‘’காவிரியை மீட்க கிராமங்கள் தோறும் கிளர்ந்தெழுவோம்’’ என்ற முழக்கத்தை முன்வைத்து, காஞ்சிபுரம் மாவட்டம் மதுராந்தகத்தில் உள்ள சிறுநகர், சிறுகலத்தூர், கல்பட்டு உள்ளிட்ட கிராமங்களில் தொடர் பிரச்சார இயக்கத்தை மேற்கொண்ட புரட்சிகர மாணவர் – இளைஞர் முன்னணியினர், அப்பகுதி மக்களை அணிதிரட்டி கடந்த 8.04.18 அன்று, சித்தாமுர் நான்கு வழிசாலை சந்திப்பில் கண்டன ஆர்ப்பாட்டத்தை நடத்தினர்.

இதற்கு முன்னதாக, மக்கள் நடமாட்டம் மிகுந்த கடைவீதி வழியே பேரணியாகச் சென்றனர். பேரணியில், உணர்வுப் பூர்வமாகப் பங்கேற்ற பெண்களும் குழந்தைகளும் காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க வலியுறுத்தியும், பி.ஜே.பி., ஆர்.எஸ்.எஸ். கும்பலுக்கு எதிராகவும் கண்டன முழக்கங்களை எழுப்பினர். ‘’தமிழகத்தை மீண்டும் மெரினாவாக்குவோம்’’ என்றும் சூளுரைத்தனர்.

தகவல் :
புரட்சிகர மாணவர்-இளைஞர் முன்னணி,
சிறுநகர், தொடர்புக்கு : 94451 12675.

*****

காவிரி : தன்னுரிமை கேட்டால் காவிரி உரிமை வரும் !

“காவிரியை தடுக்கும் டெல்லியின் அதிகாரத்தை முடக்கு !” என்ற முழக்கத்தின் கீழ் மக்கள் அதிகாரம் அமைப்பின் சார்பில் 09.04.2018 அன்று காலை திருச்சி லால்குடியில் ரயில் மறியல் போராட்டம் நடத்தப்பட்டது.

( படங்களைப் பெரிதாகப் பார்க்க அவற்றின் மீது அழுத்தவும் )

தகவல் :
மக்கள் அதிகாரம்,
திருச்சி, தொடர்புக்கு – 94454 75157, 95979 12822.

விவாதியுங்கள்

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க