privacy

about us

write

contact

shop

புதிய ஜனநாயகம்

புதிய கலாச்சாரம்

e-books

Global Influence

Communication

Legal Agreement

முகப்புபுதிய ஜனநாயகம்வாலறுந்த பார்ப்பன நரிகள் !

வாலறுந்த பார்ப்பன நரிகள் !

-

வ்வாமை காரணமாகத் தன்னியல்பாக உடல் வெளியேற்றும் உணவுப் பொருளைப் போன்ற நிலையில் இருக்கிறது பாரதிய ஜனதா. இதுதான் தமிழகத்தில் அக்கட்சியின் நிலை. பார்ப்பன பாசிச அரசியலை எத்தகைய இனிப்புக்குள் வைத்து மறைத்துக் கொடுத்தாலும், அதனை உடனுக்குடன் கக்கித் துப்பிவிடுகிறது தமிழகம். பொன்.இராதாகிருஷ்ணனும், தமிழிசையும், எச்.ராஜாவும் ஒருவரோடு ஒருவர் போட்டி போட்டுக் கொண்டு அன்றாடம் ஒரு பரபரப்பூட்டும் அறிக்கை கொடுக்கின்றனர். ஒருவரை மிஞ்சி ஒருவர் விளம்பரம் தேடுகின்ற வெறியில் பஞ்ச் டயலாக்குகளையும் எடுத்து விடுகின்றனர். அவை தேடித்தரும் ஊடக விளம்பரம், அவர்களுடைய விருப்பத்துக்கு நேர் எதிரான விளைவுகளையே பெற்றுத் தந்திருக்கின்றது.

தமிழகத்தை வஞ்சிக்கும் எந்த திட்டத்திற்கும் குரலைக்கூட கொடுக்காத வைணவ பார்ப்பனர்கள் கூட்டம் வைரமுத்துவை கண்டித்து கொதித்தெழுந்து வீதிக்கு வந்தது

ஆண்டாள் விவகாரத்தில் எச்.ராஜாவின் பேச்சைத் தூண்டுதலாக வைத்துத் திராவிட இயக்க எதிர்ப்பு இந்து எழுச்சியைக் கிளப்பலாமென்று அவர்கள் கண்ட கனவு பகல் கனவானது. அவர்களால் திரட்டப்பட்ட கூட்டமனைத்தும் வைணவப் பார்ப்பனக் கூட்டமாக மட்டுமே இருந்ததைத் தொலைக்காட்சி காமெராக்கள் அம்பலமாக்கின. வைரமுத்துவுக்கு எதிரான எச்.ராஜாவின் வசைப்பேச்சு மட்டுமின்றி, நித்தியானந்தாவின் பெண் சீடர்களின் வாயிலிருந்து வழிந்த ஆபாசமும், தினமணி வைத்தியநாதன் ஜீயரின் காலில் விழுந்ததும், தொலைக்காட்சி நெறியாளர் செந்திலுக்கு எதிராக எஸ்.வி.சேகர் வெளிப்படுத்திய பார்ப்பனக் கொழுப்பும் மக்கள் மனதில் ஆர்.எஸ்.எஸ். கும்பலின் மீதான வெறுப்பைக் கூட்டுவதற்கு மட்டுமே பயன்பட்டன. தமிழ்த்தாய் வாழ்த்தை விஜயேந்திரன் அவமதித்ததும், அதை நியாயப்படுத்தி ஆர்.எஸ்.எஸ். கும்பல் வாதிட்டதும், சங்கரமடத்தின் திமிர்த்தனமான அறிக்கையும் பார்ப்பன எதிர்ப்புணர்வைப் பெருமளவில் புதுப்பித்தன.

பாரதிய ஜனதாவின் பார்ப்பனக் கொழுப்பை அம்பலப்படுத்துவதில்  தமிழகத்தின் அரசியல் சமூக அமைப்புகளும், சமூக ஊடகங்களும் பெரும்பங்கு ஆற்றியிருக்கின்றன என்ற போதிலும், எச்.ராஜா, சேகர் முதலானோர் தமது நாக்கினால் பா.ஜ.க.-வுக்கு வெட்டிக்கொண்ட குழிதான் ஒப்பீட்டளவில் ஆழமானது. அறநிலையத்துறையிடமிருந்து கோயில்களைக் கைப்பற்ற வேண்டும் என்ற பா.ஜ.க.-வின் கோரிக்கை, தமிழகத்தில் தீவிரவாதம் என்கிற பூச்சாண்டி, இது பெரியார் மண்ணல்ல, பெரியாழ்வார் மண் என்ற வசனம் போன்றவையெல்லாம் அவர்களது அடிமனதில் கனன்று கொண்டிருக்கும் இந்துத்துவ வெறியை வெளிக்காட்டினவேயன்றி, இவையெதுவும் அவர்கள் எதிர்பார்க்கின்ற மக்கள் ஆதரவைப் பெற்றுத்தரவில்லை. மாறாக, இவற்றுக்குக் கிடைத்த பதிலடி மேலும் அவர்களைத் தனிமைப்படுத்தியிருக்கிறது.

இது பா.ஜ.க. தலைமைக்கும் உரைத்திருப்பதனால்தான், திராவிடக் கட்சிகளின் ஆட்சிக்கு முடிவு கட்டுவோம் என்று பேசிய பொன்னாரின் வாய், நானும் திராவிடன்தான் என்று சமாளிக்கிறது. சமஸ்கிருதம்தான் அனைத்து மொழிகளுக்கும் தாய் என்பதைத் தனது மூலமுதற் கொள்கையாகக் கொண்டிருக்கும் ஆர்.எஸ்.எஸ். கும்பல், சமஸ்கிருதத்தைவிடத் தொன்மையான மொழி தமிழ் என்று மோடியை நாடகமாட வைக்கிறது. நரிக்கு வாலறுந்த போதிலும், அது நரிதான். சங்கப் பரிவாரம் தனது உத்தியை மாற்றிக் கொள்ளுமேயன்றி, தனது முயற்சியை அது கைவிடப்போவதில்லை.

பா.ஜ.க.-வின் மதவெறிப் பேச்சையும் நடவடிக்கைகளையும் தனது எதிர்வினையின் மூலம் தமிழகம் முறியடித்துவிடுகிறது என்ற காரணத்தினால் மெத்தனம் கூடாது. தமிழகத்தின் எதிர்வினை பெருமளவில் தன்னியல்பான பதிலடியாகவே இருந்து வருகிறது. அதனை உணர்வுபூர்வமான எதிர்த்தாக்குதலாக வளர்த்தெடுக்க வேண்டும். பார்ப்பன பாசிசம் என்பது வர்க்க, இன, மொழி, சாதி ஒடுக்குமுறைகளை ஒருங்கிணைந்த முறையில் ஏவுகின்ற ஆயுதம். மக்களுக்கெதிரான குத்தீட்டியாகவும், தனது தோல்விகளிலிருந்து பாதுகாத்துக் கொள்ளும் கவசமாகவும் மோடி அரசுக்கும் ஆளும் வர்க்கங்களுக்கும் அது பயன்படுகிறது. பார்ப்பன பாசிசத்துக்கு எதிரான நமது பதிலடி இத்தகைய புரிதலுடன் அமைவது அவசியம்.

புதிய ஜனநாயகம் பிப்ரவரி 2018

மின்னூலை வாங்க Add to cart பட்டனை அழுத்தவும். பின்னர் View cart அழுத்தி, உங்கள் கூடையில்(Cart), எண்ணிக்கையை(Quantity) சரிபார்த்துவிட்டு, Proceed to checkout-பட்டனை அழுத்தி, உங்கள் பெயர் மற்றும் தகவல்களை பதிவு செய்து Place order-ஐ அழுத்துங்கள். உங்களுக்கான பணம் செலுத்தும் முறையை தெரிவு செய்து பணத்தை செலுத்துங்கள்.

இந்தியாவில் வங்கிக் கணக்கு வைத்திருப்போர் டெபிட் கார்டு, கிரெடிட் கார்டு, நெட்பேங்கிங் மூலம் பணம் அனுப்பலாம். பணம் அனுப்பிய பிறகு உங்களது மின்னஞ்சலுக்கு உடனேயே டவுண்லோடு இணைப்பு வரும். அதிலிருந்து நீங்கள் இரண்டு நாட்களுக்குள் டவுண்லோடு செய்யலாம். வெளிநாடுகளில் வங்கிக் கணக்கு வைத்திருப்போர் எமது வங்கிக் கணக்கிற்கு நேரடியாக பணம் அனுப்பிவிட்டு, விவரத்தை உடன் அறியத்தரவும். உடன் உங்களுக்கு மின் நூல் அனுப்பி வைக்கப்படும்.