privacy

about us

write

contact

shop

புதிய ஜனநாயகம்

புதிய கலாச்சாரம்

e-books

Global Influence

Communication

Legal Agreement

முகப்புஇதரபுகைப்படக் கட்டுரைஇந்தியா யாரு நம்மள கட்டுப்படுத்த ? மக்கள் கருத்து - படங்கள் !

இந்தியா யாரு நம்மள கட்டுப்படுத்த ? மக்கள் கருத்து – படங்கள் !

-

காவிரி மேலாண்மை வாரியம் அமைக்காத டெல்லி மோடி அரசுக்கு எதிராக திரண்டெழுந்த தமிழகம். சென்னை கோயம்பேட்டில் மக்கள் கருத்து:

சென்னை கோயம்பேடு மைய பேருந்து நிலையம்,  பிரிபெய்டு ஆட்டோ நிறுத்தம்.

அங்கு 430-க்கும் மேற்பட்ட ஆட்டோக்கள் வேலைநிறுத்தத்தில் பங்கெடுத்தக் காட்சி.

சுரேஷ், சந்திரபோஸ், மாசிலாமணி, பொன்னுசாமி ஆட்டோ ஓட்டுநர்கள்:

விவசாயிகளுக்கு வாழ்வாதாரமே போய்விட்ட பிறகு ஒரு நாள் போராட்டம் பண்ணுறது பெரிய விசயம் இல்லை. மோடி அரசுக்கு காது கேக்காது என்பது எங்களுக்குத் தெரியும். இதோட விடமாட்டோம். எச்.ராஜா, தமிழிசை தமிழருங்கன்னு சொல்றதுக்கே எங்களுக்கு வெட்கமா இருக்கு.

சசிக்குமார், அரசு பேருந்து நடத்துனர்.

காவிரி போராட்டத்துக்கு ஆதரவு கொடுக்கணுங்கறதுல எங்களுக்கும் ஆசைதான். ஆனால், ஏற்கெனவே நாங்க போராடுனப்ப 8 நாளு சம்பளம் புடிச்சிட்டாங்க. அதைப் பத்தி யாரும் வாய் திறக்கல.நேத்துகூட யாரும் லீவு எடுக்கக் கூடாதுன்னு வாய்வழி உத்தரவு போட்டாங்க. அப்படி லீவு எடுத்தா சம்பளம், இன்கிரிமென்ட் கட் பண்ணுவோமுன்னு அதிகாரிங்க சொல்றாங்க. என்ன பண்ணுறது. ஆனா, பயணிங்க இல்லாமதான் வண்டி ஓட்டுறோம்.

சாய், அரவிந்த் – சென்னை மீனாட்சி  பொறியியல் கல்லூரி மாணவர்கள்.

போராட  வேணான்னு பி.ஜே.பி காரங்க சொல்றது ரொம்ப தப்பு. போராடும் போதே நம்ம பிரச்சினையை காதுல வாங்க மாட்டேங்குறாங்க. இந்த மாதிரி போராட்டம் பண்ணலேன்னா மத்திய பி.ஜே.பி அரசு  அப்படியே ஆஃப் பண்ணிருவாங்க.

நாகராஜ், சுந்தர் – தச்சு தொழிலாளிகள்.

விவசாயிகள் போராட்டத்துக்கு உண்ணாவிரதம் இருக்குறோமுன்னு அ.தி.மு.க காரங்க ஏமாத்துனாங்க. நிறைய எம்.பி.க்களை கையில வச்சிக்கிறவங்க மோடியை பணிய வைக்க முடியாதா? இவ்வளவு நாளா விவசாயிங்கள பாக்கக் கூட மோடிக்கு நேரமில்ல! அவரு வந்து இந்தப் பிரச்சினையை தீர்த்திடுவாருன்னு எப்படி நம்பச் சொல்றாங்க?

தமிழ்நாட்டுக்கு இது வாழ்வா சாவா பிரச்சினை. அண்ணா தி.மு.க. கட்சித் தலைவனுங்கல்லாம் பதவியை காப்பாத்திக்கிறதுக்குதான் இருக்குறாங்க. நாம போராடுறதுதான் சரியான வழி.

மழுவேந்தி, அண்ணாதுரை – தி.மு.க தொழிற்சங்கம்.

அண்ணா தி.மு.க. காரங்க உண்ணாவிரதம் இருக்குறோமுன்னு உப்புசப்பில்லாத பிரச்சினையா ஆக்கிட்டாங்க. ஆனால், மக்கள் போராட்டத்தால்தான் பிரச்சினையே வெளியே வந்திருக்கு. இதபாருங்க ரெகுலரா ஒரு ட்ரிப்புக்கு 800 ரூபாயிலிருந்து 1000 ரூபாய் வரைக்கும் கலெக்சன் ஆகும். ஆனால், இன்னிக்கு 200 ரூபாய்தான் வந்திருக்கு. நாங்க பயந்துகிட்டே வேலைக்கு வந்திருக்கோம். ஜனங்க பயப்படாம போராடிகிட்டுதான் இருக்காங்க.

சாஜன், அரசுப் பேருந்து நடத்துனர்.

ஜல்லிக்கட்டு போராட்டம் மாதிரி ஜனங்களெல்லாம் சேர்ந்தா நாங்களும் வந்துதான் ஆகணும்.

நவீன், சுடலைக்குமார், மருந்து விற்பனை பிரதிநிதிகள்.

நீட், காவிரி, ஸ்டெர்லைட், நியூட்ரினோ – இப்படி எந்த பிரச்சினையையும் மத்திய அரசு தீர்க்கல. இந்தியா யாரு நம்மள கட்டுப்படுத்த? நம்ம பிரச்சினைய நாமளே பாத்துக்கலாம். தமிழ்நாடு தனியா போறது தப்பில்ல.

வெறிச்சோடி கிடக்கும் கோயம்பேடு மார்கெட் சாலை.

நேர்காணல், படங்கள்: வினவு செய்தியாளர்கள்

விவாதியுங்கள்

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க