privacy

about us

write

contact

shop

புதிய ஜனநாயகம்

புதிய கலாச்சாரம்

e-books

Global Influence

Communication

Legal Agreement

முகப்புகளச்செய்திகள்மக்கள் அதிகாரம்காவிரி நீர் வரும்வரை டெல்லியுடனான உறவுகளைத் துண்டிப்போம் !

காவிரி நீர் வரும்வரை டெல்லியுடனான உறவுகளைத் துண்டிப்போம் !

-

“கடைமடைக்கு காவிரி நீர் வரும்வரை டெல்லியோடு ஒட்டும் இல்லை உறவும் இல்லை!
தமிழக எம்.பி. -க்களே ராஜினாமவை  செய்யுங்கள்!” என்று அறைகூவி மக்கள் அதிகாரம் ஆர்ப்பாட்டம் !

காவிரி நீரில் தமிழகத்தின் உரிமையை மறுத்து, தமிழகத்தை வஞ்சிக்கும் தீர்ப்பை உச்சிக்குடுமி மன்றம்  கொடுத்துள்ளது. தமிழகத்தின் உரிமையை நிலைநாட்ட வேண்டிய அதிமுக அரசோ, பாஜக-வின் பினாமியாக செயல்பட்டு வருகிறது. பாஜக ஆர்.எஸ்.எஸ் தமிழகத்திற்கு எதிராக எந்த வேலை செய்தாலும் அதனை மறுத்து பேசுவதோ, நடவடிக்கையில் ஈடுப்படுவதோ இல்லை.

மாறாக பெரியார் சிலை உடைப்பு என்றால் மௌனமாக இருக்கின்றனர். அல்லது பசப்பி பதில் கொடுக்கின்றர். இந்த அடிமை கூட்டம் நமது உரிமையை நிலைநாட்டது. காவிரியில் இராயிரம் ஆண்டுகளாக உள்ள நெற்களஞ்சியத்தை அழிக்கும் பாஜக -விற்கு எதிராக தமிழக எம்பி, எம்.எல்.ஏ. -க்களே ராஜினாமாவை மோடியின் முகத்தில் வீசியெறியுங்கள், என்ற தலைப்பில் கிருஷ்ணகிரி மாவட்டம் அஞ்செட்டி, நாட்ர பாளையம் பகுதியில் இரண்டு நாட்கள் பிரச்சாரம் செய்து, அஞ்செட்டி பேருந்து நிலையத்தில் 13.03.2018 செவ்வாய் காலை 11:00 மணியளவில் கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தப்பட்டது.

இந்த ஆர்ப்பாட்டத்திற்கு அத்திமரத்தூர் பகுதியை சேர்ந்த மக்கள் அதிகாரம் தோழர் சுரேஷ் அவர்கள்  தலைமை தாங்கினார். நாட்றாபாளையம் பகுதி மக்கள் அதிகாரம் தோழர் சரவணன் கண்டன உரையாற்றினார். இதில் பென்னாகரம் பகுதி மக்கள் அதிகாரம் தோழர் கோபிநாத் சிறப்புரையாற்றினார்.

தோழர் கோபிநாத் பேசும் போது “நீதி மன்றம், பிரதமர், ஜனாதிபதி, மத்திய அரசு அனைவரும் தமிழகத்திற்கு எதிராக உள்ளனர். இந்த எதிராளிகளிடம் எந்த நீதியும் நாம் பெற்றுவிட முடியாது. தமிழகத்தில் உள்ள அதிமுக அரசும் பாஜகவின் அடிமையாக உள்ளது. இவர்களிடம் உரிமையை மீட்க சொல்ல முடியாது. தமிழகத்தின் உரிமை காசுக்காக காவு கொடுத்து விடுவார்கள்.

டெல்டாவை பாதுகாப்பதோ, மீத்தேன் எடுப்பதற்கு எதிராக போராடி விவசாயத்தை பாதுகாப்பதோ இந்த ஆட்சியாளர்களின் நோக்கமல்ல. பாதுகாக்கபட்ட  வேளாண் மண்டலமாக அறிவிக்க வேண்டிய டெல்டாவை, பெட்ரோ கெமிக்கல் மண்டலமாக அறிவிக்கும் இந்த ஈன துரோகிகளிடம் எந்த நியாத்தையும் எதிர்பார்க்க முடியாது. மக்கள் அதிகாரத்தை  நிறுவுவோம், டெல்டாவை பாதுக்காக்க களத்தில் இறங்குவோம். தமிழகத்தின் உரிமை மீட்க இனி டெல்லியோடு ஒட்டுமில்லை, உறவும் இல்லை, மத்திய அரசு அலுவலகங்களை இயங்கவிடாமல் செய்வோம்.” என்று எழுச்சி உரையாற்றினார்.

இந்த ஆர்ப்பாட்ட நிகழ்வினை நூற்றுக்கணக்கான மக்கள் கவனித்தனர்.

( படங்களைப் பெரிதாகப் பார்க்க அவற்றின் மீது அழுத்தவும் )

தகவல் :
மக்கள் அதிகாரம்
அஞ்செட்டி, கிருஷ்ணகிரி மாவட்டம்.

 

விவாதியுங்கள்

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க