Tuesday, September 26, 2023
முகப்புகலெக்டரை நடுத்தெருவுக்கு இழுத்து வந்த மாணவர்கள்
Array

கலெக்டரை நடுத்தெருவுக்கு இழுத்து வந்த மாணவர்கள்

-

பாழடைந்து சிதலமடைந்த கட்டிடம், சுற்றிலும் முட்புதர்கள், ஆங்காங்கே துருத்திக் கொண்டு நிற்கும் கம்பிகள், உள்ளே நுழையும் முன்பே குடலைப் புரட்டியெடுக்கும் துர்நாற்றம் – இவை ஏதோ பராமரிப்பின்றிக் கிடக்கும் பேருந்து நிலைய இலவசக் கழிப்பிடங்களின் அவலநிலை அல்ல!

திருச்சி-மன்னார்புரம் அருகே உள்ள டாக்டர் அம்பேத்கர் ஆதிதிராவிடர் மாணவர்கள் நல விடுதியின் ‘உண்மை’ நிலை இது! ஏறத்தாழ தமிழகம் முழுவதுமுள்ள ஆதிதிராவிட மாணவர் விடுதிகளின் ‘முகவரி’யும் இதுதான்!

பல்வேறு கல்லூரிகளைச் சேர்ந்த 150-க்கும் மேற்பட்ட மாணவர்கள் தங்கியிருக்கும் இவ்விடுதி கட்டப்பட்டு சுமார் 30 ஆண்டுகளுக்கும் மேலாகிறது. இவ்விடுதியில் குடிநீர், கழிப்பிட வசதி உள்ளிட்ட அடிப்படை வசதிகள் எதையும் எதிர்பார்க்க முடியாது! இங்கு வழங்கப்படும் உணவின் தரத்தை பற்றி ‘வார்த்தைகளில்’ சொல்லிவிடவும் முடியாது!

இவ்விடுதியில் 2005-ஆம் ஆண்டிலிருந்து செயல்பட்டு வரும் புரட்சிகர மாணவர்-இளைஞர் முன்னணி அடிப்படை வசதிகள் செய்துத் தரக்கோரியும், சுகாதாரமான முறையில் உணவு வழங்கக் கோரியும் பல போராட்டங்களை நடத்தியிருக்கிறது. இதன் விளைவாக சமீபத்தில் 26 கழிப்பறைகள் கட்டித் தரப்பட்டுள்ளது. சுகாதாரமான உணவு வழங்குவதையும் உத்திரவாதப்படுத்தியிருக்கிறது.

இந்நிலையில்தான் கடந்த 23.9.09 அன்று அதிகாலை விடுதியின் அறையொன்றில் தூங்கிக் கொண்டிருந்த 3 மாணவர்கள் மீது மேற்கூரை இடிந்து விழுந்து, ஆபத்தான நிலையில் மேல்சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர்.

இதனைக் கண்டு கொதித்தெழுந்த மாணவர்கள் தங்கள் உயிருக்குப் பாதுகாப்புக் கோரியும், விடுதிக் கட்டிடத்தை மாற்றக் கோரியும் பு.மா.இ.மு.வின் விடுதி கிளைச் செயலர் தோழர் சங்கத் தமிழன் தலைமையில் அணிதிரண்டு டி.வி.எஸ். டோல்கேட் பகுதியில் மறியலில் ஈடுபட்டனர்.

கோரிக்கை என்ன என்பதைக் கூட கேட்காமல், உதவி கமிசனர் ராஜேந்திரன், போலீசு ஆய்வாளர் கோடிலிங்கம் தலைமையிலான போலீசு கும்பல், காட்டுமிராண்டித்தனமாக மாணவர்களை தாக்கியது. தாக்குதல் தொடர்ந்த போதும் ‘மாவட்ட ஆட்சியர்’ உள்ளிட்ட உயரதிகாரிகள் வரும்வரை இங்கிருந்து கலையப் போவதில்லை என மாணவர்கள் உறுதியா நின்றனர். நிலைமை கைமீறிப் போனதையடுத்து, அலறியடித்து ஓடிவந்த மாவட்ட ஆட்சியரை, “நாங்கள் அனுபவிக்கும் அத்தனை கொடுமைகளையும் நீங்கள் நேரில் வந்து அனுபவியுங்கள்” என மாணவர்கள் இழுத்து சென்றனர்.  “இடிந்து விழும் இக்கட்டிடத்திற்கு மாற்றாக புதிய கட்டிடம் கட்டுவதற்கான” உத்திரவை மாவட்ட ஆட்சியரிடமிருந்து பெற்ற பின்னரே, அவர் விடுவிக்கப்பட்டார்.

மூன்றுநபர் கொண்ட மாணவர் குழுவின் நேரடிப் பார்வையின் கீழ் புதிய விடுதிக்கான கட்டுமானப் பணிகள் தற்போது விரைவாக நடந்து வருகின்றன. பு.மா.இ.மு.வின் முன்முயற்சியால் கிடைக்கப் பெற்ற இத்தொடர் வெற்றிகள், அனைத்து மாணவர்கள் மத்தியில் நம்பிக்கையையும் உற்சாகத்தையும், வழங்கியிருப்பது மாத்திரமல்ல, வீதியிலிறங்கிப் போராடுவதன் வலிமையையும் உணர்த்தியிருக்கிறது!

-புதிய ஜனநாயகம், அக்டோபர்’ 2009

vote-012

……………………………..

வினவின் பதிவுகளை மின்னஞ்சலில் பெற…

வினவை ஆதரியுங்கள்

வினவை டிவிட்டரில் தொடர்க

தொடர்புடைய பதிவுகள்

புரட்சிகர மாணவர் இளைஞர் முன்னணி

ஜேப்பியார் கல்லூரியில் மாணவர் தற்கொலை! ‘கல்வி வள்ளலின்’ ரவுடித்தனம் !

  1. மாணவர்கள் போராட்டம் வெற்றிக்கு வாழ்த்துக்கள். இது போன்ற போராட்ட செய்திகளை உடனுக்குடன் வெளியிட்டால்தான் மற்ற மீடீயாக்கள் செய்கின்று இருட்டடிப்புகள் வெளிச்சத்துக்கு வரும்.

  2. போராடி, வெற்றி பெற்ற புரட்சிகர மாணவர் இளைஞர் முன்னணியின் தோழர்களுக்கு வாழ்த்துக்களை தெரிவித்து கொள்கிறோம்.

    நானும் சில மாணவர்களை சந்திக்க சில மாணவர்களை சந்திக்க விடுதிகளுக்கு சென்றிருக்கிறேன். பாத்ரூம் பக்கம் எட்டிக்கூட பார்க்கமுடியாது.

    சாப்பாட்டை பற்றி விசாரித்தால்… மோசமாய் சமைப்பதை கதை கதையாய் சொல்வார்கள். மாணவர்களின் ஆரோக்கியம் என்பது கவலைக்குரியது.

    நகர்ப்புற இளைஞர்களை விட, இந்த விடுதிகளை பெரும்பாலும் பயன்படுத்துகிறவர்கள் கிராமங்களில் இருந்து வருபவர்கள் தான். மாணவர்களின் கல்வி, ஆரோக்கியம் குறித்து அரசின் அலட்சியத்தைத்தான் காட்டுகிறது.

    போராடினால் மட்டும் தான் இந்த நிலை மாறும் என்பதை பு.மா.இ.மு தோழர்கள் நடத்திய போராட்டம் உறுதிப்படுத்தியிருக்கிறது.

  3. வலிமையான அரசு இயந்திரம் அந்த மாணவர்களுக்கு வேறு வகையில் தொல்லை கொடுக்காமல் இருக்கவேண்டும்…!!!

    ஆனால் அப்படி இருக்குமா ?

    • அரசு தொல்லை கொடுக்காமலா இருக்கும்… வாய்ப்புக்காக காத்திருந்து நசுக்கவே பார்க்கும். இதுதானே முறை ;-(

  4. அரசு விடுதிகளில் மட்டுமல்ல. பெரும்பாலான தனியார் கல்லூரி விடுதிகளிலும் நிலைமை படுமோசம். அரசு கல்லூரி மாணவர்களாவது சங்கம் வைத்து போராட முடிகிறது. தனியார் கல்லூரி மாணவர்களுக்கு அதுகூட நடக்காத காரியம். அவர்கள் பணம் கட்டி கொத்தடிமைத்தனத்தை பெறுபவர்கள்.

    • காசு கொடுத்து சூனியம் வைத்துக்கொள்வது என்பார்களே…அதுமாதிரி.

  5. மிகச்சிறந்த பகுத்தறிவாளர் பிரேமானந்து இறந்து விட்டாராமே! நாத்திகம் ராமசாமி குறித்து வெளி இட்டது போல் இவர் பற்றியும் தெரிந்து கொள்ள நிறைய தகவல்கள் உள்ளனவே, வினவு முயற்சிக்குமா?

விவாதியுங்கள்

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க