக்கல்லூரி மாணவர்கள் உள்ளிருப்பு போராட்டம் !
கல்லூரியில் அமைந்துள்ள வேதியியல் கட்டிடங்களை காக்க வக்கில்லாமல் வெட்டிசெலவுகளை செய்யும் தமிழக அரசின் பொதுபணித்துறை மற்றும் அதனை செய்ய வற்புறுத்தாத கல்லூரி நிர்வாகத்தை கண்டித்தும் வேதியியல் துறை மாணவர்களாகிய நாங்கள் உள்ளிருப்பு போராட்டத்தில் ஈடுபடப்போகிறோம்.
வேதியியல் துறையின் கட்டிடங்களை காக்க ஆர்வம் காட்டாத பொதுப்பணித்துறையே !
அடிப்படை வசதிகளை அலட்சியபடுத்தும் கல்லூரி நிர்வாகமே!
கல்லூரி கல்வி இயக்குனர் வந்து எங்கள் துறையை பார்வையிட்டு எங்களுக்கான உரிமையை தரும்வரை கல்லூரியே எங்கள் வீடு…..
புலம்புவதை நிறுத்து போராட்டத்தை கையில் எடு
இந்த நிகழ்வு தமிழ்நாடு முழுவதும் எதிரொலிக்க வேண்டும்.
இவண்
அரசினர் கலைக் கல்லூரி மாணவர்கள், குடந்தை.