privacy

about us

write

contact

shop

புதிய ஜனநாயகம்

புதிய கலாச்சாரம்

e-books

Global Influence

Communication

Legal Agreement

முகப்புகளச்செய்திகள்போராட்டத்தில் நாங்கள்தமிழுக்காக களமிறங்குவோம் ! தமிழகமெங்கும் பு.மா.இ.மு ஆர்ப்பாட்டம் - படங்கள் !

தமிழுக்காக களமிறங்குவோம் ! தமிழகமெங்கும் பு.மா.இ.மு ஆர்ப்பாட்டம் – படங்கள் !

-

தன்னுரிமைக்காக தமிழகமே திரண்டெழு சென்னையில் பு.மா.இ.மு ஆர்ப்பாட்டம் !

கேரளா, கர்நாடக, மேற்கு வங்க மாநிலங்களில் அந்தந்த மாநிலங்களின் மொழிகளை கட்டாய பயிற்று மொழியாக அறிவித்திருக்கிறது அந்த மாநில அரசுகள். பச்சைத் தமிழர்கள், மறத் தமிழர்கள் என்று பேசக் கூடிய தமிழகத்தில் தமிழுக்கு இடமில்லை என்பது மிகப்பெரிய அவமானம்.

ஐ.ஐ.டி-யில் 26-2-2018 அன்று மத்திய அமைச்சர் நிதின்கட்கரி கலந்துக் கொண்ட நிகழ்ச்சியில், தமிழ்தாய் வாழ்த்து பாடப்படவில்லை, அதற்கு பதிலாக கணபதி வந்தனம் என்ற சமஸ்கிருத பாடலைப்பாடி நிகழ்ச்சியை தொடங்கியிருக்கிறார்கள். “தமிழை வளர்த்தால் ஆண்டாள்” “ஆண்டாள் தேவதாசியாக இருக்கலாம்” என்று ஒரு ஆராய்ச்சி நூலின் மேற்கோளை வைரமுத்து கூறினார். உடனே ‘எங்க ஆண்டாள வேசின்னு அவமதித்துவிட்டார்’ என கொதித்தெழுந்தார்கள் பார்ப்பனர்கள்.

ஆரிய பார்ப்பனக் கூட்டம், ஆர்.எஸ்.எஸ், பி.ஜே.பி கூட்டம் தமிழகத்தில் காலுன்றுவதற்காக இந்தியை, சமஸ்கிருதத்தை திணிக்கிறவர்கள் இப்படி மேலெழுந்து பேசுகிறார்கள்.

ஆனால், தாய் மொழி, முதுமொழி, செம்மொழியாகவும் இருக்கக் கூடியது தமிழ் மொழி. அந்த தமிழ் மொழிக்கு தமிழ்நாட்டில் பயிற்று மொழியாகவோ, அலுவல் மொழியாகவோ, நீதிமன்ற மொழியாகவோ இருக்க இடமில்லையென்றால் இதை நிச்சயம் பொறுத்துக் கொள்ள முடியாது. காவிரியில் கூட தற்போது உரிமையை இழந்து நிற்கிறோம். எனவே தமிழர்கள் தன்னுரிமைகளுக்காக திரண்டெழ வேண்டும் என்பதற்காக தான் இந்த ஆர்ப்பாட்டத்தை ஒரு இயக்கமாக தொடங்கி வைக்கிறோம்.

  • பள்ளி, கல்லூரி, பல்கலைக்கழகங்களில் தமிழை பயிற்றுமொழியாக்கு!
  • அரசு வேலைவாய்ப்பில் தமிழில் படித்தவருக்கு முன்னுரிமை வழங்கு!
  • அலுவல் மொழியாக, நீதிமன்ற மொழியாக தமிழை நிலைநாட்டு!
  • தன்னுரிமைக்காக தமிழகமே திரண்டெழு!

ஆகிய முழக்கங்களை முன்வைத்து சென்னை வள்ளுவர் கோட்டத்தில் 27.2.2018 அன்று புரட்சிகர மாணவர் – இளைஞர் முன்னணி சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதில் பள்ளி மாணவர்கள், கல்லூரி மாணவர்கள், பெற்றோர்கள் என பலர் கலந்துக் கொண்டனர்.

ஆர்ப்பாட்டத்தை பு.மா.இ.மு வின் சென்னை கிளை செயலாளர் தோழர் சாரதி தலைமை தாங்கினார். பு.மா.இ.மு -வின் மாநில ஒருங்கிணைப்பாளர் தோழர் கணேசன், பேராசிரியர் சிவக்குமார், வாலாசா வல்லவன் ஆகியோர் சிறப்புரையாற்றினர். ஆர்ப்பாட்டத்தில் ம.க.இ.க பாடல்கள் பாடப்பட்டது.

( படங்களைப் பெரிதாகப் பார்க்க அவற்றின் மீது அழுத்தவும் )

தகவல்:
புரட்சிகர மாணவர் – இளைஞர் முன்னணி,
சென்னை,
தொடர்புக்கு : 94451 12675
மின்னஞ்சல் : rsyfchennai@gmail.com, facebook : rsyftn

*****

“பள்ளி, கல்லூரி, பல்கலைக் கழகங்களில் தமிழை பயிற்று மொழியாக்கு! அரசு வேலைவாய்ப்பில் தமிழில் படித்தவருக்கு முன்னுரிமை வழங்கு! அலுவல் மொழியாக, நீதிமன்றம் மொழியாக தமிழை நிலைநாட்டு!” – என்ற தலைப்பில் விருத்தாசலம் பாலக்கரையில் புரட்சிகர மாணவர் – இளைஞர் முன்னணி சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

இதில் பள்ளி,கல்லூரி மாணவர்கள் உட்பட 70-வதிற்கும் மேற்பட்டவர்கள் கலந்து கொண்டனர்.

( படங்களைப் பெரிதாகப் பார்க்க அவற்றின் மீது அழுத்தவும் )

தகவல்:
புரட்சிகர மாணவர் – இளைஞர் முன்னணி,
விருத்தாச்சலம்.

*****

விழுப்புரம் பகுதி புரட்சிகர மாணவர் – இளைஞர் முன்னணி சார்பாக “பள்ளி ,கல்லூரி, பல்கலைக்கழகங்களில் தமிழை பயிற்றுமொழியாக்கு! அரசு வேலைவாய்ப்பில் தமிழில் படித்தவருக்கு முன்னுரிமை வழங்கு! அலுவல் மொழியாக, நீதிமன்ற மொழியாக தமிழை நிலைநாட்டு! தன்னுரிமைக்காக தமிழகமே திரண்டெழு !” – என்ற தலைப்பில்  27.02.2018 அன்று மாலை 5 மணிக்கு மாவட்ட ஆட்சியர் அலுவலகம் எதிரில் ஆர்ப்பாட்டம் நடைப்பெற்றது. ஆர்பாட்டத்தில் மாணவர்கள், இளைஞர்கள் என நூற்றுக்கும் மேற்பட்டவர்கள் கலந்து கொண்டனர்.

ஆர்பாட்டத்தில் புரட்சிகர மாணவர் – இளைஞர் முன்னணி, விழுப்புரம் அமைப்புக்குழு உறுப்பினர். தோழர் மனோகரன் தலைமை வகித்தார். அவரது உரையில் “இன்றைக்கு மாணவர்கள் நாம் படித்துவிட்டோம், வேலைக்கு போய்விட்டோம் என இருந்துவிட்டால் வரும் தலைமுறையின் வாழ்க்கை எப்படி சுமுகமாக இருக்கும். கொஞ்சம் யோசிங்க, மோடி அரசு நீட் தேர்வை திணிப்பதாகட்டும், காவேரி தீர்ப்பு, விவசாயத்தை அழிக்க ஹைட்ரோ கார்பன் திட்டம், மீத்தேன் திட்டம், சாகர்மாலா திட்டம் போன்ற பேரழிவு திட்டத்தை திணிப்பது. கல்வி நிலையங்களில் சமஸ்கிருத திணிப்பு என இருக்க நாம் எப்படி அமைதியாக இருக்க முடியும்.

கேரளா, மேற்குவங்கம் போன்ற மாநிலங்கள் தனது தாய்மொழியை பள்ளிகளில் கட்டாயமாக்கி இருக்கிறது, தமிழகத்தில் நமது உரிமையை நிலைநாட்ட வேண்டும்” என்று முடித்தார்.

அவரைத் தொடர்ந்து விழுப்புரம் – கானை வட்டார மக்கள் அதிகாரம் அமைப்பாளர், தோழர் இளவேந்தன் பேசுகையில்; “மக்கள் பிரச்னைக்கு நாம் போராடினா அரசும், போலீசும் ஒடுக்குவது மட்டும் இல்லாமல் ஜனநாயகபூர்வமாக ஒரு ஆர்ப்பாட்டம் நடக்க கூட அனுமதி மறுக்கும் அரசை நாம் நம்பலாமா. ஓநாய் கிட்ட போய் ஆடு நீதி கேட்டால் என்ன நடக்கும், ஆட்டையே சாகடிக்கும் அது போலதான் தமிழக எடப்பாடி அரசு மத்திய அரசிடம் நீதி கேட்குது. ஆகவே இந்த அரசமைப்பு மக்களுக்கு எதிராக போய்விட்டது. இதற்க்கு தீர்வு மக்கள் அதிகாரமாக மக்கள் மாறுவதுதான் தீர்வு” என்று பேசி முடித்தார்.

அதன் பின் தோழர் திலீபன், புரட்சிகர மாணவர் – இளைஞர் முன்னணி விழுப்புரம் அமைப்பு குழு உறுப்பினர் பேசுகையில்; “இந்த ஒட்டுமொத்த அரசும் மக்களை நாயினும் கீழாய் நடத்துகிறது. மாணவர்கள், இளைஞர்கள் இதை எதிர்த்து ஒரு புரட்சிகர அமைப்பாக ஓன்று சேர்ந்து போராடவேண்டும்” என்று கூறினார்.

அவரைத் தொடர்ந்து தோழர் இரவிகார்த்திக், மருதம் ஒருங்கிணைப்பாளர். பேசுகையில்; “ஒரு மொழிதான் ஒரு இனத்தின் அடயாளம் ஒரு மொழியின் மூலமாகதான் நாம் தகவலையும், நம்மை சுற்றி நடக்கும் வரலாற்று நிகழ்வுகளையும் பேச முடியும். அப்பொழுது அவர்கள் கலாச்சாரம், பண்பாடு மேம்படும். ஒரு மொழி அழிந்தால் ஒரு இனம் அழியும், கலாச்சாரம் அழியும் அதை நோக்கிதான் பி.ஜே.பி, ஆர்.எஸ்.எஸ் தொடர்ந்து வேலை செய்து கொண்டு இருக்கிறது.

சமீபத்திய உதாரணம் ஆண்டாள் பிரச்சனையே தமிழத்தில் கிளப்பி இதன் மூலம் தனது செல்வாக்கை உயர்த்த முயற்சி எடுத்து. இந்த ஆபாயத்தை உணர்த்து நாம் போராட வேண்டும். இன்றைக்கு ஆர்ப்பாட்டத்தில் இவ்வளவு மாணவர்கள், இளைஞர்கள், பார்க்கும் பொழுது எனக்கு சந்தோசமாக இருக்கு” என்று முடித்தார்.

பின்னர்  தோழர் அம்பேத்கர் , விவசாயிகள் விடுதலை முன்னணி, விழுப்புரம் மாவட்ட அமைப்பாளர் பேசுகையில்; “இந்த RSS – BJP கும்பலுடைய தமிழ் விரோதம் என்பது நீண்ட நாள் பகை, குறிப்பாக இந்தி எதிர்ப்பில் தமிழகத்திடம் அடிவாங்கிய இந்த பார்ப்பன நச்சு பாம்பை அன்றைக்கே காலால் நசுக்கி கொன்று இருக்க வேண்டும். ஆனால் அன்றைக்கு கொல்லாமல் விட்டதன், விளைவாக அடிவாங்கிய பாம்பு மீண்டும் படமெடுத்தது வருகிறது.

காவேரி தீர்ப்பில் மட்டும் தமிழகத்தை வஞ்சிக்க வில்லை, தமிழ் தாய் வாழ்த்துக்கு அவமரியாதை, சென்னை IIT- யில் நடந்த நிகழ்சிகளில் தமிழ் அவமதிப்பு, விவசாய நிலங்களை நாசமாக்கும் அழிவு திட்டம் தமிழகத்தில் திணிப்பு, ஆண்டாளை ஒரு புனிதராக சித்தரித்து நடந்த போராட்டத்தில் பார்பன கும்பலை தாண்டி யாரும் பங்கேற்க வில்லை, இருந்தாலும் அதைவைத்து இந்துமதவெறியை கிளப்பி இந்துகளை திரட்ட முயற்சி செய்தது. இதை நாம் அனுமதிக்கலாமா இதை முறியடிக்க ஒரு புரட்சிகர அமைப்பாக திரளவேண்டும்” என்று முடித்தார்.

இறுதியாக தோழர் ஞானவேல், அமைப்பாளர், புரட்சிகர மாணவர் – இளைஞர் முன்னணி, பேசுகையில்;  “அந்த காலத்தில் போர் நடக்கும் ஒரு நாட்டின் மீது இன்னொரு நாடு போர்தொடுக்கும் அபொழுது தனது நாட்டை காக்கவும், தனது பண்பாடு கலாச்சாரத்தை காக்கவும், வளங்களை காக்கவும் எதிரி நாட்டு படையோடு போரிடுவது, மற்றொன்று அவனிடம் அடிபணிந்து அவன் கொடுக்கும் பதவிக்கும், பொருளுக்கும் விலை போவது.

இன்றைக்கு தமிழகத்தின் மீது R.S.S , BJP கும்பல் ஒரு போரை தொடுத்து இருக்கிறது. இந்த போரில் நாம் வெற்றி பெறவில்லை என்றால், நமது பண்பாடு, கலாச்சாரம், மொழி, இயற்கை வளம் எல்லாம் அழியும்! அபொழுது நாம் என்ன செய்ய போகிறோம். மாணவர்கள், இளைஞர்கள் ஒரு புரட்சிகர அமைப்பாக ஓன்று திரளவேண்டும்” என பேசி முடித்தார்.

தகவல்:
புரட்சிகர மாணவர் – இளைஞர் முன்னணி,
விழுப்புரம்.

விவாதியுங்கள்

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க