privacy

about us

write

contact

shop

புதிய ஜனநாயகம்

புதிய கலாச்சாரம்

e-books

Global Influence

Communication

Legal Agreement

முகப்புகளச்செய்திகள்போராட்டத்தில் நாங்கள்ரத யாத்திரையின் பெயரில் வரும் ரத்த யாத்திரை - சென்னையில் ஆர்ப்பாட்டம்

ரத யாத்திரையின் பெயரில் வரும் ரத்த யாத்திரை – சென்னையில் ஆர்ப்பாட்டம்

-

ந்துமதவெறிக்கு இழிபுகழ் பெற்ற விசுவ ஹிந்து பரிசத் தமிழகத்தில் ரத யாத்திரை மேற்கொள்வதைக் கண்டித்தும், புதுக்கோட்டையில் பெரியார் சிலை சேதப்படுத்தப்பட்டதைக் கண்டித்தும் சென்னை அண்ணாசாலையில் ஆர்ப்பாட்டம் நடந்தது. அண்ணா சிலை அருகே நேற்று (20.03.2018) மக்கள் கலை இலக்கியக் கழகம், புரட்சிகர மாணவர் இளைஞர் முன்னணி அமைப்புகளைச் சேர்ந்த தோழர்கள் கலந்து கொண்டனர்

ஆர்ப்பாட்டத்திற்கு புமாஇமு-வின் மாநில ஒருங்கிணைப்பாளர் தோழர் கணேசன் தலைமை தாங்கினார். தோழர்கள் அண்ணா சிலை நோக்கி பேரணியாகச் செல்லும் வழியில் போலீசால் தடுத்து நிறுத்தப்பட்டனர். இதனையடுத்து சாலை மறியலில் ஈடுபட்டனர்.

அங்கு திரண்டு வந்திருந்த பத்திரிக்கையாளர்களிடம் பேசிய  தோழர் கணேசன், “ தமிழகத்தில் இந்துமதவெறிக் கும்பல் காலூன்ற ரத யாத்திரை பெயரில் கலவரங்களை ஏற்படுத்த முயற்சிக்கிறது. அதற்கு எடப்பாடி ஓபிஎஸ் கும்பல் மறைமுக ஆதரவை அளித்து வருகிறது. தொடர்ந்து பெரியார் சிலைகள் தாக்கப்படுவதன் மூலமாக கலவரத்தை ஏற்படுத்த ஆர்.எஸ்.எஸ். கும்பல் முயற்சிக்கிறது. இதனைக் கண்டித்து இப்போராட்டத்தில் ஈடுபட்டுள்ளோம். தமிழகத்தில் ஆர்.எஸ்.எஸ். – பாஜக கும்பலைக் காலூன்ற விடமாட்டோம்.” என்று கூறினார்.

தோழர்களை சாலையிலிருந்து தரதரவென இழுத்துச் சென்று கைது செய்யத் தொடங்கியது போலீசு. கைது செய்து வண்டியில் ஏற்றும்போது ஒரு தோழர் கடுமையாகத் தாக்கப் பட்டிருக்கிறார். மேலும் ஒரு பெண் போலீசு பெண் தோழர் ஒருவரை மோசமாக திட்டி, தாக்கி கியுள்ளார். கைது செய்யப்பட்ட தோழர்கள் அருகில் உள்ள மண்டபத்திற்கு கொண்டு செல்லப்பட்டனர்.  அங்கே காவி பயங்கரவாதிகளை அம்பலப்படுத்தி மகஇக பாடல்கள் பாடப்பட்டன.

(படங்களைப் பெரிதாகப் பார்க்க அவற்றின் மீது அழுத்தவும்)

தகவல் :
புரட்சிகர மாணவர் இளைஞர் முன்னணி,
சென்னை

_________

பத்திரிக்கைச் செய்தி

20.03.2018

ர்.எஸ்.எஸ் ஆல் திட்டமிடப்பட்டு விஸ்வ இந்து பரிஷத் நடத்தும் ராமராஜ்ய யாத்திரை  மத மோதலை உருவாக்கும் தீய நோக்கங் கொண்டது என்பதை தமிழக மக்கள் நன்கறிவார்கள். ஆர்.எஸ்.எஸ் இன் நடவடிக்கைகள் கட்டுப்படுத்தப்பட்டு வந்த தமிழகத்தில் இப்போது முழு சுதந்திரத்துடன் நடைபோட எடப்பாடி அரசு  அதிகாரமளித்திருக்கிறது.1500க்கும் மேற்பட்ட போலீசுப்பாதுகாப்புடன் விஸ்வ இந்து பரிஷத்தின் இந்த யாத்திரைக்கு அனுமதியளித்திருக்கும் எடப்பாடி அரசு எதிர்ப்பு தெரிவிக்கும் உரிமைக்கு 144 தடைவிதித்திருக்கிறது. பல தலைவர்கள் , தொண்டர்களை கைது செய்திருக்கிறது. எடப்பாடி அரசின் இச்செயல் ஜனநாயக விரோதமானது மட்டுமல்ல, தமிழக மக்களுக்குச் செய்யும் மிகப்பெரிய துரோகமுமாகும். மக்கள் அதிகாரம் இதனை மிக வன்மையாகக்கண்டிக்கிறது.

இதே நேரத்தில் புதுக்கோட்டை மாவட்டம்  ஆலங்குடியில் தந்தை பெரியாரின் சிலையின் தலையைத்துண்டித்து வெறியாட்டம் போட்டுள்ளனர். ஆர்.எஸ்.எஸ் கும்பலைத்தவிர வேறு யாரும் பெரியார் சிலையை அவமதிக்கத்துணிய மாட்டார்கள்; கனவிலும் நினைக்கமாட்டார்கள்.ஆனால் எச். ராஜாவுக்கு எழுந்த எதிற்பிற்குப்பிறகும்  பெரியார் சிலையை செதப்படுத்தத் துணிகிறார்களென்றால் எடப்பாடி அரசின் எடுபிடித்தனம்தான் காரணம். ஆர்.எஸ்.எஸ் க்கு விலை போகும் எடப்பாடி அரசின் இந்த துரோகத்தைத் தமிழக மக்கள் மன்னிக்கவே மாட்டார்கள்.

எடப்பாடி அரசுக்கு தமிழகத்தை ஆள எந்த தார்மீக உரிமையும் இல்லை.எல்லா முனைகளிலும் தோற்றுப்போய் தேர்தகளிலும் மண்னைக் கவ்விவரும் பா.ஜ.க மதவெறியெனும் அபாயகரமான ஆயுதத்தைக் கையிலெடுத்திருக்கிறது. தமிழக மக்கள் மிக எச்சரிக்கையாக இருக்கவேண்டிய தருணமிது.  ஆர்.எஸ்.எஸ் ,வி.இ.ப முதலிய இந்து மதவெறி அமைப்புகள் முற்றாகத்தடை செய்யப்பட வேண்டும். பெரியாரின் சிலையை சேதப்படுத்தியவர்களை குண்டர் சட்டத்தில் கைது செய்ய வேண்டும். ஆர்.எஸ்.எஸ் பாஜ க இல்லாத தமிழகத்தை உருவாக்க அனைவரும் ஓரணியில் திரள்வோம்.

தங்கள்
காளியப்பன்,
மாநிலப்பொருளாளர்,

மக்கள் அதிகாரம்.

________________________

சென்னை சேத்துப்பட்டில் பெரியார் சிலையில் மை பூசிய இந்துமதவெறியர்கள்!

சென்னை சேத்துப்பட்டில் உள்ள பெரியார் சிலையில், யாரும் பார்க்காத சமயத்தில் மை பூசியுள்ளனர் காவிகள். இதனைக் கண்டித்து அப்பகுதி மக்கள் மத்தியில் மக்கள் கலை இலக்கியக் கழகத்தின் சார்பில் நேற்று (20.03.2018) பிரச்சாரம் செய்யப்பட்டது.

கூட்டத்தில் தமிழகத்தில் காவி வெறியர்களின் ஆதிக்கத்தை நிலைநாட்ட அடிமை எடப்பாடி அரசு ரத யாத்திரையை அனுமதிப்பதற்கு கண்டன முழக்கங்கள் எழுப்பப்பட்டன. பெரியார் சிலை உடைப்பு, பெரியார் பெயரின் மீது மை பூசுதல் போன்ற செயல்களைக் கோழைத்தனமாக இரவோடு இரவாக காவிக் கும்பல் செய்துவருவதைக் கண்டித்து முழக்கங்கள் எழுப்பப்பட்டன.

தகவல்:
மக்கள் கலை இலக்கியக் கழகம்,
சென்னை.

 

விவாதியுங்கள்

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க