privacy

about us

write

contact

shop

புதிய ஜனநாயகம்

புதிய கலாச்சாரம்

e-books

Global Influence

Communication

Legal Agreement

முகப்புகளச்செய்திகள்மக்கள் அதிகாரம்டெல்டாவை பாலைவனமாக்கும் டெல்லி சூழ்ச்சி ! பென்னாகரம் ஆர்ப்பாட்டம்

டெல்டாவை பாலைவனமாக்கும் டெல்லி சூழ்ச்சி ! பென்னாகரம் ஆர்ப்பாட்டம்

-

காவிரித் தீர்ப்பு! டெல்டாவை பாலைவனமாக்கும் டெல்லியின் சூழ்ச்சி !” என்கின்ற தலைப்பில் தமிழகம் முழுவதும் மக்கள் அதிகாரம் பல்வேறு போராட்டங்களை நடத்தி வருகிறது. அதன் ஒரு பகுதியாக தருமபுரி தபால் அலுவலகம் அருகில் 23-02-2018 வெள்ளிக்கிழமை காலை 11 மணி அளவில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைப்பெற்றது.

இதில் விவசாய சங்க தலைவர்கள், அரசியல் கட்சி பிரமுகர்கள், ஜனநாயக சக்திகள் கலந்துக்கொன்டு உரையாற்றினார்கள். ஆர்ப்பாட்டத்தினை தருமபுரி மண்டல ஒருங்கிணைப்பாளர் தோழர் முத்துக்குமார் தலைமை தாங்கினார். அவர் பேசுகையில், ”காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க வேண்டும் என்று 40 ஆண்டுகளாக, வழக்கு வாய்தா என்று வந்துக் கொண்டு இருக்கிறது, ஆனால் தமிழகத்துக்கு தண்ணீர் வந்துபாடு இல்லை,  நீண்ட நெடிய காலமாக தீர்க்காமல் இந்த அரசு துருப்பிடித்துக்கொண்டு இருக்கிறது.

தமிழக மக்களின் வாழ்வில் ஜீவாதாரமாக இருக்கும் காவிரி பிரச்சனையை சில பேரால் மட்டும் தீர்க்க முடியாது. அனைவரும் ஒன்றிணைந்து ஜல்லிகட்டு போராட்டம் போல போராடுவது தான் தீர்வு” என்றார்.

அடுத்ததாக தமிழக விவசாய சங்க மாநில தலைவர் எஸ்.ஏ .சின்னசாமி பேசுகையில் உச்சநீதி மன்ற தீர்ப்பு 192 டிஎம்சி தண்ணீரை 177.25 டிஎம்சியாக குறைத்துள்ளது. இதனால் 88 ஆயிரம் ஹெக்டர் பாசனம் குறைய வாய்ப்புள்ளது. மேலும் தமிழகத்தின் உணவு களஞ்சியத்தை பாலைவனமாக்கி, விவசாயிகளை வெளியேற்றி, அங்குள்ள கனிமவளங்களை கொள்ளையடிக்கும் நோக்கம் கொண்டுள்ள கார்ப்பரேட்டுகளின் நலன் அடங்கியுள்ளதோ என்ற சந்தேகம் எழுந்துள்ளது. இது ‘குரங்கு ஆப்பத்தை பங்கிட்டுது போல’ ஒரு தூரோகத்தனமான தீர்ப்பாக உள்ளது.

காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க வேண்டும் என்று உச்சநீதி மன்றம் கூறியும் மத்திய அரசும், தமிழக அரசும் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. அன்றைக்கு 2013 மன்மோகன் சிங்கும் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. மக்கள் போராட்டமே இவர்களை அடிபணிய வைக்க முடியும்.

அடுத்தது விவசாய தொழிலாளர் சங்க மாவட்ட செயலாளர் தோழர் அர்ச்சுனன் பேசுகையில் ”வெள்ளகாரன் ஆட்சியில் தான் மேட்டூர் அணையும், கர்நாடகவில் கிருஷ்ணசாகர் அணையும் காவிரி பாசனத்துக்கு கட்டப்பட்டது”. 1990-யில் வி.பி.சிங் பிரதமராக இருந்த போது காவிரி நடுவர் மன்றம் அமைக்க வேண்டும் என்று மனித சங்கிலி போராட்டம் நடத்தியதன் விளைவாக நடுவர் மன்ற தீர்ப்பு கொடுக்கப்பட்டது. அந்த தீர்ப்பை காங்கிரஸ், பாஜக இரண்டு கட்சிகளும் காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க கட்டுபடமாட்டோம் என்று அடாவடித்தனம் செய்கிறது.

இதன் விளைவாக டெல்டா பகுதியில் 8 இலட்சம் விவசாய தொழிலாளர்கள் வேலை இழந்து, நூறு நாள் வேலையும் இல்லாமல் மொத்த பொருளாதாரத்தையும் அடித்து நொறுக்கியதன் விளைவாக நகரங்களுக்கு தினக்கூலிகளாக குடிபெயர்ந்து வருகின்றன. இப்படி மக்கள் பிரச்சனை முன்னுக்கு வரும் போது எல்லாம் ராமனை தூக்குவது, மதத்தை தூக்குவது, திசை திருப்புவது தான் பாஜக-வின் திட்டம். எனவே ஒருங்கிணைந்த போராட்டம்தான் தீர்வு என்றார்.

விடுதலை சிறுத்தைகள் கட்சி வழக்கறிஞர் பிரிவு தருமபுரி மேற்கு மாவட்ட செயலாளர் வழக்கறிஞர் குமரேசன் பேசுகையில், ”காவிரி தீர்ப்பு தமிழகத்துக்கு மட்டும்தான் பொருந்தும் ஏனெனில் கர்நாடகாவில் சாதி மதம் பார்க்காமல் ஒன்றிணைகின்றனர். ஆனால் தமிழகத்தில் அவ்வாறு ஒன்றிணைவது இல்லை. டெல்லியில் நல்ல வழக்கறிஞர்களை வைத்து வாதாடி தண்ணீரை பெற ஆட்சியாளர்கள் கருதுவது இல்லை. ஏனெனில் இவர்கள் ஊழல் பேர்வழிகளாக இருக்கின்றனர். இதில் இருந்து அரசியல்வாதிகளும், அதிகாரிகளும் திருந்த வேண்டும். இருப்பினும் சாதி மதம் விட்டு மக்கள் அதிகாரம் போல் பொது வெளியில் போராடினால் தான் தீர்வு” என்றார்.

அடுத்து பேசிய புரட்சிகர மாணவர் -இளைஞர் முன்னணி மாவட்ட அமைப்பாளர் தோழர் அன்பு பேசுகையில், ”காவிரி தீர்ப்பு மீண்டும் தமிழகத்தின் மீது தாக்குதல். இது தமிழகத்துக்கும், கன்னட மக்களுக்கும் எதிரானது. இவை கார்ப்பரேட்டுகளின் நலனுக்கு வந்த தீர்ப்பு. இந்த தீர்ப்பின் வாயிலாக விவசாயிகளை சாகடிக்கிறார்கள். நீட்டைகொண்டு வந்து மாணவர்களை  சாகடிக்கிறார்கள். ஆட்சிக்கு வந்ததும் ஒரு கோடி பேருக்கு வேலை என்றார் மோடி, ஆனால் இன்று பக்கோடா விற்க சொல்கிறார் இப்படி சொல்ல ஒரு அரசு தேவையா?

நீதித்துறையும், மத்திய அரசும் தமிழகத்துக்கு எதிரானவையே. மத்தியில் இருக்கும் பாஜக  அரசு பக்கோடா விற்க சொல்கிறது. மாநிலத்தில் இருக்கும் அரசு மிக்சர் தின்கிறது. இவர்களுக்கு  நம்மை ஆள என்ன அருகதை இருக்கு. இப்படி தன்னுரிமையை இழந்துக்கொண்ட அரசை நம்பி இருந்தால் நமது பிரச்சனைகளை தீர்க்க முடியாது எனவே தன்னூரிமையை நிலைநாட்ட தமிழகமே தீரண்டுவா” என அறைகூவல் விடுத்தார்.

மக்கள் அதிகாரம் பென்னாகரம் பகுதி தோழர் கோபிநாத் பேசுகையில், ” காவிரி தீர்ப்பு வந்ததும் தமிழகத்தை வஞ்சிப்பது எதிர்த்து பல்வேறு அரசியல் கட்சிகள் போராடுகிறார்கள். இதனை எப்படி ஒடுக்குவது என்பதையே அரசு செய்கிறது. காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க முடியாது என்று கர்நாடக முதல் அமைச்சர்  சித்தராமைய்யா சொல்கிறார் அதனை வேடிக்கை பார்க்கிறது உச்சநீதி மன்றம்.

உச்சநீதி மன்ற தீர்ப்பையும் கர்நாடக அரசு மதித்தது இல்லை. இந்த நீதி மன்றம் நமக்கானது என்று நம்ப முடியுமா ? பிலிகுண்டு பகுதிக்கு தண்ணீர்  வருவதற்கு முன்பே பெரிய குழாய்கள் மூலமாக தண்ணீரை எடுக்கின்றன. கர்நாடக விவசாயிகளுக்கு தண்ணீர் என்பது ஒரு பகுதிதான். ‘சோறுடைத்த சோழமண்டலம் டெல்டாவை அழித்தால் நமக்கு எப்படி சோறு வரும்’ வளமிக்க சோமலியாவை முதலாளிகள் கொள்ளையடித்தததை போல டெல்டாவை அழிக்கும் சதிதிட்டம் வைத்திருக்கும் அரசிடம் பிரச்சனையை சொன்னால் தீர்ந்திடுமா?  மாற்று மக்கள் அதிகாரத்தை கையிலெடுக்க வேண்டும். அதுதான் தீர்வு”  என்றார்.

இதனை நூற்றுக்கணக்கானோர் கவனித்தனர் காவிரி தீர்ப்பு தமிழகத்துக்கு வஞ்சகம் என்று விளக்கும் வகையிலும், இந்த துரோகத்துக்கு எதிராக போராட வேண்டும் என்பதை உணர்த்தும் வகையிலும் ஆர்ப்பாட்டம் அமைந்தது.

தகவல் :
மக்கள் அதிகாரம்
தருமபுரி மண்டலம் –  81485 73417

***

காவேரி துரோகம், நீட் திணிப்பு, இந்தி சமஸ்கிருதம் திணிப்பு, தமிழ்மொழி அவமதிப்பு தன்னுரிமைக்காக தமிழகமே திரண்டெழு !

ஆர்ப்பாட்டம்

நாள் : 27-02-2018
விருத்தாசலம்.

விவாதியுங்கள்

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க