privacy

about us

write

contact

shop

புதிய ஜனநாயகம்

புதிய கலாச்சாரம்

e-books

Global Influence

Communication

Legal Agreement

முகப்புகளச்செய்திகள்மக்கள் அதிகாரம்மோடி அரசிடமிருந்து காவிரியை மீட்போம் ! நாளை திருச்சி முற்றுகை !

மோடி அரசிடமிருந்து காவிரியை மீட்போம் ! நாளை திருச்சி முற்றுகை !

-

“கடைமடை வரை காவிரி நீர் பாயும் வரை டெல்லியுடன் ஒட்டும் இல்லை… உறவும் இல்லை…” என்ற முழக்கத்தின் கீழ் மக்கள் அதிகாரம் அமைப்பின் சார்பில் நாளை 24.03.2018 அன்று திருச்சி தலைமை தபால் நிலையத்தை முற்றுகையிட்டு பிரம்மாண்டமான போராட்டம் நடைபெற உள்ளது. அனைவரும் வருக!

குட்டக் குட்ட குனியாதே டெல்லிக்கு அடிபணியாதே !

 

நர்மதா, கோதாவரி, கிருஷ்ணாவுக்கு தீர்ப்பு வந்தவுடன் ஆணையம் !
பதினோரு ஆண்டுகள் ஆகியும் காவிரி மேலாண்மை வாரியம் மறுப்பு !
சமத்துவம் இல்லாத தேசிய ஒருமைப்பாடு எதற்கு?

 

‘இறுதித் தீர்ப்பு’ இதுதான்! எதிர்கால காவிரி கர்நாடகக் கழிவுகளின் கூவமாகும் ! தென்னிந்தியாவின் நெற்களஞ்சியம் நீர் வறண்ட பாலையாகும் ! காவிரி டெல்டாவைக் கடல் கொள்ளும்! நாட்டுக்கே சோறுபோட்ட உழவர்கள் அகதிகளாவர் ! தமிழகம், குடிநீர் இன்றி நா வறண்டு தவிக்கும் !

 

இரண்டாயிரம் ஆண்டுகளாய் கம்பீரமாய் நிற்கும் கல்லணை – காவிரியில் தமிழர்களின் உரிமைக்குச் சான்று ! நேற்று வந்த டெல்லி தமிழகத்தின் உரிமையைப் பறிக்க அனுமதிப்பதா?

 

தமிழர்களின் உணவுத் தன்னிறைவுக்கு 19 மாவட்டங்களின் குடிநீர் ஆதாரத்திற்கு பல லட்சம் உழவர்கள், விவசாயத் தொழிலாளர்களின் வீட்டில் அடுப்பு எரிய, காவிரி நீர் வர வேண்டும்.

 

தண்ணீரைப் பண்டமாக மாற்றி பன்னாட்டுக் கம்பெனிகளுக்கு ஆறுகளையும், நிலத்தடி நீரையும் தாரைவார்த்து, தாகத்தில் தவிப்பவனிடம் விலைபேசும் அபாயமான இந்த அரசியல் சூழலில், காவிரி நீர் பறிபோனால் தமிழகத்தின் எதிர்காலம் என்ன ஆகும்?

 

காவிரி மட்டுமா டெல்லி தாக்குதல், நீட் தேர்வு, கூடங்குளம் அணு உலை, கெயில் குழார் பதிப்பு, ஸ்டெர்லைட் ஆலை, நியூட்ரினோ, சாகர் மாலா திட்டங்கள்… என கொத்துக் குண்டுகள் தமிழினத்தின் மீது டெல்லியால் வீசப்படுகின்றன.

தமிழனா? இந்தியனா? முடிவு செய்வோம்!

 

டெல்லியை நம்பி, நம்பி தமிழன் சாக வேண்டுமா?
கருகிய பயிரால் விவசாயிகள் பலி! ஒக்கி புயலுக்கும், துப்பாக்கி சூட்டிற்கும் மீனவர்கள் பலி!
நீட் தேர்வால் மாணவி அனிதா பலி! மீத்தேன், ஹைட்ரோ கார்பன் திட்டத்திற்கு டெல்டா விவசாயமே பலி !

 

கருவறையில் தமிழுக்கு தீட்டு ! நீதிமன்றத்தில் தமிழுக்கு இடமில்லை! காவிரியில் இனி உனக்கு தண்ணீர் இல்லை ! ஏனென்றால் நீ… தமிழன்!

 

கர்நாடகத் தேர்தலுக்காக அரங்கேறும் வஞ்சகம் மட்டுமல்ல, காவிரித் தீர்ப்பு ! இது, திராவிட மரபு – தமிழினத்தின் மீது பார்ப்பன பாசிசம் கக்குகின்ற வெறுப்பு !

 

தமிழினத்தின் மீதான தாக்குதலை முறியடிக்க டெல்லிக்கு எதிராக தமிழகம் போர்க்களமாகட்டும் ! ஜல்லிக்கட்டுக்கு திரண்ட தமிழகம், காவிரிக்கு வெடித்துக் கிளம்பட்டும்!

மேலும் படங்கள் :

( படங்களைப் பெரிதாகப் பார்க்க அவற்றின் மீது அழுத்தவும் )

*****

க்கள் அதிகாரம் அமைப்பின் சார்பில் காவிரிப் பிரச்சினையயொட்டி திருச்சியில் நடைபெறவுள்ள தபால் நிலைய முற்றுகையையொட்டி கரூர் பகுதியில் எழுதப்பட்டுள்ள சுவரெழுத்து…

( படங்களைப் பெரிதாகப் பார்க்க அவற்றின் மீது அழுத்தவும் )

 

விவாதியுங்கள்

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க