90களின் ஆரம்பத்தில் “பெரியாரை வீரமணி கும்பலிடமிருந்து விடுதலை செய்வோம் வாரீர்!” என புதிய ஜனநாயகத்தில் வந்த தொடர் கட்டுரை அரசியல் உலகில் பெரும் விவாதத்தையும் கிளப்பி போயஸ் தோட்டத்து பூசாரியாக மணியாட்டிக் கொண்டிருந்த வீரமணி கம்பெனியை முற்போக்கு உலகில் அம்பலப்படுத்தியது. அப்போது கம்பெனியார் ம.க.இ.கவின் மீது கொலைவெறியுடன் விடுதலையில் பார்ப்பனத் தலைமை இன்னபிற அவதூறுகளை வீசிக்கொண்டிருந்தனர். அப்போது இப்போதைய பெ.தி.க தோழர்களும் அங்கேதான் இருந்தனர். இந்தக் கட்டுரையின் தொடர்விளைவாகவும் ம.க.இ.கவின் இந்துத்தவ மற்றும் ஜெயாவை எதிர்த்த போராட்டங்கள் தீவிரமாக நடைபெற்ற காலத்தில் திராவிடர் கழகத்திலிருந்து பெ.தி.க தோழர்கள் வெளியேறினார்கள். அதற்கு முன்னரே வீரமணி அரசியல் ரீதியில் சமாதியானார்.
கோபாலபுரத்திற்கும், தோட்டத்திற்கும் மணியாட்டிக்கொண்டிருந்ததன் பின்னே மாபெரும் பொருளாதார நலன்கள் இருந்தன. வட்டிக்கடையும், சுயநிதிக்கல்லூரியும் என பெரியார் ஆரம்பித்த இயக்கத்தை லிமிடெட் கம்பெனியாக மாற்றியிருந்த வீரமணி தனது அல்லக்கைகளை வைத்து பெரியார் திடலில் அவ்வப்போது ஏதோ அரிப்புக்கு கூட்டம் நடத்தி களப்பணியாற்றுவதாக பீலா காட்டிக் கொண்டு மறுபுறம் தனது சொத்துக்களை பெருக்குவதற்காகவும், பாதுகாக்கவும் ஆளும் கட்சிகளை அண்டிப்பிழைத்தார். இத்தனை ஆண்டுகள் ஆகியும் இவ்வளவு கோடிக்கணக்கில் வருமானத்தை பெருக்கியும் பெரியாரின் படைப்புகளை வெளியிடுவதற்கு கூட துப்பில்லாமல் விடுதலையிலும், உண்மையிலும் மருத்துவ நலன், தன்னம்பிக்கை, ஊட்டச்சத்து, வாழ்வியல் சிந்தனைகள் என தூரதர்ஷனில் மாமிகள் நடத்தும் அரட்டைகளை அரங்கேற்றி வந்தார்.
இதனூடாக பெரியார் தி.க தோழர்கள் பெரியார் படைப்புக்களை முழுமையாக கொண்டுவரும் முயற்சியில் ஈடுபட்ட போது மட்டும் அதை நிறுத்துவதற்கு கருணாநிதியை வைத்தும் நீதிமன்றத்திலும் தடை வாங்கியிருந்தார். பெரியார் கருத்துக்கள் மக்களிடம் போய்ச்சேரக்கூடாது என இந்தக் கருப்பு பார்ப்பனர் செய்த வாதங்கள் குருவாயுரப்பனுக்கே பொறுக்காது.
ஆனாலும் நீதிமன்றத்தில் பெரியாரின் கருத்துக்களை சொந்தம் கொண்டாடுவதற்கு சட்டப்பூர்வ ஆதாரங்கள் இல்லையெனவும், பெரியார் படைப்புக்களை யார் வேண்டுமானாலும் வெளியிடலாம் எனவும் பெரியார் தி.க தொடுத்த வழக்கில் நீதிபதி சந்துரு தீர்ப்பளித்திருக்கிறார். இதற்கு முதற்கண் பெரியார் திராவிடர் கழக தோழர்களுக்கு வாழ்த்துக்களை தெரிவிப்போம். உடனே வெகுண்ட வீரமணி நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தார். இருப்பினும் இந்த தீர்ப்பை இப்படியே இப்போதைக்கு தொடருமென பதிளிக்கப்பட்டிருக்கிறது. இனி ஐயா டெல்லிக்கு உச்சநீதி மன்றத்திற்கு படையெடுப்பார். எத்தனை கோடி செலவானாலும் இந்த வழக்கில் வெல்லுவதற்கு எல்லா சின்னத்தனமான வேலைகளையும் செய்வார். எனினும் அவை வெற்றிபெறப் போவதில்லை. அதற்குள் பெரியாரின் படைப்புக்கள் தோழர்களால் வெளியிடப்படும் என நினைக்கிறோம். உச்சநீதிமன்றமும் வீரமணிக்கு ஆதரவாக தீர்ப்பளிப்பதற்கான முகாந்திரங்கள் எதுவுமில்லை.
கண்ட கண்ட அனாமதேயங்களின் படைப்புக்களையெல்லாம் நாட்டுடைமையாக்கி நவீன புரவலராக மார் தட்டும் கருணாநிதி பெரியாரின் படைப்புகளை மட்டும் வீரமணிக்கு உதவும் பொருட்டு அப்படி ஆக்காமல் இருந்து மற்றொரு துரோகமும் செய்திருக்கிறார். பெரியவர் இப்படி தனது இறுதி காலத்தில் துரோகப் பட்டங்களை நிறைய பெறுவது குறித்து தொண்டர்களே கவலைப்படுவதில்லை. நாம் மட்டும் ஆதங்கப்பட்டு என்ன ஆகப்போகிறது?
ராஜீவ் கொலையின் பின்னாளில் ஈழத்தமிழருக்கு ஆதரவாக தமிழகமெங்கும் ம.க.இ.க வீச்சாக இயக்கம் நடத்திய நாளில் சென்னையில் ஒரு கூட்டம் நடத்துவதற்கு கூட பெரியார் திடலை தருவதற்கு பயந்து கொண்டு மறுத்தவர்தான் இந்த வீராதி வீரமணி. இன்றைக்கு ஈழத்திற்காக என்னவெல்லாம் அழுது புரண்டு நடிக்கிறார். கருணாநிதி மட்டுமல்ல வீரமணியும் தனது இறுதி காலத்தில் துரோகப் பட்டத்தோடுதான் வாழப்போகிறார். வாழ்ந்து கொண்டிருக்கிறார்.
வீரமணியின் இணையத்தளபதியாக விடாமல் தினசரி நான்கைந்து பதிவுகள் போட்டுத்தாக்கும் தமிழ் ஓவியாவிற்கு இந்த தருணத்தில் சில கோரிக்கைகளை வைக்கிறோம்.
நண்பரே நாத்திகப் பிரச்சாரம் எப்போதும் தேவையுள்ள ஒன்றுதான். ஆனாலும் மக்களின் எல்லா வாழ்க்கைப்பிரச்சினைகளை பேசி போராடும் முழுமையில்தான் அதையும் செய்ய முடியும். இல்லையேல் அதை யாரும் பொருட்படுத்த மாட்டார்கள். ஆளில்லாத சிவன் கோவிலில் ஐயர் கொட்டாவி விட்டுக்கொண்டே பூஜை செய்து சிவனை எழுப்பமுயன்று தோற்று தொங்கிக் கொண்டிருக்கும் வௌவால்களை விரட்டிவிட்டு வீடு சென்று தயிர்சாதம் உண்டு முடங்குவது போல உங்களின் அன்றாடப்பணியும் கணினியில் அப்படி ஆகிவிட்டது. எங்களுக்கும் உண்மையிலேயே வருத்தமாகத்தானிருக்கிறது. உங்கள் தளத்தை யாரும் அதிகம் பார்ப்பதில்லை, எதைக்குறித்தும் விவாதமும் நடப்பதில்லை. “யாரோ” 5 பேர் ஓட்டு மட்டும் போடுவதால் தமிழ்மணம் வாசகர் பரிந்துரையில் உங்கள் பதிவுகள் தினமும் நான்கைந்து வந்து விடுகின்றன. இனி தினமும் ஒன்று மட்டும் போட்டால் எங்களைப் போல ஏழை பதிவர்களுக்கு உதவியாய் இருக்கும்.
மற்றபடி பெரியாரை அவரது வீரியத்துடன் கொண்டு செல்லும் பணியினை நாங்கள், தோழர் மதிமாறன், மற்றும் பெரியார் திராவிட கழக தோழர்கள் முதலானோர் பார்த்துக் கொள்கிறோம். இனி நீங்கள் திடலுக்கு சென்று மானமிகுவை சந்தித்து அவரை நல்வழிப்படுத்தும் பணியினை செய்யலாம். அப்படி செய்த மறுகணமே நீங்கள் திடலை விட்டும் கழகத்தை விட்டும் நீக்கப்படுவீர்கள். அப்புறம் என்ன செய்யலாம்? நீங்கள் சாயம் போன கருப்புச்சட்டையை கடாசி விட்டு எங்களைப் போன்றவர்கள் அணியும் விறுவிறுப்பான செஞ்சட்டையை அணியுங்கள். காத்திருக்கிறோம்.
கட்டுரையில் ஒரு தவறு!
நீதிபதி சந்துரு தீர்ப்பினை எதிர்த்து வீரமணி மேல் முறையீடு செய்து அதன்படி தீர்ப்பினை செயல்படுத்துவதை நிறுத்துமாறு கேட்டிருப்பதை உயர்நீதிமன்ற நீதிபதிகள் அடங்கிய பெஞ்ச் ஏற்று உத்தரவிட்டிருக்கிறது. மேலும் மேல் முறையீடும் விசாரணைக்கு ஏற்றுக்கொள்ளப்பட்டிருக்கிறது. எனவே இந்த வழக்கில் பழைய நிலையே அதாவது பெரியார் திராவிடர் கழகம் புத்தகத்தை வெளியிடுவதற்கான தடை நீடிக்க்கிறது. இந்த மேல் முறையிட்டில் இந்த வெளியீட்டின் மூலம் பெ.தி.கவினர் நிறையா சம்பாதிப்பார்கள், தங்களுக்கு நட்டம் ஏற்படும் என வீரமணி சேட்டு வெட்கம் கெட்டு குறிப்பிட்டிருக்கிறார். ஆக பெரியாரை வீரமணி கும்பலிடமிருந்து விடுதலை செய்ய சட்டபூர்வ போராட்டம் மட்டும் போதாது, மக்கள் அரங்கிலும் போராட்டங்கள் நடத்தப்படவேண்டும் என்பது புரிகிறது.
கட்டுரையில் இந்த மேல்முறையீட்டின் விவரங்களை தெரிந்து கொள்ளாமல் தவறாக வெளியிட்டமைக்கு மன்னிக்கவும்.
வீரமணி கும்பல் – பெரியார் விடுதலை !…
வீரமணியின் இணையத்தளபதியாக விடாமல் தினசரி நான்கைந்து பதிவுகள் போட்டுத்தாக்கும் தமிழ் ஓவியாவிற்கு இந்த தருணத்தில் சில கோரிக்கைகளை வைக்கிறோம். https://www.vinavu.com/2009/07/30/periyar-viduthalai/trackback/…
பெரியாரின் கருத்துக்களை முன் காலத்தில் அவர் நடத்திய போராட்டங்கள் மூலமாக மட்டுமே தெரிந்து கொண்டவர்களும், அல்லது அதே போராட்டங்களையும் பதங்களையும் காலம் மாறி விட்டதை உணறாமல் ஒப்புக்குப் பயன் படுத்தி வந்த இந்தக் கால தி.க. வினர் மூலமாகத் தெரிந்து கொண்டவர்களும், ஈ.வே.ரா. பற்றிய குறுகிய புரிதலில் வாழ்ந்து வந்திருக்கிறார்கள். தி.க. சாயம் பூசாமல் அவர் எண்ணங்களைப் படிக்கும் போது இன்னமும் கூட அறிவு பூர்வமாக அவரை நாம் எடுத்தாள முடியும்.
//மற்றபடி பெரியாரை அவரது வீரியத்துடன் கொண்டு செல்லும் பணியினை நாங்கள், தோழர் மதிமாறன், மற்றும் பெரியார் திராவிட கழக தோழர்கள் முதலானோர் பார்த்துக் கொள்கிறோம். //
அவசியம் ஆரம்பியுங்கள்.
குடியரசு வெளியிட பெ.தி.க.விடம் வீரமணி 15 லட்சம் கொடுத்துவிட்டு
வெளியிட்டுக் கொள்ளுங்கள் என பேரம் பேசியுள்ளது ஆனால் பெதிகவினர் நாங்கள் நீதிமன்றத்தில் பார்த்துக்கொள்கிறோம் என மறுப்பு தெரிவித்துவிட்டனர்.
ம்ம்ம்ம்ம்…. தயாராக இருங்கள் தோழர்களே!
பார்ப்பனத்தலைமை – ருக்மாங்கதஅய்யர் – மறைமுகத் தலைமை – இந்திய தேசிய பூணூல் போன்ற ”அதிபயங்கர” உளவுத் தகவல்களுடன் சாயம் போன கருஞ்சட்டைகளின் சலிப்பூட்டும் லாவணியாட்டம் வெகுவிரைவில் ஆரம்பமாகப் போகிறது.
போதாக்குறைக்கு உ.பிக்களின் ”அமங்கலப்”பார்வைக்கு வேறு ஆளாகியிருக்கிறோம்.. பார்ப்பனீயத்தை எதிர்த்து எப்படியெல்லாம் பாய்ச்சல்காட்டப் போகிறார்கள் என்று இனிமேல் தான் பார்க்கப் போகிறீர்கள்.
பெரியார் திராவிடர் கழகத்திற்கு எனது புரட்சிகர வாழ்த்துக்களைத் தெரிவித்துக் கொள்கிறேன்.
இருப்பினும், நீதி நிர்வாகத்தையும் அரசு நிர்வாகத்தையும் சமரசமின்றிச் சாடிவந்த பெரியார் நீதிமன்றத்தின் மூலமாக விடுவிக்கப்பட்டது வருந்தத்தக்க ஒரு நிகழ்வு. பெரியாரின் ஆதரவாளர்களைத் திரட்டி வீரமணியிடமுள்ள அத்துனை சொத்துக்களையும் மீட்டு நாட்டுடைமையாக்கியிருக்க வேண்டும். அதற்கு வீச்சான, சமரசமற்ற போராட்டம் வேண்டும். வீரமணி பெரியாரைச் சிறை வைத்ததன் மூலம் தனது பகுத்தறிவுக்குத் தானே குழிதோண்டிக் கொண்டார். அக்குழிக்குள் அவரை அடக்கம் செய்ய நீதிமன்றத்தின் மூலமாக ஒரு கைப்பிடி மண் போடப்பட்டிருக்கிறது. மீத வேலைகளைச் செய்து முடிக்க வேண்டிய கடமை நம்முடையது.
ஒருவழியாக நீதிமன்றத்தின் மூலமாகப் போராடியாவது பெரியாரை மீட்டெடுத்தாகிவிட்டது. மீதமுள்ள திராவிடர் கழக சொத்துக்களையும் மொத்தமாக பறித்தெடுக்க வேண்டியதுவும் அவசியமாகிறது.
இதைச் செய்வதனால் ஒன்றும் வீரமணிக்கு சோற்றுப்பஞ்சம் வந்துவிடப் போவதில்லை. அமெரிக்காவுக்கு நமது நாட்டைக் கூட்டிக் கொடுக்கும் என்.ஜி.ஓ. வேலைகளை அவர் ஒரு தொழிலாக நடத்திவருவதால் வீரமணியை அமெரிக்கமாமா தத்தெடுத்துக் கொள்ள நிறைய வாய்ப்பிருக்கிறது. பார்க்கலாம்.
தோழமையுடன்,
ஏகலைவன்.
தோழர்கள் அசுரன் மற்றும் ஏகலைவன், உங்கள் மின்னஞ்சல் பெட்டியை பாருங்கள் அல்லது வினவை தொடர்பு கொள்ளுங்கள்.
karunnidhi, veeramani unmaiyil uppu pottu thinpavarkalaga irunthal thukkil thonguvarkal ithai padithal
//நீங்கள் சாயம் போன கருப்புச்சட்டையை கடாசி விட்டு எங்களைப் போன்றவர்கள் அணியும் விறுவிறுப்பான செஞ்சட்டையை அணி//
ஏன் பாதியில் விடப்பட்டுள்ளது?
பெ.தி.க தோழர்களுக்கு வாழ்த்துக்கள், நன்றி!
//உங்கள் தளத்தை யாரும் அதிகம் பார்ப்பதில்லை, எதைக்குறித்தும் விவாதமும் நடப்பதில்லை. “யாரோ” 5 பேர் ஓட்டு மட்டும் போடுவதால் தமிழ்மணம் வாசகர் பரிந்துரையில் உங்கள் பதிவுகள் தினமும் நான்கைந்து வந்து விடுகின்றன. இனி தினமும் ஒன்று மட்டும் போட்டால் எங்களைப் போல ஏழை பதிவர்களுக்கு உதவியாய் இருக்கும்.//
அனாவசியமான, அபத்தமான வரிகள்.
தோழர் போராட்டம் விடுபட்ட வார்த்தைகளை சேர்த்து விட்டோம். சுட்டிக்காட்டியமைக்கு நன்றி.
அனாவசியமான, அபத்தமான வரிகள் என்பது ஒரு விமர்சனம். ஒரு வரிக்கு பதில் சொல்வதும், மற்றொரு வரியை கண்டு கொள்ளாமல் விடுவதும் சரிதானா என சிந்திக்க வேண்டுகிறேன். ஒரு அரசியல், அமைப்புச் சீரழிவுக்கு இட்டுச் சென்றுள்ள வீரமணியின் அயோக்கியத்தனத்தை தோலுரிக்கும் அதே நேரத்தில் அவரது ஆதரவாளர் என்ற காரணத்துக்காக தமிழ் ஓவியாவின் தளத்திற்கான வருகை குறித்த நையாண்டி எந்த வகையில் ஒரு சரியான, பண்பட்ட அரசியல் விமர்சனம்?
தோழர் போராட்டம்,
வினவில் எல்லா வாசகர்களின் கருத்துக்களுக்கும் நாங்களே பதில் சொல்லுவதில்லை. வினவின் கருத்துக்களை தவறென்று விமரிசிப்பதை வாசகர்கள் விவாதிப்பதையே வரவேற்கிறோம். நாங்கள் தெரிவிக்கும் கருத்துக்களினால் விவாதம் ஒரு தரப்பாக முடிந்து விடக்கூடாது என்பதாலும் இது சரியென கருதுகிறோம். தமிழ் ஓவியாவின் தளத்தில் விவாதம் நடக்கவில்லை என்பது வீரமணியின் நிறுவனமயமான வறட்டுத்தனமான நாத்திகப்பிரச்சாத்தின் விளைவுதான் என்பதையே அப்படி ‘நக்கலாக’ குறிப்பிட்டுள்ளோம். மற்றபடி இதையும் கட்டுரையில் குறிப்பிட்டுள்ளோம். இத்தனை நாள் வரை தன்தலைவரின் பிரச்சார பீரங்கியாகவே ஓவியா செயல்படுகிறார். தலைமையின் தவறுகளை தெரிந்தே ஆதரிக்கும் உறுப்பினர்களை பாவம்பார்த்து விடுவது சரியான அரசியல் அல்ல, இடித்துரைக்கவும், நகைத்துரைக்கவம் வேண்டும். நீங்கள் எதிர்பார்க்கும் ‘இங்கிதமான, நாகரீகமான, நாசுக்கான, பண்பட்ட’ வகைகள் மூலம் வீரமணியின் தவறுகளை தெரிந்தே ஆதரிக்கும் அன்பர்களை மன்னிப்பதற்கு நாங்கள் தயாராக இல்லை. மற்றபடி இது உங்கள் புரிதல்படி எவ்வளவு பண்பற்றதாக இருந்தாலும் அதுவும் ஒரு அரசியல் விமரிசனம்தான். நன்றி
வாங்க தோழர் போராட்டம், இப்படி எதாவது கிசும்பா எழுதுனாதான் பின்னூட்டம் போடுவீங்களா 🙂 எப்படியோ தொடர்ந்து வந்து உங்க கருத்துக்கள் வினவுல வரனும்
ஈ.வே.ரா வை பெரியார் என்று அழைக்காவிட்டால் திட்டுவதில் ஆரம்பித்து அவரது உருவத்திற்கும், இமேஜிற்கும் (தமிழில் எப்படி சொல்வது?) ஒரு தனித்துவம் கொடுத்து, அவரை தனது கட்சியின் சொத்தாக மாற்றியதன் மூலம், அவரது நாத்திகத்தை ஒரு தத்துவமாக வளர விடாமல் அரசியலாக மட்டுமே ஆக்கியது இக்கால தி.க. வினரின் மிகப் பெரிய பிழை. நான் நாத்திகம் பேசும்போது “போடா நீயெல்லாம் கருப்புச்சட்டை பெரியாரிஸ்ட்தானே” என்று பொதுப் படுத்தி விட்டு தி.க. வின் குறைக்கெல்லாம் நாத்திகர்கள் பதில் சொல்லவேண்டும் போல காட்சிப் படுத்துவது நாத்திக எதிர்ப்பாளர்களுக்கு வசதியான ஆயுதம். ஒரு வேளை பெரியாரின் எழுத்துகள் பொதுவுடமை ஆகிவிட்டால் அதன் சாராம்சத்தைப் பரப்ப தி.க. சாராத நாத்திக வாதிகளுக்கு பெரும் உதவியாக இருக்கும்.
//நீங்கள் எதிர்பார்க்கும் ‘இங்கிதமான, நாகரீகமான, நாசுக்கான, பண்பட்ட’ வகைகள் மூலம்//
முதலாவதாக ‘இங்கிதமான, நாகரீகமான, நாசுக்கான, பண்பட்ட’ வகைகளை நான் எதிர்பார்ப்பதாக உங்களிடம் கூறவில்லை. எதிரிகள்
பதிலளிக்கவே வழியில்லாத ஒரு தீர்க்கமான அரசியல் விமர்சனத்தில், அனாவசியமான வரிகளின் மூலம் குறிப்பிட்ட பகுதியை எதிரிகள் பிடித்துக் கொண்டு தொங்குவதற்கு நாமே வழி ஏற்படுத்திக் கொடுக்கிறோம் என்பதைத்தான் சுட்டிக்காட்டுகிறேன். இதோ, இந்த மொத்த விமர்சனத்தின் எந்தப் பகுதிக்கும் பதிலளிக்க வழியில்லாமல், தனது பதிவுத் தள புள்ளி விபரங்களை அளித்து ‘கண்ணியமாக’ தமிழ் ஓவியா முடித்துக் கொண்டு விட்டார். இதற்கு நாம்தான் வாய்ப்பளித்திருக்கிறோம் என்பதை நீங்கள் மறுக்க முடியுமா?
மற்றபடி இந்த கண்ணியக் கருமாந்திரங்களில் எல்லாம் ஒரு கம்யூனிஸ்ட் என்ற முறையில் எனக்கு நம்பிக்கை இல்லை. கடைந்தெடுத்த அயோக்கியர்கள் கண்ணியவான் வேடம் போடவும், சரியான கருத்துக்களைச் உரக்கச் சொல்லும் நாம், கடிநாய் கம்யூனிஸ்டுகள் என்று பெயரிடப்படவும், நாமே வழி சமைக்கிறோம் என்பதைத்தான் நான் வலியுறுத்துகிறேன். மேற்படி இதே தமிழ் ஓவியாவிற்கும், எனக்கும் கீற்று குழுமத்தில் நடந்த விவாதத்தை கீழே இணைத்துள்ளேன். ‘இங்கிதமான நாகரீகமான, நாசுக்கான, பண்பட்ட’ வகைகள் குறித்த எனது புரிதலுக்கு கீழ்க்காணும் உரையாடலே சான்று.
தமிழ் ஓவியா Thu, Jan 1, 2009 at 7:25 AM எழுதியது
கழகத் தோழர்களுக்கு ஒரு முக்கிய வேண்டுகோள்!
தமிழர் தலைவர் பெயரை
கி. வீரமணி என்றே விளம்பரம் செய்யவும்
திராவிடர் கழகத் தலைவர் தமிழர் தலைவர் மானமிகு கி. வீரமணி அவர்களின் பெயரை கழகத் தோழர்கள் விளம்பரம் செய்யும் பொழுது பொதுமக்கள் மத்தியில் குழப்பம் ஏற்படும் வகையில் அவர் பெயருக்கு முன் உள்ள முன்னெழுத்தை (Initial) பலவாறாக வெளியிட்டு வருகின்றனர்.
சென்னையில் நடைபெற்ற திராவிடர் கழக மகளிரணி மாநாட்டில் (6.9.2008) பெயருக்குமுன் தந்தை பெயரோடு தாயாரின் பெயரும் இடம்பெறவேண்டும் என்ற ஒரு தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. அதன் அடிப்படையில், நானே முன்மாதிரியாக இருக்க விரும்புகிறேன் என்று சொல்லித் தான் தாயாரின் பெயரான மீனாட்சி அம்மாள் என்பதில் உள்ள மீ யையும் இணைக்க விரும்புவதாகக் குறிப்பிட்டார்.
மகளிர் மாநாட்டுத் தீர்மானத்தில் உள்ள பெண்களுக்கான உரிமைக்கு அழுத்தம் கொடுக்கும் வகையில் அதனை அறிவித்தார்.
அதேநேரத்தில், பல்வேறு ஆவணங்கள், அலுவலக முறைகளில் ஏற்கெனவே பதிவாகியுள்ள கி. வீரமணி என்பதை மாற்றி அமைப்பதில் பல்வேறு சிரமங்கள் இருப்பதாலும், திட்டமிட்டே ஊடகங்கள் குழப்ப முயலுவதாலும், கழகத் தோழர்கள் ஒரே மாதிரியாக இல்லாமல் பலவாறாக விளம்பரம் செய்வதாலும் இவற்றைத் தவிர்க்க மானமிகு கி.வீரமணி என்று மட்டும் தமிழர் தலைவர் அவர்களின் பெயரைப் பயன்படுத்துமாறு கேட்டுக்கொள்கிறோம்.
கழகத் தோழர்கள் வீட்டில் பிறக்கும் குழந்தைகளுக்கு தாயார் பெயர் –
அடுத்து தந்தையார் பெயரில் உள்ள முன்னெழுத்துகளை (Initial)இணைத்து வரும் காலத்தில் பதிவு செய்வதைக் கட்டாயமாகக் கொள்ளுமாறும் கேட்டுக்கொள்ளப்படுகின்றனர்.
போராட்டம் Fri, Jan 2, 2009 at 10:43 AM எழுதியது.
கவலை வேண்டாம். மக்கள் எப்பொழுதுமே அவரை மானங்கெட்ட வீரமணி என்றே அழைத்து வருகிறார்கள். சந்தேகமிருந்தால், தோழர் கேடயம் எழுதிய காசு,பணம் தந்தால் எதை வேண்டுமானாலும் செய்யக்கூடியவர் வீரமணி!, உழைக்கும் மக்களை இழிவுபடுத்துவதை வாழ்வியல் சிந்தனையாக கொண்டிருக்கும் வீரமணி!!!, வாழ்வியல் சிந்தனையா? வக்கிர சிந்தனையா?, அட நம்புங்க… சத்தியமா இது ‘சுயமரியாதை’ இயக்கம்தான்… முதலான கட்டுரைகளை படித்துப் பார்க்கலாம்.
தமிழ் ஓவியா Sat, Jan 3, 2009 at 9:24 AM எழுதியது.
எழுத்தில் ஒரு நாகரிகம் வேண்டும். இந்தக் கட்டுரைகளை ஏற்கனவே படித்து விட்டேன். படித்து விட்டு கோபம் வரவில்லை மாறாக இதை எழுதியவர்களை நினைத்து பரிதாபம்தான் வந்தது. பெரியார் சொல்லுவாரே “பைத்திய்காரன் முதலிலேயே நல்லா உளறுவான், அதிலே கள்ளையும் குடுடிச்சிட்டு உளறுனா” எப்படியிருக்கும்? அப்படித்தான் இருக்குது இந்தக் கட்டுரைகள்.
ஆரோக்கியமாக விவாதம் செய்தால் அதில் ஒரு முடிவு கிட்டும். உங்களை போன்றவர்களிடம் விவாதம் செய்வது நேரக்கேடு. உங்களுக்கு இந்தப் பதிலே போதும் . ஆதலால் இத்துடன் இவிவாதத்தை முடித்துக் கொள்கிறேன்.
போராட்டம் Mon, Jan 5, 2009 at 11:06 AM எழுதியது.
//எழுத்தில் ஒரு நாகரிகம் வேண்டும்.//
பெரியாரை ‘நாகரிகம்’ கருதி பார்ப்பனர்கள் எவ்வாறு ஒதுக்கினார்களோ, ஒதுக்குகிறார்களோ, அதே போல ‘நாகரிகமாக’ எமது கருத்துக்களை ஒதுக்குகிறீர்கள் போலும்.
//உங்களை போன்றவர்களிடம் விவாதம் செய்வது நேரக்கேடு. ஆதலால் இத்துடன் இவிவாதத்தை முடித்துக் கொள்கிறேன்.//
அக்கட்டுரைகள் எழுப்பும் கேள்விகளில், விமர்சனங்களில் குறைந்தபட்சம் ஒரு விடயத்திற்கு கூட பதிலளிக்காமல் தாங்கள் விவாதத்தை முடித்துக் கொண்டது சாலச் சிறந்தது. தங்களுடைய நேரத்தை வீணாக்கியதற்காக மன்னிக்கவும். தாங்கள் வழக்கம் போல் சுயமரியாதையைக் கைவிட்டு, நிறுவனங்களையும், அறக்கட்டளைகளையும் வைத்து காசு பார்க்கும் சமூகத் தொண்டை ஆற்றலாம். பவள விழாக்களை நடத்திக் கொண்டிருக்கலாம்.
//ராஜீவ் கொலையின் பின்னாளில் ஈழத்தமிழருக்கு ஆதரவாக தமிழகமெங்கும் ம.க.இ.க வீச்சாக இயக்கம் நடத்திய நாளில் சென்னையில் ஒரு கூட்டம் நடத்துவதற்கு கூட பெரியார் திடலை தருவதற்கு பயந்து கொண்டு மறுத்தவர்தான் இந்த வீராதி வீரமணி./// உண்மையான காரணம், வீரமணி 1991 வரை புலிகளை மறைமுகமாக பல விதங்களில் ஆதரித்தார்.
1991 ராஜீவ் கொலைக்கு பின், தமிழகத்தில் பல ஆதாரவாளர்கள் கைது செய்யப்பட்டதை கண்டு மிகவும் பயந்து விட்டார். சிறைவாசத்தில் இருந்து தப்புவதற்க்கும், “சொத்துக்களை” பாதுகாக்கவும் அன்றைய முதல்வர் ஜெவிடம் சரணடைந்தார். அதை நியாயப்படுத்த பல சப்பை கட்டு கட்டினார்.
மற்றபடி, நல்ல கட்டுரை.
உண்மையான பதிவு. தோழர் ஸ்டாலின் (http://kedayam.blogspot.com) வீரமணியைப் பற்றி ஒரு தொடர் (காசு,பணம் தந்தால் எதை வேண்டுமானாலும் செய்யக்கூடியவர் வீரமணி! ) அழகாக எழுதி உள்ளார். அதனையும் பார்க்கவும்
…90களின் ஆரம்பத்தில் “பெரியாரை வீரமணி கும்பலிடமிருந்து விடுதலை செய்வோம் வாரீர்!” என புதிய ஜனநாயகத்தில் வந்த தொடர் கட்டுரை-ல் உலகில் பெரும் விவாதத்தையும் கிளப்பி வீரமணி கம்பெனியை முற்போக்கு உலகில் எவ்வளவு தான் அம்பலப்படுத்தினாலும்… பெரியாரின் வாள் ஏந்தி களத்தில் நிற்க தைரியமில்லாத நபர்களை பேசுவதில் என்ன பயன் வீரத்தை அடகுவைத்து எடைபோட்ட வீரமணியையு மறக்கவில்லை மக்கள்…, காதெறுப்பேன்,தலையறுப்பேன்னு சொன்னவனை தன் மஞ்சள் போர்வையால் மூடிய தாத்தாவையு மறக்கவில்லை மக்கள்…, என்பதை நாம் அறிவோம்! இனியாவது களத்தில் கொண்டு செல்ல செஞ்சட்டை அணிந்து நிற்பார்களா!!.. பொருத்திறுந்து பார்ப்போம்
பெ.தி.க தோழர்களுக்கு வாழ்த்துக்கள், நன்றி!
90களில் வந்த ““பெரியாரை வீரமணி கும்பலிடமிருந்து விடுதலை செய்வோம் வாரீர்” கட்டுரையை இப்போது அவசியம் கருதி (பு.ஜ.) அனுமதியோடு இணைய பிரசுரம் செய்யுங்கள்.
மக்களின் எல்லா வாழ்க்கைப்பிரச்சினைகளை பேசி போராடும் முழுமையில்தான் நாத்திகத்தை மக்களிடம் கொண்டு செல்ல முடியும்.
வெறும் நாத்திகம் பேசுவோற்கு தேவையான வாக்கியம்
அவசரப்படாதீர்கள் நண்பர்களே. பணபலமும், அரசியல் பலமும் அவ்வளவு எளிதாக பெரியாரை விடுவிக்க விடாது. நேற்று வேறொரு டிவிசன் பெஞ்ச் முன்பு மேற்படி வழக்கை அப்பீல் விசாரணக்கு கொண்டு வந்து, நீதிபதி சந்துருவின் உத்தரவிற்கு தடை வாங்கி விட்டார்களே. அந்த பெஞ்சில் உள்ள ஒரு நீதிபதி மறைந்த முரசொலி மாறனின் உறவினர் என்றும் கேள்வி. அதற்கும் அதே பெஞ்சில் வந்த மத்திய அமைச்சர் ராஜா ஜூனியர் விகடன் பத்திரிக்கைக்கு எதிராக செய்த அப்பீல் வழக்கில் தடை உத்திரவு பெறப்பட்டதற்கும் ஏதேனும் சம்பந்தம் உண்டா என்று கேட்காதீர்கள்.
http://timesofindia.indiatimes.com/NEWS/City/Chennai/Raja-case-HC-restores-gag-order-on-Tamil-mag/articleshow/4835674.cms
Good
கட்டுரையில் ஒரு தவறு!
நீதிபதி சந்துரு தீர்ப்பினை எதிர்த்து வீரமணி மேல் முறையீடு செய்து அதன்படி தீர்ப்பினை செயல்படுத்துவதை நிறுத்துமாறு கேட்டிருப்பதை உயர்நீதிமன்ற நீதிபதிகள் அடங்கிய பெஞ்ச் ஏற்று உத்தரவிட்டிருக்கிறது. மேலும் மேல் முறையீடும் விசாரணைக்கு ஏற்றுக்கொள்ளப்பட்டிருக்கிறது. எனவே இந்த வழக்கில் பழைய நிலையே அதாவது பெரியார் திராவிடர் கழகம் புத்தகத்தை வெளியிடுவதற்கான தடை நீடிக்க்கிறது. இந்த மேல் முறையிட்டில் இந்த வெளியீட்டின் மூலம் பெ.தி.கவினர் நிறையா சம்பாதிப்பார்கள், தங்களுக்கு நட்டம் ஏற்படும் என வீரமணி சேட்டு வெட்கம் கெட்டு குறிப்பிட்டிருக்கிறார். ஆக பெரியாரை வீரமணி கும்பலிடமிருந்து விடுதலை செய்ய சட்டபூர்வ போராட்டம் மட்டும் போதாது, மக்கள் அரங்கிலும் போராட்டங்கள் நடத்தப்படவேண்டும் என்பது புரிகிறது.
கட்டுரையில் இந்த மேல்முறையீட்டின் விவரங்களை தெரிந்து கொள்ளாமல் தவறாக வெளியிட்டமைக்கு மன்னிக்கவும்.
பெரியாரின் நூல்கள் பரவுவதைத் தடுக்க வீரமணி நீதிமன்றம் சென்று விடாப்பிடியாகப் போராடி பெரியாரின் சிந்தனைகள் பரவுவதைத் தடுக்கிறார். ஆனால் அதே நேரத்தில் அவர் எழுதிக் கழிக்கும் ‘வாழ்வியல் சிந்தனைகள்’ நூல்களை கோவை பாரதியார் பல்கலையில் பாடமாக்கும் அளவிற்கு லாபி செய்திருக்கிறார். வீரமணிக்கு வாய்த்திருக்கும் கைக்கூலிகளும், பொறுக்கிகளும் அந்நூல்களை விற்றுத்தள்ள லேகியம்ம் விற்கும் மோசடிப்பேர்வழிகளைப் போல அந்நூலைப் பற்றி அளந்து தள்ளுகின்றனர். விடுதலை பத்திரிக்கையில் அதனை ஒரு எழுத்தாளர் வீரமணியின் நூலை ‘உரைநடைத் திருக்குறள்’ என்று ஒரே போடாகப் போட்டிருக்கிறார். இந்நூல் பல பதிப்புகளைக் கண்டு தமிழ்நாட்டை நாசப்படுத்திக்கொண்டும் பெரியாரின் நூல்கள் நீதிபதியின் பேனாவுக்காகக் காத்தும் கிடக்கும் கொடுமையை எண்ணும்போது நமக்கெல்லாம் கொதிக்கின்றது.வீரமணி எழுதிக் கழிக்கும் ‘வாழ்வியல் சிந்தனை’யின் மகிமையை கேடயம் எனும் வலைப்பதிவு சென்ற ஆண்டு புட்டுப் புட்டு வைத்திருந்தது. அதனைப் படித்து விட்டு வீரமணி கும்பலை எதனைக் கொண்டு சாத்தலாம் என்று முடிவூ செய்யுங்கள். 1)http://kedayam.blogspot.com/2008_08_01_archive.html
2
) http://kedayam.blogspot.com/2008_09_01_archive.html அன்புடன் செங்கதிர்
poda dubuku
வினவு ,
விரமணியை தவிர்த்து .. கருஞ்சட்டைக்கும் செஞ்சட்டைக்கும் என்ன வித்தியாசம்? விளக்கத்தை எதிர்பார்க்கிறேன்.. இதையெல்லாம் மீறி பெரியாரின் கருத்துகள் பரவலாக்க்ப்பட வேண்டம் என்பதும், முறையாக வட நாட்டவர்களுக்கும் அறிமுக படுத்த பட வேண்டும் என்பதும் என் ஆசை…
அக்னிபார்வை,
நீங்கள் பாட்டுக்கு சுலபமாக கேள்வி கேட்டுவிட்டு போய்வீட்டீர்கள். கருப்புக்கும், சிவப்புக்கும் உள்ள வித்தியாசத்தை எழுதவேண்டுமென்றால் ஒரு நூறு பக்கங்களாவது தேவைப்படும். இதற்கு தீர்வு நேரில் சந்தித்தால் பேசி விளக்கமளிக்கலாம். எழுதினால் கை ஒடிந்து விடும் அளவு சிரமப் படவேண்டும் தோழர். ஒரு மாதத்திற்குள் வினவில் ஆரம்பிக்கப்படும் மார்க்சியக் கல்வியில் இதைப் பார்க்கலாம்.( நாங்கள் பாட்டுக்கு வாக்குறுதிகளை அள்ளி வீசுகிறோம். நிறைவேறுமா?) உடனடியாக என்றால் நேரில் வாருங்கள். மற்றபடி இந்தக் கேள்விக்கு பின்னூட்டமிடும் தோழர்கள் சுருக்கமாக எடுத்துரைக்குமாறு கோருகிறோம். நன்றி அக்னி.
சரி பொருத்திருந்து தெரிந்துகொள்கிறேன்
விரமணியை
pesama vattikku koduthu vangittuppokattum vidunga dhana
pesama avarai vattiththozhi pakkavidunga dhana
பழம்பெரும் முற்போக்கு சிந்தனையாளர் ரவி சீனிவானசின் கட்டுரைகள்
http://ravisrinivas.blogspot.com/2009/07/blog-post_30.html
http://keetru.com/literature/essays/ravi_srinivas.php
ம்ம்ம்ம்ம்ம்ம் வீரமணி கலைஞ்ர் குமபல் எல்லாம் ஊரரிந்த துரோகிகள் ஆனால் ம.க.இ.க அமைப்பிற்கும் அதற்கு காவடி தூக்கும் வினவுக்கும் திடிரேன பெரியார் பாசம்.. பிள்ளகிபிடிக்கிற வேலைய ஆரம்பிச்சாசா நடக்கட்டும்
வினவுக்கு வினை செய்ய ஆள் கிடைக்கவில்லை போலும் அதன் ஆசிரியரை சீண்ட வந்துள்ளது. ஆமாம் உங்களுக்கு ஆசிரியர் மேல் கடுப்பா இல்லை அவர் பெரியாரியலை யாருடைய தயவும் இல்லாமல் உலகமயமக்கியுள்ளார் என்ற கடுப்பா. நீங்கள் வேண்டுமானால் இயக்கம் எப்படி நடத்த வேண்டும் என்று அவரிடம் கற்றுக்கொள்ளலாம். உங்களால் வினை தான் செய்ய முடியுமே தவிர வேறு ஒன்றும் செய்ய முடியாது. ஏதோ பெரியாரியலை உலகுக்கு எடுத்து செல்ல மிகவும் அரும்பாடுபட்டு தினமும் தெரிவில் நின்று தொண்டை கிழிய கத்தியவர்கள் போல ஒரு பதிவு வேறு. வீரமணி இல்லை என்றால் நீங்களே இன்று பெரியாரியலை தொட்டுக்க கூட பேசமாட்டீர்கள் தோழர்களே. புத்தர் , காந்தி கொள்கைகள் எப்படி ஆனது அதுபோல போயி இருக்கும். முதலில் செஞ்சட்டை போட்டுகொண்டு a+b ஹோல் கொயர் என்று பேசுவதை நிறுத்திவிட்டு எல்லாருக்கும் புரியுற மாறி பேசுறதுக்கு பழகுங்க அப்புறம் நீங்க வெளுத்துப்போன கருஞ்சட்டை செய்ற வேலைய செய்யலாம்.
ஏதோ பெரியார் மேல ரொம்ப பொறுப்பு உள்ளவர்கள் போல படம் போட்டு விளக்க வந்துவிட்டார்கள். உண்மையிலேயே பொறுப்பு உள்ளவர்கள் என்ற வருடத்திற்கு குறைந்த பட்சம் 10 பேருக்காவது பெரியார் கொள்கையை எடுத்து சொல்லி அவர் வழியில் நடக்க உதவுங்கள். அதனை விட்டு வீரமணியிடம் இருந்து பெரியார் கொள்கையை விடுதலை வாங்கி விட்டார்களாம். கேட்கவே வெட்கமாக இருக்கிறது பெரியாரின் திடலில் இருந்து பெரியாரை விடுதலை வந்குகிரதம் இந்த கூட்டம். தான் வீட்டிலயே இருந்து கொண்டு எனக்கு விடுதலை என்று கூறுவதை போன்று உள்ளது.
இதோ பெரியார் சொல்லுகிறார் கேட்டு கொள்ளுங்கள் ………………
“நல்ல கல்வி அறிவுள்ளவர்; தொழில் ஆற்றலுள்ளவர் ; பொறுப்பானவர். அவர் நினைத்திருந்தால், ஆசைபட்டிருந்தால் நமது இயக்கம் அவருக்குள்ள செல்வாக்கு இதெல்லாம் கொண்டு முனுசீப்பாகி இருப்பார். வக்கீல் தொழில் செயிதிருந்தாலும் நல்ல அளவுக்கு பணம் சம்ப்பாதித்து இருப்பார். இதனையெல்லாம் விடு பொதுத் தொண்டு செய்யவேண்டும் மென்ற கருத்துடன் செய்து வருகிறார். தங்களுடைய வாழ்வு தங்களுக்காகவே இருக்க கூடாது. பொதுமக்களுக்கு எதாவது தொண்டு செய்யவேண்டுமென்கிற தன்னலமட்ட்ற தன்மைக்காகவும் நிறைய பாராட்ட கடமைப்படிருக்கிறேன்.” ( விடுதலை 25.02.1968 )
செஞ்சட்டை ஏன் பெரியார் தி.க வை தொட்டக இழுக்கிறது. வேறு ஏதும் வினை செய்யவோ?
/இதோ பெரியார் சொல்லுகிறார் கேட்டு கொள்ளுங்கள்//
அய்யா, நீர் எல்லாம் பெரியாரின் தொண்டர் எனக் கூறிக்கொள்ள வெட்கமாக இல்லை.. பெரியார் 1968 இல் கூறிய ஒரு வாக்கியத்தை 2009 ம ஆண்டு கூறுவது… எப்படி சரியானது ஆகும்.. எதையும் பகுத்து அறிந்து பார் என்ற பெரியாரின் அடிப்படை கொள்கையையே மறந்து பொய் விட்டீரே..இந்த வாக்கியத்தின் படி வீரமணி 1968 இல் ஒழுங்காக இருந்தார் என்றுதான் அர்த்தப் படுத்திக் கொள்ள முடியும்… அதற்கு மேல் என்ன விளங்கிக் கொள்ள முடியும் என்று தெரியவில்லை..
செஞ்சட்டைகள் ஏதோ திராவிடர் கழகத்திற்கும் அதன் தலைமைக்கும் ஏதோ புதிதாக வினை செய்வது போன்று அந்த வினைக்கு ஆதரவாக பல தோழர்கள் மறுமொழி இடுவது, ஒருபக்கம் சிரிப்பாகவும் இன்னொரு பக்கம் நுனிப்புல் மேயிபவர்கள் இவளவு பேர் இருகிறார்களா என்ற ஆச்சரியத்திலும் வியக்க வைக்கிறது.
இந்த வினை செய்யும் வேலையே செஞ்சடைகள் அய்யா காலத்திளிரிந்து இன்று ஆசிரியர் காலம் வரை இதனையே தொழிலாக கொண்டு இயங்கிவருகிறது. ஆதனால்தான் இன்று வரை அவர்களையும் வளர்த்துக்கொள்ள வில்லை அவர் கொள்கையில் செல்லும் அடுத்தவர்களையும் வளரவிடுவதில்லை. என்னே ஒரு பொதுநலம்? இதற்க்கு மறு மொழி போடுவதற்கு நம்மை போன்ற பெரியார் தொண்டர்கள் வேறு கருத்து சண்டை போட வேண்டியுள்ளது. இந்த செஞ்சட்டை என்ன மனதில் வைத்து இந்த பதிவு போட்டது என்பதை மறுமொழி இடும் உண்மையான பெரியார் தொண்டர்கள் புரிந்து கொள்ளவேண்டும்.
இதோ ஏ.எஸ்.கே என்று மக்களால் அன்பாக அழைக்கப்பட்ட ஏ.எஸ்.கிருஷ்ணமாச்சாரி அவர்கள் ” பெரியாரும் அம்பேத்கரும்” நூலில் சொல்லுகிறார் கேளுங்கள் தோழர்களே……….
“1934-1935 – ல் இந்திய கம்யுனிஸ்ட் கட்சியில் நான் உறுபினராக சேர்ந்தேன்; அன்று முதல் இன்று வரை (ஏன் மூச்சு உள்ளவரை) இந்த கட்சியில் இருந்து வருகிறேன்;வருவேன். பெரியார் ஈ.வே.ரா அவர்கள் பல தடவை எனிடம் கூறியுள்ளார்.
நீங்கள் செயவேண்டிய வேலையை நான் செய்து வருகிறேனே, அப்படி இருக்க ஏன் திரு… என்னை தாக்கி கொண்டே இருக்கிறார்?
அதாவது, கடவுள் எதிர்ப்பு, ஜாதி பிரிவினை, தீண்டாமை, சமுதயக்கொடுமை, இவை எல்லாவற்றையும் எதிர்ப்பது கம்முனிஸ்டு கட்சியின் வேலை அல்லவா? நான் அந்த வேலையயை செய்து வருகிறேனே….அவ்வாறிருக்க கம்முனிஸ்டு கட்சி என்னை எதிர்ப்பதேன்? என்று பெரியார் அவர்கள் என்னிடம் வினயமாகவும், உருக்கமாகவும் பன்முறை கேட்டு வந்துள்ளார். இது முற்றிலும் உண்மை. பெரியார் அவர்களை பற்றி சரியான கணிப்பு பல தோழர்களுக்கு இல்லை என்பது ஏன் கருத்து. இந்த நூலை எழுதுவதுற்கு இதுவும் ஒரு முக்கிய காரணம்”
எவளவு தெளிவாக ஏ.எஸ்.கே அவர்கள் கூறியுள்ளார் அன்றே. இது இன்றைய திராவிடர் கழகத்தின் தலைமை ஆகிய ஆசிரியர் அவர்களுக்கும் மிக பொருத்தமாகும்.
புரிதல் இல்லாமல் ஏதோ வந்தோம் மறு மொழி இட்டு சும்மா வேதேண்டவததிர்க்கு பேசியதே பேசிக்கொண்டு (சொத்து சேர்த்தார், என்ன செய்து கிழித்தார், துரோகி) இருப்பது விவாதத்திற்கு ஒத்துவாறது தோழர்களே.
இப்பொழுதாவது புரிந்து கொள்ளுங்கள் தோழர்களே செஞ்சட்டை இந்த பதிவை ஏன் போட்டார் என்று.
பெரியாரே இன்றைக்கு இருந்திருந்தாலும் இந்த செஞ்சட்டை தன்வேலய கண்பித்து கொண்டுதான் இருக்கும். இது தெரியாமல் மறு மொழி இட்டு சண்டை இட்டு கொல்லாமல் பெரியாரின் கொள்கைகளை உங்களால் மக்களுக்கு எவளவு கொண்டு செல்லமுடியும் என்று யோசியுங்கள். அதனை விட்டு வீரமணிக்கு பலபிசெகம் செய்றோம், கூஜா பிடிகுறோம், துரோகி கூட்ட தலைமை…….இதெல்லாம் ஒரு பொளப்பா. …..
உங்களால முடிஞ்ச உங்கள சுற்றி இருக்குற நாலு பேருக்கு பெரியார் கொள்கைய எடுத்து சொல்லி பெரியார் கொள்கைய வளங்க. அத விட்டுபுட்டு சும்மா அந்த காலத்துல பெரியார் பாராட்டுனது இந்த காலத்துக்கு ஒத்துவராது. இப்போ புதுசா எழுந்து வந்து இன்னொரு முறை எங்க காலத்துல ஒரு முறை நேர பாராட்டனும் அப்படினெல்லாம் சொல்லபடாது. சுதந்திரம் வாங்குறதுக்கு முன்னாடி படிச்சி வாங்கின கோல்ட் மெடல் இப்போ காமிக்க கூடாது இன்னொரு முறை நீ இந்த காலத்து படிப்ப படிச்சி வாங்கு அப்படின்னு ஒரு 90 வயசு ஆள பார்த்து கேக்குற மாறி இருக்கு. நிறைய பேருக்கு புரிதல் இல்லை ஆனாலும் என்ன பண்ணுறது……..!
அதெல்லாம் சரி மாப்ள தீட்சிதர் குடுமிய புடிச்சு ஆட்ட ஏன் உங்க கொய்யா வரல… கருப்பு சட்டை கருப்பு, சேப்பு, வெள்ளையா மாரிப்போன மருமம் என்ன…???
யாழ்விழி……
நேரடியாக விஷயத்திற்கு வாருங்கள்..
பெரியாரின் படைப்புகள் யாருக்கு சொந்தம்?
எந்த மக்களுக்காக பெரியார் 96 வயதிலும், வயிற்று வலியோடு பாடுபட்டாரோ,
அந்த மக்களுக்கு சொந்தமா? இல்லை அது தனிநபரின் சொத்தா?
மக்களுடையது என்றால், அந்த படைப்புகளை யார் அச்சடித்து மக்களிடம் கொண்டு சென்றால் என்ன?
பெரியாரின் படைப்புகளுக்கு, பெரியாரின் சிந்தனைக்கு வாரிசுரிமை / சொத்துரிமை கேட்பது என்பதே, பெரியாரை இழிவு படுத்துவதாக நான் கருதுகிறேன். நீங்கள்?
இல்லை.. பெரியாரின் சிந்தனை / படைப்புகள், தனிநபர் / ஒரு குழு (கழகம்/ நிறுவணம்) க்கு தான் சொந்தம் என்று கூறுவது பற்றி உங்கள் கருத்து என்ன?
ஆதி
மன்னிக்கவும்……
தவறுதலாக யாழ்விழி என்று அடிப்பதற்கு பதில் யாழினி என்று அடித்து விட்டேன்.
இனி எச்சரிக்கையுடன் அடிக்கிறேன்.
ஆதி
It is very good and we also note that justice sundru also unhappy about veeramany acting
At last Periyar must be laughing in his grave. Thanks to the court verdict to free Periyar from PDK.
இன்றைக்கு பெரியாரை பாது காக்கிறோம் என்றும் அவரது கருத்துகளை பரப்புகிறோம் என்றும் சொல்லுபவர்களை அதற்காக வழக்கு தொடுதவர்கலையும் பார்த்து கேட்கிறேன் .
வாலி என்ற பார்பன கவிஞர் பாபா திரைப்படத்திலே ஒரு பாடல் வரியில் “அதிசயம் அதிசயம் பெரியார்தான் ஆனதென்ன ராஜாஜி ” என்று பெரியாரையே ராஜாஜியாக மாற்றினர் …பிறகு திராவிடர் கழகத்தின் சார்பில் அதன் தலைவர் வழக்கு தொடர்ந்ததின் காரணமாக அவர்களாகவே அந்த வரியை நீக்கினர்….
சொத்து கணக்கு போடும் சோடைகளே
நீஙகள் ஏன் இதற்க்கு வழக்கு தொடுக்க வில்லை .அபோது எங்கே போனது உங்கள் பெரியாரின் பற்று ?
டெல்லி ல பெரியார் மையம் இடித்து தரை மட்டம் ஆக்கப்பட்ட போது எங்கே போனது உங்கள் பெரியாரின் பற்று ?
மாறாக இன்று இரண்டு டெல்லி பெரியார் மையங்களை உருவாகியது யார்?
பெரியார் காலத்தில் 15 இலட்சமும் மணியம்மையார்
காலத்தில் 60 இலட்சமும் வீரமணி காலத்தில் 80 இலட்சமும் வரி பாக்கி கட்ட வேண்டும் என்று கூறி பெரியாரின் அறக்கட்டளைகளை முடக்க நினைத்த போது அதை எல்லாம் வென்று இன்று பெரியாரின் அறக்கட்டளைகள் அனைத்தும் பெரியாரின் பெயரை சொல்லும் படி செய்தது யார்?
பெரியாருக்குகாக வழக்கு தொடுப்பவகள் நிறுவியர் பெரியார் சிலைகள் எத்தனை.?பெரியார் படிப்பகங்கள் எத்தனை ?
———————————————————————————————————————————–
பெரியார் ஈ.வெ.ரா.(6.6.1964)-விடுதலையில் எழுதியது
வீரமணி அவர்கள் M.A.,B.L. பட்டம் பெற்றவர்.நல்லா கெட்டி கார தன்மையும் புத்தி கூர்மையும் உள்ளவர்.அவர் MA BL பாஸ் செய்து வக்கீல் தொழிலில் இறங்கிய உடன் மாதம் ரூ 300,ரூ400 வரும்படி வரத்தக்க அளவுக்கு தொழில் வளர்ந்ததோடு கொஞ்ச காலத்திலயே மாதம் ரூ 500 ரூ 1000 தொழில் வளம் பெற்று வரும் நிலயை கண்டவர் .இந்த நிலையில் அவர் ஒரு சாதரண ஏழை குடும்பத்தை சார்ந்த வராகவும் இருந்து வந்தவர் .இந்த நிலையில் சுயநலமில்லாது எவ்வித பொருள் ஊதியத்தையும் கருதாமல் பொது தொண்டு செய்ய ஒருவர் வந்தார் என்றால் ,இது போல மற்றொருவர் ,வந்தார் வருகிறார் வரக்கூடும் என்று உவமை சொல்லக்கூடாத ஒரு மாபெரும் காரியம் என்றே சொல்லல வேண்டும் .அப்படிப்பட்ட ஒருவரை நாம் தக்க படி பயன் படுத்தி கொள்ளா விட்டால் அது நம்முடைய அறியமையாகவே முடியும் என்ற எண்ணத்தின் மீதே அவரை நம் இயக்க தலைமை பிரச்சாரகராகவும்,நமது “விடுதலை ” ஆசிரியராகவும் பயன்படுத்தி கொள்ள முன்வந்து ,அவருடைய ஏகபோக ஆதிக்கத்தில் “விடுதலை”யை ஒப்படைத்து விட்டேன் .
“விடுதலை ” பத்திரிக்கையை நிறுத்திவிடாததற்கு இதுதான் காரணம்!
இனி “விடுதலை”க்கு உண்மையான பிரசுர கர்த்தாவாகவும் ஆசிரியராகவும் வீரமணி அவர்கள் தான் இருந்து வருவார் .
எந்த நிலையில் வீரமணி அவர்கள் இந்த பொறுப்பை ஏற்கிறார் என்றால் “விடுதலை”யை நான் நிறுத்தி விட போவதை அறிந்த சிலர் “விடுதலை “பத்திரிகை காரியாலயத்தையும் அச்சு இயந்திரங்களையும் மாதம் ஒன்றுக்கு 1000 ரூபாய் முதல் 1500 ரூபாய் வரை வாடகைக்கு கேட்டு கொண்டிருந்த நிலையில் அதை வாடகைக்கு கொடுப்பதை விட நிறுத்தி விடுவதே மேல் என்று நம்முடைய நண்பர்கள் எல்லாரும் நமக்கு வேண்டுகோளும் அறிவுரையும் விடுத்தது கொண்டிருக்கும் நிலையில் ,இயக்க நலத்தையே குறியாக கொண்டு பொறுபேற்க முன்வந்தார் .ஆகவே “விடுதலை”யின் 25 ஆம் ஆண்டு துவக்கத்தில் லட்ச ரூபாய்களை “விடுதலை” நடப்புக்காக செலவிட்டு நஷ்டமடைந்த நிலையில் ஏற்க முன்வந்த வீரமணி அவர்களது துணிவையும் தியாகத்தையும் சுயநலமற்ற தன்மையையும் கருதி “விடுதலை”யை வீரமணி அவர்களிடம் ஒப்படைக்க படுகிறது .
இதற்க்கு பொதுமக்கள் இல்லாவிட்டாலும் ஏன் இப்படி சொல்லுகிறேன் என்றால் ,நம் மக்களிடம் எந்த குணம் இருந்தாலும் இல்லாவிட்டாலும் நன்றி காட்டுகிற குணம் என்பது பெரிதும் கிடையாது .கிடையவே கிடையாது .அது இல்லாவிட்டலும் நம்பிக்கை துரோகம் செய்யாமலாவது இருப்பது என்பது அரிது மிக மிக அரிது .ஆதலால் விடுதலை க்கு பொது மக்கள் ஆதரவு பெரிதும் இருக்காது என்பதோடு பல தொல்லைகள் ஏற்பட்டும் வருகிறது என்பதோடு மேலும் வரவும் கூடும் அதை பற்றி எனக்கு கவலை இல்லை .இது எனக்கு அனுபவம் .
ஆனால் இயக்க தோழர்களை ,எனது இயக்கத்தில் இருந்து மனிதர்கள் ஆகி எனக்கு இயக்கத்துக்கும் கத்தி தீட்டும் ,தீட்டி வெளியேறிய தோழர்களை தவிர்த்து ,மற்ற இன்று இயக்கத்தில் இருக்கும் அதுவும் இயக்கத்தால் எந்த பலனும் அடயாமல் அவர்களது பணத்திலேயே வாழ்ந்து கொண்டு அவரவர்கள் நேரத்தை செலவு செய்து கொண்டு பல கஷ்ட நஷ்டங்கள் அடைந்து இயக்க வளர்ச்சிக்கு இரவும் பகலும் பாடுபடும் உண்மைத் தொண்டர்களான இயக்க தோழர்களை வேண்டி கொள்கிறேன் .
விடுதலை பத்திரிகை, நண்பர் வீரமணி அவர்கள் ஏகபோக நிர்வாகத்தின் கீழ் நல்லா நிலையில் வாழ்ந்து வர வேண்டுமானால் ,இப்போது இருப்பதை விட இன்னும் குறைந்தது 2500 சந்தா தாரர்கள் இரண்டு மாதத்தில் சேர்க்கப்பட்டு ஆகவேண்டும் .இதற்க்கு பெரிதும் தஞ்சை மாவட்டத்தையே நம்பி இருக்கிறேன் .ஓர் ஆண்டுக்குள் மேலும் 5000 சந்தா பெருகி ஆகவேண்டும் .அது 2 மாதத்திற்கு அப்புறம் பார்த்து கொள்ளலாம்.இப்பொது உடனடியாக 2 மாதத்தில் 2500 சந்தாக்கள் அதிகமாகச் சேர்க்கப்பட வேண்டும் .இன்று நமது இயக்கம் இதுவரை இருத்த அளவை விட உச்ச நிலையில் இருக்கிறது .இது உண்மை என்பதை மெய்ப்பிக்க வேண்டுமானால் இது தான் பரீட்சை .
ஆதலால் நான் வீரமணி அவர்களை பாராட்டி இந்த முயற்சியோடு இந்த ஆசையோடு விடுதலை யின் 25 ஆவது ஆண்டில் அதை மறு பிறவி எடுக்கும்படி அதை அவரிடம் ஒப்புவிக்கிறேன் .
இயக்கத் தோழர்கள் இந்த வேண்டுகோளை ஏற்று நிறைவேற்றி ,எங்களை பெருமை படுத்தி விடுதலை யை வாழவைத்து வீரமணி அவர்களையும் உற்சாக படுத்தும்படி கேட்டு கொள்கிறேன் .
நாளை முதலே தோழர்கள் இந்த காரியத்தில் இறங்கி செயல் முறையில் ஈடுபட்டிருக்கிறார்கள் என்பதை காட்டுவதற்காக ஒவ்வொருவரும் தங்கள் தங்கள் மாவட்டத்தில் இத்தனை இத்தனை சந்தாக்கள் சேர்த்து தருகிறோம் என்பதாக எனக்கு உறுதி வார்த்தை ஒரு வாரத்தில் அளிக்க வேண்டி கொள்கிறேன் .
நமது இயக்கம் நமது பத்திரிகை செய்துள்ள பணிகளை மக்களிடம் சொல்லுங்கள் .இது மறைந்தால் என்ன ஆகும் என்பதை விளக்குங்கள் .
அதிகாரிகளை ,அரசாங்க சிறிய உத்தியோகஸ்தர்களை ,வியாபாரிகளை விவசாய பொது மக்களை தைரியமாய் அணுகுங்கள் .வேட்கபடாதிர்கள் .தமிழ் நாடு மக்கள் இன உணர்ச்சியையும் சமுதாய உணர்ச்சியையும் பரிச்சை பார்ப்பதில் நமக்கு கவுரவக் குறைவு வந்து விடாது .
ஆண்டு மாத காலம் 60 நாள்களில் 2500 சந்தா .தினம் 42 சந்தா ,13 மாவட்டங்களில் 13 மாவட்டத்தில் 100 வட்டங்கள் (தாலுக்காகள்) பொது வாக ஒரு மாவட்டத்திற்கு 200 சந்தாக்கள் வீதமாகும் .இது கூட நம் கழக முயற்சிக்கு விடுதலை மறு பிறப்புக்கு கைகூட வில்லை என்றால் நம் நிலை என்ன என்பதை தோழர் ஒவ்வொருவரும் சிந்திக்க வேண்டுமென்று வேண்டி இந்த வேண்டு கோளை விண்ணப்பமாக தமிழ் நாடு மக்களிடம் சமர்ப்பிக்கிறேன் .
-விடுதலை(6.6.1964)
எப்படி இருந்த வீரமணி இப்படி ஆயிட்டாரு….
1964 இல் வீரமணி எப்படிப்பட்டவேர் என்பதை பெரியார் அப்பொழுது இருந்த வீரமணியின் செயல்பாடுகளை பார்ந்து, ஆராய்ந்து எழுதியதுதான் இந்த கட்டுரை …
நீர் உண்மையிலுமே வீரமணியை நம்பினால், அதிகம் வேண்டாம் கடந்த பத்து ஆண்டுகளில் வீரமணியின் செயல்பாடுகளை, அரசியல் நிலைப்பாடுகளை பற்றி விரிவாக எழுத திராணி உண்டா?
இப்படி பெரியார் என்றோ ஒரு மனிதனைப் பற்றி சொன்னதை இன்றும் மந்திரம் போல் ஓதும் உனக்கும் கோவிலில் அண்டிப்பிழைக்கும் பார்ப்பானுக்கும் என்ன வேறுபாடு… அவனும் தான் சொல்கிறான்.. எங்களின் வேத வாக்கியத்தின் படி.. நாங்கள்தான் உயர்ந்தவர்கள் என்று…
உங்களின் கூற்றுப்படி 1964 ம் 2009 ம் ஒன்றா..? ஒரு மனிதனின் செயல்பாடுகளை வைத்து அவனை மதிப்பிட வேண்டுமா அல்லது… அவனைப்பற்றி 5௦ வருடங்களுக்கு முன்பு ஒருவர் நல்லவர் என கூறியருப்பதை வைத்து மதிப்பிட வேண்டுமா?
//வாலி என்ற பார்பன கவிஞர் பாபா திரைப்படத்திலே ஒரு பாடல் வரியில் “அதிசயம் அதிசயம் பெரியார்தான் ஆனதென்ன ராஜாஜி ” என்று பெரியாரையே ராஜாஜியாக மாற்றினர் …பிறகு திராவிடர் கழகத்தின் சார்பில் அதன் தலைவர் வழக்கு தொடர்ந்ததின் காரணமாக அவர்களாகவே அந்த வரியை நீக்கினர்….// தவறான தகவல் முதலில் பெரியார் திக வினர்தான் வழக்கு போட முடிவெடுத்தார்கள் இதை அறிந்த தரங்கெட்ட வீரமணி கும்பல் போட்டிக்காக
வழக்கு தொடர்ந்தது , பெரியார் திக இல்லையென்றால் வழக்காவது வாழக்காயாவது,
இங்கே வீரமணிக்கு கட் அவுட்டு வைத்து பாலாபிசேகம் பண்ணும் பின்னூட்டங்கள் (யாழ்-சேரன) ஒரே எழுத்து நடையில் இருக்கே …. டபுள் ஆக்டா? வினவு பிளீஸ் எக்ஸ்பிளெய்ன் தி மேட்டர்
அப்படியே ஐயா வீரமணி போயஸ் தோட்டத்துல போய் மணியாட்டிக்கிட்டு பூசாரி வேல பாத்தத பத்தி பெரியார் என்ன எழுதியிருக்காருன்னு ஒரு கட் அன்ட் பேஸ்ட் பண்ணிடுங்கப்பா…பிண்ணியமா போகும்
//வீரமணியின் இணையத்தளபதியாக விடாமல் தினசரி நான்கைந்து பதிவுகள் போட்டுத்தாக்கும் தமிழ் ஓவியாவிற்கு இந்த தருணத்தில் சில கோரிக்கைகளை வைக்கிறோம்.
நண்பரே நாத்திகப் பிரச்சாரம் எப்போதும் தேவையுள்ள ஒன்றுதான். ஆனாலும் மக்களின் எல்லா வாழ்க்கைப்பிரச்சினைகளை பேசி போராடும் முழுமையில்தான் அதையும் செய்ய முடியும். இல்லையேல் அதை யாரும் பொருட்படுத்த மாட்டார்கள். ஆளில்லாத சிவன் கோவிலில் ஐயர் கொட்டாவி விட்டுக்கொண்டே பூஜை செய்து சிவனை எழுப்பமுயன்று தோற்று தொங்கிக் கொண்டிருக்கும் வௌவால்களை விரட்டிவிட்டு வீடு சென்று தயிர்சாதம் உண்டு முடங்குவது போல உங்களின் அன்றாடப்பணியும் கணினியில் அப்படி ஆகிவிட்டது. எங்களுக்கும் உண்மையிலேயே வருத்தமாகத்தானிருக்கிறது. உங்கள் தளத்தை யாரும் அதிகம் பார்ப்பதில்லை, எதைக்குறித்தும் விவாதமும் நடப்பதில்லை. “யாரோ” 5 பேர் ஓட்டு மட்டும் போடுவதால் தமிழ்மணம் வாசகர் பரிந்துரையில் உங்கள் பதிவுகள் தினமும் நான்கைந்து வந்து விடுகின்றன. இனி தினமும் ஒன்று மட்டும் போட்டால் எங்களைப் போல ஏழை பதிவர்களுக்கு உதவியாய் இருக்கும்.//
தி.க. பற்றியும்,தி.க.தலைவர் வீரமணி அவர்கள் பற்றியும் உங்களின் கருத்துக்களை 1985 முதல் படித்து வருகிறேன். எனவே உங்களுடன் வாதம் செய்வது என்பது அல்லது உங்களுடன் கொள்கை ரீதியாக ஒத்துப் போவது என்பது உண்மையான பெரியார் தொண்டனான என்னால் முடியாது என்பதால் இது நாள் வரை எந்த விவாதத்திலும் கலந்து கொள்ள வில்லை.
இப்போது கூட இந்தப் பிரச்சினை குறித்து உங்களிடம் விவாதிக்க விருமபில்லை. ஆனால் எனது வலைப்பூவான தமிழ் ஓவியா பதிவுகளை “யாரும் அதிகம் பார்ப்பதில்லை” என்று எழுதியுள்ளீர்கள். அதில் எள்ளளவும் உண்மை இல்லை என்பதை தெரிவிக்க எனக்கு வந்த மின்னஞ்சல்களின் முகப்புப் பக்கத்தை அப்படியே தருகிறேன். படியுங்கள்.பாருங்கள். உண்மை புரியும்.
இதோ ஆதாரம்:
246 இல் 1-50 பழையது › மிகப்பழையது »
உரையாடல்கள்
தேர்வு செய்: எல்லாம், எதுவுமில்லை, படித்தது, படிக்கப்படாதது, நட்சத்திரமிட்டது, நட்சத்திரமிடாதது
Tamilish Service
Made Popular : ஜாதி சாகிறது -மனிதன் பிழைக்கிறான் எப்படி? – Hi tamiloviya, Congrats! Your story titled ‘ஜாதி சாகிறது …
8:49 am
Thirunavukarasu
[keetru.com] Re: ‘குடிஅரசு’ வழக்கு தடையை நீடிக்க உயர்நீதிமன்றம் மறுப்பு – Thank you very much for sending kudiarasu article.we expecting more and more like this. with …
ஜூலை 28
Tamilish Service
Made Popular : இந்துயிசம் பற்றி உச்சநீதிமன்றம் கூறியது என்ன? – Hi tamiloviya, Congrats! Your story titled ‘இந்துயிசம் பற்றி …
ஜூலை 28
நட்சத்திரமிட்டது
Tamilish Service
Made Popular : ஜகத்குரு காஞ்சி காமகோடி ஸ்ரீ சந்திரசேகரேந்திர சரஸ்வதி சங்கராச்சார்ய சுவா… – Hi tamiloviya, Congrats! Your story titled ‘ஜகத்குரு காஞ்சி …
ஜூலை 28
mujeeb rahman
[தந்தை பெரியார்] இஸ்லாத்தில் தீண்டாமையா???????? – அண்ணல் அம்பேத்கார் (இக்கட்டுரையில் …
ஜூலை 28
Tamilish Service
Made Popular : கைம்மாறு கருதாதற்குப் பெயர்தான் தொண்டு! – Hi tamiloviya, Congrats! Your story titled ‘கைம்மாறு …
ஜூலை 28
Tamilish Service
Made Popular : உலக நாடுகள் -தூரப்பார்வை -செர்பியா – Hi tamiloviya, Congrats! Your story titled ‘உலக நாடுகள் …
ஜூலை 28
Tamilish Service
Made Popular : கடவுள் என்று ஒருவர் இருந்திருந்தால்… – Hi tamiloviya, Congrats! Your story titled ‘கடவுள் என்று …
ஜூலை 27
Tamilish Service
Made Popular : சீதை பிடித்து வைத்த மணல் லிங்கத்தை சிதைத்த அனுமான் வால் அறுந்து விட்டதாம்! – Hi tamiloviya, Congrats! Your story titled ‘சீதை பிடித்து …
ஜூலை 27
editor, நான் (3)
RE: enathu e mail – Thank you for your mail. Adhikaalai team will contact you asap. Hav’a Wonderful Day
ஜூலை 27
Tamilish Service
Made Popular : சூத்திரர்களுக்கு வேதம் ஒதக் கூடாதாம் என்ன கொடுமை! – Hi tamiloviya, Congrats! Your story titled ‘சூத்திரர்களுக்கு …
ஜூலை 26
Tamilish Service
Made Popular : வேளாண்மை விஞ்ஞானி எனப்படும் பார்ப்பனரின் ஏமாற்று வேலை – Hi tamiloviya, Congrats! Your story titled ‘வேளாண்மை விஞ்ஞானி …
ஜூலை 26
eraeravi ravi (2)
pl visit – era.eravi,editor http://www.kavimalar.com pl visit http://www.tamilauthors.com http://www.kalaivilakku.net http://www.wtrfm …
ஜூலை 26
Tamilish Service
Made Popular : சிருங்கேரி சங்கராச்சாரியாருக்கும், காஞ்சி சங்கராச்சாரியார் ஜெயேந்திர சரஸ… – Hi tamiloviya, Congrats! Your story titled ‘சிருங்கேரி …
ஜூலை 25
Tamilish Service
Made Popular : பக்தி வந்தால் புத்தி போய்விடும்; புத்தி வந்தால் பக்தி போய்விடும் – Hi tamiloviya, Congrats! Your story titled ‘பக்தி வந்தால் …
ஜூலை 25
Tamilish Service
Made Popular : பெரியார் சிலைக்குக் கீழே கடவுள் மறுப்பு வாசகம் ஏன்? – Hi tamiloviya, Congrats! Your story titled ‘பெரியார் …
ஜூலை 24
Tamilish Service
Made Popular : கடவுள் பக்தி இதைத்தான் கற்றுக்கொடுத்ததா? – Hi tamiloviya, Congrats! Your story titled ‘கடவுள் பக்தி …
ஜூலை 24
Tamilish Service
Made Popular : ஈழத் தமிழர்களின் துயரங்களுக்கு கருணாவே காரணம் மனைவி குற்றச்சாற்று – Hi tamiloviya, Congrats! Your story titled ‘ஈழத் தமிழர்களின் …
ஜூலை 24
Tamilish Service
Made Popular : உலக நாடுகள் -தூரப்பார்வை – செயின்ட் கிட்ஸ் மற்றும் நெவிஸ்-செயின்ட் லூசியா – Hi tamiloviya, Congrats! Your story titled ‘உலக நாடுகள் …
ஜூலை 24
நான், postmaster (2)
ஆலோசனை வேண்டி – Hello maarimuthu pazhani, This is a one-time automated message. Your email to me was delivered …
ஜூலை 23
Tamilish Service
Made Popular : ஜாதி ஆதாரங்கள் அடியோடு ஒழிக்கப்பட வேண்டும்!. – Hi tamiloviya, Congrats! Your story titled ‘ஜாதி ஆதாரங்கள் …
ஜூலை 23
Tamilish Service
Made Popular : தீண்டாமை க்ஷேமகரமானது என்று சொன்ன சங்கராச்சாரியார் நாட்டு மக்களுக்குச் ச… – Hi tamiloviya, Congrats! Your story titled ‘தீண்டாமை …
ஜூலை 23
Tamilish Service
Made Popular : உலக நாடுகள் -தூரப்பார்வை – ரஷியா -2 – Hi tamiloviya, Congrats! Your story titled ‘உலக நாடுகள் …
ஜூலை 22
Haresh Maha
orkut – Haresh wants to be your friend on orkut! – Hi maarimuthu, Haresh Maha has requested to be your friend on orkut. To confirm or reject this …
ஜூலை 22
Tamilish Service
Made Popular : கொடிது கொடிது கோவிலுக்குப் போதல்! – Hi tamiloviya, Congrats! Your story titled ‘கொடிது கொடிது …
ஜூலை 21
Tamilish Service
Made Popular : பால்ய விவாகம் அரசியல் பிரச்சினையா? மதப்பிரச்சினையா? – Hi tamiloviya, Congrats! Your story titled ‘பால்ய விவாகம் …
ஜூலை 21
Tamilish Service
Made Popular : உலக நாடுகள் -தூரப்பார்வை -போர்த்துகல்-கத்தார் – Hi tamiloviya, Congrats! Your story titled ‘உலக நாடுகள் …
ஜூலை 21
Tamilish Service (2)
Made Popular : கடவுளைக் கேவலப்படுத்தும் கயவர்கள் யார்? பக்தர்களா? கடவுள் இல்லை என்பவர்களா? – Hi tamiloviya, Congrats! Your story titled ‘கடவுளைக் …
ஜூலை 21
Tamilish Service
Made Popular : சூரியகிரகண மூடநம்பிக்கையை முறியடிப்போம்! – Hi tamiloviya, Congrats! Your story titled ‘சூரியகிரகண …
ஜூலை 20
Tamilish Service
Made Popular : சந்திரன் (நிலா) பற்றிய கட்டுக் கதைகளும், உண்மைகளும் – Hi tamiloviya, Congrats! Your story titled ‘சந்திரன் (நிலா …
ஜூலை 20
Tamilish Service
Made Popular : இந்துக்களின் கொடிய வழக்கம் -பகுதி -2 – Hi tamiloviya, Congrats! Your story titled ‘இந்துக்களின் …
ஜூலை 20
Bharathi Dhasan
[keetru.com] Re: The other side of EVR ! பெரியாரின் மறு பக்கம் ! – தோழர்களே இது சம்மந்தமா நம்ம தமிழ் …
ஜூலை 17
Kumaran R
[தந்தை பெரியார்] naanthaan evr… – நான் தான் … ஈ.வெ.ராமசாமி பேசுகிறேன் …
ஜூலை 15
விடுதலைவீரபத்திரன்
அதிகாலை – கலைஞரின் பிரமாண்டமான “பொன்னர் …
ஜூலை 11
மகிழ்நன் பா
அவிழும் முடிச்சுக்கள்:அருட்தந்தை ஜெகத் கஸ்பார்-பிரத்தியேக நேர்காணல் – அவிழும் முடிச்சுக்கள்:அருட்தந்தை …
ஜூலை 11
hamora
[தந்தை பெரியார்] இஸ்லாத்தில் ஜாதி,ஜாதீயம்,தீண்டாமை – தென்இந்தியாவில் கி.பி. ஏழாம் …
ஜூலை 8
♥ athisivam.b@Chennai ♥
FW: [muththamiz] Re: பார்ப்பனரான எம்.எஸ்.சுவாமிநாதன் – அறிவியல் மேதையா? மோசடிப் பேர்வழியா? – முத்தமிழ் குழு நிர்வாகி muththamiz@gmail.com Yahoo …
ஜூலை 7
Tamilish Service
New comment on your story “இசுலாத்திலும் ஜாதியா?” – buruhani commented on your story ‘இசுலாத்திலும் ஜாதியா …
ஜூலை 4
♥ foryouths@beyouths.com.
[தந்தை பெரியார்] ♥ 12 நாட்களில் தலைவருக்கு மீசை அடர்த்தியாக வளர்ந்தது எப்படி? ♥ – Untitled-1+copy.jpg] ஓடும்நதி……..! http://www.odumnathi.blogspot.com …
ஜூலை 3
♥ foryouths@beyouths.com.
[keetru.com] ♥ பிரபாகரன்””என்ட ரெண்டு பிள்ளையளையும் தமிழீழ மண்ணுக்காய் கொடுத்திட் டேனப்… – Untitled-1+copy.jpg] ஓடும்நதி……..! http://www.odumnathi.blogspot.com …
ஜூலை 3
மகிழ்நன், Prince, Arun (6)
Fwd: தமிழ் தேசியம் – ஒழிக பெரியார் – வாழ்க பார்ப்பனியம் – நண்பர்கள் இந்த இணைப்பையும் படிக்க …
ஜூலை 3
நான் .. beyouths, selvii (9)
[keetru.com] நான் தமிழனென சொல்லிக் கொள்ள ஒப்புகிறேன் – பெரியார் – நல்ல வேடிக்கை! தமிழில் பரதேசி …
ஜூலை 2
மகிழ்நன் பா
நாளை விடியும் இதழாசிரியர் பி.இர.அரசெழிலன் செவ்வி – வணக்கம், நாளை விடியும் இதழாசிரியர் …
ஜூலை 1
Osai Chella
Come Join My Network at Digg – Hi this is Osai Chella , a member of Digg and would like to send you an invitation. With Digg you …
ஜூலை 1
Soma .. ஜஸ்டிஸ் (33)
: NEWS: SPREAD THE WORD AROUND – நண்பர் ஆதிசிவன் உங்கள் கோபம் …
ஜூன் 30
AT Thamarai
[keetru.com] 02.07.2009 periyarmulakkam – You received this message because you are subscribed to the Google Groups “keetru …
இணைப்பு ஜூன் 30
beyouths .. tamizachi (3)
[தந்தை பெரியார்] கிழவனல்ல, அவன் கிழக்குத் திசை! -பாகம் 1 – மெய்யாகப் பெரியாரும் மணியம்மையும் …
ஜூன் 29
விமலேந்திரா, beyouths (2)
[தந்தை பெரியார்] ஹிந்து மதம் – (நாம் ஹிந்துக்களா?) – கலக்கிட்டீங்க, விமல்! நன்றாக …
ஜூன் 29
jaisara2k4, beyouths (2)
[தந்தை பெரியார்] பார்ப்பான் தான் சாதியை பிரித்தான் என்று எதனை நாள் தான் சொல்லி கொண்டே இ… – ஏன்டா சின்ன பசங்களா, இப்படி வெட்டி …
ஜூன் 28
beyouths, balaraman (2)
[keetru.com] பெரியாரின் மறுபக்கம் நூலுக்கு மறுப்பு. – சிறப்பான ஊக்குவிபு 2009/6/27 ♥ athisivam.b@Chennai …
ஜூன் 28
மேற்கண்ட பதிவுகள் அனைத்தும் அதிகமாக பார்வையிடப்பட்டுள்ளது என்று எனக்கு தமிழிஸ் அனுப்பிய மின்னஞ்சல்கள்.
பொய்யைச் சொன்னாலும் பொருத்தமா சொல்லுங்க.
ஆமாமா பொருத்தமா சொல்லுங்க வினவு, அண்ணன் என்னமா ஒரு ஆதாரம் கொடுத்திருக்காரு…. இதுல சில விவரங்கள் மிஸ்ஸிங் ஆகுது…. என்ன இருந்தாலும் நம்மாளு பாருங்க விட்டுக்குடுக்க முடியுமா…? அதான் நானே கிவ்விங்
அதாவது இரண்டரை வருசமா 2018 இடுகை எழுதி அதுக்கு 1,76,263 பார்வையாளர்கள் ஆதாவது ஒரு கட்டுரையை 87.345391476709613478691774033697 பேர் படிக்குறாங்க…
இதுல இவரு பாக்க, கொள்ள, பின்னூட்டம் போட எடுத்துகிடும் பார்வையும் அடக்கம்…
அது மட்டுமா மொத்தம் 2018 இடுகைக்கு 3115 பிண்ணூட்டம் அதாவது சராரியா ஒரு இடுகைக்கு 1.5436075322101090188305252725471 பிண்ணூட்டம் அதுவும் இவரு போடுற பதில் பிண்ணூட்டமும் சேத்தி
நல்லா குடுக்குராங்கய்யா டீடெய்லு… இதுல கோவம் வேற…
இப்ப நாஞ்சொல்றேன் கேட்டுக்கங்க தமிழ் ஓவியா….
யாருமே பாக்காத, படிக்காத, விவாதிக்காத, பேர பாத்தாலே தெரிச்சு ஓடுற தளமா பெரியாரிஸ்டு தளம் இருக்கிறது வேதனையே ஆனா அதுக்கான காரணத்த்தான் மேலே சொல்லியிருக்காங்க, கொஞ்சம் நிதானமா யோசிங்க…
அதெல்லாம் சரி ஓவியா,
நாத்திக பிரச்சாரம் தேவைதான் அது தானே பகுத்தறிவு? அயா வீஈரமணீ செயா வீட்டில காரவேல பூச போனாரா என்ன? இப்ப பாப்பத்தின்னு சொல்லுறவாயி அப்பஎத அடக்கிகிட்டு இருந்துச்சு? சுயமரியாதையயா? அயாவுக்கு பாதிவருசம் அமெரிக்காவுல இருக்கறதுக்கே நேரம் இல்லை.இதுல பெரியார உலகமயம் ஆக்கிட்டாங்களாம். தனியார்மயம் ஆக்கிட்டீங்க அதுக்குத்தான் கேசு கேசுன்னு பீஸ்போன மாதிரி அலையுறாங்க.
ஆனா ஒண்ணு யார்கிட்ட நம்ம அயா போனாலும் சும்மா குழஞ்சு குழஞ்சு பகுத்தறிவ காட்டுவார்? எப்புடி பெரியார் சிலய வெட்டுனதுக்கு அமைதியாயிருங்கன்னு சொன்னாரோ அப்புடி?
சரி, தமிழ் ஓவியா 85லிருந்து எங்களது விமரிசனங்களை படித்தும் இன்னும் அசைந்து கொடுக்கவில்லை என்பது சற்று அதிர்ச்சிதான்.போகட்டும், பெரியாரின் உண்மையான தொண்டன் என்று நீங்கள் சொல்வது எங்களுக்கு வீரமணியின் உண்மையான தொண்டன் என்று கேட்கிறது. எது எப்படியோ, நீங்கள் நமது நட்பு சக்தி, பார்ப்பனிய எதிர்ப்பு, மூடநம்பிக்கை,மத எதிர்ப்பு முதலான விசயங்களிலாவது உங்கள் பணியைதொடருங்கள். கூடவே மற்ற மக்கள் பிரச்சினைகளையும் எழுத முயலுங்கள். எங்கள் விமரிசனத்தை நேரம் ஒதுக்கி படித்தமைக்கு நன்றி!
//எது எப்படியோ, நீங்கள் நமது நட்பு சக்தி, பார்ப்பனிய எதிர்ப்பு, மூடநம்பிக்கை,மத எதிர்ப்பு முதலான விசயங்களிலாவது உங்கள் பணியைதொடருங்கள்//
யாரச் சொல்றீங்க?
வீரமணியின் உண்மையான தொண்டன் எப்பொழுதிருந்து நட்பு சக்தியானார்? சந்தர்ப்பவாதிகளாகவும், எதிர்ப்புரட்சிகர சக்தியாகவும் மாறி நிற்கிற திராவிடர் கழகம் எப்படி நட்பு சக்தியாகும்? ‘நட்பு சக்தியான’ வீரமணி கும்பலிடமிருந்து ஏன் பெரியாரை விடுதலை செய்ய வேண்டும்? ‘ஆளில்லாத சிவன் கோவிலில் ஐயர் கொட்டாவி விட்டுக்கொண்டே பூஜை செய்து சிவனை எழுப்பமுயன்று தோற்று தொங்கிக் கொண்டிருக்கும் வௌவால்களை விரட்டிவிட்டு வீடு சென்று தயிர்சாதம் உண்டு முடங்குவது போல’, என்று தாங்களே விமர்சித்து விட்டு, ‘பார்ப்பனிய எதிர்ப்பு, மூடநம்பிக்கை,மத எதிர்ப்பு முதலான விசயங்களிலாவது உங்கள் பணியைதொடருங்கள்.’ என்றால் என்ன பொருள்? சுபமாக முடித்துக் கொள்வதற்காக தவறான அரசியல் கருத்துக்களை ஏன் முன்வைக்கிறீர்கள்?
நான் கேட்ட கேள்விக்கு பதில் எதிர்பார்க்கிறேன். மேலும், பிற தோழர்கள், ஆதரவாளர்களின் நிலையையும் அறிந்து கொள்ள விரும்புகிறேன்.
சில விவாதங்களை முடித்துக் கொள்ள விரும்பும்போது விடை பெறும் முறையில் எழுதப்பட்டது அது. மற்றப்படி திராவிடர் கழகம் என்பது போலி கம்யூனிஸ்டு கட்சிகளைப் போல ஒரு சமரசவாத அமைப்பு. இத்தகைய அமைப்பின் தொண்டர்களை நட்பு சக்தியாகப் பாவித்தல் என்பது நடைமுறையில் கையாளும் ஒரு விசயம்தான். அந்த அமைப்புகளுடன் முரண்பாடு உள்ள அதே நேரத்தில் சில விசயங்களில் ஒற்றுமையும் இருக்கவே செய்கிறது. அதனால்தான் சிதம்பரம் போராட்டத்தில் திராவிடர் கழகம், விடுதலைச் சிறுத்தைகள், பா.ம.க போன்றோரும் இருந்தனர். இத்தகையோர் அவர்களுக்கேயுரிய முரண்பாடுளுடன்தான் இருக்கின்றனர். அதன் காரணமாகவே தி.கவை ஒரு எதிர்ப்புரட்சி சக்தி என்று கூறிவிட இயலாது என்றே கருதுகிறோம். பா.ஜ.க, ஆர்.எஸ்.எஸ், காங்கிரசு போன்ற ஆளும் வர்க்க அமைப்புகளையே எதிர்ப்புரட்சி சக்திகள் என்று கருதுகிறோம்.
அதென்ன விடைபெறும் நோக்கில் எழுதுவது? விடைபெறும் நோக்கில் என்ன வேண்டுமானாலும் எழுதலாமா? சந்திப்பு செல்வபெருமாளிடம் நமது தோழர்கள் யாரும் இப்படி விடைபெற்றதாக தெரியவில்லை. ஒரு வேளை இப்படி விடைபெற வேண்டும் என வழிகாட்டுகிறீர்களோ?உங்களுடைய இந்த பதில் ஒரு வடிகட்டிய மழுப்பல், சப்பைக்கட்டு என்பதைத் தவிர வேறென்ன?
ஒன்று அனாவசியமாக, அரசியல் பலன் குறித்த கண்ணோட்டமே இல்லாமல் வலிந்து தாக்குகிறீர்கள். அதைச் சுட்டிக்காட்டியவுடன் அமைதியாக இருக்கிறீர்கள். அதனை மீண்டும் கேள்விக்குள்ளாக்கும் பொழுது அதற்கு ஒரு அரசியல் உள்ளடக்கம் கற்பிக்கிறீர்கள். எனது விமர்சனம் தவறு என்றும், நான் ‘நாகரிகத்தை’ எதிர்ப்பார்ப்பதாகவும் கூறுகிறீர்கள். அதற்கு விரிவாக பதிலளித்த போதும், தங்களது செயல்பாட்டின் விளைவை ஆதாரத்தோடு சுட்டிக் காட்டிய போதிலும், அதற்கும் பதிலளிக்க மறுத்து மெளனம் காக்கிறீர்கள். பின்னர், தடாலடியாக நட்பு சக்தி என்று ‘கண்ணியமாக’ விடைபெறுகிறீர்கள். தாங்கள் முன்வைத்த கருத்துக்கு மாறாக அவர் தமது திருப்பணியை தொடர வழிகாட்டுகிறீர்கள். அதைக் கேள்வி கேட்டால், அதற்கும் பதில் சொல்ல மறுக்கிறீர்கள். மீண்டும் பதிலளிக்க வலியுறுத்தும் பொழுதோ மழுப்புகிறீர்கள். இவையனைத்திலும் என்ன வெளிப்படுகிறது?
சுயவிமர்சனத்துக்கு உட்பட மறுக்கிற குட்டிமுதலாளிய அகம்பாவம் மட்டும்தான் வெளிப்படுகிறது. இந்த அகம்பாவத்தின் விளைவாக என்ன நேர்ந்திருக்கிறது? இப்பொழுது ஒரு அரசியல் பிழைக்கு உங்களை அது இட்டுச் செல்கிறது.
முதலாவதாக சமரச அமைப்புகள் நமது அமைப்பின் அடிப்படை வரையறுப்பிலிருந்து பரிசீலிப்போம்.
“(சமரச, சீர்திருத்த கருத்துக்கள், நிறுவனங்கள்) புரட்சிகர நெருக்கடிகள் முற்றும் போது, புரட்சிகரக் கருத்துக்கள் முன்னுக்கு வரும் போது ஆளும் வர்க்கங்களுடன் சேரவும் தயங்காதவை.”
“வர்க்கப் போராட்டம் தீவிரமாக உள்ள காலத்தில், ஆளும் வர்க்கங்கள் தமது ஆட்சியை நீடித்துக் கொள்ள முடியாது என்ற கட்டத்தில், சமுதாயத்தை புரட்சிகரமாக மாற்றி அமைப்பதற்கு அபாயகரமான தடையாக இவையே(சமரச, சீர்திருத்த கருத்துக்கள், நிறுவனங்கள்) இருக்கும். இவை மக்களின் ஆதரவின்றி, முடமாக்கப்பட்டால்தான் புரட்சி சாத்தியமாகும். இவை ஆளும் வர்க்கங்களுக்கும், புரட்சிகர வர்க்கங்களுக்கும் இடைப்பட்ட வர்க்கங்களின், புரட்சியில் ஊசலாடும் சக்திகளின் கருத்துக்கள், நிறுவனங்கள் ஆகும்.”
(மார்க்சிய-லெனினியக் கல்விக்கு ஓர் அறிமுகம்- குறிப்புகள் – பக் 40)
இவ்வரையறுப்பின் அடிப்படையில், நமது மக்கள்திரள் வழியின் பொதுத்திசை வழியாக, ‘சமரசவாத அமைப்புகளை அம்பலப்படுத்தி தனிமைப்படுத்துவது’ எனக் வகுத்து, கடந்த பல ஆண்டுகளாக அத் திசை வழியை நடைமுறைப்படுத்தியும் வருகிறோம்.
ஆளும் வர்க்க அமைப்புகள் தமது இயல்பிலேயே புரட்சிக்கு எதிரானவை. அவற்றை புரட்சியின் எதிரிகள் என்று வரையறுக்கிறோம். எதிர்ப் புரட்சி சக்திகள் என அவற்றை தனியாக வரையறுப்பது இல்லை. வரலாற்று ரீதியில்,ரசியப் புரட்சியில், அக்டோபர் சோசலிஸ்டு புரட்சியாளர்கள் முதலான எதிர்ப் புரட்சி சக்திகள் என வரையறுக்கப்பட்டவை ஆளும் வர்க்க அமைப்புகளல்ல, சமரசவாத அமைப்புகளாக செயல்பட்டு, புரட்சியின் தீர்மானகரமான தருணத்தில் எதிரிகளோடு இணைந்து கொண்டவைதான்.
அதே வேளையில், எல்லா சமரசவாத அமைப்புகளும் எல்லாச் சமயங்களிலும் எதிர்ப்புரட்சித் தன்மையுடையனவாக இருப்பதில்லை. தீர்மானகரமான தருணங்களில் மட்டுமே அவை தனது வர்க்கச சார்பை தெளிவாக நிரூபிக்கின்றன. எனவே இவ்வமைப்புகளில் தற்போதைய அரசியல், சமூகச் சூழலில், நமது போராட்டத்தின் செயல்தந்திர நலன்களின் அடிப்படையில், எவை நட்பு சக்தியாக பாவிக்கத்தக்கவை, எவை எதிர்ப்புரட்சி சக்தியாக கருதப்பட வேண்டியவை என்பது நடைமுறையில் தொடர்ச்சியாக தீர்மானிக்கப்பட வேண்டுமெயன்றி, அது ஒரு மாறாத சூத்திரமல்ல.
ஒரு உதாரணத்தோடு சொன்னால், இன்றைய நிலைமைகளில் பெரியார் திராவிடர் கழகத்தை நாம் நட்பு சக்தியாக கருதுகிறோம். கருத வேண்டும். அதே வேளையில், திருவரங்கம் கருவறை நுழைவுப் போராட்டத்தை ‘வன்முறை’ என்றவரும், பாசிச ஜெயலலிதாவின் ஆடு, கோழி பலியிடுதல் சட்டத்தை ஆதரித்தவரும், இதோ மிகச் சமீபத்தில், ஈழ விவகாரத்தில், தமிழக மாணவர்களின் கொந்தளிப்பான போராட்டங்களை ஒடுக்குவதற்காக தமிழக அரசு கல்லூரிகளை மூடிய பொழுது, அதனை ஆதரித்து மாணவர்கள் படிப்போடு நிறுத்திக் கொள்ள வேண்டும் என்று பகிரங்கமாக அறிக்கை வெளியிட்டு, தெளிவாக ஆளும் வர்க்கச் சார்பு நிலையெடுத்த பெருமகனாரும் ஆன வீரமணியை, அவரது அரசியல் சீர்கேட்டை, அயோக்கியத்தனங்களை எந்த மறுப்பும், சங்கடமும் இல்லாமல், தனதாக ஏற்று அதனையே பரப்பிக் கொண்டும் வரும் அமைப்பை, அதன் நம்பிக்கைக்குரிய விசுவாசிகளை எதிர்ப்புரட்சி சக்தி என்று வரையறுப்பதா, நட்பு சக்தி என்று வரையறுப்பதா?
சிதம்பரம் போராட்டம் மட்டுமல்ல, இன்னும் பல போராட்டங்களில் பகுதி அளவில் திராவிடர் கழகத்தினர் நம்மோடு இணைந்து போராடியிருக்கிறார்கள். அப்பகுதியில் அவர்களது செயல்பாடு, போராட்டத்தில் அவர்கள் காட்டும் ஈடுபாடு, முன்வருதல் ஆகியவற்றை அடிப்படையாகக் கொண்டு தீர்மானிக்கிறோமெயன்றி, அது அவ்வமைப்பு குறித்த நமது முழுமையான நிலைப்பாட்டின் அளவுகோலல்ல. அப்படி இல்லையென்றால், ஏன் மையப்படுத்தப்பட்ட அளவில் அவர்களோடு ஒன்று சேர்வதில்லையாம்? திருவரங்கம் பெரியார் சிலை உடைப்பு பிரச்சினையில் மையப்படுத்தப்பட்ட அளவில் இணைந்து போராட பெரியார் திராவிடர் கழகத்திடம் நாம் வேண்டுகோள் விடுத்தோம். ஏன் திராவிடர் கழகத்திடம் அவ்வாறு கோரவில்லை? அச் சமயத்தில் அமைதி காக்க வலியுறுத்திய அற வழி அண்ணல் வீரமணியிடம் அவ்வாறு கோரிக்கை வைக்க முடியுமா?
ஒரு வேளை இது ஒரு கருதுகோள் குறித்த புரிதல் பிரச்சினைதான் என்றால், நட்பு சக்தியை விமர்சிக்கும் முறையிலா நீங்கள் அவரை விமர்சித்தீர்கள்? அரசியல்ரீதியில் அல்லாமல், அவரது தளத்திற்கான வரவேற்பு குறித்து, ஒரு தனிநபர் தாக்குதலாக நட்பு சக்தியை விமர்சிக்கும் முறையை இங்கேதான் பார்க்கிறோம். அதே அரசியலை பேசிய பொழுதும் கூட, நமது எல்லாத் தோழர்களின் இணையத் தளங்களும் வினவுக்கு இணையான மாபெரும் வரவேற்பைப் பெற்றுள்ளனவா? ஏன், தமிழ் ஓவியாவின் தளத்தை விடவும் யாருமே பார்க்காத, பின்னூட்டமிடாத தளங்களாக நமது தோழர்களின் தளங்கள் இல்லையா? ஒரு அரசியலின் சரியான தன்மையை ஒரு நபரின் இணையத் தளத்திற்கான வரவேற்பிலிருந்து தீர்மானித்து விட முடியுமா?
இது குறித்து முழுமையான பதில் தர வேண்டுகிறேன். ஒரு வேளை நான் முன்வைத்துள்ள விமர்சனங்களை ஏற்கும் பட்சத்தில், ஒரு முழுமையான சுயவிமர்சனத்தோடு முன் வர வேண்டுகிறேன்.
இது காறும் இவ் விவாதத்தில் கண்டும், காணாமல் அமைதி காக்கும் தோழர்களே, இவ்விவாதத்தினால் எதிரிகளுக்கு கொண்டாட்டம் உண்டாகும், அதனால்தான் அமைதி காக்கிறோம் என்பதுதான் உங்கள் நிலையானால், இனி மாவோயிஸ்ட் கட்சியை ஒருபோதும் விமர்சிக்காதீர்கள். ஏனெனில் பகிரங்கமான விமர்சனம், சுயவிமர்சனம் எதிரிகளுக்கு ஆதாயம் தரும் எனற போலித்தனமான நிலைப்பாடுதான் அவர்களது நிலையும். அறிந்தே அமைதி காக்கும் இந்தப் பண்புதான் அதிகார வர்க்க முதலாளித்துவம் உருவாவதற்கான அகநிலைக் காரணமும் ஆகும்.
விடைபெறும் விதத்தில் நீங்கள் பதில் சொன்னதில், நமது தோழர்களுக்கு கண்டிப்பாக குழப்பம் வந்திருக்கும்.
தோழர் போராட்டத்தின் கேள்விகள் சரியானவை. வினவு இதற்கு விரிவான பதில் சொல்ல வேண்டும்.
//அதிகார வர்க்க முதலாளித்துவம் உருவாவதற்கான அகநிலைக் காரணமும் ஆகும்.//
சோசலிச சமூகத்தில் அதிகார வர்க்க முதலாளித்துவம் உருவாவதற்கான அகநிலைக் காரணமும் ஆகும்.
தோழர் போராட்டத்திற்கு ஒரு விளக்கம்!
தோழர் போராட்டம்
திக தொடர்பாக மேற்கொண்ட மொத்த விவாதமுறை எந்தவித அமைப்பு
ஸ்தாபன முறைக்கு உட்பட்டது?
வலிய வம்புக்கு இழுக்கும் நோக்கில் எழுதப்பட்டதாகதான் கருதமுடியும்
விவாதப் பொருளை விட முறை தவறும்போது விவாதமுறையும் சில சமயங்களில் விவாதப்பொருளாகிவிடுகிறது, உணர்ச்சி வசப்படும் தருணங்களில் வார்த்தைகளில் தொங்கி கொண்டு விவாதிக்கும்போது
நாம் வறட்டுவாதிகளாகிவிடுகிறோம்,
எனவே விவாதத்தை மேற்கொள்ளும் அனைவரும் எச்சரிக்கை உணர்வோடும்
நிதானத்தோடும் இருப்பதோடு பிற தோழர்களையும் அவ்வாறு தவறிழைக்காமல்
எச்சரிப்பது இது போன்ற வீண் விவாதங்களை தவிர்க்கும்,
ஒருதலைப்பட்சமாக விவாதத்தை நீங்கள் முடித்துக் கொண்டு விட்ட பிறகு, தங்களுக்கு இந்தப் பதில் தேவைப்படாது. எனினும், இவ்விவாதத்தை கவனிக்கும் தோழர்களின் பொருட்டு, இப்பதிலை அளிக்கிறேன்.
//உங்களுடைய மையமான விமரிசனம் வினவின் அகம்பாவம் என்பதுதான்.//
“சுயவிமர்சனத்துக்கு உட்பட மறுக்கிற” என்ற வார்த்தைகளை வசதியாக மறந்து விட்டீர்களா, அல்லது அது உங்கள் கண்ணுக்குப் படவேயில்லையா என்பது தெரியவில்லை. நீங்களாகவே இப்படி முடிவு செய்து கொண்டு விட்டதால்தான், உங்கள் பதிலில் சுயவிமர்சனப் பார்வை இருப்பதாக தெரியவில்லை. மொத்த விமர்சனத்தின் தோற்றுவாய், உங்கள் அணுகுமுறை, பதில்கள் குறித்த, எனது விமர்சனத்தின் பக்கமே போகாமல், அரசியல்ரீதியிலான மாற்றுக் கருத்துக்களை மட்டும் சொல்லியிருக்கிறீர்கள்.
//“பலரும் வருவதுதான் அரசியலின் சரி தவறை அளப்பதற்கான அளவுகோலா?” என்று அதைத் திருப்பிப் போட்டு விவாதிக்கிறீர்கள். //
அக்கேள்வி சரியா, தவறா என்றெல்லாம் கூற மாட்டீர்கள். அது திருப்பிப் போட்டு விவாதிப்பது, அவ்வளவுதான் இல்லையா?
//உங்களுடைய மையமான விமரிசனம் வினவின் அகம்பாவம் என்பதுதான். பிறகு அந்த அகம்பாவத்தை நியாயப்படுத்துவதற்காக எதிர்ப்புரட்சி சக்திகளை (தி.க) நட்பு சக்தி (சமரச சக்தி) என வினவு கூறுவதாக குறிப்பிட்டுள்ளீர்கள்.//
அதாவது, இந்த விமர்சனம் உங்களுக்கு அகம்பாவம் கற்பிப்பதற்காக, இட்டுக்கட்டப்பட்டு சொல்லப்பட்டுள்ளது, அப்படித்தானே? இவ்விவாதத்தில் யார் உள்நோக்கம் கற்பித்தது, கற்பிப்பது என்பதை தோழர்களின், வாசகர்களின் முடிவுக்கே விட்டு விடுகிறேன்.
தி.க. பெரியார் தி.க குறித்த உங்கள் ஒப்பீடு மேலோட்டமானது மட்டுமல்ல, அது எவ்வகையிலும் எனது கருத்தை மறுதலிப்பதாக இல்லை.
//இரண்டு அமைப்புகளுமே கொள்கை அடிப்படையில் சமரச, சீர்திருத்தவாத அமைப்புகள்தான். //
இதை நான் எங்கே மறுத்தேன்? இவ்வமைப்புகளில் தற்போதைய அரசியல், சமூகச் சூழலில், நமது போராட்டத்தின் செயல்தந்திர நலன்களின் அடிப்படையில், எவை நட்பு சக்தி என்று கருதப்படத்தக்கவை என்பதில் தான் கருத்து வேறுபாடு. மேலும் அவ்வமைப்புகளின் செயல்பாடு, குறைந்தபட்சம் தாங்கள் கொண்டிருக்கும் கொள்கைக்காவது நேர்மையோடு நடந்து கொள்வது என்பதுதான் முக்கியமானது.
தில்லைப் போராட்டம் குறித்த தங்கள் விளக்கத்தை நான் பகுதியளவில் ஏற்கிறேன். ஏனெனில் தங்கள் பதிலும் கேள்வியின் ஒரு பாதிக்கான பதிலாக மட்டுமே உள்ளது.
//தி.க தொடர்பாக வினவு தெரிவித்திருக்கும் கருத்து, ம.க.இ.க வின் நிலைக்கு முரணானது என்று நீங்கள் கருதும் பட்சத்தில், உங்கள் விமரிசனத்தை ம.க.இ.க தலைமையிடம் தெரிவிக்கவும். எங்கள் புரிதல் தவறுதான் என்று அவர்கள் விளக்கும் பட்சத்தில், அதனை நிச்சயமாக நாங்கள் ஏற்றுக் கொள்வோம்.//
தி.க தொடர்பாக வினவு தெரிவித்திருக்கும் கருத்து என பொதுவாக சொல்லக் கூடாது. இக்குறிப்பிட்ட விவாதத்தின் தோற்றுவாய், நீங்கள் முன்வைத்த கருத்துக்கள், தங்கள் அணுகுமுறை குறித்து, அதுவும் தாங்கள் ஒருதலைப்பட்சமாக விவாதத்தை முடித்துக் கொண்ட பிறகு, அதைத் தவிர வேறு வழி இல்லை என்றுதான் படுகிறது.
//இணையம் என்ற பொது இடத்தில் விவாதிக்கும்போது அதற்கு வரம்புகள் உண்டு என்றே கருதுகிறோம்.//
வரம்புகள் உண்டு என்று மட்டும் கூறும் நீங்கள், நான் வரம்பு மீறியதாக கூறவில்லையெனினும், பொதுவில் அவ்வாறு பொருள்படும் விதத்தில் எழுதியுள்ளீர்கள். எனது விமர்சனத்தின் தொனி துவக்கம் முதலே உங்கள் எதிர்வினையை ஒட்டியே இருந்து வந்திருக்கிறது என்பதை இவ்விவாதத்தை கவனித்த யாரும் புரிந்து கொள்ள முடியும். அவ்வாறு இல்லையென்றால், தோழர்கள் சுட்டிக் காட்டவும்.
//ஒரு கம்யூனிஸ்டு அமைப்புக்குரிய நடைமுறை என்று கருதுகிறோம். இரு வேறு அமைப்புகளின் தோழர்களுக்கு இடையிலான அரசியல் விவாதத்தைத் தான் பத்திரிகையிலோ, பொது அரங்குகளிலோ நடத்த முடியும். ஒரு அமைப்பில் இருந்து இயங்கும் தோழர்களுக்குள் கருத்து வேறுபாடுகள் இருப்பின் அதனை அமைப்புக்குள் விவாதிப்பதுதான் முறை.//
இணையம் என்ற பொது இடத்தில், ம.க.இ.க-வின் ஆதரவாளர்களான வினவு குழுவினர் சில கருத்துக்களை முன்வைக்கும் பொழுது, அக்கருத்துக்களில் மாற்றுக் கருத்துக்கள் இருப்பின் அதனைச் சொல்வதுதான் சரியான நடைமுறை எனக் கருதுகிறேன். வினவு, ம.க.இ.க-வின் அதிகாரபூர்வமான தளம் எனும் பட்சத்தில் மட்டுமே, தாங்கள் சொல்லும் வரையறை பொருந்தும். எனவே, அத்தகைய ஒழுங்குமுறை குறித்த புரிதல் எனக்கு இல்லாமல் இல்லை. மேலும், ம.க.இ.க-வின் ஆதரவாளர் என்ற அடிப்படையில், அமைப்பின் ஆதரவாளர்கள் என்ற முறையில் நீங்கள் முன்வைக்கும் கருத்தின் உள்ளடக்கத்திலும், வடிவத்திலும் மாறுபடவும், அக்கருத்தை தெரிவிப்பதும் ஒழுங்குமுறைக்கு அப்பாற்ப்பட்ட செயல் என நான் கருதவில்லை.
மேலும் சில விசயங்களை, தவறான கோட்பாட்டு விளக்கம், பின்நவீனத்துவவாதிகள் முன்வைப்பவை என போகிற போக்கில் கூறிச் சென்றிருக்கிறீர்கள். எப்படித் தவறு என்று விளக்காத நிலையில், இதற்கு என்ன பதில் கூற முடியும்? நானும் எனது விவாதத்தை முடித்துக் கொள்கிறேன். நன்றி.
//தோழர் போராட்டம்
திக தொடர்பாக மேற்கொண்ட மொத்த விவாதமுறை எந்தவித அமைப்பு ஸ்தாபன முறைக்கு உட்பட்டது?//
தோழர் திப்பு
தங்கள் பதிலை கவனிக்கும் முன்பே பின்னூட்டமிட்டு விட்டேன். தங்கள் கேள்விக்கான பதில் எனது பின்னூட்டத்திலேயே உள்ளது.
நண்பரே, உங்களின் தளத்திற்கு வரும் பார்வையாளர்களின் எண்ணிக்கை ஒருபுறம் இருக்கட்டும்… வீரமணியின் மீதான விமர்சனத்திற்கு உங்களின் பதில் என்ன..? உங்களின் களப் பணிகள் என்ன ? சிதம்பரம் கோயிலின் தீட்சிதர் பிரச்சினைக்கு உங்களின் எதிர்வினை என்ன? என்பன போன்ற விடயங்களை தெளிவு படுத்தினால்.. எங்களை போன்ற பலருக்கும் உங்களின் செயல்பாடுகள், நிறைகள், குறைகள் தெரிய வரும்…
ஒரு காலத்தில் கருப்பு சட்டைக்கு, மிகப்பெரிய மரியாதை இருந்ததை நான் அறிவேன், இப்பொழுது வீரமனியினால் உண்மையான பெரியார் தொண்டனும் கேலிக்கு உள்ளாகிக் கொண்டு இருக்கின்றனர்…
//எனவே உங்களுடன் வாதம் செய்வது என்பது அல்லது உங்களுடன் கொள்கை ரீதியாக ஒத்துப் போவது என்பது உண்மையான பெரியார் தொண்டனான என்னால் முடியாது என்பதால்//
என்ன ஒரு அற்புதமான காரணம்? ‘உண்மையான’ காந்தியவாதிகள் விவாதிக்க விரும்பாததைப் போல, ‘உண்மையான’ ஏசு பக்தர்கள் விவாதிக்க விரும்பாததைப் போல,.. என் நம்பிக்கை எனக்கு, உங்க நம்பிக்கை உங்களுக்கு, அப்படித்தானே…! பெரியாரியத்தை இதை விடவும் கொச்சைப்படுத்தும் செயல் வேறென்ன? ‘எதையும் ஏன் என்று கேள்வி கேள், விவாதம் செய்’, என மாற்றுக் கருத்துக்களை, விமர்சனங்களை விவாதிப்பதற்கும், எந்தக் கேள்விக்கும் எப்பொழுதும் தன்னை உட்படுத்திக் கொள்ள தயாராக இருந்த பெரியாருக்கு நீங்கள் தொண்டரா? பெரியார் மொழியில் சொன்னால், இந்த வெங்காயக் காரணத்தை விட்டு விட்டு ஏதாவது உருப்படியாக சொல்லுங்கள்.
இரண்டாயிரம் ஆண்டுகளாக தீராத புற்றுநோயாக ஒட்டுமொத்த சமூகத்தையும் சீழ் பிடிக்கச் செய்திருக்கும் பார்ப்பனீயத்திற்கு எதிராக பகுத்தறிவு இயக்கம் நடத்தினார் பெரியார். கேள்விகள், விவாதங்கள், விமர்சனம், சுயவிமர்சனம் என ஒரு பகுத்தறிவுத் தேடலில்தான் அவர் பெரியாராக உருவானார். அவருடைய பகுத்தறிவு இயக்கத்தை விவாதத்திற்கு அப்பாற்ப்பட்ட பஜனை மடமாக மாற்றியது மட்டுமல்லாமல், அந்த பஜனை மடத்திற்கு ‘உண்மைத் தொண்டனாக’ வேறு விளங்குகிறீர்களே, அட அட! என்ன ஒரு சமூகத் தொண்டு!
பெரியார் கருத்துக்களைப் பரப்பிட இத்துணைத் தொண்டர்கள் ஆர்வமாக உள்ளது உண்மையிலேயே மகிழ்ச்சியானது.
உண்மையிலேயே இதில் எத்துனை பேருக்குப் பெரியார் சுயமரியாதைப் பிரச்சார நிறுவனத்தைப் பற்றியோ,அவர்களது பதிப்புக்களைப் பற்றியோ தெரியும்.திராவிடன் புத்தக நிலையம் எவ்வளவு புத்தகங்களை வெளியிட்டுள்ளது,நடமாடும் புத்தக நிலையங்கள் எப்படி செயல் பட்டுள்ளன, ஏதாவது தெரியுமா?எத்தனை பெரியார் படிப்பகங்கள் நிறுவப் பட்டுள்ளன?தெரியுமா?
இருட்டடிக்கப் பட்டப் பெரியாருக்கு,
அவரது நன்றி எதிர் பார்க்காத தொண்டர் படைக்குப் பெரியாரால் படித்து,பட்டங்கள் பெற்று பயன் பெற்றுள்ள வாரிசுகளின் வாழ்த்துக்கள் அருமை,அருமை.பெரியாரின் உண்மைத் தொண்டர்கள் உங்கள் மாலைகளால் மகிழப் போவதும் இல்லை,உங்கள் ஏச்சுக்களால் வருந்தப் போவதும் இல்லை.அவர்கள் இதையெல்லாம் பார்த்துத் தெளிந்தவர்கள்..
இருக்கும் அறக்கட்டளைகளிலேயே பெரியார் அறக்கட்டளை போல வளர்ந்து,கட்டுப்பாட்டுடன் நிர்வாகிக்கப்படும் அறக்கட்டளை வேறு இல்லையென்பது பொது கணக்காயர்களின் கணிப்பு.
வரும் ந்ன்கொடை அனைத்தும் விடுதலையில் பட்டியலிடப் படுகிறது.
ஆசிரியர் வீரமணி மேல் கல் வீசும் உங்கள் அனைவருக்கும் ஒரு வேண்டுகோள்.அவருடன் இரண்டு நாட்கள் கூட இருந்து பயணம் செய்து,தங்கும் இடம்,உண்ணும் உணவு,ஒரு மணித்துளியையும் வீணக்காமல் உழைக்கும் உழைப்பு,உறங்கும் நேரம் இவற்றைப் பாருங்கள்.நான் ஏற்பாடு செய்து தருகிறேன்.அவருக்குக்கிடைக்கும் அன்பளிப்புக்கள்,அவருடைய நூல்களின் வருமானம் அனைத்தும் அறக்கட்டளைக்கு.
கடைசியாக இந்தக் குடியரசு பதிப்பை செய்தவர்கள் அதை எப்படிப் பெற்றார்கள்,எங்கேயிருந்து பெற்றார்கள் அதில் ஈடு பட்டவர்களின் கருத்துக்கள்,குறிக்கோள் என்ன என்பதையெல்லாம் தெரிந்து கொண்டு பேசுவதும், எழுதுவதும் நல்லது.
பெரும் பாலோனோருக்குக் கிடைக்கும் செய்திகள் யாரிடமிருந்து கிடைக்கின்றன, தமிழின எதிரிகள் பத்திரிக்கைகளைத் தானே நீங்கள் படிக்கிறீர்கள்.அதில் வருவது தானே செய்தி.ஆதாரங்களுடன்,அனைவரும் எளிதாகப் படிக்குமாறு இணையத்தில் விடுதலை விளக்க்மாக வெளியிடுவதில் அனைத்தும் விளக்கப் பட்டுள்ளதே.நுனிப்புல் மேய்ந்த அறிவாளர்களாகத் திகழாதீர்கள்.
பெரியாரைப் படியுங்கள்,பரப்புங்கள் ஆனால் முறைப்படி செய்யுங்கள்.
எங்கிருந்து எப்படிப் பெற்றோம் என்பதை முறைப்படி வெளியிட்டுப் பதிப்பவர் பதிப்பாளி.திருட்டுத் தனம் செய்பவர்களுக்கு வேறு பெயர் உண்டு.
8:45 AM, July 29
அய்யா பெரியவரே… நீர் எப்படி எல்லாம் அறக்கட்டளை நடத்துகிறீர்.. அந்த அறக்கட்டளை மிகவும் சிறப்பாக நடந்து கொண்டு இருப்பதாக எவனோ ஒரு கணக்காளரின் பாராட்டு , எங்கள் தலைவர், எங்கு உறங்குகிறார், என்ன உண்கிறார், இதெல்லாம் தெரியுமா என வீர(மணி) வசனம் பேசுவது… இது மட்டும் தானா .. இன்னும் ஏதேனும் இருக்கிறதா…?
இதில் தந்தை பெரியாரின் கருத்துக்கள் எந்த வடிவத்தில் வெளிப்படுகிறது என கூறினால்… இன்னும் புரியாமல் விழித்துக்கொண்டு இருக்கும் பலருக்கும் புரிந்து கொள்ள உதவியாய் இருக்கும்….
அய்யா.. எப்படி பெரியாரை “முறைப்படி” படிப்பது, “முறைப்படி” பரப்புவது… பார்ப்பான் சொல்வது மாதிரி பார்ப்பனன் தான் மந்திரம் சொல்லவேண்டும், அவன் மட்டும்தான் கருவறையில் நுழைய வேண்டும்… ஏனெனில் அவன்தான் அந்த காரியங்களை “முறைப்படி” செய்ய தெரிந்தவன்… அப்போ உங்களின் சட்டைக்குள் இருப்பது வெற்றுடலா அல்லது பூணூலா?
//எங்கிருந்து எப்படிப் பெற்றோம் என்பதை முறைப்படி வெளியிட்டுப் பதிப்பவர் பதிப்பாளி.திருட்டுத் தனம் செய்பவர்களுக்கு வேறு பெயர் உண்டு.// சோம.இளங்கோவன் அவர்களே (அதுதான் தமிழன்) பகவத்கீதையையோ, பைபிளையோ என்னைக் கேட்காமல் யாரும் வெளியிடக் கூடாது என்று எந்த மதவாதிகளும் சண்டைக்கு வந்ததில்லை. யாரும் வெளியிடுவதால்தான் அவனின் முடைநாற்ற சீந்தனை பட்டிதொட்டி எங்கும் பரவிப்போய் கிடக்கிறது. அவனுகளே அப்படி இருக்கையில் அவனுகளை எதிர்த்துப் போரிடும் பெரியார் சிந்தனைகளை இப்படி சிமிழுக்கூள் அடைப்பது எவ்வளவு சின்னப்புத்தி? இது நேரடியாக பார்ப்பானுக்கு சேவை செய்வது ஆகாதா?
எங்கிருந்து எப்படிப் பெற்றோம் என்று ‘அறிவோடு’ கேட்கிறீரே.. குடியரசை பெரியார் வீரமணியோட அப்பத்தாவுக்காக மட்டுமா வெளியிட்டார்? 14 ஆயிரம் காப்பி வரை வித்த இதழ் அல்லவா இது? இதை ஒருவர் சேகரிப்பது கடும் குற்றமா? அமெரீக்கா வைக்க இருக்கும் விதை சேமிப்புத் தடைச் சட்டம் போல குடியரசை சேகரித்து வைப்பதையும் குற்றம் என்கிறீரா?
எங்கள் வீட்டில் அயோத்திதாசப் பண்டிதரின் ‘ஒருபைசாத் தமிழன்’ பழைய பைண்டிங் உள்ளது. அது சட்டப்படிக் குற்றமா? இளங்கோவன்.! லெனின், காரல்மார்க்ஸ், மாசேதுங் போன்ற மாமேதைகளின் நூல்களை என்னைக் கேட்காமல் யாரும் வெளியிடக்கூடாது என்று எந்தப் பணப்பேய்களும் கொக்கரிக்காததால்தான் அவர்களின் சிந்தனை உலகெங்கும் பரவி இருக்குகிறது.. உலகில் எந்த அறிஞருக்கும் நிகழாத சோகத்தை பெரியாரூக்கு வீரமணிதான் தந்திருக்கிறார். உங்கள் கட்சியில் அடிக்கடி சொல்வீர்களே ‘ஆசிரியர் சரித்திரம் படைத்திருக்கிறார்’ என்று.. உண்மைதான். பெரியாருக்கு முன் உதாரணம் இல்லாத அவமரியாதை செய்து சரித்திரம் படைத்திருக்கிறார்.
//அவருடன் இரண்டு நாட்கள் கூட இருந்து பயணம் செய்து,தங்கும் இடம்,உண்ணும் உணவு,ஒரு மணித்துளியையும் வீணக்காமல் உழைக்கும் உழைப்பு,உறங்கும் நேரம் இவற்றைப் பாருங்கள்.நான் ஏற்பாடு செய்து தருகிறேன்.//
அவர் அடுத்தமுறை போயஸ் தோட்டத்துக்கு அணி மாறும் போது எனக்கு அவருடன் இருக்க அனுமதி வாங்கி தாருங்கள்…நான் இன்னும் போயஸ் தோட்டம் பார்த்ததில்லை…
//அவருக்குக்கிடைக்கும் அன்பளிப்புக்கள்,அவருடைய நூல்களின் வருமானம் அனைத்தும் அறக்கட்டளைக்கு.//
அவருக்குக்கிடைக்கும் அன்பளிப்புக்கள்,அவருடைய நூல்களின் வருமானம் அனைத்தையும் அவர் அறக்கட்டளைக்கு கொடுத்துவிட்டு, அறக்கட்டளையை தனக்கு எடுத்துக் கொண்டார்…பலே.
மேலே தமிழன் எனும் பேர்ல பின்னூட்டம் இட்டிருக்கும் சோம.இளங்கோவனுக்கு இருப்பு இங்கில்லை. அமெரிக்கப் ப்ரஜை. இந்த ஆசாமியும் வீரமணியும் அமெரிக்காவையும் கனடாவையும் உள்ளடக்கி பெரியாரின் பேரைச் சொல்லி பல என்.ஜி.ஓ.க்களில் டாலர்கறந்து பிழைப்பு நடத்தும் பேர்வழிகள். இந்த ஆசாமியின் பதிலில் எங்காவது பெரியாரின் சிந்தனை தெரிகிறதா? அதே வாழ்வியல் சிந்தனைதான்.. எப்படி வேண்டுமானாலும் பிழைக்கலாம்..எனும் தத்துவப்படி வீரமணி மாமா நடத்தும் கம்பெனி முன்னேற்றம் பத்திதான் பேசுறான். காலாண்டுக் கணக்குக் காமித்துத் தன் பங்குவிலையை உயர்த்தும் தரகு முதலாளிக்கும் தமிழன் சோம இளங்கோவனுக்கும் என்னவேறுபாடு?வீரமணி பாப்பாத்திக்கு பாதபூசை செய்யப்போவதை விரும்பாத பெரியார் தொண்டர்கள் 1996இல் விலகியபோது (பெதிகவினர்) அவர்களைப் பார்த்து பணக்காரத் திமிரோடு இந்த அமெரிக்கமாமா சொன்னது “சைக்கிளில் போகிறவர்கள் காரில் போக ஆசைப்படலாமா?”
(பி.குறிப்பு: தமிழன் ‘சோம.இளங்கோவன் தான் என்பதற்கு ஆதாரம் – இன்றைய விடுதலை செய்தி –நீதியும், நேர்மையும்!
இணையத்தில் பல தமிழர்கள் சென்னை உயர்நீதிமன்றத் தீர்ப்பு பற்றி எழுதி வருகிறார்கள்.
அதில் டாக்டர் சோம.இளங்கோவன் அவர்கள் அளித்த பதில் இது:
பெரியார் கருத்துகளைப் பரப்பிட இத்துணைத் தொண்டர்கள் ஆர்வமாக உள்ளது உண்மையிலேயே மகிழ்ச்சியானது.
உண்மையிலேயே இதில் எத்துணைப் பேருக்குப் பெரியார் சுயமரியாதைப் பிரச்சார நிறுவனத்தைப் பற்றியோ, அவர்களது பதிப்புகளைப் பற்றியோ தெரியும்? திராவிடன் புத்தக நிலையம் எவ்வளவு புத்தகங்களை வெளியிட்டுள்ளது, நடமாடும் புத்தக நிலையங்கள் எப்படிச் செயல்பட்டுள்ளன, ஏதாவது தெரியுமா?
இருட்டடிக்கப்பட்ட பெரியாருக்கு, அவரது நன்றி எதிர்பார்க்காத தொண்டர் படைக்குப் பெரியாரால் படித்து, பட்டங்கள் பெற்று பயன்பெற்றுள்ள வாரிசுகளின் வாழ்த்துகள் அருமை! அருமை.! என்னே அவர்கள் நன்றி தெரிவித்தல்!
இருக்கும் அறக்கட்டளைகளிலேயே பெரியார் அறக்-கட்டளை-போல வளர்ந்து, கட்டுப்பாட்டுடன் நிருவகிக்கப்படும் அறக்கட்டளை வேறு இல்லையென்பது பொது கணக்-காயர்களின் கணிப்பு.
வரும் நன்கொடை அனைத்தும் விடுதலையில் பட்டி-யலிடப்படுகிறது.
ஆசிரியர் வீரமணிமேல் கல்வீசும் உங்கள் அனைவருக்கும் ஒரு வேண்டுகோள். அவருடன் இரண்டு நாள்கள் கூட இருந்து பயணம் செய்து, தங்கும் இடம், உண்ணும் உணவு, ஒரு மணித்துளியையும் வீணாக்காமல் உழைக்கும் உழைப்பு, உறங்கும் நேரம் இவற்றைப் பாருங்-கள். நான் ஏற்-பாடு செய்து தரு-கிறேன். அவ-ருக்குக் கிடைக்கும் அன்-பளிப்புகள், அவருடைய நூல்-களின் வருமானம் அனைத்தும் அறக்கட்டளைக்கு.
கடைசியாக இந்தக் குடியரசு பதிப்பை செய்தவர்கள் அதை எப்-படிப் பெற்றார்கள், எங்கேயிருந்து பெற்றார்கள் அதில் ஈடுபட்டவர்-களின் கருத்துகள், குறிக்கோள் என்ன என்பதையெல்லாம் தெரிந்து-கொண்டு பேசுவதும், எழுதுவதும் நல்லது.
பெரும்பாலோனோருக்குக் கிடைக்கும் செய்திகள் யாரிட-மிருந்து கிடைக்கின்றன? தமிழின எதிரிகள் பத்திரிகைகளைத்-தானே இன்னமும் நீங்கள் படித்து வருகிறீர்கள்? எத்தனை பேர் விடுதலை, இணையத்தில் எளிதாகப் படிக்க முடியும் என்-றாலும் படிக்கிறீர்கள்? அதில் அனைத்துச் செய்திகளும் ஆதா-ரங்களுடன் தரப்பட்-டுள்ளதே!
நுனிப்புல் மேய்ந்த அறிவாளர்களாகத் திகழாதீர்கள்.
பெரியாரைப் படியுங்கள், பரப்புங்கள்; ஆனால் முறைப்படி செய்யுங்கள்.
எங்கிருந்து எப்படிப் பெற்றோம் என்பதை முறைப்படி வெளி-யிட்டுப் பதிப்பவர் பதிப்பாளி. திருட்டுத்தனம் செய்பவர்களுக்கு வேறு பெயர் உண்டு.)
செங்கதிர்
வீரமணியை ஆதரிக்கும் கைக்கூலிகளும் எடுபிடிகளும் எப்போதாவது வீரமணி, பெரியாரை-அதாவது பெரியார் சிந்தனையை பரப்பியதையோ, அல்லது பெரியார் சிந்தனையை எவ்விதம் வளர்த்தெடுத்தார் என்பதையோ சொல்வது கிடையாது. சொல்வது எல்லாமே பெரியார் விட்டுவிட்டுப் போன சொத்தை 45 நிறுவனங்களாக மாற்றிக் காட்டியவர்.. என்றும் திறம்பட கல்லூரிகளைப் பெருக்கியவர் என்றும்தான் பேசுகின்றனர். இந்தக் கைக்கூலி எழுத்து வியாபாரிகள் மண்டையில் பட்டென உறைக்கும்படி ஒன்றைச் சொல்லிக் கொள்வோம்.. வீரமணி என்பவரின் இந்த வியாபாரத் தெறமை ஜேப்பியார் அளவுக்கும், ஏ.சி. சண்முகம் அளவுக்கும் இருக்கிறதை ஒத்துக்கொள்வோம்.. கல்வியைப் பார்ப்பனியம் சூத்திரனுக்கு மறுத்ததைப் போல காசில்லாதவனுக்கு கல்வியை மறுக்கும் புதுப் பார்ப்பனீயத்தைக் கடைப்பிடித்துக் கட்சியின் தலைவர்களின் பிள்ளைகாளாக இருப்பினும் நன்கொடை கொடுத்தால்தான் சீட்டு என்று கராறாய் டீச்சர் டிரெய்னிங்கிலும் பி.இ.சீட்டிலும் கொள்ளை அடித்துத்தானே அறக்கட்டளை வளர்த்தவர் வீரமணி?
மக்களிடம் கொள்ளை அடித்துப் பெருக்கிய சொத்தைப் பறித்தெடுத்து மக்களிடம் ஒப்படைப்பதுதானே சரி? ஒருத்தர் சாகும் முன்னால் கொஞ்சம் பணம் தந்திட்டுப் போறார்.. அதனை வைத்து வட்டிக்கடை போட்டு முதலைப் பெருக்குவது மார்வாடி வழக்கம்.. சீட்டுக் கம்பெனியும் சுயநிதிக்கல்லூரியும் கட்டி வருவாய் பெருக்கிய வீரமனிக்கும் சேட்டுகளுக்கும் என்ன வேறுபாடு? போட்டுக் கொள்ளும் சட்டைக்கலர் மட்டும்தானே?
–செங்கதிர்
பெதிக தோழர்களின் ‘பெரியார் விடுதலைப் போராட்டம்’ வெற்றி பெற வாழ்த்துக்கள்.சட்டப் போராட்டத்தால் மட்டும் மாமா வீரமணியை வீழ்த்த முடியாது. பெரியார் திடலினையும் பெரியார் அறக்கட்டளை, கல்லூரி,பல்கலை உள்ளிட்ட பெரியார் சொத்துக்கள் அனைத்தையும் இந்து அறநிலையத் துறை போன்று அரசின் கட்டுப்பாடுக்குள் கொண்டுவந்து மக்கள் சொத்தாக மாற்றிடப் போராட வேண்டும். பெதிக இதனை நோக்கிப் பயணிப்பது சரியாக இருக்கும். இப்போராட்டத்தில் சொரனை உள்ள தமிழர் அனைவரும் ஒன்று சேர்வோம். பித்தலாட்டக் கும்பல் தலைவன் வீரமணியை வீழ்த்திப் பெரியாரைக்காப்போம்.. பார்ப்பனியம் எதிர்ப்போம்.
குப்பு
வீரமணியின் பயணம் பெரியாரின் சொத்துக்களை பின்பற்றித்தான் உள்ளதே தவிர அவரது சிந்தனைகளை பின்பற்றி அல்ல என்பது தெளிவாகிறது.
மருமொளிந்துல்லோர் எல்லோரின் எண்ணமும் ஆசிரியர் எப்படி பெரியார் கொள்கையை பரப்புகிறார் என்று கவனிக்கவில்லை மாறாக அவர் எப்படி இவளவு பணம் ஈட்டுகிறார் எங்கிருந்து வருகிறது என்றுதான் எல்லோரும் கணக்கபில்லையாக கணக்குபர்கிறீர்கள். இனிமேலாவது அதனை விட்டு அவர் எந்த அளவுக்கு பெரியாரின் கொள்கைகளை எடுத்து சென்றுகொண்டிருக்கிறார் என்று பாருங்கள் தெரியவில்லை என்றல் தெரிந்தோரிடம் கேட்டு அறிந்துகொள்ளுங்கள் தோழர்களே.
அனால் ஒன்று நாம் எல்லோரும் போகும் பாதைகள் வேராக இருந்தாலும் சேரும் இடம் ஒன்றுதான்.
யாழினி அவர்களே! கணக்குப் பிள்ளை வேலையப் பாக்குறதே வீரமணியோட கைத்தடிகள்தான். இதற்கு ஆதாரத்துக்கு எங்கேயும் போகவேண்டாம்.. மின்சாரம் எனும் பேரில் வீரமணிக்கு கூஜாதூக்கும் ஒரு கைக்கூலி போனவருடம் வெளியிட்ட பெரியார் ஆண்டுமலரில் பெரியாரைப் பத்தி ஏதும் எழுதாமல் ‘கட்டிடம் எழுப்பிய வீரமணியைப் பத்தியே’தான் சொம்பு அடிச்சிருக்குது. அதில் ‘இன்கம்டாக்ஸ் பிரச்சினையை சமாளித்தவர் என்றும் பல்கலைக்கழகம் அமைத்தவர் என்றும் இன்னும் பலவித பொருளாதார சாதனைகளைப் புகழ்ந்தும்தான் வீரமணீயைப் புகழ்ந்துள்ள்ள்து மின்சாரம். மின்சாரம் போன்ற கடைந்தெடுத்த வீரமணி-பூஜாரிக்கே வீரமணியின் கொள்கையைத் தேட முடியவில்லை.. நீங்களாவது சொல்லுங்களேன்.. வீரமணி எங்காவது ரகசியமா பெரியார் பிரச்சாரம் பண்றாரா என்று!
1) சீரங்கம் கருவறை நுழைவுப்போரைக் காட்டிக்கொடுத்தவர் யார்? 2) ராஜீவ் கொலை வழக்கில் தூக்குத்தண்டனை விதிக்கப்பட்டவர்களை விடுவிக்க இயக்கம் நடந்தபோது அந்த இயக்கத்துக்கு உதவிடக்கூடாது என உத்தரவு போட்டவர் யார்? 3) பெரியார் சிலையை எதிரிகள் சேதப்படுத்தியபோதும் எதிர்த்து போராடாமல் ‘அரசை’க் காப்பது கடமை எனக் கட்டளை இட்டவர் யார்? 4) மதமாற்றத் தடைச்சட்டம் போட்ட ஜெயாமாமியை தமிழ்நாடே எதிர்த்தபோது தனது நெருங்கிய சகா ஜஸ்டிஸ் வேணுகோபாலை வைத்து அச்சட்டத்தை ஆதரித்துக் கட்டுரை எழுதச் செய்தவர் யார்? 5) ராஜீவ் கொலைவழக்கில் சிறைவைக்கப்பட்ட திக குடும்பத்தைச் சேர்ந்த பேரறிவாளனின் தாயைத் திடலை விட்டு வெளியேறச் சொல்லி அவரை ரயில்வேஸ்டேசன் பிளாட்பாரத்துக்குத் துரத்தியவர் யார்? 6) ஈழ இன அழிப்புப்போரில் கொலைகாரக் காங்கிரசுக்கு வாக்களிக்கக் கோரிய பெருமைக்குரியவர் யார்?
இவற்றை எல்லாம் பெரியார் வழிப்பாதை என்று உங்களை நம்பவைத்திருக்கும் மாமாப்பயல் வீரமணிதான் அவர்.
நான் வீரமணியை ஆதரிப்பவனும் அல்ல எதிர்ப்பவனும் அல்ல. ஆனால் மாறி மாறி அணி சேரும் அவரது காட்சி மாற்றங்கள் பெரியார் கொள்கையை பரப்பத்தான் என்பதை நம்பச் சொல்கிறீர்களா…
ஏனுங்க சுடர்மணி பட்டாசு கிளப்பிட்டிங்க போங்
படிக்கும்போது குளு குளுன்னு இருக்குதுங்
அதுவும் //மாமாப்பயல் வீரமணிதான்// இந்த வரி டாப்புங்கோ!
தமிழன் என்று எழுதும் நான் சோம.இளங்கோவன் தான்.அமெரிக்காவிலே பெரியார் பன்னாட்டமைப்பு நிறுவி இங்குள்ள தமிழர்களும்,அமெரிக்கர்களும் பெரியாரை அறிந்து கொள்ள விழாக்களும்,கூட்டங்களும் போட்டுப் பரப்பி வருகிறோம்.,எங்கள் கடும் உழைப்பால் உழைத்தக் காசால்..அமெரிக்க அறிஞர்கள் அங்கே வந்து கலந்து கொண்டிருக்கிறார்கள்.ஒவ்வொரு உண்மையான பெரியார் தொண்டரையும் போல எங்கள் பணத்தை செலவு செய்து நாங்கள் பெரியார் தொண்டை எங்களால் முடிந்த அளவிற்குச் செய்கிறோம்.எந்த என்.ஜி.ஓ, உன் ஜி ஓ ஒரு மண்ணும் கிடையாது.
செஞ்சட்டைகள் உண்மை பேசிய காலம் இருந்தது.இப்போது பேசுவது,எழுதுவது எல்லாமே சேர் தானா? உங்கள் தரத்தை செஞ்சட்டைக்காகவாவது உயர்த்திக் கொள்ளுங்கள்.பெரியார் சுயமரியாதைப் பிரச்சார நிறுவனம்,திராவிடன் பதிப்பகம்,
periyar.org எல்லாம் செய்து வருவது ஏமாற்றுப் பிழைப்பு,கொள்ளை, நீங்கள் சொல்வதுதான் உண்மை, இதைக் கேட்பவர்கள் எதை உண்மை யென்று நன்கு அறிந்து கொள்வார்கள். வாழ்க உங்கள் உண்மையான பெரியார் தொண்டு.
சோம.இளங்கோவன் அவர்களே!
என்.ஜி.ஓ.வும் கிடையாது உன்.ஜி.ஓ.வும் கிடையாது என்று அடித்துச் சொல்லும் நீங்கள் பெரியார்புரா எனும் பெயரால் வீரமணி செய்துவரும் ஏககதிபத்திய சேவைகளை என்ன என்று சொல்வீர்கள்? இதற்கும் பெரியார் சிந்தனைகளுக்கும் என்ன சம்பந்தம்?
(புரா பற்றி அறிய:
http://tamilcircle.net/index.php?option=com_content&view=article&id=1174:2008-05-04-15-48-25&catid=36:2007&Itemid=27
)
ஒழுங்காகப் படித்து உண்மையை எழுத வேண்டும்.
“சைக்கிளில் போகிற்வர்கள் காரில் போக ஆசைப் பட்லாமா” என்று எழுதியிருப்பது
முழுப் பொய்.
உழைப்பாளிகள் அனைவருமே சைக்கிளில் ஆரம்பித்துத் தான் உயர்கிறார்கள்.
சைக்கிளில் போகும் போது இருக்கின்ற கொள்கைப் பிடிப்பு, காரில் போகும் போது மாறி விடுகின்றது பல பேருக்கு, என்று எழுதப் பட்டது.
சோம.இளங்கோவன் அவர்களே! “சைக்கிளில் போகும் போது இருக்கின்ற கொள்கைப் பிடிப்பு, காரில் போகும் போது மாறி விடுகின்றது பல பேருக்கு” என்றே நீங்கள் சொன்னீர்கள் என்றே வைத்துக் கொள்வோம். அது சரியாகப் பொருந்துவது வீரமணிக்குத்தானே.. காரில் போக ஆரம்பித்ததும்–அதாவது அதிகார வர்க்கத்துடன் கைகோர்த்ததும் பார்ப்பனியத்துடன் இணைய ஆரம்பித்தது அவர்தானே.. வசதி பெருகியதும் ‘போராடாதே.. அல்சர் வரும்’ எனும் தத்துவத்தை வாழ்வியல் வாந்தியாக எடுத்துவருகிறார்.. மேலும் திக எப்படி எல்லாம் வீரமணியால் சீரழிக்கப்பட்டுள்ளது என்பதை புதிய ஜனநாயகம் சென்ற ஆண்டு அம்பலப்படுத்தி இருப்பதைப் பாருங்கள்.. இதற்குப் பெயர்தான் பெரியார் சிந்தனைப் பிரச்சாரமா?
“சென்னை பெரியார் திடலில் கடந்த செப்டம்பர் 5இல் நடைபெற்ற தி.க. இளைஞரணி மாநாடு, “வேலைவாய்ப்புடன் உற்பத்தியும் கூடிய தொழிற்சாலைகளை ஏராளம் தொடங்குமாறு’ அரசை வலியுறுத்தியது. ஆனால், அரசு வேலைகளில் ஆட்குறைப்பு செய்வதற்கென்று அரசால் நியமிக்கப்பட்ட “நிர்வாக சீர்திருத்தக் குழு’ இயங்க அதே பெரியார்திடலில் வாடகைக்கு இடம் விட்டிருப்பவரே வீரமணிதான்.
தி.க. மகளிரணியோ “காவல்துறையில் பணியாற்றும் பெண்கள் மூக்கு, காதுகளில் நகைகளை மாட்டுவதால் அந்தத் துறைக்கான எடுப்பையும் கம்பீரத்தையும் குலைத்துவிடுவதாக, குறைத்து விடுவதாக அமைவதால் அந்த நிலையிலிருந்து அப்பெண்கள் விடுபடவேண்டும்” எனத் தீர்மானம் போட்டுள்ளது. கூலிகேட்டுப் போராடினாலோ, மறியல் அறப்போரில் ஈடுபட்டாலோ ஆண்போலீசுக்குச் சற்றும் குறையாமல் பெண்போலீசும் வெறிநாய்கள் போல் உழைக்கும் மக்கள் மீது பாய்ந்து குதறுகின்றது . இந்தக் கொடூர மிருகத்திடம் “எடுப்பையும்’ “கம்பீரத்தையும்’ யாராவது ரசிக்க முடியுமா? நகைகளைத் துறந்து வந்து அடித்து உதைத்தால் “எடுப்பாக’ இருக்கிறது என்று ரசிக்கத்தான் முடியுமா?
பெரியார் தி.க.வினருக்கு எதிராக வழக்குத் தொடுத்துள்ள “தளபதி’ வீரமணி, நீதிமன்றத்தில் தன்னை “இந்து’ என்று குறிப்பட்டுள்ளார். “இந்து என்றால் திருடன்’ என விளக்கவுரை கொடுத்துவந்த பெரியார் இயக்கத்திற்கு குழைத்து நாமம் சாத்திய வீரமணியின் விடுதலையோ “”பாகிஸ்தான் போன்ற நாடுகள் அணு ஆயுதத் துறையில் பலமாக உள்ளதால் அணுசக்தி ஒப்பந்தத்தை ஆதரிக்க வேண்டும்”; “காஷ்மீர் எல்லையிலே மைனஸ் டிகிரி இருக்கிற இடத்திலே எதிரி வந்தால் சுடுகிறானே. நம்மவன் யாருக்காக இப்படிப் பாடுபடுகிறான்? இந்த தேசத்திற்காக!” என்றெல்லாம் எழுதத் தொடங்கியுள்ளது.
ஜம்முகாஷ்மீரை மூன்றாகப் பிரிக்க அத்வானி சொன்ன யோசனைக்கு பக்கமேளம் வாசிக்கும் வகையில் “இஸ்லாமியர்கள் பெரும்பான்மையாக உள்ள காஷ்மீர் தனிமாநிலமாவது, மேலும் நாட்டின் பாதுகாப்புக்கு அச்சுறுத்தலாகும்” என்று எச்சரித்துள்ளது. இந்து தேசியவெறியுடன் கை கோர்க்கும் தி.க.வின் பித்தலாட்டம் மேலும் ஒருபடி போய் “பாரதமாதா’வையும் உயர்த்திப் பிடிக்கத் தொடங்கியுள்ளது. தி.க. மாநாட்டை ஒட்டி நடத்தப்பட்ட அறிவியல் கண்காட்சியில் “2020இல் இந்தியா” எனும் தலைப்பில் பாரதமாதாவை ஒளிரவைத்து அழகு பார்த்துள்ளனர். பார்ப்பன பயங்கரவாதத்துக்கு எங்கெல்லாம் பங்காளிகள் முளைத்து வருகிறார்கள், பாருங்கள்!!
· ” (ஆதாரம்:http://tamilcircle.net/index.php?option=com_content&view=article&id=4177:2008-10-03-20-24-59&catid=68:2008&Itemid=27)மேலும் நீங்கள் பரப்பிவரும் கருத்துமுதல்வாத வாழ்வியல் வக்கிர சிந்தனைகளைத் தெரிந்து கொள்ளப் படிக்க வேண்டிய தளம்: http://kedayam.blogspot.com/2008_08_01_archive.html “வாழ்வியல் சிந்தனையா? வக்கிர சிந்தனையா? “)
Vinavu ok we got the point.you guyshave liberated the bearded swine from the clutches of veeramani and his mad dogs like thamiz oviya and thamizan.But please tell me;who is going to liberate tamil nadu and tamils from the clutches of the late bearded swine and his disciples in pe thi ka and the naxal lunatics like vinavu and other ma ka i ka terroriists.Please answer this question.
திக தொண்டர்களுக்கு அன்பான வேண்டுகோள்!
பெரியார் கொள்கைகள் மக்களுக்கு சென்றடைய வேண்டுமென்பதில் எந்த மாற்று கருத்து இருக்க முடியாது. யார் செய்தால் என்ன. பெதிக உண்மை உணர்வுடன் பெரியாரின் கொள்கைகளை மறுபதிப்பு செய்கின்றனர். அதற்கு முட்டு கட்டை போட்டால் என்ன நியாயம்.
குறிப்பாக பாவேந்தர் பாரதிதாசன் பாடலகள் பொதுவுடைமை ஆக்கப்பட்டதனால் தானே பல பதிப்பகங்கள் அதை பல்வேறு வடிவங்களிலும் குறைந்த விலையில் வெளியிட முடிந்தது. பல்லாயிரக்கணக்கானோரிடம் சென்றடைகிறது. அப்படி நாட்டுக்கு தேவையான எழுத்துகளை பொதுவுடைமைப்படுத்துவது தானே நமது உண்மையான பணியாக இருக்க வேண்டும். அதற்காக பெதிக உண்மை உணர்வுடன் போராடுகிறது.
பொதுவுடைமை கருத்துகளை தமிழகத்திற்கு அறிமுகப்படுதியவர் தமிழர் தலைவர் தந்தை பெரியார். அவரது எழுத்துக்களை லாக்கரில் வைத்து பூட்டி வைப்பதும், தான் மட்டுமே அதற்கு உரிமையானவன் என்பதும் அறிவீனம் அல்லது துரோகம்.
தாங்கள் அறிவீனர்களா துரோகிகளா? நண்பர்களே சிந்தியுங்கள். திக பெரியார் கருத்துக்களை உலகளாவிய முறையில் பரப்புவதாகவே இருக்கட்டும். அதனால் மாற்று கட்சியினரும், மாற்று அமைப்பினரும் அவரது எழுத்துக்களை வெளியிடக்கூடாது என்பது என்ன வகை நியாயம்.
பெரியார் புரா–அப்துல் கலாம் அவர்களால் அழைக்கப் பட்டு,இந்தியாவின் பல இடங்களில் அவரால் பேசப்பட்டது.அவரது பேச்சுக்களைப் படியுங்கள்.
புரா–வுக்குப் பல ஆண்டுகள் முன்னேயே பவர்-பெரியார் மகளிர் தன்னார்வ மறுமலர்ச்சிக் குழுக்கள் பெரியார் கொள்கையான கிராம முன்னேற்றத்தில் ஈடு பட்டிருந்தனர்.அதிலே உள்ள சுய உதவிக் குழுக்கள்,அதிலே தாழ்த்தப்பட்ட பெண்கள் முன்னேற்றங்களை நேரிலே பார்த்து வந்தவன் நான்.
அங்கே நிகழ்ந்துள்ள மறுமலர்ச்சியை நேரிலே பார்த்து விட்டு,அங்கே மிகவும் தூய்மையாக் வைத்து நடத்தப் படும் கழிவறை,குளியலறைகளைப் பார்த்து விட்டு உங்கள் வார்த்தைகளை வீசுங்கள்., சேற்றை வீசுங்கள்.
சுனாமி சமய்த்திலே நாகப் பட்டின மருத்துவ மனைக்கு அப்துல்கலாம் அவரின் நண்பர் மூலம் வேறு இடத்திற்குச் செல்ல விருந்த குடிநீர் தூய்மைக் கருவியைத் தங்கள் செலவிலே வந்து,பொங்கலன்று அவர்களே வல்லம் பெரியார் மணியம்மை பொறியியல் கல்லூரி ஆசிரியப் பெருமக்களின் உதவியுடன் நிறுவிய அமெரிக்க அமைப்பு. பின்னர் மற்ற கிராமத்த்தின் குடி நீருக்கு அவர்கள் செய்தார்கள்.இப்போது அரசே செய்யத் தலைப்பட முயற்சிக்கிறது.
செஞ்சட்டை மற்றவர்களை விட ஆழமாகச் சிந்தித்து உண்மையறிந்து செயல் பட வேண்டும்.வெறும் சேற்றை வாரி வீசக் கூடாது.
பொருளாதாரக் கொள்கைகளில் வேறு பட்டுப் பேசலாம்,அது உரிமை.
உண்மைகளைத் திரித்துப் பேசுவது கயமை.
//பெரியார் புரா–அப்துல் கலாம் அவர்களால் அழைக்கப் பட்டு,இந்தியாவின் பல இடங்களில் அவரால் பேசப்பட்டது.அவரது பேச்சுக்களைப் படியுங்கள்.
புரா–வுக்குப் பல ஆண்டுகள் முன்னேயே பவர்-பெரியார் மகளிர் தன்னார்வ மறுமலர்ச்சிக் குழுக்கள் பெரியார் கொள்கையான கிராம முன்னேற்றத்தில் ஈடு பட்டிருந்தனர்.அதிலே உள்ள சுய உதவிக் குழுக்கள்,அதிலே தாழ்த்தப்பட்ட பெண்கள் முன்னேற்றங்களை நேரிலே பார்த்து வந்தவன் நான்.
அங்கே நிகழ்ந்துள்ள மறுமலர்ச்சியை நேரிலே பார்த்து விட்டு,அங்கே மிகவும் தூய்மையாக் வைத்து நடத்தப் படும் கழிவறை,குளியலறைகளைப் பார்த்து விட்டு உங்கள் வார்த்தைகளை வீசுங்கள்., சேற்றை வீசுங்கள்.
சுனாமி சமய்த்திலே நாகப் பட்டின மருத்துவ மனைக்கு அப்துல்கலாம் அவரின் நண்பர் மூலம் வேறு இடத்திற்குச் செல்ல விருந்த குடிநீர் தூய்மைக் கருவியைத் தங்கள் செலவிலே வந்து,பொங்கலன்று அவர்களே வல்லம் பெரியார் மணியம்மை பொறியியல் கல்லூரி ஆசிரியப் பெருமக்களின் உதவியுடன் நிறுவிய அமெரிக்க அமைப்பு. பின்னர் மற்ற கிராமத்த்தின் குடி நீருக்கு அவர்கள் செய்தார்கள்.இப்போது அரசே செய்யத் தலைப்பட முயற்சிக்கிறது.
செஞ்சட்டை மற்றவர்களை விட ஆழமாகச் சிந்தித்து உண்மையறிந்து செயல் பட வேண்டும்.வெறும் சேற்றை வாரி வீசக் கூடாது.
பொருளாதாரக் கொள்கைகளில் வேறு பட்டுப் பேசலாம்,அது உரிமை.
உண்மைகளைத் திரித்துப் பேசுவது கயமை.//
சோம.இளங்கோவுக்கு,
பெரியாரை விட அப்துல்கலாம்தான் உங்களுக்குப் பெரியாராகத் தெரிவதில் வியப்பொன்றும் இல்லை. அவரின் சமூக அறிவு எப்படிப்பட்டதென்பதைச் சொல்லவேண்டியதில்லை. அந்நிய நாட்டுச் செலாவணியைப் பெற காவிரி டெல்டாவில் நெல்லுக்குப் பதில் காட்டாமணக்குப் பயிர் செய்யச் சொன்ன அறிவாளி அல்லவா அவர்? பெரியார் கொள்கையான கிராம முன்னேற்றம் என்று அளந்துவிட்டிருக்கிறீர்கள்.. கிராம முன்னேற்றம் என்னும் பேரில் தன்னிறைவுப் பொருளாதாரத்தை ஒழித்துக் கட்டி அக்கிராமங்களை ஜெட்ரோ எனும் ஜப்பானிய ஏகாதிபத்தியத்துடன் இணைக்கக் கூட்டிக் கொடுக்கும் வேலைக்கெல்லாம் பெரியாரை இழுத்து அவரை அவமானம் செய்வது துல்லியமாக தெரிகிறது. நீரைத் தரவேண்டியது அரசின் கடமை. அதைச் செய்யத் தவறும் அரசை நெருக்கிப் போராடுவதுதான் போராட்டக்காரர்களின் வேலை. அதைச் செய்யாமல் ஏதோ தருமபிரபு மாதிரி அமெரிக்காவின் தயவில் குடிநீர் தந்தீர்களாம்.. இதற்கும் பெரியாரின் போராட்டக் குணத்துக்கும் என்ன சம்பந்தம்? மக்களின் போராட்ட உணர்வை மழுங்கடிப்பதற்காகத் தான் மூன்றாம் உலகெங்கும் தன்னார்வக்குழுக்கள் உருவாக்கப்பட்டு செயல்பட்டுவருகின்றன. இதை ஒரு முக்கிய வேலையாகச் செய்து வரும் தி.க.வும் ஏகாதிபத்திய சேவைக்காக சொந்த நாட்டு மக்களின் உணர்வுகளைக் காயடித்து வருகிறது. அதுதான் புரா. இதே புராவைத்தான் ஆர்.எஸ்.எஸ். ம.பி,யில் சித்திரக்கூடத்தில் செய்துவருகிறது. நீங்கள் இதற்காக தேடிப்பிடித்து கிராமங்களுக்கு வசதி செய்துதரும் திட்டம் பற்றி பெரியார் 40களில் பேசியதைப் பிடித்துவந்து ஒட்டவைத்து இருக்கிறீர்கள். இத்திட்டத்துக்கு உங்கள் கல்லூரிகளில் பயிலும் மாணாக்கரை பெரியாரின் பெயரைச் சொல்லி ஆள்பிடித்து அவர்களிடம் பெரியாரியத்தையே திரித்தும் பிரச்சாரம் செய்துவருகிறீர்கள். போனவருடம் அறிவியல் கண்காட்சி ஒன்றை பெரியார் மணியம்மை பல்கலை மாணவர்கள் நடத்தினர் சென்னையில். அதில் பாரதமாதா படம் வைத்து ‘ரீபார்ம்’ – வருங்கால இந்தியா 2020 என்று ஒரு ஸ்டால் போட்டிருந்தார்கள். அதில் கொடுக்கப்பட்ட விளக்கம். “கிராமங்களில் குடிநீர் சுத்தமில்லை. கல்வி தரமாக இல்லை. இதை எல்லாம் மேம்படுத்தினால் 2020இல் வல்லரசாகிவிடலாம்’ என்று விளக்கம் கொடுத்தார்கள். நெருங்கிய நண்பர் ஒருவர் அந்தப் பிரச்சாரகரிடம் கேட்டார் “அதற்கு என்ன செய்யும் திட்டம் உள்ளது?”..
“சீர்திருத்தம்தான்”
“என்ன சீர்திருத்தம்?”
“தாராளமயமாக்கும் பொருளாதார சீர்திருத்தம்”
“ஓ. மன்மோகன் சிங் அறிமுகப்படுத்தினாரே அதுதானே?”
“ஆமாம். அதை இன்னும் வேகமாகச் செய்து தனியார்களையும் சேர்த்து செயல்பட்டால் முன்னேறி விடலாம்”
“சரிங்க.. இதற்கும் பெரியாருக்கும் என்னங்க சம்பந்தம்?”
“பெரியார் ரீபார்ம் நடக்கணும்னுதானே போராடினார்” — இது கல்லூரியில் இருக்கும் மாணாக்கரை வைத்து மூளைச்சலவைசெய்து இருக்கின்றனர்.
எப்படிப்பட்ட அயோக்கியத்தனம் பாருங்கள்.. பெரியார் சொன்னது சமூகத்தையே தலைகீழாகப் புரட்டிப்போட வேண்டிய சமூக சீர்திருத்தம்– அல்லது புரட்சி.
ஆனால் அவர் தந்த சிந்தனையையே திரித்துப் புரட்டி அமெரிக்கா இந்தியாவில் திணித்திருக்கும் ‘தாராளமயத்தை’ பெரியாரின் சிந்தனையாக மக்களிடம் பரப்பி வருகின்றனர்.. உங்களுடைய தரகுவேலைகளுக்காக பெரியாரையே திரிக்கும் வேலை இன்னும் தொடர்கிறது.
கல்வியை ஏழைகளுக்குத் தரவேண்டும் எனும் தொலை நோக்கோடு பெரியார் திருச்சியில் தாம் கட்டி இருந்த கல்லூரியையே அரசு ஏற்று நடத்தத் தந்துவிட்டவர்.
ஆனால் அவர் பெயரைச் சொல்லிப் பிழைப்பு நடத்தும் நீங்கள் சமூகநீதி பற்றி வாய் கிழியப் பேசுகிறீர்களே!
நேற்றோடு பொறியியற்கல்லூரிகளுக்கான கவுன்சிலிங் முடிந்து விட்டது. இந்த ஆண்டு கலைஞர் அரசால் அறிவிக்கப்பட்ட அருந்ததியினருக்கான உள் ஒதுக்கீட்டின்படி அந்த இன மாணவர்களுக்கென ஒதுக்கப்பட்ட 2000 க்கும் மேற்பட்ட இடங்கள், அவர்களால் பணம் கட்ட இயலாத ஏழ்மை காரணமாக நேற்றுவரை நிரப்பப்படவே இல்லை.
உள்-ஒதுக்கீட்டுக்காக ஒரு பக்க அளவில் கலைஞருக்குப் பாராட்டுப்பத்திரம் கொடுத்த உங்கள் ஆசிரியர், இலவசமாக பெரியார் மணியம்மை பல்கலையில் அவர்கள் அனைவருக்கும் சீட்டுக் கொடுப்பாரா? இதற்கு சும்மா ‘எல்லா இடங்களும் நிரப்பப்பட்டு விட்டன” என்றெல்லாம் சொல்லக்கூடாது. போனவருடம் 400 பேருக்கு மட்டும் நுழைவுத் தேர்வு நடத்திவிட்டு 2000 பேர்களுக்கு சீட்டுக் கொடுத்து சாதனை படைத்த பல்கலை அது என்பது அனைவருக்கும் தெரியும்.
இதைச்செய்யும் துப்பில்லாமல் தன் பிறந்தநாளுக்கு அன்னதானம் போட்டுவிட்டு ஆண்டுக்கணக்கில் மக்களைச்சுரண்டும் திடீர்வள்ளல்கள் போல ‘சுனாமி’யில் சேவை செய்தோம் எனப் பீத்தும் பித்தலாட்டங்கள் மக்களிடம் எடுபடாது.
உலக நாடுகளில் தமிழகத்திற்கு உள்ள சிறப்புகளில் ஒன்று நாத்திகம். வட மாநிலங்களில் பயணித்தால், அங்குள்ள சடங்கு சம்பிரதாயங்களைப் பார்த்தோமென்றால்…சகிக்க முடியாது. இதன் சிறப்பில் பெரியாரின் பங்கு அளப்பரியது.
அப்படிப்பட்ட பெரியாரின் எழுத்துக்களை வீரமணி கல்லாக் கட்டுவது பறி போய்விடுமோ என முடக்கி வைக்க நினைப்பது அயோக்கியத்தனம். தீர்ப்பில் அந்த நீதிபதி குறிப்பிட்டது போல, பெரியாரின் 130 வது ஆண்டில் இப்படி விவாதம் நடப்பது கவலைக்குரியது என்றார். முற்றிலும் உண்மை.
எப்பேர்ப்பட்ட இயக்கம் திராவிடர் இயக்கம். அதை டிரஸ்டாக மாற்றி, அதன் சொத்துக்களை காப்பாற்ற மாறி மாறி ஆளும் அரசுக்கு தூக்கும் கூஜா இருக்கிறதே! சகிக்க முடியவில்லை.
பெரியார் ரசியா சென்று வந்த பிறகு, பொதுவுடைமை அறிக்கையை தமிழில் மொழிபெயர்த்தார். தனது அமைப்புத் தொண்டர்களையும் இனி தோழர்கள் என்றே அழைக்கப் பணித்தார்.
பிறகு, அரசின் தொடர் நெருக்கடியில்… கொள்கையா, நிறுவனமா என்ற முடிவில்… நிறுவனம் என்றே பெரியார் முடிவெடுத்தார். அவர் எடுத்த முடிவின் விளைவு தான் வீரமணி. வீரமணியிடமிருந்து திராவிடர் கழக்கத்தை காப்பாற்றுவது ஒரு கருத்தியல் மட்டும் சமூக போராட்டம் சார்ந்தது. வீரமணியின் சமரசம், பிழைப்புவாதம் எல்லாம் தெரிந்த வீரமணி விசுவாசிகள் திருந்த மாட்டார்கள்.
திருந்துவதற்கு அவர்கள் பெரியாரின் தொண்டர்களாக இருந்தால் தானே!
பெரியாரையும், அவரது சிந்தனைகளையும் வியாபார பொருளாக்கி
விற்று தின்பதையே பிழைப்பாக கொண்டுள்ளது வீரமணி கும்பல்
பார்ப்பனன் என்ன செய்வானோ அதை அதை வீரமணி செய்துகொண்டிருக்கிறார்
பெரியார் என்றால் சும்மா கடவுள் இல்லை னு சொன்னாரு அவ்வளவுதான் என்று பெரியாரை சுருக்கி விட்டார் இதனால் திக வினர் தயிர் சாதமாகிவிட்டனர், பெரியார் என்ற படம் எடுத்ததே பெரியார் மீது சேற்றை அடித்தற்கு சமமாகும் அதில் சத்யராஜ் எனும் பொறுக்கியை பெரியாராக நடிக்க வைத்ததுதான் கவனிக்ககூடியது, படம் பார்த்தவர்கள் இவ்ளவுதான் பெரியாரா
பாவம் வய்சாயும் கஷ்டபட்ருக்காரு , என்றபடி வெளியே வந்தனர்,
ஆனால் உண்மையான பெரியாரின் வரலாற்றை படமாக எடுத்திருந்தால்
வெளியிட அனுமதி கிடைத்திருக்குமா ஒரு வேளை அனுமதி கிடைத்து வெளியாயிருந்தால் படம் பார்த்தவர்கள் ” பெரியார் எவ்வளவு வீரமா போராடிருக்காரு, அந்த போராட்டங்களுக்கான காரணம் இன்றும் தொடர்கிறதே,
நாம் அடிமையாக மானங்கெட்ட வாழ்க்கையை வாழ்ந்திருக்கிறோமே, இதற்காக ஆரம்பிக்கப்பட்ட இயக்கம் இன்று பிழைப்புவாத கும்பலாக மாறிவிட்டதே,
வீரமணி பெரியாரின் கொள்கைகளை குழிதோண்டி புதைத்துவிட்டானே-என்றெல்லாம் சிந்தித்திருப்பார்கள். அப்படி சிந்திக்ககூடாது என்பதற்காகதான்
வீரமணியே நீர்த்து போன ஒரு பெரியாரை கிரியேட் செய்து படமும் வெளியிட்டு விட்டது… ஒரு பார்ப்பான் பெரியாரை பற்றி படம் எடுத்திருந்தால் கூட பெரியாரைப்பற்றி இவ்வளவு இருட்டிப்பு செய்திருக்கமாட்டான் என்று நினைக்கிறேன் எனவே துரோகி வீரமணி களையெடுக்கப்பட்டு துரத்தப்படும் வரை வீரமணி ஒநாயின் குழிபறிக்கும் துரோகத்தனம் தொடரும்.
பகுதி நேரமாக பார்த்த ‘கருணாநிதிக்கு ஜால்ரா’ வேலையே , இனிமேல் முழுநேரமாக பார்க்கலாம்.
தமிழ் ஓவியா அவர்களே,
பெரியாரின் ஆக்கங்களை யார் வேண்டுமானாலுல் பதிப்பித்து, மலிவு விலையில் நாடு முழுவதும்
வெளியிட வாய்ப்பு கிடைத்தால், வீரமணி அவர்களின் தி.காவிற்க்கு என்ன பெரிய நட்டம் வந்து
விடும் ? இருக்கிர சொத்துக்களை கொண்டே போதிய வருமானம் வருகிறது. அதை உருப்படியாக,
பெரியார் காட்டிய வழியில் செலவு செய்வதில்லை. மேலும் பெரியார் இன்று இருந்திருந்தால்
என்ன நிலைபாட்டினை எடுத்திருப்பார் என்று யோசித்து பாருங்கள். வீரமணிக்கு ஏன் இந்த வக்கிரமான நிலைபாடு ?
பெரியார் ஒரு தீர்க்கதரிசி என்று சொல்வார்கள். உண்மைதான். முக்கியமாக அவர் கூட இருந்தவர்களை
பற்றி அப்போதே சொன்னார் : “..இந்த பசங்கள நம்பக்கூடாது..” ; சரியாகத்தான் போச்சு..
90களுக்குப் பின்னர்தான் தமிழ்நாட்டில் இந்துமதவெறிப்பாசிசம் வேரூன்றி வளர்ந்தது எனக் கருதலாம். பெரியார் சொத்துக்களை சுரண்டித் தின்னும் திராவிடர்கழகக் கும்பல் இந்துமதவெறிக்கு எதிராக என்ன செய்திருக்கிறது என்பதைப் பழைய செய்தித்தாள்களில் எல்லாம் பீராய்ந்து தேடியும் ஒன்றும் அகப்படவில்லை. அவ்வப்போது ‘இது பெரியார் பூமி..பாச்சா பலிக்காது’ என்று அட்டைக்கத்தி சுழற்றியதைத் தவிர வேறு எதையும் அது புடுங்கவில்லை.. அப்படி எதனையாச்சும் புடுங்கி இருந்தால் அதனைத் துணிவோடும் நேர்மையோடும் மின்சாரம், தமிழன் என்ற பெயர்களில் கூலிக்கு மாரடிக்கும் வீரமணியின் பூசாரிகள் எழுதட்டும். (அவர்களின் வாழ்நாளிலேயே இதுவரை செய்திராத கடும் வேலையாக இந்தத் “தேடுதல்” இருக்கும் என்பது மட்டும் உறுதி).. இருக்கட்டும்.. ஆனால் மாறுவேடம் போட்டுவந்து பெரீயார் சொத்தைக் கைப்பற்றிய மானங்கெட்ட வீரமணியோ கீழ்க்கண்ட ஈனத்தனங்களைச் செய்திருக்கிறார் என்பது மட்டும் ஆதாரப்பூர்வமான செய்திகளாகப் பதிவாகி உள்ளன.
1) ‘நான் பாப்பாத்திதான்..’ என்று சட்டசபையிலேயே தெளிவாகப் பதிவு செய்த ‘வசந்த சேனை’, ஜெயலலிதாவைப் பாராட்டி பா.ஜ.க. எடுத்த விழாவில் டாக்டர் காளிமுத்துவோடு (இது லேகிய டாக்டர் அல்ல.. ‘கறந்த பால் மடிபுகாது’புகழ் காளிமுத்து) நம்மாளு வீரமணியும் கலந்துகொண்டு 1994 இல் வாழ்த்திப் பேசி இருக்கிறார். அக்ரகாரத்து அம்முவுக்கு இந்துவெறிக்கும்பல் எடுத்த விழாவில் பெரியார் வளர்த்த கிடா..
2) அனைவரையும் கட்டாயமாக இந்துமதத்தில் இருக்கவைக்கும் ‘மதமாற்றத் தடைச் சட்டத்தை’ ஜெயலலிதா 2002-03 இல்கொண்டு வந்தபோது கி.வீரமணியும் ஆதரித்துள்ளார், இதனை ஆதரித்து கட்டுரை எழுத ‘திராவிடன் நல நிதி’ தலைவர் நீதிபதி வேணுகோபாலைத் தூண்டினார். அவரின் கட்டுரையை விடுதலையில் வெளியிட்டார்
3) 2002-2003 காலகட்டத்தில் ஆண்டுதோறும் இந்த ஆளு வெளியிடும் பெரியார் பிறந்தநாள் மலரில் பாஜக சட்டமன்ற உறுப்பினர்களிடம் பணம்வாங்கிக் கொண்டு அவர்களின் வாழ்த்துக்களையும் வாங்கி மலரில் சேர்த்தார்.
4) பாபர் மசூதியை இடித்திட நாடெங்கும் வெறி கக்கும் பிரச்சாரம் செய்த செல்வி உமாபாரதி பிற்பட்டோருக்கு இட ஒதுக்கீட்டை ஆதரித்தார் என்பதற்காக அவரைச் சந்தித்து பொன்னாடை போர்த்தி மகிழ்ந்தார்
5) சென்னை ஐ.ஐ.டி.யில் தாழ்த்தப்பட்ட மாணவர்களுக்கெதிரான செயல்கள் தலைவிரித்தாடிய 2000-2001 களில் ஆழ்ந்த மவுனம் சாதித்தார்.. பின்னாளில் ஐ.ஐ.டியுடன் மறைமுகக் கூட்டு சேர்ந்து தனது ஏகாதிபத்திய மாமா வேலையான ‘புரா’வுக்கு பலம் சேர்த்தார்.
6) ‘தமிழ்நாடு தமிழருக்கே’ என்று குரல்கொடுத்த பெரியாரைத் திரித்து ‘இந்திய ஒற்றுமையை வலியுறுத்தியவர் பெரியார்’ என்று தினமணியில் கட்டுரை வெளியிட்டார். கார்கில் போருக்கு லட்சங்களை அள்ளிக் கொடுத்தார்
7) 1991 முதல் 2004 வரை ஈழம் பற்றி வாயையே திறக்கவில்லை. மாறாக மல்லிகைக்கு திக ஆட்களைக் காட்டிக்கொடுக்கவும் செய்தது. மல்லிகையால் வதைக்கப்பட்ட திக குடும்பங்களை கட்டம் கட்டி விரட்டி அடித்தது.
8. வல்லத்தில் தனது சொத்துக்களின் விஸ்தரிப்புக்கு இடைஞ்சலாக இருந்த தனியார் ஒருவரின் குடும்பத்தினரைக் கடத்திச் சென்று சித்திரவதை செய்தது வீரமணியின் ரவுடிக் கும்பல்தான். பெண்களையும் குழந்தைகளையும் இருட்டறையில் அடைத்து வைத்து மிதித்தும் கட்டைகளால் தாக்கியும் அவர்களை இடத்தைக் காலி செய்ய வைத்தது.
9) பெரியார் நினைவிடத்தைப் பார்க்க வந்த பெண்களை (அவர்கள் கோவை ராமகிருஷ்ணனின் கட்சியை சேர்ந்த போட்டி திகவினர்) சொத்தைப் பறிமுதல் செய்ய வந்ததாகக் கூறிக் கட்டிவைத்து இரத்தம் சொட்டச் சொட்ட அடித்தவர்கள் வீரமணியின் ரவுடிக் கும்பல்தான்.
10) ஈழப்படுகொலையை காங்கிரசு அரசு நிகழ்த்திவந்த நிலையில் வீரமணியின் ‘காங்கிரசு ஆதரவு’ நிலைப்பாட்டை எதிர்த்து முழக்கமிட்ட தோழர் ஒருவரை திக ரவுடிகள் 50 பேர்கள் சூழ்ந்து கொண்டு தாக்கினர். அத்துடன் நில்லாமல் திகவின் கைக்கூலி எழுத்தாளர்கள் ‘வீரமணியைக் கொல்லாமல் விடமாட்டேன் என்று மேடையை நோக்கி ஓடிவந்த ம.க.இ.க.வினரைப் பிடித்துப் போலீசில் ஒப்படைத்ததாக’ அப்பட்டமான பொய்களைப் புகாராக எழுதிக் கொடுத்து முழக்கமிட்ட தோழரை 6 பொய்வழக்குகளில் புழல் சிறையில் அடைக்க வைத்தனர். இந்தக் கைக்கூலிகள்தான் பெரியார் நூல்களை பிறர் வெளியிட்டால் திரித்துவிடுவார்கள் என்று பித்தலாட்டமாக எழுதித் தள்ளுகின்றனர். நூற்றுக்கணக்கானவர்களின் கண்ணெதிரே நடந்த கொடுமையை அப்ப்டியே திரித்து எழுதிப் பிழைக்கும் இந்த கைக்கூலிகள் இன்னும் என்ன என்ன பொய்மூட்டைகளை அவிழ்த்து விடுவார்களோ.. இந்த வீரமணி அடிமைகளிடம் இருந்து ஒருபோதும் ‘வீரமணி பெரியாரியலை எவ்விதம் பரப்பினார்?’ என்று சொல்லவே முடியாது என்பது மட்டுமல்ல.. அவர்களின் பேனாவில் இருந்து ‘உண்மை’ யும் வரவே வராது.
‘பெரியாரை வீரமணியிடம் இருந்து விடுதலை செய்வோம்’ எனும் கட்டுரைத் தொடர் கீழ்க்கண்டவாறு முடிந்திருந்தது. அது இன்றைய காலகட்டத்தில் சரியான முழக்கமாக இருக்கும் எனக் கருதுகிறேன். “வீரமணி கும்பலுக்கு எதிராக ஒரு பொதுப் புறக்கணிப்பும், பெரியார் மற்றும் அவரது பெயரைப் பயன்படுத்துவதற்கு எதிராக பல்வேறு போராட்டாங்கள் நடத்தித் தடுக்க வேண்டும். இயக்கத்தின் சொத்துக்களை வீரமணி கும்பலிடம் இருந்து பறிமுதல் செய்து ஜனநாயக முறைப்படி இயங்கும் தேர்ந்தெடுக்கப்பட்ட ‘கமிட்டி’யிடம் ஒப்படைக்க வேண்டும். இயக்கத்தின் வரவு,செலவுகளை அக்கமிட்டி ஆண்டுதோறும் மக்கள் பார்வைக்கு வைக்க வேண்டும். பெரியாரின் வரலாறு, கொள்கை, இலட்சியங்களை திறந்த ஆய்வுக்குரிய விவாதமாக்கிப் பிரச்சாரமும், அதன் அடிப்படையிலான இயக்கமும் நடத்த வேண்டும். ஆகவே பெரியார் மீது உண்மையான பற்றும் மதிப்பும் உள்ளவர்கள் அனைவரையும் அழைக்கிறோம்! பெரியாரை வீரமணியிடம் இருந்து விடுதலை செய்வோம் வாரீர்!! “( 1 அக்டோபர் 1994 – புதிய ஜனநாயகம்)
1990 செப்டம்பர் மாத “உண்மை” இதழில் பார்ப்பனத்தனமான புதிய ஜனநாயக விமர்சனத்துக்கு “உண்மை” ஏட்டின் மறுப்பு என்ற தலைப்பில் கேடயத்திற்கு பதில் என்று துணைத் தலைப்பிலும் மறுப்புக் கட்டுரை வந்துள்ளது. உண்மைகளை அறிய அக்கட்டுரையைப் படிக்க வேண்டுகிறேன்.
இது தொடர்பாக மேலும் கருத்துக்களை அறிந்து கொள்ள கீழ்கண்ட சுட்டிகளைப் படிக்க வேண்டுகிறேன்.
1.http://thamizhoviya.blogspot.com/2009/07/blog-post_2339.html
2.http://thamizhoviya.blogspot.com/2009/08/blog-post.html
3.http://thamizhoviya.blogspot.com/2009/08/blog-post_6272.html
நன்றி
மின்சாரம் எனும் பெயரில் கட்டுரைகள் எழுதும் வீரமணியின் பூசாரி இன்று நம் மீதும் விசம் கக்கி இருக்கிறார்.
//புர்ரட்சி பேசும் _ மக்களுக்கும், தங்களுக்கும் எந்த-விதத் தொடர்பும் இல்லாத ஒரு களை கழகமோ பார்ப்பனியத்தனமாக செய்தியை வெளியிட்டது_//
வினவு இணைய தளத்தில் கீழ் கண்டவாறு எழுதியிருந்தனர்
“நீதிமன்றத்தில் பெரியாரின் கருத்துக்களை சொந்தம் கொண்டாடுவதற்கு சட்டப்பூர்வ ஆதாரங்கள் இல்லையெனவும், பெரியார் படைப்புக்களை யார் வேண்டுமானாலும் வெளியிடலாம் எனவும் பெரியார் தி.க தொடுத்த வழக்கில் நீதிபதி சந்துரு தீர்ப்பளித்திருக்கிறார். இதற்கு முதற்கண் பெரியார் திராவிடர் கழக தோழர்களுக்கு வாழ்த்துக்களை தெரிவிப்போம். உடனே வெகுண்ட வீரமணி நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தார். இருப்பினும் இந்த தீர்ப்பை இப்படியே இப்போதைக்கு தொடருமென பதிளிக்கப்பட்டிருக்கிறது. இனி ஐயா டெல்லிக்கு உச்சநீதி மன்றத்திற்கு படையெடுப்பார். ”
அதற்கு தி.க. பொதுச் செயலாளர் கவிஞர்.கலி.பூங்குன்றன் அய்யா அவர்கள்
“புர்ரட்சி பேசும் மக்களுக்கும், தங்களுக்கும் எந்தவிதத் தொடர்பும் இல்லாத ஒரு களை கழகமோ பார்ப்பனியத்தனமாக செய்தியை வெளியிட்டது_
டிவிஷன் பெஞ்ச் நீதிபதிகள் அளித்த தீர்ப்பைப் புரிந்துகொள்ளும் சாதாரண அறிவுகூட இல்லாமல், வழக்கில் வீரமணி தோற்றுவிட்டதாகவும், இனி அவர் உச்சநீதிமன்றம்தான் செல்லவேண்டும் என்றும் இணைய தளத்தில் சில்லுக்கோடு விளையாடிக் கொண்டிருக்கிறது.”
என்று எழுதினார். அதற்கு குப்பு ‘வீரமணியின் பூசாரி” என்று ஏசியிருக்கிறார். இதற்கே இவ்வளவு கோபம் வருகிறேதே குப்புவுக்கு நீங்கள்(வினவு) எழுதிய இந்தக் கட்டுரையில் குறைந்த பட்ச நாகரிகம் ஒன்று உண்டு என்று சொல்லுவார்களே. அந்த நாகரிகமாவது கடைப்பிடித்திருக்கிறீர்களா?
வாசகர்களின் முடிவுக்கே விட்டு விடுவோம்.
தீர்ப்பைப் புரிந்து கொள்ளும் சாதாரண அறிவு கூட இல்லையாம்..சொல்லுவது வீரமணி மடம்.. இதே மடம்தான் ‘ஸ்டேடஸ்-குவே’ வை இறுதித் தீர்ப்பு ரேஞ்சுக்குப் புரிந்து கொண்டு /அல்லது திரித்துக் கொண்டு பெதிகவினர் மண்டையில் அடிப்பது போலக் கார்ட்டூன் வேறு போட்டுத் தாளித்திருக்கிறது. அறிவில்லாத நாமெல்லாம் இனிமேல் அறிவு பொங்கி காதுவழியே வடியும் இந்த பகுத்து அறிவு வாளிகளிடம் பாடம் கற்றுக் கொள்ள வேண்டும்.. சும்மாவா.. தமிழன் மண்டையில் பொது அறிவை ஊற்றி ஊற்றி அவனை அய்.ஏ.எஸ். ஆக்கி அளகு பாக்கும் அய்யாவின் இடமாச்சே.. அய்யாவின் பத்திரிக்கையில் இன்று தலையங்கம் எழுதி இருக்கும் ஒரு மாபெரும் அறிவாளியின் வரிகள் இதோ: “கம்யூனிஸ்ட் நாடுகளான சீனா, ரஷ்யா, கியூபா, வியட்-நாம் நாடுகள் இலங்கை அரசுக்கு மூர்க்கத்தன-மான ஆதரவைக் கொடுக்கிற காரணத்தால், அய்.நா. மன்றமோ மற்ற நாடுகளே மூச்சு விடுவதில்லையா?”…தமிழ் ஓவியாவிற்குப் புரிகிறதோ இல்லையோ…இந்த அளவுக்குப் பொதுஅறிவு யாருக்கும் இல்லை என்பது என் சிற்றறிவுக்குப் புரிகிறது.. ஆனால் பாவம் இவர்களை நம்பி அய்.ஏ.எஸ். தேர்வில் இறங்கும் இளைஞர்கள்தான்..
இந்த கட்டுரையில் தவறுள்ளதை உணர்ந்ததும் உடனே பின்னூட்டம் போட்டிருக்கிறார் வினவு. கட்டுரையில் பிழை இருந்ததை பின் குறிப்பாகவும் போட்டுள்ளார்.
பெரியார் எழுத்துகளை தனியார்மயப் படுத்தி சொந்தம் கொண்டாடுவதென்பது பெரியார் கருத்துகளை பிரச்சாரம் செய்ய தடையாக அல்லவா உள்ளது. தமிழர் தலைவர் தந்தை பெரியார் தமிழகத்துக்கு சொந்தமானவர். அவர் எழுத்துக்களும் அனைவருக்கும் போய் சேர வேண்டும். அதில் ஒரு அமைப்பு மட்டும் பாத்தியதை கொண்டாடுவது நியாயமா?
பெதிக பெரியார் படைப்புகளை வெளியிட்டால், அது பெரியார் கருத்துகள் மக்களிடையே மேலும் சென்றடையுமல்லவா. திக கூற்றுபடி, அவர்கள் அதிகம் காசுக்கு வெளியிட்டால், நீங்கள் குறைந்த காசுக்கு வெளியிடுங்கள். மக்கள் பயனடையட்டும்.
தமிழ் ஓவியா அவர்களே..
கடந்த 20 ஆண்டுகளில் பார்ப்பன எதிர்ப்பு, இந்து மதவெறி பாசிச எதிர்ப்பு ஆகியவற்றில் வீரமணி மற்றும் தி.க வின் பங்கு என்ன ?
ஆதாரபூர்வமாக பேசினால் பயனுள்ளதாக இருக்கும்.
பெரியாரின் சிந்தனைகளுக்கு ஒரு தனிநபர் (அ) ஒரு தனி நிறுவனம் காப்புரிமை/வாரிசுரிமை/சொத்துரிமை கோருவது, பிறர் பெரியாரின் சிந்தனைகளை பதிப்பிப்பது தமக்கு நட்டம் என்று கூறுவது, பெரியாரை இழிவு படுத்துவதா இல்லையா?
இடுகையின் இந்த மைய விடயதிற்கு நேர்மையாக பதிலளிக்க கேட்டுக்கொள்கிறேன்.
//இனி ஐயா டெல்லிக்கு உச்சநீதி மன்றத்திற்கு படையெடுப்பார். எத்தனை கோடி செலவானாலும் இந்த வழக்கில் வெல்லுவதற்கு எல்லா சின்னத்தனமான வேலைகளையும் செய்வார். எனினும் அவை வெற்றிபெறப் போவதில்லை. அதற்குள் பெரியாரின் படைப்புக்கள் தோழர்களால் வெளியிடப்படும் என நினைக்கிறோம். உச்சநீதிமன்றமும் வீரமணிக்கு ஆதரவாக தீர்ப்பளிப்பதற்கான முகாந்திரங்கள் எதுவுமில்லை.//
உச்ச நீதி மன்றத்தை நம்பி எழுதப்பட்டிருக்கும் இந்த வரிகள் இப்போதைய சூழ்நிலையில் பரிதாபத்துக்குரியவை…உச்சநீதிமன்றத்தின் இப்போதைய தலைமை நீடிக்கும் வரை அங்கு அரசியல் மற்றும் பணபலம் எதை வேண்டுமானாலும் சாதிக்கும்…
//கடந்த 20 ஆண்டுகளில் பார்ப்பன எதிர்ப்பு, இந்து மதவெறி பாசிச எதிர்ப்பு ஆகியவற்றில் வீரமணி மற்றும் தி.க வின் பங்கு என்ன ?
ஆதாரபூர்வமாக பேசினால் பயனுள்ளதாக இருக்கும்.
பெரியாரின் சிந்தனைகளுக்கு ஒரு தனிநபர் (அ) ஒரு தனி நிறுவனம் காப்புரிமை/வாரிசுரிமை/சொத்துரிமை கோருவது, பிறர் பெரியாரின் சிந்தனைகளை பதிப்பிப்பது தமக்கு நட்டம் என்று கூறுவது, பெரியாரை இழிவு படுத்துவதா இல்லையா?
இடுகையின் இந்த மைய விடயதிற்கு நேர்மையாக பதிலளிக்க கேட்டுக்கொள்கிறேன்.//
பூனை கண்ணை மூடிக் கொண்டால் உலக்மே இருண்டு விட்டதாக இருக்கிறது உங்கள் கேள்வி.
தி.க.வின் செயல் பாடுகள் அனைத்தையும் :”விடுதலை ” இதழைப் படித்தால் தெரியுமே
ஆதி. குறைந்த பட்சம் தமிழ் ஓவியா வலைப்பதிவுகளை படித்தால் கூட போதுமே.
இது தொடர்பாக மேலும் கருத்துக்களை அறிந்து கொள்ள கீழ்கண்ட சுட்டிகளைப் படிக்க வேண்டுகிறேன்.
1.http://thamizhoviya.blogspot.com/2009/07/blog-post_2339.html
2.http://thamizhoviya.blogspot.com/2009/08/blog-post.html
3.http://thamizhoviya.blogspot.com/2009/08/blog-post_6272.html
நன்றி
//தி.க.வின் செயல் பாடுகள் அனைத்தையும் :”விடுதலை ” இதழைப் படித்தால் தெரியுமே//
விடுதலையைத் தொடர்ந்து படித்த என்னிடம் சில கேள்விகள் இருக்கின்றன. தயவு செய்து தமிழ் ஓவியா அவர்கள் விளக்கவேண்டும்.
1) பெரியாரை விடுதலையில் வீரமணி ‘இந்திய தேசிய ஒற்றுமைக்காக இறுதிக்காலத்தில் பாடுபட்டவர்’ எனும் பொருளில் தனித்தமிழ்நாட்டைக் கைவிட்டவர் என்று திரிப்பதற்கு முயன்றாரா இல்லையா?
2) இந்துமதத்தில் இருந்து யாரும் வெளியேறிவிடக் கூடாது எனும் நோக்கில் ஜெயாமாமி கொண்டு வந்த மதமாற்றத் தடைச்சட்டத்தை வீரமணி ஆதரித்தாரா இல்லையா?
3) பெரியார் பிறந்தநாள் மலரில் பாரதிய ஜனதா கட்சி எம்.எல்.ஏ.விடம் பணம் பெற்றுக் கொண்டு விளம்பரம் வெளியிட்டார்களா இல்லையா?
4) சீரங்கத்தில் இந்துமதப் பயங்கரவாதிகள் பெரியார் சிலையை உடைத்தபோது ம.க.இ.க.வும் பெ.தி.க.வும் வீதியில் இறங்கிப் போராடி தேசியப்பாதுகாப்பு சட்டத்தில் கைதானபோது விடுதலை என்ன செய்து கொண்டிருந்தது?
5) சென்னை ஐ.ஐ.டி.யில் பார்ப்பனியப் பாம்பு படமெடுத்து ஆடியபோது வீரமணி அய்யா என்ன செய்து கொண்டிருந்தார்?
6) சங்கரராமன் கொலைவழக்கில் சங்கராச்சாரி உள்ளே தள்ளப்பட்டபோது ம.க.இ.க.வும் பெ.தி.க.வும் வீதியில் இறங்கி ‘சங்கரமடத்தை அரசே கைப்பற்று’ என முழக்கம் வைத்துப் போராடியபோது விடுதலை ஏடு என்ன செய்தது?
7) வாழ்வியல் சிந்தனைகளை அவ்வப்போது எழுதி வருகிறதே விடுதலை. அது பரப்பிவரும் கருத்துமுதல்வாத சிந்தனைக்கும் பார்ப்பனிய ஆதரவுக்கொள்கைக்கும் உங்களிடம் இருக்கும் பதில் என்ன? உதாரணம்: ‘தம்மின் மெலியாரைக் கண்டு அம்ம அகமகிழ்க’ எனும் பார்ப்பனிய வர்ணாசிரமத்தை உயர்த்திப் பிடித்து வாழ்வியல் சிந்தனையில் எழுதி இருப்பவர் வீரமணி.
8.) இந்திய அரசுதான் ஈழத்தமிழர்களைக் கொல்வதற்கு ஆயுதமும், படைக்கருவிகளும் கொடுத்தது. போரை வழிநடத்தியதும் அதுதான். அவ்வாறு இருக்கையில் இந்திய அரசை அம்பலப்படுத்தி எழுதாமல் சீனாவை மட்டும் ஆசிரியர் கண்டித்தது ஏன்?
9) கலி.பூங்குன்றன் “பெரியார் நூல்களை செத்துப்போன சங்கராச்சாரியின் குப்பைக்களஞ்சியத்துடன் ஒப்பிட்டுத் தரம் தாழ்த்துகிறாரே? அதற்கு உங்கள் கருத்து என்ன?
10) சிதம்பரம் நடராசர் கோவிலில் பிற அமைப்பினர் எல்லாம் போர்க்குணத்துடன் தீட்சிதர்களுக்கு எதிராகப் போராடிக்கொண்டிருந்தபோது விடுதலை என்ன செய்துகொண்டிருந்தது?
இவற்றுக்கெல்லாம் பதில் சொல்லுங்கள்..விடுதலையின் மகாத்மியத்தை நாங்களும் அறிந்துகொள்ள உங்கள் பதில் உதவட்டும்.
முத்துராசு அவர்களின் பதிவில் பல அதிர்ச்சியூட்டும் உண்மைகளை தெரிவித்துள்ளார். மதமாற்ற தடை சட்டத்தை வீரமணி ஆதரித்தார் என்பது அறியாத செய்தி. தமிழனவாதிகள் ஒருவரை ஆதரிப்பதற்கு அந்த நபர் தமிழனாக இருக்க வேண்டும் என்ற அளவுகோல் வைத்திருக்கின்றனர். வீரமணி ஒருவரை ஆதரிக்க அவர் நாத்திகனாக இருக்க வேண்டும்; மற்ற பாவங்களிங்களில் இருந்து அவர் கழுவப்பட இது ஒன்றேபோதுமானது. சினிமாவில் ஆபாசமாக நடிக்கும் சத்யராஜ் வீரமணியின் கோலிவுட் patron. அற்புத சுகமளிக்கும் சுவிசேஸ கூட்டங்களின் சாட்சிகளைப் போல அவ்வப்போது வீரமணியின் கூட்டங்களில் ஆஜராகி சாட்சி சொல்லும் சத்யராஜ் வீரமணிக்கு ஒரு வாழும் சாட்சியம். பெரியாரின் கொள்கையைக் கடைப்பிடிக்கும் ஒருவர் வாழ்க்கையின் உயரத்தைத் தொட முடியும் என்று குறிப்பிட்டு வீரமணி புளகாங்கிதம் அடைவார். திராவிட அரசியலில் மிகுந்த சந்தர்ப்பவாத நிலை எடுத்து திராவிட, தமிழின ஆர்வலர்களாலேயே ஒதுக்கப்படும் நபர்களுக்கு பெரியார் திடல் ஒரு ஆலமரம் என்றால் மிகையாகாது. சமீபத்திய உதாரணங்கள் திருமாவளவன், பேரா.சுப.வீ. ‘உண்மை’ இதழைப் பத்து நிமிடத்திற்கு மேல் புரட்டுவதற்கு ஒன்றுமில்லாமல் இருக்கிறது. உண்மை வெளியிடும் ‘விஞ்ஞானிகளில் 73 சதவீதம் கடவுள் நம்பிக்கையற்றவர்கள்’ போன்ற தகவல்கள் தினமலரிலே காணக் கிடைக்கிறது. பெரியாரை மட்டுமல்ல, தி.கவின் கிழடு தட்டும் நடையிலிருந்து பகுத்தறிவு கருதுக்களையும் மீட்க வேண்டும்.
நீங்கள் கேட்ட கேள்விகள் அனைத்துக்கும் விடுதலையில் பதில் உள்ளது குப்பு. நுனிப்புல் மேயாமல் ஊன்றிப் படியுங்கள் உண்மை புரியும்
சும்மா ‘எல்லாமே விடுதலை’யில இருக்கு என்று நழுவ வேண்டாம். நான் கேட்டிருக்கும் 10 கேள்விகளுக்கும் நாணயமாகப் பதில் சொல்லவும். நாணயம்னா– வீரமணி எண்ணும் நாணயம் அல்ல.. (அதாவது பணம்). எல்லாமே வேதத்தில் சொல்லப்பட்டிருக்குன்னு ஓடுற பாப்பான் மாதிரி தப்பிக்காம பகுத்தறிவாளர் எனும் நிலையில் இருந்து விளக்கவும்
மதமாற்றத் தடச் சட்டத்தை வீரமணி ஆதரித்தாரா? குப்பு பொய் சொல்லுவதற்கும் ஒரு அளவு வேண்டாமா?
அண்னா எழுதிய கருத்தை எடுத்தாண்டு ,பார்ப்பான் எதிரில் அம்மாவாசை வருவார், அதற்கு பார்ப்பான் தூரப்போ என்று கூறுவான், அடுத்து அப்துல்லா வருவார் பார்ப்பான் வணக்கம் சொல்லுவான். அண்ணா வின் இந்தக் கருத்தை எடுத்துப் போட்டு மத மாற்றத் த்டைச் சட்டத்தை எதிர்த்து அறிக்கை எழுதியுள்ளார் வீரமணி..
நுனிப்புல் மேயாமல் ஊன்றிப் படியுங்கள் உண்மை புரியும் குப்பு.
மதமாற்றத் தடைச் சட்டத்தை ஜெயலலிதா கொண்டுவந்தபோது அவரை ஆதரித்துப் பேச பி.ஜே.பி.ஐத் தவிர வேறு யாருமே அன்று இல்லை. தமிழகமே கொதித்து எழுந்தது. திமுக தலைவர் கருணாநிதி தலைமையில் சிறுபான்மையினத் தலைவர்களும் தலித் இயக்கங்களும் இரு கம்யூனிஸ்ட் கட்சிகளும் கண்டனக் கூட்டங்கள் சிறுபிரசுரங்கள் வெளியீடு என அனைத்து வழிகளிலும் போராடின. ம.க.இ.க. போன்ற புரட்சிகர சக்திகள் ‘அவமானப்படுத்தப்படும் அனைத்து சூத்திரர்களும் இந்துமதத்தை விட்டு வெளியேறுங்கள்’ என அறைகூவல் விடுத்து தங்கள் சக்திக்கேற்ற வரை இச்சட்டத்தை எதிர்த்துப் போராடின. ஒரே ஒருவர் மட்டும் மவுனம் சாதித்தார். அவர், ‘இரும்புக்கரங்களுக்கு சொந்தக் காரரான’ புரட்சித்தலைவியின் அன்புசகோதரர் கி.வீரமணி. ஒரு கூட்டத்தில் கலைஞர், ‘இந்து என்றால் திருடன் என்றும் கூட அர்த்தம் உள்ளது’ என ஆதாரத்துடன் பேசினார். பார்ப்பன பாசிச சக்திகள் இதனை எதிர்த்து நீதிமன்றங்களுக்கு சென்று பிரச்சினையைப் பெரிதாக்கின. அன்று கலைஞரின் பகுத்தறிவான பேச்சுக்கு ஆதரவாக எதையும் விடுதலை எழுதவில்லை. ஜெயலலிதாவை தமிழ்நாட்டின் முற்போக்கு சக்திகள் அனைத்தும் எதிர்த்து ஜெயாவைத் தனிமைப்படுத்தி இருந்தவேளையில் ஒரே ஒரு நபர் ஜெயாவின் சட்டத்தை ஆதரித்துத் தினமணியில் கட்டுரை வெளியிட்டார். அவர் கி.வீரமணியின் நெருங்கிய நண்பர். அதுமட்டுமல்ல.. அவர்தான் பெரியார் டிரஸ்ட் நடத்தும் ‘திராவிடன் நலநிதி’யின் பொறுப்புமிக்க பதவியில் இருந்தவர். அவர் ஜஸ்டிஸ் வேணுகோபால். அன்னாரை அவ்வாறு எழுதும்படி கெஞ்சியவர் கி.வீரமணி. இக்கட்டுரை விடுதலையிலும் மறுபிரசுரம் ஆனது. தமிழ்நாடே எதிர்த்துப் போராடிய மதமாற்றத் தடைச் சட்டத்தை எதிர்க்க வேண்டியது ஒவ்வொரு பெரியார் தொண்டனின் கடமை. அந்தக் கடமையை வீரமணி ஆற்றாமல் விபீடண வேலையைச் செய்தார். இதனைப் பொய் என்றெல்லாம் தமிழ் ஓவியா கருதுவாரே ஆனால் அதற்கு எதிராக வீரமணி முன்னெடுத்த போராட்டங்களைப் பட்டியல் இடட்டும்.. நுனிப்புல் மேயும் எங்களை நல்ல மேய்ப்பனாக இருந்து வழிநடத்துங்கள்
அய்யா தமிழ் ஓவியா, சினிமா துறையில், காப்புரிமை என்ற பெயரில்… திரைப்படத்தின் பெயர், பாடல், இசை என எல்லாவற்றையும் பாதுகாக்கின்றனர்… அதற்கும் நீங்கள் பெரியாரின் கருத்துக்களை பாதுகாப்பதற்கும் என்ன வேறுபாடு…?
பெரியாரின் எழுத்துக்கள் நாட்டுடைமை ஆகக்கூடாது என்றால், பாவேந்தர் பாரதிதாசன் போன்றவர்களின் எழுத்துக்கள் நாட்டுடைமை ஆனதை எதிர்க்கிறீர்களா?
செயலலிதா, கருணாநிதி என மாறி மாறி கூட்டணி வைப்பது எதற்காக.. அவர்கள் ஆட்சியில் உள்ளபொழுது மட்டும் அவர்களின் கொள்கைகளின் பால் வீரமணி அய்யாவுக்கு மிகுந்த ஈடுபாடோ?
பார்பான் என ஒரு வார்த்தை கூட குறிப்பிடாமல் பெரியார் படம் எடுக்க உதவிய உங்கள் வீரமணி அய்யாவை கேட்டு சொல்லுங்கள், பெரியாரின் வாழ்வில் எத்தனை நாட்கள் அவர் பார்பனியத்தை பற்றி பேசாமல் இருந்து உள்ளார் என்று..?
நாத்திக வெங்காயம்
வீரமணியும் பக்தர்களும் http://kalagam.wordpress.com/2009/08/03/%e0%ae%a8%e0%ae%be%e0%ae%a4%e0%af%8d%e0%ae%a4%e0%ae%bf%e0%ae%95-%e0%ae%b5%e0%af%86%e0%ae%99%e0%af%8d%e0%ae%95%e0%ae%be%e0%ae%af%e0%ae%ae%e0%af%8d-%e0%ae%b5%e0%af%80%e0%ae%b0%e0%ae%ae%e0%ae%a3/
அது “மதமாற்ற தடை சட்டம்” அல்ல ; “கட்டாய மதமாற்ற சட்டம்” ; மதமாற்றத்தை எந்த அரசாலும்
தடை செய்ய முடியாது. அது தனி மனித உரிமை. “கட்டாயம்” என்றால் என்னவென்றுதான் விவாதம் மற்றும்
மாற்றுக்கருத்துக்கள். எனினும், “அனைத்து சாதியினரும் அரச்சகராகும்” சட்டம் போல இதுவும் வெறும் ஏட்டளவில் தான் இருக்கும். நடைமுறையில் ஒரு மாறுதலையும் கொண்டுவராது என்பதே எதார்த்தம். இந்து மதவாதிகளை “திருப்திபடுத்தவே” இந்த சட்டம்..
i meant “கட்டாய மதமாற்ற தடை சட்டம்”
//எங்கிருந்து எப்படிப் பெற்றோம் என்பதை முறைப்படி வெளி-யிட்டுப் பதிப்பவர் பதிப்பாளி. திருட்டுத்தனம் செய்பவர்களுக்கு வேறு பெயர் உண்டு.// என்று சோம.இளங்கோவன் குறிப்பிட்டுள்ளார். அதாவது குடியரசு தொகுதிகளை வெளியிடும் பெ.தி.க.வினரை திருடர்கள் என்று சொல்லுகிறார். அவரிடம் சில்விசயங்களை கேட்கவேண்டி இருக்கு. கடந்த 20 ஆண்டுகளாக வீரமணி பெயரில் வெளிவந்துள்ள எந்த நூல்களையுமே வீரமணி எழுதவில்லை என்பதும் அவற்றை அக்கட்சியில் பொறுப்பில் இருக்கும் மற்றும் பொறுப்பில் இல்லாத சில அறிவுஜீவிகள்தான் எழுதித் தருகின்றனர் என்பதும் கட்சியில் மட்டுமல்ல, வெளியுலகிற்கும் தெரிந்துவிட்ட சேதிதான். குறிப்பாக மகாபாரத ஆராய்ச்சி எனும் தலையணை தண்டிப் புத்தகம் அவரின் சொற்பொழிவைத் தொகுப்பாக்கி நூலானது. சொற்பொழிவுக்கு கட்டுரை எழுதிக்கொடுத்தவர்கள் பலராவர். அவர்களின் பெயர்களை மறைத்துவிட்டு நூலாசிரியரின் பெயர் கி.வீரமணி என்றுள்ளது. ‘வெறுக்கத்தக்கதே பிராமணியம்’ என்ற நூலின் ஒரு வரியைக்கூட வீரமணி எழுதவில்லை. இது சந்தேகத்துக்கே இடமில்லாத கூற்று. எழுதியவர் யார் என்பதும் திகவினருக்குத் தெரியும். இருப்பினும் அந்நூலில் ‘ஆசிரியர்:கி.வீரமணி’ என்று அச்சிட்டு விற்கின்றனரே. இந்த்ச் செயல்களுக்கு என்ன பெயர்? திருட்டுத்தனமா? அறிவுத்திருட்டா? நாணயமற்ற செயலா? பெ.தி.க.வினர் மீது காப்புரிமை வழக்குப் போடும் இந்த அறிவுத்திருட்டுப் பேர்வழிகளுக்கு எதிராக எந்தக் கோர்ட்டுக்கு போவது? சோம.இளங்கோவன் பதில் சொல்லவேண்டும்.
//மகாபாரத ஆராய்ச்சி எனும் தலையணை தண்டிப் புத்தகம் அவரின் சொற்பொழிவைத் தொகுப்பாக்கி நூலானது. சொற்பொழிவுக்கு கட்டுரை எழுதிக்கொடுத்தவர்கள் பலராவர். அவர்களின் பெயர்களை மறைத்துவிட்டு நூலாசிரியரின் பெயர் கி.வீரமணி என்றுள்ளது.//
சின்னத்தம்பி
இப்போதே மகாபாரத ஆராய்ச்சி நூலை எடுத்துப் பாருங்கள். முதல் பக்கத்தில் ( முதல்அட்டையில்) தொகுப்பாசிரியர் -டாக்டர் கி.வீரமணி என்று தான் உள்ளது. நூலின் எட்டாவது பக்கத்தில் எந்தப் பருவத்தை யார் ஆய்வு செய்து எழுதியுள்ளார்கள் என்ற விபரமும் உள்ளது 576 பக்கங்கள் கொண்ட நூல் இது.
இதில் யாருடைய பெயரையும் மறைக்க வில்லை என்பதே உண்மை. பதிப்புரையில் கூட ஆய்வு செய்த அறிஞர்களுக்கு நன்றி சொல்லியுள்ளார் வீரமணி.
தவறான தகவல்களை தர வேண்டாம் என்பதே எனது அன்பு வேண்டுகோள்.
நன்றி
‘வெறுக்கத்தக்கதே பிராமணியம்’ என்ற நூலின் ஒரு வரியைக்கூட வீரமணி எழுதவில்லை. இது சந்தேகத்துக்கே இடமில்லாத கூற்று. எழுதியவர் யார் என்பதும் திகவினருக்குத் தெரியும். இருப்பினும் அந்நூலில் ‘ஆசிரியர்:கி.வீரமணி’ என்று அச்சிட்டு விற்கின்றனரே. இந்த்ச் செயல்களுக்கு என்ன பெயர்? திருட்டுத்தனமா? அறிவுத்திருட்டா? நாணயமற்ற செயலா?
மிக சமீபத்தில் மூத்த பதிவர் ஒருவர் பெரியார் திடலுக்கு சென்று பழைய விடுதலை இதழ்களை ஆய்வு செய்ய முயன்ற போது அவருக்கு கிடைத்த அனுபவம் :
http://dondu.blogspot.com/2009/08/blog-post.html
பெரியார் திடலில் டோண்டு ராகவன்
தமிழ் ஓவியா “நுனிப்புல் மேயாமல் ஊன்றிப் படியுங்கள் உண்மை புரியும் ” என்று விடுதலை எனும் பத்திரிக்கையை சிலாகித்திருக்கிறார். அந்தப் பத்திரிக்கையில் ‘மின்சாரம்’ எழுதிய கட்டுரை ஒன்றில் இன்று
“சிதம்பரம் நடராஜன் கோயிலை தீட்சிதர்ப் பார்ப்பனர்களின் ஆதிக்கத்திலிருந்து சிண்டைப் பிடித்து வெளியில் இழுத்துத் தள்ள உந்து சக்தியாக திராவிடர் கழகம் இருக்கிறதே_ எரிச்சல் வராதா பார்ப்பனர்களுக்கு? ” என்று எழுதப்பட்டுள்ளது. நடராசர் கோவிலில் தீட்சிதப் பார்ப்பனர்களின் கொட்டத்தை அடக்க ம.க.இ.க.வும், வி.சிறுத்தைகளும் பாமகவும் போராடி இருக்கின்றன. போராட்டம் இன்னும் தொடர்கிறது. இதில் திக கம்பெனி ஆற்றிய பங்கு என்ன? அயோக்கியத்தனமாக இவ்வாறு புளுகிக்கொண்டிருக்கும் விடுதலை கைக்கூலிகள்தான் ‘பெரியார் நூலினை மற்றவர்கள்திரித்து விடுவார்கள்’ என்கின்றன. தான் திருடி பிறரை நம்பாள் என்பது எவ்வளவு பொருத்தமாக இருக்கிறது!
//எரிச்சல் வராதா பார்ப்பனர்களுக்கு//
ஜெயலலிதா மடியில் உட்கர்ந்திருக்கும்போது இப்படி எழுத துணிவாரா மின்சாரம்?
வலிக்குது… விட்டுறுங்க…. வேண்டாம் அழுதுறுவேன்… அழுதுறுவேன்….
ஏன் தோழர், மாவீரன் நெடுமாறனுக்கு மட்டும் தேசிய ஆலோசகர் பதவி கொடுக்கணும் என்கிறீர்கள்? மானமிகு வீரமணிக்குத்தான் அதைக் கொடுக்கவேண்டும். இன்று அவர் எழுதி இருக்கும் தலையங்கத்தைப் பாருங்கள்.. கீழ்க்கண்ட ஒற்றைவரியிலேயே கருப்புச்சட்டை கதராகி மூவர்ணக்கொடி பறக்குது பாருங்கள் “சீனா பக்கம் இலங்கை சாய்கிறது என்று தெரிந்த பிறகாவது, இந்தியா வேறு கண்ணோட்டத்திலாவது விழித்துக் கொள்ளவேண்டாமா?” – இலங்கையில் என்ன நடக்கிறது? (http://files.periyar.org.in/viduthalai/20090805/news08.html)
பெரியாரின் எழுத்துகள் மீது உள்ள காப்பிரைட் அவரது சொந்த சொத்து. அவர் அதை யாருக்கு வேண்டுமானாலும் கொடுக்கலாம். அவர் வீரமணி கண்ட்ரோலில் உள்ள ஒரு அமைப்புக்கு கொடுத்திருக்கிறார் போல தெரிகிறது. பெரியாரின் எழுத்துகள் இந்த அமைப்பின் கண்ட்ரோலில் இருந்து வெளி வர வேண்டும் என்றால் 2033 வரை பொறுக்க வேண்டும் (அப்போது காப்பிரைட் முடிந்துவிடும்) இல்லை என்றால் அரசை வீரமணி எதிர்த்தாலும் பெரியாரின் எழுத்துகளை நாட்டுடமை ஆக்க நிர்ப்பன்திக்க வேண்டும். வீரமணியின் நோக்கம் சரியா தவறா என்பதற்கும் இந்த சொத்து பிரச்சினைக்கும் என்ன சம்பந்தம்? இதில் கோர்ட் எப்படி அதை பொதுவாக்கியது என்றே எனக்கு புரியவில்லை – சட்ட நிபுணர்கள் யாராவது விளக்குங்களேன்!
இன்றைய விடுதலையில் வந்திருக்கும் கடிதம் கீழே.. ஊன்றிப்படித்து உண்மை அறியவும்..:):):)
ஆசிரியருக்குக் கடிதம்
நண்பர்கள் கடிதம்
அன்புள்ள, மதிப்பிற்குரிய ஆசிரியருக்கு, வணக்கங்கள்.
தந்தை பெரியாரின் நூல்களுக்கு திடீரென்று உரிமை கொண்டாடும் கூட்டம் இதுவரை தமிழ்நாட்டின் மக்களுக்கு சுயமரியாதை உணர்வு-களை தூண்டி எழுச்சிபெறச் செய்ய என்ன நடவடிக்கைகள் எடுத்தன? பெரியாரின் ஜாதிப்பெயரை போடக்-கூடாது என போராட்டம் செய்த திராவிட கட்சியினருக்காக வேண்டு-மென்றே குமுதம் இதழில் கேலி கார்ட்டூன் வரைந்திருக்கிறார்கள் என்றுதான் நினைக்க வேண்டி உள்ளது. திரு.சோம.இளங்கோவன் கூறியது போல் ஆசிரியர் திரு.வீர-மணியுடன் ஒரு நாள் செலவழித்தாலே போதும். பெரியாரின் உண்மையான முதல் சீடர் அவர் என்பதை புரிந்து கொள்வார்கள். நிற்க நேரமின்றி அயராது உழைக்கிறார்.
பகுத்தறிவுக் கொள்கைகளை, மூடநம்பிக்கைகளை ஒழிப்பதற்காக பகலுணவைக் கூட நேரம் கழித்து உண்ணுகிறார். சுயமரியாதை இயக்-கத்திற்காக தினந்தோறும் பாடுபடுகிறார். பெரியாரின் நூல்களை வகை வகையாக பிரித்து ஜாதி, மதம், பெண்ணுரிமை என வெளியிட்டு வருகிறார். அவ-ரு-டைய அன்றாட வாழ்வில் ஓய்வின்றி உழைத்தும் அவருடைய புகழில் பொறாமை கொண்ட சிலர் வேண்-டுமென்றே புழுதி வாரி இறைக்-கின்-றனர். இதுபோன்ற புல்லுருவிகளின் செய்கையால் ஆசிரியரின் பெரியாரின் கொள்கைகளும், திராவிடர் இயக்கமும் மேன் மேலும் வளருமே தவிர எள் அளவும் குறையாது. ஆசிரியரின் உழைப்பினை ஒரு நாள் உடன் இருந்து நாங்கள் (நண்பர்கள்) கவ-னித்தோம். ஆசிரியர் போல உழைப்-பாளி, தொண்டு செய்வதற்கே பிறந்திருப்பவரை நாங்கள் இதுவரை எங்கள் வாழ்நாளில் பார்த்ததே இல்லை. கிராமம், கிராமமாக, பட்டி தொட்டியெல்லாம் சுயமரியாதை பிரச்சாரம் செய்து கொண்டே இருக்-கிறார். திடீர் திடீர் என்று தோன்றும் போலி சாமியார், சாமியாரிணிகளை தோலுரித்துக் காட்டுகிறார். உண்-மையான பகுத்தறிவுவாதி என்றால் பெரியார் திடலுக்கு வருகை தந்து அங்கு எப்பேர்ப்பட்ட வேலைகள் நடக்-கின்றன என புரிந்து கொள்ள வேண்டும். பெரியாருக்குப் பின் அவரின் உண்மையான தொண்டர் ஆசிரியர்தான் என்பதை தமிழினம் நன்றி கெட்டதனமாக மறந்து, அவருக்கு எதிரியாக செயல்படுவது எந்த விதத்தில் நியாயமானது. கவிஞர் பூங்குன்றன் எழுதுவது போல தாம் ஆசிரியராகப் பொறுப்பேற்ற காலம் (1962) முதல் தொடர்ந்து ஒவ்வொரு ஆண்டும் தந்தை பெரியாரின் பிறந்த நாள் மலர் என்னும் வரலாற்றுப் பேழை வெளியிடல் என்பதெல்லாம் கண்ணும் கருத்தும் உடையோருக்கு அத்துபடி என்பதில் இரண்டு வித கருத்துகள் இருக்க முடியாது என்பது உறுதி.
இறுதியாக பெரியாரைப் படியுங்கள், சிந்தியுங்கள்; மேலும் ஆசிரியரின் நூல்-களையும் படியுங்கள். அவர் எழுதிய தன் வரலாறான அய்யாவின் அடிச்-சுவட்டில் என்னும் நூலைப்படித்தால் அவர் சுயமரியாதை உணர்வுகளை பத்து வயது முதலே பெற்று, எப்படி பெரியாரின் செல்லப் பிள்ளையாக, உண்மையான தொண்டனாக சீரிய பகுத்தறிவாளராக வளர்ந்து இன்று மிகப்பெரிய அரிய சாதனைகளை எல்லாம் செய்துள்ளார் என்பது புரியும்.
தயவு செய்து ஆசிரியரின் மனதை புண்படுத்தும் வேலையில் இறங்கா-தீர்கள். ஆனால் இதற்கெல்லாம் அஞ்சாதவர் ஆசிரியர். ஆசிரியருக்காக நண்பர்களாகிய நாங்கள்தான் கொதித்து எழுகிறோம். ஏனென்றால் அவர் தன்னை வென்றவன் தரணியை வெல்-வான் என்ற அறிஞர் அண்ணாவின் அறிவு மொழியை என்றும் நினைப்ப-வர். பொது வாழ்க்கையிலும், சொந்த வாழ்க்கையிலும் பெரியாரின் விருப்-பப்படியே இன்றளவும் நடந்து கொண்டு வரும் தன்னிகரில்லா தலைவர், திராவிட இனத்தின் தூண் போன்றவர், மலை அசையினும் மன-நிலை அசையாத பெரியாரின் தொண்-டர், இன்னும் தன்னை பெரியாரின் தொண்டருக்கும் தொண்டன் என்றே இன்றும் வாழ்ந்து வருகிறார். தந்தை பெரியாரின் நூல்களில் தனயன் வாழ்-கிறார். அந்தக் காலத்திலேயே தந்தை பெரியார் இதனை இதனால்இவன் முடிக்கும் மென்றாய்ந்து அதனை அவன் கண் விடல் என்னும் வள்ளு-வரின் வாக்குக்கு ஏற்ப பணிகளை ஆசிரியரிடத்தில்தானே ஒப்படைத்தார்? இவர் போல யார் உள்ளார்?
வேண்டுமென்றே ஆசிரியரின் புகழுக்கு இழுக்கு தோற்றுவிக்கும் அழுக்காறு மனம் கொண்டோர் திருந்துவார்களா? தினமணி, குமுதம் போன்ற பத்திரி-கைகள் இனியாவது தங்களைத் திருத்-திக் கொள்வார்களா?
ஆசிரியரே கவலைப்படாவிட்டா-லும் நாங்கள் மிகவும் ஆழ்ந்த மன-வருத்தத்தில் உள்ளோம். சொல்லடியா? சோர்வடையாதே! என அண்ணா-வின் பொன்மொழி ஆசிரியருக்கு இருக்க-லாம்.
ஆனால், நாங்கள் அப்படி அல்ல! தமிழர்தலைவர் ஆசிரியர் நலமுடன் மனநலமுடன் வாழ வேண்டும் வாழ்க பெரியார்! வளர்க அவர்தம் கொள்-கைகளும் நூல்களும்!
-இங்ஙனம்,
நண்பர்கள்
90களில் வீரமணி பற்றி எழுதிய முழுமையான கட்டுரை இருந்தால் என்னுடைய மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பி வைக்குமாறு வினவு ஆசிரியர் குழுக்களிடம் கோருக்கிறேன் …..பல இடங்களில் தேடியும் கிடைக்காதால் தான் ஆசிரியர் குழுவினம் நேரடியாக கேட்கிறேன்…