கார்ல் மார்க்ஸ் – முதலாளித்துவவாதிகளின் அடிவயிற்றில் புளியைக் கரைக்கும் பெயர், அவர்களால் தவிர்க்கமுடியாத பெயரும் கூட. பொருளாதார மந்தம் ஏற்பட்டு 10 ஆண்டுகளுக்குப் பின்னரும் சர்வதேச சந்தை, வீழ்ச்சியில் இருந்து எழ முடியாமல் தத்தளித்து வருகிறது. முதலாளித்துவ அறிஞர்கள் பல்வேறு வழிமுறைகளைப் பின்பற்றியும் வீழ்ந்த பொருளாதாரத்தை மீட்டெடுக்க பல்வேறு முயற்சிகளில் ஈடுபட்டு வருகின்றனர்.
ஆனால் எவையும் கவைக்குதவவில்லை. இந்த முதலாளித்துவ நெருக்கடிக்கான காரணத்தை அறிந்து கொள்ள அவர்கள் தவிர்க்க முடியாமல், கார்ல் மார்க்சிடம் வரவேண்டியது இருக்கிறது. அதனை பெரும்பான்மை முதலாளித்துவ அறிஞர்களே ஏற்றுக் கொள்கின்றனர். இந்த காணொளி, வரலாற்றில் மார்க்சின் பங்களுப்பையும், முதலாளித்துவம் குறித்த அவரது கண்ணோட்டத்தையும் உங்களுக்கு அறியத் தருகிறது. பாருங்கள் ! பகிருங்கள் !
மாமனிதன் மார்க்ஸ் பார்ப்பனிய இந்தியாவிற்கு “அரக்கன்” தான்.
இப்படி அவரை அழைக்கும் தன்மை தான்,வினவு மற்ற இடதுசாரி தரப்பினரிடம் இருந்து வேறுபட்டு தெரிகிறது!