ஆர்.எஸ்.எஸ்-ன் தலைவர் மோகன் பகவத் கடந்த பத்து நாட்களாக பீகாரில் முகாமிட்டுள்ளார். அங்கே பல்வேறு சங்கி பரிவார கூட்டங்களோடு பரிசீலனை கூட்டங்களில் பங்கேற்று வருகிறார். அப்படி ஒரு கூட்டம் முசாஃபர்புர் நகரில் நடைபெற்றது. அதில் பீகார் மற்றும் ஜார்க்கண்டைச் சேர்ந்த சங்கி கூட்டத்தினர் கலந்து கொண்டனர்.
இத்தகைய சங்கி கூட்டங்களில் பல்வேறு ஆர்.எஸ்.எஸ் சார்பு இயக்கங்களின் இலக்கு, அணிசேர்க்கை, மற்றும் பஞ்சாயத்துக்களைப் பேசுவார்கள். மோடியின் தலைமையில் பாஜக ஆட்சியில் இருக்கும் போது இந்தக் கூட்டங்கள் அடுத்தது என்ன நடவடிக்கை எடுப்போம் என்பதாகவும் நடக்கும். ஏனெனில் தாம்தான் ஆள்கிறோம் என்பதால் சங்கிகள் சில பல ‘போர்’ திட்டங்களை கையில் வைத்திருப்பார்கள்.
எனினும் அந்தக் கூட்டத்தில் மோகன் பகவத் கெத்தோடு கூறிய ஒரு விசயம் ஊடகங்களில் செய்தி பரபரப்பை கிளப்பியிருக்கிறது.
“எங்கள் இயக்கம் ஒரு இராணுவ அமைப்பு அல்ல என்றாலும், நாங்கள் இராணுவக் கட்டுப்பாட்டுடன் செயல்படுவதை கடைபிடிக்கிறோம். இந்த நாட்டிற்கும், அரசியல் சாசனத்திற்கும் இராணுவம் உடனடியாக தேவைப்படுகிறது என்றால், இராணுவம் அணிசேர்ந்து தயாராவதற்கு 6 முதல் 7 மாதங்கள் ஆகும். ஆனால் ஆர்.எஸ்.எஸ் தொண்டர்கள் மூன்றே நாடகளில் திரண்டு விடுவார்கள். இதுதான் எங்களது ஆற்றல்” என்று பேசினார் மோகன் பகவத்.
எல்லையிலே இராணுவ வீரன் சாகும் போது ஏடிஎம்மிலே நீ மாரடைப்பு வந்து செத்தால் என்ன? என்று பணமதிப்பழிப்பின் போது வசனம் பேசியவர்கள் பார்ப்பனிய இந்துமதவெறியர்கள். இன்று அப்பேற்பட்ட இராணுவமெல்லாம் ஒரு ஜுஜுபி, நாங்கள்தான் உண்மையான இராணுவம் என்று கேலி செய்கிறார்கள். உடனே ராகுல்காந்தி போன்ற எதிர்க்கட்சி தலைவர்கள் இராணுவத்தை அவமதித்து விட்டார்கள் என்று மன்னிப்பை கோருகிறார்கள்.
இராணுவத்தை வைத்து தேசபக்தியை கிளப்புவதில் பாஜக-வும், காங்கிரசும் சளைப்பதில்லை என்றாலும் ஆர்.எஸ்.எஸ்-ன் பக்தியில் நாட்டுப்பற்று நிறையவே தூக்கலாக இருக்கும். ஏனெனில் இராணுவத்தையே எதிர்க்கிறாய் என்று இவர்கள் தமக்கு பிடிக்காதாரை ‘ஆன்டி-இன்டிய’னாக்கி விடுவார்கள்.
இவற்றையல்லாம் விட ஒரு முக்கியமான விசயம் உண்டு. மூன்று நாட்களில் ஆர்.எஸ்.எஸ் கூட்டம் அணிதிரட்டப்படும் என்றால் நாடு எப்படி ஒரு அபாயகரமான கட்டத்தில் இருக்கிறது. இத்தகைய துரித அணிதிரட்டலின் அழிவை 2002 குஜராத் முசுலீம் மக்கள் மீதான இனப்படுகொலையில் பார்த்திருக்கிறோம். மோகன் பகவத் திருவாய் நாறியிருக்கும் முசாஃபர்புரம் நகரிலேயே இவர்கள் எவ்வளவு வேகமாக கலவரம் நடத்தி பிறகு தேர்தலில் இந்துமதவெறியை கிளப்பி முதலமைச்சராக யோகி ஆதித்யநாத்தை குந்த வைத்தார்கள் என்பதை பார்த்திருக்கிறோம்.
ஆகவே இன்றைய கருத்துக் கணிப்பு:
மூன்றே நாளில் ஆர்.எஸ்.எஸ் படை திரட்ட முடியும் என்று மோகன் பகவத் கூறியிருப்பது?
- ஏதோ ஒரு ஃபுளோவில் உளறிய ஒன்று கவலைப்படத் தேவையில்லை
- பாசிச ஆட்சி வருவதை அறிவிக்கும் எச்சரிக்கையாக கவலைப்பட வேண்டும்.
- இராணுவத்தை அவமதித்திருப்பதுதான் இதில் உள்ள விசயம்
- தெரியவில்லை
மூன்று நாட்களில் RSS குரங்களை திரட்ட முடியும் என்றும் ஆனால் பயிற்சி பெற்ற இந்திய ராணுவத்தை திரட்ட 6 முதல் 7 மாதங்கள் வரையாகும் என்று மோகன் பாகத் கூறியுள்ள கருத்து மிகுந்த முக்கியத்துவம் உள்ள அபாயகரமான பாசிச கருத்து.
மூன்று நாட்களில் திரண்டு விடுவாேம் என்று கூறும் இவர்கள் …அதற்கான ஆயுதங்களையும் எங்காே பதுக்கி தயார் நிலையில் இருக்கிறது …என்றுதானே அர்த்தம் …? பாசீச தீவிரவாதிகள் யார் என்பதை மக்கள் புரிந்துக் காெண்டால் …சரி…!!!
பாசிச ஆட்சி வருவதை அறிவிக்கும் எச்சரிக்கையாக கவலைப்பட வேண்டும்.
பாசிச ஆட்சி வருவதை இது காட்டவில்லை. பாசிச ஆட்சிதான் நடைபெற்று கொண்டிருக்கிறது. ஆனால் இந்த RSS இந்தியா முழுவதும் தன்னை தயார்படுத்தி கொண்டது. குஜராத்தை போல இந்தியா முழுவதும் மாற்ற தயாராக இருப்பதை அறிவிக்கும் அறைகூவல். இது எச்சரிக்கை அல்ல. களத்தில் இறங்கி போர் செய்ய ஆயத்தம் ஆக வேண்டிய தருணம் இது.
இவர்கள் பயன்படுத்தும் குறியீடு(code) சொற்கள்…
இலக்கிய கூட்டம் – சங்கிகள் கூட்டம்
உறுப்பினர்கள் – தீவிரவாத துணை சேர்த்தல்
வெளிநாட்டு புத்தகம் – வெளி நாட்டு துப்பாக்கி
கோவில் – நீதிமன்றம்
பிரசாதம் – இலஞ்சம் பெறுவது
உள் நாட்டு புத்தகம் – உள் நாட்டு துப்பாக்கி மற்றும் வெடி குண்டுகள்
போர் – கலவரம் தூண்டுவது
யாத்திரை – இரத்த கலவரம் தூண்டுவது
தேச அபிமானி – இந்து ராஷ்டிர அபிமானி (இந்திய தேசிய அபிமானி அல்லது தேசபக்தன் அல்ல )
தியாகி – கொலையாளி
இங்க பார்டர் போர் என்பது உள்நாட்டு கலவரம்
அதீதச் சுரண்டலின் விளைவாகத் துன்பத்தில் இருக்கும் மக்களை, வரவிருக்கும் பாராளுமன்றத் தேர்தலுக்கு முன் திசைதிருப்ப இந்த (அமைதிப்படை) அமாவாசைகள் ஏதோ திட்டமிடுவது போல தோன்றுகிறது. அறிவிக்கப் பட்ட அல்லது உணர்ச்சிப் பூர்வமான ஒரு போர்நிலையை உருவாக்கினால் பல லாபங்கள் உண்டே, தேர்தலே தள்ளிப் போடப் பாடலாமே!!