privacy

about us

write

contact

shop

புதிய ஜனநாயகம்

புதிய கலாச்சாரம்

e-books

Global Influence

Communication

Legal Agreement

முகப்புகலைகவிதைபொய்யிலே பிறந்த ராசா நீ செய்யும் உதவி லேசா !

பொய்யிலே பிறந்த ராசா நீ செய்யும் உதவி லேசா !

-

எச்சு ராஜாவுக்கு எச்ச கச்ச நன்றி…!

காரைக்குடி சீதனமே
கடிவாய் மோகனமே
தேடினாலும் கிடைக்காத
தில்லுமுல்லு பொக்கிசமே
கழுவி கழுவி ஊத்தினாலும்
சளைக்காத ஜாதகமே,
எங்களாலேயே முடியாததை
எடுத்து செய்யும் கல் மனமே
என்னான்னு  சொல்லுவமே!

ஒரே நாளில்
ஒரே நூலில்
ஊரையே இழுத்துவிட்டாய்
பெரியாரையும், லெனினையும் பேசி, பேசி
நாட்டையே ஒன்ணு சேர்த்தாய்
நீ, நிறுத்தாமல் சொல்லனுமே
நிமிருது தமிழினமே!

பொய்யில் பிறந்த ராசா – நீ
செய்யும் உதவி லேசா
பேசாத நாளெல்லாம் வீண் தானே
பெரியாரின் பெருந்தொண்டன்   நீதானே,
ஒயாமல் உசுப்பிடுது,
உன் வாய் தானே!

ஆண்டாளுக்கு உறுமுனது
ஜீயர் வயிறை தாண்டவில்லை
பெரியாரை பேசுனது
தமிழகமே தாங்கவில்லை
நீ,
பிள்ளையார் சுழி போட்டால்
அது பெரியார் சுழியாய் மாறுது
வேற யாரும் தேவை இல்லை,
வெளங்கிடும் உன் வாயாலே
பி.ஜே.பி   நாறுது!

ஆயிரம் பேர்
ஆயிரம் சொல்லட்டும்
அப்படியே போ ராசா
நீ உதிர்க்கும் முத்துக்களால்
திராவிடமே திரளுதையா
மாஸ்சா!

– துரை. சண்முகம்