ஆன்லைன் ரம்மி தடை சட்டம் மீதான அநீதித் தீர்ப்பு!
ஒரு மாநில அரசு தன்னுடைய மக்களுக்காக கொண்டு வரும் திட்டங்களை அச்சட்டத்தின் நலனிலிருந்து பார்க்காமல், அச்சட்டத்தின் தேவைகளில் இருந்து பார்க்காமல் வழங்கப்பட்ட தீர்ப்பு தமிழ்நாட்டு மக்களுக்கு இழைக்கப்பட்ட மாபெரும் அநீதியாகும்.
மானாமதுரை பேருந்து நிறுத்தம்: மக்களை அலையவிடும் அதிகார வர்க்கம்!
மக்கள் பாதிக்கப்படுகிறார்கள் எனக் கேட்டால் மாதக்கணக்கில் அலையவிடும் இந்த அதிகாரிகள், பணம் படைத்தவர்களிடமும் கார்ப்பரேட்டுகளிடமும் எப்படி வாலாட்டுகிறார்கள் என்பதை நாம் தினமும் பார்த்துதான் வருகிறோம்.
கொட்டும் மழையிலும் “FREE PALESTINE” | பேரணி | சென்னை
உழைக்கும் வர்க்கம், நடுத்தரவர்க்கம், மேல் தட்டு நடுத்தர வர்க்கம் என அனைவரும் ஒரே குரலில் முழங்கினார்கள் "SAVE PALESTINE" என்று.
கோவை: சைதன்யா பள்ளியை அரசுடைமையாக்கு!
சின்மயா (மிதுன் சக்ரவர்த்தி), கலாச்சேத்ரா (ஹரி பத்மநாதன்), பத்ம சேசாத்ரி(சிவசங்கர் பாபா) என தனியார் பள்ளிகளின் பாலியல் சுரண்டல் தொடர்ந்து கொண்டே தான் போகிறது. கார்ப்பரேட் கும்பல்களும், சாமியார் கும்பல்களும் தனியார் கல்வி நிறுவனங்களை நடத்தி மாணவிகள் மீது பாலியல் சுரண்டலை அரங்கேற்றி வருகின்றனர்.
இடைநிலை – பகுதிநேர ஆசிரியர்கள் போராட்டத்தை ஆதரிப்போம்!
ஆசிரியர்கள் போராட்டம் என்பது திமுக அரசு தங்களுக்குக் கொடுத்த தேர்தல் வாக்குறுதியை நிறைவேற்றவில்லை என்ற அடிப்படையில் தான் முன்னெடுக்கப்படுகிறது என்பதை நாம் கவனத்தில் கொள்ள வேண்டும்.
ஐ ஜாலி ஸ்கூலுக்கு போ.. போறோம் | கள அனுபவம்
எனது இருசக்கர வாகனத்தில் இருந்து இறங்கிய இரு சிறுவர்களில் ஒருவன் "ஐ ஜாலி ஸ்கூலுக்கு போ.. போறோம்" என்று சொல்லி வண்டியில் இருந்து குதித்தான். இதோ அடுத்தநாள் பள்ளியில் மகிழ்ச்சியாக காலை உணவு அருந்தி கொண்டிருக்கிறார்கள்.. அந்தத் தாயும் அளவில்லா மகிழ்ச்சியில் எனக்கு நன்றி சொன்னார்.
பாலஸ்தீன மக்களுக்கு துணை நிற்போம்! | STAND WITH PALASTINE PEOPLE!
இது நாள் வரை பாலஸ்தீன மக்களுக்கு எதிராக இல்லாமல் இருந்த இந்திய அரசு, தற்பொழுது இஸ்ரேலுக்கு பகிரங்கமாக தன்னுடைய ஆதரவை தெரிவித்திருக்கிறது. பாசிச மோடி தலைமையிலான ஆட்சி பாசிஸ்ட் நெதன்யாகுவுக்கு ஆதரவு தெரிவிப்பது எவ்வித ஆச்சரியமும் இல்லை.
பாலஸ்தீனம் மீதான இஸ்ரேலின் பயங்கரவாத தாக்குதல்; போரை உடனே நிறுத்து!
இஸ்ரேல் ஆக்கிரமிப்பு போரை பல ஆண்டுகளாக தொடர்ந்து நடத்தி வருகிறது. தற்போதும் அதன் தொடர்ச்சியாகவே தாக்குதலை தொடுத்துள்ளது. எனவே, குற்றவாளி இஸ்ரேல்தான்.
“நியூஸ்கிளிக்” மீதான அடக்குமுறை: பத்திரிகையாளர்கள் கண்டன ஆர்ப்பாட்டம்!
இன்று (07-10-2023) நியூஸ்கிளிக் செய்தி நிறுவனத்தின் மீதான பாசிச அடக்குமுறைக்கு எதிர்ப்பு தெரிவித்து, “நெட்வொர்க் ஆப் விமன் இன் மீடியா – இந்தியா” (Network of Women in Media – India -NWMI) சார்பில் சென்னை பத்திரிகையாளர் மன்றத்தில் கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தப்பட்டது.
ஆசிரியர்களின் கோரிக்கையை நிறைவேற்றாமல் கைதுசெய்த தமிழ்நாடு அரசு!
சம வேலைக்கு சம ஊதியம், ஆசிரியர் என்ற தகுதி ஆகிய கோரிக்கைகளை வலியுறுத்தி நிகழ் காலத்தில் ஆசிரியர்கள் போராடி வருகிறார்கள். தமிழ்நாடு அரசோ நீங்கள் எல்லாம் செத்த பிறகு ரூ 10 லட்சம் கிடைக்கும் என்று ஆசை வார்த்தை கூறுகிறது.
தெலுங்கானா உரை: மோடி பிரதமரல்ல பிரிவினைவாதி!
தொடர்ந்து தமிழ்நாட்டின் மீதும் தமிழ்நாட்டு மக்களின் மீதும் வெறுப்பு பேச்சை உமிழக்கூடிய இந்த நாட்டின் பிரதமராக சொல்லிக் கொள்கின்ற நரேந்திர மோடி இந்த நாட்டின் மிகப்பெரிய பிரிவினைவாதியாக தன்னை நிரூபித்து இருக்கிறார். அவர் மீது உச்ச நீதிமன்றம் தானாக முன்வந்து வழக்கு பதிவு செய்ய வேண்டும். இந்த நாட்டின் பிரதமராக நீடிப்பதற்கு நரேந்திர மோடிக்கு இனியும் தகுதி இல்லை என்பதே உண்மை.
காவிரி – கர்நாடகா பந்த்: பாசிச பாஜகவை தடைசெய்!
காவிரி ஒழுங்காற்று ஆணையம், உச்ச நீதிமன்றம் என யார் உத்தரவிட்டாலும் கட்டுப்பட மாட்டோம் என்று கொக்கரிக்கிறார்கள் இன வெறியர்கள் .காவிரி பிரச்சனை வரும்போதெல்லாம் கர்நாடக வாழ் தமிழர்கள் பலியாடாக்கப்படுவது போல இப்போதும் பலியாடாக்கப்படுகிறார்கள்.இதனை மக்கள் அதிகாரம் வன்மையாக கண்டிக்கிறது.
தே.ஜ.கூ-வில் இருந்து அதிமுக விலகல்! பாசிச மோடி அரசை பாதுகாக்கும் மற்றொரு நாடகம்!
தமிழ்நாட்டில் பாரதிய ஜனதா கட்சியுடன் சேர்ந்தால் நாடாளுமன்றத்தில் ஒரு இடத்தில் கூட வெல்ல முடியாது என்ற ஒரு சூழல், மோடி அமித்ஷா பாசிச கும்பல் மீது தமிழ்நாட்டில் உள்ள மக்களுக்கு ஏற்பட்டுள்ள அதிருப்தி, இவற்றில் இருந்து மக்களை திசை திருப்பவும் மோடி அரசைக் காப்பாற்றவும் அதிமுக - பாஜக மோதல் திட்டமிட்ட நாடகமாக அரங்கேற்றப்பட்டு இருக்கிறது.
உளுந்தூர்பேட்டை: விநாயகர் சிலையை வைத்து கலவரம் செய்ய முயன்ற பிஜேபி – ஆர்எஸ்எஸ் குண்டர்கள்
கலவரத்தை தூண்டும் வகையில் செயல்பட்ட பிஜேபி – ஆர்எஸ்எஸ் கும்பலை சேர்ந்தவர்களைக் கைது செய்ய வலியுறுத்தி எலவனசூர்கோட்டை போலீசு நிலையத்தில் வி.சி.க மாவட்டச் செயலாளர் அறிவரக்கரசு தலைமையில் முற்றுகை போராட்டம் நடத்தப்பட்டது. அதன் பின்னர் காவிகளின் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டது.
தமிழ்நாட்டில் அதிகரித்து வரும் காவி குண்டர்களின் அட்டூழியம்!
தோழர்களை சுற்றி வளைத்த 15-க்கும் மேற்பட்ட காவி குண்டர்கள் போலீசின் முன்னிலையிலேயே தோழர்களின் பையை பிடித்திழுத்தது, தோழர்களின் கையிலிருந்த பிரசுரங்களை பிடுங்கி கிழித்து போட்டதோடு, ஆபாச வார்த்தைகளால் திட்டி தோழரை தாக்கி ரௌடித்தனத்தில் ஈடுபட்டனர்.