privacy

about us

write

contact

shop

புதிய ஜனநாயகம்

புதிய கலாச்சாரம்

e-books

Global Influence

Communication

Legal Agreement

முகப்புகளச்செய்திகள்போராட்டத்தில் நாங்கள்ஆர்.எஸ்.எஸ்-ஐ அடக்குவோம் ! வேலூரில் அனைத்துக் கட்சி ஆர்ப்பாட்டம் !

ஆர்.எஸ்.எஸ்-ஐ அடக்குவோம் ! வேலூரில் அனைத்துக் கட்சி ஆர்ப்பாட்டம் !

-

பெரியார் – லெனின் – அம்பேத்கர் சிலைகளை சேதப்படுத்திய இந்துத்துவக் கும்பலுக்கு எதிராக வேலூரில் அனைத்துக் கட்சிகள் சார்பாக 11.03.2018 ஞாயிறு அன்று கண்டணப் பேரணி – ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

வேலூர் நகர திராவிடர் கழகம் ஒருங்கிணைத்த இந்தப் போராட்டத்தில் தி.மு.க, இந்திய பொதுவுடமைக் கட்சி, இந்திய பொதுவுடமைக் கட்சி (மார்சிஸ்ட்), திராவிட இயக்க தமிழர் பேரவை, இந்திய தேசிய காங்கிரஸ் ஆகிய கட்சிகளோடு மக்கள் கலை இலக்கியக் கழகம் மற்றும் அம்பேத்கர்-பெரியார் வாசகர் வட்டம் உள்ளிட்ட அமைப்புகளைச் சேர்ந்த நூற்றுக்கணக்கானோர் கலந்து கொண்டனர்.

முன்னால் நாடாளுமன்ற – சட்ட மன்ற உறுப்பினரும் தி.மு.க சொத்து பாதுகாப்புக் குழு உறுப்பினருமான திரு. முகமது சகி அவர்கள் வேலூர் மக்கான் பகுதியில்  அமைந்துள்ள அம்பேத்கர் சிலைக்கு மாலை அணிவித்து பேரணியைத் துவக்கி வைத்தார்.

மாலை 5 மணிக்கு எழுச்சியோடு தொடங்கிய பேரணி முக்கிய சாலையைக் கடந்து தலைமை அஞ்சலகம்  அருகில் அமைந்துள்ள பெரியார் சிலையை வந்தடைந்தது. திரு. முகமது சகி அவர்கள்  பெரியார் சிலைக்கு மாலை அணிவித்த பிறகு ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

பெரியார் – லெனின் – அம்பேத்கர் சிலைகளை சேதப்படுத்திய இந்துத்துவக் கும்பலுக்கு எதிராக முழுக்கங்கள் எழுப்பட்டன.

இந்திய பொதுவுடமைக் கட்சியின் மாவட்டச் செயலாளர் தோழர் தேவதாஸ் அவர்களும், இந்திய பொதுவுடமைக் கட்சி (மார்சிஸ்ட்) யின் மாவட்டச் செயலாளர் தோழர் தயாநிதி அவர்களும்,  முன்னால் நாடாளுமன்ற-சட்ட மன்ற உறுப்பினரும் தி.மு.க சொத்து பாதுகாப்புக் குழு உறுப்பினருமான திரு. முகமது சகி அவர்களும் கண்டன உரையாற்றினர். இறுதியில் திராவிடர் கழக மாவட்டச் செயலாளர் தோழர் இளங்கோ அவர்கள் நன்றி கூற ஆர்ப்பாட்டம் முடித்துக் கொள்ளப்பட்டது.

இந்துத்துவ கும்பலுக்கு எதிராக அனைத்துக் கட்சிகள் சார்ப்பாக நடைபெற்ற இந்தப் பேரணியும் ஆர்ப்பாட்டமும் மக்களிடையே பெரும் வரவேற்பைப் பெற்றது.

இது தவிர மேற்கண்ட பிரச்சனை குறித்து மக்கள் கலை இலக்கியக் கழகம் சார்பில் 07.03.2018 புதன் கிழமை அன்று மாலை 5 மணி அளவில் பெரியார் சிலைக்கு மாலை அணிவித்து ஆர்ப்பாட்டம் நடத்தப்பட்டது. இந்த ஆர்ப்பாட்டத்தில் இந்திய புரட்சிகர மார்க்சிஸ்ட் கட்சியினரும் கலந்து கொண்டனர். தலைமை அஞ்சலகம் அருகிலிருந்து தோழர்கள் முழக்கமிட்டவாறு சென்றது மக்களிடையே பிரச்சாரமாக அமைந்தது. முன் அனுமதி இன்றி திடீரென இந்த ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

( படங்களைப் பெரிதாகப் பார்க்க அவற்றின் மீது அழுத்தவும் )

தகவல் :
மக்கள் கலை இலக்கியக் கழகம்
வேலூர்​.

விவாதியுங்கள்

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க