தமிழக மக்களிடம் பார்ப்பனிய இந்துமதவெறியைப் பரப்புவதற்காக ஆர்.எஸ்.எஸ் – விசுவ இந்து பரிசத் – பாஜக கும்பல்கள் செய்யும் முயற்சியில் புதியது இந்த இரத யாத்திரை.
இந்த இர(த்)த யாத்திரைகள் இரத்தக் களறியின்றி முடிந்ததாக வரலாறு இல்லை. இந்துத்துவக் கும்பலின் ’ராம ராச்சிய’ இரகசியத்தை அம்பலப்படுத்துகிறார்கள் ம.க.இ.க கலைக்குழு தோழர்கள்.
பாருங்கள் பகிருங்கள் !
பாடல் வரிகள்
*********************
எலே எங்க வந்து நடத்துற ரத யாத்திரை – ராம
ராச்சியத்துக்கு இங்குதான்டா இறுதி யாத்திரை
உன் ராமராச்சியம் அதான் மோடி ராச்சியம் – நீ
ஆரியக் கூத்தாடினாலும் அழிவு நிச்சயம் !
செருப்பை வச்சி ஆண்ட கதை ராமா யணத்துல – மோடி
செருப்பு ரெண்டும் ஆளுது தமிழகத்துல
பொண்டாட்டிய ஒதுக்கி வச்சான் ராமாயணத்துல – ஒப்புரானே
அப்படியே பொருந்துது – நா மோடியை சொல்லலை !
சீதையை மீட்டானாம் ராமாயணம் – அது அவன் பொண்டாட்டி
நான் எதுக்கு கூத்தாடணும் -எங்க
காவிரியும் பெண்தான் அவள் வந்தாகணும் – கடத்தி
வச்சவனே நீதான் – நாங்கள் மீட்டாகணும் !
குஜராத்து மாடலுதான் ராமராச்சியம் – குடிக்க
தண்ணியில்லே, பள்ளியில்லே டோட்டல் பூச்சியம் – அது
அம்பானிக்கும் அதானிக்கும் சர்வமானியம்
அப்பாவி இந்து வாயில் மாட்டுக் கோமியம் !
சூத்திரன் சம்புகன் தவமிருந்தான் அன்று
அவனை கொன்றானே ராமன் மனுதர்மம் என்று
அக்லக், பெக்லு கான் வெமுலாக்கள் இன்று
மோடி ராச்சியத்தை புதைப்பதுதான் தேசத்துக்கே நன்று !
//பொண்டாட்டிய ஒதுக்கி வச்சான் ராமாயணத்துல – ஒப்புரானே
அப்படியே பொருந்துது //
This MODI and Raman – not even told single THALAAK-leave about MUTTHALAAK
ஏற்கனவே தோழர் கோவன் செருப்பால அடிச்சிருக்காரு! இப்போ சண்முகம் ஐயா வெளக்கமாத்தால அடிக்கிறாரு!!
அடிங்க.. அடிங்க… நீங்கள் எவ்வளவு அடிச்சாலும் தொடச்சுபோட்டுட்டு பிரஷ்சா வந்து நிப்பானுங்க சங்கிங்க…