privacy

about us

write

contact

shop

புதிய ஜனநாயகம்

புதிய கலாச்சாரம்

e-books

Global Influence

Communication

Legal Agreement

முகப்புஉலகம்ஈழம்வினவு கருத்துப்படத்திற்காக 5 தோழர்கள் கைது !

வினவு கருத்துப்படத்திற்காக 5 தோழர்கள் கைது !

-

tamilnadu-police

சென்னைக்கு அருகே இருக்கும் பொன்னேரி என்ற ஊரில் புதிய ஜனநாயகத் தொழிலாளர் முன்னணியைச் சேர்ந்த தோழர்கள் 20 பேர் ஈழத்திற்காகவும், உயர்நீதிமன்றத்தில் வழக்குரைஞர்களை தாக்கிய போலீசின் காட்டுமிராண்டித்தனத்தைக் கண்டித்தும் கடந்த வெள்ளிக் கிழமை 20.02.09 அன்று தெருமுனைப் பிரச்சாரம் செய்து கொண்டிருந்தார்கள். அதில் வினவில் வந்த “போலீசு மக்கள் மோதலல்ல, ஈழத்திற்கு எதிராக பார்ப்பன பாசிச பேயாட்டம்!” என்ற கட்டுரைக்காக வெளியிடப்பட்ட போலீசின் வெறிக்குப் பொருத்தமாக ஓநாயாக சித்தரித்த கருத்துப்படத்தை டிஜிட்டல் பேனரில் பெரிதாக பிடித்தவாறு தோழர்கள் பிரச்சாரத்தை தொடர்ந்தார்கள்.

இந்தப் பிரச்சாரத்தைக் கேள்விப்பட்ட பொன்னேரி போலீசு சம்பவம் நடந்த இடத்திற்கு வந்து தங்களது ஒநாய் படத்தைப் பார்த்து கோபம் கொண்டது. வலுக்கட்டாயமாக தோழர்களின் பிரச்சாரத்தை நிறுத்திய போலீசு அவர்கள் வைத்திருந்த மெகாபோன், டிஜிட்டல் படம், பேனர் எல்லாவற்றையும் பிடுங்கிக்கொண்டு முன்னணியாக இருந்த ஐந்து தோழர்களை கைது செய்து போலீசு நிலையத்திற்கு கொண்டு சென்றது. பின்னர் “கூட்டம் கூடி கலகம் விளைவித்தல், அரசிற்கு எதிராக கலகம் செயதல், பொது அமைதிக்கு பங்கம் விளைவித்தல்” இன்னும் பிணையில் வரமுடியாத அளவிற்கு பல பிரிவுகளில் வழக்கு போடப்பட்டு நீதிபதியின் முன்னால் ஆஜர் படுத்தி சென்னை புழல் சிறையில் தோழர்கள் அடைக்கப்பட்டார்கள்.

வழக்குறைஞர்களின் போராட்டம் நடைபெறுவதால் நீதிமன்றங்கள் செயல்படாத நிலையில் போலீசு தந்திரமாக தோழர்களை கடும் பிரிவுகளில் வழக்கு போட்டு சிறையில் அடைத்திருக்கிறது. இதைப்பற்றி விசாரிக்கச் சென்ற மனித உரிமை பாதுகாப்பு மையத்தின் வழக்குரைஞர்களையும் போன்னேரி போலீசு திமிருடன் நடத்தியிருக்கிறது. “உயர்நீதிமன்றத்திலேயே வழக்குரைஞர்களை அடித்து நொறுக்கி விட்டோம் பொன்னேரியில் என்ன செய்யமுடியும்?” என்ற திமிர்தான். அடுத்து இந்தக் கருத்துப் படம் போலீசின் கோபத்தைக் கிளப்பியிருக்கிறது என்றால் அந்த முட்டாள் போலீசு இந்தப் படத்தை யார் வரைந்து வெளியிட்டார்கள் என்று விசாரித்து வினவு மீது வழக்கு போடட்டும். இந்தப் படத்தை வைத்து பிரச்சாரம் செய்த அந்த தோழர்களை ஏன் கைது செய்யவேண்டும்?

மற்றபடி வினவின் கருத்துப்படத்தை வைத்து பிரச்சாரம் செய்யும் தோழர்கள் போலீசுடன் பிரச்சினை வந்தால் இதை வெளியிட்டது வினவு என்று எங்களது தொலைபேசி எண்ணைக் கொடுக்கவும். இத்தகைய பிரச்சினைகளை நாங்கள் சட்டரீதீயாக எதிர்கொள்கிறோம். வினவு ஒன்றும் தலைமறைவாக தளம் நடத்தவில்லை. போலீசு ஓநாய்களைப் பற்றி தொடர்ந்து மிகச்சரியான விதத்தில் படங்களை வெளியிடுவோம். அதை எங்களது தோழர்கள் தமிழ்நாடு முழுவதும் பயன்படுத்துவார்கள். போலீசு இதை வெறியுடன் தடுப்பதற்கு முயன்றால் மக்கள் ஆதரவுடன் முறியடிப்போம். அடக்குமுறைகளுக்கு அஞ்சமாட்டோம்.

மற்றபடி சு.சுவாமி மீது முட்டை வீசியதால் கருத்துரிமைக்கு ஆபத்து வந்துள்ளதாக புலம்புவர்களுக்கு இந்த செய்தியை காணிக்கையாக்குகிறோம்.

போலிசு ஒநாய்களை வெறுப்பேற்றிய அந்தப் படத்தை இங்கே மீண்டும் வெளியிடுகிறோம்.

chennai-police-lawer

 

  1. //மற்றபடி சு.சுவாமி மீது முட்டை வீசியதால் கருத்துரிமைக்கு ஆபத்து வந்துள்ளதாக புலம்புவர்களுக்கு இந்த செய்தியை காணிக்கையாக்குகிறோம்.//

    ஆர்.வி போன்ற ஆட்களுக்கு சரியான பதிலடி……..

    போலீசு நாய்களின் காட்டுமிராண்டித் தனம் இன்னும் பலமாக அம்பலப்பட வேண்டும்….

    பு.ஜ.தொ. மு தோழர்கள் பணி தொடர வாழ்த்துக்கள்….

  2. போலீஸ் ஓநாய்கள் தங்களின் இயல்பை உறுதிப் படுத்திகொண்டுள்ளனர். இந்த ஜென்மங்கள் எல்லாம் திருந்த வாய்ப்பே இல்லை.

  3. காவல்துறைக்கு இனையாக பேயாட்டம் ஆடிய வக்கீல்களுக்கும் ஓநாயகளின் முகமூடி பொருந்தும்.. அதை போட மனது வராதது ஏன்?

    மக இக , புஜ இ க விற்கு எந்த பக்கம் தவறிருந்தாலும் போலீஸ் மீது குற்றம்சாட்டிட வேண்டும் என்ற எண்ணமே மேலோங்கியிருப்பதாலா??

    காவல்துறை ஓநாய் என்றால், அதற்கு சளைத்ததல்ல வக்கீல் விச ஓநாய்கள்

  4. அரசுக்கு எதிராக கோஷம் போட்டால் அரசிற்கு எதிராக கலகம் செய்கிறார்கள் என்று கைதா? ஒரு எதிர்கட்சிகாரன் கூட தெருவில் நடமாட முடியாதே? இப்படியும் ஒரு சட்டம் இருக்கிறதா? இதற்கு கெட்ட கேடு ஜாமீன் கூட கிடையாதா? நாமெல்லாம் ஜனநாயக நாட்டில்தான் இருக்கிறோமா?

    நம்ப முடியாத அநியாயமாக இருக்கிறதே! என்ன வேண்டுமானாலும் உளற கருத்து சுதந்திரம் வேண்டும் என்று வாதாடுபவன் நான் – இந்த புதிய ஜனநாயக முன்னணி உறுப்பினர்களுக்கு இழக்கப்பட்டிருக்கும் அநீதியை வன்மையாக கண்டிக்கிறேன்.

    அரசை எதிர்த்து கோஷம் போட்டால் ஜாமீன் கூட கிடைக்காத சிறை தண்டனை என்பது மிக அதிர்ச்சியாக இருக்கிறது. அப்படி என்ன சட்டம்? யாராவது சட்டம் தெரிந்தவர்கள் விளக்க முடியுமா?

    பின்குறிப்பு: வேறு பல மறுமொழிகளை படிக்காதவர்களுக்கு – பானரில் எழுதப்பட்டிருப்பது எனக்கு இசைவான கருத்து அல்ல.

  5. வினோத்,

    வினவு சொல்வது உங்களுக்கு தவறாக படலாம். நீங்கள் தாராளமாக வக்கீல்களுக்கு ஓநாய் என்ன, கரடி, சிங்கம், புலி, டைனோசார் முகமூடி போட்டு ஒரு கார்ட்டூனை உருவாக்கி பதியுங்கள்.

    ஆனால் ஒரு கார்ட்டுனுக்காக ஜாமீனில் கூட வெளி வராதபடி கைது என்பது அநியாயம். அதை கண்டிக்க மறவாதீர்கள்.

  6. ஆர்.வி,
    போலீசு மட்டுமல்ல சு சாமி, ஜெ, கலைஞர், இராணுவம், அம்பானி, மணிரத்னம், நீதிமன்றம், கோக், என்ரான், அனுபவ், இரால் பண்னை, ஸ்ரீரங்கநாதன், தில்லை நடராஜன், என இந்த ஆளும் வர்க்கத்தின் அங்கமாகிப்போன எதைப்ற்றி கோஷம் போட்டாலும். கைது,
    அடக்குமுறை. இதுதான் இந்திய ஜனநாயகம்.
    இன்று போலீசு நிலையத்தில் இவர்களின் கருத்துஉரிமை குன்டான்தடியால் நசுக்கப்படும்.
    அடிபட்ட மக்கள் அடுத்தமுறை போலீசை கருத்தால் மட்டுமே எதிர்கொள்ள முடியுமா?

  7. அதிர்ச்சியான செய்தி தோழர். கருத்துப்படத்திற்கு இவ்வளவு அடக்குமுறை என்றால்……

    “கேடுகெட்ட தமிழக அரசே” எங்கள் அமைப்பு சில மாதங்களுக்கு முன்பு விசாரணை செய்யும்படி கோரியிருந்த சம்பவம் என்னாயிற்று?

    ´ இலக்கியவாதிகளும், தீவிரவாதமும்! தமிழக அரசே விசாரணை நடத்து!

    http://tamizachi.com/index.php?page=echoarticle&rubrique=01&article=257

    அதற்கு நீங்கள் என்ன பதில் சொல்லி இருந்தீர்கள்? ஓட்டுப் பொறுக்கிகளின் அரசியல் லட்சணம் இதுதானா?

  8. //அடிபட்ட மக்கள் அடுத்தமுறை போலீசை கருத்தால் மட்டுமே எதிர்கொள்ள முடியுமா?//

    good question!

  9. இதிலென்னங்க அதிர்ச்சி,

    ஆடு மாடு மேய்க்கப்போனவங்க எல்லாம் தீவிரவாதின்னு சுட்டுக்கொல்லுற இந்த சனநாயகத்துல
    இது வரைக்கும் எத்தனயோ முறை புஜ தோழர்கள் மீது பாசிசத்தின் அடக்குமுறை ஏவப்பட்டிருக்கிறது,
    இன்னாள் வரை அதை எதி கொண்டு களத்தில் நிற்பது புரட்சிகர அமைப்பின் தோழர்கள் மட்டுமே,சாதிவெறிக்கு எதிராக,ரவுடியிசத்துக்கெதிராக தோழர்கள் உயிரை
    இழந்திருக்கிறார்கள்.

    மாமேதை மார்க்ஸ் சொன்னது போல முதலாளித்துவம் மட்டுமல்ல பாசிசமும் போலிகளும் தனக்கு சவக்குழியை தானே தோண்டிக்கொள்ளுகிறார்கள் மக்கள் இப்படிப்பட்ட செயல்களால் தான் புரட்சியை நோக்கி தானே உந்தி தள்ளப்பபடுவார்கள்.

  10. //ஆடு மாடு மேய்க்கப்போனவங்க எல்லாம் தீவிரவாதின்னு சுட்டுக்கொல்லுற இந்த சனநாயகத்துல
    இது வரைக்கும் எத்தனயோ முறை புஜ தோழர்கள் மீது பாசிசத்தின் அடக்குமுறை ஏவப்பட்டிருக்கிறது,
    இன்னாள் வரை அதை எதி கொண்டு களத்தில் நிற்பது புரட்சிகர அமைப்பின் தோழர்கள் மட்டுமே,சாதிவெறிக்கு எதிராக,ரவுடியிசத்துக்கெதிராக தோழர்கள் உயிரை
    இழந்திருக்கிறார்கள்.

    மாமேதை மார்க்ஸ் சொன்னது போல முதலாளித்துவம் மட்டுமல்ல பாசிசமும் போலிகளும் தனக்கு சவக்குழியை தானே தோண்டிக்கொள்ளுகிறார்கள் மக்கள் இப்படிப்பட்ட செயல்களால் தான் புரட்சியை நோக்கி தானே உந்தி தள்ளப்பபடுவார்கள்.//

    சரியான பார்வை

  11. தாட்ஸ் தமிழில் ஒருவரது பின்னூட்டம்:
    http://thatstamil.oneindia.in/news/2009/02/24/tn-lawyers-reject-duraimurugans-call-for-talks.html#cmntTop

    //நினைத்தால் அடி தடி, துப்பாக்கி சூடு, பொது கூட்டங்களுக்கு, ஆர்ப்பாட்டங்களுக்கு தடை என அனைத்து மனித உரிமை மீறல்களும் காவல் துறையால் சாதாரண மக்களுக்கு இதுவரை நடத்தப்பட்டது..ஆனால் இன்று சட்டத்தின் பாதுகாவலர்கள் என்று கருதப்படும் நீதிபதிகள், வழக்குரைங்கர்கள் நீதி மன்ற வளாகத்திற்குள்ளேயே தாக்கப்படுகிறார்கள் என்றால் இவர்களுக்கு வழக்குரைங்கர்கள் பாடம் புகட்ட வேண்டும்…உங்கள் போராட்டம் வெற்றி பெரும் வரை போராடுங்கள்…சமரசம் செய்துகொள்ள வேண்டாம்…
    பதில் | அவதூறு குறித்து தகவல் தர//

  12. otrai paarppaanukku muttai vilundha dharku 300 valakkarignargal thaakkappadumbodhu naadu innum paarppaan gal kattuppaattil thaan irukkiradhu enbadhai nambatthaan vendi irukkiradhu

  13. இதனைப் பார்க்கும்போது இவர்கள் காவலர்களாயிருப்பது மக்களுக்காகவா? அல்லது அதிகாரவர்க்கத்தக்காகவா என்ற கேள்வியே எழுகின்றது. மக்களது வரிப்பணத்தில் வாழ்ந்தவாறு மக்கள் விரோத நடவடிக்கையை மேற்கொள்ளும் காவல்துறையினரின் செயற்பாடு மக்களாட்சிக்கு விடப்படும் சவாலாகும். எனவே வினவுதளம் மக்களது வரிப்பண்த்தையும் அது எப்படித் தமிழினம் மீது தமிழகத்தில் தமிழக அரசாலும் , ஈழத்திலே இந்திய நடுவணரசாலும் வீணடிக்கப்படுகிறது என்பதையும் கருத்துப்படமாக்கி எங்கும் காட்சிப்படுத்தவதூடாக மக்களிடையே விழிப்புணர்வை ஏற்படுத்த வேண்டம். மக்களது வரிப்பணத்தை சம்பளமாகப் பெற்றவாறு மக்கள் விரோத நடவடிக்கையா? இதுதான் மக்களாட்சியா? தேர்தலைப் புறக்கணித்துக் கூட ஆட்சியாளருக்கு நல்ல பாடம் புகட்டலாமல்லவா? மக்களுக்கே சரவாதிகாரமும் என்பதே மக்களாட்சிக் (சனநாயகம்) கோட்பாடென்பதை புரியவைக்க தமிழகம் துணிய வேண்டும்.

  14. ஆர்.வி,

    உங்கள் ஆச்சர்யம் எனக்கு ஆச்சர்யமாக இருக்கிறது.. இந்தியாவில் நீங்கள் வீட்டை விட்டு தரையில் இறங்கி நடந்ததில்லையோ என்னவோ.

    இங்கே ஜனநாயகம் என்பது இப்படித்தான் இருக்கிறது. மக்களுக்கான கருத்து சுதந்திரத்தை ஆளும் வர்க்கம் இந்த அளவில் தான் வைத்திருக்கிறது. எனில், மக்களின் போராட்டங்களில் மட்டும் நீங்கள் மென்மையான / ரீஜெண்டான அணுகுமுறையை எதிர் பார்க்க முடியாது.

    இதைத்தான் முந்தைய பதிவுகளின் பின்னூட்டம் ஊடாக உங்களுக்கு புரியவைக்க எல்லோரும் முயன்றார்கள்..

    வழக்கறிஞர்களின் தன்னெழுச்சியான போராட்டத்தின் உள்ளார்ந்த உணர்வுகளை நீங்கள் அப்போது புரிந்து கொள்ளவில்லை – அது (முட்டை வீச்சு) இப்படி திட்டமிட்ட ரீதியில் மக்களை குண்டாந்தடிகளின் மூலம் அடக்கியாள நினைக்கும் ஆளும் கும்பலுக்கு எதிரான (அத்திப் பூத்தாற்போல் தோன்றும்) கலகக்குரல். அது வன்முறைக்கு எதிரான எதிர் வன்முறை! நீங்கள் வன்முறையைப் புரிந்து கொள்ளாமல் எதிர் வன்முறையைப் புரிந்து கொள்ளவே முடியாது.

    ம்ம்.. இந்த மறுமொழியும் உங்களை ”மடக்குவதற்காக” எழுதவில்லை. நீங்கள் தனிமையில் சிந்தித்துப் பார்க்கவே சொல்கிறேன்.

  15. //இந்தியாவில் நீங்கள் வீட்டை விட்டு தரையில் இறங்கி நடந்ததில்லையோ என்னவோ.//

    அமெரிக்காவில் மட்டும் என்ன வாழுதாம். உலகப்புகழ் பெற்ற பேட்ரியாட் ஆக்ட் கண்ட சொர்க்க பூமி எங்க அமெரிக்கா. நாங்க கருத்துரிமை குடுப்போம் ஆனா எங்க குடிமகன்களை ரிமான்டு கைதி மாதிரி கண்கானிச்சுகிட்டே இருப்போம்.

  16. ஆர் வி, வினவு சொல்வது எனக்கு தவறாக படவேயில்லை.. போலீசின் அராஜகம் கண்டிக்கத்தக்கது.. இன்றைய இந்த கைது உட்பட , அன்று நீதிமன்றத்தில் அவர்கள் நடந்துக்கொண்டது வரை. அதில் எந்த சந்தேகமும் இல்லை..
    காவல்துறையின் காட்டுமிராண்டித்தனம் என்ற ஒரே காரணத்துக்காக வக்கீல்களின் காட்டுமிராண்டிதனத்தை நியாயப்படுத்திட முடியுமா? சொல்லுங்கள் ஆர் வி.

    வினவின் இந்த கார்டூன் போடப்பட்ட ஒரிஜினில் பதிவில் என் கருத்தை பாருங்கள்..

    புஜ இக, மக இக என்ற அமைப்புகள், காவல்துறையின் காட்டுமிராண்டித்தனம் என கூட்டம் போட்டு கண்டிக்கும் அதே வேளையில் ஓரிடத்திலாவது வக்கீல்கள்காட்டுமிராண்டித்தனம் பற்றி பேசியதா என்று சொல்லுங்கள்..

    இரண்டு பிரிவினரும் தவறு செய்திருக்கும் போது, ஒரு பிரிவினரை எதிர்த்தும் , ஒரு பிரிவினரை நியாயபடுத்தியும் கார்டூன் போட்டு தானே பிரச்சாரம் செய்யும் மனநிலையில் இருக்கிறோம்.. என்பது தான் கேட்டேன்

    போலிசை காட்டுமிராண்டித்தனம் என்று சொல்கிறேன் , அதே அளவு வக்கீல்களும் காட்டுமிராண்டிகள் தானே.?

    இப்போது உங்களால் சொல்லமுடியுமா? வக்கீல்களும் ஓநாய்கள் என்று?? அல்லது வினவு தான் ஒரு கருத்துப்படம் போடுவாரா?

    யோசியுங்கள் ஆர் வி.. தவறென்றால் சொல்லுங்கள்

  17. Hi

    உங்கள் வலைப்பதிவை வலைப்பூக்களில் பதித்ததற்கு நன்றி. அதன் இணைப்பை இங்கு பார்க்கவும். வேகமாக வளர்ந்து வரும் தமிழ் இனத்தின் இணையத்திலும் தங்களை பதிவு செய்து கொள்ளவும்.

    நட்புடன்
    வலைபூக்கள்/தமிழ்ஜங்ஷன் குழுவிநர்

  18. லவர்பாய்,

    அதிர்ச்சி வெறும் கைது என்பதால் அல்ல. அமைதிக்கு பங்கம், அனுமதி இல்லாமல் கூட்டம்/ஊர்வலம், போன்ற பிரிவுகளில் கைது செய்ந்திருந்தால் அதிர்ச்சி ஒன்றும் இருந்திருக்காது. எந்த போராட்டமும் அமைதிக்கு பங்கம்தான். அரசுக்கு எதிராக கலகம் செய்தார்கள் என்று கைது செய்யப்பட்டிருப்பதுதான் பெரும் அதிர்ச்சி அளிக்கிறது.

    பொழுது விடிந்து பொழுது போனால் சட்ட சபையிலும் நாடாளுமன்றத்திலும் அரசுக்கு எதிராக கோஷங்கள் எழுப்பப்படுகின்றன. எந்த போராட்டத்தில் அரசுக்கு எதிராக கோஷம் எழுப்பப்படவில்லை? எந்த எதிர்க்கட்சி தலைவர் அரசை கடுமையாக விமர்சிக்காமல் இருக்கிறார்? நேற்றோ முன் தினமோ கூட மனித சங்கிலி போராட்டம் நடந்ததாம். அங்கே என்ன அரசை எதிர்த்து ஒரு குரல் கூடவா எழுந்திருக்காது? கல்லூரி காலத்தில் நானும்தான் அரசுக்கு எதிராக ஊர்வலம் போயிருக்கிறேன்.

    அரசுக்கு எதிராக ஒரு முறை கூட கார்ட்டூன் வரையாத பத்திரிகை நம் நாட்டில் எது? அரசை ஒரு முறை கூட விமர்சிக்காத செய்தி ஊடகம் தூர்தர்ஷனும், ஆல் இந்தியா ரேடியோவும்தான்.

    இப்படி குரல் எழுப்புபவர்களை அரசு தன்னை எதிர்த்து கலகம் செய்கிறார்கள் என்று சொல்லி கைது செய்யும்படி ஒரு சட்டம் இருக்கிறது; அதுவும் ஜாமீனில் வெளி வர முடியாதபடி இருக்கிறது; (அமைதிக்கு பங்கம் போன்ற சட்ட மீறல்களுக்கு ஜாமீன் உண்டு – சரி, இப்போது உண்டா தெரியாது, இருந்தது) இது வரை எதிர்கட்சிகாரர்களும் பத்திரிகையாளர்களும் சிறைக்கு போகாது ஒரு understanding மீதுதான்; இதுதான் பெரும் அதிர்ச்சியை கொடுக்கிறது. அதைத்தான் புரிந்து கொள்ள முடியவில்லை. அப்படி என்ன சட்டம், என்ன பிரிவு? வினவோ, இல்லை வேறு சட்டம் தெரிந்தவர்களோ விளக்கினால் நன்றாக இருக்கும்.

    வினோத்,
    // காவல்துறையின் காட்டுமிராண்டித்தனம் … //
    திருநெல்வேலிக்கே அல்வாவா? ஏறக்குறைய தனியனாக இந்த தளத்தில் சாமியின் கருத்துரிமை பற்றி நான் கத்திக் கொண்டிருக்கிறேன். வினவு சொல்வது தவறு என்று நீங்களும் வாதாடுங்கள். ஆனால் வினவுக்கு அவர் இஷ்டப்பட்டத்தை சொல்ல எல்லா உரிமையும் உண்டல்லவா?

  19. Step in right direction by police.

    When the related issue is under enquiry both by CBI and high court, what is the necessity for a forgone conclusion that police was solely responsible for this incident?

    Further portraying police as evil forces really does not do justice to majority of great police officers. This may create a dislike among public.

    Whatever you say, we need checks and controls in place for a peaceful society. In vast majority of cases, police helps fillinfg that gap

    PARAMS

  20. ஐயா பரம்பிதா, நீங்க என்ன மேஜர் சுந்தர்ராஜன், கே.எஸ் கோபாலகிருஷ்னன் வசனத்தெல்லாம் பேசிகிட்டு, நம்மூருல எவன் போலீச மதிக்கிறான். பயப்புடராங்க அவ்வளவுதான். மத்தபடி கிரேட்டு போலீசு ஆபீசருங்க இருக்காங்கன்னு ஒரு பய நம்புறதில்ல…நீங்க மட்டும் நம்புறிங்களா என்ன? சும்மா எதிரா பேசனுன்னு ஏதோ பினாத்துதரீங்க!

  21. //// கிரேட்டு போலீசு ஆபீசருங்க இருக்காங்கன்னு ஒரு பய நம்புறதில்ல…நீங்க
    மட்டும் நம்புறிங்களா என்ன? /////

    அய்யா —மா.சே—, ” அரசி ” மெகா சீரியல் பாத்துட்டு ஏதும் உளரலையே !!!??

  22. //போலீசு ஓநாய்களைப் பற்றி தொடர்ந்து மிகச்சரியான விதத்தில் படங்களை வெளியிடுவோம். அதை எங்களது தோழர்கள் தமிழ்நாடு முழுவதும் பயன்படுத்துவார்கள். போலீசு இதை வெறியுடன் தடுப்பதற்கு முயன்றால் மக்கள் ஆதரவுடன் முறியடிப்போம். அடக்குமுறைகளுக்கு அஞ்சமாட்டோம்.//

    இப்படி செய்வதன் மூலம்தான் போலீசு காட்டுமிராண்டிகளின் திமிர்த்தனத்தை ஒட்ட நறுக்க முடியும். கை வைக்கவே அஞ்சுவார்கள். இல்லையெனில் ருசி கண்ட பூனையாக தொடர்ந்து ஆட்டம் போடுவார்கள். இந்த படத்தை விரிவாக பிரச்சாரம் செய்ய வேண்டும்.

  23. //அரசிற்கு எதிராக கலகம் செயதல்//

    ஒரு வகையில் மிகச் சரியான பிரிவில்தான் கைது செய்திருக்கிறார்கள். ஏதோ காவல்துறை அரசுக்கு தெரியாமல் தன்னிச்சையாக வழக்குரைஞர்களைத் தாக்கியதைப் போல திமுகவும், மறைமுகமாக மற்ற கட்சிகளும் நாடகமாடிக் கொண்டிருக்கும் வேளையில், போலிசைக் கண்டிப்பது அரசைக் கண்டிப்பதாகும் என்றதன் மூலம் தாக்குதலின் உண்மையான சூத்திரதாரிகளை அடையாளப்படுத்தும் நடவடிக்கையாக இருக்கிறது.

    //வக்கீல்களும் காட்டுமிராண்டிகள் தானே//
    சாமியின் ‘நாகரிகத்தை’ விடவும் வக்கீல்களின் ‘காட்டுமிராண்டித்தனம்’ எவ்வளவோ மேல். நிகழ்வுகளின் அடிப்படையில், திட்டமிட்டு போலிசு கலவரத்தைத் தூண்டி தாக்கியிருப்பது தெரிந்த பின்னும், இந்த போலித்தனமான நடுநிலைமை யாருடைய நலனுக்காக?

    //சாமியின் கருத்துரிமை//
    அது தான் லத்திக் கம்பால் சாமியின் கருத்துரிமை நன்கு புரியும்படி நிலை நாட்டப்பட்டு விட்டதே, அப்புறம் ஏன் பதறுவானேன்?

  24. முதல்வரின் உண்ணாவிரத நாடகத்தினை ஒட்டி
    தட்ஸ் தமிழில் இட்ட பின்னூட்டம்:

    பதிவு செய்தவர்: கழக உடன்பிறப்பு பதிவு செய்தது: 25 Feb 2009 10:45 am

    முதல்வர் அவர்கள் உண்ணாவிரதம் மேற்கொள்ள வேண்டி லட்சக்கணக்கில் தந்திகள் குவியட்டும். முதல்வரும் பல அறிவிப்புகள் விட்டுவிட்டார். ஒன்றையும் நிறைவேற்றவில்லை. இதையாவது செய்ய அனுமதி கொடுங்கள். போரை நிறுத்த அவர் தந்தி அனுப்பச் சொன்னதைப் போல அவர் உண்ணாவிரதம் இருக்க அனைவரும் தந்தி அடிப்போம்.

    கழக உடன்பிறப்பு
    சுடரொளி

  25. வினோத், கின்டி.,,

    மிகச் சரியாக சொன்னீர்கள் வினோத்.

    உங்கள் வாதத்திற்க்கு தோழர்களின் பதில் என்ன ?

  26. இது புதிதாக இன்று நடக்கும் நிகழ்ச்சி அல்ல, இதனைப் போன்ற அடக்குமுறைகளையும், பொய் வழக்குகளையும், தோழர்கள் பலர் பல ஆண்டுகளாக அனுபவித்து வருகின்றனர்.. அரசும் அதன் காவலாளி காவல் துறையும் நமக்கு சொல்லும் செய்தி இதுதான்.. ” நீ உண்டு உன் வேலை உண்டு என்று மட்டும் இரு.. உன் நலன், உன் குடும்பத்தின் நலனை தவிர மற்றதை நினைக்காதே.., ஓட்டு போடுவதுடன் உன் கடமையை முடித்துக்கொள்..”

    இணையதளம் மூலம் உண்மையான அரசியல் செய்திகளை மக்களுக்கு கொண்டு செல்வது என்பது, இந்தியாவிற்கு புதிது. என்று வினவின் இந்த தளம் அரசின் தலைவலியை அதிகப் படுத்துகிறதோ… அன்று இந்த தளமும் தடை செய்யப்படும்.. இதற்கு உதாரணம் மலேசியா. அங்கு நடந்த தமிழர்களின் போராட்டத்துக்கு பிறகு நடந்த தேர்தலில் ஆளும் அரசு தோல்வி சிறு தோல்வியை கண்டது.. அதற்க்கு பிறகு பல இணைய தளங்கள் தடை செய்யப் பட்டன, சிலர் தேசிய பாதுகாப்பு சட்டத்தில் கைது செய்யப் பட்டு, பிணையில் வெளிவரமுடியாதபடி சிறையில் அடைக்கப் பட்டனர்..

  27. Times Of India
    Who allowed cops to enter Madras HC: SC to TN
    25 Feb 2009, 1132 hrs IST, Dhananjay Mahapatra, TNN

    NEW DELHI: The Supreme Court asked the Tamil Nadu government on Wednesday to tell it by Thursday at whose instance police entered the Madras high court premises and used force against the striking lawyers. ( Watch )

    “We want to know at whose instance the police was allowed to enter the premises of the high court,” a bench headed by Chief Justice K G Balakrishnan said.

    The apex court said that the police station inside the high court premises should be shifted immediately; the state government agreed to do so.

    At the same time, the Supreme Court berated the lawyers for going on strike and indulging in slogan-shouting even inside courtrooms.

    The apex court termed the February 19 incident as “sad” and said it will pass a formal order relating to holding of judicial inquiry tomorrow, PTI reported.

    The court said the committee to inquire into the incident will be reconstituted tomorrow after consultation between the members of the bar and the state government.

    The advocate body from Chennai had objected to the setting up of the committee by the Tamil Nadu government.

    The court ruled out setting up of a judicial inquiry under a sitting judge.

    The Supreme Court asked the state government to assess the damage to the lawyers’ cars and the high court building as well as announce compensation for the injured lawyers by Thursday. The hearing will continue on Thursday.

    On February 19, striking lawyers and lathi-wielding police fought pitched battles in the court’s premises. The trouble started when the police who were in full strength anticipating trouble began arresting some 13 lawyers in connection with the attack on Janata Party chief Subramanian Swamy in the court on February 17. This sparked off a protest by advocates.

    Defiant lawyers on Tuesday boycotted talks with the state government. Tamil Nadu’s law minister had called for two rounds of meeting with the striking lawyers with the DGP, and the public prosecutor representing the government.

    Meanwhile, the bitter bipolar Tamil Nadu politics made a formal entry into the violent lawyers’ agitation on Tuesday as Jayalalithaa’s AIADMK moved the Supreme Court seeking dismissal of the DMK-led coalition government accusing it of authorising the brutal police action against advocates leading to chaos and complete breakdown of the constitutional machinery.

    AIADMK said that the unauthorised and excessive force used by the police to quell the peaceful protest by lawyers has led to a tense situation in the entire state and closure of the courts bringing the administration of justice to a grinding halt.

    Apart from attempting to score brownie points in the apex court against an already beleagured chief minister Karunanidhi, who had threatened to go on fast protesting against the incidents, the AIADMK pushed the petition with the general accusation that a state of lawlessness prevailed in Tamil Nadu since the DMK-led coalition took over in 2006.

    ஐகோர்ட்டுக்குள் நுழைய போலீசுக்கு அனுமதி அளித்தது யார்:சுப்ரீம் கோர்ட்
    http://www.nakkheeran.in/users/frmNews.aspx?N=4037
    சென்னை வழக்கறிஞர்களின் வேலை நிறுத்தப் போராட்டம் குறித்த வழக்கு விசாரணையை உச்ச நீதிமன்றம் இன்று விசாரித்தது.
    இந்த வழக்கு விசாரணை பிப்ரவரி 27-ம் தேதி நடைபெறும் என உச்ச நீதிமன்றம் முன்பு தெரிவித்திருந்தது. தற்போது முக்கியத்துவம் கருதி இம்மனு 25-ம் தேதி எடுத்துக் கொள்ளப்பட்டது.
    உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி கே.ஜி. பாலகிருஷ்ணன் தலைமையிலான பெஞ்ச் இந்த வழக்கை விசாரித்தது.
    வழக்கு தொடர்பான அனைத்து ஆவணங்களையும், கடந்த வியாழக்கிழமை நடைபெற்ற வழக்கறிஞர்-போலீஸ் மோதல் தொடர்பான விவரங்களையும் தாக்கல் செய்யப்பட்டது.
    வழக்கை விசாரித்த நீதிபதி, ‘யாருடைய உத்தரவின் பேரில் ஐகோர்ட் வளாகத்திற்குள் போலீஸ் நுழைந்தது. இதற்கு தமிழக அரசு நாளை பதிலளிக்க வேண்டும் என்று உத்தரவிட்டுள்ளார்.

    http://www.nakkheeran.in/users/frmNews.aspx?N=4036
    ஐகோர்ட்டில் உள்ள போலீஸ் ஸ்டேசனை அகற்ற வேண்டும்:சுப்ரீம் கோர்ட்

    சென்னை வழக்கறிஞர்களின் வேலை நிறுத்தப் போராட்டம் குறித்த வழக்கு விசாரணையை உச்ச நீதிமன்றம் இன்று விசாரித்தது.
    இந்த வழக்கு விசாரணை பிப்ரவரி 27-ம் தேதி நடைபெறும் என உச்ச நீதிமன்றம் முன்பு தெரிவித்திருந்தது. தற்போது முக்கியத்துவம் கருதி இம்மனு 25-ம் தேதி எடுத்துக் கொள்ளப்பட்டது.
    உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி கே.ஜி. பாலகிருஷ்ணன் தலைமையிலான பெஞ்ச் இந்த வழக்கை விசாரித்தது.
    வழக்கு தொடர்பான அனைத்து ஆவணங்களையும், கடந்த வியாழக்கிழமை நடைபெற்ற வழக்கறிஞர் – போலீஸ் மோதல் தொடர்பான விவரங்களையும் தாக்கல் செய்யப்பட்டது.
    வழக்கை விசாரித்த நீதிபதி, சென்னை ஐகோர்ட்டில் உள்ள போலீஸ் ஸ்டேசனை அகற்ற வேண்டும் என்று தமிழக அரசுக்கு உத்தரவிட்டுள்ளார்.

  28. போலீஸ் அப்படித்தான் வினவு கைது பண்ணும். அதை அப்படியே காதுல‌ சொறுகிக்கிட்டு, என்ன ஏதுன்னு கேக்காம ரிமான்ட் பண்ண அந்தப் பொறுக்கித் தாயோளி, ஜட்ஜை என்ன பண்றது? அந்தப் பேமானிகளைப் பத்தியும் பேசுவோம்.

  29. //http://thatstamil.oneindia.in/news/2009/02/25/tn-karur-lawyers-hanges-dgp-jain-in-effigy.html
    டிஜிபி ஜெயின் உருவ பொம்மைக்கு தூக்கு – வக்கீல்கள் போராட்டம்

    கரூர்: கரூர் நீதிமன்ற வளாகத்தில் தமிழக டிஜிபி ஜெயின் உருவ பொம்மைக்கு தூக்கு தண்டனை கொடுத்து வழக்கறிஞர்கள் போராட்டம் நடத்தியதால் பரபரப்பு ஏற்பட்டது.//

    இதுக்கு என்ன செய்யப் போறாங்க போலீஸுக்காரங்க? இலங்கை அதிபர்க் கிட்ட அனுமதி வாங்கிட்டு பதிலுக்கு ரெண்டு வக்கீல தூக்குல துங்க விட்டாலும் விடுவாங்க

  30. இப்படிப்பட்ட போலீசுக்கு ஆதரவாத்தான் பேசுறானுங்க மனித உரிமை காவலனுங்க

    “தாலியறுத்த போலீஸ்! வேடிக்கை பார்த்த நீதிமன்றம்!”

    வனிதா அப்படிச் செய்வார் என்று யாருமே எதிர்பார்க்கவில்லை. ‘‘புருஷனே இல்ல! அவரு கட்ன தாலி மட்டும் எதுக்கு?’’ -ஆவேசமாய் கேட்டபடி ‘படக்’கென்று தாலியை அறுத்து நீதிமன்றத்தில் எறிந்தார். நீதிபதிகள் வாயடைத்துப் போயினர். வழிந்த கண்ணீருடன் அங்கிருந்த போலீஸ்காரர்களைப் பார்த்து, ‘‘நீங்கள்லாம் நல்லாவே இருக்க மாட்டீங்க. எம் பொண்ணுங்க பாவம் உங்களைச் சும்மா விடாது. நாசமாப் போய்டுவீங்க’’ கையை விரித்து மண்னை வாரி இறைப்பதுபோல் வனிதா விட்ட சாபத்தால் கோர்ட்டே நிலை குலைந்தது.

    கோர்ட் கலைந்ததும் அங்கேயிருந்த மனுநீதிச் சோழன் சிலையருகே செய்வதறியாது தவித்துக்கொண்டிருந்தார் வனிதா. கையில் மூன்று குழந்தைகள். பட்டினிக் கொடுமை, மூன்று குழந்தைகளின் முகத்திலும் அப்பட்டமாய்த் தெரிந்தது. மூத்தவள் வர்ஷாவுக்கு ‘வயது ஐந்து’ என்றாலும் அதற்கான வளர்ச்சி இல்லை. மொட்டை அடிக்கப்பட்டிருந்த லாவன்யாவுக்கும் ஹேமாவதிக்கும் முறையே மூன்று, இரண்டு வயதுகள். ஊட்டச்சத்து இல்லாமல் அக்குழந்தைகளின் தலை, கொஞ்சம் பெரிசாக இருந்தது. இன்று அவர்கள் யாருமற்ற அநாதைகள்.

    ஏன்?

    ‘‘அத்தனைக்கும் காரணம் ரெண்டு போலீஸ்காரங்கதான்’’ என்கிறார் வனிதா. அழுது வற்றிய கண்களுடன் தன் சோகத்தை இங்கே விவரிக்கிறார்.

    ‘‘எங்க ஊட்டுக்காரர் பேரு சத்தியசீலன். நாங்க ஏழுமகளூர்ல குடியிருந்தோம். அது நாகை மாவட்டம், மயிலாடுதுறை தாலுகாவுல இருக்கு. போன வருஷம் ஜூன் மாசம். வேலைக்கு போய்ட்டு சாயங்காலம் டீக்கடைல உக்காந்திருந்தவரை, கூட வேலை பாத்தவங்க சாராய பாக்கெட் வாங்கியாரச் சொல்லியிருக்காங்க. அவரு கிளம்பிப் போனதும், ஆல்பா டீம்(சாராய தடுப்புப் பிரிவு) எஸ்.ஐ நாகராஜூம், பெரம்பூர்(நாகை) ஏட்டு உத்திராபதியும் மஃப்டில டீக்கடை பக்கமா வந்திருக்காங்க. இவரு சாராயம் வாங்கிட்டு திரும்பி வரும்போது போலீஸ்காரங்க பிடிச்சிருக்காங்க.

    டீக்கடை வாசல்ல எஸ்.ஐயும் ஏட்டும், எங்க ஊட்டுக்காரர் வேட்டியை உருவிட்டு வெறும் ஜட்டியோட, நடு… ரோட்ல மாட்டை அடிக்கிற மாதிரி அடிச்சிருக்காங்க. கீழே விழுந்தவரை நெஞ்சிலயும், மாருலயும் எட்டி உதைச்சிருக்காங்க. அவர் மயக்கம் போட்டு விழுந்திருக்காரு. அதைப்பாத்துட்டு, ‘என்னமா நடிக்கிறாம் பாரு?’ன்னு சொல்லிக்கிட்டே தண்ணியை மொண்டு அவர் மேல ஊத்தியிருக்காங்க. கண் முழிச்சுப் பாத்தவரை முடியைப் பிடிச்சுத் தூக்கி, ‘வேலங்குடியில சாராயம் விக்கிறவன் யாரு? வந்து ஆளைக்காட்டு’ன்னு சொல்லி டூவீலர்ல கூட்டிட்டுப் போயிருக்காங்க. இதையெல்லாம் வேடிக்கைப் பாத்த ஜனங்க எங்கிட்டச் சொன்னதும், நான் பெரம்பூர் ஸ்டேஷனுக்கு ஓடினேன்.

    அப்போ, ‘இது நம்ம போலீஸ் இல்லை. ஆல்பா எஸ்.ஐ’ன்னு போலீஸ்காரங்க ரகசியமா பேசிக்கிட்டாங்க. பிறகு என்னைக் கூப்பிட்டு, ‘இந்தாம்மா எல்லா எடத்துலயும் பாத்துக்க. உன் புருஷன் எங்க ஸ்டேஷன்ல இல்லை’ன்னாங்க. அவங்க சொன்ன மாதிரியே ஸ்டேஷன்ல எங்க வீட்டுக்காரர் இல்லை.
    ‘போலீஸ் அடிச்சதால, அசிங்கப்பட்டுகிட்டு எங்கயாவது ஓடிப்போயிருப்பான். நீ வீட்டுக்குப் போ’ன்னு சொல்லி அனுப்பிட்டாங்க.

    ரெண்டு நாளாகியும் புருஷன் வீட்டுக்குத் திரும்பலை. உடனே ‘அவரைக் கண்டுபிடிச்சிக் குடுங்க’ன்னு போலீஸ்ல கம்ப்ளெய்ன்ட் கொடுத்தேன். ‘எடுத்துக்க மாட்டோம்’னு சொல்லிட்டாங்க.

    அப்பதான், விடுதலைச் சிறுத்தைங்க வந்து எங்க வீட்டுக்காரரை ஒப்ப்டைக்கச் சொல்லி ஆர்ப்பாட்டம் பண்ணாங்க. அவங்க மூலமா ஆர்.டி.ஓ.கிட்ட கம்ளென்ட் கொடுத்தோம். அவங்க, ‘சத்தியசீலன் உயிரோடதான் இருக்கார். பணம் புடுங்கறதுக்காக இந்தம்மா டிராமா போடுறாங்க’ன்னு எம்மேலயே புகார் சொன்னாங்க. பிறகு ‘போலீஸ் உண்மையை மறைக்குது’ன்னு சி.பி.ஐ விசாரனை கேட்டோம். விஷயம் பெரிசானதும் எஸ்.ஐ., ஏட்டு ரெண்டு பேரையும் சஸ்பென்ட் பண்ணிட்டாங்க.

    யாரை சஸ்பென்ட் பண்ணி என்ன ஆவப்போகுது? என் புருஷன் உயிரோட வரணுமே! ‘இனி போலீஸை நம்பி பிரயோஜனமில்லை’ன்னு இதே ஐகோர்ட்ல போன 2007, செப்டம்பர் மாசம் ஹேபியஸ் கார்பஸ் மனு போட்டோம். நீதிபதி அதை படிச்சிப் பாத்துட்டு, ‘இந்தக் கேஸை டி.எஸ்.பி. விசாரிக்கணும்’னு சொல்லி உத்தரவு போட்டார். ஆனா, டி.எஸ்.பி. விசாரிக்கவே இல்லை.

    ‘எம்புருஷன் இன்னைக்கு வருவார், நாளைக்கு வருவார்’ணு எத்தனை நாளைக்கு காத்திருப்பது? அவரைக் கண்டு பிடிச்சிக் கொடுக்கலைன்னா இந்த இடத்தைவிட்டு நகரமாட்டேன்னு எஸ்.பி. ஆஃபீஸ்லயே தர்ணா பண்ணி உக்காந்துட்டேன். எம் புருஷனை கண்டுபுடிச்சிக் குடுக்காத போலீஸ்காரங்க, ‘நான் ரகளை பண்றேன்’னு சொல்லி என்னை ஜெயில்ல போட்டுட்டாங்க. குழந்தைக்கு பால் வாங்கக்கூட காசில்லாத நான், ஜாமீன்ல வர்றதுக்கு பட்டக் கஷ்டம் இருக்கே…’’ அதற்கு மேல் பேச முடியாமல் ‘ஓ…’ வென்று சத்தம்போட்டு அழ ஆரம்பித்துவிட்டார் வனிதா.

    வனிதா அழுவதைக் கேட்டு குழந்தைகளும் பயத்தில் அலற ஆரம்பித்துவிட்டனர். கோர்ட்டுக்கு வந்திருந்த சில பெண்கள்தான் வனிதாவைத் தேற்றி ஆறுதல்படுத்தினர். இந்த களேபரத்துக்கிடையில், நான்கு தயிர் சாதப் பொட்டலங்களைக் கையில் ஏந்தியபடி அங்கே வந்தார் வழக்கறிஞர் ரஜினிகாந்த். சாதத்தை வனிதா மற்றும் குழந்தைகளுக்கு சாப்பிடக் கொடுத்தவரைக் கூப்பிட்டுப் பேசினேன்.

    ‘‘சட்டத்தைக் கையில் எடுத்துக்கொண்டு, அப்பாவிகளைக் கொடுமைப்படுத்துவதே சில போலீஸ்காரர்களுக்கு கடமையாய் இருக்கிறது. சாராயம் விற்றவனை விட்டுவிட்டு, வாங்கிவந்தவனை பிடித்துச் சென்றுள்ளனர். சரி, பிடித்தார்களே வழக்குப் பதிவு செய்தார்களா? என்றால், அதுவும் இல்லை. கணவனை கண்டுபிடித்துத் தரச்சொல்லி வனிதா கொடுத்த புகாரை பதிவு செய்யாத காவல்துறை, குற்றம் சாட்டப்பட்டிருக்கும் எஸ்.ஐ. நாகராஜிடம் புகாரைப் பெற்றுக்கொண்டு ‘சத்தியசீலன், டூவீலரில் இருந்து குதித்து தப்பியோடிவிட்டதாக’ எஃப்.ஐ.ஆர் போட்டிருக்கிறார்கள். கடந்த வருடம் வனிதாவின் ஆட்கொணர்வு மனு விசாரனைக்கு வந்தபோது, ‘சத்தியசீலன் தப்பியோடிவிட்டதாக’ வாய்வழி வாக்குமூலம் அளித்த நாகராஜும் உத்திராபதியும், எழுத்து மூலம் அளித்த பதில் மனுவில், ‘சத்தியசீலனை ஊர் முக்கியஸ்தர்களிடம் ஒப்படைத்ததாக’ முன்னுக்குப் பின்னாய் உளரிச் சென்றுள்ளனர். விசாரனை அதிகாரியான டி.எஸ்.பி.யும் நீதிமன்ற உத்தரவை மதிக்கவில்லை. மாறாக கணவனை இழந்து தவிக்கும் அபலைப் பெண்ணை சிறையில் அடைத்திருக்கிறார்.

    இப்போது சத்தியசீலன் உயிரோடு இருக்கிறாரா, இல்லையா? அநாதையாக்கப்பட்ட அவரது குடும்பத்துக்கு யார் பொறுப்பு? என்பதுதான் கேள்வி. ‘போலீஸார் அடித்ததில் படக்கூடாத இடங்களில் பட்டு சத்தியசீலன் இறந்திருக்கக்கூடும். அவரை யாருக்கும் தெரியாமல் எரித்துவிட்டு, ஓடிப்போய்விட்டதாக நாடகமாடிக்கொண்டிருக்கிறார்கள்’ என்று நாங்கள் சந்தேகப்படுகிறோம். எனவே வனிதாவுக்கும் அவரது மூன்று குழந்தைகளுக்கும் நீதி கேட்டு மீண்டும் நீதிமன்றத்தை அணுகியிருக்கிறோம்’’ என்றார் எரிச்சலுடன்.

    செப்டம்பர் 29&ம் தேதி நீதிபதிகள் பிரபா ஸ்ரீதேவன், பெரியகருப்பையா ஆகியோர் முன்பு விசாரனைக்கு வந்த இவ்வழக்கின்போது, டி.எஸ்.பி.யின் அறிக்கை திருப்தியளிக்கவில்லை என்று கூறியவர்கள், சத்தியசீலன் குறித்து இரண்டு வாரங்களுக்குள் பதிலளிக்க போலீஸாருக்கு உத்தரவிட்டிருந்தனர். இதையடுத்து கடந்த அக்டோபர் 15&ம் தேதி நீதிபதிகள் எலிட் தர்மாராவ், தமிழ்வாணன் ஆகியோர் முன்பு மீண்டும் இவ்வழக்கு விசாரணைக்கு வந்தது. ஏற்கெனவே உத்தரவிட்டபடி சத்தியசீலனை போலீஸார் ஒப்படைக்காததால் இப்போது டி.ஜி.பி விசாரணைக்கு உத்தரவிட்டுள்ளனர்.

    ‘‘மனித உரிமைகளை மீறக்கூடாது’’ என்று நீதிமன்றங்கள் காது கிழிய கத்தினாலும், போலீஸார் அதைக் கேட்பதில்லை. அப்பாவிகளை அவர்கள் அடிக்கிறார்கள், அடிக்கிறார்கள் அடித்துக்கொண்டே இருக்கிறார்கள்.
    விடைபெறும் வேளையில் வனிதா நம்மிடம் கேட்கிறார். ‘‘அண்ணே… எங்க வீட்டுக்காரர் உயிரோட வந்துடுவாரா? குழந்தைங்களுக்கு பதில் சொல்ல முடியலைன்னே! ‘பசிக்குதுமா…!’ன்னு வயித்தைப் புடிச்சிக்கிட்டு புள்ளைங்க துடிக்கிறப்போ, ‘மூணுத்தையும் கொண்ணுட்டு தற்கொலை பண்ணிக்கலாமா!’ன்னு தோணுது.’’
    – காவல்துறைக்கும் நீதித்துறைக்கும் தெரியணுமே!

  31. ஊர்வலம் நடத்தி அரசுக்கு எதிராக கோஷம் போட்டால் அரசுக்கு எதிராக கலகம் செய்தல் என்ற பிரிவில் ஜாமீன் இல்லாத கைது என்ற சட்டத்தை பற்றி இங்கே யாருக்காவது தெரியமா? சட்டம் தெரிந்தவர்கள், இல்லை வினவு கொஞ்சம் விளக்க முடியுமா? (இப்படி இருந்தால் எல்லா எதிர்கட்சிக்காரர்களும் பத்திரிகைக்காரர்களும் ஜெயிலில் இருக்க வேண்டுமே, எப்படி தப்பிக்கிறார்கள்?)

Leave a Reply to வினோத், கின்டி. பதிலை ரத்து செய்க

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க