privacy

about us

write

contact

shop

புதிய ஜனநாயகம்

புதிய கலாச்சாரம்

e-books

Global Influence

Communication

Legal Agreement

முகப்புகளச்செய்திகள்போராட்டத்தில் நாங்கள்தன்னுரிமை காக்க தமிழகமே திரண்டெழு ! பிப். 27 சென்னையில் பு.மா.இ.மு ஆர்ப்பாட்டம்

தன்னுரிமை காக்க தமிழகமே திரண்டெழு ! பிப். 27 சென்னையில் பு.மா.இ.மு ஆர்ப்பாட்டம்

-

தன்னுரிமைக்காக தமிழகமே திரண்டெழு ! – ஆர்ப்பாட்டம்

  • பள்ளி, கல்லூரி, பல்கலைக் கழகங்களில் தமிழைப் பயிற்று மொழியாக்கு !
  • அரசு வேலைவாய்ப்பில் தமிழில் படித்தவருக்கு முன்னுரிமை வழங்கு !
  • அலுவல் மொழியாக, நீதிமன்ற மொழியாக தமிழை நிலைநாட்டு !

நாள் : பிப் 27, 2018, காலை 11 மணி
இடம் : வள்ளுவர்கோட்டம், சென்னை.

*****

அன்பார்ந்த மாணவர்களே, இளைஞர்களே!

காவிரி நீரில் தமிழகத்தின் உரிமையை பறித்து, தமிழகத்தை கார்ப்பரேட்டுகள், பனியா – சேட்டுகள் சுரண்டும் வகையில் வஞ்சகமான தீர்ப்பை, உச்சநீதிமன்றத்தின் மூலம் திணித்திருக்கிறது மோடி அரசு.

காவிரியில் மட்டுமல்ல, தமிழக மருத்துவக் கல்லூரி களை ஆக்கிரமிக்க நீட் தேர்வு; விவசாயத்தை அழிக்க, இயற்கை வளங்களை சூறை யாட – மீத்தேன், ஹைட்ரோகார்பன், கெயில் குழாய் பதிப்பு, சாகர்மாலா உள்ளிட்ட நாசா காரத்திட்டங்கள்; தமிழ்மொழி – பண்பாட்டை அழிக்க இந்தி – சமஸ்கிருதம் திணிப்பு. ஆரிய – பார்ப்பன எதிர்ப்பு, கடவுள் மறுப்பு பாரம்பரியம் கொண்ட தமிழகத்தை பணிய வைக்க மோடி அரசு தொடர்ந்து பல்வேறு தாக்குதல்களை நடத்தி வருகின்றது.

ஆட்சிக்கு வந்தவுடன் தமிழ் மொழியை அழிக்க சமஸ்கிருதவாரக் கொண்டாட்டத்திற்கு ஆணையிட்ட மோடி, இப்போது சமஸ்கிருதத்தைவிட தமிழ்மொழி பழமையானது என்று கபட நாடகமாடுகிறார். பல தேசிய இனங்களின், மொழி, பண்பாடு, கலாச்சாரம் ஆகியவற்றை அழிப்பதும், பார்ப்பனிய மேலாதிக்கத்தை நிலைநாட்டும் இந்தி – இந்து – இந்தியா எனும் ஒற்றை கலாச்சார நாட்டை கட்டியமைப்பதும்தான் ஆர். எஸ்.எஸ் – பி.ஜே.பி கும்பலின் உண்மையான நோக்கம். அதைத்தான் மோடி அரசின் வழியாக செய்து வருகிறது.

தமிழகத்தில் மத்திய அரசின் கேந்திர வித்யாலய பள்ளிகளில் இந்தி – சமஸ்கிருதம் கட்டாயம்; இந்தியை திணிக்கும் நவோதயா பள்ளிகளை தமிழகத்தில் மீண்டும் கொண்டுவர திட்டம்; அரசு அலுவல் மொழியாக இந்தியைக் கொண்டுவர முயற்சி, தமிழர்களின் தொன்மை வரலாற்றை நிரூபிக்கும் கீழடி அகழ்வாராய்ச்சிப் பணியை ஊத்தி மூடுவது. கீழமை நீதிமன்றங்களில் தமிழில் தீர்ப்பு வழங்கத் தடை.

தமிழ்த்தாய் வாழ்த்து பாடியபோது எழுந்து நிற்காமல் தமிழை நீச பாசை என இழிவுபடுத்துகிறான் சங்கராச்சாரி. டெல்லியில் உள்ள தமிழ்நாடு இல்லத்தின் பெயரைக்கூட சகித்துக் கொள்ளாமல் மாற்றிவிட்டது ஆர்.எஸ்.எஸ் – பார்ப்பனக் கும்பல்,

காவிரியில் தமிழகத்திற்கு நியாயமாக வழங்க வேண்டிய தண்ணீரின் அளவை குறைத்து தீர்ப்பெழுதுகிறது உச்சநீதிமன்றம்.

கொள்ளையடித்த சொத்துக்களை பாதுகாக்க, ஆட்சியதிகாரத்தை தக்க வைத் துக்கொள்ள பல்லிளித்துக் கொண்டு தமிழகத்தின் உரிமையை பி.ஜே.பி யிடம் அடகு வைத்துவிட்டது இ.பி.எஸ் – ஓ.பி.எஸ் கிரிமினல் குற்றக் கும்பல்.

கேரளாவிலும், மேற்கு வங்கத்திலும் அம்மாநில மொழியை பள்ளிகளில் கட்டாயப் பாடமாக்கி சட்டமியற்றப்பட்டிருக்கிறது. தமிழகத்திலோ, தாய்மொழித் தமிழை அழிக்க வரும் சமஸ்கிருதத்திற்கும் – இந்திக்கும் அடித்தளம் அமைத்துக் கொடுக்கிறது எடுபிடி எடப்பாடி அரசு.

( படங்களைப் பெரிதாகப் பார்க்க அவற்றின் மீது அழுத்தவும் )

நாடு முழுவதும் வேலையின்மை வெடிக்கக் காத்திருக்கும் எரிமலை போல் அச்சுறுத்துகிறது. தமிழகத்தில் மட்டும் சுமார் 1 கோடி பேர் வேலையின்றி தெருவில் நிற்கிறார்கள். ஆண்டுக்கு ஒரு கோடி வேலைவாய்ப்பை உருவாக்குவேன் என்று வாய்ச் சவடால் அடித்த மோடியோ இன்று பக்கோடா விற்கச் சொல்கிறார். ஒருபக்கம் சொந்த மாநிலத்தில் பிழைப்புக்கு வழியில்லாத வடமாநில இளைஞர்கள் தமிழகத்தின் குக்கிராமங்கள் வரை குவிந்து வருகிறார்கள்.

மறுபக்கம், வி.ஏ.ஓ, டி.என்.பி.எஸ்.சி போன்ற தமிழக அரசு பணியிடங்களுக்கான போட்டித் தேர்வுகளிலும் அகில இந்திய கோட்டா என்ற பெயரில் இந்தி பேசுபவர்கள் திட்டமிட்டே நுழைக்கப்படுகிறார்கள். இதைத்தான் அனைத்து மாநிலங்களிலும் செய்கிறார்கள். இப்படி, தேசிய இனங்களின் உரிமையை – மாநிலங்களின் அதிகாரத்தை பறித்து அனைத்தையும் மையப்படுத்துவது கார்ப்பரேட் முதலாளிகள் கொள்ளைக்காகவே என்றாலும், இதன்மூலம் தனது பார்ப்பன மேலாதிக்கத்தையும் நிறைவேற்றிக் கொள்ள நினைக்கிறது ஆரிய – பார்ப்பன கும்பல்.

இதை நாம் ஏன் சகித்துக் கொண்டு வாழ வேண்டும்?

இந்தியா என்பது தனி ஒரு தேசம் அல்ல, இந்து என்பது ஒரு மதமும் அல்ல. ஆங்கிலேய காலனி ஆட்சியாளர்களால் இந்த மக்களையும், இயற்கை வளங்களையும் சுரண்டுவதற்கும் ஒடுக்குவதற்கும் பலவந்தமாக உருவாக்கப்பட்டதுதான் இந்தியா என்ற நாடு. அவன் வைத்த பெயர்தான் இந்து மதம்.

அதற்கு முன்பு பல தேசிய இனங்கள், கலாச்சாரப் பிரிவுகள், பல்வேறு சமயப்பிரிவுகள், பல்வேறு பழங்குடி மக்கள் என பன்முகத்தன்மை கொண்ட தனித்தனி பிரிவுகளாகத்தான் இந்த பிராந்தியம் இருந்தது. ஏகாதிபத்தியங்கள் டாடா, அம்பானி, அதானி, பிர்லா போன்ற தரகு அதிகார வர்க்க முதலாளிகளின் (சேட்டுகளின்) ஒடுக்குமுறைகளுக்கும் சுரண்டலுக்கும் இந்தி – இந்து – இந்தியா எனும் பூணூலால் கட்டப்பட்டிருப்பதுதான் இன்றைய இந்தியா.

இது தேசிய இனங்களின் சிறைக்கூடம்; ஒடுக்கப்பட்ட மக்களின் வதைக்கூடம். அமெரிக்கா உள்ளிட்ட ஏகாதிபத்திய வல்லரசுகள் – பன்னாட்டு கார்ப்பரேட் கம்பெனிகளின் வேட்டைக்காக இந்த நாட்டை மறுகாலனியாக்குபவர்கள்தான் ‘தேசபக்த ஆர். எஸ்.எஸ் – பிஜேபி கும்பல்.

இந்த சேட்டுகள் – ஆரிய பார்ப்பனர்களின் கொடுங்கோன்மை ஆட்சியைத் தூக்கியெறிந்துவிட்டு எல்லா தேசிய இனங்களுக்கும் பிரிந்து போகும் உரிமையுடன் கூடிய தேசிய சுயநிர்ணய உரிமை வழங்கப்பட வேண்டும். ஒவ்வொரு மாநிலத்திலும் அந்த தேசிய இனத்தின் மொழியே ஆட்சி மொழியாக, பயிற்று மொழியாக, வழிபாட்டு மொழியாக, நீதிமன்ற அலுவல் மொழியாக நிலைநாட்டப்பட வேண்டும். விரும்புகின்ற தேசிய இனங்கள் சமத்துவ அடிப்படையில் சேர்ந்து உருவாக்கப்பட வேண்டும் நாடு – இதுதான் சரி!

இந்த அடிப்படையில், நம்மை அடிமைத்தளையில் பிணைத்திருக்கும் இந்தி – இந்து – இந்தியா எனும் பூணூல் அறுத்தெறியப்பட வேண்டும். பிரிந்து போகும் உரிமையுடன் கூடிய தன்னுரிமையை தமிழகம் பெற வேண்டும்; இது ஒன்றுதான் ஒரே தீர்வு; நிரந்தரத் தீர்வு; பிற தீர்வுகள் எல்லாம் சமரசமும், சந்தர்ப்பவாதமும் ஆகும்.

அன்று இந்தித் திணிப்பை எதிர்த்துப் போராடிய போதே ஆரிய – பார்ப்பன நச்சுப் பாம்பை நசுக்கி எறிந்திருக்க வேண்டும். தவறினோம், அடிவாங்கி தப்பித்த ஆரிய நச்சுப்பாம்பு பழிவாங்கும் வெறியோடு மீண்டும் படமெடுத்து ஆடுகிறது. இது நீண்ட காலம் நடந்து வரும் வரலாற்று ரீதியான போர். இம்முறையும் தவறினால் தமிழ்நாடு ஆரிய – பார்ப்பன கும்பலின் அடிமை நாடாக மாறிவிடும். எச்சரிக்கிறோம்.

எழுந்து வா! மாணவர், இளைஞர் பட்டாளமே! தன்னுரிமை பெற்ற தமிழகத்தை உயிரைக்கொடுத்தும் அடைவோம்!

தகவல் :
புரட்சிகர மாணவர் – இளைஞர் முன்னணி,
தமிழ்நாடு.

தொடர்புக்கு :
நெ.41, பிள்ளையார் கோவில் தெரு,
மதுரவாயல், சென்னை-95, தொலைபேசி : 94451 12675
மின்னஞ்சல்: rsyfchennai@gmail.com, முகநூல் பக்கம் : rsyf

 

  1. வணக்கம் தோழர்களே. நீங்கள் முன்வைக்கும் முழுக்கம் சரியானது தான். போகாத ஊருக்கு வழி சொல்கீறீர்கள் என்பது எனது கருத்து. அதாவது ஆகப்பெரும்பாண்மையான பெற்றோர்கள் தங்கள் பிள்ளைகளை ஆங்கில வழி கல்வி நர்சரி பள்ளி, மெட்ரிகுலேசன் பள்ளி. இன்று நவினமாக cbse பள்ளிகளில் படிக்க வைக்கிறார்கள். காரணம் தமிழ் வழியில் படித்தால் எதிர்காலம் பாழாகவிடும் என்ற குருட்டு நம்பிக்கை, நல்ல வேலைகிடைக்காது. என்று பல்வேறு குறைசொல்கிறார்கள். ஆனால் அது முற்றிலும் தவறு. அப்படியிருக்க அரசு கட்டாயப்படுத்தி தமிழ்வழி படிக்க வேண்டும் என்ற ஆணை என்பது எதர்காக. மேலும் பெரும்பாலும் பெற்றோர்கள் தங்கள் பிள்ளைகளை தமிழ் வழியில் தான் படிக்க வேண்டும் என்ற என்னம் மாற்றப்பட்டு விட்டது. தெருக்குதெரு புற்றீசல் போல் தனியார் பள்ளிகள் மெட்ரிகுலேசன் பள்ளிகள். அரசு பள்ளிகளிலும் மாநாகராட்சி பள்ளிகளிலும் படிப்பது சமூக அந்தஸ்தை குறைப்பது போன்ற மனநிலை மக்கள் மத்தியில் உள்ளது. அப்படியிருக்க ஒவ்வொரு தனி மனிதனின் மாற்றத்திற்கு காரணம் என்ன என்று சொல்லுங்கள். நீங்கள் முன்வைக்கும் முழக்கம் சரியா? அல்லது ஆக பெரும்பாண்மையான மக்கள் முட்டாள்களா என்பதை தெளிவுபட விளக்குங்கள் நன்றி

விவாதியுங்கள்

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க